• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நண்டுக்கறி

ரோசி கஜன்

Administrator
Staff member
நண்டுக்கறி


1541950489084.png


தேவையான பொருட்கள்:


நண்டு – 4 (500கிராம் )

பெரிய வெங்காயம் – 2

பச்சை மிளகாய் - 4

பூண்டு - 6

இஞ்சி - சிறு துண்டு

மிளகாய்த்தூள்- 3 தேக்கரண்டி (தேவையான உறைப்பிற்கேற்ப)

மஞ்சள்தூள் – சிறிதளவு

பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி

கடுகு – சிறிதளவு

மிளகு – சிறிதளவு

வெந்தயம் – சிறிதளவு

தேங்காய் – பாதி (துருவிய பூ)

பழப்புளி – சிறு எலுமிச்சை அளவு உருண்டை.

எண்ணெய் – தாளிக்கத் தேவையான அளவு

கறிவேப்பிலை, உப்பு, புளி - தேவையான அளவு



செய்முறை:


1 நண்டைச் சுத்தம் செய்து, பெரியதெனில் நான்காகவும் சிறியதாயின் இரண்டாகவும் உடைத்துக்கொள்ளுங்கள். பெரிய கால்களை இரண்டாக முறிக்கலாம்.


2 வெங்காயம், பச்சைமிளகாயை நீட்டு நீட்டாக வெட்டித் தனித்தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

3 உள்ளியையும் இஞ்சியையும் பேஸ்ட் பண்ணிக்கொள்ளுங்கள். சிறு உரல் இருந்தால் இடித்து எடுக்கலாம். அல்லது காரட் சீவுவதில்(சிறு அச்சில்)சீவி எடுங்கள்.

4. பெருஞ்சீரகம், மிளகு, தேங்காய் பூ என்பவற்றை வறுத்து, மிக்சியில் பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள். ( தேங்காய் பூ பொன்னிறமாக வரவேண்டும்.)

5. கறி சமைக்கும் பாத்திரத்தில் (அடி கனமானதாயின் நன்று) சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சூடேறியதும் கடுகு சேர்த்து, வெடித்ததும், பெருஞ்சீரகத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.

6 பின், வெந்தயம் சேர்த்து, அது நிறம் மாறத் தொடங்க, வெட்டிவைத்த வெங்காயத்தையும், பச்சை மிள்காயையும், உள்ளி இஞ்சி பேஸ்ட்டையும் போட்டு நன்றாக வதக்கவும்.


7 பின், நண்டை போட்டு கிழறி வதங்க விடவும். கொஞ்சம் வதங்கி வந்ததும் அதற்குள் பழப்புளியைக் கரைத்து விடவும். அத்துடன் நண்டு அவியத் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

8 அடுத்து, மிளகாய்தூள், உப்பு என்பவற்றைச் சேர்த்து, கலந்து மூடி அவிய விடவும்.

9 நண்டு அரை அவியல் அவிந்ததும் அதற்குள் தேங்காய் பேஸ்ட் கலந்து நன்றாக பிரட்டி மீண்டும் கொதிக்க விடவும்.

10 நண்டு நன்றாக வெந்து கறி பிரட்டலாக வரும் போது கறிவேப்பிலை சேர்த்து இறக்குங்கள்.






 
நண்டுக்கறி


View attachment 27


தேவையான பொருட்கள்:


நண்டு – 4 (500கிராம் )

பெரிய வெங்காயம் – 2

பச்சை மிளகாய் - 4

பூண்டு - 6

இஞ்சி - சிறு துண்டு

மிளகாய்த்தூள்- 3 தேக்கரண்டி (தேவையான உறைப்பிற்கேற்ப)

மஞ்சள்தூள் – சிறிதளவு

பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி

கடுகு – சிறிதளவு

மிளகு – சிறிதளவு

வெந்தயம் – சிறிதளவு

தேங்காய் – பாதி (துருவிய பூ)

பழப்புளி – சிறு எலுமிச்சை அளவு உருண்டை.

எண்ணெய் – தாளிக்கத் தேவையான அளவு

கறிவேப்பிலை, உப்பு, புளி - தேவையான அளவு



செய்முறை:


1 நண்டைச் சுத்தம் செய்து, பெரியதெனில் நான்காகவும் சிறியதாயின் இரண்டாகவும் உடைத்துக்கொள்ளுங்கள். பெரிய கால்களை இரண்டாக முறிக்கலாம்.

2 வெங்காயம், பச்சைமிளகாயை நீட்டு நீட்டாக வெட்டித் தனித்தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

3 உள்ளியையும் இஞ்சியையும் பேஸ்ட் பண்ணிக்கொள்ளுங்கள். சிறு உரல் இருந்தால் இடித்து எடுக்கலாம். அல்லது காரட் சீவுவதில்(சிறு அச்சில்)சீவி எடுங்கள்.

4. பெருஞ்சீரகம், மிளகு, தேங்காய் பூ என்பவற்றை வறுத்து, மிக்சியில் பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள். ( தேங்காய் பூ பொன்னிறமாக வரவேண்டும்.)

5. கறி சமைக்கும் பாத்திரத்தில் (அடி கனமானதாயின் நன்று) சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சூடேறியதும் கடுகு சேர்த்து, வெடித்ததும், பெருஞ்சீரகத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.

6 பின், வெந்தயம் சேர்த்து, அது நிறம் மாறத் தொடங்க, வெட்டிவைத்த வெங்காயத்தையும், பச்சை மிள்காயையும், உள்ளி இஞ்சி பேஸ்ட்டையும் போட்டு நன்றாக வதக்கவும்.

7 பின், நண்டை போட்டு கிழறி வதங்க விடவும். கொஞ்சம் வதங்கி வந்ததும் அதற்குள் பழப்புளியைக் கரைத்து விடவும். அத்துடன் நண்டு அவியத் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

8 அடுத்து, மிளகாய்தூள், உப்பு என்பவற்றைச் சேர்த்து, கலந்து மூடி அவிய விடவும்.

9 நண்டு அரை அவியல் அவிந்ததும் அதற்குள் தேங்காய் பேஸ்ட் கலந்து நன்றாக பிரட்டி மீண்டும் கொதிக்க விடவும்.

10 நண்டு நன்றாக வெந்து கறி பிரட்டலாக வரும் போது கறிவேப்பிலை சேர்த்து இறக்குங்கள்.
THANKS A LOT AKKA
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Members online

No members online now.

Latest posts

Top Bottom