• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தழலை அணைக்கும் அமுதகமே.. - 1

STN - 77

New member
❤❤ தழலை அணைக்கும் அமுதகமே...❤❤

அத்தியாயம் 01

"ஆதி... " என்ற தன் சித்தியின் குரலில் குளித்து விட்டு கண்ணாடி முன் நின்று கொண்டைப் போட்டுக் கொண்டிருந்தவளோ அவசரமாக சமையல் கட்டை நோக்கி ஓடினாள், அங்கு அவளின் சித்தியான சித்ராவோ சமைத்துக் கொண்டிருக்க, அதை பார்த்துக் கொண்டே சமயலறைக்குள் நுளைந்தவள் "சொல்லுங்க சித்தி, என்ன பண்ணனும்... " என்று கேட்டபடியே அவரின் அருகில் வந்து நின்றிருந்தாள்...

சித்ராவோ "இந்த காய்கறி எல்லாம் நறுக்கிட்டு, சிக்கன் குழப்பையும் பண்ணு, நான் போய் சித்தப்பாக்கு டீ கொடுத்துட்டு வாரேன்... " என்றப்படி அவர் டீ கப்புடன் வெளியேறி விட பெண்ணவளும் புன்னைகையுடன் அவரை பார்த்து தலையாட்டி விட்டு வேலையை கவனிக்க ஆரம்பித்திருந்தாள்...

இவள் தான் நம் கதையின் கதாநாயகி ஆத்யா ஷாலினி, ஆத்யாவிற்கு ஏழு வயது இருக்கும் போதே அவளின் பெற்றோர்கள் ஒரு கார் விபத்தில் இறந்து விட, பெண்ணவளோ கூடப்பிறந்தவர்கள் என்று கூறுவதற்கு கூட யாரும் இன்றி அனாதையானாள்...

அப்படி தனித்து விடப்பட்டவளை எடுத்து வளர்த்தவர்கள் தான் சித்ரா மற்றும் ராஜேந்திரன் தம்பதியினர், அவர்களிற்கு அப்போது தான் திருமணமாகி இரண்டு வயதில் இரட்டை பெண் குழந்தைகள் இருக்க, ஆத்யாவை யாருமே பார்த்துக் கொள்ள முன் வராத போது வேறு வழி இன்றி ஆத்யாவின் தாயின் சித்தி மகளான சித்ரா தான் அவளை பொறுப்பேற்றுக் கொள்ள முன் வந்தார்...

அப்போதிலிருந்து பெண்ணவள் அவர்களுடனே வளர ஆரம்பித்திருந்தாள், ஆரம்பத்தில் சித்தி சித்தி என சித்ராவின் பின்னே தான் பெண்ணவள் சுற்றிக் கொண்டிருப்பாள், சித்ராவோ இரட்டை பெண் குழந்தைகளை வைத்து சிரமப்பட்டுக் கொண்டிருக்க ஆத்யாவை கவனிக்க முடியாத நிலையாகி போனது, பெண்ணவளும் காலப்போக்கில் தன் நிலை உணர்ந்து அவளின் தேவைகளை அவளே பார்த்துக் கொள்ள ஆரம்பித்திருந்தாள்...

அவள் எதற்குமே அவளின் சித்தியையோ சித்தப்பாவையோ கஷ்டப்படுத்தாமல் தானே தனது தேவைகளை நிறைவேற்றுக் கொள்ள பழகி இருந்தாள், என்ன தான் சித்ராவிற்கு ஆத்யாவின் மேல் பாசம் இருந்தாலும் தான் பெற்ற பிள்ளைகள் மீதே அதிக பாசத்தையும் கவனிப்பையும் வைத்திருந்தார்...

ஆத்யாவும் அதை புரிந்துக் கொண்டு முக்கிய தேவைகள் தவிர்த்து வேறு எதற்கும் சித்ராவை தொந்தரவு செய்ய மாட்டாள், அவளின் சித்தப்பாவாகி ராஜேந்திரனுக்கோ ஆத்யா தான் முதல் பிள்ளை அவளின் மேல் அளவுக்கடந்த பாசம் வைத்திருந்தார்...

பெண்ணவளோ வயது ஏற ஏற தன்னை பக்குவப்படுத்திக் கொண்டவள் தன் சித்தியிற்கு அனைத்து வேலைகளிலும் பக்க பலமாக இருப்பாள் சித்ராவின் இரட்டை குழந்தைகளாகியா சான்விகா, சாத்விகா இருவரையும் தன் சித்தி தன்னை வளர்த்தெடுத்தற்கு கைமாறாக அதே போல் தானும் தன் தங்கைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் இருவரையும் சித்ராவுடன் சேர்ந்து பார்த்துக் கொள்ள ஆரம்பித்தாள்...

அதே போல் சித்ராவிற்கு வீட்டு வேலைகள் அனைத்திலுமே உதவியும் செய்வாள், அவளை திட்டுவதற்கு யாருக்குமே மனம் வராது அந்தளவுக்கு சாந்தமானவளும் இரக்க குணம் உடையவளுமாக காணப்பட்டாள் ஆத்யா...

படிப்பை முடித்துவிட்டு ஹையர் ஸ்டடிகாக காத்துக் கொண்டிருக்கும் இருபத்தி ஐந்து வயது மங்கையாவாள் ஆத்யா, தோள்கள் வரை வளர்ந்த முடியுடன் ரொம்ப சிவந்த நிறமும் இல்லாது கருப்பு நிறமும் இல்லாது இரண்டுக்கும் இடைப்பட்ட நிறத்தில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் முக அமைப்புடன் இருப்பவளின் அழகை மேலும் அழகு சேர்ப்பவை தான் அவளின் அழகான பெரிய கண்களும் அவள் நாடியின் வலபக்கமாக இருக்கும் சிறிய மச்சமும் ஆகும்...

தன் சித்தி கூறியவற்றை செய்து முடித்தவளுக்கு அங்கு சித்ரா பிசைந்து வைத்து விட்டு சென்ற சப்பாத்தி மாவு கண்களில் பட அதையும் எடுத்தவள் சப்பாத்தியையும் செய்ய ஆரம்பித்திருந்தாள்...

கடைசி சாப்பத்தியையும் சுட்டு முடித்து விட்டு அவள் அடுப்பை அணைக்கும் சமயம் சமையலறைக்குள் நுளைந்த சித்ராவோ அவள் அணைத்து வேலையையும் முடித்து வைத்திருப்பதை பார்த்து புன்னகைத்துக் கொண்டே "எதுக்கு எல்லாத்தையும் நீயே பண்ணின நானும் வந்து இருப்பேன்ல... " கேட்டப்படி சிறிய சப்பாத்தி துண்டு ஒன்றை பிய்த்து எடுத்து அதை குழம்பில் தொட்டு சாப்பிட்டு பார்த்தவர் ஆச்சரியமாக ஆத்யாவை பார்த்து "எப்டி ஆதி என்கிட்ட தான் சமையல் பழகின, அப்றம் எப்டி டி என்னை விட இவ்வளவு நல்லா சமைக்கிற..." என்று கேட்க, அதை கேட்டு சிரித்த ஆத்யாவோ "தெரிலயே சித்தி..." என்றப்படி உணவு பாத்திரத்தை எடுத்துக் கொண்டே சாப்பாட்டு மேசையை நோக்கி சென்றிருந்தாள்...

அங்கே ராஜேந்திரன் அமர்ந்திருந்து பத்திரிகை படித்துக் கொண்டிருக்க, அவரை பார்த்து புன்னகையுடன் "குட் மார்னிங் சித்தப்பா..." என்று கூறியப்படியே அவருக்கு சாப்பாட்டை பரிமாற ஆரம்பித்திருந்தாள்...

அவரும் மென் புன்னகையுடன் "குட் மார்னிங் டா குட்டி மா... " என்றப்படி அவள் வைத்த உணவை சாப்பிட ஆரம்பித்தவர் அவளை பார்த்து "எப்பவும் போல இன்னைக்கும் டிபன் சூப்பர்..." என்று கூறி இருக்க, அதை கேட்டவளோ மென்மையாக புன்னகைத்திருந்தாள்...

அச்சமயம் ஆத்யாவின் இரண்டு பக்கங்களிலும் இருந்து அவளை இறுக்கமாக வந்து அணைத்திருந்தனர் ஆத்யாவின் செல்ல தங்கைகளான சான்விகா,சாத்விகா இருவரும்...

"அக்கா இன்னைக்கு எங்களுக்கு எக்ஸாம் நீங்க சொல்லி கொடுத்த போல தான் படிச்சோம் நல்ல மார்க் வரும்ல..." என்று சான்வி அவளின் முன் வந்து நின்று கேட்க, அதற்கு சாத்வியோ "நீ எங்க டி படிச்ச நான் தான் அக்கா சொன்ன போல படிச்சேன் எனக்கு தான் நல்ல மார்க் வர போகுது பாரு..." என்று கூறியப்படியே மேசையில் சென்று அமர, ஆத்யாவோ "சரி சரி இரண்டு பேருக்கும் நல்ல மார்க் தான் வரும், முதல்ல சாப்பிடுங்க..." என்றப்படி இருவருக்கும் பறிமாற அவர்களும் புன்னகையுடன் சாப்பிட ஆரம்பித்திருந்தனர்...

அச்சமயம் அங்கு வந்த சித்ராவோ தனக்கும் ஆத்யாவுக்கும் இரு தட்டி உணவை போட்டுக் கொண்டே ஆத்யாவை அமர வைத்து விட்டு தானும் கதிரையில் அமர்ந்துக் கொண்டவர் "இந்த முறையாவது நல்ல மார்க் எடுப்பிங்களாடி... " என தன் இரு புதல்விகளை சந்தேகமாக பார்த்துக் கொண்டே வினாவ, இருவரும் ஒரே நேரத்தில் "ம்மா இந்த முறை நாங்க தான் க்ளாஸ் டாப்பரா வருவோம் பாருங்க... " என் கோரசாக கூற, அதை கேட்டவரோ "பார்ப்போம் பார்ப்போம்... " என்றப்படி சாப்பிட ஆரம்பிக்க, ஆத்யாவோ சாப்பிட்டுக் கொண்டே "இந்த முறை இரண்டு பேரும் நல்ல மார்க் எடுப்பாங்க சித்தி..." என்று அவருக்கு நம்பிக்கையாக கூறி இருந்தாள், சித்ராவோ "நீ சொல்லுறதுனால நம்புறேன்..." என்றார்..

சில நிமிடங்கள் கழித்து வீட்டிற்கு வெளியில் மணி ஒளிக்கும் சத்தம் கேட்க "எதோ லெட்டர் வந்து இருக்கு போலயே நான் போய் எடுத்துட்டு வாரேன்... " என எழ முயன்ற தன் சித்தப்பாவை தடுத்த ஆத்யா "நான் சாப்பிட்டு முடிச்சிட்டேன் சித்தாப்பா நான் போறேன் நீங்க சாப்பிடுங்க..." என்றப்படி வீட்டிற்கு வெளியே வந்து பார்த்திருந்தாள்...

ஆத்யா ஷாலினி என அவளின் பெயருக்கு தான் லெட்டர் வந்து இருந்தது. அதை யோசனையாக பார்த்துக் கொண்டே வாங்கியவள் என்னவென்று பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுளைந்தாள்...

அவள் தங்கை சாத்வியோ "யாருக்கு கா லெட்டர்? " என கேட்க, ஆத்யாவோ "எனக்கு தான் வந்து இருக்கு ஆனா என்ன லெட்டர்னு தெரிலயே..." என கூறிப்படியே அதை பிரித்து படித்தவளின் முகமோ நொடியில் பூவாக மலர்ந்திருந்தது...

"என்ன லெட்டர் ஆதி அது?" என சித்ரா கேட்க, ஆத்யாவோ சந்தோஷமாக "சித்தி வெளி ஊர்ல இருக்க ஒரு பெரிய கம்பனில இருந்து ஹயர் ஸ்டெடிஸ்கு ஸ்காலர்ஷிப் வந்து இருக்கு இரண்டு வருஷம் ஹையர் ஸ்டெடி பண்ணலாமாம் அதோட அந்த இரண்டு வருஷத்துல லாஸ்ட் சிக்ஸ் மந்த் இன்டர்ன்ஷிப்பும் அதே கம்பனிலயே பண்ணலாம் னு சொல்லி இருக்காங்க வித் செலரி, அதோட நம்ம வெர்க் நல்லா இருந்த அங்கயே தொடர்ந்து பர்மனென்டா வெர்க்கு பண்ணுறதுக்கும் வாய்ப்பு இருக்காம்..." என சந்தோஷமாக கூறினாள். அவள் கூறியதை கேட்ட அங்கிருந்தவர்களின் முகமும் சந்தோஷத்தை தத்தெடுத்துக் கொண்டது...

"ஐய் அக்கா செம்ம சூப்பர்..." என்றப்படி சாத்விகா,சான்விகா இருவரும் ஓடி வந்து பெண்ணவளை அணைத்திருக்க ஆத்யாவும் இருவரையும் அணைத்துக் கொண்டாள்...

சித்ராவோ "ஆ போதும் போதும் உங்க அக்காவ கொஞ்சினது, நீங்களும் ஆதி போல இப்டி வேலைக்குலாம் போக வேணாம? லேட் ஆகுது முதல்ல இரண்டு பேரும் காலேஜ்கு கிளம்புங்க..." என இருவரையும் கல்லூரிக்கு அனுப்பி விட்டவர்,ஆத்யாவின் முன் வந்து "எப்போ கிளம்பனும் ஆதி..." என சித்ரா வினாவ, அவளோ "இன்னும் ஒரு வாரதுல சித்தி..." என கூறினாள், அச்சமயம் ராஜேந்திரனோ ஆத்யா ஷாலினியின் அருகில் வந்து "படிப்புக்கு மட்டும் தானே அவங்க ஸ்காலர்ஷிப் தந்து இருக்காங்க, தங்க இடம் , சாப்பாடு எல்லாம் நாம தானே ஏற்பாடு பண்ணனும், ஒரு வாரத்துக்குள்ள ஏற்பாடு பண்ணிடலாம் குட்டிமா..." என்று அவளின் தலையை வருடியப்படியே அவர் கூறினார்...

சித்ராவின் முகமோ அதை கேட்டு யோசனையில் சுருங்கி விட்டிருந்தது, ஆத்யாவோ அதை கவனித்து விட்டு தன் கையில் இருந்த கடிதத்தை ஒரு கணம் பார்த்தவள் "இல்ல சித்தப்பா தங்குறதுக்கு இடம், சாப்பாடு எல்லாமே அவங்களே தந்துடுவாங்க, நாம எந்த செலவும் பண்ண தேவல..." என கூறினாள், ராஜேந்திரனோ அவள் கூறியதை ஆச்சரியமாக கேட்டுக் கொண்டே "உண்மையாவா, பரவாலயே ரொம்ப நல்ல கம்பெனி தான் போல..." என வியந்து கூற, அவளும் புன் சிரிப்புடன் ஆம் என்ற ரீதியில் தலையை ஆட்டிக் கொண்டாள்...

அதை கேட்டதும் சித்ராவின் முகமும் தெளிந்து விட, அங்கு மேசையில் இருந்த சக்கரையை எடுத்து வந்து ஆத்யாவின் வாய்க்குள் போட்டவர் "வாழ்த்துக்கள் ஆதி..." என புன்னகையுடன் கூறி இருந்தார், ஆத்யாவும் தன் சித்தியை பார்த்து சினேகமாக புன்னகைத்திருந்தாள்...

அவர்கள் இருவருடனும் பேசி விட்டு தனது அறைக்குள் புன்னகையுடன் வந்தவளோ அங்கிருந்த கண்ணாடியில் தன் முகத்தையே பார்த்துக் கொண்டே நின்றிருந்த சமயம், சட்டென அவளின் கண்களிலில் இருந்து ஒரு துளி கண்ணீர் கீழே விழுந்திருந்தது, அதை தன் கைக்கொண்டு துடைத்துக் கொண்டவளோ ஆழ்ந்த மூச்சு ஒன்றை எடுத்துவிட்டுக் கொண்டே "எப்போ என்ன நடந்தாலும் அது எல்லாமே உன் நன்மைக்கு தான் ஆத்யா, எப்பவும் சந்தோஷமா இருக்கனும்..." என்று தன்னை பார்த்தே சொல்லிக் கொண்டவளின் முகமோ நொடியில் புன்னகையை தத்தெடுத்துக் கொள்ள, மெதுவாக அவளின் முன் இருந்த கண்ணாடியில் சாய்ந்துக் கொண்டாள்...

அது தான் ஆத்யா எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை நன்மையாகக் கடந்து வர நினைத்து அதில் வெற்றியும் காண்பாள்...


தொடரும்…
 
Last edited:

STN - 77

New member
அத்தியாயம் 02

அடித்து எறியப்பட்ட அந்த பைல் நேராக வந்து அங்கு நின்றிருந்தவன் முகத்திலயே வந்து மோதி கீழே விழ அதை பாவமான முகத்துடன் எடுத்தவன், பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி விட்டு தனது இடத்தில் சென்று அமர்ந்து அதில் இருக்கும் பிழைகளை சரி பார்க்க ஆரம்பித்திருந்தான்...

அவனுக்கு பக்கத்தில் இருந்த அவன் சகோதரனான விஷ்வசரத்தோ "என்னடா மறுப்படியும் பல்ப் பா... " என்று இதழ்களில் அடக்கப்பட்ட புன்னகையுடன் வினாவ, "ஏன்டா இவரு இப்டி இருக்காரு நாம எப்டி இருக்கோம் ஜாலியா எப்பவும் சிரிச்ச முகத்தோட அவரு மட்டும் ஏன்டா எப்பவும் உம்முனு இருக்காரு, எதுக்கெடுத்தாலும் எரிச்சி எரிச்சி விழுறாரு ஒரு இரண்டு வார்த்தை கூட மென்மையா பேச தெரியல,இவரு நம்ம அண்ணனு சொன்ன பச்ச குழந்த கூட நம்பாது... " என ஆதங்கமாக தனது தமயனை பற்றி பொரிந்து தள்ளினான் விஷ்வசரண்...

சரத்தோ "ஏதோ புதுசா நடக்குற போல பொலம்பாம வேலைய பாருடா டேய், மறுப்படியும் அண்ணா வெளியே வந்தாரு நீ காலி டி... " என அவனது வாயை அடைத்திருக்க, சரணும் அதை கேட்டு கப் என வாயை மூடியவன் விட்ட வேலையை பார்க்க ஆரம்பித்திருந்தான்...

அச்சமயம் எம்.டி என பலகையால் அழகாக பொறிக்கப்பட்டிருந்த அறைக் கதவை வேகமாக திறந்துக் கொண்டே வெளியேறி இருந்தான், ஆறடி உயரத்தில், மாநிறத்தில் பார்க்கும் பெண்களை சுண்டி இழுக்கும் உடலமைப்புடனும், வாசிகராமான முக அமைப்புடன் அவர்கள் இருவரும் இவ்வளவு நேரமாக பேசிக் கொண்டிருந்த அவர்களின் தமையனான விஷ்வசாஹரன் நம் கதையின் கதாநாயகன்…

கருப்பு நிற கோட் சூட் அணிந்திருந்தவன், முகமோ பாறையாக இறுகி இருக்க, கண்களிளோ முன்னால் உள்ளவர்களை தூளைத்தெடுக்கும் கூர்மை இருக்க, இதழ்களோ புன்னகையை கண்டு பல வருடங்கள் ஆகியது போல இறுகி காணப்பட்டது...

அவன் அறையை விட்டு வெளியே வந்ததுமே அங்கு சல சல வென பேசிக் கொண்டே த‌ங்களது வேலையை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் சட் என பேச்சை நிறுத்தி விட்டு மரியாதை நிமிர்த்தமாக எழுந்து நிற்க, அந்த இடமே அவன் அங்கிருந்து வெளியேறும் வரை குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு மயான அமைதியாக மாறிவிட்டது. அவனோ யாரையும் பார்க்காது விறுவிறுவென அங்கிருந்து வெளியேறி விட, அவன் செல்லும் வரை அவனையே பார்த்திருந்த அனைவரும் அவன் வெளியேறி சென்றதும் பெருமூச்சுடன் தங்களது இடத்தில் அமர்ந்து தத்தமது வேலையை கவனிக்க ஆரம்பித்திருந்தனர்…

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சரணோ "பார்த்தியா டா இவரு நம்மல மட்டும் இல்ல எல்லாரையும் பயமுறுத்தி தான் வைச்சி இருக்காரு... " என்று கூறவே, அவன் கூறியதற்கு சரத்திடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. அதை கவனித்தவன் திரும்பி பார்த்த அடுத்த நொடியே தன் தலையிலடித்துக் கொண்டான் "அந்த சின்சியர் சிகாமணி கூட பிறந்தவன் தானே நீயும் அவர மாதிரி தான் இருப்ப, நான் தான் மாறி தெரியாம இங்க வந்து பிறந்து தொலச்சிட்டேன்..." என தனக்குள்ள முணுமுணுத்தப்படி தனது வேலை கடுப்பாக செய்ய ஆரம்பித்திருந்தான், சரத்தோ தனது வேலையே தனது தலையாயே கடமை என்பது போல் தன் சகோதரன் கூறியதை கூட கவனிக்காமல் தனது வேலையிலேயே கவனமாக இருந்தான்…

விஷ்வசாஹரனோ அவனுடைய ‘விஷ்வாடெக் இன்டர்நேஷனல் ஸப்ட்வேர் கம்பெனி’ ஐ விட்டு வெளியே வந்தவன், நேராக சென்றது என்னவோ அதற்கு பக்கத்திலேயே அமைந்திருந்த அவனுடைய ‘விஷ்வாடெக் அகாடமி’ கல்லூரியின் ஆபிஸ் அறையிற்குள் தான்…

உள்ளே நுளைந்தவனுக்கு முதலில் கண்களுக்கு தெரிந்தது என்னவோ, கண்களில் கண்ணாடி போட்டு, நேரத்தியாக கோட் சூட் அணிந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த விஷ்வநாதன் தான். அவர் தான் விஷ்வாடெக் அகாடமியின் டிரெக்டரும் சாஹரன், சரத், சரன் ஆகியோரின் தந்தையும் ஆவார்…

நேராக தன் தந்தையின் முன் வந்து நின்றவனோ “நாளைக்கு தானே நியூ ஸ்டுடென்ட்ஸ் இன் டெக்? எனக்கு அதுல சில டீடெயில்ஸ் தெரிஞ்சாகணும் சோ அதுக்கு உங்களோட பைல் வேணும்…” என தான் வந்த விடயத்தை நேரடியாக கூறினான்…

“நாளைக்கு இன்டெக் ஆக போற ஸ்டூடண்ட்ஸோட பர்சனல் டீடைல்ஸ், அப்புறம் யாருக்கு யாருக்கு ஹாஸ்டல் போது, யாருக்கு யாருக்கு ஸ்காலர்ஷிப் போகுது, இப்டி நிறைய பைல்ஸ் இருக்கு சாஹரா. உனக்கு எல்லாமே வேணுமா? இல்ல இதுல ஏதாச்சும் ஒன்னு தான் வேணுமா?” என அவனைப் பார்த்து கேள்வியாக நோக்கினார்…

“இல்ல பா எனக்கு நாம லாஸ்ட் டைம் வச்ச ஆப்டிடீயூட் எக்ஸாம்ல டாப் ஃபைவ் அடிச்ச ஸ்டூடண்ட்ஸ் ஓட டீடைல்ஸ் மட்டும் தான் வேணும், முக்கியமா அதுல யாருக்கு ஹாஸ்டல் என்ட் ஸ்காலர்ஷிப் போகுது அப்படிங்கற டீடைல்ஸ் தான் வேணும் அதுக்கு தான் பைல் கேட்கிறேன்…” என தனக்கு என்ன தேவை என்பதை கூறினான்…

“இதுல வழக்கம் போல டாப் பைவ் அடிச்சதுல ஸ்காலர்ஷிப் அண்ட் ஹாஸ்டல் சேர்ந்து போறது மூன்று பேருக்கு தான் ஒன்னு அர்ஜுன் அடுத்தது பிரியா அடுத்தது நிவேதா…” என்றார்…

“ஓகே நெக்ஸ்ட் ஸ்காலர்ஷிப் யார் யாருக்கெல்லாம் போகுது இப்ப சொன்ன மூணு பேர விட்டுட்டு மத்தவங்கள சொல்லுங்க…” என அடுத்த கேள்வியை கேட்டான்…

“இவங்க இல்லாம இன்னும் அஞ்சு பேருக்கு ஸ்காலர்ஷிப் போகுது சுந்தர், ரவி, சினேகா, சுதர்ஷன் கடைசியா ஆத்யா ஷாலினி…” என அவன் கேட்டதுக்கு பதில் கூறினார்…

“ஓகே எப்பவும் போல டோட்டலி எட்டு பேருக்கு ஸ்காலர்ஷிப் என்ட் மூணு பேருக்கு ஹாஸ்டல் ஓகே தேங்க்ஸ் பார் த டீடைல்ஸ் பா…” என வந்த வேலையை முடித்தவன் அங்கிருந்து கிளம்பே எத்தனிக்க அவனை தடுத்திருந்தது அவனின் தந்தையின் குரல்…

“சாஹரா…” என தயக்கமாக அவனை அழைத்தார் விஷ்வநாதன்…

“என்னப்பா சொல்லுங்க?” என செல்ல எத்தனைத்தவன் தந்தையின் குரல் கேட்டு தந்தையை கேள்வியாக நோக்கினான்…

“அது வந்து ஒரு ஸ்டுடென்ட் கிட்ட இருந்து ரிக்வெஸ்ட் ஒன்னு வந்து இருக்கு, அதுதான் அத பத்தி உன்கிட்ட பேசலாம்னு கூப்டேன், எனக்கு தெரியும் நீ இந்த விஷயத்தில் எல்லாம் எவ்வளோ ஸ்டிரிக்ட் ஆக இருப்பேனு, இருந்தாலும் உன்கிட்ட இதை சொல்லாம இருக்க முடியல, நான் சொல்றதை கேட்டுட்டு உன்னால பண்ண முடியுமா இருந்தா மட்டும் இதை கொஞ்சம் கன்சிடேர் பண்ணு…” என தயங்கி தயங்கி அவனிடம் புதிராக பேசினார்…

“சொல்ல வராத ஸ்ட்ரெயிட்டா சொல்லுங்கப்பா எனக்கு நிறைய வேலை இருக்கு, டோன்ட் வேஸ்ட் மை டைம்…” என கடினமான குரலில் தன் தந்தையை பார்த்து கூறினான்…

அவரோ பெருமூச்சை ஒன்றை இழுத்து விட்டவர் “அது ஒன்னுமில்ல பா டாப் பைவ்ல இருக்கிற ஸ்டூடண்ட்ஸ்ல போர்த் பிளேஸ்ல இருக்க ஆத்யா ஷாலினி னு ஒரு பொண்ணுகிட்ட இருந்துதான் இந்த ரிக்வெஸ்ட் வந்திருக்கு, அவளுக்கு அப்பா,அம்மா, கூடப்பிறந்தவங்கனு யாருமே இல்லையாம் சோ செலவுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்காம் அதனால எக்ஸ்ராவா அவளுக்கும் ஹாஸ்டல் ரூம் ரெடி பண்ணி தர முடியுமான்னு ரிக்வஸ்டா கேட்டு இருக்கா, இதை நீ கொஞ்சம் கன்சிடர் பண்ணலாமே…” என தான் சொல்ல வந்ததை ஓரே மூச்சாக சொல்லி முடித்தார்…

அவர் கூறியதை கேட்டவன் முகமோ நொடியில் இறுக, தன் தந்தையை அழுத்தமாக பார்த்தவன் “அப்பா உங்களுக்கே தெரியும் நான் இந்த விஷயத்திலலாம் எவ்வளவு ஸ்ட்ரிக்டா இருப்பேனு, என்னால எந்த ரூல்ஸையும் பிரேக் பண்ண முடியாது. எப்டிடீயூட் எக்ஸாம்ல டாப் த்ரீ வரவங்களுக்கு மட்டும்தான் ஸ்காலர்ஷிப்பும் ஹாஸ்டலும் அதுக்கு கீழ இருக்க அஞ்சு பேருக்கு ஸ்காலர்ஷிப் மட்டும் தான். இதுதான் இது நாள் வர இங்க ரூல்ஸா இருக்கு யூ நோ தட் வெரி வெல் சோ ஐ டோன்ட் கேர் யாருக்கு அப்பா அம்மா இருக்கு இல்லங்கிறது என்னால இந்த ரூல்ஸ் பிரேக் பண்ண முடியாது…” என அழுத்தம் திருத்தமாக தன் தந்தையை பார்த்து கூறினான்…

“சாஹரா அதெல்லாம் சரி தான்பா, ஆனா நமக்கு தான் இதுவரையும் இப்படி எந்த ரிக்வெஸ்ட் வந்ததில்லல? படிக்க கஷ்டபடுற பிள்ளைக்கு ஹெல்ப் பண்றதால நாம எதுவும் குறைஞ்சு போயிட மாட்டோமே, நம்மகிட்ட தான் நிறைய ஹாஸ்டல் ரூம் அவைலபிளா இருக்குல்ல ஒரு ஆளுக்கு எக்ஸ்ட்ராவா கொடுக்கிறதுல என்னப்பா பிரச்சனை வந்துர போகுது?” என அவனைப் பார்த்து தன்மையாக கேட்டார்…

“இங்க ஹாஸ்டல் ரூம் இருக்கு இல்லங்கிறது எனக்கு பிரச்சனை இல்ல நான் ஃபாலோ பண்ணிட்டு வர ரூல்ஸ யாருக்காகவும் என்னால பிரேக் பண்ண முடியாது. அவ எப்படி வேணா இங்க வரட்டும் ஐ டோட் கேர் ஸ்காலர்ஷிப் மட்டும் கொடுப்பேன் அவ்வளவுதான். அவளால அப்படி இங்க வந்து இருந்து படிக்க முடியாலனா வராம இருக்கட்டும், எனக்கு அட்லீஸ்ட் ஒரு ஸ்காலர்ஷிப் ஆவது மிச்சமாகும், ஏழு பேருக்கு ஸ்காலர்ஷிப் கொடுத்து என் வேலையை பார்த்துட்டு நான் போய்க்கொண்டே இருப்பேன்…” என தன் தந்தையை பார்த்து எரிச்சலாக கூறியவன் அடுத்து அவர் பேச வரும் முன்னே அந்த அறையில் இருந்து விறு விறுவென வெளியேறி இருந்தான்…

செல்பவன் முதுகையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவருக்கு பெருமூச்சு ஒன்றே வெளியானது. என்ன தான் அவர் அந்த அகாடமியின் டைரக்டராக இருந்தாலும் முக்கியமான சில விடயங்களுக்கு முடிவெடுப்பது என்னவோ விஷ்வசாஹரனின் கையில் தான் இருந்தது…

விஷ்வநாதனின் குடும்பத்தில் மொத்தமாக ஐந்து பேர் தான் விஷ்வநாதன், மகாலட்சுமி விஷ்வநாதன், விஷ்வசாஹரன் மற்றும் விஷ்வசரத், விஷ்வசரன் ஆகி ஐந்து பேர் கொண்ட குடும்பமே அவர்களுடையது, அதில் எல்லாருமே மென்மையான மனம் கொண்டவர்கள் தான், யாரின் மனமும் புண்படுடாமல் நடப்பவரகளே ஆனால் இதில் விதிவிலக்காக வந்து பிறந்தவன் தான் விஷ்வசாஹரன்…

அவர்கள் நால்வரிடமும் இல்லாத கடினமும் திமிரும் அவனிடம் சேர்ந்தே இருந்தது. சிரிப்பு என்றால் என்னவென்று கேட்பவன், தன்மையாக நான்கு வார்த்தைகள் கூட பேச தெரியாதவன். தங்கள் குடும்பத்தில் இவன் மட்டும் எவ்வாறு இப்டி பிறந்தான் என்பதை அடிக்ககடி அவர்களே யோசித்துக் கொள்ளும்நிலை தான் அவர்களுடையது. அதே போல் தான் இப்போதும் யோசித்துக் கொண்டார் விஷ்வநாதன்…

என்ன தான் அவன் இந்த அளவுக்கு கடினமானவனாக இருந்தாலும் தன்னை சார்ந்தவர்கள் மீது அளப்பரிய அன்பும் பாசமும் கொண்டவன், ஆனால் என்ன அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டான் அவ்வளவு தான்…

ஆரம்பத்தில் அவனும் இவர்களை போல இல்லை என்றாலும் கொஞ்சம் மென்மையானவனாக தான் இருந்தான் ஆனால் அவனின் வாழ்வில் நடந்தேறிய சில சம்பவங்களே அவனிடம் இருந்த கொஞ்சநஞ்ச மென்மையையும் துடைத்தெறிய செய்தது. அவனும் தனக்குள் இறுகி கொண்டான்…

இப்படி உணர்வுகளை தனக்குள் புதைத்துக் கொண்டு வெளியே தீயாக இருப்பவனையும் அதே சமயம் பல வலிகளை தனக்குள் புதைத்து வெளியே சிரித்துக் கொண்டு இருப்பவளையும் விதி எனும் சதி சேர்த்து வைக்க நினைத்தால்?



தொடரும்…
 
Top Bottom