அத்தியாயம் 7
அவன் இளம் வயதில் வரைந்தது போலவே ஆசையாசையாகக் கட்டிய அதே வீடு. அதே போன்று அந்த வீட்டுக்கு நிறைமொழி இல்லம் என்று வைக்கையில் அவன் உள்ளத்தில் முழுமையாக நிறைந்திருந்தவளும் நிறைமொழிதான்.
கேட்டை திறந்து உள்ளே நுழைந்து, வீட்டு வாசலின் ஒரு பக்கமாக பைக்கை நிறுத்துகையிலேயே, “அப்பா!” என்று ஓடி வந்தான் அவன் மகன் சஜிதன். நான்கு வயதாகப்போகிறது. மொழிக்குப் பிறகான அவன் வாழ்க்கையின் மொத்த ஆதாரமாகிப்போனவன்.
“சஜூக்குட்டி! இன்னும் படுக்காம என்ன செய்றீங்க?” மகனைத் தூக்கிக் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டுவிட்டு வினவினான்.
“நித்திரை வரேல்லையப்பா. நாங்க பாமு மாமா வீட்டை போனனாங்க. அங்க நவி அன்ட்ரி பெருசா அழுதவா. சஜூ பயந்திட்டான். சஜூக்கு மாதிரி அவான்ர அம்மாவும் அப்புச்சாமிட்ட போய்ட்டாவாம் எண்டு அப்பும்மா சொன்னவா.” என்றதும் மகனை மார்போடு அணைத்துக்கொண்டு அன்னையைப் பார்த்தான்.
அவரும் கலங்கிப்போய்த்தான் அமர்ந்திருந்தார். அழுதிருக்கிறார் என்று தடித்திருந்த கண் மடல்கள் சொல்லின.
“அப்பா, ஏனப்பா எல்லாரின்ர அம்மாவையும் அப்புச்சாமி கூப்பிடுறார்? சஜூ பாவம், நவி அன்ட்ரியும் பாவம்.” என்று உதடு பிதுக்கினான் சின்னவன்.
“நாங்க கோயிலுக்குப் போகேக்க ஏன் எண்டு அப்புச் சாமிட்ட கேப்பம், சரியா? ஆனா அப்புச்சாமி பெரிய ஆள். அவர் கடவுள். அவர் ஏன் இப்பிடி எல்லாம் செய்றார் எண்டு எங்களுக்கு விளங்காது. ஆனா, எங்களுக்கு நல்லதை மட்டும்தான் செய்வார் எண்டு அப்பா சொல்லியிருக்கிறன்தானே.” என்று விளக்கம் சொன்னவன் அதற்கு மேலே அதைப் பற்றி மகனைப் பேச விடவில்லை.
அவன் நல்ல புத்திசாலி. என் அம்மாவைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு எனக்கு என்ன நல்லது செய்தார் என்று கேட்கக்கூடியவன். அவனை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்து, வயிற்றில் வாய் வைத்து ஊதிச் சிரிக்க வைத்து, அந்தப் பேச்சை மறக்க வைத்தான்.
அப்படிச் சிரிக்கும் மகனைப் பார்க்கையில் மொழியின் நினைவுகள் தானாக வந்தன. அவனின் விடாத இந்தப் பேச்சும் துறுதுறு என்று இருப்பதும் அப்படியே அவள்தான். அவள் இருந்திருக்கலாம். இருந்திருக்க அவனுக்கு இந்த அலைப்புறுதல்கள் இல்லாமல் இருந்திருக்கும்.
அதே நேரத்தில் நாவினியின் நினைவுகளும் அவனுள் படையெடுத்தன. அவளும் இப்படித்தான் கள்ளம் இல்லாமல் சிரிப்பாள். இன்று அழுதுகொண்டு இருப்பாள். தன் உறவுகளுக்காக ஏங்கிக்கொண்டு இருப்பாள் என்று நினைத்த மாத்திரத்தில் அவனால் மகனுக்காகக் கூடச் சிரிக்க முடியாமல் போயிற்று.
அவனோடு பேசுவதற்காகவே காத்திருக்கும் அன்னையைக் கண்ணால் தேற்றிவிட்டு, மகனோடு சென்று உடை மாற்றி, முகம் கழுவி, சுவாமி கும்பிட்டு, மகனுக்கும் தனக்கும் சேர்த்துத் திருநீறு பூசிக்கொண்டு வந்தான்.
மகனின் தோளில் தொற்றியபடியே வந்த பேரனைப் பார்த்ததுமே பிரேமாவுக்கு இலேசான முறுவல் மலர்ந்துபோயிற்று. கலக்கங்கள் ஓரளவிற்குக் கட்டுக்குள் வந்தன. அந்தளவில் நெற்றிப் பரப்பு முழுக்கத் திருநீற்றினைப் பட்டையாகத் தீட்டியிருந்தான்.
அவனுக்கு ஒற்றை விரலால் கீற்றாகத் தீற்றினால் பிடிக்காது. தகப்பனின் நடு மூன்று விரல்களாலும் நன்றாகத் தொட்டு இப்படி நெற்றி முழுக்கத் தீட்ட வேண்டும். காதோரம் ஒரு செம்பரத்தையையும் செருக வேண்டும். அப்போதுதான் அவன் சுவாமி கும்பிட்டான் என்றாகுமாம்.
என்னவோ பக்திப் பரவசமானவன் போல் ஒரு தோற்றம். ஆனால், முழுமையான கள்ளச் சாமியார். வெள்ளிக்கிழமைகளை மச்சம் கொடுக்காமல் ஓட்டுவதற்குள் படாத பாடு பட்டுவிடுவார் பிரேமா.
பட்டையும் காதோரம் செம்பரத்தையுமாக வந்த பேரனை அள்ளிக் கொஞ்சிவிட்டு, “நேரமாயிற்றுது தம்பி. தேத்தண்ணிய விட்டுப்போட்டுச் சாப்பிடப்பு.” என்று உணவைப் போட்டுக் கொடுத்தார்.
“நாவினி எப்பிடி இருக்கிறாளம்மா?” சாப்பாட்டில் கவனம் காட்டி வினவினான்.
“என்னத்தச் சொல்லச் சொல்லுறாய்? மெலி மெலி எண்டு மெலிஞ்சு எலும்பும் தோலும் தானப்பு தெரியுது. பரிமளா செத்த நேரம் கூட அந்தப் பிள்ளை இப்பிடி இருக்கேல்ல. ஆனா இப்ப… பாக்க மாட்டாய்.” என்றவருக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது.
“இரவுச் சாப்பாடு செய்து கொண்டுபோய்க் குடுத்துப்போட்டுத்தான் வந்தனான். சாப்பிடவே இல்ல. அழுதுகொண்டே இருக்கிறா.” என்றதும் மகனுக்கு ஒரு வாய் கொடுத்துக்கொண்டிருந்தவன் திரும்பித் தாயைப் பார்த்தான்.
“அவா அழுத அழுகையைப் பாக்க மாட்டாய் தம்பி. இஞ்ச வந்து அழுறதுக்காகவே இந்த ஒண்டரை வருசமும் கண்ணீரைச் சேத்து வச்சுக்கொண்டு வந்திருக்கிறா போல.” என்று அங்கே நடந்தவற்றைப் பகிர்ந்துகொண்டார்.
அவளை அனாதை என்று சொல்லி, அவள் குணத்துக்குத்தான் குடும்பத்தையே பறிகொடுத்துவிட்டு நிற்கிறாள் என்று பரமேஸ்வரன் வீட்டினர் மண் அள்ளித் திட்டியதை அயலட்டையினர் அவருக்குச் சொல்லியிருந்தனர். அதை அவர் அவனுக்குச் சொன்னபோது சுருக்கென்று ஒரு வலி. தொண்டைக்குள் விக்கிக்கொண்ட உணவை விழுங்க மிகவுமே சிரமப்பட்டுப்போனான்.
இரவுகளில் மகனைத் தன்னோடுதான் வைத்துக்கொள்வான் கேசிகன். இன்று அந்த மகனும் நாவினியின் அழுகையைத்தான் திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான். அவனுடைய இந்த மூன்றரை வருட வயதில் அவன் பார்த்த பெரும் சம்பவம் அது. அதனாலேயே அது அவன் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது புரிந்தது.
அவள் விறாந்தையில் விழுந்துகிடந்து தரையில் கையால் அடித்து அடித்து அழுதது முதற்கொண்டு, ‘என்னை மட்டும் ஏன் விட்டுட்டுப் போனனீங்க அம்மா?’ என்று கேட்டு கேட்டு அழுதது வரை அப்படியே ஒப்பித்தான் குழந்தை.
அன்றைய அவன் உறக்கம் முற்றிலுமாகத் தொலைந்தே போயிற்று. குடும்பமாகப் போனவள் தனியாக வந்து நிற்கிறாள். என்ன நடந்திருந்தாலும், யாரில் சரி பிழை இருந்தாலும் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறவளை அவன் போய்ப் பார்த்தேயாக வேண்டும்.
ஆனால், யாராய் நின்று அவளைக் காண்பான்? சிறு வயது தொடங்கி அறிந்த நண்பனாக, பழைய காதலனாக, அயல் வீட்டினனாக என்று எப்படி யோசித்தும் அவள் முன்னால் நிற்க முடியும் போலில்லை.
அடுத்த நாளும் விடிந்தது. அவனின் அம்மம்மா அழைத்து, கோயிலுக்குக் கொண்டுபோக வாழை இலைகளை அறுத்துத் தரச் சொன்னார்.
இவ்வளவு காலமும் பரமேஸ்வரன் வீட்டில், அதாவது நாவினி வீட்டில்தான் அறுப்பார்கள். பரமேஸ்வரன் அவளின் வீட்டைச் சுற்றி வாழைகள் போட்டிருந்தார். செழிப்பான, பிய்யாத நல்ல வாழை இலைகள் கிடைக்கும்.
அங்கே போனால் கோயில் அன்னதானத்திற்குத் தேவையான மொத்த இலைகளையும் வெட்டிவிடலாம் என்று மொழியின் தம்பி முகிலனை அனுப்பிவிடுவான். இவன் போகமாட்டான். இன்று அவன்தான் போக வேண்டும். அப்படியே அவளையும் பார்த்துப் பேச வேண்டும்.
அதை நினைக்கவே கால்கள் பின்னின. அவன் மனநிலை அறியாத பிரேமா, “நீயும் அவாவை ஒருக்கா போய்ப் பாக்கத்தானேயப்பு வேணும். உன்னட்டப் படிச்ச பிள்ளை எல்லா? சின்ன வயசில என்னத்துக்கு எண்டாலும் அவாக்கு நீதானே வேணும். போய் ஆறுதலா ரெண்டு வார்த்த கதச்சிப்போட்டு, இலையையும் அறுத்துக்கொண்டு வாங்கோவன்.” என்று சொன்னார்.
இலை அறுக்கும் கத்தியை எடுத்துக்கொண்டு மகனையும் ஏற்றிக்கொண்டு அம்மம்மா வீட்டுக்குச் சென்றான். அங்கே சின்னவனை விட்டுவிட்டு நடையிலேயே நாவினி வீட்டுக்குப் போனான்.
நெஞ்சில் ஒரு தடதடப்பு. போனமுறை வந்தவளை இலகுவாகப் புறம் தள்ளவும், அவளைக் கடந்து போகவும் அவனால் முடிந்தது. இந்த முறை?
தயக்கம் இருந்தாலும் கேட்டை திறந்துகொண்டு உள்ளே வந்தான். அவளின் வீட்டின் பக்கச் சுவர் பக்கமாக, அவர்கள் இருந்த காலத்திலேயே அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் அவள்.
அன்னை சொன்னபோது கூடத் தெரியவில்லை. அந்தளவில் எலும்பு மட்டுமே தெரிந்தது. கன்னங்கள் இரண்டும் ஒட்டி அந்த முகத்தில் கண்கள் மட்டுமே தெரிந்தன. ஒரு காலத்தில் செழிப்பும் செழுமையுமாக இருந்து, அவன் பார்த்து ரசித்த கன்னங்களைக் காணவே இல்லை. கழுத்தோரத்து எலும்பு கூட எழும்பி நின்றது.
கழுவித் துடைத்த முகத்தில் பொட்டு இல்லை. கண் மடல்கள் இரண்டும் தடித்துச் சிவந்திருந்தன. மூக்கின் சிவப்பு அப்போதும் அழுத்திருக்கிறாள் என்று சொல்லிற்று. கீற்றாகத் திருநீறை மட்டுமே பூசியிருந்தாள். தலைமுடியை வாராமல் அப்படியே சேர்த்து வூல் பாண்ட் போட்டிருந்தாள்.
முழங்கால் வரை நிற்கும் சட்டை ஒன்றை அணிந்து, கழுத்தோரம் மெல்லிய செயின் மட்டுமே கிடக்க அந்த ஊஞ்சலில் சப்பாணி கட்டி அமர்ந்திருந்தவள், ஊஞ்சலின் ஒரு பக்கக் கம்பியில் இலேசாகத் தலை சாய்த்திருந்தாள்.
இவன் வந்திருப்பதை உணரவேயில்லை. வீசிய காற்றின் பயனாக ஊஞ்சல் இலேசாக அசைந்தபடியிருந்தது. எங்கோ ஒரு புள்ளியில் தன் எண்ணங்களைத் தொலைத்துவிட்டு, வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தாள்.
இதே ஊஞ்சலில் அவர்களின் பல சந்திப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. அப்போதும் இப்படித்தான். கால்களைத் தொங்கவிட்டு அமரமாட்டாள். அதுவும் தள்ளி விடுவதற்கு இவனோ அவள் தம்பிகளோ இருந்தால் இப்படித்தான் சப்பாணி கட்டி அமர்ந்துவிடுவாள்.
அவளின் முன்னால் நின்று, தன்னை நோக்கி வருகிறவளின் ஊஞ்சல் பலகையின் இருபுறமும் பற்றிப் பின்னால் தள்ளிவிட்டபடி அவளிடம் வாய்ப்பாட்டையோ, படித்த பாடத்திலிருந்து கேள்விகளையோ கேட்பான்.
இப்போதும் அவன் கைகள் தன்னை மீறித் துறுதுறுத்தன. ஆனால் இன்று அவன் யாரோ, அவள் யாரோ. அந்த நினைவு வருகையில் உள்ளூர ஒரு வலி ஊடுருவி, நெஞ்சைப் பிசைந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல் இலேசாகக் கனைத்தான்.
அவன் இளம் வயதில் வரைந்தது போலவே ஆசையாசையாகக் கட்டிய அதே வீடு. அதே போன்று அந்த வீட்டுக்கு நிறைமொழி இல்லம் என்று வைக்கையில் அவன் உள்ளத்தில் முழுமையாக நிறைந்திருந்தவளும் நிறைமொழிதான்.
கேட்டை திறந்து உள்ளே நுழைந்து, வீட்டு வாசலின் ஒரு பக்கமாக பைக்கை நிறுத்துகையிலேயே, “அப்பா!” என்று ஓடி வந்தான் அவன் மகன் சஜிதன். நான்கு வயதாகப்போகிறது. மொழிக்குப் பிறகான அவன் வாழ்க்கையின் மொத்த ஆதாரமாகிப்போனவன்.
“சஜூக்குட்டி! இன்னும் படுக்காம என்ன செய்றீங்க?” மகனைத் தூக்கிக் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டுவிட்டு வினவினான்.
“நித்திரை வரேல்லையப்பா. நாங்க பாமு மாமா வீட்டை போனனாங்க. அங்க நவி அன்ட்ரி பெருசா அழுதவா. சஜூ பயந்திட்டான். சஜூக்கு மாதிரி அவான்ர அம்மாவும் அப்புச்சாமிட்ட போய்ட்டாவாம் எண்டு அப்பும்மா சொன்னவா.” என்றதும் மகனை மார்போடு அணைத்துக்கொண்டு அன்னையைப் பார்த்தான்.
அவரும் கலங்கிப்போய்த்தான் அமர்ந்திருந்தார். அழுதிருக்கிறார் என்று தடித்திருந்த கண் மடல்கள் சொல்லின.
“அப்பா, ஏனப்பா எல்லாரின்ர அம்மாவையும் அப்புச்சாமி கூப்பிடுறார்? சஜூ பாவம், நவி அன்ட்ரியும் பாவம்.” என்று உதடு பிதுக்கினான் சின்னவன்.
“நாங்க கோயிலுக்குப் போகேக்க ஏன் எண்டு அப்புச் சாமிட்ட கேப்பம், சரியா? ஆனா அப்புச்சாமி பெரிய ஆள். அவர் கடவுள். அவர் ஏன் இப்பிடி எல்லாம் செய்றார் எண்டு எங்களுக்கு விளங்காது. ஆனா, எங்களுக்கு நல்லதை மட்டும்தான் செய்வார் எண்டு அப்பா சொல்லியிருக்கிறன்தானே.” என்று விளக்கம் சொன்னவன் அதற்கு மேலே அதைப் பற்றி மகனைப் பேச விடவில்லை.
அவன் நல்ல புத்திசாலி. என் அம்மாவைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு எனக்கு என்ன நல்லது செய்தார் என்று கேட்கக்கூடியவன். அவனை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்து, வயிற்றில் வாய் வைத்து ஊதிச் சிரிக்க வைத்து, அந்தப் பேச்சை மறக்க வைத்தான்.
அப்படிச் சிரிக்கும் மகனைப் பார்க்கையில் மொழியின் நினைவுகள் தானாக வந்தன. அவனின் விடாத இந்தப் பேச்சும் துறுதுறு என்று இருப்பதும் அப்படியே அவள்தான். அவள் இருந்திருக்கலாம். இருந்திருக்க அவனுக்கு இந்த அலைப்புறுதல்கள் இல்லாமல் இருந்திருக்கும்.
அதே நேரத்தில் நாவினியின் நினைவுகளும் அவனுள் படையெடுத்தன. அவளும் இப்படித்தான் கள்ளம் இல்லாமல் சிரிப்பாள். இன்று அழுதுகொண்டு இருப்பாள். தன் உறவுகளுக்காக ஏங்கிக்கொண்டு இருப்பாள் என்று நினைத்த மாத்திரத்தில் அவனால் மகனுக்காகக் கூடச் சிரிக்க முடியாமல் போயிற்று.
அவனோடு பேசுவதற்காகவே காத்திருக்கும் அன்னையைக் கண்ணால் தேற்றிவிட்டு, மகனோடு சென்று உடை மாற்றி, முகம் கழுவி, சுவாமி கும்பிட்டு, மகனுக்கும் தனக்கும் சேர்த்துத் திருநீறு பூசிக்கொண்டு வந்தான்.
மகனின் தோளில் தொற்றியபடியே வந்த பேரனைப் பார்த்ததுமே பிரேமாவுக்கு இலேசான முறுவல் மலர்ந்துபோயிற்று. கலக்கங்கள் ஓரளவிற்குக் கட்டுக்குள் வந்தன. அந்தளவில் நெற்றிப் பரப்பு முழுக்கத் திருநீற்றினைப் பட்டையாகத் தீட்டியிருந்தான்.
அவனுக்கு ஒற்றை விரலால் கீற்றாகத் தீற்றினால் பிடிக்காது. தகப்பனின் நடு மூன்று விரல்களாலும் நன்றாகத் தொட்டு இப்படி நெற்றி முழுக்கத் தீட்ட வேண்டும். காதோரம் ஒரு செம்பரத்தையையும் செருக வேண்டும். அப்போதுதான் அவன் சுவாமி கும்பிட்டான் என்றாகுமாம்.
என்னவோ பக்திப் பரவசமானவன் போல் ஒரு தோற்றம். ஆனால், முழுமையான கள்ளச் சாமியார். வெள்ளிக்கிழமைகளை மச்சம் கொடுக்காமல் ஓட்டுவதற்குள் படாத பாடு பட்டுவிடுவார் பிரேமா.
பட்டையும் காதோரம் செம்பரத்தையுமாக வந்த பேரனை அள்ளிக் கொஞ்சிவிட்டு, “நேரமாயிற்றுது தம்பி. தேத்தண்ணிய விட்டுப்போட்டுச் சாப்பிடப்பு.” என்று உணவைப் போட்டுக் கொடுத்தார்.
“நாவினி எப்பிடி இருக்கிறாளம்மா?” சாப்பாட்டில் கவனம் காட்டி வினவினான்.
“என்னத்தச் சொல்லச் சொல்லுறாய்? மெலி மெலி எண்டு மெலிஞ்சு எலும்பும் தோலும் தானப்பு தெரியுது. பரிமளா செத்த நேரம் கூட அந்தப் பிள்ளை இப்பிடி இருக்கேல்ல. ஆனா இப்ப… பாக்க மாட்டாய்.” என்றவருக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது.
“இரவுச் சாப்பாடு செய்து கொண்டுபோய்க் குடுத்துப்போட்டுத்தான் வந்தனான். சாப்பிடவே இல்ல. அழுதுகொண்டே இருக்கிறா.” என்றதும் மகனுக்கு ஒரு வாய் கொடுத்துக்கொண்டிருந்தவன் திரும்பித் தாயைப் பார்த்தான்.
“அவா அழுத அழுகையைப் பாக்க மாட்டாய் தம்பி. இஞ்ச வந்து அழுறதுக்காகவே இந்த ஒண்டரை வருசமும் கண்ணீரைச் சேத்து வச்சுக்கொண்டு வந்திருக்கிறா போல.” என்று அங்கே நடந்தவற்றைப் பகிர்ந்துகொண்டார்.
அவளை அனாதை என்று சொல்லி, அவள் குணத்துக்குத்தான் குடும்பத்தையே பறிகொடுத்துவிட்டு நிற்கிறாள் என்று பரமேஸ்வரன் வீட்டினர் மண் அள்ளித் திட்டியதை அயலட்டையினர் அவருக்குச் சொல்லியிருந்தனர். அதை அவர் அவனுக்குச் சொன்னபோது சுருக்கென்று ஒரு வலி. தொண்டைக்குள் விக்கிக்கொண்ட உணவை விழுங்க மிகவுமே சிரமப்பட்டுப்போனான்.
இரவுகளில் மகனைத் தன்னோடுதான் வைத்துக்கொள்வான் கேசிகன். இன்று அந்த மகனும் நாவினியின் அழுகையைத்தான் திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான். அவனுடைய இந்த மூன்றரை வருட வயதில் அவன் பார்த்த பெரும் சம்பவம் அது. அதனாலேயே அது அவன் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது புரிந்தது.
அவள் விறாந்தையில் விழுந்துகிடந்து தரையில் கையால் அடித்து அடித்து அழுதது முதற்கொண்டு, ‘என்னை மட்டும் ஏன் விட்டுட்டுப் போனனீங்க அம்மா?’ என்று கேட்டு கேட்டு அழுதது வரை அப்படியே ஒப்பித்தான் குழந்தை.
அன்றைய அவன் உறக்கம் முற்றிலுமாகத் தொலைந்தே போயிற்று. குடும்பமாகப் போனவள் தனியாக வந்து நிற்கிறாள். என்ன நடந்திருந்தாலும், யாரில் சரி பிழை இருந்தாலும் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறவளை அவன் போய்ப் பார்த்தேயாக வேண்டும்.
ஆனால், யாராய் நின்று அவளைக் காண்பான்? சிறு வயது தொடங்கி அறிந்த நண்பனாக, பழைய காதலனாக, அயல் வீட்டினனாக என்று எப்படி யோசித்தும் அவள் முன்னால் நிற்க முடியும் போலில்லை.
அடுத்த நாளும் விடிந்தது. அவனின் அம்மம்மா அழைத்து, கோயிலுக்குக் கொண்டுபோக வாழை இலைகளை அறுத்துத் தரச் சொன்னார்.
இவ்வளவு காலமும் பரமேஸ்வரன் வீட்டில், அதாவது நாவினி வீட்டில்தான் அறுப்பார்கள். பரமேஸ்வரன் அவளின் வீட்டைச் சுற்றி வாழைகள் போட்டிருந்தார். செழிப்பான, பிய்யாத நல்ல வாழை இலைகள் கிடைக்கும்.
அங்கே போனால் கோயில் அன்னதானத்திற்குத் தேவையான மொத்த இலைகளையும் வெட்டிவிடலாம் என்று மொழியின் தம்பி முகிலனை அனுப்பிவிடுவான். இவன் போகமாட்டான். இன்று அவன்தான் போக வேண்டும். அப்படியே அவளையும் பார்த்துப் பேச வேண்டும்.
அதை நினைக்கவே கால்கள் பின்னின. அவன் மனநிலை அறியாத பிரேமா, “நீயும் அவாவை ஒருக்கா போய்ப் பாக்கத்தானேயப்பு வேணும். உன்னட்டப் படிச்ச பிள்ளை எல்லா? சின்ன வயசில என்னத்துக்கு எண்டாலும் அவாக்கு நீதானே வேணும். போய் ஆறுதலா ரெண்டு வார்த்த கதச்சிப்போட்டு, இலையையும் அறுத்துக்கொண்டு வாங்கோவன்.” என்று சொன்னார்.
இலை அறுக்கும் கத்தியை எடுத்துக்கொண்டு மகனையும் ஏற்றிக்கொண்டு அம்மம்மா வீட்டுக்குச் சென்றான். அங்கே சின்னவனை விட்டுவிட்டு நடையிலேயே நாவினி வீட்டுக்குப் போனான்.
நெஞ்சில் ஒரு தடதடப்பு. போனமுறை வந்தவளை இலகுவாகப் புறம் தள்ளவும், அவளைக் கடந்து போகவும் அவனால் முடிந்தது. இந்த முறை?
தயக்கம் இருந்தாலும் கேட்டை திறந்துகொண்டு உள்ளே வந்தான். அவளின் வீட்டின் பக்கச் சுவர் பக்கமாக, அவர்கள் இருந்த காலத்திலேயே அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் அவள்.
அன்னை சொன்னபோது கூடத் தெரியவில்லை. அந்தளவில் எலும்பு மட்டுமே தெரிந்தது. கன்னங்கள் இரண்டும் ஒட்டி அந்த முகத்தில் கண்கள் மட்டுமே தெரிந்தன. ஒரு காலத்தில் செழிப்பும் செழுமையுமாக இருந்து, அவன் பார்த்து ரசித்த கன்னங்களைக் காணவே இல்லை. கழுத்தோரத்து எலும்பு கூட எழும்பி நின்றது.
கழுவித் துடைத்த முகத்தில் பொட்டு இல்லை. கண் மடல்கள் இரண்டும் தடித்துச் சிவந்திருந்தன. மூக்கின் சிவப்பு அப்போதும் அழுத்திருக்கிறாள் என்று சொல்லிற்று. கீற்றாகத் திருநீறை மட்டுமே பூசியிருந்தாள். தலைமுடியை வாராமல் அப்படியே சேர்த்து வூல் பாண்ட் போட்டிருந்தாள்.
முழங்கால் வரை நிற்கும் சட்டை ஒன்றை அணிந்து, கழுத்தோரம் மெல்லிய செயின் மட்டுமே கிடக்க அந்த ஊஞ்சலில் சப்பாணி கட்டி அமர்ந்திருந்தவள், ஊஞ்சலின் ஒரு பக்கக் கம்பியில் இலேசாகத் தலை சாய்த்திருந்தாள்.
இவன் வந்திருப்பதை உணரவேயில்லை. வீசிய காற்றின் பயனாக ஊஞ்சல் இலேசாக அசைந்தபடியிருந்தது. எங்கோ ஒரு புள்ளியில் தன் எண்ணங்களைத் தொலைத்துவிட்டு, வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தாள்.
இதே ஊஞ்சலில் அவர்களின் பல சந்திப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. அப்போதும் இப்படித்தான். கால்களைத் தொங்கவிட்டு அமரமாட்டாள். அதுவும் தள்ளி விடுவதற்கு இவனோ அவள் தம்பிகளோ இருந்தால் இப்படித்தான் சப்பாணி கட்டி அமர்ந்துவிடுவாள்.
அவளின் முன்னால் நின்று, தன்னை நோக்கி வருகிறவளின் ஊஞ்சல் பலகையின் இருபுறமும் பற்றிப் பின்னால் தள்ளிவிட்டபடி அவளிடம் வாய்ப்பாட்டையோ, படித்த பாடத்திலிருந்து கேள்விகளையோ கேட்பான்.
இப்போதும் அவன் கைகள் தன்னை மீறித் துறுதுறுத்தன. ஆனால் இன்று அவன் யாரோ, அவள் யாரோ. அந்த நினைவு வருகையில் உள்ளூர ஒரு வலி ஊடுருவி, நெஞ்சைப் பிசைந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல் இலேசாகக் கனைத்தான்.