மனம் - 5
அந்த குளிரூட்டப்பட்டிருந்த அறையில் பவ்யாவின் அருகில் அமர்ந்திருந்த அட்சயா மடிக்கணினியை வெறித்துக் கொண்டிருந்தாள்.
மதிய உணவு நேரத்திலேயே அவசர விடுப்பெடுத்த அபிலாஷ் வீட்டிற்கு கிளம்பிவிட்டான். அவன் இல்லாததால், அவள் செய்துக்கொண்டிருந்த வேலைக்கு குருவிடம் ஒப்புதல் வாங்குமாறு அட்சயாவிடம் சொல்லிவிட்டு தான் சென்றிருந்தான்.
அட்சயாவும் அவளின் வேலையை முடித்தவுடன் குருவிற்கு மெயில் அனுப்பிவிட்டு அரைமணிநேரமாக காத்திருக்கிறாள் அவனிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.
குருபிரசாத் அமர்ந்திருந்த இடத்திற்கு இரண்டு வரிசைக்கு அடுத்து நேரெதிராக அட்சயாவின் இருக்கை இருந்தது. அவன் பார்ப்பான் என அவனையே பார்த்துக்கொண்டிருக்க அவன் அவளை கண்டுகொள்ளவேயில்லை.
அவளை கவனித்த பவ்யா கூட, “அவசரமா ஆஃப்ரூவல் வேணும்னா நேரா அவர்கிட்ட போய் பேசி வாங்கிக்கோ.” என சொல்லியிருந்தாள்.
குருபிரசாத்தும் ஒருமணி நேரமாக வேறொரு அழைப்பில் இருந்ததால் கவனிக்கவில்லை. அந்த அழைப்பு முடிந்து சற்று நிதானமானவனின் திரையில், “வேணும்னே பண்றீங்களா?” என்ற அட்சயாவின் செய்தி வந்து விழுந்தது.
அதில் புருவம் சுருக்கியவன் நிமிர்ந்து அட்சயாவை பார்த்த்துவிட்டு அவள் அனுப்பிய மெயிலை படித்தான். அவள் அப்படி அனுப்பிய காரணத்தை புரிந்துக்கொண்டவன், “இங்கே வா.” என அவளுக்கு செய்தியனுப்ப மடிக்கணினியுடன் அவனிடம் வந்தாள், அட்சயா.
“இதுல..” என அவள் மடிக்கணினியை காட்டி ஏதோ சொல்லவர, பக்கத்தில் இருந்த இருக்கையை காட்டி அமர சொன்னான்.
அவனின் அருகில் வராமல் சற்று தள்ளி அமர்ந்துக் கொண்டாள் அட்சயா. “இதுக்கு ஆஃப்ரூவல் வேணும். அபிலாஷ் உங்க கிட்ட வாங்கிக்க சொன்னாங்க..” என அவள் செய்த வேலையை காண்பித்தாள்.
தங்களை சுற்றி ஒருமுறை பார்த்தவன் அவள் அமர்ந்திருந்த சேரை அவனை நோக்கி அருகில் இழுத்தான். அவன் செயலில் அவள் திகைத்து விழித்து சேரை கெட்டியாக பிடித்துக் கொண்டவளின் நாசியை நிறைத்தது அவனின் வாசனை திரவியம்.
“ம்ம்ம். இப்ப எக்ஸ்பிளேன் பண்ணு.” என அவன் சொன்னதும் படபடப்பாக அவளின் வேலையை சொல்லி முடித்தாள்.
அதை முழுதாக பார்வையிட்ட குரு, அதில் சின்ன சின்ன திருத்தங்களை அவளுக்கு சொல்ல துவங்கினான். அவனின் அருகாமையில் அட்சயா தான் தவித்தாள். அவனின் கை அவளுடைய மடிக்கணினியின் கீபோர்டில் தட்டச்சு செய்துக் கொண்டிருக்க அதையே தான் அவளின் விழிகள் பார்த்தன. அவன் சொல்வது அவளின் காதில் விழுந்தாலும் அவளை சரியாக சென்றடையவில்லை.
குரு முழுதாக சொல்லி முடித்தவுடன், “அப்டேட் பண்ணிட்டு வரேன்.” என அவள் எழுந்திரிக்க, “ஸ்மால் கரக்க்ஷன் தான? இங்கேயே பண்ணு..” என சொல்லிவிட்டு அவனின் வேலையை பார்த்தான்.
அவன் சொல்லியவற்றை ஓரவளவு திருத்தும் செய்துவிட்டு மீண்டும் அவனை அழைத்தாள். மறுபடியும் அதே நெருக்கத்தில் வந்தவன் மீண்டும் சில திருத்தங்களை சொன்னான்.
‘வேணும்னே பண்றாங்களோ..’ என அவள் யோசித்தாலும் அவன் சொன்ன திருத்தங்கள் உண்மையானதாக தான் இருந்தது. எனவே அதையும் முடித்துவிட்டு அவனிடம் காண்பித்தாள்.
இம்முறை அவன் அதற்கு ஒப்புதல் வழங்கி அதனை ஆஃப்ரூவல் செய்துவிட்டான். ‘வேறு எதாவது சொல்வானோ?’ என பயந்தவள் உடனே எழுந்து சென்றுவிட்டாள்.
அவ்வளவு நேரம் இயல்பாக காட்டிக்கொண்டாலும் அட்சயாவின் நெருக்கம் அவனையும் அசைக்க தான் செய்தது.
“நாளைக்கு கட்ட சாரீ எல்லாமே எடுத்து வெச்சிட்டேன் பூரி. ம்ம்ம் சாப்பிட்டேன். ஏதோ பரவால..”
விடுதியில் தங்கியிருபவளுக்கு உணவு ஒரு பெரும் சோதனையாய் அமைந்தது. பத்து நிமிடத்தில் வேலை செய்யும் இடம், பாதுகாப்பான விடுதி என சபாபதி அவளை சேர்த்து விட்டிருந்தான். ஆனால் இங்கே அட்சயாவிற்கு உணவு சரியாக அமையவில்லை.
“பவ்யா ஹாஸ்டல்ல சாப்பாடு நல்லாருக்கும் பூரி. அங்க எந்த பிளேஸ் காலியானாலும் சொல்ல சொல்லி அவகிட்டயும் சொல்லியிருக்கேன். சீக்கிரமே ஹாஸ்டல் மாறிடுவேன்.” என பூர்ணிமாவிடம் பேசிவிட்டு வைத்தாள் அட்சயா.
அவள் பேசியதை கேட்ட அவளின் அறையில் வசிப்பவள், “ஹாஸ்டல் மாற போறீங்களா?” என கேட்டபடியே படுக்கையை விரித்தாள்.
“இன்னும் முடிவாகல..” என சொல்லிய அட்சயா, “ஃபோன் பேசுறதை கேட்டீங்களா?” என்றாள் சிறு கண்டனதுடன்.
“இல்ல ஹாஸ்டல்னு சொன்னதும் கேட்டேன். எனக்கு தெரிஞ்சவங்க ரூம் இருந்தா சொல்ல சொன்னாங்க அதான்.” என சமாளித்தவள் வேறேதும் சொல்லவில்லை.
‘இனி ஃபோன் பேசுறப்ப கவனமா இருக்கனும்.’ என அட்சயாவும் நினைத்துக் கொண்டாள்.
அந்த குளிரூட்டப்பட்டிருந்த அறையில் பவ்யாவின் அருகில் அமர்ந்திருந்த அட்சயா மடிக்கணினியை வெறித்துக் கொண்டிருந்தாள்.
மதிய உணவு நேரத்திலேயே அவசர விடுப்பெடுத்த அபிலாஷ் வீட்டிற்கு கிளம்பிவிட்டான். அவன் இல்லாததால், அவள் செய்துக்கொண்டிருந்த வேலைக்கு குருவிடம் ஒப்புதல் வாங்குமாறு அட்சயாவிடம் சொல்லிவிட்டு தான் சென்றிருந்தான்.
அட்சயாவும் அவளின் வேலையை முடித்தவுடன் குருவிற்கு மெயில் அனுப்பிவிட்டு அரைமணிநேரமாக காத்திருக்கிறாள் அவனிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.
குருபிரசாத் அமர்ந்திருந்த இடத்திற்கு இரண்டு வரிசைக்கு அடுத்து நேரெதிராக அட்சயாவின் இருக்கை இருந்தது. அவன் பார்ப்பான் என அவனையே பார்த்துக்கொண்டிருக்க அவன் அவளை கண்டுகொள்ளவேயில்லை.
அவளை கவனித்த பவ்யா கூட, “அவசரமா ஆஃப்ரூவல் வேணும்னா நேரா அவர்கிட்ட போய் பேசி வாங்கிக்கோ.” என சொல்லியிருந்தாள்.
குருபிரசாத்தும் ஒருமணி நேரமாக வேறொரு அழைப்பில் இருந்ததால் கவனிக்கவில்லை. அந்த அழைப்பு முடிந்து சற்று நிதானமானவனின் திரையில், “வேணும்னே பண்றீங்களா?” என்ற அட்சயாவின் செய்தி வந்து விழுந்தது.
அதில் புருவம் சுருக்கியவன் நிமிர்ந்து அட்சயாவை பார்த்த்துவிட்டு அவள் அனுப்பிய மெயிலை படித்தான். அவள் அப்படி அனுப்பிய காரணத்தை புரிந்துக்கொண்டவன், “இங்கே வா.” என அவளுக்கு செய்தியனுப்ப மடிக்கணினியுடன் அவனிடம் வந்தாள், அட்சயா.
“இதுல..” என அவள் மடிக்கணினியை காட்டி ஏதோ சொல்லவர, பக்கத்தில் இருந்த இருக்கையை காட்டி அமர சொன்னான்.
அவனின் அருகில் வராமல் சற்று தள்ளி அமர்ந்துக் கொண்டாள் அட்சயா. “இதுக்கு ஆஃப்ரூவல் வேணும். அபிலாஷ் உங்க கிட்ட வாங்கிக்க சொன்னாங்க..” என அவள் செய்த வேலையை காண்பித்தாள்.
தங்களை சுற்றி ஒருமுறை பார்த்தவன் அவள் அமர்ந்திருந்த சேரை அவனை நோக்கி அருகில் இழுத்தான். அவன் செயலில் அவள் திகைத்து விழித்து சேரை கெட்டியாக பிடித்துக் கொண்டவளின் நாசியை நிறைத்தது அவனின் வாசனை திரவியம்.
“ம்ம்ம். இப்ப எக்ஸ்பிளேன் பண்ணு.” என அவன் சொன்னதும் படபடப்பாக அவளின் வேலையை சொல்லி முடித்தாள்.
அதை முழுதாக பார்வையிட்ட குரு, அதில் சின்ன சின்ன திருத்தங்களை அவளுக்கு சொல்ல துவங்கினான். அவனின் அருகாமையில் அட்சயா தான் தவித்தாள். அவனின் கை அவளுடைய மடிக்கணினியின் கீபோர்டில் தட்டச்சு செய்துக் கொண்டிருக்க அதையே தான் அவளின் விழிகள் பார்த்தன. அவன் சொல்வது அவளின் காதில் விழுந்தாலும் அவளை சரியாக சென்றடையவில்லை.
குரு முழுதாக சொல்லி முடித்தவுடன், “அப்டேட் பண்ணிட்டு வரேன்.” என அவள் எழுந்திரிக்க, “ஸ்மால் கரக்க்ஷன் தான? இங்கேயே பண்ணு..” என சொல்லிவிட்டு அவனின் வேலையை பார்த்தான்.
அவன் சொல்லியவற்றை ஓரவளவு திருத்தும் செய்துவிட்டு மீண்டும் அவனை அழைத்தாள். மறுபடியும் அதே நெருக்கத்தில் வந்தவன் மீண்டும் சில திருத்தங்களை சொன்னான்.
‘வேணும்னே பண்றாங்களோ..’ என அவள் யோசித்தாலும் அவன் சொன்ன திருத்தங்கள் உண்மையானதாக தான் இருந்தது. எனவே அதையும் முடித்துவிட்டு அவனிடம் காண்பித்தாள்.
இம்முறை அவன் அதற்கு ஒப்புதல் வழங்கி அதனை ஆஃப்ரூவல் செய்துவிட்டான். ‘வேறு எதாவது சொல்வானோ?’ என பயந்தவள் உடனே எழுந்து சென்றுவிட்டாள்.
அவ்வளவு நேரம் இயல்பாக காட்டிக்கொண்டாலும் அட்சயாவின் நெருக்கம் அவனையும் அசைக்க தான் செய்தது.
“நாளைக்கு கட்ட சாரீ எல்லாமே எடுத்து வெச்சிட்டேன் பூரி. ம்ம்ம் சாப்பிட்டேன். ஏதோ பரவால..”
விடுதியில் தங்கியிருபவளுக்கு உணவு ஒரு பெரும் சோதனையாய் அமைந்தது. பத்து நிமிடத்தில் வேலை செய்யும் இடம், பாதுகாப்பான விடுதி என சபாபதி அவளை சேர்த்து விட்டிருந்தான். ஆனால் இங்கே அட்சயாவிற்கு உணவு சரியாக அமையவில்லை.
“பவ்யா ஹாஸ்டல்ல சாப்பாடு நல்லாருக்கும் பூரி. அங்க எந்த பிளேஸ் காலியானாலும் சொல்ல சொல்லி அவகிட்டயும் சொல்லியிருக்கேன். சீக்கிரமே ஹாஸ்டல் மாறிடுவேன்.” என பூர்ணிமாவிடம் பேசிவிட்டு வைத்தாள் அட்சயா.
அவள் பேசியதை கேட்ட அவளின் அறையில் வசிப்பவள், “ஹாஸ்டல் மாற போறீங்களா?” என கேட்டபடியே படுக்கையை விரித்தாள்.
“இன்னும் முடிவாகல..” என சொல்லிய அட்சயா, “ஃபோன் பேசுறதை கேட்டீங்களா?” என்றாள் சிறு கண்டனதுடன்.
“இல்ல ஹாஸ்டல்னு சொன்னதும் கேட்டேன். எனக்கு தெரிஞ்சவங்க ரூம் இருந்தா சொல்ல சொன்னாங்க அதான்.” என சமாளித்தவள் வேறேதும் சொல்லவில்லை.
‘இனி ஃபோன் பேசுறப்ப கவனமா இருக்கனும்.’ என அட்சயாவும் நினைத்துக் கொண்டாள்.