அத்தியாயம்-18
அதுவரை நேரமும் கணவன் வீட்டினருடன் ஒட்டி உறவாட முடியாமல் தவித்துக்கொண்டு நின்றவளின் முகம், உள்ளே வந்த தாயைக் கண்டதும் மல்லிகையாய் மலர்ந்தது. ஆனந்தத்தில் கண்களில் கண்ணீர்கூடத் திரண்டது.
தாயைப் பிரிந்த கன்றாக, “அம்மா..!” என்று ஏக்கமும் பரிதவிப்புமாக அழைத்தவள் வேகமாக ஓடிச்சென்று அன்னையைக் கட்டிக்கொண்டாள்.
நெடுநாள் பிரிந்திருந்தவள் போன்ற அவளின் இறுக்கமான அணைப்பில் சிக்குண்ட சந்திராவின் விழிகளும் மெலிதாகக் கலங்கின.
“நன்றாக இருக்கிறாயா லக்கி?” முதல்நாள் இரவுதான் அங்கே விட்டுவிட்டுச் சென்ற மகளிடம் பிரிவுத் துயருடன் விசாரித்தார் அன்னை.
“ம்ம்..” என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே, “வாருங்கள் சம்மந்தி. வாம்மா சந்திரா..” என்று வரவேற்றபடி வந்தார் ராஜசேகர்.
அவரோடு மஞ்சுளா முதல்கொண்டு அந்தக் குடும்பத்தின் அனைவரும் வந்து வரவேற்றனர். தர்சன் கூட “வாருங்கள் மாமா, அத்தை.” என்று சொல்லத் தவறவில்லை.
தம்பிகளின் துணையுடன் சோபாவில் அமர்ந்துகொண்ட தந்தையிடம் சென்று, “எப்படிப்பா இருக்கிறீர்கள்?” என்று கரகரத்த குரலில் கேட்டாள் இலக்கியா.
அவளின் தலையைப் பாசத்தோடு தடவிக் கொடுத்தபடி, “எனக்கு என்னம்மா? நன்றாகத்தான் இருக்கிறேன்.” என்றவர், அதே கேள்வியை மகளிடம் கேட்கவில்லை.
மாப்பிள்ளை வீட்டினர் என்கிற மிதப்பு இன்றி, வசதி படைத்தவர்கள் என்கிற திமிரும் இன்றி மொத்தக் குடும்பமுமே வாசலுக்கு வந்து இன்முகத்துடன் வரவேற்றதே, அந்த வீட்டில் மகள் எப்படி வாழ்வால் என்பதை அவருக்கு உணர்த்தியது.
ராஜசேகரும் அவரும் நாட்டு நிலவரங்கள் முதல்கொண்டு அரசியல் தொடங்கி விவசாயம் வரை அலசத் தொடங்க, மஞ்சுளா மருமக்களின் உதவியுடன் அவர்களை உபசரித்தார்.
மலர்ந்த முகத்தோடு தன்னையே மறந்து தம்பிகளுடன் உரையாடிக் கொண்டிருந்த மனைவியை அவதானித்தபடி அமர்ந்திருந்தான் தர்சன்.
“மருமகனையும் மகளையும் விருந்துக்கு அழைக்க வந்திருக்கிறோம், சம்மந்தி. எப்போது உங்களுக்கு வசதி என்று சொன்னால் அதற்கு ஏற்றவாறு நாங்கள் ஏற்பாட்டைச் செய்வோம்.” பலகாரத்தோடு தேநீரையும் அருந்திவிட்டுச் சொன்னார் கந்தசாமி.
ராஜசேகர் தர்சனைப் பார்த்தார். அவனோ, “வேலைகள் நிறைய இருக்கப்பா..” என்றான்.
அதைக்கேட்ட இலக்கியாவின் முகம் வாடியது.
அதைக் கவனித்துவிட்டு, “வேலை எப்போதும்தான் இருக்கும். அதற்காக விருந்துக்குப் போகாமல் இருக்க முடியுமா என்ன?” என்றார் அவன் தந்தை. அந்தக் குரல் அவன் அங்குக் கட்டாயம் செல்லவேண்டும் என்பதை மறைமுகமாக உணர்த்தியது.
தந்தையின் பேச்சை மறுத்து ஏதும் சொல்லாதபோதும் போவதாகவும் அவன் சொல்லவில்லை.
அமைதியாக இருந்தே மறுப்பைத் தெரிவித்துத் தன் பெற்றவர்களை அவன் அவமதிப்பதாக எண்ணினாள் இலக்கியா. அவமானத்தில் அவள் முகம் சிவந்தது.
முதல்நாள் இரவு அதது நடக்கவேண்டிய நேரத்தில் நடந்தே ஆகவேண்டும் என்று பெரிய இவன் மாதிரி சொன்னவன், இப்போது இதை மட்டும் மறுப்பது ஏனாம்? இந்த விருந்தும் தான் நடக்கவேண்டிய ஒன்று.
இதையெல்லாம் நினைத்து அவளால் மனதுக்குள் மட்டுமே புழுங்க முடிந்தது.
தாய் தந்தையர் கவலைப் படப்போகிறார்களே என்கிற தவிப்போடு அவர்களை அவள் பார்க்க, அப்படி எதுவும் தெரியவில்லை அவர்களின் முகத்தில்.
மாறாக, “உங்களுக்கு எப்போது நேரமிருக்கும் என்று சொல்லுங்கள் தம்பி.” என்றார் அவள் தந்தை நயந்த குரலில்.
இந்த அப்பா எதற்கு மரியாதை தெரியாத இவனிடம் கெஞ்சுகிறார் என்று அவள் நினைக்கையிலேயே, “வருகிற ஞாயிரு பார்க்கலாம்..” என்றான் அவன் பட்டும் படாமல்.
இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறதே என்று மனம் சுணங்கியது லக்கிக்கு. அப்படியாவது சம்மதித்தானே என்று ஆறுதலும் பட்டுக்கொண்டாள்.
அன்று இரவும் அவன் அவளை நெருங்கியபோது முதல் நாளைவிடக் கொஞ்சம் திடமாகவே மறுத்தாள் இலக்கியா.
“உனக்கு ஒருமுறை சொன்னால் புரியாது?” புருவங்களைச் சுளித்து வினவினான் தர்சன்.
“ஒன்றைச் சொல்பவர்களும் அதன்படி நடக்கவும் வேண்டும்.” கல்லைப் போன்றிருந்த அவன் முகத்தைப் பார்த்துப் பேசவே பயமாக இருந்தாலும் காலையில் பெற்றவர்களை அவன் அவமதித்த கோபத்தில் சொன்னாள் இலக்கியா.
“அதாவது..?”
“மாமனார் வீட்டுக்குச் சென்று விருந்து உண்பதும் நடக்கவேண்டிய ஒன்றுதான்.”
“வருவதாகத்தான் சொல்லியிருக்கிறேன்!”
“மறுக்கமுடியாத நிலையில் சொன்னீர்கள். நீங்களாக விரும்பிச் சொல்லவில்லை.”
“உண்மைதான்! எனக்கு அங்குப் போகவேண்டிய கட்டாயமில்லை!” என்றான் அலட்சியமாக.
எவ்வளவு அலட்சியம் என்று நெஞ்சம் கொதித்தது இலக்கியாவுக்கு. “எனக்கும் தான் இது பிடிக்கவில்லை.” என்றாள் அவளும், கட்டிலைக் கண்களால் காட்டி.
அது அவனைப் பாதித்ததாகவே தெரியவில்லை. தோள்களைத் குலுக்கியவன், “என்னைக் கூடத்தான் பிடிக்கவில்லை என்று சொன்னாய்.!” என்றான் இதழோரம் ஏளனத்தில் வளைய.
நீ அப்படிச் சொன்னதால் ஏதாவது மாறிப்போனதா என்று கேட்கிறான். அவள் பேச்சுக்கு அவனிடம் மதிப்பில்லை என்கிறான். அவளின் விருப்பு வெறுப்புக்களைப் பற்றிய அக்கறை அவனுக்கு இல்லை என்கிறான். எவ்வளவு உதாசீனம்?
“பிறகும் எதற்காக என்னைக் கட்டிக்கொண்டீர்கள்?”
“என்னைப் பிடிக்கவில்லை என்று நீ சொன்ன ஒரே காரணத்துக்காகத்தான்!”
“என்னது??” அதிர்ந்துபோய் அவனைப் பார்த்தாள் இலக்கியா. இப்படி ஒரு காரணத்துக்காக யாராவது திருமணம் செய்வார்களா?
இவன் என்ன மாதிரியான மனிதன்? அவளின் விருப்பு வெறுப்புக்களுக்கு மதிப்பில்லை, பெற்றவர்களுக்கு மதிப்பில்லை. இப்படி அவன் உதாசீனமாக நடந்துகொள்வதற்கு என்ன காரணம்? அவள் செய்த தவறுதான் என்ன? ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு.
“இப்படித்தான் அந்தப் பெண்ணிடமும் அராஜகமாக நடந்துகொண்டு இருப்பீர்கள்.அதுதான் அவள் உங்களை விட்டுவிட்டு ஓடிவிட்டாள்.” என்றுவிட்டாள் இலக்கியா, மனதின் புழுக்கம் தாங்காமல்.
“ஏய்!!” நொடியில் உக்கிரம் கொண்டவனின் கையில் அவள் கழுத்துச் சிக்கியிருந்தது. இலக்கியாவுக்குப் பயத்தில் மயக்கமே வந்துவிட்டது. அந்தளவுக்கு விழிகள் சிவந்து, தாடை இறுகி பாராங்கல்லைப் போன்று இருந்தது அவன் முகம்.
“அவளைப் பற்றி எதையாவது பேசினாய் என்றால் கொன்றே போடுவேன்!” என்றான் உறுமலாக.
அவன் கழுத்தைப் பற்றியதில் தொண்டை உலர்ந்து உதடுகள் காய்ந்துவிட, அச்சத்தில் விரிந்த விழிகளோடு அவனைப் பார்த்தவளிடம், “இனியாவது ஒழுங்காக நடந்துகொள்!” என்றபடி, தன் கையை எடுத்துக்கொண்டான் அவன்.
அவளுக்கோ அவனை வெறுத்தே போனது! அந்த வெண்பாவைப் பற்றிய ஒரு சொல்லை அவனால் பொறுக்க முடியவில்லையாமா? அப்படியானவன் எதற்காக அவள் கழுத்தில் தாலி கட்டினான்? எதற்காக அவளைத் தொட்டானாம்?
அவளை நினைத்து இவளையா? சீச்சீ! நெஞ்சு காந்தியது அவளுக்கு. நேற்றிரவு அவன் சுகித்த மேனி நெருப்பாகக் கொதிக்க, “உங்களை எனக்குப் பிடிக்கவே இல்லை!” என்றாள் வெறுப்புடன்.
அன்று சொன்ன அதே வார்த்தைகளை இன்றும் கசப்பும் வெறுப்புமாக அவள் சொன்னபோது, அவன் முகம் செந்தணலாய் ஜொலித்தது!
அடுத்தக் கணமே அது சாதரணமாக மாற, “நல்லது! இனி என்ன செய்வதாக உத்தேசம்?” என்று நிதானமாக.. வெகு நிதானமாக அவன் கேட்டபோது திடுக்கிட்டுப்போய் அவனை நிமிர்ந்து பார்த்தாள் இலக்கியா.
அதே குரல்!
அன்று, ‘உங்களை எனக்குப் பிடிக்கவில்லை’ என்று அவள் சொன்னபோது ‘நீ யாரையாவது காதிலிக்கிறாயா?’ என்று கேட்ட அதே நிதானமான குரல்!
பிறகு திருமணத்தையே நடத்தி முடித்தானே!
அப்படி இன்றும் என்ன செய்யக் காத்திருக்கிறானோ? நினைக்கவே மேனி சில்லிட்டது அவளுக்கு.
அதோடு, அன்று அவன் கேட்ட கேள்விக்கு அவளிடம் பதில் இருந்தது. இன்று கேட்ட கேள்விக்கு?
இனி அவள் என்னதான் செய்யமுடியும்? ஒன்றுமே இல்லையே!
விழிகளில் பெருகிய நீருடன், “என்னால் இனி எதுவுமே செய்ய முடியாதுதான். அதற்காக இன்னொருத்தியை மனதில் வைத்துக்கொண்டு என்னோடு நீங்கள் வாழலாமா? அது எனக்கு அசிங்கம் இல்லையா?” என்று கேட்டாள்.
“என்னை என்ன அவ்வளவு கேவலமானவன் என்று நினைத்தாயா?” என்று அதற்கும் சீறினான் அவன்.
அவளின் ஒரு கையைப் பற்றித் தன்னருகில் இழுத்தவன், “கண்டவளையும் நினைத்து உன்னைத் தொடும் அளவுக்கு நான் ஒன்றும் பேடி இல்லை. நீ என் மனைவி. என் மனைவியை நான் தொடுவதில் என்ன அசிங்கத்தைக் கண்டாய் நீ?” என்று அவளின் முகத்துக்கு நேரே கர்ஜித்தான்.
அவ்வளவு அருகில் அவன் கூர்விழிகளைச் சந்தித்ததில் அச்சம் எழுந்தாலும் அவன் சொன்னதைக் கேட்டு ஆறுதலாகவும் உணர்ந்தாள். இந்த அளவுக்காவது அவளை மதிக்கிறானே.
“என் மனம் மாறும் வரைக்குமாவது நீங்கள் கொஞ்சம் பொறுக்கக்கூடாதா?” தன்னிலை இறங்கிவந்து கெஞ்சலாகக் கேட்டாள்.
இனி இதுதான் வாழ்க்கை என்றாகிவிட்டது. அதை எற்றுக் கொள்வதற்காவது அவளுக்கு அவகாசம் வேண்டாமா?
“பொறுப்பதா? ஏன் நீயும் எனக்கு டாட்டா பாய்பாய் காட்டிவிட்டுப் போவதற்கா?” என்று கேட்டான் அவன் கடினப்பட்ட குரலில்.
அவனது பேச்சில் அவள் அதிர்ந்துபோய் விழிக்க, “கட்டிய கணவனின் தொடுகையை ஏற்பது அவ்வளவு சிரமமா உனக்கு? அப்படி என்னிடம் இருந்து உன்னைக் காத்து என்ன செய்வதாக உத்தேசம்?” என்று நஞ்சென அவன் வார்த்தைகளைக் கொட்டியபோது, அவள் விழிகளில் இருந்து கண்ணீர் அருவியாகக் கொட்டியது.
“ஏன் இப்படி இரக்கமே அற்றவராக நடந்துகொள்கிறீர்கள்?” தாங்கமுடியாமல் அவள் கேட்டபோது,
“ஏன், உன்னை என்ன நான் கடித்தா குதறினேன்?” என்று சீறினான் அவன்.
அதுவரை நேரமும் கணவன் வீட்டினருடன் ஒட்டி உறவாட முடியாமல் தவித்துக்கொண்டு நின்றவளின் முகம், உள்ளே வந்த தாயைக் கண்டதும் மல்லிகையாய் மலர்ந்தது. ஆனந்தத்தில் கண்களில் கண்ணீர்கூடத் திரண்டது.
தாயைப் பிரிந்த கன்றாக, “அம்மா..!” என்று ஏக்கமும் பரிதவிப்புமாக அழைத்தவள் வேகமாக ஓடிச்சென்று அன்னையைக் கட்டிக்கொண்டாள்.
நெடுநாள் பிரிந்திருந்தவள் போன்ற அவளின் இறுக்கமான அணைப்பில் சிக்குண்ட சந்திராவின் விழிகளும் மெலிதாகக் கலங்கின.
“நன்றாக இருக்கிறாயா லக்கி?” முதல்நாள் இரவுதான் அங்கே விட்டுவிட்டுச் சென்ற மகளிடம் பிரிவுத் துயருடன் விசாரித்தார் அன்னை.
“ம்ம்..” என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே, “வாருங்கள் சம்மந்தி. வாம்மா சந்திரா..” என்று வரவேற்றபடி வந்தார் ராஜசேகர்.
அவரோடு மஞ்சுளா முதல்கொண்டு அந்தக் குடும்பத்தின் அனைவரும் வந்து வரவேற்றனர். தர்சன் கூட “வாருங்கள் மாமா, அத்தை.” என்று சொல்லத் தவறவில்லை.
தம்பிகளின் துணையுடன் சோபாவில் அமர்ந்துகொண்ட தந்தையிடம் சென்று, “எப்படிப்பா இருக்கிறீர்கள்?” என்று கரகரத்த குரலில் கேட்டாள் இலக்கியா.
அவளின் தலையைப் பாசத்தோடு தடவிக் கொடுத்தபடி, “எனக்கு என்னம்மா? நன்றாகத்தான் இருக்கிறேன்.” என்றவர், அதே கேள்வியை மகளிடம் கேட்கவில்லை.
மாப்பிள்ளை வீட்டினர் என்கிற மிதப்பு இன்றி, வசதி படைத்தவர்கள் என்கிற திமிரும் இன்றி மொத்தக் குடும்பமுமே வாசலுக்கு வந்து இன்முகத்துடன் வரவேற்றதே, அந்த வீட்டில் மகள் எப்படி வாழ்வால் என்பதை அவருக்கு உணர்த்தியது.
ராஜசேகரும் அவரும் நாட்டு நிலவரங்கள் முதல்கொண்டு அரசியல் தொடங்கி விவசாயம் வரை அலசத் தொடங்க, மஞ்சுளா மருமக்களின் உதவியுடன் அவர்களை உபசரித்தார்.
மலர்ந்த முகத்தோடு தன்னையே மறந்து தம்பிகளுடன் உரையாடிக் கொண்டிருந்த மனைவியை அவதானித்தபடி அமர்ந்திருந்தான் தர்சன்.
“மருமகனையும் மகளையும் விருந்துக்கு அழைக்க வந்திருக்கிறோம், சம்மந்தி. எப்போது உங்களுக்கு வசதி என்று சொன்னால் அதற்கு ஏற்றவாறு நாங்கள் ஏற்பாட்டைச் செய்வோம்.” பலகாரத்தோடு தேநீரையும் அருந்திவிட்டுச் சொன்னார் கந்தசாமி.
ராஜசேகர் தர்சனைப் பார்த்தார். அவனோ, “வேலைகள் நிறைய இருக்கப்பா..” என்றான்.
அதைக்கேட்ட இலக்கியாவின் முகம் வாடியது.
அதைக் கவனித்துவிட்டு, “வேலை எப்போதும்தான் இருக்கும். அதற்காக விருந்துக்குப் போகாமல் இருக்க முடியுமா என்ன?” என்றார் அவன் தந்தை. அந்தக் குரல் அவன் அங்குக் கட்டாயம் செல்லவேண்டும் என்பதை மறைமுகமாக உணர்த்தியது.
தந்தையின் பேச்சை மறுத்து ஏதும் சொல்லாதபோதும் போவதாகவும் அவன் சொல்லவில்லை.
அமைதியாக இருந்தே மறுப்பைத் தெரிவித்துத் தன் பெற்றவர்களை அவன் அவமதிப்பதாக எண்ணினாள் இலக்கியா. அவமானத்தில் அவள் முகம் சிவந்தது.
முதல்நாள் இரவு அதது நடக்கவேண்டிய நேரத்தில் நடந்தே ஆகவேண்டும் என்று பெரிய இவன் மாதிரி சொன்னவன், இப்போது இதை மட்டும் மறுப்பது ஏனாம்? இந்த விருந்தும் தான் நடக்கவேண்டிய ஒன்று.
இதையெல்லாம் நினைத்து அவளால் மனதுக்குள் மட்டுமே புழுங்க முடிந்தது.
தாய் தந்தையர் கவலைப் படப்போகிறார்களே என்கிற தவிப்போடு அவர்களை அவள் பார்க்க, அப்படி எதுவும் தெரியவில்லை அவர்களின் முகத்தில்.
மாறாக, “உங்களுக்கு எப்போது நேரமிருக்கும் என்று சொல்லுங்கள் தம்பி.” என்றார் அவள் தந்தை நயந்த குரலில்.
இந்த அப்பா எதற்கு மரியாதை தெரியாத இவனிடம் கெஞ்சுகிறார் என்று அவள் நினைக்கையிலேயே, “வருகிற ஞாயிரு பார்க்கலாம்..” என்றான் அவன் பட்டும் படாமல்.
இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறதே என்று மனம் சுணங்கியது லக்கிக்கு. அப்படியாவது சம்மதித்தானே என்று ஆறுதலும் பட்டுக்கொண்டாள்.
அன்று இரவும் அவன் அவளை நெருங்கியபோது முதல் நாளைவிடக் கொஞ்சம் திடமாகவே மறுத்தாள் இலக்கியா.
“உனக்கு ஒருமுறை சொன்னால் புரியாது?” புருவங்களைச் சுளித்து வினவினான் தர்சன்.
“ஒன்றைச் சொல்பவர்களும் அதன்படி நடக்கவும் வேண்டும்.” கல்லைப் போன்றிருந்த அவன் முகத்தைப் பார்த்துப் பேசவே பயமாக இருந்தாலும் காலையில் பெற்றவர்களை அவன் அவமதித்த கோபத்தில் சொன்னாள் இலக்கியா.
“அதாவது..?”
“மாமனார் வீட்டுக்குச் சென்று விருந்து உண்பதும் நடக்கவேண்டிய ஒன்றுதான்.”
“வருவதாகத்தான் சொல்லியிருக்கிறேன்!”
“மறுக்கமுடியாத நிலையில் சொன்னீர்கள். நீங்களாக விரும்பிச் சொல்லவில்லை.”
“உண்மைதான்! எனக்கு அங்குப் போகவேண்டிய கட்டாயமில்லை!” என்றான் அலட்சியமாக.
எவ்வளவு அலட்சியம் என்று நெஞ்சம் கொதித்தது இலக்கியாவுக்கு. “எனக்கும் தான் இது பிடிக்கவில்லை.” என்றாள் அவளும், கட்டிலைக் கண்களால் காட்டி.
அது அவனைப் பாதித்ததாகவே தெரியவில்லை. தோள்களைத் குலுக்கியவன், “என்னைக் கூடத்தான் பிடிக்கவில்லை என்று சொன்னாய்.!” என்றான் இதழோரம் ஏளனத்தில் வளைய.
நீ அப்படிச் சொன்னதால் ஏதாவது மாறிப்போனதா என்று கேட்கிறான். அவள் பேச்சுக்கு அவனிடம் மதிப்பில்லை என்கிறான். அவளின் விருப்பு வெறுப்புக்களைப் பற்றிய அக்கறை அவனுக்கு இல்லை என்கிறான். எவ்வளவு உதாசீனம்?
“பிறகும் எதற்காக என்னைக் கட்டிக்கொண்டீர்கள்?”
“என்னைப் பிடிக்கவில்லை என்று நீ சொன்ன ஒரே காரணத்துக்காகத்தான்!”
“என்னது??” அதிர்ந்துபோய் அவனைப் பார்த்தாள் இலக்கியா. இப்படி ஒரு காரணத்துக்காக யாராவது திருமணம் செய்வார்களா?
இவன் என்ன மாதிரியான மனிதன்? அவளின் விருப்பு வெறுப்புக்களுக்கு மதிப்பில்லை, பெற்றவர்களுக்கு மதிப்பில்லை. இப்படி அவன் உதாசீனமாக நடந்துகொள்வதற்கு என்ன காரணம்? அவள் செய்த தவறுதான் என்ன? ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு.
“இப்படித்தான் அந்தப் பெண்ணிடமும் அராஜகமாக நடந்துகொண்டு இருப்பீர்கள்.அதுதான் அவள் உங்களை விட்டுவிட்டு ஓடிவிட்டாள்.” என்றுவிட்டாள் இலக்கியா, மனதின் புழுக்கம் தாங்காமல்.
“ஏய்!!” நொடியில் உக்கிரம் கொண்டவனின் கையில் அவள் கழுத்துச் சிக்கியிருந்தது. இலக்கியாவுக்குப் பயத்தில் மயக்கமே வந்துவிட்டது. அந்தளவுக்கு விழிகள் சிவந்து, தாடை இறுகி பாராங்கல்லைப் போன்று இருந்தது அவன் முகம்.
“அவளைப் பற்றி எதையாவது பேசினாய் என்றால் கொன்றே போடுவேன்!” என்றான் உறுமலாக.
அவன் கழுத்தைப் பற்றியதில் தொண்டை உலர்ந்து உதடுகள் காய்ந்துவிட, அச்சத்தில் விரிந்த விழிகளோடு அவனைப் பார்த்தவளிடம், “இனியாவது ஒழுங்காக நடந்துகொள்!” என்றபடி, தன் கையை எடுத்துக்கொண்டான் அவன்.
அவளுக்கோ அவனை வெறுத்தே போனது! அந்த வெண்பாவைப் பற்றிய ஒரு சொல்லை அவனால் பொறுக்க முடியவில்லையாமா? அப்படியானவன் எதற்காக அவள் கழுத்தில் தாலி கட்டினான்? எதற்காக அவளைத் தொட்டானாம்?
அவளை நினைத்து இவளையா? சீச்சீ! நெஞ்சு காந்தியது அவளுக்கு. நேற்றிரவு அவன் சுகித்த மேனி நெருப்பாகக் கொதிக்க, “உங்களை எனக்குப் பிடிக்கவே இல்லை!” என்றாள் வெறுப்புடன்.
அன்று சொன்ன அதே வார்த்தைகளை இன்றும் கசப்பும் வெறுப்புமாக அவள் சொன்னபோது, அவன் முகம் செந்தணலாய் ஜொலித்தது!
அடுத்தக் கணமே அது சாதரணமாக மாற, “நல்லது! இனி என்ன செய்வதாக உத்தேசம்?” என்று நிதானமாக.. வெகு நிதானமாக அவன் கேட்டபோது திடுக்கிட்டுப்போய் அவனை நிமிர்ந்து பார்த்தாள் இலக்கியா.
அதே குரல்!
அன்று, ‘உங்களை எனக்குப் பிடிக்கவில்லை’ என்று அவள் சொன்னபோது ‘நீ யாரையாவது காதிலிக்கிறாயா?’ என்று கேட்ட அதே நிதானமான குரல்!
பிறகு திருமணத்தையே நடத்தி முடித்தானே!
அப்படி இன்றும் என்ன செய்யக் காத்திருக்கிறானோ? நினைக்கவே மேனி சில்லிட்டது அவளுக்கு.
அதோடு, அன்று அவன் கேட்ட கேள்விக்கு அவளிடம் பதில் இருந்தது. இன்று கேட்ட கேள்விக்கு?
இனி அவள் என்னதான் செய்யமுடியும்? ஒன்றுமே இல்லையே!
விழிகளில் பெருகிய நீருடன், “என்னால் இனி எதுவுமே செய்ய முடியாதுதான். அதற்காக இன்னொருத்தியை மனதில் வைத்துக்கொண்டு என்னோடு நீங்கள் வாழலாமா? அது எனக்கு அசிங்கம் இல்லையா?” என்று கேட்டாள்.
“என்னை என்ன அவ்வளவு கேவலமானவன் என்று நினைத்தாயா?” என்று அதற்கும் சீறினான் அவன்.
அவளின் ஒரு கையைப் பற்றித் தன்னருகில் இழுத்தவன், “கண்டவளையும் நினைத்து உன்னைத் தொடும் அளவுக்கு நான் ஒன்றும் பேடி இல்லை. நீ என் மனைவி. என் மனைவியை நான் தொடுவதில் என்ன அசிங்கத்தைக் கண்டாய் நீ?” என்று அவளின் முகத்துக்கு நேரே கர்ஜித்தான்.
அவ்வளவு அருகில் அவன் கூர்விழிகளைச் சந்தித்ததில் அச்சம் எழுந்தாலும் அவன் சொன்னதைக் கேட்டு ஆறுதலாகவும் உணர்ந்தாள். இந்த அளவுக்காவது அவளை மதிக்கிறானே.
“என் மனம் மாறும் வரைக்குமாவது நீங்கள் கொஞ்சம் பொறுக்கக்கூடாதா?” தன்னிலை இறங்கிவந்து கெஞ்சலாகக் கேட்டாள்.
இனி இதுதான் வாழ்க்கை என்றாகிவிட்டது. அதை எற்றுக் கொள்வதற்காவது அவளுக்கு அவகாசம் வேண்டாமா?
“பொறுப்பதா? ஏன் நீயும் எனக்கு டாட்டா பாய்பாய் காட்டிவிட்டுப் போவதற்கா?” என்று கேட்டான் அவன் கடினப்பட்ட குரலில்.
அவனது பேச்சில் அவள் அதிர்ந்துபோய் விழிக்க, “கட்டிய கணவனின் தொடுகையை ஏற்பது அவ்வளவு சிரமமா உனக்கு? அப்படி என்னிடம் இருந்து உன்னைக் காத்து என்ன செய்வதாக உத்தேசம்?” என்று நஞ்சென அவன் வார்த்தைகளைக் கொட்டியபோது, அவள் விழிகளில் இருந்து கண்ணீர் அருவியாகக் கொட்டியது.
“ஏன் இப்படி இரக்கமே அற்றவராக நடந்துகொள்கிறீர்கள்?” தாங்கமுடியாமல் அவள் கேட்டபோது,
“ஏன், உன்னை என்ன நான் கடித்தா குதறினேன்?” என்று சீறினான் அவன்.
Last edited by a moderator: