பன்னிரெண்டாவது நாள் உதயத்தில், இவர்கள் தயாராகி வர, வினித், பெரியவரின் பேரன் பேத்தியோடும் வேந்தனும் வரச் சரியாகவிருந்தது.
வந்ததும் அவன் பார்வை இலக்கியாவைத் தேடியோடியது. அவள் பார்வையும் அவனில்தான். சட்டென்று கைபேசியைப் பார்க்கவும் செய்தாள்.
“நேற்றிரவு கதைச்சிக்கொண்டிருந்திட்டுத் தூங்கப் போகவே நடுச்சாமம் ஆகிட்டு!" சொன்னவன் பார்வை அவள் விழிகளை உரசி மீண்டிட்டு!
‘என்ன எண்டாலும்...இரவு எவ்வளவு நேரம் முழிச்சிருந்தன்!’ அவள் மனம் முணுமுணுப்போடிருந்தது. அதனிடையில் பிரயாணம் பற்றிய கதை எழுந்தது.
“ கிராண்ட் கண்யன் ‘ஸ்கை வோக்’ அருமையான வியூதான்; அதேபோலவே இன்னும் நிறைய இடமிருக்கு!" வேந்தன் சொல்ல, “ஓம், நாங்க ப்ரெண்ட்ஸ் எல்லாருமாச் சேர்ந்து ரிம் ட்ரயல், கன்யன் நஷனல் பார்க், அன்டிலோப் கன்யன் எல்லாம் போயிருக்கிறம், வளர்ந்தவேதான் நல்லா ரசிப்பினம் அண்ணா." என்றான் வினித்.
"இவையல் ஓகே டா. கவின் கூட நல்லா சந்தோசமா நடப்பார். ஆனா... ஒரே நாளில எல்லா இடமும் போறது எண்டது ஏலாத வேல. ஒரு கிழமை நிண்டு எல்லாம் பார்க்க வேணும். ரெயின்போ பிரிஜ், அதோட போட் டூர், ஹெலி டூர் எண்டு ஒவ்வொண்டுமே அற்புதமா இருக்கும்!" பதிலிறுத்தான், வேந்தன்.
"இன்னொருமுறை இங்க வரேக்கப் பார்க்கலாம்.” என்றார் சுகுணா.
“கட்டாயம் போவம். ‘ரிம் ட்ரையல்’ போன போது வானம் கிட்ட இருக்கிறது போல நான் ஃபீல் பண்ணியிருக்கிறன். அவ்வளவு உயரத்தில் நடந்து க்ராண்ட் கண்ணியன் முழுதையும் பார்க்கலாம். அதோட ‘அன்டிலோப் கன்யன்’ சொல்ல வார்த்தையில்ல; சிவப்பு நிறக் குகைகள்...கடவுளே! அது ஒரு அற்புதமான உணர்வு. அடுத்த முறை கட்டாயம் போவம்." தொடர்ந்தாள், பெரியவரின் பேத்தி.
"இப்ப இப்பிடி மாறி மாறிச் சொல்லி எங்களுக்கு ஆசையைத் துண்டுறீங்க! அப்பப் பேசாம ‘அன்டிலோப் கன்யன்’ போவம். ‘ஸ்கை வோக்’ பிறகு வரேக்கப் போகலாம். அல்லது போட் டூர் போவமா?" இடையிட்டாள், கவி.
"இல்ல அக்கா ஸ்கை வோக் போவம் ப்ளீஸ்!" இலக்கி சொல்ல, "ஓம், திட்டம் போட்டபடி ஸ்கை வோக் போகலாம்; மற்றதுகளுக்கு இன்னொருக்கா வரலாம்." என்றான் வேந்தன்.
"சரி, அப்ப அடுத்தமுறை நீங்களே கூட்டிக்கொண்டு வாங்கோ என்ன?" உரிமையோடு சொன்னாள், கவி.
"அதுக்கென்ன கட்டாயம்." சாதாரணமாகச் சொன்னானவன்.
"அதுதான் சொன்னனே, யாழ் டிராவல்ஸ்ல ஒரு வாகனம் உங்களுக்கெண்டு ஒதுக்கியாச்சி!" என்ற வினித் பார்வை மின்னலென இலக்கியாவில் படிந்து விலகியது. அவன் பார்ப்பது புரிந்ததும் வலு கவனமாக வானகத்தில் ஏறுவதில் முனைப்பாக இருந்தாளவள்.
"சரி சரி கதைச்சுக்கொண்டு நிக்காமல் வெளிக்கிடுவம்.” மாறன் சொல்ல, "எங்களோட ஆரு வரப்போறீங்க?" கேட்டாள் பெரியவர் பேத்தி.
"நான் உங்களோட வாறன்." ஏறியமர்ந்திருந்த இலக்கியா இறங்கிச் செல்ல, வேந்தன் "ஏனடி!" அவன் புறமாக இறங்கியவளுக்குக் கேட்கவேதான் சலித்துக்கொண்டான்.
'நேற்று அவ்வளவு சொல்ல சொல்லப் போனார் எல்லா? இப்ப நான் அந்தக் கார்ல வாறன்' அவள் மனதுள் முணுமுணுத்தபடி நகர முயல, "இலக்கியா நீர் ஓடப் போறிரோ?" என்றிருந்தான், வேந்தன்.
சட்டென்று நின்றவள் விழிகளில், 'அது...' மின்னல்! இதழ்களில் மலர்ந்திட்ட அழகிய முறுவலோடு ஏற முனைய, "இது நல்ல பகிடி! நான் ஓடுறன். அவள் அண்டைக்கும் நிறையத் தூரம் ஓடினவள்." இலக்கியாவைத் தள்ளிக்கொண்டு இறங்கியிருந்தாள், கவி.
“தம்பி இவை இப்பிடித்தான் மல்லுக்கு நிப்பினம், நீங்களே எடுங்கோ!" இடையிட்டது சுகுணாவின் குரல்.
"இல்ல இல்ல நான் தான் ஓடுவன்." வேந்தனை இழுத்து இறக்காத குறையா வெளியேற வைத்துத் தான் ஏறியமர்ந்துவிட்டாள், கவி. முகம் சுருங்கிப் போக விறுவிறுவென்று நகர்ந்துவிட்டாள், இலக்கியா.
கவிக்கோ, அவ்வளவு சந்தோசம். மனதில் புதுவகை உற்சாகம். "இண்டைக்கு முழுநாளும் கார் எனக்குச் சரியோ!" என்றபடி வாகனத்தை எடுக்க, "நல்லவேளை அப்பிடியே சொந்தமா வச்சிருக்கிறன் எண்டு சொல்லாமல் விட்டிங்களே அக்கா!" ஆரூரன் கடித்தான்.
"ஆங்! அப்பிடிச் சொன்னா வேந்தன் தரமாட்டாரா என்ன?" மகள் வேந்தனின் முகம் பார்த்துக் கேட்க, வேந்தனை ஆராய்ந்தது, சுகுணாவின் பார்வை. மகளுக்கு வேந்தனைப் பிடித்திருக்கோ என்ற சந்தேகம் வலுப்பெற்றுக் கொண்டிருக்கின்றதே!
கைபேசியில் பார்வையிருக்க, "அதுக்கென்ன வச்சிருங்க." என்றானவன். அதுவே கவிக்குப் போதுமாக இருந்தது. முகம் மலர்ந்திட்டு!
"எப்பிடி?" சகோதரனைப் பார்த்துச் சொன்னபடி அவள் வாகனமோட்ட, வேந்தனோ, இலக்கியாவுக்குக் குறுஞ்செய்தி தட்டுவதில் கவனமாக இருந்தான்.
‘விட்டுட்டுப் போய்ட்டீர் என்ன? நீர் செய்த வேல கொஞ்சமும் சரியில்ல!’
‘அத நேற்றே செய்தது நீங்க!’ தாமதிக்காது பதில் வந்தது.
"அதெல்லாம் செல்லாது, அது தூங்கிற நேரம் தானே?"
‘ஆனா நான் தூங்கேல்ல சரியோ?’
‘சொறி டா. நல்லா நேரம் போயிட்டு, தூங்கி இருப்பீர் எண்டுதான் சத்தம் போடேல்ல.’
‘ம்ம்... எல்லாத்துக்கும் ஒரு சாட்டு!’ கணம் தாமதிக்காது பதில் வந்து விழ, அவள் அருகிலிருக்கும் உணர்வு அவனுள்.
‘ஆர் நானோ? நீர்தான் அப்பிடி!’
‘நான் என்ன செய்தன்?’ கோப ஸ்மைலியோடு குதித்தோடியது இலக்கியாவின் பதில்.
‘நான் சொன்னதுக்கு இன்னும் பதில் சொல்லேல்ல. அதோட, என்னட்ட இருந்து ஒரு செய்தியும் வராட்டி அப்பிடியே விடுவீரா? நீர் ஒரு ஹை போட்டிருக்கலாமே!’ அவனும் ஒரு கோப முகத்தை அனுப்பி வைத்தான்.
‘ஹா...ஹா...’ தட்டிய இலக்கியின் முகமும் மென்னகையில் கனிந்திட்டு!
அடிக்கடி அவளையே பார்த்தபடி வந்த வினித், "ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்" செருமலோடு சொல்லவும் திடுக்கிட்டு நிமிர்ந்தாள், இலக்கியா.
வந்ததும் அவன் பார்வை இலக்கியாவைத் தேடியோடியது. அவள் பார்வையும் அவனில்தான். சட்டென்று கைபேசியைப் பார்க்கவும் செய்தாள்.
“நேற்றிரவு கதைச்சிக்கொண்டிருந்திட்டுத் தூங்கப் போகவே நடுச்சாமம் ஆகிட்டு!" சொன்னவன் பார்வை அவள் விழிகளை உரசி மீண்டிட்டு!
‘என்ன எண்டாலும்...இரவு எவ்வளவு நேரம் முழிச்சிருந்தன்!’ அவள் மனம் முணுமுணுப்போடிருந்தது. அதனிடையில் பிரயாணம் பற்றிய கதை எழுந்தது.
“ கிராண்ட் கண்யன் ‘ஸ்கை வோக்’ அருமையான வியூதான்; அதேபோலவே இன்னும் நிறைய இடமிருக்கு!" வேந்தன் சொல்ல, “ஓம், நாங்க ப்ரெண்ட்ஸ் எல்லாருமாச் சேர்ந்து ரிம் ட்ரயல், கன்யன் நஷனல் பார்க், அன்டிலோப் கன்யன் எல்லாம் போயிருக்கிறம், வளர்ந்தவேதான் நல்லா ரசிப்பினம் அண்ணா." என்றான் வினித்.
"இவையல் ஓகே டா. கவின் கூட நல்லா சந்தோசமா நடப்பார். ஆனா... ஒரே நாளில எல்லா இடமும் போறது எண்டது ஏலாத வேல. ஒரு கிழமை நிண்டு எல்லாம் பார்க்க வேணும். ரெயின்போ பிரிஜ், அதோட போட் டூர், ஹெலி டூர் எண்டு ஒவ்வொண்டுமே அற்புதமா இருக்கும்!" பதிலிறுத்தான், வேந்தன்.
"இன்னொருமுறை இங்க வரேக்கப் பார்க்கலாம்.” என்றார் சுகுணா.
“கட்டாயம் போவம். ‘ரிம் ட்ரையல்’ போன போது வானம் கிட்ட இருக்கிறது போல நான் ஃபீல் பண்ணியிருக்கிறன். அவ்வளவு உயரத்தில் நடந்து க்ராண்ட் கண்ணியன் முழுதையும் பார்க்கலாம். அதோட ‘அன்டிலோப் கன்யன்’ சொல்ல வார்த்தையில்ல; சிவப்பு நிறக் குகைகள்...கடவுளே! அது ஒரு அற்புதமான உணர்வு. அடுத்த முறை கட்டாயம் போவம்." தொடர்ந்தாள், பெரியவரின் பேத்தி.
"இப்ப இப்பிடி மாறி மாறிச் சொல்லி எங்களுக்கு ஆசையைத் துண்டுறீங்க! அப்பப் பேசாம ‘அன்டிலோப் கன்யன்’ போவம். ‘ஸ்கை வோக்’ பிறகு வரேக்கப் போகலாம். அல்லது போட் டூர் போவமா?" இடையிட்டாள், கவி.
"இல்ல அக்கா ஸ்கை வோக் போவம் ப்ளீஸ்!" இலக்கி சொல்ல, "ஓம், திட்டம் போட்டபடி ஸ்கை வோக் போகலாம்; மற்றதுகளுக்கு இன்னொருக்கா வரலாம்." என்றான் வேந்தன்.
"சரி, அப்ப அடுத்தமுறை நீங்களே கூட்டிக்கொண்டு வாங்கோ என்ன?" உரிமையோடு சொன்னாள், கவி.
"அதுக்கென்ன கட்டாயம்." சாதாரணமாகச் சொன்னானவன்.
"அதுதான் சொன்னனே, யாழ் டிராவல்ஸ்ல ஒரு வாகனம் உங்களுக்கெண்டு ஒதுக்கியாச்சி!" என்ற வினித் பார்வை மின்னலென இலக்கியாவில் படிந்து விலகியது. அவன் பார்ப்பது புரிந்ததும் வலு கவனமாக வானகத்தில் ஏறுவதில் முனைப்பாக இருந்தாளவள்.
"சரி சரி கதைச்சுக்கொண்டு நிக்காமல் வெளிக்கிடுவம்.” மாறன் சொல்ல, "எங்களோட ஆரு வரப்போறீங்க?" கேட்டாள் பெரியவர் பேத்தி.
"நான் உங்களோட வாறன்." ஏறியமர்ந்திருந்த இலக்கியா இறங்கிச் செல்ல, வேந்தன் "ஏனடி!" அவன் புறமாக இறங்கியவளுக்குக் கேட்கவேதான் சலித்துக்கொண்டான்.
'நேற்று அவ்வளவு சொல்ல சொல்லப் போனார் எல்லா? இப்ப நான் அந்தக் கார்ல வாறன்' அவள் மனதுள் முணுமுணுத்தபடி நகர முயல, "இலக்கியா நீர் ஓடப் போறிரோ?" என்றிருந்தான், வேந்தன்.
சட்டென்று நின்றவள் விழிகளில், 'அது...' மின்னல்! இதழ்களில் மலர்ந்திட்ட அழகிய முறுவலோடு ஏற முனைய, "இது நல்ல பகிடி! நான் ஓடுறன். அவள் அண்டைக்கும் நிறையத் தூரம் ஓடினவள்." இலக்கியாவைத் தள்ளிக்கொண்டு இறங்கியிருந்தாள், கவி.
“தம்பி இவை இப்பிடித்தான் மல்லுக்கு நிப்பினம், நீங்களே எடுங்கோ!" இடையிட்டது சுகுணாவின் குரல்.
"இல்ல இல்ல நான் தான் ஓடுவன்." வேந்தனை இழுத்து இறக்காத குறையா வெளியேற வைத்துத் தான் ஏறியமர்ந்துவிட்டாள், கவி. முகம் சுருங்கிப் போக விறுவிறுவென்று நகர்ந்துவிட்டாள், இலக்கியா.
கவிக்கோ, அவ்வளவு சந்தோசம். மனதில் புதுவகை உற்சாகம். "இண்டைக்கு முழுநாளும் கார் எனக்குச் சரியோ!" என்றபடி வாகனத்தை எடுக்க, "நல்லவேளை அப்பிடியே சொந்தமா வச்சிருக்கிறன் எண்டு சொல்லாமல் விட்டிங்களே அக்கா!" ஆரூரன் கடித்தான்.
"ஆங்! அப்பிடிச் சொன்னா வேந்தன் தரமாட்டாரா என்ன?" மகள் வேந்தனின் முகம் பார்த்துக் கேட்க, வேந்தனை ஆராய்ந்தது, சுகுணாவின் பார்வை. மகளுக்கு வேந்தனைப் பிடித்திருக்கோ என்ற சந்தேகம் வலுப்பெற்றுக் கொண்டிருக்கின்றதே!
கைபேசியில் பார்வையிருக்க, "அதுக்கென்ன வச்சிருங்க." என்றானவன். அதுவே கவிக்குப் போதுமாக இருந்தது. முகம் மலர்ந்திட்டு!
"எப்பிடி?" சகோதரனைப் பார்த்துச் சொன்னபடி அவள் வாகனமோட்ட, வேந்தனோ, இலக்கியாவுக்குக் குறுஞ்செய்தி தட்டுவதில் கவனமாக இருந்தான்.
‘விட்டுட்டுப் போய்ட்டீர் என்ன? நீர் செய்த வேல கொஞ்சமும் சரியில்ல!’
‘அத நேற்றே செய்தது நீங்க!’ தாமதிக்காது பதில் வந்தது.
"அதெல்லாம் செல்லாது, அது தூங்கிற நேரம் தானே?"
‘ஆனா நான் தூங்கேல்ல சரியோ?’
‘சொறி டா. நல்லா நேரம் போயிட்டு, தூங்கி இருப்பீர் எண்டுதான் சத்தம் போடேல்ல.’
‘ம்ம்... எல்லாத்துக்கும் ஒரு சாட்டு!’ கணம் தாமதிக்காது பதில் வந்து விழ, அவள் அருகிலிருக்கும் உணர்வு அவனுள்.
‘ஆர் நானோ? நீர்தான் அப்பிடி!’
‘நான் என்ன செய்தன்?’ கோப ஸ்மைலியோடு குதித்தோடியது இலக்கியாவின் பதில்.
‘நான் சொன்னதுக்கு இன்னும் பதில் சொல்லேல்ல. அதோட, என்னட்ட இருந்து ஒரு செய்தியும் வராட்டி அப்பிடியே விடுவீரா? நீர் ஒரு ஹை போட்டிருக்கலாமே!’ அவனும் ஒரு கோப முகத்தை அனுப்பி வைத்தான்.
‘ஹா...ஹா...’ தட்டிய இலக்கியின் முகமும் மென்னகையில் கனிந்திட்டு!
அடிக்கடி அவளையே பார்த்தபடி வந்த வினித், "ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்" செருமலோடு சொல்லவும் திடுக்கிட்டு நிமிர்ந்தாள், இலக்கியா.