• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இன்னுயிராவாய் என்னுயிரே - 4

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-4

சூரியனின் வெப்பம் தணிந்துவிட்டதில் மாலைக்காற்றுச் சுகமாக வீசிக்கொண்டிருந்தது. வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த தர்சனின் கார், சற்று வேகமாகவே சாலையில் பயணித்தது. அவன் மனதிலோ ஒருவித உற்சாகம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.

அதற்குக் காரணமானவளை எண்ணியதுமே அவனது இதழோரம் உல்லாசப் புன்னகை ஒன்று இதமாக ஜனித்தது. அவளையும் அவள் வீசும் அக்கினிப் பார்வைகளையும் நினைக்கையிலேயே அவனுக்குள் என்னென்னவோ மாற்றங்கள்.

இதற்கே இந்தப் பாடாக இருக்கிறதே.. அவள் காதலுடன் அவனைப் பார்த்தால்? அந்த மான்விழிகள் மயக்கத்துடன் அவனை நோக்கினால்? நினைக்கவே நெஞ்சம் சில்லிட்டது. மனதோரம் அந்தப் பார்வைகளுக்கான ஏக்கமும் உண்டாயிற்று!

இந்த மாற்றங்கள் எல்லாம் எப்படி அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே தோன்றின? அவனுக்கே தெரியவில்லை.

ஆனால், அவன் உடலின் ஒவ்வொரு அணுக்களும் அவளுக்காகவும், அவளின் அண்மைக்காகவும் ஏங்கின.

பத்து வயது சிறுமியாக இருந்தவளை அப்போதே அவனுக்குப் பிடிக்கும்தான். ஆனால், அந்தப் பிடித்தத்தின் அர்த்தம் அத்தை மகள் என்கிற சொந்தம் மட்டுமே!

அந்தச் சொந்தம் இன்று நேசமாக மாறிவிட்ட விந்தையை எண்ணி உள்ளூர வியந்தான்.

இருபத்தியாறு வயதானபோதும் திருமணத்தைப் பற்றிச் சற்றும் சிந்தியாமல் இருந்தவனின் மனதை ஒரே நொடியில் தன் காலடியில் விழ வைத்துவிட்டாளே!

அல்லாவிடில், இருபத்தியெட்டு வயதான அமலனிடமே, ‘திருமணத்துக்கு இப்போது உனக்கு என்ன அவசரம்?’ என்று கேட்டவன், இன்று எப்போதடா வெண்பாவை மணந்து அவளைத் தன்னவளாக ஆக்கிக் கொள்வோம் என்று துடிப்பானா?

இந்த ஏக்கத்துக்கும், அவளைப் பார்த்ததும் உண்டான பிடிப்புக்கும், அவளை யாருக்குமே விட்டுக் கொடுக்க முடியாது என்று தோன்றும் பிடிவாதத்துக்கும் காரணம் என்ன?

தெரியவில்லை!

ஆனால், அவளின்றி அவனில்லை! அதுமட்டும் மிக மிக நன்றாகவே புரிந்தது.

அவளுக்கும் அப்படியா? என்கிற கேள்வி தோன்றியதுமே அதுவரை அவன் இதழ்களில் குடிகொண்டிருந்த புன்னகை மடிந்தது.

இல்லையே! அவனுக்குத் தெரிந்தவரையில் அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லையே! மனம் கனத்துப் போயிற்று!

ஆனால் ஏன்? அவன் அப்படி என்ன செய்தான்? எதுவுமில்லையே!

அவளிடம் வம்பு வளர்ப்பது கூட அவள் மேலிருக்கும் பிரியத்தினால் அல்லவா.

அதனால் தான் அவனைப் பிடிக்கவில்லையோ?

இருக்காது! அப்படியாக இருக்காது!

ஆனாலும் இனி அவளிடம் வம்பு வளர்க்கக்கூடாது என்று நினைத்துக் கொண்டான், அது தன்னால் என்றுமே முடியாது என்பதை அறியாமலேயே!

அவளைப் பற்றியே நினைத்துக்கொண்டு வந்தவனின் விழிகளில் அவன் நினைவுகளின் நாயகியே எதிரே தோன்றினாள்.

இவள் எங்கே இங்கே என்று யோசித்தபடி பிரேக்கை அழுத்தி காரை நிறுத்திவிட்டு விழிகளைச் சுழற்றியவனுக்கு அப்போதுதான் புரிந்தது, தான் வீட்டுக்கு வந்துவிட்டதையும், வெண்பா அவர்களின் வீட்டுத் தோட்டத்து வாங்கிலில் அமர்ந்திருப்பதையும்.

கைகள் தானாகக் காரை வீட்டுக்கு விட்டபோதும் இந்த உலகத்தையே மறந்து அவளின் நினைவுகளில் மூழ்கியிருந்திருக்கிறான்!

சின்னச் சிரிப்புடன் பின்னந் தலையில் தட்டிக்கொண்டான். “சரியான வெண்பா பைத்தியம் ஆகிட்டடா நீ..” என்று வாய்விட்டுச் சொல்லிக்கொண்டவனின் விழிகளோ காந்தமென அவள் இருந்த திசையை நோக்கி வேகமாக ஓடின.

தலைக்குக் குளித்திருப்பாள் போலும், விரித்துவிட்ட முடிகளைக் காய வைப்பதற்காக ஒரு கையினால் கோதிவிட்டுக் கொண்டிருந்தாள். மற்ற கையோ காதுக்கு அருகே கைபேசியைப் பிடித்திருக்க, யாருடனோ பூரித்த முகத்தோடு பேசிக்கொண்டிருந்தாள்.

பச்சை நிறத்தில் மஞ்சள் பூக்கள் பூத்திருந்த பாவாடையும் அதற்குப் பொருத்தமாக மஞ்சள் நிறத்தில் சட்டையும் அணிந்திருந்தவள், வாங்கிலில் அமர்ந்து இருந்தபடி தன் பாதங்களைப் பச்சைப் புல்வெளியில் பதித்திருந்தாள்.

காந்தத்தை நோக்கி நகரும் இரும்புத் துகள்களாய் மனம் அவளை நாட, அவளருகே சென்றான் தர்சன்.

அவன் வருவதைக் கூட உணராது கைபேசியில் மூழ்கியிருந்தவள் அருகில் யாரோ அமரும் அரவத்தில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். தர்சனைக் கண்டதும் ஒருநொடி திகைத்து மறுநொடி கைபேசியை வேகமாக அணைத்துவிட்டு சட்டென வாங்கிலில் இருந்து எழுந்தாள்.

திடீரெனப் பக்கத்தில் அமர்ந்ததில் பயந்துவிட்டாள் போலும் என்று எண்ணிய தர்சன், “ஹேய்.. பயப்படாதே நான்தான்.” என்றான் புன்னகையுடன்.

காலையில் அந்தக் கத்துக் கத்திவிட்டுப் போனவன் இப்போது இப்படிச் சாந்தமாகக் கதைப்பதை மெல்லிய ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

அதுநாள் வரை கேலியையும், கிண்டலையும், கடுமையையும் மட்டுமே சுமந்து அவளைப் பார்த்த அவனது விழிகளில் தெரிந்த, இன்னதென்று வரையறுக்க முடியாத பாவத்தில் குழம்பிப் போன வெண்பாவால் ஏனோ அந்தப் பார்வையை ரசிக்க முடியவில்லை.

அதற்கு மேலும் அங்கே நிற்கப் பிரியமின்றி அவள் நகர, “யாருடன் கதைத்துக் கொண்டிருந்தாய்?” என்று, அவனுக்கும் அவளுக்குமாகக் கிடைத்த அந்தத் தனிமையில் பேச்சை வளர்க்க விரும்பிக் கேட்டான் தர்சன்.

அப்படியாவது அவர்களுக்குள் திரை மறைவில் இருக்கும் அந்தப் பனிப்போர் முடியாதா என்கிற ஆசை இருந்தது அவனிடம்.

அவளோ, “கட்டாயம் சொல்லவேண்டுமோ?” என்று துடுக்காகக் கேட்டாள்.

தர்சனின் இதழ்களில் புன்னகை அரும்பியது.

விழிகளால் அவளை விழுங்கியபடி, “கட்டாயம் என்றில்லை. சும்மாதான் கேட்டேன்..” என்றவன்,

“எங்கே உன் கைபேசியைக் காட்டு பார்க்கலாம்..” என்று கேட்டான்.

“முடியாது! ஏன் நான் யாருடனும் கதைக்கக் கூடாதா? உடனேயே யார் என்ன ஏது என்று ஆராய்வீர்களா? இதென்ன இந்தவீட்டில் இப்படி ஒரு அராஜகம்?” என்று வெடித்தவளைத் திகைப்போடு பார்த்தான் தர்சன்.

நல்லதாக ஒரு கைபேசியை அவளுக்கு வாங்கிப் பரிசளிக்கலாம் என்கிற நோக்குடன்தான் அதைப் பார்க்க நினைத்தான். அதற்குப் பெயர் அராஜகமா?

அதோடு, நேசம் வைத்துவிட்டவளின் எடுத்தெரிந்த பேச்சில் நெஞ்சின் ஒரு ஓரத்தில் மெலிதாக வலியொன்று எழுந்தது. தன்னையும் தன் மனதையும் புரிந்துகொள்ள மாட்டாளா என்கிற ஏக்கமும் உண்டானது.

அவற்றையெல்லாம் மறைத்துக்கொண்டு, “அப்படியில்லை.. நல்ல கைபேசி உன்னிடம் இல்லை என்றால் ஒன்று வாங்கித் தரலாம் என்று நினைத்துத்தான் கேட்டேன்.” என்றான் தன்மையான குரலில்.

“எனக்கு வாங்கித் தருவதற்கு நீங்கள் யார்? எனக்குச் செய்ய என் அம்மா இருக்கிறார்.” என்றாள் அவள் மீண்டும் வெடுக்கென.

அவளின் உதாசீனப் பேச்சில் தர்சனான தர்சனே ஒருநொடி வாயடைத்து நின்றான்.

“நீண்ட நாட்களுக்குப் பிறகு உன்னைக் கண்டதால் இன்று காலையில் சும்மாதான் சீண்டினேன். அதனால் என் மீது கோபமா?” என்று, நயமாகவே கேட்டான் தர்சன்.

எப்படியாவது அவளது கோபத்தை ஆற்றி, அவன் மீதான நேசத்தை விதைத்துவிட வேண்டும் என்கிற ஆசையில் தன்மையாகப் பேசியவனுக்கு, தான்தானா இவ்வளவு பொறுமையாகப் பேசுகிறோம் என்கிற ஆச்சரியமும் உள்ளூரத் தோன்றத் தவறவில்லை.

“உங்களையும் உங்கள் பேச்சையும் ஒரு பொருட்டாகவே நான் மதிக்கவில்லை. பிறகு எதற்காக உங்கள் மீது நான் கோபப்பட?” அலட்சியமாகக் கேட்டவளின் கேள்வியில், மெல்லிய கோபம் எட்டிப் பார்த்தது அவனுக்கு.

“பேசுவதை யோசித்துப் பேசு வெண்பா. வார்த்தைகளைத் தேவையில்லாமல் விட்டு என் ஆத்திரத்தைக் கிளப்பாதே!” என்றான், உணர்வுகளின் தாக்கத்தால் உண்டான கோபத்தை அடக்கியபடி.

அவளின் இதழ் கடையோரம் ஏளனப் புன்னகை ஒன்று உதித்தது. உனக்கே இவ்வளவு கோபம் என்றால் எனக்கு எவ்வளவு கோபம் வரவேண்டும் என்று மனதில் நினைத்தவள், “ஆத்திரத்தைக் கிளப்பினால் என்ன செய்வீர்கள்? இந்த வீட்டை விட்டுத் துரத்தி விடுவீர்களோ? அதை முதலில் செய்யுங்கள். தொல்லை விட்டது என்று நிம்மதியாகப் போவேன்.” என்று திமிராகச் சொன்னவள்,

“எல்லாம் இந்த அம்மாவால் வந்தது. கண்டவனுடனும் நின்று கதைக்கவேண்டி இருக்கிறது.” என்று, அவனுக்குக் கேட்கும் விதமாகவே வாய்க்குள் முணுமுணுத்தாள்.

அது அவன் செவிகளில் மிக நன்றாகவே விழுந்ததில், இழுத்துப் பிடித்த பொறுமையும் பறக்க, “நானாடி உனக்குக் கண்டவன்? ஆசையாகக் கதைக்கலாம் என்று வந்தால் திமிரா காட்டுகிறாய்? அந்தத் திமிரை அடக்கிவிட்டுக் கேட்கிறேன் நான் யார் என்று?” என்று அவன் சீறிக்கொண்டு இருக்கையிலேயே, “டேய் தர்சா.. வேலை முடிந்து வந்துவிட்டாயா?” என்று கேட்டபடி அமலன் தோட்டத்துக்குள் வந்துகொண்டிருந்தான்.

அவனைக் கண்டதும் பொங்கிய ஆத்திரத்தையும் சினத்தையும் பல்லைக் கடித்து அடக்கிய தர்சன் அவற்றைத் தன் பார்வையாலேயே அவளுக்குக் உணர்த்தினான்.

அவனின் சினம் மிகுந்த விழிகளைப் பார்க்கப் பயந்து அமலனைப் பார்த்தாள் வெண்பா.

“வைட்ரோஸ் நீயும் இங்கேயா இருக்கிறாய்..” என்ற அமலன் தர்சனின் அருகில் அமர்ந்துகொண்டான்.

அதற்குப் பதிலேதும் சொல்லாமல் வெறுமனே புன்னகைத்தாள் வெண்பா. அதைப் பார்த்த தர்சனுக்குள் கோபம் குமிழியிட்டது.

இந்தப் புன்னகையை அவள் அவனைப் பார்த்துச் சிந்தவில்லையே?

அதை மனதுக்குள்ளேயே புதைத்துக்கொண்டு, “வவுனியாவில் இருந்து எப்போதுடா வந்தாய்?” என்று தமையனிடம் விசாரித்தான்.
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
அப்படியாவது அவர்களுக்குள் திரை மறைவில் இருக்கும் அந்தப் பனிப்போர் முடியாதா என்கிற ஆசை இருந்தது அவனிடம்.

அவளோ, “கட்டாயம் சொல்லவேண்டுமோ?” என்று துடுக்காகக் கேட்டாள்.

தர்சனின் இதழ்களில் புன்னகை அரும்பியது.

விழிகளால் அவளை விழுங்கியபடி, “கட்டாயம் என்றில்லை. சும்மாதான் கேட்டேன்..” என்றவன்,

“எங்கே உன் கைபேசியைக் காட்டு பார்க்கலாம்..” என்று கேட்டான்.

“முடியாது! ஏன் நான் யாருடனும் கதைக்கக் கூடாதா? உடனேயே யார் என்ன ஏது என்று ஆராய்வீர்களா? இதென்ன இந்தவீட்டில் இப்படி ஒரு அராஜகம்?” என்று வெடித்தவளைத் திகைப்போடு பார்த்தான் தர்சன்.

நல்லதாக ஒரு கைபேசியை அவளுக்கு வாங்கிப் பரிசளிக்கலாம் என்கிற நோக்குடன்தான் அதைப் பார்க்க நினைத்தான். அதற்குப் பெயர் அராஜகமா?

அதோடு, நேசம் வைத்துவிட்டவளின் எடுத்தெரிந்த பேச்சில் நெஞ்சின் ஒரு ஓரத்தில் மெலிதாக வலியொன்று எழுந்தது. தன்னையும் தன் மனதையும் புரிந்துகொள்ள மாட்டாளா என்கிற ஏக்கமும் உண்டானது.

அவற்றையெல்லாம் மறைத்துக்கொண்டு, “அப்படியில்லை.. நல்ல கைபேசி உன்னிடம் இல்லை என்றால் ஒன்று வாங்கித் தரலாம் என்று நினைத்துத்தான் கேட்டேன்.” என்றான் தன்மையான குரலில்.

“எனக்கு வாங்கித் தருவதற்கு நீங்கள் யார்? எனக்குச் செய்ய என் அம்மா இருக்கிறார்.” என்றாள் அவள் மீண்டும் வெடுக்கென.

அவளின் உதாசீனப் பேச்சில் தர்சனான தர்சனே ஒருநொடி வாயடைத்து நின்றான்.

“நீண்ட நாட்களுக்குப் பிறகு உன்னைக் கண்டதால் இன்று காலையில் சும்மாதான் சீண்டினேன். அதனால் என் மீது கோபமா?” என்று, நயமாகவே கேட்டான் தர்சன்.

எப்படியாவது அவளது கோபத்தை ஆற்றி, அவன் மீதான நேசத்தை விதைத்துவிட வேண்டும் என்கிற ஆசையில் தன்மையாகப் பேசியவனுக்கு, தான்தானா இவ்வளவு பொறுமையாகப் பேசுகிறோம் என்கிற ஆச்சரியமும் உள்ளூரத் தோன்றத் தவறவில்லை.

“உங்களையும் உங்கள் பேச்சையும் ஒரு பொருட்டாகவே நான் மதிக்கவில்லை. பிறகு எதற்காக உங்கள் மீது நான் கோபப்பட?” அலட்சியமாகக் கேட்டவளின் கேள்வியில், மெல்லிய கோபம் எட்டிப் பார்த்தது அவனுக்கு.

“பேசுவதை யோசித்துப் பேசு வெண்பா. வார்த்தைகளைத் தேவையில்லாமல் விட்டு என் ஆத்திரத்தைக் கிளப்பாதே!” என்றான், உணர்வுகளின் தாக்கத்தால் உண்டான கோபத்தை அடக்கியபடி.

அவளின் இதழ் கடையோரம் ஏளனப் புன்னகை ஒன்று உதித்தது. உனக்கே இவ்வளவு கோபம் என்றால் எனக்கு எவ்வளவு கோபம் வரவேண்டும் என்று மனதில் நினைத்தவள், “ஆத்திரத்தைக் கிளப்பினால் என்ன செய்வீர்கள்? இந்த வீட்டை விட்டுத் துரத்தி விடுவீர்களோ? அதை முதலில் செய்யுங்கள். தொல்லை விட்டது என்று நிம்மதியாகப் போவேன்.” என்று திமிராகச் சொன்னவள்,

“எல்லாம் இந்த அம்மாவால் வந்தது. கண்டவனுடனும் நின்று கதைக்கவேண்டி இருக்கிறது.” என்று, அவனுக்குக் கேட்கும் விதமாகவே வாய்க்குள் முணுமுணுத்தாள்.

அது அவன் செவிகளில் மிக நன்றாகவே விழுந்ததில், இழுத்துப் பிடித்த பொறுமையும் பறக்க, “நானாடி உனக்குக் கண்டவன்? ஆசையாகக் கதைக்கலாம் என்று வந்தால் திமிரா காட்டுகிறாய்? அந்தத் திமிரை அடக்கிவிட்டுக் கேட்கிறேன் நான் யார் என்று?” என்று அவன் சீறிக்கொண்டு இருக்கையிலேயே, “டேய் தர்சா.. வேலை முடிந்து வந்துவிட்டாயா?” என்று கேட்டபடி அமலன் தோட்டத்துக்குள் வந்துகொண்டிருந்தான்.

அவனைக் கண்டதும் பொங்கிய ஆத்திரத்தையும் சினத்தையும் பல்லைக் கடித்து அடக்கிய தர்சன் அவற்றைத் தன் பார்வையாலேயே அவளுக்குக் உணர்த்தினான்.

அவனின் சினம் மிகுந்த விழிகளைப் பார்க்கப் பயந்து அமலனைப் பார்த்தாள் வெண்பா.

“வைட்ரோஸ் நீயும் இங்கேயா இருக்கிறாய்..” என்ற அமலன் தர்சனின் அருகில் அமர்ந்துகொண்டான்.

அதற்குப் பதிலேதும் சொல்லாமல் வெறுமனே புன்னகைத்தாள் வெண்பா. அதைப் பார்த்த தர்சனுக்குள் கோபம் குமிழியிட்டது.

இந்தப் புன்னகையை அவள் அவனைப் பார்த்துச் சிந்தவில்லையே?

அதை மனதுக்குள்ளேயே புதைத்துக்கொண்டு, “வவுனியாவில் இருந்து எப்போதுடா வந்தாய்?” என்று தமையனிடம் விசாரித்தான்.

“நான் மதியமே வந்துவிட்டேன்டா. அத்தை வந்திருப்பதாக அண்ணா சொன்னான். அதுதான் உடனேயே வந்தேன்..” என்றவன் வெண்பாவைப் பார்த்து, “இப்போதும் தூங்கும்போது விரல் சூப்புவாயா?” என்று, வாயில் விரலை வைப்பதுபோல் காட்டிக் குறும்போடு கேட்டான்.

அதுவரை அங்கிருந்து மெதுவாக நழுவப் பார்த்தவளுக்கும் சிரிப்பு வந்துவிட, “போங்கள் மச்சான். இன்னுமென்ன நான் சின்னப்பிள்ளையா? அதெல்லாம் எப்போதே விட்டாயிற்று.” என்றாள் மலர்ந்த சிரிப்புடன்.

அதைப் பார்த்த தர்சனுக்கோ சுறுசுறு என்று ஆத்திரம் பொங்கியது. “அதென்ன அவனை மட்டும் மச்சான் என்கிறாய். என்னையெல்லாம் கூப்பிட மாட்டாயா? நானும் உனக்கு மச்சான்தான்.” என்றான் கடுப்போடு.
 

Vishakini

Moderator
Staff member
“அவள் என்னை மட்டும்தான் கூப்பிடுவாளாம். இல்லையா வெண்பா?” தர்சனின் நிலை தெரியாமல் விளையாட்டுக்குச் சொன்னான் அமலன்.

“எதையும் ஒருவர் விரும்பிச் செய்யவேண்டும் அமலன் மச்சான். வலுக்கட்டாயமாகச் செய்யவைக்க முடியாது. அதுவும் நான் செய்யவே மாட்டேன்.” தர்சனை ஏளனமாகக் கடைக்கண்ணால் நோக்கியபடி அமலனிடம் சொன்னாள் வெண்பா.

“அப்படிச் சொல்லு..!” என்று பெரிதாக நகைத்தான் அமலன். போதாக்குறைக்கு, “இப்போ என்னடா செய்வாய்?” என்று தம்பியையும் வாரினான்.

வெண்பாவையே பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகளில் பளபளப்பு ஏறியது. “அவளைக் கூப்பிட வைக்கிறேனா இல்லையா என்று பொறுத்திருந்து பார்..” என்றான் இலகுவான குரலில்.

ஆனால், அந்தக் குரலுக்குள் ஒருவிதப் பிடிவாதமும் கலந்திருப்பதை வெண்பாவால் உணர முடிந்தது.

மனம் அதிர்ந்தாலும் நானும் பிடிவாதக்காரிதான் என்று சிலுப்பிக்கொண்டாள்.



அடுத்தநாள் காலையில் எழுந்ததுமே தர்சனின் மனம் வெண்பாவைக் காண ஏங்கியது. வேகமாகக் குளித்துத் தயாராகி மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தவனை ஆச்சரியத்துடன் பார்த்தார் அன்னை மஞ்சுளா.

“என்னடா, இன்று உடற்பயிற்சி எதுவும் செய்யவில்லையா?” அது அவன் உடற்பயிற்சி செய்யும் நேரம் என்பதை அறிந்திருந்தவர் கேட்டார்.

சாப்பாட்டு மேசைக்கு முன்னால் அமர்ந்தபடி, “தினமும் தானேம்மா செய்கிறேன். அதுதான் இன்று உடற்பயிற்சிக்கு விடுமுறை. அதுசரி, எங்கே உங்கள் அருமை மருமகள்?” என்று கேட்டான்.

“அவளை எதற்குக் கேட்கிறாய்? காலையிலேயே அவளுடன் சண்டை பிடிக்காமல் பார்க்கிற வேலையைப் பார்.”

“எழுந்ததும் ஒரு சண்டையைப் போட்டால் தான்மா இன்று விடிந்ததற்கே ஒரு அர்த்தம் இருக்கும்..” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே, “யாருடன் சண்டை பிடிக்கப் போகிறாய்?” என்று கேட்டபடி மகேஸ்வரி அங்கே வந்தார்.

“உங்கள் மகளுடன்தான் அத்தை. வேறு யாருடன் தான் சண்டையைப் பிடிக்கமுடியும்?” என்று வெளிப்படையாகச் சொன்ன அண்ணன் மகனின் பேச்சில் சிரிப்புத்தான் வந்தது மகேஸ்வரிக்கு.

அதோடு, இப்படித்தான் நேற்றும் அவளிடம் எதையாவது விளையாட்டுக்குச் சொல்லியிருப்பான் என்றும் எண்ணிக்கொண்டார்.

அத்தைமகள் மாமாமகன் உறவுக்குள் அதெல்லாம் சகஜம் தானே என்றும் நினைத்தவர், “போக்கிரி..” என்றபடி, அவன் தலையைக் கலைத்துவிட்டார்.

அங்கே வந்த ராஜசேகர், “தர்சா, இன்று வேலை முடிந்து வந்ததும் நீ வவுனியா போகவேண்டி வரும் என்று நினைக்கிறேன். அதுவும் இரண்டு நாட்கள் நிற்கிறமாதிரி இருக்கும்.” என்றார்.

அதைக் கேட்டவனின் மனம் வாடியது.

தந்தையின் விவசாய நிலங்களில் விளையும் பொருட்களை வவுனியாவுக்கும் அங்குக் கிடைக்கும் பொருட்களை இங்கும் என்று விற்பனை செய்வதுதான் அவனதும் அமலனதும் தொழில்.

அதற்கு ஏதுவாகக் கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் பெரும் அங்காடிகள் இரண்டு திறந்திருந்தனர். அதன் கணக்கு வழக்குகளை விமலன் பார்த்துக்கொள்ள, அமலனும் தர்சனும் தொழிலைப் பார்த்துக் கொண்டனர்.

விவசாயமும் அதன் விற்பனையும் என்று அது அவர்களின் குடும்பத் தொழிலாகவே இருந்தது.

விமலனுக்குத் திருமணம் ஆகிவிட்டதில் அவன் வவுனியா செல்வதை முடிந்தவரை தடுத்துவிடுவார் ராஜசேகர். அதனால் அமலன் ஒருமுறை போய்வந்தால் அடுத்தமுறை தர்சன் என்று ஓர் ஒழுங்கில் வவுனியா சென்று அங்கிருக்கும் அங்காடியையும் கவனித்துக் கொண்டார்கள் சகோதரர்கள் இருவரும்.

ஏற்கனவே அமலன் சென்று வந்துவிட்டபடியால் தான்தான் இந்தமுறை செல்லவேண்டும் என்பது புரிந்தாலும் வெண்பாவைப் பார்க்காமல் எப்படி இருப்பது என்று சிந்தித்தவன், அதை வெளியே சொல்லமுடியாமல், “சரிப்பா..” என்றான்.

அதைக் கேட்டுக்கொண்டே வந்த வெண்பாவுக்கோ, ‘அப்பாடி.. இரண்டு நாட்களுக்கு இவனைப் பார்க்கவேண்டி வராது..’ என்று நினைக்கவே சந்தோசமாக இருந்தது.

வரப்போகும் இரண்டுநாள் பிரிவை எண்ணியதால் உண்டான தவிப்பில் விழியகற்றாது அவளையே பார்த்தான் தர்சன்.

காதலை நிரப்பி, பிரிவால் தவித்து, நேசத்தை வெளிப்படுத்திய அவன் விழிகளை, முன்தின மாலை போன்றே இப்போதும் வெண்பாவால் எதிர்கொள்ள முடியாமல் போனதில், இவன் எதற்கு இப்படிப் பார்க்கிறான் என்று அவள் மனம் சினம் கொண்டது.

தனிமை கிடைத்தால் இரண்டு வார்த்தை அவளுடன் பேசலாம் என்று அவன் காத்திருக்க, அவளோ அதை முன்கூட்டியே ஊகித்தவளாக ராஜசேகரின் அருகிலேயே அமர்ந்துகொண்டாள்.

அதற்கு மேலும் தாமதிக்க முடியாதவனாக எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு மனமேயின்றி அங்காடிக்குப் புறப்பட்டுச் சென்றான் தர்சன்.

மாலை வேலைமுடிந்து வந்தவனின் விழிகளில் வெண்பா தென்படவே இல்லை. மற்றவர்களுக்குச் சந்தேகம் தோன்றாத வகையில் வீடு, தோட்டம் என்று எல்லா இடமும் அவளைத் தேடிப்பார்த்தவன் அதற்குமேலும் பொறுக்கமுடியாமல், “எங்கேம்மா அத்தையும் வெண்பாவும்?” என்று தாயிடம் கேட்டான்.

“அவர்கள் முதலில் இருந்த வீட்டுக்குப் போய்விட்டார்கள்.” என்றவர், மகனின் முகத்தில் தெரிந்த கேள்வியில், “இந்த வெண்பாதான் ஏதோ பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் இங்கே வந்துவிட்டதைச் சொல்லவில்லையாம் என்று பள்ளிக் கூடத்திலிருந்து வந்த மகியை பிடிவாதமாக இழுத்துக்கொண்டு போய்விட்டாள். பிறகு ஒருநாள் போகலாம் என்று நானும் மகியும் சொன்னதை அவள் காதிலேயே வாங்கவில்லை.” என்றார் மெல்லிய சலிப்புடன்.
 

Vishakini

Moderator
Staff member
தன்னைத் தவிர்ப்பதற்காகவே அப்படிச் செய்திருக்கிறாள் என்று புரிந்ததில் முகம் கடுத்தது அவனுக்கு. ஆத்திரத்துடன் வவுனியாவுக்குக் கிளம்பிச் சென்றான் தர்சன்.

அடுத்தநாள் காலை விமலனும் அமலனும் வேலைக்குச் சென்றுவிட, ராஜசேகர் வீட்டில் இருந்தபொழுதில் பேச்சை ஆரம்பித்தார் மஞ்சுளா.

“வெண்பா, இங்கே வாம்மா..”

மகேஸ்வரியும் அன்று வீட்டில் இருந்ததில் என்னவோ நடக்கப் போகிறது என்று எண்ணி மெல்லிய கலவரத்தில் இருந்த வெண்பாவுக்கு மஞ்சுளா அழைக்கவும் வியர்த்துக்கொட்ட ஆரம்பித்தது.

வந்துவிடக் கூடாது என்று அவள் தவித்த தருணம் வந்துவிட்டதில், இதை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று பயந்துகொண்டே அவர் அருகில் சென்று அமர்ந்தாள்.

அவள் முகத்தில் இருந்த பதட்டத்தைப் பார்த்துவிட்டு மெல்லிய சிரிப்போடு அவளை அணைத்துக்கொண்டார் மஞ்சுளா.

“எதற்கும் பயப்படாதே வெண்பா. உனக்குப் பிடிக்காத எதுவும் இந்த வீட்டில் நடக்காது.” என்றவரின் கூற்றில் மெய்யாகவே சற்றுப் பதட்டம் தணிந்தது அவளுக்கு.

மெல்ல நிமிர்ந்து அமர்ந்தவளின் முகத்தையே பார்த்தபடி, “இப்போது நான் கேட்கும் கேள்விக்கு உண்மையாக நீ பதில் சொல்லவேண்டும். உன் விருப்பம்தான் எங்களுக்கு முக்கியம். யாருக்காகவும் நீ யோசிக்கத் தேவையில்லை. உன் அம்மாவோ, நானோ, மாமாவோ எதுவும் சொல்லமாட்டோம். சரியா?” என்று மீண்டும் அவளுக்குத் தைரியமூட்டினார்.

சரியெனத் தலையசைத்தாள் வெண்பா.

“இப்போது சொல், உனக்கு அமலனைக் கட்டிக்கொள்ள விருப்பமா அல்லது தர்சனைக் கட்டிக்கொள்ள விருப்பமா?” என்று கேட்டார் மஞ்சுளா.

இருவரையுமே விருப்பமில்லை என்று மனதில் உடனேயே தோன்றினாலும் அதை வாய் வழியாகச் சொல்லத் தயங்கி அவள் தலையைக் குனிந்துகொண்டாள்.

மகள் எதையாவது ஏடாகூடமாகச் சொல்லிவிடுவாளோ என்று உள்ளுக்குள் பயந்தபடி மகேஸ்வரி காத்திருந்தார்.

மஞ்சுளாவோ, “எதற்கும் தயங்காமல் சொல்லு வெண்பா. நாங்கள் எதுவுமே நினைக்கமாட்டோம். எனக்கும் உன் மாமாவுக்கும் நீ மருமகளாக வரவேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால் அது உனக்கும் பிடித்தால் மட்டுமே நடக்கும். அமலனையும் தர்சனையும் பிடிக்கவில்லை என்றால் கூடத் தயங்காமல் சொல்லு. உனக்குப் பிடித்தவனாகப் பார்த்து நிச்சயம் கல்யாணம் செய்து வைக்கிறோம்.” என்றார்.

அவரின் பேச்சைக் கேட்டு மனதளவில் குன்றிப் போனாள் வெண்பா. அன்று, தன் விருப்பத்தைக் கேளாமால் சர்வாதிகாரமாக எல்லாவற்றையும் பேசி முடிக்கிறார்களே என்று அவள் அவசரப்பட்டு ஆத்திரப்பட்டதை எண்ணிக் குமைந்தவள், எப்போதும்போல் துடுக்குத்தனத்துடன் அன்று அதை வெளிப்படையாகக் கேட்காமல் விட்டோமே என்று எண்ணி ஆறுதல் கொண்டாள்.

ஆனால், அதற்காக அந்தவீட்டுக்கு அவள் மருமகள் ஆகமுடியாதே!

மனதில் மூண்டிருந்த வெறுப்பும் சிறுவயதில் உண்டாகியிருந்த காயமும் அவள் கண்முன்னால் இப்போதும் அப்படியே நின்றது.

அதுவும், தந்தையை இழந்து இந்த வீட்டுக்கு வந்திருந்த நாட்களில், சொல்லி ஆறுவதற்கு யாருமில்லாத தனிமையில் ‘உன் அத்தை எங்களைப் பாரமாக நினைக்கிறார் கண்ணம்மா’ என்று அவளிடம் சொல்லி அம்மா அழுததும், அவரைப் பார்த்துத் தான் அழுததும் இன்னும் நெஞ்சில் அப்படியே நின்றது.

அதற்கு எல்லாம் காரணமான இந்த அத்தையம்மாள் இன்று திருந்திவிட்டார் என்று அம்மா சொன்னாலும், அவளும் அவள் அம்மாவும் அழுத அழுகைகள் தான் இல்லை என்றாகிவிடுமா? பட்ட துயர்தான் போய்விடுமா?

இல்லையே! பட்டது பட்டதுதானே?

“சொல்லு வெண்பா, உனக்கு யாரைப் பிடித்திருக்கிறது? இப்போது உன் சம்மதத்தை மட்டும்தான் கேட்கிறோம். கல்யாணம் நீ விரும்பியது போல் ஆறுமாதம் கழித்துத்தான் நடக்கும். அதனால் எதற்கும் பயப்படாமல் சொல்லு..”

அவள் தயங்கிக்கொண்டு இருக்கிறாள் என்று எண்ணிப் பேசிய மஞ்சுளா, அவளின் தலையைத் தடவியபடி கேட்டார்.

இந்த அத்தையின் முகத்தைக் கறுக்கச் செய்யவேண்டும் என்றால் அவரின் இரண்டு மகன்களுமே வேண்டாம் என்று சொல்லவேண்டும் என்று எண்ணியபடி நிமிர்ந்தவளின் மூளையில் அந்த எண்ணம் திடீர் என்று பளிச்சிட்டது.

அதில் அவள் முகமோ சட்டென மலர்ந்தது. இதழ்களிலும் ஒரு திருப்தியான புன்னகை..

என்னை இவ்வளவு நாட்களும் என்ன பாடுபடுத்தினாய்..? உனக்கு வைக்கிறேன் ஆப்பு.. என்று கறுவியது அவள் மனம்..
 
Top Bottom