அத்தியாயம்-13
விழிகளில் உறக்கம் என்பது மருந்துக்கும் இன்றி வாசலையே பார்த்துப் பார்த்து இருந்த மரகதத்தை அடுத்த நாளின் விடியல் மட்டுமே வரவேற்றது.
வேகமாக எழுந்தவர், காலில் செருப்பைக் கூடப் போடமறந்து அந்த கிராமத்தின் ஒதுக்குப்புறம் என்று நினைக்கும் அத்தனை இடங்களிலும் மகளைத் தேடினார். ஏன் இங்கு தேடுகிறோம் என்கிற எண்ணம் இன்றி, அவளை என் கண்ணில் காட்டிவிடு கடவுளே என்கிற மன்றாடலுடன் உயிர் கருக, உணர்வுகள் மரக்க விழிகளை நாளா பக்கமும் சுழற்றி மகளைத் தேடினார்.
அவளின் தாவணி தெரிகிறதா, அணிந்திருந்த பாவாடை தெரிகிறதா என்று ஒவ்வொரு இடத்தையும் உற்றுப் பார்த்தும் மகள் சம்மந்தமாக எந்தவொரு தடயமும் கிடைக்க மறுத்தது அவருக்கு!
மறுபடியும் கோவில் வரை நடந்து சென்று ஐயரிடமும் விசாரித்து, அங்கேயும் ஆனபதில் கிடைக்காததில், கண்களில் கண்ணீர் வழிய அதை துடைக்கவும் மறந்து சாலையின் இரு மருங்கிலும் பார்த்துப்பார்த்து நடந்தவரின் உதடுகளோ, "கவி.. கவி.. கவி..." என்று மகளின் பெயரையே உருப் போட்டது.
இனித் தேடுவதற்கு இடம் இல்லை என்றானதும், பொழுது நன்கு புலரவும், கண்ணில் படும் மனிதர்களிடம் எல்லாம் விசாரிக்க ஆரம்பித்தார். யாருக்குமே கவி போன இடம் தெரியவில்லை.
எங்காவது, யாராவது மகளைக் கண்டிருக்க மாட்டார்களா என்கிற ஏக்கம் நிறைந்திருந்தது அவர் முகத்தில்.
தங்கமும் வேலனும் எழுந்துவிடவும், "கவியின் தோழிகளிடம் விசாரிப்போமா அக்கா......?" என்று கேட்டாள் தங்கம்.
"நீ அக்காவுடன் இரு. நான் அவர்களிடம் விசாரிக்கிறேன்.." தங்கத்திடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டான் வேலன்.
"நம் கந்தையா அண்ணாவின் மகன் ராஜை இவளுக்கு மிகவும் பிடிக்குமே... அவனிடம் விசாரித்துப் பார்ப்போமா..." தங்கம் கேட்கவும்,
"ஆமாம் தங்கம். இவளும் அண்ணா அண்ணா என்று அவனோடு நல்ல ஒட்டு. அவனுக்குச் சிலநேரம் ஏதாவது தெரிந்திருக்கும்..." என்றபடி மரகதம் ராஜ் வீட்டுக்குக் கிளம்பினார்.
அவருடன் தங்கமும் சேர்ந்துகொண்டாள்.
"மூளையே வேலை செய்யமாட்டேன் என்கிறது தங்கம். நீ சொன்னபடியால் தான் ராஜின் நினைவு கூட வந்தது..." இயலாமையோடு சொன்னார் மரகதம்.
"இப்படி என் கண்ணில் படாமல் மறைந்திருந்து என்னைச் சித்திரவதை செய்கிறாளே இவள். நான் எங்கே போய்த் தேட... அம்மா தேடுவார்களே, அவளைக் காணாமல் பதறுவார்களே என்று கூடவா யோசிக்க மாட்டாள். அல்லது யோசிக்கும் நிலையில் என் மகள் இல்லையோ..." என்றவருக்கு அழுகை வந்தது.
"இல்லை இல்லை! அப்படி எதுவும் நடக்காது. நான் பட்ட கஷ்டமே போதும். கடவுள் அவளுக்கு எந்தக் கஷ்டமும் கொடுக்கமாட்டார். என்ன கொஞ்சம் வாய் கட்டுவாள், மற்றும்படி எந்தத் தப்பும் அவள் செய்தது இல்லையே. நான் யாரிடம் போய் விசாரிப்பேன் தங்கம்... எனக்கு யாரை தெரியும்?" அவரின் வாய் தன்பாட்டிற்குப் புலம்பினாலும் கால்களோ ராஜின் வீட்டுக்கு வேகமாக நடந்தது.
"சும்மா நீங்களே ஏதாவது கற்பனை பண்ணி கலங்காதீர்கள் அக்கா...அப்படி ஒன்றும் நடக்காது." என்று ஆறுதல் சொல்லியபடி தங்கமும் கூட நடந்தாள்.
ராஜின் வீட்டுக்கு சென்றால், அங்கு அவன் தாயாரும் அழுதுகொண்டிருந்தார்.
அதை உணராமால், "அன்னமக்கா, ராஜ் எங்கே? ஒருக்கால் அவனை கூப்பிடுங்கோ..."என்று கேட்டார் மரகதம்.
"அவன் வைத்தியசாலையில் நிற்கிறான் மரகதம். ஏன் அவனைக் கேட்கிறாய்?" என்று கேட்டார் அன்னம்.
"இந்தக் கவியை நேற்று இரவில் இருந்து காணவில்லை அன்னம்மாக்கா…” இதைச் சொல்வதற்கு முதலே அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
அதை முந்தானையால் துடைத்துக்கொண்டே, “அவளுக்கு ராஜை மிகவும் பிடிக்கும். அதுதான் அவனுக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்க வந்தேன்..." என்று சொன்னார்.
"என்னது? கவியைக் காணவில்லையா? அப்படி எங்கே போனாள்? இப்படிச் செய்ய மாட்டாளே. நீ அடிப்பாய் என்று தெரியுமே அவளுக்கு." என்று அதிர்ச்சியுடன் கேட்டவர், தங்கத்திடம் விவரங்களைக் கேட்டு அறிந்துகொண்டார்.
தன் வேதனையில் மரகதம் உழன்றுகொண்டிருக்க, "ராஜ் எதற்காக வைத்தியசாலையில் நிற்கிறான் அன்னம்மாக்கா? அவனுக்கு என்ன?" என்று கேட்டாள் தங்கம்.
"அவனுக்கு இல்லை. இவருக்குத்தான் கையும் காலும் இழுத்துவிட்டது. அது போதாது என்று இன்னும் என்னென்னவோ சொல்கிறார்கள் தங்கம். எனக்கு ஒன்றும் புரியவில்லை..." என்ற அன்னம் கணவனை நினைத்து அழுதார்.
அப்போதுதான் மரகதத்துக்கும் அவரின் நிலை உரைத்தது.
"கந்தையா அண்ணாவுக்கா... முதலும் கை கால் வலி என்றுதானே சொன்னார். ச்சே! கஷ்டம் வந்தால் சுற்றி வளைத்துத்தான் வரும் போல. எனக்கு என் மகளை எங்கே போய்த் தேட என்றே தெரியவில்லை அன்னம்மாக்கா. வயதுக்கு வந்தபெண் வேறு..." என்று அரற்றியவரிடம்,
"நீ வீட்டுக்கு போ மரகதம். ராஜ் வந்தவுடன் நான் உன்னிடம் அனுப்பி வைக்கிறேன். கவலைப் படாதே.. ஒன்றும் நடக்காது! அவள் வந்துவிடுவாள்..." தன் வேதனையை விழுங்கிக்கொண்டு ஆறுதல் சொன்னார் அன்னம்.
எங்கு போய் யாரிடம் மகளை பற்றி விசாரித்தாலும் பதில் பூச்சியமாகவே இருந்ததில் இனி என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு தெரியாத காட்டில் திசை தேடும் பறவையாய் நின்றார் மரகதம்.
அவர் மலை போல் நம்பி இருந்த ராஜை வேறு இப்போது பிடிக்க முடியாமல் போனதில், அந்தக் கிராமத்தை மட்டுமே அவரின் உலகமாக வாழ்ந்த பெண்மணிக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.
"ராஜ் வரட்டும் அக்கா... அவன் வந்ததும் இனி என்ன செய்வது என்று கேட்கலாம். படித்தபிள்ளை அவன், அவனுக்குத் தெரியும் என்ன செய்யவேண்டும் என்று. அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள்..." என்றாள் தங்கம்.
மகளைத் தொலைத்த தாயால் பொறுமையாக இருக்க முடியுமா, "இல்லை தங்கம். நீ இங்கேயே இரு! நான் இன்னும் ஒருதடவை ஊருக்குள் தேடிக்கொண்டு வருகிறேன்...." என்றபடி வலுவிழந்த கால்களை நம்பி மீண்டும் மகளைத் தேடி ஓடியது அந்தத் தாய்ப் பறவை.
அவளின் தோழிகளிடம் விசாரித்த வேலனும் எந்தப் பதிலும் இன்றி வெறும் கையுடனே திரும்பி வந்தான்.
மதியத்தைத் தொடும் வேளையில், தாயின் மூலம் விஷயம் அறிந்த ராஜ் பதைப்புடன் வேகமாக கவியின் வீட்டுக்கு வந்தான்.
"ஆன்ட்டி, கவியைக் காணவில்லையாம் என்று அம்மா சொன்னார்கள். உண்மையாகவா? இன்னும் அவள் வீட்டுக்கு வரவில்லையா..." கூடப்பிறக்கா விட்டாலும், உடன் பிறந்தவள் போல் சிறுவயதில் இருந்து வளர்ந்தவள் அல்லவா... அவனுக்கும் கண்கள் கலங்கிவிடும் போல் இருந்தது.
மரகதம் அழுகையுடன் அவள் காணாமல் போனதைச் சொல்ல,
"அழாமல் இருங்கள் ஆன்ட்டி. நான் தேடிப்பாக்கிறேன். எப்படியும் இங்கு எங்காவதுதான் இருப்பாள்" என்றவன்,
"நேற்று நீங்கள் அவளுக்கு அடித்தீர்களா...? ஏன் கேட்கிறேன் என்றால், சிலநேரம் உங்களுடன் கோபித்துக்கொண்டு எங்காவது மறைந்து இருக்கிறாளோ தெரியவில்லை..." என்று கேட்டான்.
"இல்லப்பா... அன்று உன் நண்பன் யாருக்கோ கல்லால் அடித்து மண்டையை உடைத்தாளாமே.. அன்றுதான் அடித்தேன். பிறகு அடிக்கவில்லை..." என்றவருக்கு, அதை நினைத்தும் கண்ணீர் வந்தது.
ராஜ் சொல்வது போல அம்மா எப்போதும் அடிக்கிறார் என்றுதான் என்னை விட்டுப் போனாளோ.. ஐயோ, என் செல்வமே.. நீ நல்ல பெண்ணாக வளர வேண்டும் என்றுதானே அடித்தேன். அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையை அம்மாவுக்கு தந்துவிடாதே... எங்கே இருந்தாலும் வந்துவிடு கவி என்று அவரின் மனம் ஊமையாக அழுதது.
அவன் கவியைத் தேடிக் கிளம்பவும், "நான் இந்த ஊர் முழுக்க ஒன்றுக்கு பலதடவை தேடிவிட்டேன் ராஜ். இனி எங்கே தேடுவது என்றே தெரியவில்லை..." என்றார் மரகதம் கண்ணீரோடு.
"நான் பள்ளி வரை தேடிப்பாக்கிறேன் ஆன்ட்டி. அங்கு போகமாட்டாள் தான் என்றாலும், பார்த்துவருகிறேன். அப்படியும் அவளைப் பற்றி எந்தத் தகவுலும் கிடைக்காவிட்டால் என் நண்பன் மூலம் போலிசுக்கு போகலாம்." ரவியை மனதில் வைத்துச் சொன்னான் ராஜ்.
அவர்கள் வசதியும் கொஞ்சம் பிரபலமானவர்களும் என்பதால், சகுந்தலாவின் உதவியுடன் போலீஸ்க்கு போகலாம் என்பது அவன் எண்ணம். ஜனநாயக நாடாக இருந்தாலும், பசை உள்ளவர்களோடு ஒப்பிடுகையில் ஏழைகளுக்கான மதிப்பு எங்கேயும் சற்று குறைவல்லவா!
அவனுக்குத் தெரிந்து, அவள் செல்லும் இடங்கள், விளையாடும் இடங்கள், ரவியை திறத்தி ஓடும் இடங்கள் என்று எங்கு தேடியும் கவி கிடைக்கவில்லை. ஏன், அவளைக் கண்டதாகக் கூட யாரும் சொல்லவில்லை.
தோல்வியுடன் சோர்ந்து ராஜ் திரும்புகையில் மாலையாகி விட்டிருந்தது. ராஜாலும் மகளைப் பற்றி எந்தத் தகவலும் கண்டு பிடிக்க முடியாமல் போனதில் மனதில் இருந்த சிறு நம்பிக்கைப் பொறியும் அழிய, நிலத்தில் விழுந்து கதறித் தீர்த்துவிட்டார் மரகதம்.
"ஆன்ட்டி , இங்கே பாருங்கள்.. அழாதீர்கள்! நாம் போலிசுக்குப் போகலாம். அவர்கள் நிச்சயம் கவியைக் கண்டு பிடித்துத் தருவார்கள். நீங்கள் இப்படியே அழுதாள் நான் என்ன செய்வது..." என்று அன்போடு அதட்டினான்.
"அவள் என் மகள் ராஜ். இந்த உலகில் என் சொந்தம் என்று அவள் மட்டும் தானே எனக்கு." என்று பரிதாபமாய் அழுதவரைப் பார்க்க அவன் கண்களும் கலங்கியது!
கலங்கிய தன் கண்களை மறைத்து, "அழாமல் இருங்கள் ஆன்ட்டி . நான் என் அப்பாவுக்குத் தேவையான பொருட்களை வைத்தியசாலைக்குக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு, என் நண்பனுடன் கதைத்துவிட்டு வருகிறேன். அவன் மூலம் இனிச் செய்யவேண்டியதைப் பார்க்கலாம்." என்று சொல்லிவிட்டு, தங்கத்திடமும் தான் வரும்வரை மரகதத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டுப் புறப்பட்டான் அவன்.
அவனும் என்னதான் செய்வான். உயிருக்குப் போராடும் தந்தையைப் பார்ப்பானா, கண்ணீரோடு கணவனுக்காய்த் தவிக்கும் தாயைச் சமாதானம் செய்வானா, இல்லை கவியைக் காணவில்லை என்று துடிக்கும் மரகதத்தைப் பார்ப்பானா அல்லது கவியைத் தேடுவானா...
வீட்டுக்கு வேகமாக சென்று தகப்பனுக்கு தேவையானவைகளை எடுத்துக்கொண்டு, "அம்மா, நான் வர நேரமாகலாம். எனக்காக காத்திராமல் சாப்பிட்டுத் தூங்குங்கள். தனியே இருக்கப் பயம் என்றால் மரகதம் ஆன்ட்டி வீட்டுக்குப் போங்கள். ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கலாம்.." என்று தாயிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
தகப்பனிடம் சென்று அவரின் தேவைகளைக் கவனித்துவிட்டு, அவரிடமும் கவி பற்றிச் சொல்லி, ரவிக்கு போன் பேசிவிட்டு வருவதாகச் சொல்லி வெளியே சென்றான் ராஜ்.
அங்கே கண்ணில் கிடைத்த பொதுத் தொலைபேசி ஒன்றிக்கு சென்று ரவியின் வீட்டுக்கு அழைத்தான்.
சகுந்தலா தொலைபேசியை எடுக்கவும், "ஆன்ட்டி , நான் ராஜ் பேசுகிறேன். ரவி இருக்கிறானா... அவனிடம் கொடுக்கிறீர்களா?" என்று பணிவோடு கேட்டான். அவருக்குத் தன்னை அவ்வளவாகப் பிடிக்காது என்பதை அவனும் அறிவான்.
ராஜின் குரலைக் கேட்டதும், மகன் மீதிருந்த மனத்தாங்கல் இவன் மீது கோபமாக இறங்கியது.
விழிகளில் உறக்கம் என்பது மருந்துக்கும் இன்றி வாசலையே பார்த்துப் பார்த்து இருந்த மரகதத்தை அடுத்த நாளின் விடியல் மட்டுமே வரவேற்றது.
வேகமாக எழுந்தவர், காலில் செருப்பைக் கூடப் போடமறந்து அந்த கிராமத்தின் ஒதுக்குப்புறம் என்று நினைக்கும் அத்தனை இடங்களிலும் மகளைத் தேடினார். ஏன் இங்கு தேடுகிறோம் என்கிற எண்ணம் இன்றி, அவளை என் கண்ணில் காட்டிவிடு கடவுளே என்கிற மன்றாடலுடன் உயிர் கருக, உணர்வுகள் மரக்க விழிகளை நாளா பக்கமும் சுழற்றி மகளைத் தேடினார்.
அவளின் தாவணி தெரிகிறதா, அணிந்திருந்த பாவாடை தெரிகிறதா என்று ஒவ்வொரு இடத்தையும் உற்றுப் பார்த்தும் மகள் சம்மந்தமாக எந்தவொரு தடயமும் கிடைக்க மறுத்தது அவருக்கு!
மறுபடியும் கோவில் வரை நடந்து சென்று ஐயரிடமும் விசாரித்து, அங்கேயும் ஆனபதில் கிடைக்காததில், கண்களில் கண்ணீர் வழிய அதை துடைக்கவும் மறந்து சாலையின் இரு மருங்கிலும் பார்த்துப்பார்த்து நடந்தவரின் உதடுகளோ, "கவி.. கவி.. கவி..." என்று மகளின் பெயரையே உருப் போட்டது.
இனித் தேடுவதற்கு இடம் இல்லை என்றானதும், பொழுது நன்கு புலரவும், கண்ணில் படும் மனிதர்களிடம் எல்லாம் விசாரிக்க ஆரம்பித்தார். யாருக்குமே கவி போன இடம் தெரியவில்லை.
எங்காவது, யாராவது மகளைக் கண்டிருக்க மாட்டார்களா என்கிற ஏக்கம் நிறைந்திருந்தது அவர் முகத்தில்.
தங்கமும் வேலனும் எழுந்துவிடவும், "கவியின் தோழிகளிடம் விசாரிப்போமா அக்கா......?" என்று கேட்டாள் தங்கம்.
"நீ அக்காவுடன் இரு. நான் அவர்களிடம் விசாரிக்கிறேன்.." தங்கத்திடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டான் வேலன்.
"நம் கந்தையா அண்ணாவின் மகன் ராஜை இவளுக்கு மிகவும் பிடிக்குமே... அவனிடம் விசாரித்துப் பார்ப்போமா..." தங்கம் கேட்கவும்,
"ஆமாம் தங்கம். இவளும் அண்ணா அண்ணா என்று அவனோடு நல்ல ஒட்டு. அவனுக்குச் சிலநேரம் ஏதாவது தெரிந்திருக்கும்..." என்றபடி மரகதம் ராஜ் வீட்டுக்குக் கிளம்பினார்.
அவருடன் தங்கமும் சேர்ந்துகொண்டாள்.
"மூளையே வேலை செய்யமாட்டேன் என்கிறது தங்கம். நீ சொன்னபடியால் தான் ராஜின் நினைவு கூட வந்தது..." இயலாமையோடு சொன்னார் மரகதம்.
"இப்படி என் கண்ணில் படாமல் மறைந்திருந்து என்னைச் சித்திரவதை செய்கிறாளே இவள். நான் எங்கே போய்த் தேட... அம்மா தேடுவார்களே, அவளைக் காணாமல் பதறுவார்களே என்று கூடவா யோசிக்க மாட்டாள். அல்லது யோசிக்கும் நிலையில் என் மகள் இல்லையோ..." என்றவருக்கு அழுகை வந்தது.
"இல்லை இல்லை! அப்படி எதுவும் நடக்காது. நான் பட்ட கஷ்டமே போதும். கடவுள் அவளுக்கு எந்தக் கஷ்டமும் கொடுக்கமாட்டார். என்ன கொஞ்சம் வாய் கட்டுவாள், மற்றும்படி எந்தத் தப்பும் அவள் செய்தது இல்லையே. நான் யாரிடம் போய் விசாரிப்பேன் தங்கம்... எனக்கு யாரை தெரியும்?" அவரின் வாய் தன்பாட்டிற்குப் புலம்பினாலும் கால்களோ ராஜின் வீட்டுக்கு வேகமாக நடந்தது.
"சும்மா நீங்களே ஏதாவது கற்பனை பண்ணி கலங்காதீர்கள் அக்கா...அப்படி ஒன்றும் நடக்காது." என்று ஆறுதல் சொல்லியபடி தங்கமும் கூட நடந்தாள்.
ராஜின் வீட்டுக்கு சென்றால், அங்கு அவன் தாயாரும் அழுதுகொண்டிருந்தார்.
அதை உணராமால், "அன்னமக்கா, ராஜ் எங்கே? ஒருக்கால் அவனை கூப்பிடுங்கோ..."என்று கேட்டார் மரகதம்.
"அவன் வைத்தியசாலையில் நிற்கிறான் மரகதம். ஏன் அவனைக் கேட்கிறாய்?" என்று கேட்டார் அன்னம்.
"இந்தக் கவியை நேற்று இரவில் இருந்து காணவில்லை அன்னம்மாக்கா…” இதைச் சொல்வதற்கு முதலே அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
அதை முந்தானையால் துடைத்துக்கொண்டே, “அவளுக்கு ராஜை மிகவும் பிடிக்கும். அதுதான் அவனுக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்க வந்தேன்..." என்று சொன்னார்.
"என்னது? கவியைக் காணவில்லையா? அப்படி எங்கே போனாள்? இப்படிச் செய்ய மாட்டாளே. நீ அடிப்பாய் என்று தெரியுமே அவளுக்கு." என்று அதிர்ச்சியுடன் கேட்டவர், தங்கத்திடம் விவரங்களைக் கேட்டு அறிந்துகொண்டார்.
தன் வேதனையில் மரகதம் உழன்றுகொண்டிருக்க, "ராஜ் எதற்காக வைத்தியசாலையில் நிற்கிறான் அன்னம்மாக்கா? அவனுக்கு என்ன?" என்று கேட்டாள் தங்கம்.
"அவனுக்கு இல்லை. இவருக்குத்தான் கையும் காலும் இழுத்துவிட்டது. அது போதாது என்று இன்னும் என்னென்னவோ சொல்கிறார்கள் தங்கம். எனக்கு ஒன்றும் புரியவில்லை..." என்ற அன்னம் கணவனை நினைத்து அழுதார்.
அப்போதுதான் மரகதத்துக்கும் அவரின் நிலை உரைத்தது.
"கந்தையா அண்ணாவுக்கா... முதலும் கை கால் வலி என்றுதானே சொன்னார். ச்சே! கஷ்டம் வந்தால் சுற்றி வளைத்துத்தான் வரும் போல. எனக்கு என் மகளை எங்கே போய்த் தேட என்றே தெரியவில்லை அன்னம்மாக்கா. வயதுக்கு வந்தபெண் வேறு..." என்று அரற்றியவரிடம்,
"நீ வீட்டுக்கு போ மரகதம். ராஜ் வந்தவுடன் நான் உன்னிடம் அனுப்பி வைக்கிறேன். கவலைப் படாதே.. ஒன்றும் நடக்காது! அவள் வந்துவிடுவாள்..." தன் வேதனையை விழுங்கிக்கொண்டு ஆறுதல் சொன்னார் அன்னம்.
எங்கு போய் யாரிடம் மகளை பற்றி விசாரித்தாலும் பதில் பூச்சியமாகவே இருந்ததில் இனி என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு தெரியாத காட்டில் திசை தேடும் பறவையாய் நின்றார் மரகதம்.
அவர் மலை போல் நம்பி இருந்த ராஜை வேறு இப்போது பிடிக்க முடியாமல் போனதில், அந்தக் கிராமத்தை மட்டுமே அவரின் உலகமாக வாழ்ந்த பெண்மணிக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.
"ராஜ் வரட்டும் அக்கா... அவன் வந்ததும் இனி என்ன செய்வது என்று கேட்கலாம். படித்தபிள்ளை அவன், அவனுக்குத் தெரியும் என்ன செய்யவேண்டும் என்று. அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள்..." என்றாள் தங்கம்.
மகளைத் தொலைத்த தாயால் பொறுமையாக இருக்க முடியுமா, "இல்லை தங்கம். நீ இங்கேயே இரு! நான் இன்னும் ஒருதடவை ஊருக்குள் தேடிக்கொண்டு வருகிறேன்...." என்றபடி வலுவிழந்த கால்களை நம்பி மீண்டும் மகளைத் தேடி ஓடியது அந்தத் தாய்ப் பறவை.
அவளின் தோழிகளிடம் விசாரித்த வேலனும் எந்தப் பதிலும் இன்றி வெறும் கையுடனே திரும்பி வந்தான்.
மதியத்தைத் தொடும் வேளையில், தாயின் மூலம் விஷயம் அறிந்த ராஜ் பதைப்புடன் வேகமாக கவியின் வீட்டுக்கு வந்தான்.
"ஆன்ட்டி, கவியைக் காணவில்லையாம் என்று அம்மா சொன்னார்கள். உண்மையாகவா? இன்னும் அவள் வீட்டுக்கு வரவில்லையா..." கூடப்பிறக்கா விட்டாலும், உடன் பிறந்தவள் போல் சிறுவயதில் இருந்து வளர்ந்தவள் அல்லவா... அவனுக்கும் கண்கள் கலங்கிவிடும் போல் இருந்தது.
மரகதம் அழுகையுடன் அவள் காணாமல் போனதைச் சொல்ல,
"அழாமல் இருங்கள் ஆன்ட்டி. நான் தேடிப்பாக்கிறேன். எப்படியும் இங்கு எங்காவதுதான் இருப்பாள்" என்றவன்,
"நேற்று நீங்கள் அவளுக்கு அடித்தீர்களா...? ஏன் கேட்கிறேன் என்றால், சிலநேரம் உங்களுடன் கோபித்துக்கொண்டு எங்காவது மறைந்து இருக்கிறாளோ தெரியவில்லை..." என்று கேட்டான்.
"இல்லப்பா... அன்று உன் நண்பன் யாருக்கோ கல்லால் அடித்து மண்டையை உடைத்தாளாமே.. அன்றுதான் அடித்தேன். பிறகு அடிக்கவில்லை..." என்றவருக்கு, அதை நினைத்தும் கண்ணீர் வந்தது.
ராஜ் சொல்வது போல அம்மா எப்போதும் அடிக்கிறார் என்றுதான் என்னை விட்டுப் போனாளோ.. ஐயோ, என் செல்வமே.. நீ நல்ல பெண்ணாக வளர வேண்டும் என்றுதானே அடித்தேன். அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையை அம்மாவுக்கு தந்துவிடாதே... எங்கே இருந்தாலும் வந்துவிடு கவி என்று அவரின் மனம் ஊமையாக அழுதது.
அவன் கவியைத் தேடிக் கிளம்பவும், "நான் இந்த ஊர் முழுக்க ஒன்றுக்கு பலதடவை தேடிவிட்டேன் ராஜ். இனி எங்கே தேடுவது என்றே தெரியவில்லை..." என்றார் மரகதம் கண்ணீரோடு.
"நான் பள்ளி வரை தேடிப்பாக்கிறேன் ஆன்ட்டி. அங்கு போகமாட்டாள் தான் என்றாலும், பார்த்துவருகிறேன். அப்படியும் அவளைப் பற்றி எந்தத் தகவுலும் கிடைக்காவிட்டால் என் நண்பன் மூலம் போலிசுக்கு போகலாம்." ரவியை மனதில் வைத்துச் சொன்னான் ராஜ்.
அவர்கள் வசதியும் கொஞ்சம் பிரபலமானவர்களும் என்பதால், சகுந்தலாவின் உதவியுடன் போலீஸ்க்கு போகலாம் என்பது அவன் எண்ணம். ஜனநாயக நாடாக இருந்தாலும், பசை உள்ளவர்களோடு ஒப்பிடுகையில் ஏழைகளுக்கான மதிப்பு எங்கேயும் சற்று குறைவல்லவா!
அவனுக்குத் தெரிந்து, அவள் செல்லும் இடங்கள், விளையாடும் இடங்கள், ரவியை திறத்தி ஓடும் இடங்கள் என்று எங்கு தேடியும் கவி கிடைக்கவில்லை. ஏன், அவளைக் கண்டதாகக் கூட யாரும் சொல்லவில்லை.
தோல்வியுடன் சோர்ந்து ராஜ் திரும்புகையில் மாலையாகி விட்டிருந்தது. ராஜாலும் மகளைப் பற்றி எந்தத் தகவலும் கண்டு பிடிக்க முடியாமல் போனதில் மனதில் இருந்த சிறு நம்பிக்கைப் பொறியும் அழிய, நிலத்தில் விழுந்து கதறித் தீர்த்துவிட்டார் மரகதம்.
"ஆன்ட்டி , இங்கே பாருங்கள்.. அழாதீர்கள்! நாம் போலிசுக்குப் போகலாம். அவர்கள் நிச்சயம் கவியைக் கண்டு பிடித்துத் தருவார்கள். நீங்கள் இப்படியே அழுதாள் நான் என்ன செய்வது..." என்று அன்போடு அதட்டினான்.
"அவள் என் மகள் ராஜ். இந்த உலகில் என் சொந்தம் என்று அவள் மட்டும் தானே எனக்கு." என்று பரிதாபமாய் அழுதவரைப் பார்க்க அவன் கண்களும் கலங்கியது!
கலங்கிய தன் கண்களை மறைத்து, "அழாமல் இருங்கள் ஆன்ட்டி . நான் என் அப்பாவுக்குத் தேவையான பொருட்களை வைத்தியசாலைக்குக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு, என் நண்பனுடன் கதைத்துவிட்டு வருகிறேன். அவன் மூலம் இனிச் செய்யவேண்டியதைப் பார்க்கலாம்." என்று சொல்லிவிட்டு, தங்கத்திடமும் தான் வரும்வரை மரகதத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டுப் புறப்பட்டான் அவன்.
அவனும் என்னதான் செய்வான். உயிருக்குப் போராடும் தந்தையைப் பார்ப்பானா, கண்ணீரோடு கணவனுக்காய்த் தவிக்கும் தாயைச் சமாதானம் செய்வானா, இல்லை கவியைக் காணவில்லை என்று துடிக்கும் மரகதத்தைப் பார்ப்பானா அல்லது கவியைத் தேடுவானா...
வீட்டுக்கு வேகமாக சென்று தகப்பனுக்கு தேவையானவைகளை எடுத்துக்கொண்டு, "அம்மா, நான் வர நேரமாகலாம். எனக்காக காத்திராமல் சாப்பிட்டுத் தூங்குங்கள். தனியே இருக்கப் பயம் என்றால் மரகதம் ஆன்ட்டி வீட்டுக்குப் போங்கள். ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கலாம்.." என்று தாயிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
தகப்பனிடம் சென்று அவரின் தேவைகளைக் கவனித்துவிட்டு, அவரிடமும் கவி பற்றிச் சொல்லி, ரவிக்கு போன் பேசிவிட்டு வருவதாகச் சொல்லி வெளியே சென்றான் ராஜ்.
அங்கே கண்ணில் கிடைத்த பொதுத் தொலைபேசி ஒன்றிக்கு சென்று ரவியின் வீட்டுக்கு அழைத்தான்.
சகுந்தலா தொலைபேசியை எடுக்கவும், "ஆன்ட்டி , நான் ராஜ் பேசுகிறேன். ரவி இருக்கிறானா... அவனிடம் கொடுக்கிறீர்களா?" என்று பணிவோடு கேட்டான். அவருக்குத் தன்னை அவ்வளவாகப் பிடிக்காது என்பதை அவனும் அறிவான்.
ராஜின் குரலைக் கேட்டதும், மகன் மீதிருந்த மனத்தாங்கல் இவன் மீது கோபமாக இறங்கியது.