• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 35

sathiyags

Active member
ஆனந்தன் நிதானமாக, நல்ல புரிதலுடன் ஹேண்டில் பண்றான்.
அவள் அம்மா சொல்ற காரணம் எல்லாமே யமிக்கு இருக்கே அதனுடன் சேர்ந்து தனி ஆளாக இருக்கிறாளே என்று ஒரு பெற்ற தாய்க்கு தெரிய வேண்டாமா? இப்படியும் ஒரு அம்மா.
 

Gaya Naga

Active member
😍😍❤❤ரொம்ப நெகிழ்ச்சியான எபி நிதாமா.
ஆனந்தன் என்ற ஒரு கேரக்டரை பற்றி நல்ல மனிதர்,நியாயவாதி என்று இது வரை நீங்கள் சொல்லியிருந்த போதும்,இன்று தான் (35th epi)அவர் மன உணர்வுகளை நன்கு படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.Awesome writing..

நிரோஜன் சற்றே (பயத்துடன்!! அடிச்ச பந்து எப்படி திரும்பும் னு தெரியாதே)தைரியத்துடன் ஆனந்தனிடம் அவர் வீட்டில் அவருக்கு தெரியாமல் நடக்கும் களவை சொன்னதும் ஆனந்தனுக்கு ஏற்பட்ட அவமானம்,அதை (சரியான ஆளை தேர்ந்தெடுத்து) தன் மாமியிடம் பேசி உண்மையை அறிந்த விதம்,சுய கௌரவம் பார்க்கும் அவருக்கு மனதில் விழுந்த அடி(மனைவியின் பேராசை குணமறிந்து),he is a gem of a person,யமி குடும்பத்திற்கு அவர் ஒரு வரம்.கண்களை பனிக்க வைத்த உரையாடல்கள்.

மாதங்கி ,கணவனுக்கு தெரியாமல் சில லட்சங்கள் டெப்பாஸிட் ஆ?உன் range ஏ வேற மா.Chance ஏ இல்ல..அடுத்த எபி ஆப்பு உனக்கு தான்.(ஆனந்தன் நல்ல மனம் அறிந்து ,எனக்கு தோன்றும் விஷயம் ,யமி திருமணம் நடக்கும் போது ,மொத்த பணத்தையும்,மனைவி கையாலேயே ,அவளுக்கு ஏதாவது பெரிதாக செய்து விடுவார்)

நிதாமா அழகான,அருமையான ஆனந்தனின் இன்னொரு பக்கத்தை/முகத்தை காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி..💐💐💐அவர் யமிக்கு அத்தான் அல்ல நல்ல சகோதரர். 👌👌
 
ஆனந்தன் புத்திசாதுரியமாக நடக்கிறார், மனைவிக்கு, யமிக்கு அடுத்த தடவை என்ன சொல்வாரோ
குட்டி எபியாக நன்றாக உள்ளது
 

Ananthi.C

Well-known member
ஆனந்தன்.. இந்த பிரச்சினைய அத்தனை கோபத்திலும் நல்ல தெளிவா நிதானமா ஹாண்டில் பண்ண விதம் அருமை...

அடுத்த டோஸ் யாருக்கு...யாமினிக்கா...
 
Top Bottom