தமிழரசி பத்மினி இருவருமே ஃபிளைட்டில் இருந்து இறங்கிய முதலில் குழப்பத்தில் தான் இருக்கின்றனர் "நம்மை கூப்பிட வர்மன் தானே ...வருவதாக இருந்தது ஆனால் நம்மை ஏன் தனியாக கூட்டி போறாங்க... இவங்க எல்லாரும் யாரு விவேகன் ஏதாவது சொன்னானா? என்று தமிழரசி பாட்டி பத்மினிடம் கேள்வி எழுப்பிக் கொண்டே விஐபி பாதையில் நடந்து கொண்டே இருந்தார்.
உடன் வரும் ஐந்து பேரிடமும் தமிழரசி பாட்டி கேட்டுக் கொண்டே தான் வந்தார் அவர்களோ உங்களை பத்திரமாக கூட்டி வர மட்டுமே எங்களுக்கு உத்தரவு மேடம் என்று மட்டுமே சொல்லிக்கொண்டு அங்கு நின்றிருந்த உயர் ரக காரில் ஏறிட சொன்னார்ஒகள்.
பத்மினியோ
பேசாம அடுத்த வாரம் மாமா கூடவே வந்து இருக்கலாம் அவருக்கு கால் பண்ண முடியல என் பேக் செல் எல்லாம் அவங்க வாங்கிட்டாங்க'
இங்கு விஜய் வருமானம் என்ன நடந்தது என்று தெரியாமல் விவேகனுக்கு கால் செய்தான் சார் பிளைட் லேண்ட் ஆகி 15 நிமிடம் ஆகிவிட்டது. இன்னும் ஆன்ட்டி பாட்டியும் என்ட்ரி கேட்டை தாண்டவே இல்லை என்று விசாரிக்க ஆரம்பித்தான்
விவேகானோ வர்மா "நானும் அவர்களுக்கு கால் செய்து கொண்டே இருக்கேன். பட் அவங்க செல் நாட் ரீச்சபிள் என்று தான் வருது நான் என்ன செய்வது குழப்பத்தில் தான் இருக்கிறேன்" என்றார் .
அவர்கள் வருவது எங்கள் மூன்று பேருக்கும் மட்டுமே தெரியும் சோ கடத்தல் நடக்க வாய்ப்பு 100% இல்லை என்று சொல்லிக்கொண்டே வர்மா நீ கொஞ்சம் பொறு நான் அப்பாவிடமும் மாறனிடமும் பேசிவிட்டு உன்னை அழைக்கிறேன் என்று அழைப்பை துண்டித்தார் விவேகம்
ஜெர்மனியில் உள்ள தந்தையை தந்தை சேரமானை அழைக்க எடுத்த உடனே தந்தை கேட்ட கேள்வியில் தான் கேட்க வந்த கேள்வியும் மறந்து போனார் விவேகன் சேரமான் தாத்தாவோ என்னடா அம்மாவும் பத்துவும் வந்துட்டாங்களா ?ஏன் ஒரு போன் செய்து செய்ய உனக்கு முடியலையோ? என்ற அவரிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான் விவேகன்
காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்தான் பிரின்ஸ் அங்கு விஜய வர்மன் நின்று கொண்டிருந்தான்" சார் எங்கே ? அவசரமா அவரிடம் பேச வேண்டும்" என்று அவரின் அறையில் நுழைந்தான் வர்மன் .
அதே நேரத்தில் அந்த ரெசார்ட் பின்கேட் வழியே உள்ளே நுழைந்தது அந்த உயர் ரக கார் அங்கு உள்ள ரெஸ்ட் ஹவுஸில் உள்ளே நுழைந்தவுடன் கேட் சாத்தப்பட்டது.
அங்கிள் ஆண்டியையும் பாட்டியையும் ஏர்போர்ட் வந்தவுடன் யாரோ 5 பேர் அவங்கள விஐபி பாத வழியை அழைச்சிட்டு
செல்வதை சிசிடிவி கேமராவில் பார்த்தேன் அவர்கள் யாரையாவது உங்களுக்கு பார்த்த நியாபகம் இருக்கா என்று தன் செல்லில் உள்ள பதிவை காட்டினான்
மீண்டும் மீண்டும் ஓட விட்டு பார்த்த பின்னும் எந்த விடையும் கிடைக்கவில்லை மூவருக்கும்
பிரின்ஸின் செல் ஒலித்தது பாஸ் செழியன் பாஸ்தான் கூப்பிடுறாங்க என்ற விவேகனிடம் சொல்ல அவரோ அவன் ஏதாவது கேட்டால் உளறி விடாதே என்று கண்ணால் செய்தி சொல்ல முதல் அழைப்பு முடிந்து இரண்டாம் அழைப்பு ரிங்கானது அதுவும் முடிந்த பின் இப்பொழுது வீடியோ கால் எதுக்கு வீடியோ கால் எப்போதும் எப்போதும் வீடியோ கால் செய்ய மாட்டாரே இது நேத்தபடி அழைப்பை ஏற்றான் பிரின்ஸ் அதில் தெரிந்த காட்சியை கண்டு மூவரும் மூச்சு விட மறந்தது நின்றனர்.
செழியன் பாட்டியின் மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டிருந்த காட்சியும் பத்மினி அவருக்கு ஏதோ ஊட்டிக் கொண்டிருப்பதையும் பார்த்த மூவருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை
பாட்டியோ விவேகா... செழியன் ஏர்போர்ட் வருவான் என்று சொல்லவே இல்லையே? என்று சொல்லுமக்ஷஎன் டேட் ரெசார்ட் கெஸ்ட் ஹவுஸ் என்று சொல்லி போனை கட் செய்துதான் செழியன்.
காடுவெட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகிய கிராமம் இங்குள்ள பச்சையாறு தெளிந்த நீர் முட்டளவு ஓடிக்கொண்டிருக்க அந்த ஆற்றங்கரையில் மணல் ஊத்து தோண்டி தண்ணீர் இரைத்து கொண்டு இருந்தாள் கண்ணம்மா அவள் அடுத்த வீட்டு கலாவிடம் எத்தனை தண்ணீர் பைப்புகள் தெருவுக்கு தெரு இருந்தாலும் ஐயாவுக்கு இந்த தண்ணீரில் அயிரை மீன் சமைச்சாத்தான் பிடிக்கிறது இரண்டு பிடி அதிகம் சாப்பிடுகிறார்கள் என்று சொல்லப்படி கரையில் ஏறி வீடு நோக்கி நடையை எட்ட(வேகமாக )போட்டாள் கண்ணம்மா.
தூரத்தில் வரும்போது வீட்டின் வெளி திண்ணையில் சண்முகவேல் காரில் இருந்து இறக்கி வைக்கும் சாமான்களை பார்த்து சிரித்துக் கொண்டே இப்பொழுதுதான் வந்தீங்களா? அண்ணா ஐயா அப்போதே உங்கள தேடுனாங்க வாங்க என்றபடி வீட்டின் உள்ளே உள்ள முற்றத்தில் சென்று தண்ணீர் குடத்தை இறக்கி வைத்து விட்டு சமையல் அறை சென்று மோர் எடுத்துக்கொண்டு சண்முகத்திடம் வந்தார், அவரும் வெளியில் உள்ள முற்றத்தில் காலை கழுவி விட்டு உள்ளே வந்து மோரை வாங்கி பருகியபடி அய்யா எங்கே என்று மெதுவாக கேட்டார்?.
வேலா நான் இங்க இருக்கிறேன் வா? என்றபடி வெளித்தோட்டத்தில் இருந்து கம்பீரமாக அழைத்தார் பாஸ்கரவர்மன்.