மனம் - 11:
இன்னும் ஒரு மாதத்தில் தீபாவளி வருவதால் அசோகனுடன் சேர்ந்து பட்டாசுகளை சிவகாசியில் இருந்து சென்னைக்கு பத்திரமாக கொண்டு வந்து இங்கிருக்கும் கடைகளுக்கு பிரித்து அனுப்பும் வேலையில் ஈடுபட்டான் குருபிரசாத்.
அனைத்துமே வெடிபொருட்கள் என்பதால் மிகவும் கவனத்துடனே சிவகாசியிலிருந்து வந்தன. அதில் குருபிரசாத்திற்கு தொடர்ச்சியான அலைச்சல் தான். அவனின் வேலையையும் பார்த்துக் கொண்டு கிடைக்கின்ற இடைவெளியில் இதையும் பார்ப்பது அழுப்பாக இருந்தாலும் தொடர்ந்து செய்தான்.
இரண்டு நாட்கள் தாக்கு பிடித்தவனின் உடல் மூன்றாம் நாள் என்னையும் கவனி என படுத்தியெடுத்தது. அதன் விளைவாக மூன்றாம் நாள் குருபிரசாத் காய்ச்சலில் படுத்துவிட்டான். அபிலாஷ் தான் அவனை மருத்துவமனை அழைத்து சென்று அலுவலகத்தில் விடுப்பும் சொல்லியிருந்தான்.
“ஜெஸி வேற ப்ரக்னன்ட்டா இருக்கா டா. என்னை நானே பார்த்துப்பேன். நீ போய் அவளை பாரு..” என குரு அவனை துரத்திவிட்டாலும் அவ்வப்பொழுது வந்து பார்த்துக் கொள்ளதான் செய்தான்.
மூன்று நாட்களாக குரு அலுவலகம் வராததால் பவ்யாவிடம் பேச்சுவாக்கில் விசாரித்தாள் அட்சயா. “அவங்களுக்கு காய்ச்சல்.” என்று மட்டும் பவ்யா சொல்ல வேறேதும் அவளிடம் கேட்டுக் கொள்ள முடியவில்லை.
வேறு யாரிடம் கேட்பது என அவள் யோசிக்க, ‘உனக்கு ஹெல்ப் வேணும்னா மட்டும் அவருக்கு ஃபோன் பண்ணுற தான? இப்பயும் ஃபோன் பண்ணியே எப்படி இருக்காங்கன்னு கேளு..’ என அவளின் மனமே எடுத்துக் கொடுக்க நடுங்கும் கைகளால் அலைபேசியை எடுத்து குருவை அழைத்துவிட்டாள்.
இட்லி சாப்பிட்டுவிட்டு அப்பொழுது தான் மாத்திரை போட்டு படுக்க சென்றவன், அட்சயாவின் அழைப்பில் ஃபோனை காதில் வைத்து, “ஹலோ..” என்றான்.
“நா..நான் அட்சயா பேசுறேன்.”
“ம்ம். தெரியுது சொல்லு..” என்ற குரல் சோர்ந்து தான் வந்தது.
“அது.. உங்களுக்கு உடம்பு சரில்லனு பவ்யா சொன்னா. அதான்..”
“அது உண்மையானு கேட்க ஃபோன் பண்ணியா?”
“இல்ல இல்ல. இப்ப எப்படி இருக்கீங்கன்னு கேட்க தான் கூப்பிட்டேன்.” என திக்கி திணறி கேட்டுவிட்டாள்.
“ஹ்ம்ம். பரவால..”
“ஹாஸ்பிடல் போனீங்களா?”
“ம்ம்ம்.”
“சாப்டாச்சா?”
“ம்ம்ம்.”
அவளின் கேள்விகள் அனைத்திற்குமே ஒற்றை எழுத்தை பதிலாக்கிக் கொண்டிருந்தான்.
‘ஒருவேளை பேச முடியலையோ? அவ்ளோ டயர்டா இருக்காங்களா?’ என யோசித்தவள், “வெச்சிடட்டுமா?” என்றாள்.
அதற்கு மட்டும், “வை டி” என வேகமாக சொல்லிவிட்டான். ‘குசலம் விசாரிக்க வந்துட்டா.’ என காய்ச்சலின் வெளிப்பாட்டில் அவளிடம் தான் காய்ந்துவிட்டான்.
அவனின் குரலே சரியில்லாமல் இருக்க, தனியா வேற இருக்காங்க யாரு அவங்கள பார்த்துப்பாங்க என யோசித்தாள். ‘நீ தான அவங்கள வேணாம்னு சொன்ன இப்ப எதுக்கு ரொம்ப அக்கறை படுற?’ என அவளின் ஒரு மனம் எடுத்துக் கொடுக்க, மற்றொரு மனமோ, ‘அதுக்காக அவங்கள பத்தி விசாரிக்க கூட செய்ய கூடாதா?’ என்றது.
மறுவாரம் தான் குருபிரசாத் அலுவலகத்திற்கு வந்திருந்தான். ஒரு சிலர் அவனிடம் சென்று நலம் விசாரித்தனர்.
அவளின் இடத்திலே அமர்ந்திருந்த அட்சயாவிற்கு குருவிடம் தானாகவே சென்று பேச தயக்கமாக இருந்தது. அவளின் தயக்கத்தை குருவின் மேல் உள்ள அக்கறை வென்றுவிட்டது. எனவே, மற்றவர்கள் அவனைவிட்டு விலகியதும் அவனின் அருகில் சென்றாள்.
அவனை பார்த்தாலே மிகவும் சோர்ந்து தான் தெரிந்தான்.
“இப்ப எப்படி இருக்கீங்க?” என்றவளை நிமிர்ந்து பார்த்தவன்,
“பக்கத்துல தான இருக்கேன். நீயே பார்த்து சொல்லு எப்படி இருக்கேன்.” என்றிட,
‘மத்தவங்க கிட்ட ஒழுங்கா தான பேசுனாங்க. அவங்க இருக்கப்பவே நாமளும் வந்திருக்கலாம் போல..’ என யோசித்துக் கொண்டிருந்தவளை அருகில் இருந்த ரொலிங் சேரில் அமர சொன்னான்.
அவள் அமர்ந்ததும், “உன்கிட்ட ஒரு வேலை சொன்னேனே.. அது இப்ப எந்த ஸ்டேஜ்ல இருக்கு?” என கணினியை பார்த்து தீவிரமாக கேட்டான்.
‘ஐயையோ என்ன வேலை சொன்னாரு? மெயில் ஏதாவது போட்டாங்களோ? நான் தான் பார்க்கலையா?’ என யோசித்தவள் திருதிருவென முழித்துக்கொண்டே, “மெயில் போட்டீங்களா? நான் கவனிக்கலையே!” என அவனிடமே சொல்ல,
வந்த சிரிப்பை அடக்கியவன், “அன்னைக்கு உன்னை ஹாஸ்டல்ல ட்ராப் பண்ணுறப்ப சொன்னனே.. எனக்கு நல்ல பொண்ணா பார்த்துக் கொடுன்னு. அதை பத்தி தான் கேட்குறேன். எந்த லெவல்ல இருக்கு எத்தனை பொண்ணுங்களை விசாரிச்சிருக்க?” என வேலையை பற்றி கேட்பதை போலவே முகபாவத்தை வைத்துக்கொண்டு கேட்டான்.
‘கடவுளே!’ என மானசீகமாக கடவுளை வேண்டியவள், “அது நீங்க சும்மா விளையாட்டுக்கு தான சொன்னீங்க?” என்றவளின் முகமே மாறிவிட்டது.
“எது விளையாட்டா? சீரியஸா கேட்குறேன் மா.” என்றவனின் முகத்தில் என்ன இருக்கிறது என அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவளிடமே அவனுக்கு பெண் பார்க்க சொல்லி கேட்பது அவளுக்கு கோபத்தை உண்டாக்க, “ஏன் உங்களுக்கு பிடிச்ச மாதிரி உங்க கேஸ்ட்லயே உங்க அம்மா பார்ப்பாங்க தான. அவங்க கிட்டயே கேட்கலாமே..” என அவனை முறைத்துக் கொண்டே சொன்னாள். அதில் அவளை திரும்பி பார்த்தவன்,
“ஹ்ம்ம் பார்த்துட்டே தான் இருக்காங்க. பட், செகண்ட் மேரேஜ்னு எந்த பெண்ணும் ஒத்துக்க மாட்டிங்குது. நீ வேற ஒரே நாள்ல என்னை விட்டுட்டு போய் டிவோர்ஸ் பண்ணிட்டியா அதான் எதுவும் அமைய மாட்டிங்குது. இன்னைக்கு கூட வாட்ஸப்ல ரெண்டு பொண்ணு போட்டோ அம்மா அனுப்புனாங்க. அவங்கள எதுக்கு கஷ்டப்படுத்தனும். நீ தான என்னை விட்டுட்டு போன அதான் நீயே பாருனு சொல்றேன்.” என்றவனிடம் வாதாடவும் அவளால் முடியவில்லை.
அவன் உண்மையாக சொல்வதாக நினைத்து, “ஆனா உங்களுக்காக நான் எப்படி பார்க்க முடியும்?” என்றாள் பிடித்தமின்மையை முகத்தில் காட்டி.
“நீ தான டி என்னோட ஃபர்ஸ்ட் பொண்டாட்டி. நீயே எனக்கு நல்ல சர்டிஃபிகேட் கொடுத்தா சீக்கிரமாவே எனக்கு கல்யாணம் நடக்கும். எனக்கும் முப்பது வயசு ஆக போகுது. அதுமில்லாம அடுத்த முறை ஃபிவர் வந்தா யாரும் இல்லாம தனியா கஷ்டபட வேணாம் பாரு.” என அடுக்கினான்.
அவன் சொன்னதில் மற்றதை விட்டுவிட்டு, “அபி அண்ணா உங்கள பார்த்துக்கிட்டாங்க தான?”
“அவன் என்ன என்னை மாதிரி தனியாவா இருக்கான்? என்கூடவே இருக்க? அவனுக்கும் பொண்டாட்டி இருக்கு மா.” என்றவன்,
“ஃபோன்ல அம்மா அனுப்புன போட்டோஸ் இருக்கு. பார்த்து நீயே செலக்ட் பண்ணுறியா..” என குரு அவனின் ஃபோனை எடுக்க,
“எனக்கு இப்ப மீட்டிங் இருக்கு.” என விட்டால் போதுமென்று ஓடியே விட்டாள் அட்சயா. அவளின் வேகத்தை பார்த்தவன் மனதிலே சிரித்துக் கொண்டான்.
அங்கு கணினியின் முன் அமர்ந்து, ‘விட்டுட்டு போனேன். விட்டுட்டு போனேன்னு எத்தனை வாட்டி தான் சொல்லி காட்டுவாங்களோ.. நானென்ன பிடிக்காமையா விட்டுட்டு போனேன்?’ என சிடுசிடுவென வேலை பார்க்க, “அப்ப பிடிச்சி தான் விட்டுட்டு போனியா?” என்ற குருவின் குரல் அவளின் ஆழ்மனதில் இருந்து கேட்டது. அதில் பதறி சுற்றும் பார்க்க அனைவரும் அவர்களின் வேலையை பார்ப்பது தெரிய, குருவிடம் சிக்கிக்கொண்ட மனதை முயன்று வேலையில் திசை திருப்பினாள்.
இன்னும் ஒரு மாதத்தில் தீபாவளி வருவதால் அசோகனுடன் சேர்ந்து பட்டாசுகளை சிவகாசியில் இருந்து சென்னைக்கு பத்திரமாக கொண்டு வந்து இங்கிருக்கும் கடைகளுக்கு பிரித்து அனுப்பும் வேலையில் ஈடுபட்டான் குருபிரசாத்.
அனைத்துமே வெடிபொருட்கள் என்பதால் மிகவும் கவனத்துடனே சிவகாசியிலிருந்து வந்தன. அதில் குருபிரசாத்திற்கு தொடர்ச்சியான அலைச்சல் தான். அவனின் வேலையையும் பார்த்துக் கொண்டு கிடைக்கின்ற இடைவெளியில் இதையும் பார்ப்பது அழுப்பாக இருந்தாலும் தொடர்ந்து செய்தான்.
இரண்டு நாட்கள் தாக்கு பிடித்தவனின் உடல் மூன்றாம் நாள் என்னையும் கவனி என படுத்தியெடுத்தது. அதன் விளைவாக மூன்றாம் நாள் குருபிரசாத் காய்ச்சலில் படுத்துவிட்டான். அபிலாஷ் தான் அவனை மருத்துவமனை அழைத்து சென்று அலுவலகத்தில் விடுப்பும் சொல்லியிருந்தான்.
“ஜெஸி வேற ப்ரக்னன்ட்டா இருக்கா டா. என்னை நானே பார்த்துப்பேன். நீ போய் அவளை பாரு..” என குரு அவனை துரத்திவிட்டாலும் அவ்வப்பொழுது வந்து பார்த்துக் கொள்ளதான் செய்தான்.
மூன்று நாட்களாக குரு அலுவலகம் வராததால் பவ்யாவிடம் பேச்சுவாக்கில் விசாரித்தாள் அட்சயா. “அவங்களுக்கு காய்ச்சல்.” என்று மட்டும் பவ்யா சொல்ல வேறேதும் அவளிடம் கேட்டுக் கொள்ள முடியவில்லை.
வேறு யாரிடம் கேட்பது என அவள் யோசிக்க, ‘உனக்கு ஹெல்ப் வேணும்னா மட்டும் அவருக்கு ஃபோன் பண்ணுற தான? இப்பயும் ஃபோன் பண்ணியே எப்படி இருக்காங்கன்னு கேளு..’ என அவளின் மனமே எடுத்துக் கொடுக்க நடுங்கும் கைகளால் அலைபேசியை எடுத்து குருவை அழைத்துவிட்டாள்.
இட்லி சாப்பிட்டுவிட்டு அப்பொழுது தான் மாத்திரை போட்டு படுக்க சென்றவன், அட்சயாவின் அழைப்பில் ஃபோனை காதில் வைத்து, “ஹலோ..” என்றான்.
“நா..நான் அட்சயா பேசுறேன்.”
“ம்ம். தெரியுது சொல்லு..” என்ற குரல் சோர்ந்து தான் வந்தது.
“அது.. உங்களுக்கு உடம்பு சரில்லனு பவ்யா சொன்னா. அதான்..”
“அது உண்மையானு கேட்க ஃபோன் பண்ணியா?”
“இல்ல இல்ல. இப்ப எப்படி இருக்கீங்கன்னு கேட்க தான் கூப்பிட்டேன்.” என திக்கி திணறி கேட்டுவிட்டாள்.
“ஹ்ம்ம். பரவால..”
“ஹாஸ்பிடல் போனீங்களா?”
“ம்ம்ம்.”
“சாப்டாச்சா?”
“ம்ம்ம்.”
அவளின் கேள்விகள் அனைத்திற்குமே ஒற்றை எழுத்தை பதிலாக்கிக் கொண்டிருந்தான்.
‘ஒருவேளை பேச முடியலையோ? அவ்ளோ டயர்டா இருக்காங்களா?’ என யோசித்தவள், “வெச்சிடட்டுமா?” என்றாள்.
அதற்கு மட்டும், “வை டி” என வேகமாக சொல்லிவிட்டான். ‘குசலம் விசாரிக்க வந்துட்டா.’ என காய்ச்சலின் வெளிப்பாட்டில் அவளிடம் தான் காய்ந்துவிட்டான்.
அவனின் குரலே சரியில்லாமல் இருக்க, தனியா வேற இருக்காங்க யாரு அவங்கள பார்த்துப்பாங்க என யோசித்தாள். ‘நீ தான அவங்கள வேணாம்னு சொன்ன இப்ப எதுக்கு ரொம்ப அக்கறை படுற?’ என அவளின் ஒரு மனம் எடுத்துக் கொடுக்க, மற்றொரு மனமோ, ‘அதுக்காக அவங்கள பத்தி விசாரிக்க கூட செய்ய கூடாதா?’ என்றது.
மறுவாரம் தான் குருபிரசாத் அலுவலகத்திற்கு வந்திருந்தான். ஒரு சிலர் அவனிடம் சென்று நலம் விசாரித்தனர்.
அவளின் இடத்திலே அமர்ந்திருந்த அட்சயாவிற்கு குருவிடம் தானாகவே சென்று பேச தயக்கமாக இருந்தது. அவளின் தயக்கத்தை குருவின் மேல் உள்ள அக்கறை வென்றுவிட்டது. எனவே, மற்றவர்கள் அவனைவிட்டு விலகியதும் அவனின் அருகில் சென்றாள்.
அவனை பார்த்தாலே மிகவும் சோர்ந்து தான் தெரிந்தான்.
“இப்ப எப்படி இருக்கீங்க?” என்றவளை நிமிர்ந்து பார்த்தவன்,
“பக்கத்துல தான இருக்கேன். நீயே பார்த்து சொல்லு எப்படி இருக்கேன்.” என்றிட,
‘மத்தவங்க கிட்ட ஒழுங்கா தான பேசுனாங்க. அவங்க இருக்கப்பவே நாமளும் வந்திருக்கலாம் போல..’ என யோசித்துக் கொண்டிருந்தவளை அருகில் இருந்த ரொலிங் சேரில் அமர சொன்னான்.
அவள் அமர்ந்ததும், “உன்கிட்ட ஒரு வேலை சொன்னேனே.. அது இப்ப எந்த ஸ்டேஜ்ல இருக்கு?” என கணினியை பார்த்து தீவிரமாக கேட்டான்.
‘ஐயையோ என்ன வேலை சொன்னாரு? மெயில் ஏதாவது போட்டாங்களோ? நான் தான் பார்க்கலையா?’ என யோசித்தவள் திருதிருவென முழித்துக்கொண்டே, “மெயில் போட்டீங்களா? நான் கவனிக்கலையே!” என அவனிடமே சொல்ல,
வந்த சிரிப்பை அடக்கியவன், “அன்னைக்கு உன்னை ஹாஸ்டல்ல ட்ராப் பண்ணுறப்ப சொன்னனே.. எனக்கு நல்ல பொண்ணா பார்த்துக் கொடுன்னு. அதை பத்தி தான் கேட்குறேன். எந்த லெவல்ல இருக்கு எத்தனை பொண்ணுங்களை விசாரிச்சிருக்க?” என வேலையை பற்றி கேட்பதை போலவே முகபாவத்தை வைத்துக்கொண்டு கேட்டான்.
‘கடவுளே!’ என மானசீகமாக கடவுளை வேண்டியவள், “அது நீங்க சும்மா விளையாட்டுக்கு தான சொன்னீங்க?” என்றவளின் முகமே மாறிவிட்டது.
“எது விளையாட்டா? சீரியஸா கேட்குறேன் மா.” என்றவனின் முகத்தில் என்ன இருக்கிறது என அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவளிடமே அவனுக்கு பெண் பார்க்க சொல்லி கேட்பது அவளுக்கு கோபத்தை உண்டாக்க, “ஏன் உங்களுக்கு பிடிச்ச மாதிரி உங்க கேஸ்ட்லயே உங்க அம்மா பார்ப்பாங்க தான. அவங்க கிட்டயே கேட்கலாமே..” என அவனை முறைத்துக் கொண்டே சொன்னாள். அதில் அவளை திரும்பி பார்த்தவன்,
“ஹ்ம்ம் பார்த்துட்டே தான் இருக்காங்க. பட், செகண்ட் மேரேஜ்னு எந்த பெண்ணும் ஒத்துக்க மாட்டிங்குது. நீ வேற ஒரே நாள்ல என்னை விட்டுட்டு போய் டிவோர்ஸ் பண்ணிட்டியா அதான் எதுவும் அமைய மாட்டிங்குது. இன்னைக்கு கூட வாட்ஸப்ல ரெண்டு பொண்ணு போட்டோ அம்மா அனுப்புனாங்க. அவங்கள எதுக்கு கஷ்டப்படுத்தனும். நீ தான என்னை விட்டுட்டு போன அதான் நீயே பாருனு சொல்றேன்.” என்றவனிடம் வாதாடவும் அவளால் முடியவில்லை.
அவன் உண்மையாக சொல்வதாக நினைத்து, “ஆனா உங்களுக்காக நான் எப்படி பார்க்க முடியும்?” என்றாள் பிடித்தமின்மையை முகத்தில் காட்டி.
“நீ தான டி என்னோட ஃபர்ஸ்ட் பொண்டாட்டி. நீயே எனக்கு நல்ல சர்டிஃபிகேட் கொடுத்தா சீக்கிரமாவே எனக்கு கல்யாணம் நடக்கும். எனக்கும் முப்பது வயசு ஆக போகுது. அதுமில்லாம அடுத்த முறை ஃபிவர் வந்தா யாரும் இல்லாம தனியா கஷ்டபட வேணாம் பாரு.” என அடுக்கினான்.
அவன் சொன்னதில் மற்றதை விட்டுவிட்டு, “அபி அண்ணா உங்கள பார்த்துக்கிட்டாங்க தான?”
“அவன் என்ன என்னை மாதிரி தனியாவா இருக்கான்? என்கூடவே இருக்க? அவனுக்கும் பொண்டாட்டி இருக்கு மா.” என்றவன்,
“ஃபோன்ல அம்மா அனுப்புன போட்டோஸ் இருக்கு. பார்த்து நீயே செலக்ட் பண்ணுறியா..” என குரு அவனின் ஃபோனை எடுக்க,
“எனக்கு இப்ப மீட்டிங் இருக்கு.” என விட்டால் போதுமென்று ஓடியே விட்டாள் அட்சயா. அவளின் வேகத்தை பார்த்தவன் மனதிலே சிரித்துக் கொண்டான்.
அங்கு கணினியின் முன் அமர்ந்து, ‘விட்டுட்டு போனேன். விட்டுட்டு போனேன்னு எத்தனை வாட்டி தான் சொல்லி காட்டுவாங்களோ.. நானென்ன பிடிக்காமையா விட்டுட்டு போனேன்?’ என சிடுசிடுவென வேலை பார்க்க, “அப்ப பிடிச்சி தான் விட்டுட்டு போனியா?” என்ற குருவின் குரல் அவளின் ஆழ்மனதில் இருந்து கேட்டது. அதில் பதறி சுற்றும் பார்க்க அனைவரும் அவர்களின் வேலையை பார்ப்பது தெரிய, குருவிடம் சிக்கிக்கொண்ட மனதை முயன்று வேலையில் திசை திருப்பினாள்.