“சரி பிள்ளைகள் இனி மற்றதப் பார்ப்பமே!” மாறன் சொல்லிவிட்டு முன்னால் செல்ல, அடுத்த கண்காட்சிக்கு (Hall of the shy exhibits) நகர்ந்தார்கள்.
உள்ளே நுழைந்ததும், சுழலும் புவியுருண்டை மற்றும் வெவேறு நாட்டு நேரம் காட்டும் கடிகாரங்கள் கொண்டு இரவு பகல் பற்றி விளக்கப்பட்டிருந்தது.
அடுத்து, ஒரு அரைவட்டக் குட்டித்திரையிருந்தது. பார்த்ததும் தெளிவாகத் தெரியும் பூமியின் கோள வடிவமும், அசையாதிருந்த ஆய்வகக்கட்டிடத்தின் மேலே நீலவானில் நிலவு போல் அசைந்து நகரும் சூரியனும், அது மறைந்ததும் நட்சத்திரங்கள் ஜொலிக்கும் வானத்தின் நகர்வும் எல்லோருக்குமே ஆச்சரிய உணர்வைத் தந்தது. தெரியாத, கேள்விப்படாத விசயமில்லையென்றாலும் பார்க்கையில் ‘வாவ்’ போடாதிருக்கவும் முடியவில்லை.
“எனக்கு எண்டா நாம இப்ப ஸ்பேசில நிக்கிறது போல இருக்கு!” வாய் பொத்தி ஆச்சரியப்பட்டாள், ராஜியின் மகள்.
“அதான்.” அவள் சகோதரன். மீண்டும் மீண்டும் பார்த்துவிட்டே அவ்விடம் விட்டு நகர்ந்தார்கள்.
அடுத்து, பால்விதியில் சூரியனும் கோள்களும் நட்சத்திரங்களும், பருவகால மாற்றங்களின் மாதிரி எண்டு பார்த்துக்கொண்டே கடந்தவர்கள் சூரியன் பற்றிய விளக்கங்களோடு அங்கிருந்த சோலார் தொலைநோக்கி மூலம் ஆதவனை நேரடியாகவே பார்க்கவும் முடிந்தது. ஒற்றைக் கண்ணால் பார்க்கையில் பெரிய நிலவு போலிருந்தாலும் அப்போது கூட அது துளியும் குளிர்மையை உணர்த்தவில்லை. அருகில் ஒரு திரையில் ஆதவனின் அருகாமைக் காட்சியில் அதன் மேற்பரப்பில் குமிழி குமிழியாகக் கொதிப்பதைப் பார்க்க முடிந்தது.
அந்நேரம் வேந்தனின் கைபேசியின் கிணுகிணுத்தது. "மதி ட கோல்..." கைப்பேசியைப் பார்த்தபடி சொன்னவன், "அங்கிள், இங்க பார்த்திட்டு வாங்க, நான் மேல நிக்கிறன். அங்க பார்த்திட்டுக் கீழ போகலாம்." என்றுவிட்டு வெளியேறிவிட்டான்.
குட்டி குட்டிக் கண்ணாடிப் பெட்டிகளுள் நம் உடலிலுள்ள கூறுகளும், அல்லாத தனிமங்களும்(எலிமென்ட்ஸ்) பேர்களோடு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்துவிட்டு நகர்ந்தவர்கள், சந்தர்ப்பம் பார்த்திருந்து விருட்டென்று வெளியேறிவிட்ட கவியைக் கவனிக்கவேயில்லை. அந்தளவுக்குக் கிரகணங்களின் உருவாக்கம் பற்றிய கண்கவர் விளக்கங்களிருந்தன.
அதற்கப்பால், கிரகணங்களின் தோற்றம் பற்றிய விளக்கம், கடலலைகளில் ஏற்படும் மாற்றங்கள் (Tides) பற்றிய விளக்கங்கள், முழுமதி மெல்ல மெல்ல தேய்ந்து செல்லும் மாதிரி விளக்கமென்று ஒவ்வொன்றும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் கவரும் வகையிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இப்படி இவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, வேந்தன் எங்காவது தென்படுகிறானாவென்று பார்வையைச் சுழற்றியபடியே வந்த கவி, மேலே செல்லும் படிகளின் முடிவில் பக்கச்சுவரில் சாய்ந்தபடி நின்று கைபேசியில் கதைத்துக் கொண்டிருப்பவனைக் கண்டுவிட்டு வேகமாக ஏறினாள்.
சற்றே தூரத்தில், தென் கலிபோனியா கடற்கரை மலைதொடரான ‘சன்டா மோனிகா’ மலைத்தொடரின் ‘ஹொலிவுட் மலை’ப்பகுதியிலுள்ள ‘லீ மலையில்’ பளிச்சென்று தெரிந்தது, ‘ஹொலிவூட் சின்னம்’! அப்பகுதி முழுவதுமாய் வானை முட்டுமளவில் பரந்திருந்த அம்மலைச் சுற்றத்தை விழிகள் உள்வாங்குவதில் மும்முரமாகவிருக்க, மதியோடு உரையாடிக்கொண்டிருந்தான், வேந்தன்.
"என்ன நடக்குது அங்க? இன்னும் ரெண்டு நாள் தானே, சோகமா இருப்பீங்களே! பேசாம திருப்பி அங்க இருந்து கூட்டிக்கொண்டு உலா வரலாமே!" கடியோடு ஆரம்பித்திருந்தான், மதி.
"போடா டேய்...நானே ரெண்டு நாள் எப்ப முடியும் எண்டு இருக்கிறன். வீட்டில சொல்லி இலக்கி வீட்டில கதைச்சிர வேணும்."
"பார்றா! கலியாணம் பேச பேசச் சாட்டுச் சொன்ன வேந்தனா இது!" மீண்டும் பரிகாசம் செய்த மதி, "நான் இப்ப ஏன் எடுத்தன் ஏண்டா... பெரியம்மா எடுத்தா..." ஆரம்பித்தான்.
“ஓ! நேற்றிரவு கதைச்சன். இரவுக்கு எடுக்கிறன் எண்டும் சொல்லி இருந்தன். என்னவாம்?"
"இல்ல...இலக்கியா பற்றிச் சொல்லிட்டியா?"
"இப்பத் தானே சொன்னன். போய்த்தான் சொல்ல வேணும்." தொடங்கிய வேந்தன், "ஏன் மதி? இவன் வினித்துக்குத் தெரியும்...சொல்லிப் போட்டானோ!" என்ற வேகத்தில்," இல்ல இல்ல அவன் சொல்லியிரான். சொல்ல வேணாம் எண்டு சொன்னனே." என்றான், யோசனையோடு.
"ஓ! அப்ப சும்மாவும் கேட்டிருக்கலாம். இங்க வந்து போனபிறகு ரெண்டு நாள் எடுத்து எதுக்கு அவன் காரோடிக்கொண்டு வரவேணும் எண்டு கேட்டவா எண்டு சொன்னன் தானே?”
“ஓம்!”
“அண்டைக்கே, பெரியம்மாவ சமாதானம் செய்ய வெளிக்கிட்டு ‘அவன் ஒண்ணும் சும்மா வெளிக்கிட இல்ல’ எண்டு வாய விட்டன் வேந்தன். ‘அப்படியெண்டா...எனக்கு விளங்கேல்லையே’ எண்டு பிடிச்சிட்டார். அவனுக்கும் இப்பிடிப் பயணங்கள் விருப்பம் எல்லா அதைத்தான் சொன்னன் எண்டு சொல்லிட்டன். அதுக்கு அவர் ‘என்னவோ போ... ஒரு கலியாணம் செய்து மனிசி பிள்ளைகள் எண்டு சுற்றாமல் ஊராரக் கூட்டிக்கொண்டு என்ன சுத்தல் வேண்டிக்கிடக்கு!’ எண்டு அப்பவே சொன்னவா. இப்ப எடுத்து ரெண்டு நாள் தங்கியிருந்தவே தானே, ஆக்கள் எப்பிடி அப்பிடி இப்பிடிச் சும்மா கதையோட கதையாத்தான் கேட்டவா. கவியோட கதைச்சிருக்கிறா போல... அதெல்லாம் சொன்னா."
"ம்ம்ம் ...பிறகு..."
"உனக்கு ஒரு பொம்பள பார்த்திருக்கிறாவாம் எண்டும் சொன்னா வேந்தன். தங்களுக்கு நல்லா பிடிச்சிட்டாம். தனக்கு அவா தான் மருமகள் எண்டும் சொன்னாவா... அதுக்கு நான், வேந்தன் ரெண்டு நாளில வந்தபிறகு என்ன எண்டாலும் முடிவெடுங்க பெரியம்மா, அவசரப்படாதீங்க எண்டு சொல்லிப் போட்டன்."
"ம்ம் ..." என்ற வேந்தனுக்கு வினித் போட்டுடைத்துவிட்டானோ என்றிருந்தது.
உள்ளே நுழைந்ததும், சுழலும் புவியுருண்டை மற்றும் வெவேறு நாட்டு நேரம் காட்டும் கடிகாரங்கள் கொண்டு இரவு பகல் பற்றி விளக்கப்பட்டிருந்தது.
அடுத்து, ஒரு அரைவட்டக் குட்டித்திரையிருந்தது. பார்த்ததும் தெளிவாகத் தெரியும் பூமியின் கோள வடிவமும், அசையாதிருந்த ஆய்வகக்கட்டிடத்தின் மேலே நீலவானில் நிலவு போல் அசைந்து நகரும் சூரியனும், அது மறைந்ததும் நட்சத்திரங்கள் ஜொலிக்கும் வானத்தின் நகர்வும் எல்லோருக்குமே ஆச்சரிய உணர்வைத் தந்தது. தெரியாத, கேள்விப்படாத விசயமில்லையென்றாலும் பார்க்கையில் ‘வாவ்’ போடாதிருக்கவும் முடியவில்லை.
“எனக்கு எண்டா நாம இப்ப ஸ்பேசில நிக்கிறது போல இருக்கு!” வாய் பொத்தி ஆச்சரியப்பட்டாள், ராஜியின் மகள்.
“அதான்.” அவள் சகோதரன். மீண்டும் மீண்டும் பார்த்துவிட்டே அவ்விடம் விட்டு நகர்ந்தார்கள்.
அடுத்து, பால்விதியில் சூரியனும் கோள்களும் நட்சத்திரங்களும், பருவகால மாற்றங்களின் மாதிரி எண்டு பார்த்துக்கொண்டே கடந்தவர்கள் சூரியன் பற்றிய விளக்கங்களோடு அங்கிருந்த சோலார் தொலைநோக்கி மூலம் ஆதவனை நேரடியாகவே பார்க்கவும் முடிந்தது. ஒற்றைக் கண்ணால் பார்க்கையில் பெரிய நிலவு போலிருந்தாலும் அப்போது கூட அது துளியும் குளிர்மையை உணர்த்தவில்லை. அருகில் ஒரு திரையில் ஆதவனின் அருகாமைக் காட்சியில் அதன் மேற்பரப்பில் குமிழி குமிழியாகக் கொதிப்பதைப் பார்க்க முடிந்தது.
அந்நேரம் வேந்தனின் கைபேசியின் கிணுகிணுத்தது. "மதி ட கோல்..." கைப்பேசியைப் பார்த்தபடி சொன்னவன், "அங்கிள், இங்க பார்த்திட்டு வாங்க, நான் மேல நிக்கிறன். அங்க பார்த்திட்டுக் கீழ போகலாம்." என்றுவிட்டு வெளியேறிவிட்டான்.
குட்டி குட்டிக் கண்ணாடிப் பெட்டிகளுள் நம் உடலிலுள்ள கூறுகளும், அல்லாத தனிமங்களும்(எலிமென்ட்ஸ்) பேர்களோடு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்துவிட்டு நகர்ந்தவர்கள், சந்தர்ப்பம் பார்த்திருந்து விருட்டென்று வெளியேறிவிட்ட கவியைக் கவனிக்கவேயில்லை. அந்தளவுக்குக் கிரகணங்களின் உருவாக்கம் பற்றிய கண்கவர் விளக்கங்களிருந்தன.
அதற்கப்பால், கிரகணங்களின் தோற்றம் பற்றிய விளக்கம், கடலலைகளில் ஏற்படும் மாற்றங்கள் (Tides) பற்றிய விளக்கங்கள், முழுமதி மெல்ல மெல்ல தேய்ந்து செல்லும் மாதிரி விளக்கமென்று ஒவ்வொன்றும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் கவரும் வகையிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இப்படி இவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, வேந்தன் எங்காவது தென்படுகிறானாவென்று பார்வையைச் சுழற்றியபடியே வந்த கவி, மேலே செல்லும் படிகளின் முடிவில் பக்கச்சுவரில் சாய்ந்தபடி நின்று கைபேசியில் கதைத்துக் கொண்டிருப்பவனைக் கண்டுவிட்டு வேகமாக ஏறினாள்.
சற்றே தூரத்தில், தென் கலிபோனியா கடற்கரை மலைதொடரான ‘சன்டா மோனிகா’ மலைத்தொடரின் ‘ஹொலிவுட் மலை’ப்பகுதியிலுள்ள ‘லீ மலையில்’ பளிச்சென்று தெரிந்தது, ‘ஹொலிவூட் சின்னம்’! அப்பகுதி முழுவதுமாய் வானை முட்டுமளவில் பரந்திருந்த அம்மலைச் சுற்றத்தை விழிகள் உள்வாங்குவதில் மும்முரமாகவிருக்க, மதியோடு உரையாடிக்கொண்டிருந்தான், வேந்தன்.
"என்ன நடக்குது அங்க? இன்னும் ரெண்டு நாள் தானே, சோகமா இருப்பீங்களே! பேசாம திருப்பி அங்க இருந்து கூட்டிக்கொண்டு உலா வரலாமே!" கடியோடு ஆரம்பித்திருந்தான், மதி.
"போடா டேய்...நானே ரெண்டு நாள் எப்ப முடியும் எண்டு இருக்கிறன். வீட்டில சொல்லி இலக்கி வீட்டில கதைச்சிர வேணும்."
"பார்றா! கலியாணம் பேச பேசச் சாட்டுச் சொன்ன வேந்தனா இது!" மீண்டும் பரிகாசம் செய்த மதி, "நான் இப்ப ஏன் எடுத்தன் ஏண்டா... பெரியம்மா எடுத்தா..." ஆரம்பித்தான்.
“ஓ! நேற்றிரவு கதைச்சன். இரவுக்கு எடுக்கிறன் எண்டும் சொல்லி இருந்தன். என்னவாம்?"
"இல்ல...இலக்கியா பற்றிச் சொல்லிட்டியா?"
"இப்பத் தானே சொன்னன். போய்த்தான் சொல்ல வேணும்." தொடங்கிய வேந்தன், "ஏன் மதி? இவன் வினித்துக்குத் தெரியும்...சொல்லிப் போட்டானோ!" என்ற வேகத்தில்," இல்ல இல்ல அவன் சொல்லியிரான். சொல்ல வேணாம் எண்டு சொன்னனே." என்றான், யோசனையோடு.
"ஓ! அப்ப சும்மாவும் கேட்டிருக்கலாம். இங்க வந்து போனபிறகு ரெண்டு நாள் எடுத்து எதுக்கு அவன் காரோடிக்கொண்டு வரவேணும் எண்டு கேட்டவா எண்டு சொன்னன் தானே?”
“ஓம்!”
“அண்டைக்கே, பெரியம்மாவ சமாதானம் செய்ய வெளிக்கிட்டு ‘அவன் ஒண்ணும் சும்மா வெளிக்கிட இல்ல’ எண்டு வாய விட்டன் வேந்தன். ‘அப்படியெண்டா...எனக்கு விளங்கேல்லையே’ எண்டு பிடிச்சிட்டார். அவனுக்கும் இப்பிடிப் பயணங்கள் விருப்பம் எல்லா அதைத்தான் சொன்னன் எண்டு சொல்லிட்டன். அதுக்கு அவர் ‘என்னவோ போ... ஒரு கலியாணம் செய்து மனிசி பிள்ளைகள் எண்டு சுற்றாமல் ஊராரக் கூட்டிக்கொண்டு என்ன சுத்தல் வேண்டிக்கிடக்கு!’ எண்டு அப்பவே சொன்னவா. இப்ப எடுத்து ரெண்டு நாள் தங்கியிருந்தவே தானே, ஆக்கள் எப்பிடி அப்பிடி இப்பிடிச் சும்மா கதையோட கதையாத்தான் கேட்டவா. கவியோட கதைச்சிருக்கிறா போல... அதெல்லாம் சொன்னா."
"ம்ம்ம் ...பிறகு..."
"உனக்கு ஒரு பொம்பள பார்த்திருக்கிறாவாம் எண்டும் சொன்னா வேந்தன். தங்களுக்கு நல்லா பிடிச்சிட்டாம். தனக்கு அவா தான் மருமகள் எண்டும் சொன்னாவா... அதுக்கு நான், வேந்தன் ரெண்டு நாளில வந்தபிறகு என்ன எண்டாலும் முடிவெடுங்க பெரியம்மா, அவசரப்படாதீங்க எண்டு சொல்லிப் போட்டன்."
"ம்ம் ..." என்ற வேந்தனுக்கு வினித் போட்டுடைத்துவிட்டானோ என்றிருந்தது.
Last edited: