அத்தியாயம்-2
கதவைத் திறந்தவளின் கட்டழகில் மயங்கித்தான் போனான் தர்சன். அத்தை மகள் அழகியாக இருப்பாள் என்பது அவன் ஊகித்ததுதான்! ஆனால் இவ்வளவு அழகை அவனே எதிர்பார்க்கவில்லை.
தாயைக் கேள்வியோடு நோக்கியவளின் விற்புருவங்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளத் துடிக்க, அவற்றுக்கு நடுநாயகமாகச் சிறிய கறுப்புப்பொட்டு ஒன்று வீற்றிருந்தது. புருவங்களின் கீழே கூர்விழிகள் இரண்டு நட்சத்திரங்களென ஒளிவீச, இமைக் குடைகள் விசிறியாய் விரிந்து நின்றன. நேரான நாசியும் பவள இதழ்களுமாக நின்றவளின் மேனியோ, பொய்யோ எனும் இடையாளை அவனுக்கு நினைவூட்டியது!
சுற்றுச் சூழலை மறந்து, பக்கத்தில் நிற்கும் அத்தையையும் மறந்து அவளையே பார்த்தபடி தர்சன் நிற்க, “இவர்கள் யார் என்று சொல் பார்க்கலாம்?” என்று, மகளிடம் கேட்ட மகேஸ்வரியின் குரலில் அளவில்லாத துள்ளல் நிறைந்திருந்தது.
தாயின் முகத்தில் இருந்த வெளிச்சத்தையும், குரலில் தெரிந்த உற்சாகத்தையும் பார்த்த வெண்பாவின் முகம் சற்றே சுருங்கியது.
என்றும் இல்லாத வகையில் இன்று அம்மா இவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணமான இவர்கள் யார்? அந்த வீட்டு ஆட்களோ என்று எண்ணியதுமே அவள் முகமும் மனமும் கடுத்தது.
“தெரிந்தால் சொல்லமாட்டேனா?” என்றாள் வெடுக்கென.
இதென்ன இந்தப் பெண் இப்படிப் பேசுகிறாளே என்று எண்ணியபடி ராகினி நிற்க, விமலனின் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது!
அவளையே பார்த்தபடி நின்ற தர்சனின் விழிகள் ஒருமுறை ஒளிர்ந்து பின் வழமைக்குத் திரும்ப, “என்னடி, என் அத்தையையே மிரட்டுகிறாய்?” என்று அதட்டினான்.
மகேஸ்வரியின் முகத்தில் பெருமிதமாய் ஒரு புன்னகை மின்ன, திடீரென அவன் அப்படிக் கேட்டதில் முதலில் அதிர்ந்துதான் போனாள் வெண்பா. உடனேயே அவள் முகத்தில் சினத்தின் அடையாளங்கள் தோன்றின.
“என் அம்மாவை மிரட்டுவேன், எதுவும் செய்வேன். அதைக் கண்டவனும் வந்து கேட்க முடியாது. அதோடு டி போடும் வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம்.” என்றாள் துடுக்காக.
“டி போட்டால் என்னடி செய்வாய்?” என்றபடி வீட்டு வாசலில் கால் வைத்தான் தர்சன்.
அதுவரை வாசலிலேயே நின்றவள் பின்னால் நகர்ந்தபோதும், “கன்னத்தைப் பழுக்க வைப்பேன்!” என்று சொல்லவும் தவறவில்லை.
“எங்கே, பழுக்க வை பார்க்கலாம்?” என்றபடி, தர்சன் அவளை நெருங்கினான்.
அதைப் பார்த்துவிட்டு, “அத்தையின் மகள் என்றாலும் உங்கள் தம்பி ஒரு பெண்ணிடம் இப்படி நடப்பது சரியில்லை..” என்று கணவனின் காதில் முணுமுணுத்தாள் ராகினி.
“அவர்கள் இருவரும் எப்போதுமே இப்படித்தான். நீ அதைப் பெரிதாக எடுக்காதே.” என்று விமலன் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே தர்சனை நோக்கி வெண்பா கையை உயர்த்த, வேகமாக வந்து அவளின் கையைப் பற்றினார் மகேஸ்வரி.
“வெண்பா! என்ன செய்கிறாய் நீ? அவன் உன் தர்சன் மச்சான்! ”
“மச்சானும் கச்சானும்! இவர்களெல்லாம் இங்கே வரவில்லை என்று யார் அழுதது? இதற்குத்தான் கிளிநொச்சிக்கே வரவேண்டாம், கொழும்பிலேயே இருக்கலாம் என்று சொன்னேன், கேட்டீர்களா? இப்போதானால் உங்கள் சொந்தக்காரர்களைக் கண்டதும் என்னையே திட்டுகிறீர்கள்.” என்றவளுக்கு ஆத்திரத்தில் அழுகை வரப்பார்த்தது.
“போடி விசரி! அவர்கள் என் சொந்தமில்லை. நம் சொந்தம். உன் மாமாவின் மக்கள். சின்ன வயதில் அவர்களோடு சேர்ந்து விளையாடியதை எல்லாம் மறந்துவிட்டாயா?”
நடந்தது எதையும் மறக்கவில்லை என்று நினைத்தவளின் விழிகளோ தர்சனை வெறுப்புடன் முறைத்தன.
“இவ்வளவு நாளும் இவர்கள் இல்லாமல் சந்தோசமாகத் தானேம்மா இருந்தோம். இப்போது எதற்கு இங்கே வந்து இருக்கிறார்கள், எங்கள் நிம்மதியைக் கெடுக்கவா?” என்று வெறுப்போடு சொன்னவளை,
“வாயை மூடு!” என்று அடக்கப்பட்ட கோபத்தோடு அதட்டினார் மகேஸ்வரி.
என்றுமில்லாதவாறு அன்று தாய் அதட்டியதில் கண்கள் கலங்கியது அவளுக்கு.
அதற்கு மேலும் வாயைத் திறக்க முடியாமல் ஆத்திரத்திலும் அழுகையிலும் உதடுகள் நடுங்க நின்றவளைக் கவனியாது, அவசரமாகத் தர்சனின் புறம் திரும்பினார் மகேஸ்வரி.
“அவள் பேச்சை காதில் எடுக்காதே தர்சா. அதிகச் செல்லம் கொடுத்து நானே கெடுத்துவிட்டேன்.” என்றவரை, விமலனின் பேச்சுத் தடுத்தது.
“அத்தை! முதலில் நீங்கள் எதையும் பெரிதாக எடுக்காதீர்கள். இவனைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? சின்ன வயதிலேயே வெண்பாவுடன் சண்டை பிடிப்பதுதானே இவன் தொழில்! இன்றும் வந்ததும் வராததுமாக அவளை வம்புக்கிழுத்தால் சும்மா இருப்பாளா. அதனால் அவளைத் திட்டாதீர்கள். பாருங்கள் அவளை, விட்டால் அழுதுவிடுவாள் போலிருக்கிறது.” என்றவன், “இவனை நீ கணக்கில் எடுக்காதே வெண்பா. நான் எப்போதும் உன் பக்கம்தான் சரியா..” என்றான் அவளிடமும் சமாதானமாக.
விமலனை அவளுக்குப் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை என்றாலும் பிடிக்காது என்று சொல்லவும் முடியாது என்பதால், மனமின்றிச் சும்மா தலையை ஆட்டி வைத்தாள் வெண்பா.
“என்ன, தலை பலமாக ஆடுகிறது. அவன் உனக்கு ஆதரவாக இருப்பான் என்றால் நான் பயந்துவிடுவேன் என்று நினைத்தாயா? உன் வாய்க்கு இருக்கடி என் அத்தை மகளே!” என்றவனைப் பார்த்து மகேஸ்வரி சிரிக்க, அவர் மகளோ முறைத்தாள்.
திரும்பவும் வெண்பாவிடம் வம்பிழுத்த தம்பியை, “சும்மா இருடா!” என்று அதட்டிய விமலன், “அத்தை, நேரமாகிறது, வாருங்கள் போகலாம்.” என்றான்.
“ஏதாவது குடித்துவிட்டுப் போகலாமே விமல். ராகினி முதன் முதலாக இங்கே வந்திருக்கிறாள்..”
“இல்லை அம்மா. உடனேயே போனால்தான் மாமாவைக் காணமுடியும். இல்லையானால் அவர் மீட்டிங்குக்குச் சென்றுவிடுவார்.” என்றாள் ராகினி.
“ஓ.. அப்போ உடனேயே போவோம்..” என்ற மகேஸ்வரி, “கிளம்பு..” என்றார் மகளிடம்.
“எங்கேம்மா?” சினந்த குரலில் கேட்டாள் மகள்.
“மாமா வீட்டுக்கு..” வீட்டைப் பூட்டுவதற்காகத் திறப்பை எடுத்தபடி சொன்னார் தாயார்.
“நான் வரவில்லை!”
“அடிதான் வாங்கப் போகிறாய் வெண்பா. எனக்கு எரிச்சலைக் கிளப்பாமல் கிளம்பு!”
“முடியாது!” என்றபடி, பிடிவாதம் முகத்தில் துலங்க முரட்டுக் குதிரையாக நின்றவளை அடக்கிப் பார்க்கும் வேகம் எழுந்தது தர்சனுக்குள்.
பெரிய பெண்ணாக வளர்ந்தபிறகும் அந்தப் பத்துவயதில் இருந்த சிறுபிள்ளைத் தனமும், பிடிவாதமும், அழுத்தமும் இன்னும் அவளிடம் அப்படியே இருந்ததில் அவளைச் சீண்டிப் பார்க்கும் ஆவல் அவனுக்கு இன்னுமின்னும் உண்டானது.
“அத்தை, அவளாக வந்தால் நடந்து வருவாள். இல்லையானால் நான் தூக்கிக்கொண்டு வந்து காரில் ஏற்றுகிறேன். நீங்கள் நடவுங்கள்!” என்று சொன்ன தர்சன், “என்ன நீயாக வருகிறாயா அல்லது தூக்கவா?” என்று கேட்டபடி அவளை நெருங்கினான்.
கதவைத் திறந்தவளின் கட்டழகில் மயங்கித்தான் போனான் தர்சன். அத்தை மகள் அழகியாக இருப்பாள் என்பது அவன் ஊகித்ததுதான்! ஆனால் இவ்வளவு அழகை அவனே எதிர்பார்க்கவில்லை.
தாயைக் கேள்வியோடு நோக்கியவளின் விற்புருவங்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளத் துடிக்க, அவற்றுக்கு நடுநாயகமாகச் சிறிய கறுப்புப்பொட்டு ஒன்று வீற்றிருந்தது. புருவங்களின் கீழே கூர்விழிகள் இரண்டு நட்சத்திரங்களென ஒளிவீச, இமைக் குடைகள் விசிறியாய் விரிந்து நின்றன. நேரான நாசியும் பவள இதழ்களுமாக நின்றவளின் மேனியோ, பொய்யோ எனும் இடையாளை அவனுக்கு நினைவூட்டியது!
சுற்றுச் சூழலை மறந்து, பக்கத்தில் நிற்கும் அத்தையையும் மறந்து அவளையே பார்த்தபடி தர்சன் நிற்க, “இவர்கள் யார் என்று சொல் பார்க்கலாம்?” என்று, மகளிடம் கேட்ட மகேஸ்வரியின் குரலில் அளவில்லாத துள்ளல் நிறைந்திருந்தது.
தாயின் முகத்தில் இருந்த வெளிச்சத்தையும், குரலில் தெரிந்த உற்சாகத்தையும் பார்த்த வெண்பாவின் முகம் சற்றே சுருங்கியது.
என்றும் இல்லாத வகையில் இன்று அம்மா இவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணமான இவர்கள் யார்? அந்த வீட்டு ஆட்களோ என்று எண்ணியதுமே அவள் முகமும் மனமும் கடுத்தது.
“தெரிந்தால் சொல்லமாட்டேனா?” என்றாள் வெடுக்கென.
இதென்ன இந்தப் பெண் இப்படிப் பேசுகிறாளே என்று எண்ணியபடி ராகினி நிற்க, விமலனின் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது!
அவளையே பார்த்தபடி நின்ற தர்சனின் விழிகள் ஒருமுறை ஒளிர்ந்து பின் வழமைக்குத் திரும்ப, “என்னடி, என் அத்தையையே மிரட்டுகிறாய்?” என்று அதட்டினான்.
மகேஸ்வரியின் முகத்தில் பெருமிதமாய் ஒரு புன்னகை மின்ன, திடீரென அவன் அப்படிக் கேட்டதில் முதலில் அதிர்ந்துதான் போனாள் வெண்பா. உடனேயே அவள் முகத்தில் சினத்தின் அடையாளங்கள் தோன்றின.
“என் அம்மாவை மிரட்டுவேன், எதுவும் செய்வேன். அதைக் கண்டவனும் வந்து கேட்க முடியாது. அதோடு டி போடும் வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம்.” என்றாள் துடுக்காக.
“டி போட்டால் என்னடி செய்வாய்?” என்றபடி வீட்டு வாசலில் கால் வைத்தான் தர்சன்.
அதுவரை வாசலிலேயே நின்றவள் பின்னால் நகர்ந்தபோதும், “கன்னத்தைப் பழுக்க வைப்பேன்!” என்று சொல்லவும் தவறவில்லை.
“எங்கே, பழுக்க வை பார்க்கலாம்?” என்றபடி, தர்சன் அவளை நெருங்கினான்.
அதைப் பார்த்துவிட்டு, “அத்தையின் மகள் என்றாலும் உங்கள் தம்பி ஒரு பெண்ணிடம் இப்படி நடப்பது சரியில்லை..” என்று கணவனின் காதில் முணுமுணுத்தாள் ராகினி.
“அவர்கள் இருவரும் எப்போதுமே இப்படித்தான். நீ அதைப் பெரிதாக எடுக்காதே.” என்று விமலன் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே தர்சனை நோக்கி வெண்பா கையை உயர்த்த, வேகமாக வந்து அவளின் கையைப் பற்றினார் மகேஸ்வரி.
“வெண்பா! என்ன செய்கிறாய் நீ? அவன் உன் தர்சன் மச்சான்! ”
“மச்சானும் கச்சானும்! இவர்களெல்லாம் இங்கே வரவில்லை என்று யார் அழுதது? இதற்குத்தான் கிளிநொச்சிக்கே வரவேண்டாம், கொழும்பிலேயே இருக்கலாம் என்று சொன்னேன், கேட்டீர்களா? இப்போதானால் உங்கள் சொந்தக்காரர்களைக் கண்டதும் என்னையே திட்டுகிறீர்கள்.” என்றவளுக்கு ஆத்திரத்தில் அழுகை வரப்பார்த்தது.
“போடி விசரி! அவர்கள் என் சொந்தமில்லை. நம் சொந்தம். உன் மாமாவின் மக்கள். சின்ன வயதில் அவர்களோடு சேர்ந்து விளையாடியதை எல்லாம் மறந்துவிட்டாயா?”
நடந்தது எதையும் மறக்கவில்லை என்று நினைத்தவளின் விழிகளோ தர்சனை வெறுப்புடன் முறைத்தன.
“இவ்வளவு நாளும் இவர்கள் இல்லாமல் சந்தோசமாகத் தானேம்மா இருந்தோம். இப்போது எதற்கு இங்கே வந்து இருக்கிறார்கள், எங்கள் நிம்மதியைக் கெடுக்கவா?” என்று வெறுப்போடு சொன்னவளை,
“வாயை மூடு!” என்று அடக்கப்பட்ட கோபத்தோடு அதட்டினார் மகேஸ்வரி.
என்றுமில்லாதவாறு அன்று தாய் அதட்டியதில் கண்கள் கலங்கியது அவளுக்கு.
அதற்கு மேலும் வாயைத் திறக்க முடியாமல் ஆத்திரத்திலும் அழுகையிலும் உதடுகள் நடுங்க நின்றவளைக் கவனியாது, அவசரமாகத் தர்சனின் புறம் திரும்பினார் மகேஸ்வரி.
“அவள் பேச்சை காதில் எடுக்காதே தர்சா. அதிகச் செல்லம் கொடுத்து நானே கெடுத்துவிட்டேன்.” என்றவரை, விமலனின் பேச்சுத் தடுத்தது.
“அத்தை! முதலில் நீங்கள் எதையும் பெரிதாக எடுக்காதீர்கள். இவனைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? சின்ன வயதிலேயே வெண்பாவுடன் சண்டை பிடிப்பதுதானே இவன் தொழில்! இன்றும் வந்ததும் வராததுமாக அவளை வம்புக்கிழுத்தால் சும்மா இருப்பாளா. அதனால் அவளைத் திட்டாதீர்கள். பாருங்கள் அவளை, விட்டால் அழுதுவிடுவாள் போலிருக்கிறது.” என்றவன், “இவனை நீ கணக்கில் எடுக்காதே வெண்பா. நான் எப்போதும் உன் பக்கம்தான் சரியா..” என்றான் அவளிடமும் சமாதானமாக.
விமலனை அவளுக்குப் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை என்றாலும் பிடிக்காது என்று சொல்லவும் முடியாது என்பதால், மனமின்றிச் சும்மா தலையை ஆட்டி வைத்தாள் வெண்பா.
“என்ன, தலை பலமாக ஆடுகிறது. அவன் உனக்கு ஆதரவாக இருப்பான் என்றால் நான் பயந்துவிடுவேன் என்று நினைத்தாயா? உன் வாய்க்கு இருக்கடி என் அத்தை மகளே!” என்றவனைப் பார்த்து மகேஸ்வரி சிரிக்க, அவர் மகளோ முறைத்தாள்.
திரும்பவும் வெண்பாவிடம் வம்பிழுத்த தம்பியை, “சும்மா இருடா!” என்று அதட்டிய விமலன், “அத்தை, நேரமாகிறது, வாருங்கள் போகலாம்.” என்றான்.
“ஏதாவது குடித்துவிட்டுப் போகலாமே விமல். ராகினி முதன் முதலாக இங்கே வந்திருக்கிறாள்..”
“இல்லை அம்மா. உடனேயே போனால்தான் மாமாவைக் காணமுடியும். இல்லையானால் அவர் மீட்டிங்குக்குச் சென்றுவிடுவார்.” என்றாள் ராகினி.
“ஓ.. அப்போ உடனேயே போவோம்..” என்ற மகேஸ்வரி, “கிளம்பு..” என்றார் மகளிடம்.
“எங்கேம்மா?” சினந்த குரலில் கேட்டாள் மகள்.
“மாமா வீட்டுக்கு..” வீட்டைப் பூட்டுவதற்காகத் திறப்பை எடுத்தபடி சொன்னார் தாயார்.
“நான் வரவில்லை!”
“அடிதான் வாங்கப் போகிறாய் வெண்பா. எனக்கு எரிச்சலைக் கிளப்பாமல் கிளம்பு!”
“முடியாது!” என்றபடி, பிடிவாதம் முகத்தில் துலங்க முரட்டுக் குதிரையாக நின்றவளை அடக்கிப் பார்க்கும் வேகம் எழுந்தது தர்சனுக்குள்.
பெரிய பெண்ணாக வளர்ந்தபிறகும் அந்தப் பத்துவயதில் இருந்த சிறுபிள்ளைத் தனமும், பிடிவாதமும், அழுத்தமும் இன்னும் அவளிடம் அப்படியே இருந்ததில் அவளைச் சீண்டிப் பார்க்கும் ஆவல் அவனுக்கு இன்னுமின்னும் உண்டானது.
“அத்தை, அவளாக வந்தால் நடந்து வருவாள். இல்லையானால் நான் தூக்கிக்கொண்டு வந்து காரில் ஏற்றுகிறேன். நீங்கள் நடவுங்கள்!” என்று சொன்ன தர்சன், “என்ன நீயாக வருகிறாயா அல்லது தூக்கவா?” என்று கேட்டபடி அவளை நெருங்கினான்.