அத்தியாயம்-12
கோவிலுக்குச் சென்ற மகளுக்காக காத்திருந்து களைத்த மரகதத்தின் மனதில் கலவரம் குடிகொண்டது. இப்படி இருட்டும் வரை கோவிலிலேயே இருக்க மாட்டாளே என்று பயந்தவர், தன் பக்கத்து வீட்டுக்கதவைப் பதட்டத்துடன் தட்டினார்.
கதவு தட்டும் ஓசையே ஒருவித பயத்தைக் கொடுக்க, ஜன்னலால் எட்டிப் பார்த்துவிட்டு, அவசரமாக வந்து கதவைத் திறந்தாள் தங்கம்.
"தங்கம், கவி கோவிலுக்கு போனாள். இன்னும் வீட்டுக்கு வரவில்லை.. எனக்குப் பயமாக இருக்கிறது தங்கம்..." கலங்கிய கண்களும் பரிதவிப்புமாக நின்றார் மரகதம்.
"என்னது கவியைக் காணவில்லையா? எங்கே போனாள் மரகதமக்கா?"
"கோவிலுக்கு போனாள். இன்னும் காணவில்லை. இவளுடன் மல்லுக்கட்டியே என் சீவன் போகிறது. எங்கு போனாள் என்றே தெரியவில்லை.."
"பதறாதீர்கள் அக்கா! அவளோடு படிப்பவர்களுடன் பேசிக்கொண்டு இருப்பாள் அல்லது விளையாடிக்கொண்டு இருப்பாள். அவள் எப்போதும் அப்படித்தானே..."
பக்கத்து வீட்டிலேயே இருந்து எப்போதும் அவளை பார்த்துக்கொண்டு இருப்பவள்தானே தங்கம்....
"என்னதான் விளையாட்டு என்றாலும் இவ்வளவு நேரம் வராமல் இருக்கமாட்டாள். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இன்று வீட்டுக்கு வரட்டும் அவள்! அடித்தே காலை முறித்துவிடுகிறேன். கொஞ்சம் கூடப் பயம் கிடையாது அவளுக்கு.." மகளைக் காணாத தவிப்பில் கோபம் கூட வந்தது அவருக்கு!
"சில நேரம் பூசை இன்னும் முடியவில்லையோ தெரியவி...." என்றபடி நேரத்தைப் பார்த்த தங்கம், அது எட்டு என்று காட்டவும், "இல்லையே அக்கா. இவ்வளவு நேரத்துக்கு ஐயரே கோவிலைப் பூட்டிவிட்டு வீட்டுக்கு போயிருப்பாரே..." என்றாள். இப்போது அவளையும் கலவரம் தொற்றிக்கொண்டது.
"ஒரு நாளும் இப்படிச் செய்யமாட்டாள். இன்று என்ன நடந்தது என்று தெரியவில்லை. இந்த பெண்ணோடு நான் படும் பாடு..." என்றவரின் குரல் கரகரக்க, கண்கள் கண்ணீரைக் கொட்டியது.
மாலையில் பாவாடை தாவணியில் தயாராகி வந்தவளைப் பார்த்து, பெரிய பெண்ணைப் போல் இருக்கிறாளே என்று நினைத்தேனே.... என் கண்ணே பட்டுவிட்டதோ என் மகளுக்கு. மருகியது அவர் உள்ளம்!
தங்கத்துக்கும் என்ன செய்வது என்று புரிய மறுத்தது. கவி தோழிகளைக் கண்டால் தன்னை மறந்து விளையாடுபவள் தான். ஆனாலும் இருட்டும்வரை இருக்கமாட்டாள். இருட்டுக்குப் பயமில்லாதபோதும் தாயின் அடிக்கு மிகுந்த பயம் அவளுக்கு!
"அழவேண்டாம் அக்கா. அப்படி எதுவும் நடக்காது. பயபடாதீர்கள்."
"தங்கம், வேலனை ஒருக்காள் வரச் சொல்கிறாயா? சைக்கிளில் கோவில்வரை போய்ப் பார்த்துவரலாம். எனக்கு நெஞ்சு படபடக்கிறது.." மனதின் வலி தாங்காது தவித்தது அந்தத் தாயுள்ளம்!
"சரிக்கா. கொஞ்சம் பொறுங்கள். உள்ளே வாருங்கள். கவிக்கு ஒன்றும் நடக்காது. பயபடதீர்கள். வந்துவிடுவாள்..." என்று தங்கம் ஆறுதல் சொல்லவும், 'வந்துவிடவேண்டும். என் மகள் என்னிடமே வந்துவிடவேண்டும்! அவளுக்கு எதுவுமே நடந்துவிட கூடாது.....' என்று தனக்குள்ளேயே தவித்தார் அவர்.
உள்ளே சென்ற தங்கம், தன் கணவன் வேலனிடம் விஷயத்தைச் சொல்லிக் கூட்டி வரவும், "மரகதம் அக்கா, கவி ஆடிப்பாடி நடந்துவருவாளாய் இருக்கும். மற்றும்படி நம் ஊரில் அப்படி என்னதான் நடக்க இருக்கிறது. ஒன்றும் நடக்காது, அதனால் பயப்படாதீர்கள்!" என்றபடி வேலன் சைக்கிளை எடுத்தான்.
"என்னையும் கூட்டிப் போகிறாயா வேலா. அவளைக் கண்ணால் கண்டால் தான் எனக்கு இந்தப் பதைப்புப் போகும்..." என்று கண் கலங்கக் கெஞ்சியவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது அவனுக்கு.
“வாருங்கள், கூட்டிப் போகிறேன்..." என்று அவன் சொல்லவும்,
"அவனவன் இரண்டு மூன்று பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு நிம்மதியாக இருக்கிறான். நான் இவளொருத்தியைப் பெற்றுவிட்டு படும்பாடு இருகிறதே..." ஆற்றாமையோடு புலம்பியபடி வேலனின் சைக்கிளில் ஏறிக்கொண்டார் மரகதம்.
போகும் வழி முழுவதும் அந்த இருட்டில் முடிந்தவரை கண்களைச் சுழற்றி மகளைத் தேடிக்கொண்டு, "கவி.... கவி.... கவி..." என்று அழைத்தபடியே சென்றார் மரகதம்.
என் மகள் கிடைத்துவிடவேண்டும். அவளுக்கு ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது என்று உருப் போட்டபடியே இருந்தது அவர் மனது.
அவர் வாழ்வின் ஒரே பற்று அவள்! அவர் உயிர் வாழ்வதன் ஒரே அர்த்தமும் அவள்! அவரின் சுவாசம் முதல் உயிர் துடிப்பு வரை அனைத்தும் மையம் கொள்வது அவளிடம் மட்டுமே! அப்படியானவளைக் காணவில்லை என்றால்.. தவித்தது அவர் இதயம்!
வழியில் அவளைக் காணாது கோவிலுக்குச் சென்றவர்களை பூட்டிய கோவில் கதவே வரவேற்றது. வேலன் வழிகாட்ட, அவன் பின்னால் கலவரம் சூழ கண்ணீர் வடிய ஐயரின் வீட்டுக்கு விரைந்தார் மரகதம்.
அங்கே ஐயரிடம் வேலன் கேட்கவும், "இல்லையே, இன்று அந்தப் பெண் வரவில்லையே..." என்றார் ஐயர்.
"அவள் ஒவ்வொரு வெள்ளியும் வருவாளே ஐயா. இன்றும் கோவிலுக்கு வந்தவள் வீட்டுக்கு இன்னும் வந்து சேரவில்லை..." என்று மரகதம் சொல்லவும்,
"இல்லையம்மா. உங்கள் மகளை எனக்கு நன்றாகத் தெரியும்! அவள் இன்று கோவிலுக்கு வரவில்லை!" என்று உறுதியாகச் சொன்னார் ஐயர்.
"அப்படியானால் எங்கே போனாள்...?"
ஐயர் என்ன பதிலை சொல்வார்......
அந்தநொடியில் பெண் பிள்ளைகளுக்கு உலகில் நடக்கும் அனைத்து அசம்பாவிதமும் மரகதத்தின் கண்முன்னால் வந்துபோனது. ஐயோ..! என் மகளுக்கு ஏதாவது நடந்துவிட்டதோ.....
கண்கள் இருட்ட, உடல் நடுங்க அப்படியே நிலத்தில் மடிந்து சரிந்தவரின் கண்களோ கண்ணீரைக் கொட்ட, இதுவரை கடவுள்களை வெறுத்து ஒதுக்கியவரின் கைகள் நடுக்கத்துடன் அம்மனை நோக்கிக் கூப்பியது.
"அம்மா தாயே, என் மகள் எனக்குக் கிடைத்துவிடவேண்டும்! என் வாழ்க்கைதான் நாசமாகிப்போனது என்றால் என் மகளின் வாழ்க்கையிலும் விளையாடி விடாதே. அவளாவது நன்றாக வாழவேண்டும்! அவளைப் பொத்திப் பொத்தி வளர்த்தேனே.. இப்படித் தொலைத்துவிட்டு நிற்கவா?"
"என்னை அவள் அப்பன் கைவிட்டபோது கூட வாழ்ந்துகாட்டுவேன் என்று சொல்ல உடலிலும் மனதிலும் பலம் இருந்தது. இன்று என் மகள் இல்லாமல் என்னால் முடியாது! எனக்கு என் மகள் வேண்டும். பெற்ற வயிறு பற்றி எரிகிறதே.... என் மகளை என் கண்ணில் காட்டிவிடு. அம்மா தாயே அவளுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது.."
"அவள் நன்றாக வாழ்வதை என் கண்ணால் பார்த்துவிட்டுத்தான் நான் கண்மூட வேண்டும் என்று கனவு கண்டேனே... எல்லாமே பொய்யாகப் போய்விட்டதா.... ஐயோ... எனக்கு மட்டும் ஏன் இப்படிச் சோதனைகளையும் வேதனைகளையும் மட்டுமே தருகிறாய்? என் பிள்ளையைக் காப்பாற்று! தாயே என் பிள்ளையை காப்பாற்று..." என்று கதறியழுதார் மரகதம்.
பாத்திருந்த வேலனுக்கும் ஐயருக்குமே கண்களில் கண்ணீர் வழிந்தது. எப்போதும் மகளைத் திட்டும் இந்த பெண்மணி மகளில் இவ்வளவு பாசம் வைத்திருக்கிறாரா என்று வேலனுக்கு மலைப்பாகக் கூட இருந்தது!
பாசத்தை மட்டுமே காட்ட தெரிந்த ஒரே தெய்வம் தாய் மட்டுமே! அதைக் காட்டும் வழிகள் வேண்டுமானால் வேறுபடலாமே ஒழிய, பாசம் வேறுபடாது என்று புரிந்தது வேலனுக்கு.
"அம்மா, அழாதீர்கள்! கவிக்கு ஒன்றும் ஆகாது. அப்படி எதுவும் நடக்க அவள் கும்பிடும் அம்மன் விடமாட்டாள். அழாதீர்கள்..." என்று ஐயர் சொல்லவும்,
"என் மகளுக்கு ஒன்றும் நடந்திருக்காது இல்லையா? அவள் என்னிடம் வந்துவிடுவாள் தானே..?" என்று உயிரைக் கண்களில் தேக்கி, நல்ல பதிலைச் சொல் என்கிற மன்றாடலை முகத்தில் காட்டிக் கேட்ட அந்தத் தாயின் முகத்தைப் பார்க்கமுடியவில்லை ஐயரால்.
"கட்டாயம் அம்மா! மகள் நிச்சயம் உங்களிடம் வந்துவிடுவாள். அழாமல் எழுந்திருங்கள். சிலநேரம் அவள் வீட்டுக்கு போயிருக்கலாம். கவலைப் படாதீர்கள்..."
ஐயர் கவி வீட்டுக்கு போயிருப்பாள் என்றதும் வேகமாக எழுந்த மரகதம், "ஆமாம்! அவள் இப்போது வீட்டுக்கு வந்திருப்பாள்! நான்தான் விசரி மாதிரி இங்கே வந்துவிட்டேன்!" என்று புலம்பியவருக்கு எங்கிருந்துதான் அவ்வளவு பலம் வந்ததோ வேகவேகமாக வீடு நோக்கி நடந்தார்.
"அக்கா, மரகதம் அக்கா, பொறுங்கள்! சைக்கிளில் போகலாம்..." என்ற வேலனின் கத்தல் அவரின் காதில் விழவே இல்லை. ஐயரிடம் சொல்லிவிட்டு சைக்கிளை வேகமாக மிதித்து, அவரின் காலடியில் நிறுத்திய வேலன், "ஏறுங்கள் அக்கா. சைக்கிளில் போனால் வேகமாகப் போய்விடலாம்..." என்றான்.
உடனேயே அவன் சைக்கிளில் ஏறிக் கொண்டவர், "வேகமாகப் போ வேலா. பிள்ளை என்னைக் காணவில்லை என்று தேடப்போகிறாள்..." என்றார் தவிப்புடன்.
அங்கே கவி இல்லாவிட்டால் இந்த அக்கா அதைத் தாங்குவாரா என்று யோசனையாக இருந்தது வேலனுக்கு. அவனுக்குத் தெரியுமே அவரைப் பற்றி! எப்போதும் மகளைத் திட்டினாலும், அவரின் பேச்சில் அவள் மட்டுமே இருப்பாள்.
அதைத் தாண்டினால் அவரின் சமையல் பற்றி இருக்கும். அதுகூட மகளுக்கு இந்த உணவு பிடிக்கும் என்பதில் வந்து முடியும். அப்படியானவரை எப்படிச் சமாளிப்பது, தப்பித்தவறி கவி இன்னும் வராவிட்டால் அவளை எப்படிக் கண்டு பிடிப்பது? என்ன செய்வது என்றே தெரியவில்லை அவனுக்கு.
ச்சே...இந்தக் கவி எங்கே போய்த் தொலைந்தாள் என்று கோபம் கூட வந்தது. அந்தளவுக்கு, வேலை செய்து மெலிந்த அந்த வயதான மேனி நடுங்க, முடிந்தவரை குரலை உயர்த்தி மகளின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டபடி, கண்களில் கண்ணீர் வழிய வந்த மரகதத்தின் கோலம் அவனை வாட்டியது.
வீட்டுக்கு வந்தால் அங்கேயும் இல்லை கவி! மொத்தமாக ஓய்ந்து போனார் அவர்!
தங்கத்தின் கண்கள் கேட்ட கேள்விக்கு, வேலனும் கண்ணாலேயே 'அவள் அங்கும் இல்லை' என்று பதில் சொன்னான்.
"இன்னும் அவள் வரவில்லையே வேலா...." என்றவரின் பரிதாபக்குரலை கேட்க முடியவில்லை அவனால்.
"கட்டாயம் வந்துவிடுவாள் அக்கா, பயப்படாதீர்கள்..."
வேறு என்னதான் சொல்வது அவனும்?
வேலனின் முகத்தில் தூக்கமும் வேலைக் களைப்பும் அப்பட்டமாகத் தெரிந்தது. பின்னே, இரத்தத்தை வேர்வையாகச் சிந்தி கடுமையாக உழைக்கும் உழைப்பாளிகள் கூட்டம் அல்லவா அவர்கள்! ஆனாலும் அவனும் தங்கமும் அவருக்கு அருகிலேயே நின்றார்கள். இனி என்ன செய்வது என்று தெரியாமல்.
இருட்டிவிட்டது என்று வேலனும் தங்கமும் சொன்னதைக் கேட்காது, டோர்ச்லைட்டை கையில் எடுத்துக்கொண்டு அந்தச் சின்னக் கிராமத்தையே சுற்றி வந்தார் மரகதம்.
வேலனும் மனம் கேட்காது அந்தக் கிராமத்தையே சைக்கிளில் ஒரு முறை சுற்றி வந்தான். கவி கிடைத்த பாடு இல்லை!
மகள் செல்லக்கூடும் என்று நினைத்த இடமெல்லாம் ஒருமுறைக்கு இருமுறையாக சுற்றி வந்தவரின் உடலோ சோர்ந்து விழுந்தது. உழைத்து ஓடாய்த் தேய்ந்த உடல் அல்லவா..... இதற்கு மேல் எங்கே தேடுவது என்று தெரியாமல் வீட்டு வாசலிலேயே குந்தியவரின் கண்களில் கண்ணீர் கூட வற்றிப் போயிருந்தது.
என் மகளைத் தொலைத்துவிட்டேனே. எங்கே எப்படி யாரிடம் மாட்டித் தவிக்கிறாளோ. ஐகடவுளே என் மகளை என் கண்ணில் காட்டு!
அடித்தடித்தே வளர்த்தேனே. அதுக்குத் தண்டனையாக என் மகளை என்னிடம் இருந்து பிரித்துவிடாதே. நான் விட்ட பிழையை அவள் விட்டுவிடக்கூடாது என்றுதானே கண்டித்தேன்! அதற்கு இதுதான் தண்டனையா என்று ஊமையாக அழுதது அவர் உள்ளம்!
வாசலிலேயே அமர்ந்து இருந்தவர், மெல்ல மெல்லத் தன்னை அறியாமலேயே அநாதையாக நிலத்திலேயே சரிந்தார். கண்கள் மட்டும் உடலின் மொத்த உயிர்ப்பையும் தேக்கி வாசலிலேயே தவம் கிடந்தது மகளுக்காக!
அவருக்கு அருகிலேயே அமர்ந்துகொண்ட தங்கமும் வேலனும் கூட இருந்த இடத்திலேயே சரிந்து உறங்கிவிட்டனர். அன்பை மட்டுமே பண்பாகக் கொண்ட உள்ளங்கள்!
சொந்தமின்றி, கட்டிய கணவன் இன்றி, மகளுக்காக மகளை மட்டுமே உறவாக எண்ணி வாழ்ந்த அந்த உயிர், துடிக்கத் துடிக்க உறக்கமின்றிக் கிடந்தது அந்த மண்ணில்!
அவர் பெற்ற மகளோ எப்போது தூங்கினாள் என்று தெரியாது தூங்கிக்கொண்டு இருந்தாள் விடுதியறை கட்டிலில்.
காலைப்பொழுது நன்றாக புலர்ந்தபின்பே ரவிக்கு முழிப்பு வந்தது. தன்மீது கனமாக
ஏதோ ஒன்று இருக்கவும், படக்கென்று விழிகளைத் திறந்து பார்த்தவனின் நெஞ்சில், தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தாள் கவி.
கோவிலுக்குச் சென்ற மகளுக்காக காத்திருந்து களைத்த மரகதத்தின் மனதில் கலவரம் குடிகொண்டது. இப்படி இருட்டும் வரை கோவிலிலேயே இருக்க மாட்டாளே என்று பயந்தவர், தன் பக்கத்து வீட்டுக்கதவைப் பதட்டத்துடன் தட்டினார்.
கதவு தட்டும் ஓசையே ஒருவித பயத்தைக் கொடுக்க, ஜன்னலால் எட்டிப் பார்த்துவிட்டு, அவசரமாக வந்து கதவைத் திறந்தாள் தங்கம்.
"தங்கம், கவி கோவிலுக்கு போனாள். இன்னும் வீட்டுக்கு வரவில்லை.. எனக்குப் பயமாக இருக்கிறது தங்கம்..." கலங்கிய கண்களும் பரிதவிப்புமாக நின்றார் மரகதம்.
"என்னது கவியைக் காணவில்லையா? எங்கே போனாள் மரகதமக்கா?"
"கோவிலுக்கு போனாள். இன்னும் காணவில்லை. இவளுடன் மல்லுக்கட்டியே என் சீவன் போகிறது. எங்கு போனாள் என்றே தெரியவில்லை.."
"பதறாதீர்கள் அக்கா! அவளோடு படிப்பவர்களுடன் பேசிக்கொண்டு இருப்பாள் அல்லது விளையாடிக்கொண்டு இருப்பாள். அவள் எப்போதும் அப்படித்தானே..."
பக்கத்து வீட்டிலேயே இருந்து எப்போதும் அவளை பார்த்துக்கொண்டு இருப்பவள்தானே தங்கம்....
"என்னதான் விளையாட்டு என்றாலும் இவ்வளவு நேரம் வராமல் இருக்கமாட்டாள். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இன்று வீட்டுக்கு வரட்டும் அவள்! அடித்தே காலை முறித்துவிடுகிறேன். கொஞ்சம் கூடப் பயம் கிடையாது அவளுக்கு.." மகளைக் காணாத தவிப்பில் கோபம் கூட வந்தது அவருக்கு!
"சில நேரம் பூசை இன்னும் முடியவில்லையோ தெரியவி...." என்றபடி நேரத்தைப் பார்த்த தங்கம், அது எட்டு என்று காட்டவும், "இல்லையே அக்கா. இவ்வளவு நேரத்துக்கு ஐயரே கோவிலைப் பூட்டிவிட்டு வீட்டுக்கு போயிருப்பாரே..." என்றாள். இப்போது அவளையும் கலவரம் தொற்றிக்கொண்டது.
"ஒரு நாளும் இப்படிச் செய்யமாட்டாள். இன்று என்ன நடந்தது என்று தெரியவில்லை. இந்த பெண்ணோடு நான் படும் பாடு..." என்றவரின் குரல் கரகரக்க, கண்கள் கண்ணீரைக் கொட்டியது.
மாலையில் பாவாடை தாவணியில் தயாராகி வந்தவளைப் பார்த்து, பெரிய பெண்ணைப் போல் இருக்கிறாளே என்று நினைத்தேனே.... என் கண்ணே பட்டுவிட்டதோ என் மகளுக்கு. மருகியது அவர் உள்ளம்!
தங்கத்துக்கும் என்ன செய்வது என்று புரிய மறுத்தது. கவி தோழிகளைக் கண்டால் தன்னை மறந்து விளையாடுபவள் தான். ஆனாலும் இருட்டும்வரை இருக்கமாட்டாள். இருட்டுக்குப் பயமில்லாதபோதும் தாயின் அடிக்கு மிகுந்த பயம் அவளுக்கு!
"அழவேண்டாம் அக்கா. அப்படி எதுவும் நடக்காது. பயபடாதீர்கள்."
"தங்கம், வேலனை ஒருக்காள் வரச் சொல்கிறாயா? சைக்கிளில் கோவில்வரை போய்ப் பார்த்துவரலாம். எனக்கு நெஞ்சு படபடக்கிறது.." மனதின் வலி தாங்காது தவித்தது அந்தத் தாயுள்ளம்!
"சரிக்கா. கொஞ்சம் பொறுங்கள். உள்ளே வாருங்கள். கவிக்கு ஒன்றும் நடக்காது. பயபடதீர்கள். வந்துவிடுவாள்..." என்று தங்கம் ஆறுதல் சொல்லவும், 'வந்துவிடவேண்டும். என் மகள் என்னிடமே வந்துவிடவேண்டும்! அவளுக்கு எதுவுமே நடந்துவிட கூடாது.....' என்று தனக்குள்ளேயே தவித்தார் அவர்.
உள்ளே சென்ற தங்கம், தன் கணவன் வேலனிடம் விஷயத்தைச் சொல்லிக் கூட்டி வரவும், "மரகதம் அக்கா, கவி ஆடிப்பாடி நடந்துவருவாளாய் இருக்கும். மற்றும்படி நம் ஊரில் அப்படி என்னதான் நடக்க இருக்கிறது. ஒன்றும் நடக்காது, அதனால் பயப்படாதீர்கள்!" என்றபடி வேலன் சைக்கிளை எடுத்தான்.
"என்னையும் கூட்டிப் போகிறாயா வேலா. அவளைக் கண்ணால் கண்டால் தான் எனக்கு இந்தப் பதைப்புப் போகும்..." என்று கண் கலங்கக் கெஞ்சியவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது அவனுக்கு.
“வாருங்கள், கூட்டிப் போகிறேன்..." என்று அவன் சொல்லவும்,
"அவனவன் இரண்டு மூன்று பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு நிம்மதியாக இருக்கிறான். நான் இவளொருத்தியைப் பெற்றுவிட்டு படும்பாடு இருகிறதே..." ஆற்றாமையோடு புலம்பியபடி வேலனின் சைக்கிளில் ஏறிக்கொண்டார் மரகதம்.
போகும் வழி முழுவதும் அந்த இருட்டில் முடிந்தவரை கண்களைச் சுழற்றி மகளைத் தேடிக்கொண்டு, "கவி.... கவி.... கவி..." என்று அழைத்தபடியே சென்றார் மரகதம்.
என் மகள் கிடைத்துவிடவேண்டும். அவளுக்கு ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது என்று உருப் போட்டபடியே இருந்தது அவர் மனது.
அவர் வாழ்வின் ஒரே பற்று அவள்! அவர் உயிர் வாழ்வதன் ஒரே அர்த்தமும் அவள்! அவரின் சுவாசம் முதல் உயிர் துடிப்பு வரை அனைத்தும் மையம் கொள்வது அவளிடம் மட்டுமே! அப்படியானவளைக் காணவில்லை என்றால்.. தவித்தது அவர் இதயம்!
வழியில் அவளைக் காணாது கோவிலுக்குச் சென்றவர்களை பூட்டிய கோவில் கதவே வரவேற்றது. வேலன் வழிகாட்ட, அவன் பின்னால் கலவரம் சூழ கண்ணீர் வடிய ஐயரின் வீட்டுக்கு விரைந்தார் மரகதம்.
அங்கே ஐயரிடம் வேலன் கேட்கவும், "இல்லையே, இன்று அந்தப் பெண் வரவில்லையே..." என்றார் ஐயர்.
"அவள் ஒவ்வொரு வெள்ளியும் வருவாளே ஐயா. இன்றும் கோவிலுக்கு வந்தவள் வீட்டுக்கு இன்னும் வந்து சேரவில்லை..." என்று மரகதம் சொல்லவும்,
"இல்லையம்மா. உங்கள் மகளை எனக்கு நன்றாகத் தெரியும்! அவள் இன்று கோவிலுக்கு வரவில்லை!" என்று உறுதியாகச் சொன்னார் ஐயர்.
"அப்படியானால் எங்கே போனாள்...?"
ஐயர் என்ன பதிலை சொல்வார்......
அந்தநொடியில் பெண் பிள்ளைகளுக்கு உலகில் நடக்கும் அனைத்து அசம்பாவிதமும் மரகதத்தின் கண்முன்னால் வந்துபோனது. ஐயோ..! என் மகளுக்கு ஏதாவது நடந்துவிட்டதோ.....
கண்கள் இருட்ட, உடல் நடுங்க அப்படியே நிலத்தில் மடிந்து சரிந்தவரின் கண்களோ கண்ணீரைக் கொட்ட, இதுவரை கடவுள்களை வெறுத்து ஒதுக்கியவரின் கைகள் நடுக்கத்துடன் அம்மனை நோக்கிக் கூப்பியது.
"அம்மா தாயே, என் மகள் எனக்குக் கிடைத்துவிடவேண்டும்! என் வாழ்க்கைதான் நாசமாகிப்போனது என்றால் என் மகளின் வாழ்க்கையிலும் விளையாடி விடாதே. அவளாவது நன்றாக வாழவேண்டும்! அவளைப் பொத்திப் பொத்தி வளர்த்தேனே.. இப்படித் தொலைத்துவிட்டு நிற்கவா?"
"என்னை அவள் அப்பன் கைவிட்டபோது கூட வாழ்ந்துகாட்டுவேன் என்று சொல்ல உடலிலும் மனதிலும் பலம் இருந்தது. இன்று என் மகள் இல்லாமல் என்னால் முடியாது! எனக்கு என் மகள் வேண்டும். பெற்ற வயிறு பற்றி எரிகிறதே.... என் மகளை என் கண்ணில் காட்டிவிடு. அம்மா தாயே அவளுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது.."
"அவள் நன்றாக வாழ்வதை என் கண்ணால் பார்த்துவிட்டுத்தான் நான் கண்மூட வேண்டும் என்று கனவு கண்டேனே... எல்லாமே பொய்யாகப் போய்விட்டதா.... ஐயோ... எனக்கு மட்டும் ஏன் இப்படிச் சோதனைகளையும் வேதனைகளையும் மட்டுமே தருகிறாய்? என் பிள்ளையைக் காப்பாற்று! தாயே என் பிள்ளையை காப்பாற்று..." என்று கதறியழுதார் மரகதம்.
பாத்திருந்த வேலனுக்கும் ஐயருக்குமே கண்களில் கண்ணீர் வழிந்தது. எப்போதும் மகளைத் திட்டும் இந்த பெண்மணி மகளில் இவ்வளவு பாசம் வைத்திருக்கிறாரா என்று வேலனுக்கு மலைப்பாகக் கூட இருந்தது!
பாசத்தை மட்டுமே காட்ட தெரிந்த ஒரே தெய்வம் தாய் மட்டுமே! அதைக் காட்டும் வழிகள் வேண்டுமானால் வேறுபடலாமே ஒழிய, பாசம் வேறுபடாது என்று புரிந்தது வேலனுக்கு.
"அம்மா, அழாதீர்கள்! கவிக்கு ஒன்றும் ஆகாது. அப்படி எதுவும் நடக்க அவள் கும்பிடும் அம்மன் விடமாட்டாள். அழாதீர்கள்..." என்று ஐயர் சொல்லவும்,
"என் மகளுக்கு ஒன்றும் நடந்திருக்காது இல்லையா? அவள் என்னிடம் வந்துவிடுவாள் தானே..?" என்று உயிரைக் கண்களில் தேக்கி, நல்ல பதிலைச் சொல் என்கிற மன்றாடலை முகத்தில் காட்டிக் கேட்ட அந்தத் தாயின் முகத்தைப் பார்க்கமுடியவில்லை ஐயரால்.
"கட்டாயம் அம்மா! மகள் நிச்சயம் உங்களிடம் வந்துவிடுவாள். அழாமல் எழுந்திருங்கள். சிலநேரம் அவள் வீட்டுக்கு போயிருக்கலாம். கவலைப் படாதீர்கள்..."
ஐயர் கவி வீட்டுக்கு போயிருப்பாள் என்றதும் வேகமாக எழுந்த மரகதம், "ஆமாம்! அவள் இப்போது வீட்டுக்கு வந்திருப்பாள்! நான்தான் விசரி மாதிரி இங்கே வந்துவிட்டேன்!" என்று புலம்பியவருக்கு எங்கிருந்துதான் அவ்வளவு பலம் வந்ததோ வேகவேகமாக வீடு நோக்கி நடந்தார்.
"அக்கா, மரகதம் அக்கா, பொறுங்கள்! சைக்கிளில் போகலாம்..." என்ற வேலனின் கத்தல் அவரின் காதில் விழவே இல்லை. ஐயரிடம் சொல்லிவிட்டு சைக்கிளை வேகமாக மிதித்து, அவரின் காலடியில் நிறுத்திய வேலன், "ஏறுங்கள் அக்கா. சைக்கிளில் போனால் வேகமாகப் போய்விடலாம்..." என்றான்.
உடனேயே அவன் சைக்கிளில் ஏறிக் கொண்டவர், "வேகமாகப் போ வேலா. பிள்ளை என்னைக் காணவில்லை என்று தேடப்போகிறாள்..." என்றார் தவிப்புடன்.
அங்கே கவி இல்லாவிட்டால் இந்த அக்கா அதைத் தாங்குவாரா என்று யோசனையாக இருந்தது வேலனுக்கு. அவனுக்குத் தெரியுமே அவரைப் பற்றி! எப்போதும் மகளைத் திட்டினாலும், அவரின் பேச்சில் அவள் மட்டுமே இருப்பாள்.
அதைத் தாண்டினால் அவரின் சமையல் பற்றி இருக்கும். அதுகூட மகளுக்கு இந்த உணவு பிடிக்கும் என்பதில் வந்து முடியும். அப்படியானவரை எப்படிச் சமாளிப்பது, தப்பித்தவறி கவி இன்னும் வராவிட்டால் அவளை எப்படிக் கண்டு பிடிப்பது? என்ன செய்வது என்றே தெரியவில்லை அவனுக்கு.
ச்சே...இந்தக் கவி எங்கே போய்த் தொலைந்தாள் என்று கோபம் கூட வந்தது. அந்தளவுக்கு, வேலை செய்து மெலிந்த அந்த வயதான மேனி நடுங்க, முடிந்தவரை குரலை உயர்த்தி மகளின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டபடி, கண்களில் கண்ணீர் வழிய வந்த மரகதத்தின் கோலம் அவனை வாட்டியது.
வீட்டுக்கு வந்தால் அங்கேயும் இல்லை கவி! மொத்தமாக ஓய்ந்து போனார் அவர்!
தங்கத்தின் கண்கள் கேட்ட கேள்விக்கு, வேலனும் கண்ணாலேயே 'அவள் அங்கும் இல்லை' என்று பதில் சொன்னான்.
"இன்னும் அவள் வரவில்லையே வேலா...." என்றவரின் பரிதாபக்குரலை கேட்க முடியவில்லை அவனால்.
"கட்டாயம் வந்துவிடுவாள் அக்கா, பயப்படாதீர்கள்..."
வேறு என்னதான் சொல்வது அவனும்?
வேலனின் முகத்தில் தூக்கமும் வேலைக் களைப்பும் அப்பட்டமாகத் தெரிந்தது. பின்னே, இரத்தத்தை வேர்வையாகச் சிந்தி கடுமையாக உழைக்கும் உழைப்பாளிகள் கூட்டம் அல்லவா அவர்கள்! ஆனாலும் அவனும் தங்கமும் அவருக்கு அருகிலேயே நின்றார்கள். இனி என்ன செய்வது என்று தெரியாமல்.
இருட்டிவிட்டது என்று வேலனும் தங்கமும் சொன்னதைக் கேட்காது, டோர்ச்லைட்டை கையில் எடுத்துக்கொண்டு அந்தச் சின்னக் கிராமத்தையே சுற்றி வந்தார் மரகதம்.
வேலனும் மனம் கேட்காது அந்தக் கிராமத்தையே சைக்கிளில் ஒரு முறை சுற்றி வந்தான். கவி கிடைத்த பாடு இல்லை!
மகள் செல்லக்கூடும் என்று நினைத்த இடமெல்லாம் ஒருமுறைக்கு இருமுறையாக சுற்றி வந்தவரின் உடலோ சோர்ந்து விழுந்தது. உழைத்து ஓடாய்த் தேய்ந்த உடல் அல்லவா..... இதற்கு மேல் எங்கே தேடுவது என்று தெரியாமல் வீட்டு வாசலிலேயே குந்தியவரின் கண்களில் கண்ணீர் கூட வற்றிப் போயிருந்தது.
என் மகளைத் தொலைத்துவிட்டேனே. எங்கே எப்படி யாரிடம் மாட்டித் தவிக்கிறாளோ. ஐகடவுளே என் மகளை என் கண்ணில் காட்டு!
அடித்தடித்தே வளர்த்தேனே. அதுக்குத் தண்டனையாக என் மகளை என்னிடம் இருந்து பிரித்துவிடாதே. நான் விட்ட பிழையை அவள் விட்டுவிடக்கூடாது என்றுதானே கண்டித்தேன்! அதற்கு இதுதான் தண்டனையா என்று ஊமையாக அழுதது அவர் உள்ளம்!
வாசலிலேயே அமர்ந்து இருந்தவர், மெல்ல மெல்லத் தன்னை அறியாமலேயே அநாதையாக நிலத்திலேயே சரிந்தார். கண்கள் மட்டும் உடலின் மொத்த உயிர்ப்பையும் தேக்கி வாசலிலேயே தவம் கிடந்தது மகளுக்காக!
அவருக்கு அருகிலேயே அமர்ந்துகொண்ட தங்கமும் வேலனும் கூட இருந்த இடத்திலேயே சரிந்து உறங்கிவிட்டனர். அன்பை மட்டுமே பண்பாகக் கொண்ட உள்ளங்கள்!
சொந்தமின்றி, கட்டிய கணவன் இன்றி, மகளுக்காக மகளை மட்டுமே உறவாக எண்ணி வாழ்ந்த அந்த உயிர், துடிக்கத் துடிக்க உறக்கமின்றிக் கிடந்தது அந்த மண்ணில்!
அவர் பெற்ற மகளோ எப்போது தூங்கினாள் என்று தெரியாது தூங்கிக்கொண்டு இருந்தாள் விடுதியறை கட்டிலில்.
காலைப்பொழுது நன்றாக புலர்ந்தபின்பே ரவிக்கு முழிப்பு வந்தது. தன்மீது கனமாக
ஏதோ ஒன்று இருக்கவும், படக்கென்று விழிகளைத் திறந்து பார்த்தவனின் நெஞ்சில், தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தாள் கவி.