• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

zeenath Sabeeha

New member
Nithani Prabu அவர்களின் தளத்தில் நடக்கும் செந்தூரம் போட்டி கதைகள்.
#STN113
இரண்டற கலந்தனவே
மிருதுளா... ஓவியம் வரைவதில் அலாதி விருப்பம் கொண்டுள்ள அதையே தொழிலாகவும் எடுத்திருக்கும் மிருதுவான பெண்.
ஆதித்யா.. கட்டடக்கலை நிபுணன்.. சற்று கோபக்காரன்.. இருவருக்கும் முதல் சந்திப்பு ஒரு கபேயில். அன்றிலிருந்து இருவருக்கும் இடையில் ஒரு மெல்லிய ஈர்ப்பு. அது படிப்படியாக காதலாகிறது. ஆதித்யா வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவன் இவர்களின் காதலுக்கு மிகுந்த முட்டுக்கட்டையாக இருக்கிறார் அவன் தந்தை ராஜசேகர் மிருதுளாவின் குடும்பம் ராஜசேகரின் வசதியை பார்த்து பயந்து இவர்கள் காதலை எதிர்க்கிறார்கள். இருவரும் வீட்டை விட்டு வந்து திருமணம் முடித்து தங்களுக்கான சிறு கூட்டில் வாழ்கிறார்கள் அங்கும் இடையூறு கொடுக்கிறார் ராஜசேகர்.
இரவோடு இரவாக தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்ள பயணிக்கிறார்கள் ஊட்டியை நோக்கி. அங்கு இவர்களுக்கு மகிழ்ச்சியான காலம் தொடங்குகிறது.
ஆனால் அங்கும் இவர்களை சோகமே தொடர்ந்து வருகிறது அது என்ன என்பது கதையில்.
வெண்மதி இவர்கள் வாழ்வில் முக்கிய அங்கம் வகிப்பவள் அவள் யார் என்பதும் கதையில்..
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰
Good luck 🥰❤
 
Top Bottom