துணை - 19 (இறுதி பாகம்)

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 95

Member
May 5, 2026
53
43
18
அப்படியே பத்து நாள் கடந்திருக்க, வேலையை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த சுபாஷ், அவ்விடம் எங்கோ சென்ற குருமூர்த்தியை சந்தேகப்பட்டு பின் தொடர்ந்து சென்றார்.

குருமூர்த்தியோ மூன்று கால சக்கரத்தை ஏதேதோ மந்திரங்கள் கூறி பூஜை செய்தவர், விஷ்வநாத் புகைப்படத்தை எடுத்து “எப்போவும் நீயே டாப்ல இருப்பியேடா.. என்ன உன் அடிமை போல தான வச்சிருந்த.. ஒன்ன ஒன்னும் இல்லாம மாத்துறேன்டா.. என் பொண்டாட்டி நிலமைக்கு காரணம் உன் ஆசை தங்கச்சியில்ல நான் தான்.. உன் பொண்ணு கூட ஒருநாள் குடும்பம் நடத்திருக்கேன்.. சும்மா சொல்ல கூடாது செமயா இருந்தா” என்று அவரின் குடும்பத்திற்கு தான் செய்த துரோகத்தோடு சம்யுக்தாவை கெடுத்ததை வர்ணித்து ஏளனமாக கூறி கொண்டிருந்தவர், ஒளி வரவும் அதன் மேல் விஸ்வநாத் புகைப்படத்தை வைத்து ஏதோ கண்கள் முனங்கி கொண்டிருந்தார்.

அனைத்தையும் தனது திறன்பேசியில் படம் பிடித்த சுபாஷ், அவர் தியானத்தை பயன்படுத்தி ரெண்டு சக்கரத்தை மட்டும் தூக்கி கொண்டு நழுவியிருந்தார்.

அக்காலக்சக்கரத்தை பற்றி முன்னமே அறிந்திருந்த சுபாஷ், அது உதித்த இடத்திற்கு கொண்டு வந்து காட்டம்மன் அருகேயிருந்த பெரிய பெட்டியை திறந்தவர், அதிலிருந்த இன்னொரு பெட்டியை கண்டவரின் மூளை சிந்தித்தது.

அதனை கையில் தூக்கி காலசக்கரத்தை வைப்பதற்கு முன், தன்னுடைய தோள்பையிலிருந்த மடிக்கணினியை எடுத்து திறன்பேசியில் தான் எடுத்த பதிவை அதில் மாற்றி பென்டிரைவ்வில் சேகரித்தவர்,

ஒரு காலச்சக்கரத்தில் கட்டி பென்டிரைவ் மேலே தெரியாதப்படி வைத்தவர் “கடவுளே ஒரு நல்ல விஷயத்துக்காக இத அந்த குகைகுள்ள மறைச்சி வைக்கிறேன்.. நீ இத பாதுக்காப்பா பாத்துக்க” என்று பெட்டியை எடுத்து கொண்டு குகைக்குள் சென்றவர் மறைத்து வைத்துவிட்டு ஓடி வெளியே வந்திருந்தார்.

பின் ஓடி வந்தவர் மனைவிவரும் காரை கண்டு அதில் ஏறிருக்க, சிறிது நேரத்தில் கார் அடித்து தூக்கி வீசியது.

பொது மக்கள் தயவால் இருரையும் மருத்துவமனை சேர்த்திருக்க, மனைவி உயிர் பிரிந்ததை அறிந்து, அங்கு வந்த மகனிடம் இறுதியாக “ஆக்சிடென்ட்.. குருமூர்த்தி.. காட்டம்மன்.. குகை சக்கரம் ஆதாரம்.. கண்டுபிடி” என்று அவர் முழுங்கி பேசிய வார்த்தைகளில் இது மட்டுமே விக்கியின் காதில் விழுந்திருக்க, இதற்கு காரணம் குருமூர்த்தி என்று உணர்ந்தவன் தந்தையின் உயிர் போனதில் உடைந்து அழுதான்.

பின் பெற்றோரை இழந்து கீதா ரகுவின் அன்பில் கல்லூரி படிப்பை தேவாவுடன் இங்கேயே தொடங்க, குருமூர்த்தியே பெற்றோர் இழப்பிற்கு காரணம் என்று தெரிந்தும்,

கீதாவின் அன்பை மனதில் கொண்டு அவரின் குடும்பத்தில் நிம்மதி கெடுக்க வேண்டாம் என்று நினைத்துவிட்டான்.
***
யாரோ தெரிந்தவர் மூலம் காலச்சககரம் பற்றி கேள்விப்பட்டு காட்டம்மன் கோவில் பூசாரிகளில் நம்பிக்கையான ஒருவரை கைக்குள் போட்டு கால சக்கரத்தை கைபற்றியிருந்தார் குருமூர்த்தி.

அவரிடமே பூஜை மந்திரம் அனைத்தும் கற்று கொண்டு, ரெண்டு முறை தானே செய்து வெற்றி கண்டவர் அவரையும் போட்டு தள்ளிவிட்டார்.

அன்று சுபாஷ் அதனை எடுத்து சென்றதும் தியானத்திலிருந்த விழித்த குருமூர்த்தி அவ்விடம் கிடந்த சுபாஷின் ஓட்டுநர் உரிமைத்தை வைத்தே, இது அவரின் வேலை என்று கண்டறிந்து, அழைப்பு விடுத்தார்.

அப்போது தான் மனைவி காரில் ஏறி உண்மையை கூறி கொண்டிருக்க, அவரிடமிருந்து வந்த அழைப்பை ஏற்றதும் குருமூர்த்தி “சுபாஷ்.. ஒழுங்கா நீ எடுத்தத கொடுத்துரு”

“அது இருக்க வேண்டிய இடத்தில பத்திரமா இருக்கு கூடவே உன்ன பத்தின ஆதாரமும் அதோட தான் இருக்கு.. அதுவும் குகைல தான் இருக்கு முடிஞ்ச எடுத்துக்க” என்று அழைப்பு துண்டித்ததும்.

தனக்கு தகவல் கிடைத்துவிட்டது என்று தன் அடியாட்களுக்கு அழைப்பு விடுத்து கணவன் மனைவி சென்ற காரை தூக்கி விட்டார்.

அதன் பின் தன் தொல்லியல் துறை நண்பன் மூலம் எடுக்க திட்டமிட்டு அங்கிருந்த ஆபத்தில் அதனை கைப்பற்ற தோல்வி தழுவியும் மீண்டும் முயற்சித்தவருக்கு பொளர்ணமிக்கு சென்றால் எந்த ஆபத்தும் நேராது எந்த ரகசியம் மற்றும் தெரியாமல் போய் விட்டது. இல்லையென்றால் மறுபடியும் அதனை கைபற்றி இருப்பார்.

சுபாஷ் சென்ற நேரம் பொளனர்மி தினம் என்பதால் பெரிதாக எந்த பாதிப்பு ஏற்படாமல் வெளியே வந்துவிட்டார்.

தன்னை பற்றின சந்தேகம் வரமால் நடித்த குருமூர்த்தி சம்யுக்தா சாயலிலிருந்த ஶ்ரீநிதியையும் பேசுகிறேன் என்று தப்பான எண்ணத்தில் தொட, முதலில் புரியாமல் தொடுகை மாற்றம் உணர்ந்து பெண்ணவள் விலக ஆரம்பிக்க, அவளை பார்க்கும் வண்ணம் அவரின் தொடுகையை தவிர்க்க படாது பாடு படுவாள்.

அதன் பின் பெண்ணவள் வயசுக்கு வந்திருக்க சம்யுக்தா இங்கு வர மறுத்ததால் தங்களுக்குள்ளே தலைக்கு தண்ணீர் ஊற்றி அனுப்பி வைத்துவிட்டனர்.

ரெண்டு வருடம் கழிந்த நிலையில் ஶ்ரீநிதி சடங்கு வைக்க கேட்டதிற்கு “அத்தை குடும்பம் வந்தால் வருவேன்” என்று சம்யுக்தா வேண்டுகோள் விடுக்க, முதலில் மறுத்த விஷ்வநாதன்,

எட்டு வருடம் கழிந்து குருமூர்த்தியின் தூண்டதல் படி வழியின்றி தங்கச்சி குடும்பத்தை அழைத்து மகள் வரவும் சம்மதிக்க வைத்திருந்தார்.

தந்தை தன் வேண்டுக்கோளை இம்முறையும் மறுத்துவிடுவார் என்று எண்ணிய சம்யுக்தாவிற்கு,

அவரின் மாற்றம் அதிர்ச்சியாகவும் கூடவே குருமூர்த்தி வேலை என்றும் கண்டு கொண்டு, போயிட்டு நான்கு நாட்களில் திரும்பி விடலாம் என்று எண்ணி கொண்டிருக்கும் போது தான் சென்னையில் தன்னுடைய அலுவலகத்தில் குருமூர்த்தி ஒருமுறை வந்து போனது கண்டு அவர்கள் பேசுவதை ஓரமாக நின்று கேட்ட போது தான் ஆதாரம் என்று பேச்சு பட, அவரை பழி வாங்க இதைவைத்து சந்தர்ப்பத்தை உருவாக்கலாம் என்று திட்டமிட்டாள்.

அவர் வந்து சென்ற மறுநாள், அவரின் நண்பரான மேலதிகாரி குகையில் தேடும் வேட்டையை கொடுத்திருக்க, உடனே ஒத்துக்கொள்ள கூடாதென்று மறுத்ததிற்க தோழி வேறு நச்சரித்ததில் அடுத்த முறை சம்மதம் கூறி வேட்டையை கையில் எடுத்தாள்.

இவர்களின் தேடுதல் இடத்தை அறிந்து கொண்ட விக்கிக்கும் இதனை தானும் பயன்படுத்தி கொண்டு அவரை பற்றின உண்மையை வெளிச்சமாக்கி பழிவாங்க அவர்களுடன் இணைந்திருந்தான்.

அத்தகைய ஆர்வமே பாம்பு கொத்தையும் பாராது காலசக்கரத்தை கையில் எடுத்திருந்தான்.

காலசக்கரத்தை கைபற்றி கொண்டு தோழியுடன் அதிகாரிடம் ஒப்படைத்த சம்யுக்தா “அவர் திறக்கும் வேலையில் ஒரு நிமிஷம்” என்று அதனை தானே எடுத்து கொண்டு

“இத எங்க சேக்கணுமோ.. அங்க சேக்குறேன் சார் மறுபடியும் இத எடுக்க நினைச்சா.. நீங்க உங்க ப்ரெண்ட் குருமூர்த்திக்காக செய்ற சதி வேலையை வெளிய சொல்லி உங்கள ஒன்னும் இல்லாமல் ஆக்கிடுவேன்” என்று பெண்டிரைவ்வை தூக்கி போட்டு “இத உங்க ப்ரெண்ட் கிட்ட கொடுங்க.. காலச்சக்கரம் பத்தி கேட்டா உடனே தர முடியாது.. அது இதுன்னு சொல்லி சமாளிங்க அதுக்குள்ள அவர் கதைய நான் முடிக்கிறேன்” என்று காலச்சக்கரத்துடன் அங்கிருந்து இரு பெண்களும் புறப்பட்டனர்.

அவள் கூறியது பென்டிரைவ்வை அவரும் குருமூர்த்தியிடம் சேர்த்து விட்டார்.

அவருக்கு சந்தேகம் வர கூடாதென்றே இரு பதிவாக மாற்றி ஒன்றை அவரிடம் கொடுத்துவிட்டு தான் ஒன்று வைத்து கொண்டாள். அதோடு அப்பதிவை நால்வரும் பார்த்திருக்க,

சம்யுக்தாவும் தேவா சேர்ந்து கடந்த கால நிகழ்வை தேவிபிரியாவிடம் ஒபித்து விட, கூடவே தன்னவன் சிறிது வயதிலே கண்டு இருக்கிறான் என்ற உண்மையும் சேர்த்தே தேவி பிரியா அறிந்திருந்தால்,

அதோடு மூவரும் உண்மை அறிந்து வேதனையாக சம்யுக்தாவை ஆறுதல் படுத்த எத்தகைய வார்த்தைகள் பயன் படுத்துவது என்று தெரியாமல் திண்டாடி போனார்கள்.
***
தன் கசப்பை கொட்டி தீர்த்த சம்யுக்தா
அறைக்குள் சென்று முடங்கி விட, தேவிபிரியா தோழியின் பின்னே சென்று ஆறுதல்படுத்த, தேவாவோ குடும்பத்தினருக்கு கண்ணை காட்டி வெளியேறினான்.

இரவு போல் சம்யுக்தா தோழியை அழைத்து கொண்டு ராத்திரியோடு ராத்திரியாக சென்னை பேருந்து ஏறி மறுநாள் வீடு சேர்ந்த பின் தான் தேவிபிரியாவிடம் அழைப்பு அழைத்து வந்ததாக குடும்பத்தினரிடம் கூற கூறிவிட்டு அறைக்குள் சென்று படுத்து கொண்டாள்.

தேவிபிரியாவிற்கு என்ன தான் பெற்றோருடன் தங்க குடும்பம் இருந்தாலும் வேலை சேர்ந்த பின் இருவர் மட்டும் தனியாக தேவிபிரியாவின் பெற்றோரை விட்டு தள்ளி வசித்தனர். ஆனாலும் விடுமுறை அன்று பெண்கள் அங்கு சரியாக ஆஜராகி விடுவார்கள்.

நேற்றைய துயரத்தின் வீரியத்தால் நான்கு உறங்கி மதியம் போல் கண்விழித்த சம்யுக்தா அருகே படுத்திருந்த தேவாவை கண்டு பதறி விலகி அமர்ந்தவள், உறக்கத்தில் இருந்தவனை தலையணை கொண்டு அடித்து எழுப்பிருந்தாள்.

அதில் எழுந்தமர்ந்து புன்னகைத்தவனை கண்டு “நீ எதுக்கு வந்த” என்று தான் கேட்டிருந்தாள்.

*இது என்ன கேள்வி பொண்டாட்டி பாக்க புருஷன் வராம.. யாரு வருவா”

“சும்மா பேசி என்ன கடுப்பேத்தாத.. முதல வெளிய போ பங்கு என்ன நினைப்பா”

“புருஷன் கூட ஒரே ரூம்ல தூங்குறன்னு நினைப்பா.. அதோட கூட என் ப்ரோ இருக்கான் சோ உன்ன நினைக்க கூட நேரம் இருக்குமோ இல்லையோ” என்றவன் மாறி மாறி பேசியதில் சோர்ந்தவள் “ஏன்டா என்ன படுத்துற உனக்கு என்ன தான் வேணும்”

“நீ தான்டி வேணும்”

“விளையாடத வேந்து என்னால உனக்கு ஹேப்பினஸ் கொடுக்க முடியாதுடா.. ஏன் நீ கொடுக்கிற ஹக் கூட என்னால ஏத்துக்க முடியல” என்றவளின் வார்த்தை வேதனையாக ஒலித்தது.

அவளின் வேதனையில் உள்ளம் துடித்தவன் “சோ வாட்?.. என்ன பாத்தா செக்ஸ்க்கு அலையுறவன் போல இருக்கா*

“அப்படி சொல்லலடா.. புருஷன் பொண்டாட்டிக்குள்ள நடக்குற ஒரு புனிதமான உறவு நமக்குள்ள நடக்காது சோ நீ வேற கல்யாணம் பண்ணிட்டு..” என்று முடிப்பதற்குள், அவளை அறைந்தவன் “தேவையில்லாம பேசின பல்லு தெரிச்சுடும்.. எனக்கு உன் கூட இருக்கிற வாழ்நாள் போதும்.. நீ எனக்காக கொடுக்கற அன்பான காதல் போதும்..”

“நான் உன்ன ஹர்ட் பண்ணிடுவேன் பயமா இருக்குடா” என்றவள் அதற்கு மேல் முடியாமல் குலுங்கி அழுது விட, அவளின் கையை பற்றி ஆடவன் ஆறுதல் அளிக்க முயல பெண்ணவள் வெடுக்கென்று கையை இழுத்திருந்தாள்.

அதில் வலித்தாலும் தேவாவிற்கு அவள் நிலை நன்றாகவே புரிய, அமைதியாகவே விலகி நின்றான்.

மேலும் துடித்த சம்யுக்தா “பாத்தியா என் கைக்கூட உன்ன பிடிக்க விடாம ஹர்ட் பண்ணிட்டேன்.. நான் வேண்டாம் வேந்து உனக்கு.. உன்ன இப்படி சின்ன விஷயத்துக்கு ஹர்ட் பண்ணி.. நானும் மேலும் வலில துடிக்குறேன்டா”

*என்ன பாரு என்று” அவளை தன் கண்ணை பார்க்க வைத்தவன் “என்ன நம்புற தான.. என் காதல் மேல உனக்கு நம்பிக்க இருக்கு தான.. கண்டிப்பா என்னால உன்ன இதுலயிருந்து மீட்டு கொண்டு வர முடியும்டி.. டிரஸ்ட் மீ யுதா அன்ட் கிவ் மீ சான்ஸ்” என்றதை கேட்டு கண்ணை துடைத்தவள்

“சரி ஓகே சான்ஸ்ஸ் தரேன்.. அண்ட் ஒன் மோர் நான் உன்ன இப்படி அவாய்ட் பண்ணும் போது.. உன்னோட முகம் சுருங்கிச்சுன்னா அடுத்த நிமிஷம் என்னவிட்டு போக சொல்லிடுவேன்.. நீ போயிடனும்” என்க,

அவனோ சாதரணமாக “டபில் டன் பொண்டாட்டி” என்று கூறி கண்ணடித்திருந்தான்.
***
அழைப்பு மணி சத்தம் கேட்டு கதவை திறந்திருந்த தேவிபிரியா வாசலில் நின்ற இருவரையும் கண்டு கொள்ளாமல் சமையல் அறைக்குள் சென்றிட, ஆடவர்களும் பின்னாடியே சென்றிருந்தனர்.

அவளோ, அவர்களை பொருட்டாக மதிக்காமல் மதிய உணவிற்கு காய்களை நறுக்கி கொண்டிருக்க, தேவாவோ “பியூட்டி வீட்டுக்கு வந்தவங்களுக்கு காபி டீ தருற பழக்கம் இல்லையா” என்றதை கேட்டு முறைத்த பாவையோ பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்திருந்தாள்.

அதற்குமேல் பொறுமையிழந்த தேவா, அடுப்பை அணைத்துவிட்டு தேவியின் கையை பற்றி “இப்போ எதுக்கு என்கிட்ட மூஞ்ச தூக்கிட்டு இருக்க”

“இங்க பாரு மாமா.. எனக்கு உன்ன பிடிக்கும் உன்மேல மரியாதை நிறையா இருந்துச்சு.. ஆனா உன் மாமன் சவால்ல ஜெயிக்க.. அவள யூஸ் பண்ணிருக்க என்னால அத மன்னிக்கவே முடியாது”

“அய்யோ இன்னும் இந்த பிரச்சின முடியல.. ஆமா அடுத்தடுத்து நாள் என்கிட்ட நல்லா தான பேசின”

“அது சூழ்நிலை பேச வச்சுது.. ஆனா எனக்கு அத டைஜஸ்ட் பண்ண முடியல” என்றதை கேட்டு பெருமூச்சுவிட்டவன் தன்னவளின் பால்கனியை குதித்து வந்தபோது கொடுத்த விளக்கத்தை தம்பியின் காதலிக்கும் கூறி புரிய வைத்திருந்தான்.

அவனின் வார்த்தையில் உண்மையை உணர்ந்த தேவிபிரியா தான் அவனை தவறாக புரிந்ததற்காக “சாரி” என்று மன்னிப்பு கேட்டிருந்தாள்.

அதில் கண்ணடித்து புன்னகைத்தவன் “இட்ஸ் ஒகே பியூட்டி.. இனி கொஞ்ச காலம் எங்க வனவாசம் இங்க தான்”

“ம்ம்.. உங்கள நம்பி தான் இருக்கேன் என் பங்கு எல்லாரும் போலவும் சந்தோசமா மாத்திடுங்க..”

“சத்தியமா மாத்திடுவேன்.. சரி இப்போ போய்.. அவ ரெண்டு கத்துவா அவள மலை இறக்கிட்டு வரேன்” என்று நொந்தவன் “வாழ்க்க முழுக்க இந்த பொண்டாட்டிங்ககிட்ட விளக்கம் கொடுத்தே முடிஞ்சிடும் போல” என்று வாராத கண்ணீரை துடைத்து ஃபீல் செய்தான்.

அதில் பெண்ணவளின் முறைப்பு பார்வை பரிசாக பெற்று தன்னவளை தேடி சென்றவன், அவள் உறங்கியதால் அவளைவிட்டு சற்று தள்ளி தானும் உறங்கிவிட்டான்.
 

Author: STN - 95
Article Title: துணை - 19 (இறுதி பாகம்)
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

STN - 95

Member
May 5, 2026
53
43
18
அவன் சென்றதும் அணைத்த அடுப்பை மறுபடியும் பற்ற வைத்து தேனீர் போட்டு தன்னவனுக்கு கொடுத்துவிட்டு சமையல் வேலையை தொடர்ந்தாள் தேவி பிரியா.

தேனீரை கீழே வைத்தவன், பெண்ணவளை தன் மார்போடு மோதவிட்டு “இப்போ உனக்கு என்னடி கோவம் என்மேல*

“ஸ்கூல் படிக்கும் போதே என்ன டாவ் அடிச்சிட்டு.. நான் உன்கிட்ட லவ்வா பேசும் போது என்கிட்ட வள்ளு வள்ளு விழுந்த தான” என்று உதட்டை சுழித்து கொள்ள,

அதில் புன்னகைத்தவன் “நீ டான்ஸ் ரிகர்சல் பாக்கும் போது சம்கிட்ட கொட்டு வாங்கி பாவமா நின்னியா.. அப்போவே எனக்கு உன்மேல க்ரஸ்.. யாருக்குமே தெரியாம உன்ன ரசிக்கவும் மறக்கல.. அடுத்து என்னவோ நடந்து போச்சு.. உன்ன ஒரு தடவையாவது நினைக்காம இல்ல அந்த பத்து வருஷத்துல அப்புறம் நீ அடிச்சதும் கூட முதல எங்கையோ பார்த்த மாதிரி இருந்துச்சே தவிர

நீ தான் அடையாளம் தெரியல தேவா சம் ப்ரெண்ட் சொல்லவும் தான் தெரிஞ்சிது.. ஆனா தேவா மாமாகிட்ட போட்ட சல்லேன்ஜ்காக தான் லவ் பண்ண போறேன் சொன்னான்.. அது பின்னாடி பிராப்ளம் ஆயிட கூடாதுன்னு எங்க உன்ன லவ் பண்ணிடுவேனோன்னு உன்கிட்ட கடுகடுன்னு இருந்தேன்.. பட் அனைத்தும் வீணாகிவிட்டது செல்லமே.. இப்போ மொத்தமா உன்னட விழுந்துட்டன்.. லவ் யூ ரியா” என்றும் அவள் கண்டு கொள்ளாததில்

“ரொம்ப தாண்டி அலைய விடுறீங்க” என்று ஆடவன் அவளைவிட்டு விலக,

“தேவிபிரியா உன்னவிட கம்மி தான்” என்று கூறி அவனின் சட்டை பிடித்து தன்னோடு நெருக்கியவள் “காதலிக்கிறது விட காதலிக்க படுறது ஒரு வரம்ல.. அது உன் முலமா கிடைச்சிருக்குன்னு நினைச்சி ஹேப்பி.. ஆனா என்ன எனக்கு தான் அப்போ தெரியல வருத்தம்”

“மறுபடியும் ஆரம்பிக்காத” என்றவனின் இதழை கடித்து இழுத்தவள் “லவ் யூ விச்சுமா.. யூ ஆர் பார்ட் ஆஃப் மை பெட்டர் ஹாஃப்..” என்றவள், அவனின் குறுகுறு பார்வை தாங்காமல் முடியாமல் திரும்பி நிற்க,

அதில் அவளை பின் நின்று அணைத்தவன் “ஜஸ்ட் ஃபேஸ் பாக்குறதுக்கு திரும்பிட்ட.. இன்னும் பாக்க வேண்டிய இடம் நிறையா இருக்கே அப்போ என்ன பண்ணுவீங்க மேடம்”

“ச்சீ போடா ஷையா வருது” என்று அவனின் மார்பில் புதைந்து கொள்ள, அவளின் நாடியை இழுத்து தன் இதழோடு இதழ் சேர்த்தவன் தன்னவளின் இதழ் தேனை நிதானமாக ஆசை தீர பருகினான்.
***
மறுநாள் ஜோடியாக அமர்ந்து காலை உணவை சாப்பிட்டு கொண்டிருக்க, அப்போது தொலைகாட்சியில் ஓடிய “பிரபல தொழில் அதிபரின் ஒருவரான மிஸ்டர் குருமூர்த்தி மனைவியை கொல்ல முயற்சித்த குற்றத்துக்காக போலீஸார் கைது செய்த நிலையில் அவமானம் தாங்காமல் காவல் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த சாலையில் குதித்து லாரியில் நசுங்கி உயிர் இழந்தார்” என்ற செய்தியை கண்டு பெண்கள் மிரண்டு அமர்ந்திருக்க,

ஆண்களோ எந்த வித திகைப்புமின்றி கிரிக்கெட் பார்ப்பது போல் சாதரணமாக பார்ப்பதை கண்டு பெண்கள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து,

ஒரு சேர “உங்க வேலை தானா” என்றதும் சகோதரர்கள் இருவரும் புன்னகை முக அவரவர் துணைகளை நோக்கி கண்ணடிக்க

முறைத்த மங்கைகள் “ஏன் இப்படி” என்றதுக்கு தேவா “அவன் பண்ணினது ஒரு தப்பு மட்டும் இல்ல.. தப்புக்கு மேல தப்பு ஜஸ்ட் ஜெயில் தண்டனைல ஈஸியா வெளிய வந்திடுவான்.. அதுல எங்களுக்கு உடன்பாடு இல்லை.. அண்ட் அவர அரெஸ்ட் பண்ணின போலீஸ் என் ப்ரெண்ட் தான்..

சோ போயிட்டு போட்டு தள்ளிட சொன்னேன் அவன் யாருக்கும் பிரச்சினை வராம ஈஸியா முடிச்சிட்டான்.. அண்ட் ஒன் மோர் நானும் இவனும் மட்டும் இல்ல விஜிமா பிரசன்னா குடும்பமே கூட்டு தான் உங்க ரெண்டு பேர் தவிர” என்று எழுந்தவன் “கெட்டவன் அழிஞ்சுட்டான் கூடவே அவன் பண்ணின கேட்ட விஷயம் அழியும்.. நான் அழிப்பேன்” என்று உறுதியான வார்த்தையை உதித்தவன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

அவன் சென்றதும் பின்னயே பெண்ணவள் ஓடி விட, தேவிபிரியாவோ தன்னவனை அணைத்து அமைதியாக தோள் சாய்ந்து கொள்ள,

தேவாவின் பின்னயே சென்ற சம்யுக்தா ஆடவனை இறுகயணைத்து இருந்தாள்.

அதில் ஆடவனின் உணர்வுகள் ஆர்பறிக்க, அவளை மெல்ல தன்னைவிட்டு விலக்க சம்யுக்தாவோ அவனை நெருங்கி இதழை அடைந்து முதல் முத்திரை பதித்தவள், அவன் பதில் முத்தம் கொடுக்கவும் பட்டென்று தள்ளிவிட்டு நகர்ந்து கொண்டாள்.

துயர் தொடரும்..
 

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
எதே தொடருமா???? அப்ப ஏன் டா completed அப்படின்னு போட்டு வெச்சி இருக்கீங்க????
 

STN - 95

Member
May 5, 2026
53
43
18
Illa akka mudinchithu athu aduthu aduthu thodarum pottathula appadiye pottu iruppen pola 🫣🫣