அத்தியாயம் 1
அழகாய் புலர்ந்து நின்றது அந்தக் காலைப்பொழுது. காலைக் கதிரவன் தன் கதிர்களை மெல்லமெல்ல பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்க, கிளிநொச்சியில் ஆனந்தபுரத்தில் அமைந்திருந்த அந்த வீடு என்றுமில்லாத வகையில் அன்று மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
அந்த இல்லத்தின் அரசி மஞ்சுளா, காய்ச்சிய பாலை இரண்டு கப்புகளில் மாற்றி மாற்றி ஊற்றிச் சூட்டினை ஆற்றியபடி சமையல் அறையிலிருந்து வெளியே வந்தார். “ராகினி, அர்ஜூன் தயாராகி விட்டானா? நேரமாகிறது பார்.” என்று தன் மருமகளிடம் பேரனைப் பற்றி விசாரித்தார்.
வெள்ளை நிறத்தில் ‘ஷர்ட்’உம் நீல நிறத்தில் அரைக் காற்சட்டையும் அணிந்து நீலநிற டையும் கட்டித் தயாரான மகன் அர்ஜூனுடன் மாடியிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த ராகினியின் முகத்தில், பெரும் பரபரப்புடன் நின்ற தன் மாமியாரைப் பார்த்ததும் முறுவல் நன்றாகவே மலர்ந்தது.
“ஏன் அத்தை இவ்வளவு பரபரப்பு? உங்கள் பேரன் என்ன அடுத்தக் கண்டத்துக்கா போகப் போகிறான்? பள்ளிக்கூடத்துக்குத் தானே. அதுவும் முதலாம் வகுப்புக்கு.” என்ற ராகினியின் குரலில் மெல்லிய கேலியும் கலந்திருந்தது.
அதைக்கேட்ட மஞ்சுளாவின் முகத்திலும் புன்னகை. அவர் ஏதோ சொல்ல வாயைத் திறக்க முதலே ஒருபக்கக் கைப்பிடியைப் பிடித்தபடி படிகளில் தட தடவென்று இறங்கி ஓடிவந்து அவரின் காலைக் கட்டிக்கொண்டான் செல்லப் பேரன்.
“அப்பம்மா நான் பள்ளிக்கூடத்துக்குப் போகப்போறேன். நாளைக்கே நான் டாக்டர் ஆகிவிடுவேனே…” என்றவனை, கையிலிருந்த கப்புகளை அருகிலிருந்த சாப்பாட்டு மேசையில் வைத்துவிட்டு உள்ளம் பூரிக்கத் தூக்கிக்கொண்டார் மஞ்சுளா.
“பார்த்தாயா ராகினி என் பேரனை. பள்ளிக்கூடம் போகமுதலே படிப்பில் எவ்வளவு ஆர்வம் என்று. டாக்டராகப் போகிறானாம்.” என்றார் பெருமையாக.
“டாக்டர் ஆனதும் அப்பம்மாவுக்கு வைத்தியம் பார்ப்பாயா கண்ணா?” என்று பேரனிடமும் கேட்டார்.
“ம்ம்… அப்பம்மாவுக்கு மருந்து எல்லாம் தருவேனாம். ஆனால் ஊசி மட்டும் போடமாட்டேன். அது வலிக்கும்.” என்றவன், இரண்டு வாரத்துக்கு முதல் தனக்குப் போடப்பட்ட தடுப்பூசியின் நினைவாக முகத்தைச் சுளித்தபடி, ஊசி ஏற்றிய கையை இப்போதும் தடவிக்கொண்டான்.
அவன் செய்கையால் சிரிப்பு வந்தபோதும் அவனது பேச்சால் உள்ளம் நெகிழ்ந்தது மஞ்சுளாவுக்கு. பின்னே, பேரன் அவருக்கு வலிக்கக் கூடாது என்று எண்ணுகிறானே..!
பெருமிதம் முகத்தில் துலங்க, “என் ராஜாக்குட்டி..!” என்றவர் அவனை ஆசையோடு உச்சி முகந்தார். பதிலுக்கு அவனும் தன் ரோஜாமொட்டு இதழ்களை அவர் கன்னத்தில் அழுத்தமாகப் பதித்தான்.
அவனின் அந்தச் செய்கையில் அவரின் முகம் தன்னாலே மலர்ந்து விகசிக்க, அங்கிருந்த கதிரையில் அமர்ந்தவர், மேசையில் பேரனை அமர்த்திப் பாலை அவனுக்கு அருந்தக் கொடுத்தார்.
இரண்டு கைகளாலும் கப்பைப் பற்றி, மேலுதட்டில் மீசை வரைந்தபடி பாலை அருந்தும் பேரனின் தலை முடியைக் கோதி விட்டவர், “எங்கே ராகினி விமலன்? உள்ளே இன்னும் என்ன செய்கிறான்? அர்ஜூனுக்கு நேரமாகிறது..” என்றார் கடிந்துகொள்ளும் குரலில்.
“இன்னும் நேரம் இருக்கிறது அம்மா! சும்மா அவசரப் படுத்தாதீர்கள்.” வெளியே செல்லத் தயாராகி வந்துகொண்டிருந்த விமலன் சொன்னான்.
“உணவை எடுத்துவை ராகினி. காரும் இன்று இல்லை. ஆட்டோவில்தான் போக வேண்டும்.” என்று மனைவியை ஏவியபடி மஞ்சுளாவுக்கு எதிர்புறத்தில் அமர்ந்தான் அவன்.
“ஏனடா, காருக்கு என்ன? இதையெல்லாம் முதலே பார்த்து வைக்கமாட்டாயா? என் பேரன் முதன் முதலாகப் பள்ளிக்கூடம் போகப்போகிறான். ஆட்டோவிலா போவது? ஒரு பிள்ளைக்கு அப்பா ஆகியும் பொறுப்பு என்பது கொஞ்சமும் இல்லை உனக்கு. ஒன்றுக்கு நான்கு கார்கள் வீட்டில் நிற்கிறது. பிறகு ஏன் ஆட்டோவில் போக வேண்டும் என்கிறாய்.” என்றார் மஞ்சுளா எரிச்சலோடு.
மாமியார் கணவனைப் பொறுப்பற்றவன் என்று கடிந்ததில் உண்டான சிரிப்பை வாய்க்குள் அடக்கியபடி உணவைப் பரிமாறிய மனைவியை முறைத்துவிட்டு, “காருக்கு வரும் பழுது சொல்லிக்கொண்டா அம்மா வரும்? நேற்று மாலைதான் பிரேக்கில் என்னவோ சத்தம் கேட்டது. கராஜில் கொண்டுபோய் விட்டேன். அவன் உடனேயே தருவானா? அமலன் தன் காரில் வவுனியாவுக்குப் போய்விட்டான். அப்பாக்கு இன்று காலை மற்ற விவசாயிகளோடு ஏதோ மீட்டிங் என்றார். தர்சன்.. உங்கள் அருமைப் புத்திரன் தன் காரை யாருக்காவது தருவானா? பிறகு ஆட்டோவில் போகாமல் என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்றான் அவனும் சினத்தோடு.
“எதைக் கேட்டாலும் வக்கணையாகப் பதிலை மட்டும் சொல்லு!” என்று அப்போதும் அவனைக் கடிந்தவர் மாடியை நோக்கி, “தர்சா..!” என்று கடைசி மகனைச் சற்றே உரக்க அழைத்தார்.
அங்கிருந்து எந்தப் பதிலும் வராததில் அவரது பொறுமை பறந்தது.
“ஒன்றுக்கு மூன்றாக ஆண்பிள்ளைகளைப் பெற்றதுதான் மிச்சம். எருமை மாடுகள் மாதிரி வளர்ந்து இருக்கிறீர்களே தவிர ஒருவருக்கும் பொறுப்பு என்பது கொஞ்சமும் இல்லை.” என்றார் மகனிடமிருந்து பதில் வராத கோபத்தில்.
மனைவியின் பேச்சைக் கேட்டபடி உள்ளே நுழைந்தார் அந்த வீட்டின் தலைவர் ராஜசேகர்.
அவரைக் கண்டதும், “இன்றும் உங்களுக்கு உங்கள் நடைப் பயிற்சிதான் முக்கியமா? இன்று நீங்கள் வேலைக்கு ஆட்டோவில் போங்கள். விமலனுக்குக் கார் வேண்டும். அவன் கார் என்னவோ பழுதாம்.” என்றார் உத்தரவாக.
மனைவியின் குணம் அறிந்திருந்தவர், “சரிம்மா..” என்றபடி வந்து அவரின் அருகில் அமர்ந்து கொண்டார்.
“அப்பப்பா, அர்ஜூன் பள்ளிக்கூடம் போகப் போகிறானே..” என்று அவரிடமும் பெருமையாக அறிவித்தான் பேரன்.
பேரனின் மகிழ்ச்சியைப் பார்த்தவரின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
“அடடா! ஆமாம் இல்லையா.. பள்ளிக்கூடத்தில் நன்றாகப் படித்தால் அர்ஜூனுக்கு அப்பப்பா பெரிய சைக்கிள் வாங்கித் தருவேனாம்.”
“இப்போது இருப்பதை விடப் பெரிதாகவா?” ஆர்வத்திலும் ஆசையிலும் விழிகள் விரியக் கேட்டான் அர்ஜூன்.
“அதைவிடப் பெரிதுதான். எங்கள் அர்ஜூன் பள்ளிக்கூடம் போகும் அளவுக்கு வளர்ந்துவிட்டானே. அப்போ பெரிய சைக்கிள் தானே வேண்டும்.” என்றவரை இடையிட்டார் அவர் மனையாள்.
“இங்கே அவன் பள்ளிக்கூடம் போவதற்கே கார் இல்லையாம். இதில் சைக்கிள் வாங்கிக் கொடுப்பாராம் இவர்.”
“அதுதான் அவன் என் காரை கொண்டு போகட்டும் என்றாயேம்மா..” என்று மனைவியிடம் சொல்லி அவரைச் சமாதானப்படுத்தியவர் விமலனிடமும் அதையே சொன்னார்.
ஒரு விவசாயியான ராஜசேகர் இன்று நேரடியாக விவசாயத்தில் ஈடுபடாதபோதும், நிறைய விவசாய நிலங்களை வாங்கி ஆட்களை வைத்து விவசாயம் செய்துகொண்டிருந்தார். எனவே தினமும் அனைத்து நிலங்களுக்கும் செல்வது, அங்குள்ள பிரச்சினைகளைப் பார்ப்பது என்று எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கும் அவர் ஆட்டோவில் போவது உசிதமாகப் படவில்லை விமலனுக்கு. அறுபதை நெருங்கிவிட்ட அவரின் தேகம் திடகாத்திரமாகத் தோற்றமளித்தாலும் வயதுக்கு ஏற்ற இயலாமை இருக்குமல்லவா.
எனவே, “வேண்டாம்பா. நான் ஆட்டோவிலேயே போகிறேன். இன்று ஒருநாள் அர்ஜூன் ஆட்டோவில் போவதால் ஒன்றும் ஆகாது. நாளைக்கு என் கார் வந்து விடும் தானே.” என்றான் தாய் தந்தையர் இருவருக்கும் பொதுவாக.
அழகாய் புலர்ந்து நின்றது அந்தக் காலைப்பொழுது. காலைக் கதிரவன் தன் கதிர்களை மெல்லமெல்ல பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்க, கிளிநொச்சியில் ஆனந்தபுரத்தில் அமைந்திருந்த அந்த வீடு என்றுமில்லாத வகையில் அன்று மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
அந்த இல்லத்தின் அரசி மஞ்சுளா, காய்ச்சிய பாலை இரண்டு கப்புகளில் மாற்றி மாற்றி ஊற்றிச் சூட்டினை ஆற்றியபடி சமையல் அறையிலிருந்து வெளியே வந்தார். “ராகினி, அர்ஜூன் தயாராகி விட்டானா? நேரமாகிறது பார்.” என்று தன் மருமகளிடம் பேரனைப் பற்றி விசாரித்தார்.
வெள்ளை நிறத்தில் ‘ஷர்ட்’உம் நீல நிறத்தில் அரைக் காற்சட்டையும் அணிந்து நீலநிற டையும் கட்டித் தயாரான மகன் அர்ஜூனுடன் மாடியிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த ராகினியின் முகத்தில், பெரும் பரபரப்புடன் நின்ற தன் மாமியாரைப் பார்த்ததும் முறுவல் நன்றாகவே மலர்ந்தது.
“ஏன் அத்தை இவ்வளவு பரபரப்பு? உங்கள் பேரன் என்ன அடுத்தக் கண்டத்துக்கா போகப் போகிறான்? பள்ளிக்கூடத்துக்குத் தானே. அதுவும் முதலாம் வகுப்புக்கு.” என்ற ராகினியின் குரலில் மெல்லிய கேலியும் கலந்திருந்தது.
அதைக்கேட்ட மஞ்சுளாவின் முகத்திலும் புன்னகை. அவர் ஏதோ சொல்ல வாயைத் திறக்க முதலே ஒருபக்கக் கைப்பிடியைப் பிடித்தபடி படிகளில் தட தடவென்று இறங்கி ஓடிவந்து அவரின் காலைக் கட்டிக்கொண்டான் செல்லப் பேரன்.
“அப்பம்மா நான் பள்ளிக்கூடத்துக்குப் போகப்போறேன். நாளைக்கே நான் டாக்டர் ஆகிவிடுவேனே…” என்றவனை, கையிலிருந்த கப்புகளை அருகிலிருந்த சாப்பாட்டு மேசையில் வைத்துவிட்டு உள்ளம் பூரிக்கத் தூக்கிக்கொண்டார் மஞ்சுளா.
“பார்த்தாயா ராகினி என் பேரனை. பள்ளிக்கூடம் போகமுதலே படிப்பில் எவ்வளவு ஆர்வம் என்று. டாக்டராகப் போகிறானாம்.” என்றார் பெருமையாக.
“டாக்டர் ஆனதும் அப்பம்மாவுக்கு வைத்தியம் பார்ப்பாயா கண்ணா?” என்று பேரனிடமும் கேட்டார்.
“ம்ம்… அப்பம்மாவுக்கு மருந்து எல்லாம் தருவேனாம். ஆனால் ஊசி மட்டும் போடமாட்டேன். அது வலிக்கும்.” என்றவன், இரண்டு வாரத்துக்கு முதல் தனக்குப் போடப்பட்ட தடுப்பூசியின் நினைவாக முகத்தைச் சுளித்தபடி, ஊசி ஏற்றிய கையை இப்போதும் தடவிக்கொண்டான்.
அவன் செய்கையால் சிரிப்பு வந்தபோதும் அவனது பேச்சால் உள்ளம் நெகிழ்ந்தது மஞ்சுளாவுக்கு. பின்னே, பேரன் அவருக்கு வலிக்கக் கூடாது என்று எண்ணுகிறானே..!
பெருமிதம் முகத்தில் துலங்க, “என் ராஜாக்குட்டி..!” என்றவர் அவனை ஆசையோடு உச்சி முகந்தார். பதிலுக்கு அவனும் தன் ரோஜாமொட்டு இதழ்களை அவர் கன்னத்தில் அழுத்தமாகப் பதித்தான்.
அவனின் அந்தச் செய்கையில் அவரின் முகம் தன்னாலே மலர்ந்து விகசிக்க, அங்கிருந்த கதிரையில் அமர்ந்தவர், மேசையில் பேரனை அமர்த்திப் பாலை அவனுக்கு அருந்தக் கொடுத்தார்.
இரண்டு கைகளாலும் கப்பைப் பற்றி, மேலுதட்டில் மீசை வரைந்தபடி பாலை அருந்தும் பேரனின் தலை முடியைக் கோதி விட்டவர், “எங்கே ராகினி விமலன்? உள்ளே இன்னும் என்ன செய்கிறான்? அர்ஜூனுக்கு நேரமாகிறது..” என்றார் கடிந்துகொள்ளும் குரலில்.
“இன்னும் நேரம் இருக்கிறது அம்மா! சும்மா அவசரப் படுத்தாதீர்கள்.” வெளியே செல்லத் தயாராகி வந்துகொண்டிருந்த விமலன் சொன்னான்.
“உணவை எடுத்துவை ராகினி. காரும் இன்று இல்லை. ஆட்டோவில்தான் போக வேண்டும்.” என்று மனைவியை ஏவியபடி மஞ்சுளாவுக்கு எதிர்புறத்தில் அமர்ந்தான் அவன்.
“ஏனடா, காருக்கு என்ன? இதையெல்லாம் முதலே பார்த்து வைக்கமாட்டாயா? என் பேரன் முதன் முதலாகப் பள்ளிக்கூடம் போகப்போகிறான். ஆட்டோவிலா போவது? ஒரு பிள்ளைக்கு அப்பா ஆகியும் பொறுப்பு என்பது கொஞ்சமும் இல்லை உனக்கு. ஒன்றுக்கு நான்கு கார்கள் வீட்டில் நிற்கிறது. பிறகு ஏன் ஆட்டோவில் போக வேண்டும் என்கிறாய்.” என்றார் மஞ்சுளா எரிச்சலோடு.
மாமியார் கணவனைப் பொறுப்பற்றவன் என்று கடிந்ததில் உண்டான சிரிப்பை வாய்க்குள் அடக்கியபடி உணவைப் பரிமாறிய மனைவியை முறைத்துவிட்டு, “காருக்கு வரும் பழுது சொல்லிக்கொண்டா அம்மா வரும்? நேற்று மாலைதான் பிரேக்கில் என்னவோ சத்தம் கேட்டது. கராஜில் கொண்டுபோய் விட்டேன். அவன் உடனேயே தருவானா? அமலன் தன் காரில் வவுனியாவுக்குப் போய்விட்டான். அப்பாக்கு இன்று காலை மற்ற விவசாயிகளோடு ஏதோ மீட்டிங் என்றார். தர்சன்.. உங்கள் அருமைப் புத்திரன் தன் காரை யாருக்காவது தருவானா? பிறகு ஆட்டோவில் போகாமல் என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்றான் அவனும் சினத்தோடு.
“எதைக் கேட்டாலும் வக்கணையாகப் பதிலை மட்டும் சொல்லு!” என்று அப்போதும் அவனைக் கடிந்தவர் மாடியை நோக்கி, “தர்சா..!” என்று கடைசி மகனைச் சற்றே உரக்க அழைத்தார்.
அங்கிருந்து எந்தப் பதிலும் வராததில் அவரது பொறுமை பறந்தது.
“ஒன்றுக்கு மூன்றாக ஆண்பிள்ளைகளைப் பெற்றதுதான் மிச்சம். எருமை மாடுகள் மாதிரி வளர்ந்து இருக்கிறீர்களே தவிர ஒருவருக்கும் பொறுப்பு என்பது கொஞ்சமும் இல்லை.” என்றார் மகனிடமிருந்து பதில் வராத கோபத்தில்.
மனைவியின் பேச்சைக் கேட்டபடி உள்ளே நுழைந்தார் அந்த வீட்டின் தலைவர் ராஜசேகர்.
அவரைக் கண்டதும், “இன்றும் உங்களுக்கு உங்கள் நடைப் பயிற்சிதான் முக்கியமா? இன்று நீங்கள் வேலைக்கு ஆட்டோவில் போங்கள். விமலனுக்குக் கார் வேண்டும். அவன் கார் என்னவோ பழுதாம்.” என்றார் உத்தரவாக.
மனைவியின் குணம் அறிந்திருந்தவர், “சரிம்மா..” என்றபடி வந்து அவரின் அருகில் அமர்ந்து கொண்டார்.
“அப்பப்பா, அர்ஜூன் பள்ளிக்கூடம் போகப் போகிறானே..” என்று அவரிடமும் பெருமையாக அறிவித்தான் பேரன்.
பேரனின் மகிழ்ச்சியைப் பார்த்தவரின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
“அடடா! ஆமாம் இல்லையா.. பள்ளிக்கூடத்தில் நன்றாகப் படித்தால் அர்ஜூனுக்கு அப்பப்பா பெரிய சைக்கிள் வாங்கித் தருவேனாம்.”
“இப்போது இருப்பதை விடப் பெரிதாகவா?” ஆர்வத்திலும் ஆசையிலும் விழிகள் விரியக் கேட்டான் அர்ஜூன்.
“அதைவிடப் பெரிதுதான். எங்கள் அர்ஜூன் பள்ளிக்கூடம் போகும் அளவுக்கு வளர்ந்துவிட்டானே. அப்போ பெரிய சைக்கிள் தானே வேண்டும்.” என்றவரை இடையிட்டார் அவர் மனையாள்.
“இங்கே அவன் பள்ளிக்கூடம் போவதற்கே கார் இல்லையாம். இதில் சைக்கிள் வாங்கிக் கொடுப்பாராம் இவர்.”
“அதுதான் அவன் என் காரை கொண்டு போகட்டும் என்றாயேம்மா..” என்று மனைவியிடம் சொல்லி அவரைச் சமாதானப்படுத்தியவர் விமலனிடமும் அதையே சொன்னார்.
ஒரு விவசாயியான ராஜசேகர் இன்று நேரடியாக விவசாயத்தில் ஈடுபடாதபோதும், நிறைய விவசாய நிலங்களை வாங்கி ஆட்களை வைத்து விவசாயம் செய்துகொண்டிருந்தார். எனவே தினமும் அனைத்து நிலங்களுக்கும் செல்வது, அங்குள்ள பிரச்சினைகளைப் பார்ப்பது என்று எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கும் அவர் ஆட்டோவில் போவது உசிதமாகப் படவில்லை விமலனுக்கு. அறுபதை நெருங்கிவிட்ட அவரின் தேகம் திடகாத்திரமாகத் தோற்றமளித்தாலும் வயதுக்கு ஏற்ற இயலாமை இருக்குமல்லவா.
எனவே, “வேண்டாம்பா. நான் ஆட்டோவிலேயே போகிறேன். இன்று ஒருநாள் அர்ஜூன் ஆட்டோவில் போவதால் ஒன்றும் ஆகாது. நாளைக்கு என் கார் வந்து விடும் தானே.” என்றான் தாய் தந்தையர் இருவருக்கும் பொதுவாக.