அத்தியாயம்-3
ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து நின்ற மகேஸ்வரி தன்னை ஒருவழியாக அதிலிருந்து மீட்டுக்கொண்டார்.
“அண்ணி, உண்மையாகத்தான் சொல்கிறீர்களா?” மஞ்சுளா சொன்னதை இன்னமும் நம்பமுடியாமல் கேட்டார்.
“பின்னே? இதில் யாராவது விளையாடுவார்களா?” என்ற மஞ்சுளா, “என்னப்பா, நான் சொன்னது சரிதானே? நீங்களும் ஒருதடவை உங்கள் வாயால் சொல்லுங்கள். அதன் பிறகாவது உங்கள் தங்கை நம்பட்டும்.” என்றார் கணவனிடம்.
வெண்பாவை ஒருமுறை பார்த்துவிட்டு, “நீ சொன்னால் அது பிழையாக இருக்குமா மஞ்சு.” என்றார் ராஜசேகரும்.
அப்போதும் ஆச்சரியம் விலகாமல் நின்ற தங்கையிடம் திரும்பி, “இதில் நீ இவ்வளவு ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது மகி? இந்த வீட்டுக்கு மருமகளாகும் உரிமை அவளுக்கு உண்டுதானே..” என்றார்.
கண்கள் பனிக்கத் தலையை மட்டும் ஆமோதிப்பாக அசைத்தார் மகேஸ்வரி. சொல்லாமல் கொள்ளாமல் அந்த வீட்டை விட்டு வெளியேறி பத்து வருடங்கள் கழித்து வந்தபோதும், எந்தவிதக் கோபமும் இன்றித் தன் மகளை மருமகளாக ஏற்றுக்கொள்ளும் அண்ணனின் பெருந்தன்மையை எண்ணி வாயடைத்துப் போனது அவருக்கு.
“சரி, நீங்கள் எல்லோரும் கதைத்துக்கொண்டு இருங்கள். நான் வருகிறேன், மீட்டிங்க்கு நேரமாகிவிட்டது..” என்றபடி எழுந்த ராஜசேகர், ஏதோ நினைவு வந்தவராகத் தங்கையின் புறமாகத் திரும்பினார்.
“நீ வெண்பாவுடன் தனியாக அங்கே இருக்கவேண்டாம். இங்கேயே வந்துவிடு.” என்றார்.
அதில் மகேஸ்வரிக்கும் உடன்பாடு இருந்தாலும், அண்ணி என்ன சொல்வாரோ என்கிற தயக்கத்துடன் மஞ்சுளாவைப் பார்த்தார்.
“என்னை எதற்குப் பார்க்கிறாய் மகி. இன்றிலிருந்தே இங்கேயே இருங்கள். மாலை அமலன் வந்ததும் அவனும் தர்சனுமாக உங்களின் பொருட்களை இங்கே கொண்டுவரட்டும்.” என்றார் மஞ்சுளா.
அதற்கு மகேஸ்வரி சம்மதித்த பிறகே ராஜசேகர் தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றார்.
“வா மகி, பேசிக்கொண்டே சமையலைக் கவனிக்கலாம். நீயும் வா வெண்பா..” என்றபடி முன்னால் நடந்தார் மஞ்சுளா.
மகேஸ்வரியும் ராகினியும் அவரோடு சென்றுவிட, எதிர்பாராமல் தன் வாழ்வில் நடந்துகொண்டிருக்கும் திடீர் மாற்றங்களை ஜீரணிக்க முடியாமல் அதிர்ந்துபோய் நின்றிருந்தாள் வெண்பா.
அதுவும், தன்னுடைய விருப்பு வெறுப்புக்களைப் பற்றிச் சற்றும் யோசியாது, தன்னிடம் எதைப்பற்றியும் கலந்து ஆலோசிக்காமல் முடிவுகளை எடுக்கும் தாய் மேல் பெரும் ஆத்திரம் பொங்கியது அவளுக்கு.
தமையனும் வெளியே சென்றுவிட்டதைக் கவனித்த தர்சனோ இதழ்களில் பூத்த சின்னச் சிரிப்புடன் வெண்பாவை நெருங்கினான்.
விழிகள் மின்ன, “என்னுடனான திருமணத்துக்குத் தயாராக இரு என் அத்தை மகளே!” என்றான் அவள் கன்னத்தைத் தன் ஒற்றை விரலால் தட்டி.
சும்மாவே திகைத்து நின்றவளுக்கு அவனது செய்கையும் பேச்சும் பெரும் திகைப்பைக் கொடுத்தது.
விரிந்த விழிகளில் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிய அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
இந்த வீட்டில் உள்ளவர்கள் அவளைப் பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? உயிரற்ற ஜடப் பொருள் என்றா? அல்லது எடுப்பார் கைப்பிள்ளை என்றா?
திருமணம் என்பது என்ன? ஒரு ஆணும் பெண்ணும் மனமுவந்து மாற்றிக்கொள்ளும் மணமாலை அல்லவா?
அப்படியிருக்கையில் அந்தப் பெண்ணிடம் சம்மதம் கேட்கவேண்டும் என்கிற அடிப்படை நியதி கூடவா இவர்களுக்குத் தெரியாமல் போனது?
மனம் கொதித்தது வெண்பாவுக்கு!
வீட்டுப் பெரியவர்கள் தான் அப்படி என்றால் அவள் முன்னால் நிற்பவனோ அதற்கு மேலே அல்லவா போகிறான்.
அவனைக் கட்டிக்கொள்வதாக அவள் சொன்னாளா? பிறகு என்ன தைரியத்தில் அவளிடமே திருமணத்துக்குத் தயாராக இருக்கச் சொல்கிறான்?
அவன் எதைச் சொன்னாலும் கேட்கும் இடத்தில் அவள் இருக்கிறாள் என்கிற திமிரா அவனுக்கு?
என்ன அநியாயம் என்று வெகுண்டது உள்ளம்.
அவளை, அவளின் உணர்வுகளை, அவளின் விருப்பத்தை மதியாத இந்த வீட்டுக்கு அவள் மருமகள் ஆவதா?
தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் இவனுக்கு அவள் மனைவியாவதா?
நடக்காது! நடக்கக்கூடாது என்று மனம் சிலுப்பிக்கொள்ள, “போயும் போயும் திமிர் பிடித்த உங்களையா நான் கட்டிக்கொள்வது? நடக்கவே நடக்காது!” என்றாள் அவளும் அலட்சியமாக.
அதைக்கேட்ட தர்சனின் முகம் இறுகிப் போனது!
“அதென்ன போயும் போயும்? அவ்வளவு இளக்காரமா உனக்கு? இந்த வாய்க்காகவே நான் தான்டி உன் கழுத்தில் தாலி கட்டுவேன்!” என்று அவன் உறுமிக்கொண்டு இருக்கையிலேயே, “வெண்பா..!” என்று மஞ்சுளாவின் குரல் உள்ளிருந்து கேட்டது.
அவனது உறுமலில் சற்றும் பயப்படாமல் தர்சனை நேராகப் பார்த்தாள் வெண்பா.
“இந்த உலகத்தில் இருக்கும் கடைசி ஆண்மகன் நீங்கள் தான் என்கிற நிலை வந்தாலும் உங்களைக் கட்டவே மாட்டேன்! எனக்கு உங்களைப் பார்க்கவே பிடிக்கவில்லை!” என்று வெறுப்புடன் மொழிந்துவிட்டு அங்கிருந்து நகரப் பார்த்தவளின் கையைத் தர்சனின் இரும்புக் கரம் இறுக்கமாகப் பற்றியது.
அவளை இன்னும் நெருங்கி, அவள் முகத்தருகே குனிந்து, “என்னைத் தவிர வேறு எவனையும் உனக்குப் பிடிக்கவே கூடாது! அப்படி எவனையாவது முதலில் பிடித்திருந்தாலும் அவனை இன்றோடு மறந்துவிடு! உனக்கு நான்தான்டி புருஷன்!” என்றான் கடுமையான குரலில்.
அவன் விழிகளில் தெரிந்த சீற்றத்தில் நெஞ்சுக்குள் சில்லிட்டாலும், “உங்களை எனக்குப் பிடிக்கவில்லை என்று சொன்ன பிறகும் என்னைத்தான் கட்டுவேன் என்கிறீர்களே, உங்களுக்கு என்ன வேறு பெண்களே கிடைக்கவில்லையா?” என்று ஏளனத்தோடு கேட்டுவிட்டாள் வெண்பா.
அது அவனது தன்மானத்தைச் சீண்டிப் பார்த்தது. “எனக்கா பெண்ணில்லை? நான் நினைத்தால் ஒன்றென்ன ஓராயிரம் பெண்ணையும் கட்டுவேன்! கை சொடுக்கினால் போதும், காலில் விழுவதற்குப் பல பெண்கள் இருக்கிறார்கள். ஆனாலும் நீதான் எனக்கு மனைவி! உன்னைக் கட்டி உன் வாயை அடக்கிக் காட்டுகிறேன். அதை உன்னால் என்ன அந்தப் பரலோகத்தில் இருக்கும் உன்னைப் பெற்ற அப்பாவால் கூட மாற்ற முடியாது!” என்று அழுத்தமான குரலில் சொல்லிவிட்டுச் சென்றான் தர்சன்.
அவனது முதுகையே வெறுப்புடன் பார்த்தாள் வெண்பா. அவனைப் பிடிக்கவில்லை என்று தெளிவாகச் சொன்னபிறகும் நீதான் என் மனைவி என்று திமிராகச் சொல்லும் அவனது காட்டுமிராண்டித் தனத்தை முற்றிலுமாக வெறுத்தாள்.
ஏன் அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை என்கிற காரணத்தைக் கூட அவன் அறிய முயலவில்லையே! அந்தளவுக்கு அவளிடம் அலட்சியமா?
மனம் சீறிச் சினந்தது அவளுக்கு.
இதற்கெல்லாம் காரணம் அவளின் தாயல்லவா. மொத்த ஆத்திரமும் தாயிடம் திரும்ப அவரிடம் விரைந்தாள்.
அங்கே சமையலறையில் மஞ்சுளாவுடன் எதையோ அளவளாவி கொண்டிருந்த தாயின் கையைப் பிடித்து ஒரே இழுவையாக இழுத்துக்கொண்டு அந்த வீட்டின் தோட்டத்துக்குச் சென்றாள்.
“ப்ச்! என்ன வெண்பா பழக்கம் இது? பேசிக்கொண்டு இருக்கும்போது இடையில் இப்படி இழுத்துக்கொண்டு வந்தால் அண்ணி என்ன நினைப்பார்கள்?” என்ற தாயை முறைத்தாள் மகள்.
“அவர் என்ன நினைப்பார், இவர் என்ன நினைப்பார் என்று யார் யாருக்காகவோ யோசிக்கிறீர்களே, நீங்கள் பெற்ற மகள் என்னைப் பற்றிக் கொஞ்சமும் யோசிக்க மாட்டீர்களா அம்மா?” என்றாள் ஆத்திரத்தோடு.
அதைக்கேட்ட மகேஸ்வரிக்குச் சிரிப்புத்தான் வந்தது.
“போடி விசரி! உன்னைப் பற்றி யோசிக்காமல் நான் வேறு யாரைப் பற்றி யோசிக்கப் போகிறேன்?”
“அப்படி என்னைப் பற்றி யோசித்திருந்தால் எனக்குப் பிடிக்காத இந்த வீட்டுக்கு வந்திருப்பீர்களா? இங்கேயே இருப்பதற்குச் சம்மதம் தான் சொல்லியிருப்பீர்களா? இதில் கல்யாணம் வேறு! யாரைக்கேட்டு முடிவு செய்தீர்கள்? எனக்கு இங்கே எதுவுமே பிடிக்கவில்லை. வாருங்கள் நாம் நம் வீட்டுக்குப் போகலாம். இல்லையில்லை, நாங்கள் கொழும்புக்கே திரும்பப் போவோம்.” என்ற மகளை இப்போது மகேஸ்வரி முறைத்தார்.
“கொழும்பில் ஒரு ஆண் துணை இல்லாமல் எவ்வளவு பயத்தோடு இருந்தோம் என்பதை மறந்துவிட்டாயா வெண்பா? இங்கே என்றால் உன் மாமாவும் மச்சான்களும் இருக்கிறார்கள். அவர்களைத் தாண்டி நம்மை யாராவது துன்புறுத்த முடியுமா? நீயே சொல்லு! நமக்குப் பாதுகாப்பு மட்டுமில்லை உனக்கு நல்ல வாழ்க்கையும் அமையப் போகிறது என்று நான் சந்தோசமாக இருக்க, நீயானால் இப்படிச் சொல்கிறாயே..” என்று அவளுக்குத் தன் எண்ணத்தைப் புரியவைக்க முயன்றார் அன்னை.
ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து நின்ற மகேஸ்வரி தன்னை ஒருவழியாக அதிலிருந்து மீட்டுக்கொண்டார்.
“அண்ணி, உண்மையாகத்தான் சொல்கிறீர்களா?” மஞ்சுளா சொன்னதை இன்னமும் நம்பமுடியாமல் கேட்டார்.
“பின்னே? இதில் யாராவது விளையாடுவார்களா?” என்ற மஞ்சுளா, “என்னப்பா, நான் சொன்னது சரிதானே? நீங்களும் ஒருதடவை உங்கள் வாயால் சொல்லுங்கள். அதன் பிறகாவது உங்கள் தங்கை நம்பட்டும்.” என்றார் கணவனிடம்.
வெண்பாவை ஒருமுறை பார்த்துவிட்டு, “நீ சொன்னால் அது பிழையாக இருக்குமா மஞ்சு.” என்றார் ராஜசேகரும்.
அப்போதும் ஆச்சரியம் விலகாமல் நின்ற தங்கையிடம் திரும்பி, “இதில் நீ இவ்வளவு ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது மகி? இந்த வீட்டுக்கு மருமகளாகும் உரிமை அவளுக்கு உண்டுதானே..” என்றார்.
கண்கள் பனிக்கத் தலையை மட்டும் ஆமோதிப்பாக அசைத்தார் மகேஸ்வரி. சொல்லாமல் கொள்ளாமல் அந்த வீட்டை விட்டு வெளியேறி பத்து வருடங்கள் கழித்து வந்தபோதும், எந்தவிதக் கோபமும் இன்றித் தன் மகளை மருமகளாக ஏற்றுக்கொள்ளும் அண்ணனின் பெருந்தன்மையை எண்ணி வாயடைத்துப் போனது அவருக்கு.
“சரி, நீங்கள் எல்லோரும் கதைத்துக்கொண்டு இருங்கள். நான் வருகிறேன், மீட்டிங்க்கு நேரமாகிவிட்டது..” என்றபடி எழுந்த ராஜசேகர், ஏதோ நினைவு வந்தவராகத் தங்கையின் புறமாகத் திரும்பினார்.
“நீ வெண்பாவுடன் தனியாக அங்கே இருக்கவேண்டாம். இங்கேயே வந்துவிடு.” என்றார்.
அதில் மகேஸ்வரிக்கும் உடன்பாடு இருந்தாலும், அண்ணி என்ன சொல்வாரோ என்கிற தயக்கத்துடன் மஞ்சுளாவைப் பார்த்தார்.
“என்னை எதற்குப் பார்க்கிறாய் மகி. இன்றிலிருந்தே இங்கேயே இருங்கள். மாலை அமலன் வந்ததும் அவனும் தர்சனுமாக உங்களின் பொருட்களை இங்கே கொண்டுவரட்டும்.” என்றார் மஞ்சுளா.
அதற்கு மகேஸ்வரி சம்மதித்த பிறகே ராஜசேகர் தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றார்.
“வா மகி, பேசிக்கொண்டே சமையலைக் கவனிக்கலாம். நீயும் வா வெண்பா..” என்றபடி முன்னால் நடந்தார் மஞ்சுளா.
மகேஸ்வரியும் ராகினியும் அவரோடு சென்றுவிட, எதிர்பாராமல் தன் வாழ்வில் நடந்துகொண்டிருக்கும் திடீர் மாற்றங்களை ஜீரணிக்க முடியாமல் அதிர்ந்துபோய் நின்றிருந்தாள் வெண்பா.
அதுவும், தன்னுடைய விருப்பு வெறுப்புக்களைப் பற்றிச் சற்றும் யோசியாது, தன்னிடம் எதைப்பற்றியும் கலந்து ஆலோசிக்காமல் முடிவுகளை எடுக்கும் தாய் மேல் பெரும் ஆத்திரம் பொங்கியது அவளுக்கு.
தமையனும் வெளியே சென்றுவிட்டதைக் கவனித்த தர்சனோ இதழ்களில் பூத்த சின்னச் சிரிப்புடன் வெண்பாவை நெருங்கினான்.
விழிகள் மின்ன, “என்னுடனான திருமணத்துக்குத் தயாராக இரு என் அத்தை மகளே!” என்றான் அவள் கன்னத்தைத் தன் ஒற்றை விரலால் தட்டி.
சும்மாவே திகைத்து நின்றவளுக்கு அவனது செய்கையும் பேச்சும் பெரும் திகைப்பைக் கொடுத்தது.
விரிந்த விழிகளில் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிய அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
இந்த வீட்டில் உள்ளவர்கள் அவளைப் பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? உயிரற்ற ஜடப் பொருள் என்றா? அல்லது எடுப்பார் கைப்பிள்ளை என்றா?
திருமணம் என்பது என்ன? ஒரு ஆணும் பெண்ணும் மனமுவந்து மாற்றிக்கொள்ளும் மணமாலை அல்லவா?
அப்படியிருக்கையில் அந்தப் பெண்ணிடம் சம்மதம் கேட்கவேண்டும் என்கிற அடிப்படை நியதி கூடவா இவர்களுக்குத் தெரியாமல் போனது?
மனம் கொதித்தது வெண்பாவுக்கு!
வீட்டுப் பெரியவர்கள் தான் அப்படி என்றால் அவள் முன்னால் நிற்பவனோ அதற்கு மேலே அல்லவா போகிறான்.
அவனைக் கட்டிக்கொள்வதாக அவள் சொன்னாளா? பிறகு என்ன தைரியத்தில் அவளிடமே திருமணத்துக்குத் தயாராக இருக்கச் சொல்கிறான்?
அவன் எதைச் சொன்னாலும் கேட்கும் இடத்தில் அவள் இருக்கிறாள் என்கிற திமிரா அவனுக்கு?
என்ன அநியாயம் என்று வெகுண்டது உள்ளம்.
அவளை, அவளின் உணர்வுகளை, அவளின் விருப்பத்தை மதியாத இந்த வீட்டுக்கு அவள் மருமகள் ஆவதா?
தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் இவனுக்கு அவள் மனைவியாவதா?
நடக்காது! நடக்கக்கூடாது என்று மனம் சிலுப்பிக்கொள்ள, “போயும் போயும் திமிர் பிடித்த உங்களையா நான் கட்டிக்கொள்வது? நடக்கவே நடக்காது!” என்றாள் அவளும் அலட்சியமாக.
அதைக்கேட்ட தர்சனின் முகம் இறுகிப் போனது!
“அதென்ன போயும் போயும்? அவ்வளவு இளக்காரமா உனக்கு? இந்த வாய்க்காகவே நான் தான்டி உன் கழுத்தில் தாலி கட்டுவேன்!” என்று அவன் உறுமிக்கொண்டு இருக்கையிலேயே, “வெண்பா..!” என்று மஞ்சுளாவின் குரல் உள்ளிருந்து கேட்டது.
அவனது உறுமலில் சற்றும் பயப்படாமல் தர்சனை நேராகப் பார்த்தாள் வெண்பா.
“இந்த உலகத்தில் இருக்கும் கடைசி ஆண்மகன் நீங்கள் தான் என்கிற நிலை வந்தாலும் உங்களைக் கட்டவே மாட்டேன்! எனக்கு உங்களைப் பார்க்கவே பிடிக்கவில்லை!” என்று வெறுப்புடன் மொழிந்துவிட்டு அங்கிருந்து நகரப் பார்த்தவளின் கையைத் தர்சனின் இரும்புக் கரம் இறுக்கமாகப் பற்றியது.
அவளை இன்னும் நெருங்கி, அவள் முகத்தருகே குனிந்து, “என்னைத் தவிர வேறு எவனையும் உனக்குப் பிடிக்கவே கூடாது! அப்படி எவனையாவது முதலில் பிடித்திருந்தாலும் அவனை இன்றோடு மறந்துவிடு! உனக்கு நான்தான்டி புருஷன்!” என்றான் கடுமையான குரலில்.
அவன் விழிகளில் தெரிந்த சீற்றத்தில் நெஞ்சுக்குள் சில்லிட்டாலும், “உங்களை எனக்குப் பிடிக்கவில்லை என்று சொன்ன பிறகும் என்னைத்தான் கட்டுவேன் என்கிறீர்களே, உங்களுக்கு என்ன வேறு பெண்களே கிடைக்கவில்லையா?” என்று ஏளனத்தோடு கேட்டுவிட்டாள் வெண்பா.
அது அவனது தன்மானத்தைச் சீண்டிப் பார்த்தது. “எனக்கா பெண்ணில்லை? நான் நினைத்தால் ஒன்றென்ன ஓராயிரம் பெண்ணையும் கட்டுவேன்! கை சொடுக்கினால் போதும், காலில் விழுவதற்குப் பல பெண்கள் இருக்கிறார்கள். ஆனாலும் நீதான் எனக்கு மனைவி! உன்னைக் கட்டி உன் வாயை அடக்கிக் காட்டுகிறேன். அதை உன்னால் என்ன அந்தப் பரலோகத்தில் இருக்கும் உன்னைப் பெற்ற அப்பாவால் கூட மாற்ற முடியாது!” என்று அழுத்தமான குரலில் சொல்லிவிட்டுச் சென்றான் தர்சன்.
அவனது முதுகையே வெறுப்புடன் பார்த்தாள் வெண்பா. அவனைப் பிடிக்கவில்லை என்று தெளிவாகச் சொன்னபிறகும் நீதான் என் மனைவி என்று திமிராகச் சொல்லும் அவனது காட்டுமிராண்டித் தனத்தை முற்றிலுமாக வெறுத்தாள்.
ஏன் அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை என்கிற காரணத்தைக் கூட அவன் அறிய முயலவில்லையே! அந்தளவுக்கு அவளிடம் அலட்சியமா?
மனம் சீறிச் சினந்தது அவளுக்கு.
இதற்கெல்லாம் காரணம் அவளின் தாயல்லவா. மொத்த ஆத்திரமும் தாயிடம் திரும்ப அவரிடம் விரைந்தாள்.
அங்கே சமையலறையில் மஞ்சுளாவுடன் எதையோ அளவளாவி கொண்டிருந்த தாயின் கையைப் பிடித்து ஒரே இழுவையாக இழுத்துக்கொண்டு அந்த வீட்டின் தோட்டத்துக்குச் சென்றாள்.
“ப்ச்! என்ன வெண்பா பழக்கம் இது? பேசிக்கொண்டு இருக்கும்போது இடையில் இப்படி இழுத்துக்கொண்டு வந்தால் அண்ணி என்ன நினைப்பார்கள்?” என்ற தாயை முறைத்தாள் மகள்.
“அவர் என்ன நினைப்பார், இவர் என்ன நினைப்பார் என்று யார் யாருக்காகவோ யோசிக்கிறீர்களே, நீங்கள் பெற்ற மகள் என்னைப் பற்றிக் கொஞ்சமும் யோசிக்க மாட்டீர்களா அம்மா?” என்றாள் ஆத்திரத்தோடு.
அதைக்கேட்ட மகேஸ்வரிக்குச் சிரிப்புத்தான் வந்தது.
“போடி விசரி! உன்னைப் பற்றி யோசிக்காமல் நான் வேறு யாரைப் பற்றி யோசிக்கப் போகிறேன்?”
“அப்படி என்னைப் பற்றி யோசித்திருந்தால் எனக்குப் பிடிக்காத இந்த வீட்டுக்கு வந்திருப்பீர்களா? இங்கேயே இருப்பதற்குச் சம்மதம் தான் சொல்லியிருப்பீர்களா? இதில் கல்யாணம் வேறு! யாரைக்கேட்டு முடிவு செய்தீர்கள்? எனக்கு இங்கே எதுவுமே பிடிக்கவில்லை. வாருங்கள் நாம் நம் வீட்டுக்குப் போகலாம். இல்லையில்லை, நாங்கள் கொழும்புக்கே திரும்பப் போவோம்.” என்ற மகளை இப்போது மகேஸ்வரி முறைத்தார்.
“கொழும்பில் ஒரு ஆண் துணை இல்லாமல் எவ்வளவு பயத்தோடு இருந்தோம் என்பதை மறந்துவிட்டாயா வெண்பா? இங்கே என்றால் உன் மாமாவும் மச்சான்களும் இருக்கிறார்கள். அவர்களைத் தாண்டி நம்மை யாராவது துன்புறுத்த முடியுமா? நீயே சொல்லு! நமக்குப் பாதுகாப்பு மட்டுமில்லை உனக்கு நல்ல வாழ்க்கையும் அமையப் போகிறது என்று நான் சந்தோசமாக இருக்க, நீயானால் இப்படிச் சொல்கிறாயே..” என்று அவளுக்குத் தன் எண்ணத்தைப் புரியவைக்க முயன்றார் அன்னை.
Last edited by a moderator: