#சின்னா_தி_ரோமியோ…
#கௌரிஸ்ரிவ்யூ…..
தலைப்பை பார்த்தும் செம்ம ஜாலி கதைன்னு தான் உள்ள போனேன்….
அப்படியே சில epis ஜாலியா





இப்படியே தான் படிப்போம்…..
பட் லாஸ்ட் 4 epis





…..
எப்பா ரைட்டர்….இது நல்லா இருக்கா உங்களுக்கு





…..
அகரன்…சின்ன பையன்….அவனோட சின்னாவை தேடி போலீசு காம்பளெண்ட் கொடுக்க வரான்….
சின்னானா….ஏதோ நாய் குட்டினு அசட்டையா நினைக்கும் போலீஸ் அது ஒரு நபர்னு தெரியும் போது எங்க அப்படின்னு யோசிக்கிறாங்க…..
அகரன் காம்பிளென்ட் பண்ண அடுத்த நாள்…..ஊரில் இருக்கும் எல்லா பாட்டிஸ் உம் எங்க சின்னாவை தேடி தர சொல்லி அரவிந்த் & கோவை முற்றுகை இட…..
அது மட்டும் இல்லாம மத்திய அரசு, சின்னாவிற்கு விவசாய விருது வழங்க திட்டமிட….அவனை கண்டு பிடிக்க போலீசுக்கும் உத்தரவு….
யாரு டா அதுனு இவங்க பயணம் தொடங்குது…..கூடவே அந்த பியூட்டி பாட்டிஸ்சையும் சேர்த்துகிட்டு







…..
சின்னாவின் சொந்த ஊரில் அவனை பத்தி விசாரிக்க…..
அவனின் கடந்த காலமும், அவர் செய்த நல்ல செயல்களும் அரவிந்த் & மணிகண்டனை வியப்பில் ஆழ்த்துது……
சின்னா யார்?????
அவரை கண்டு பிடிச்சாங்களா?????
பாட்டியில் இருந்து சின்ன பசங்க வரை அவரை தேட காரணம்?????
இது தான் மீதி கதை…..
சின்னா….எனும் சிவநேசன்….இப்படி பெயர் வைத்ததால் என்னவோ நேசமே உருவானவர்…..
மாமா பெண் அன்பா மீதி அதீத அன்பு, காதல்…அவரோட உலகமே அவள் தான்…..
அந்த மாமன் கருணா சமயம் பார்த்து சின்னாவிற்கு பெண்ணை தர மறுக்க…..
அவனும் அன்பா மேல் உள்ள காதலில் அவரிடம் சவால் விட…..
இது ஏதும் தெரியாத அன்பாவை இக்கட்டில் நிறுத்தி ஒரு பொறுக்கிக்கு கல்யாணம் செய்து வெச்சர்ரார்…..
அந்த பாழாப்போன பழி வெறிக்காக கருணா….
சில காலம் கடந்து கல்யாணம் பண்ணி போன பெண்ணின் நிலை கண்டு உருகுழைந்து போகிறார் கருணா…..
இப்ப அழுது என்ன…..அவள் வாழ்க்கை போனது போனது தானே…..
ஆன சின்னா அப்படியே அவளை விடல…..
அந்த பொறுக்கியிடம் இருந்து divorce வாங்கிட்டு…. தன் அன்பாவை தானே திருமணம் செய்ய ஏற்பாடு செய்ய….
முதலில் மறுத்த அன்பாவும் உடன் பட……
நாளை கல்யாணம் என்ற நேரத்தில் அன்பாவை காணோம்…..
சின்னாவை வேற கல்யாணம் பண்ண சொல்லி அவள் கட்டாய படுத்தி தான் சென்று இருக்கா…..
இப்ப சின்னா என்ன செய்வான்?????
அன்பா திடீர்னு போக என்ன காரணம்?????
இது தான் மீதி கதை……
கொஞ்சம் கூட கருணா மேல இரக்கமே வரல கடைசி வரை…..
தன்னோட ஒன்னும் இல்லாத வெறிக்காக அவ காவு கொடுத்தது இரண்டு நல்ல உள்ளங்களின் வாழ்வை…..
ஒருத்தி வாழ வேண்டிய வயதில் நல்லா வாழாமல்….பாதியில் போய்ட்டா…
ஒருவனோ….ஆசை ஆசையாக எதிர்பார்த்திருந்த வாழ்வு கிட்டலைனாலும்…..
தன்னை சுத்தி இருந்த எல்லா பெண்களிடமும் பாசிடிவ் வைப், வாழும் வாழ்வின் நம்பிக்கையை விதச்சி இருக்கார்…..
ஒரு மாறி மனம் கணக்கிறது ….அழுவாச்சியா வருது





…..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி
லிங்க்




nidhaniprabunovels.com