அத்தியாயம் 12
நாவினி ஜெர்மன் சென்று மூன்று மாதங்களாகியிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக அரிக்க ஆரம்பித்து மொத்தமாகத் தின்றுவிடும் கரையானைப் போன்று, அவள் பற்றிய நினைவுகள் அவனைப் போட்டுத் தின்ன ஆரம்பித்தன.
அதைவிட அவளோடு பேசிவிட்டால் தனக்குள் இருக்கும் குழப்பங்களும் உறுத்தல்களும் தீர்ந்துவிடும் என்று நம்பித்தான் அன்று அந்தப் பேச்சை எடுத்தான். கடைசியில் அவை அதிகரித்துப்போயினவே ஒழிய எதுவும் குறைந்தபாடாக இல்லை. நிம்மதியும் சேர்ந்து போயிற்று.
அவன் கணித்ததுபோல் அவனைப் பார்க்கத்தான் ஓடி வந்திருக்கிறாள். அவனை வேண்டாம் என்று நினைத்து விலகவில்லை. அப்படியானால் அவர்களுக்குள் என்னதான் நடந்தது? யார்தான் இதற்கெல்லாம் காரணம்?
திரும்பவும் தான் எங்காவது தவறாக நடந்தோமா என்று யோசித்தான். எதுவுமே பிடிபட மறுத்தது. இன்றைய நிலையில் இது பற்றி ஒரு அளவு தாண்டி மயூரனிடம் பேச முடியவில்லை. ஒரு காலத்தில் அவன் நண்பன் மட்டுமே. இன்று மைத்துனனும். அன்றைக்கு நாவினியின் பேச்சு வந்தபோதே அவன் முகம் ஒரு மாதிரியாக மாறியதே.
சாரதா தினமுமே பேரனைப் பார்க்க இவர்கள் வீட்டுக்கு வருவார். அப்போதெல்லாம் கேசிகனை அவனறியாமல் கவனிப்பார். நாவினியையும் அவனையும் சேர்த்துவைத்தால் என்ன என்கிற யோசனை ஓடும். அதே நேரத்தில் மயூரனின் பெயர் வராமல் இதை எப்படிப் பேசுவது என்று யோசித்துத் தயங்கினார்.
அதைப் பேசாமல் தள்ளிப்போடுகிற ஒவ்வொரு முறையும் உறுத்தியது. நிறைமொழி உயிருடன் இருக்கும்வரை எப்படி இருந்தாள் என்று தெரியும். அதேபோல் அவள் தவறிய பிறகு அவன் எப்படியெல்லாம் இடிந்துபோயிருந்தான் என்றும் தெரியும். இன்றுவரை அவன் தனியாக நிற்பதும் அவளை மறக்க முடியாமல்தான்.
அப்படியிருக்க அன்று மகள் வாழ்க்கைக்காக அமைதியாக இருந்தவர் இன்று மருமகனின் வாழ்க்கைக்காகப் பேச நினைத்தார்.
“இன்னொரு கலியாணத்தைப் பற்றித் தம்பி என்னவாம்?” என்றார் பிரேமாவிடம்.
“எங்க? நானும் கேட்டுத்தான் பாக்கிறன். அசையிறானே இல்ல சாரதா.” அவனோடு பேசி பேசிக் களைத்த குரலில் சொன்னார் பிரேமா. சாரதாவை விடப் பிரேமா மூத்தவர் என்பதில் எப்போதுமே பெயர் சொல்லித்தான் விளிப்பார்.
“சஜூக்கு விவரம் தெரிய முதல் செய்தாத்தானே நல்லம்.”
“அதத்தான் நானும் தலைப்பாடா அடிச்சுச் சொல்லுறன். கேக்கோணுமே.”
“நீங்க பேசாம நாவினியக் கேட்டுப் பாத்தா என்ன?” உள்ளே தடதடக்கும் இதயத்தை மறைத்தபடி ஒரு மாதிரிக் கேட்டுவிட்டார் சாரதா.
இதைக் கொஞ்சமும் எதிர்பாராத பிரேமா கேள்வியும் குழப்பமுமாகப் பார்த்தார்.
சாரதாவுக்கு இன்னும் அதிகமாக உள்ளே படபடத்தது. ஆரம்பித்த விசயத்தை இடையில் விடவும் முடியவில்லை. “இல்ல ஒரே ஊர், நல்ல பழக்கம். அவாவும் அபி பெத்த பிள்ளை இல்லை எண்டேக்க சஜுக்குட்டிய எப்பிடிப் பாக்கோணும் எண்டு விளங்கும். அதான்…” உண்மைக் காரணத்தை விட்டுவிட்டுச் சுற்றிவளைத்தார்.
அவர்கள் இருவரையும் சேர்த்து யோசித்துப் பார்த்திராத பிரேமாவால் சட்டென்று பதிலிறுக்க முடியவில்லை. கொஞ்சம் யோசித்துவிட்டு, “நீங்க சொல்லுறது நல்ல ஐடியாவாத்தான் இருக்கு. இஞ்சயே இருப்பா எண்டா கேட்டிருக்கலாம். அவா இனி அங்கதான் எண்டு சொன்னவா.” என்று சொன்னார்.
பேரனிடம் விளையாடுவதுபோல் காட்டிக்கொண்டு, “அது அவே ரெண்டு பேருக்கையும் முந்தி விருப்பம் இருந்திருக்கு போல.” என்று இழுத்தார்.
“என்ன சொல்லுறீங்க?” பிரேமாவால் இதை மருந்துக்கும் நம்ப முடியவில்லை. இருவருமே அவர் பார்க்க வளர்ந்த பிள்ளைகள். ஒரு நாளும் அப்படி ஒரு சந்தேகம் அவருக்கு வந்ததேயில்லையே.
“இல்ல. அவே தங்களுக்கயே இதைப் பற்றிக் கதைச்சுக்கொண்டது இல்லையாம். அப்ப அவா சின்ன பிள்ளைதானே. கொஞ்சம் வளரட்டும் எண்டு இருந்திருக்கிறார் போல. அவா ஜெர்மன் போனதோட அது அப்பிடியே விடுபட்டுட்டுதாம். அதாலதான் கலியாணத்துக்கு நாங்க கேட்ட நேரம் மாட்டன் எண்டு நிண்டிருக்கிறார். அதான்… அவாக்கும் அங்க கலியாணத்துக்குப் பாக்கினம் எண்டேக்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கலாமே எண்டு நினைச்சன்.” மென்று விழுங்கி ஒரு வழியாகச் சொன்னார் சாரதா.
ஒரு பயம் பிடித்து ஆட்டாமல் இல்லை. ஆனால், ஒரு அளவிற்கு மேலே மனச்சாட்சியைத் தூக்கி எறியவும் முடியவில்லை.
பிரேமாவுக்கு இன்னுமே அதிர்ச்சி நீங்கியபாடாக இல்லை. இந்த முறை அவள் வந்தபோது கூட அப்படி எதையும் அவன் காட்டிக்கொள்ளவில்லையே.
“என்ன யோசிக்கிறீங்கள்?”
“இல்ல, நீங்க இவ்வளவு சொல்லியும் நம்பேலாமா கிடக்கு. ஆனா… அவா அங்க. தம்பிக்குக் கடை, வாழ்க்கை எல்லாம் இஞ்ச. பிறகு எப்பிடி ரெண்டு பேருக்கும் பொருந்தி வரும்? எனக்கு எண்டு இருக்கிறதும் அவன் ஒருத்தன்தான். அவனையும் அங்க அனுப்பிப்போட்டு…” என்கையிலேயே அவர் விழிகள் கலங்கிப்போயின.
இதைச் சாரதா யோசிக்கத் தவறியிருந்தார். கேசிகனுக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே அவர் கணவர் அவரை விட்டுவிட்டுப் போயிருந்தார். அப்படியிருக்க அவனை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்த, வாழும் பெண்மணி எப்படி அவனையும் பேரனையும் பிரிந்து வாழ்வார்?
“இன்னொரு கலியாணம் வேணவே வேணாம் எண்டு நிக்கிற தம்பி, அவா எண்டா ஓம் எண்டு சொல்லுவாரோ எண்டு நினைச்சுத்தான் இதச் சொன்னனான். இப்ப உங்கட இடத்தில இருந்து யோசிக்க நீங்க சொல்லுறது சரியாத்தான் இருக்கு. அதால நிறைய யோசிக்காதீங்கோ. நாங்க இஞ்சயே அவருக்குப் பாப்பம்.” என்றுவிட்டுப் புறப்பட்டிருந்தார் அவர்.
பிரேமாவால் அப்படி அமைதியாக இருக்க முடியவில்லை. மகன் மனத்தில் ஒருத்தி இருந்திருக்கிறாள் என்கிற எண்ணமே போட்டு அரித்தது. முதல் முறை என்ன நடந்து பிரிந்தார்கள் என்று அவருக்குத் தெரியாது. இந்த முறை அவளோடு சேர்வதற்கு வழி இருந்தும் தனக்காக யோசித்து, அவன் ஆசைப்பட்ட ஒன்றை நடத்திக்கொடுக்காமல் விடுவதா என்று அல்லாடினார்.
ஆசைப்பட்டவளை மணந்தால் அன்னை தனியாகிப்போவார் என்று எண்ணித்தான் அவனும் அதைப் பற்றிப் பேசாமல் இருக்கிறானோ என்று நினைத்த மாத்திரத்தில் சர்ரென்று கன்னத்தில் கண்ணீர் இறங்கிற்று.
அவருக்குக் கணவர் வாய்க்கவில்லை என்பது உண்மைதான். இல்லாமல் காரணமே சொல்லாமல் இரண்டு வயது மகனோடு இருந்த மனைவியை விட்டுவிட்டு ஒருவனால் ஓடிப்போக முடியுமா?
ஆனால், அவர் மகன் அருமையானவனாயிற்றே. அவருக்குச் சிறு குறையும் இல்லாது பார்த்துக்கொள்கிறவன். அவனுக்கு அவர் என்ன செய்யப்போகிறார்?
இரண்டு நாள்களாகவே அவர் முகம் சரியில்லை என்பதைக் கேசிகன் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். தினமும் கோயிலுக்கு வேறு போய் வந்துகொண்டிருந்தார். மனத்தில் நிம்மதி இல்லாத பொழுதுகளில்தான் கோயிலே கதி என்று கிடப்பார் என்று தெரியும். அதில் ஒரு நாள் அவரைப் பிடித்து வைத்து விசாரித்தான்.
முதலில் ஒன்றுமில்லை என்று சமாளிக்கப் பார்த்தாலும் அவரால் முடியவில்லை. அவருக்கென்று இருப்பதும் அவன் ஒருவன்தானே.
“நாவினிய உனக்குப் பிடிக்குமா தம்பி?” கூர்மையான பார்வையை அவனிலேயே நிலைக்க விட்டபடி வினவினார்.
இதை எதிர்பாராதவன், “அம்மா!” என்றான் வேறு பேச வராமல்.
“அம்மாட்ட ஒரு வார்த்த சொல்லேல்லையே நீ?”
“உங்களுக்கு ஆர் இதையெல்லாம் சொன்னது?”
“அப்ப அது உண்மை.”
“ஐயோ அம்மா. அது இப்ப இல்ல. அவள் இஞ்ச இருந்த காலத்தில.”
“எப்பவா இருந்தா என்ன தம்பி? அம்மாட்டச் சொல்லேல்லையே நீங்க. ஏனப்பு? அவா இஞ்ச வந்திருந்த நேரமாவது சொல்லியிருக்கலாமே.”
“ப்ச் அம்மா! அது சின்ன வயசில வந்த ஆச எண்டு எத்தின தரம் சொல்லுறது? அத விடுங்கோ.”
அவர் நம்பாமல் பார்த்தார். முழுவதுமாகத் தெரியாமல் விடமாட்டார் என்று புரிந்தது. அதே நேரத்தில் முடிந்தவற்றைப் பேசத்தான் வேண்டுமா என்றும் நினைத்து மௌனம் காத்தான்.
கடைசியில் அவர் விடுத்து விடுத்துக் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலாமல், தமக்குள்ள உண்டான விருப்பத்தையும், அது கடிதப் போக்கு வரத்தாகத் தொடர்ந்ததையும், ஒரு கட்டத்தில் அவளிடமிருந்து பதில் எதுவும் வராது போனதையும், தன்னால் முடிந்தவரையில் தான் முயற்சித்ததையும் அவன் சொன்னபோது, அப்படி என்னாயிற்று என்று அவருக்கும் யோசனையாயிற்று.
“அவாட்ட இத நீ கேக்கேல்லையா?”
“அண்டைக்கு எங்கட வீட்டுக்கு வந்திட்டுப் போனாளே. அண்டைக்குக் கேட்டனான். ஒண்டுமே சொல்லேல்ல அவள்.”
முற்றிலுமாக முடிந்து போனதைப் பற்றிப் பேசிப் பிரயோசனம் இல்லை என்று நினைத்திருப்பாள் என்று நினைத்தார். கூடவே, “அவா அப்பிடியான பிள்ளை இல்லையே தம்பி. அது ஏன் உனக்குத் தெரியாமப் போனது? என்னட்ட ஒரு வார்த்த சொல்லியெல்லா ஐயா இருக்கோணும். அபியோட நான் கதச்சிருப்பனே. இப்ப என்னவோ யோசிக்க யோசிக்க உன்னாலதான் அந்தப் பிள்ளை இப்ப வரை கட்டாம இருக்கிறாவோ எண்டு இருக்கு.” என்றதும் ஒன்றுமே சொல்ல இயலாமல் நின்றான் அவன்.
“அவா சொல்லேல்ல எண்டு நீ விட்டிருக்கக் கூடாது. என்ன நடந்தது எண்டு கேட்டுத் தெரிஞ்சிருக்கோணும்.”
அவனும் எத்தனையோ நாள்களாக இதைத்தான் நினைத்து நினைத்து அல்லலுறுகிறான். ஆனால், கண்ணீரைத் தேக்கி அவனைப் பார்த்து முறுவலித்தவளை அவனால் எதற்கும் வற்புறுத்த இயலாமல் இருந்ததே. என்ன செய்ய?
நாவினி ஜெர்மன் சென்று மூன்று மாதங்களாகியிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக அரிக்க ஆரம்பித்து மொத்தமாகத் தின்றுவிடும் கரையானைப் போன்று, அவள் பற்றிய நினைவுகள் அவனைப் போட்டுத் தின்ன ஆரம்பித்தன.
அதைவிட அவளோடு பேசிவிட்டால் தனக்குள் இருக்கும் குழப்பங்களும் உறுத்தல்களும் தீர்ந்துவிடும் என்று நம்பித்தான் அன்று அந்தப் பேச்சை எடுத்தான். கடைசியில் அவை அதிகரித்துப்போயினவே ஒழிய எதுவும் குறைந்தபாடாக இல்லை. நிம்மதியும் சேர்ந்து போயிற்று.
அவன் கணித்ததுபோல் அவனைப் பார்க்கத்தான் ஓடி வந்திருக்கிறாள். அவனை வேண்டாம் என்று நினைத்து விலகவில்லை. அப்படியானால் அவர்களுக்குள் என்னதான் நடந்தது? யார்தான் இதற்கெல்லாம் காரணம்?
திரும்பவும் தான் எங்காவது தவறாக நடந்தோமா என்று யோசித்தான். எதுவுமே பிடிபட மறுத்தது. இன்றைய நிலையில் இது பற்றி ஒரு அளவு தாண்டி மயூரனிடம் பேச முடியவில்லை. ஒரு காலத்தில் அவன் நண்பன் மட்டுமே. இன்று மைத்துனனும். அன்றைக்கு நாவினியின் பேச்சு வந்தபோதே அவன் முகம் ஒரு மாதிரியாக மாறியதே.
சாரதா தினமுமே பேரனைப் பார்க்க இவர்கள் வீட்டுக்கு வருவார். அப்போதெல்லாம் கேசிகனை அவனறியாமல் கவனிப்பார். நாவினியையும் அவனையும் சேர்த்துவைத்தால் என்ன என்கிற யோசனை ஓடும். அதே நேரத்தில் மயூரனின் பெயர் வராமல் இதை எப்படிப் பேசுவது என்று யோசித்துத் தயங்கினார்.
அதைப் பேசாமல் தள்ளிப்போடுகிற ஒவ்வொரு முறையும் உறுத்தியது. நிறைமொழி உயிருடன் இருக்கும்வரை எப்படி இருந்தாள் என்று தெரியும். அதேபோல் அவள் தவறிய பிறகு அவன் எப்படியெல்லாம் இடிந்துபோயிருந்தான் என்றும் தெரியும். இன்றுவரை அவன் தனியாக நிற்பதும் அவளை மறக்க முடியாமல்தான்.
அப்படியிருக்க அன்று மகள் வாழ்க்கைக்காக அமைதியாக இருந்தவர் இன்று மருமகனின் வாழ்க்கைக்காகப் பேச நினைத்தார்.
“இன்னொரு கலியாணத்தைப் பற்றித் தம்பி என்னவாம்?” என்றார் பிரேமாவிடம்.
“எங்க? நானும் கேட்டுத்தான் பாக்கிறன். அசையிறானே இல்ல சாரதா.” அவனோடு பேசி பேசிக் களைத்த குரலில் சொன்னார் பிரேமா. சாரதாவை விடப் பிரேமா மூத்தவர் என்பதில் எப்போதுமே பெயர் சொல்லித்தான் விளிப்பார்.
“சஜூக்கு விவரம் தெரிய முதல் செய்தாத்தானே நல்லம்.”
“அதத்தான் நானும் தலைப்பாடா அடிச்சுச் சொல்லுறன். கேக்கோணுமே.”
“நீங்க பேசாம நாவினியக் கேட்டுப் பாத்தா என்ன?” உள்ளே தடதடக்கும் இதயத்தை மறைத்தபடி ஒரு மாதிரிக் கேட்டுவிட்டார் சாரதா.
இதைக் கொஞ்சமும் எதிர்பாராத பிரேமா கேள்வியும் குழப்பமுமாகப் பார்த்தார்.
சாரதாவுக்கு இன்னும் அதிகமாக உள்ளே படபடத்தது. ஆரம்பித்த விசயத்தை இடையில் விடவும் முடியவில்லை. “இல்ல ஒரே ஊர், நல்ல பழக்கம். அவாவும் அபி பெத்த பிள்ளை இல்லை எண்டேக்க சஜுக்குட்டிய எப்பிடிப் பாக்கோணும் எண்டு விளங்கும். அதான்…” உண்மைக் காரணத்தை விட்டுவிட்டுச் சுற்றிவளைத்தார்.
அவர்கள் இருவரையும் சேர்த்து யோசித்துப் பார்த்திராத பிரேமாவால் சட்டென்று பதிலிறுக்க முடியவில்லை. கொஞ்சம் யோசித்துவிட்டு, “நீங்க சொல்லுறது நல்ல ஐடியாவாத்தான் இருக்கு. இஞ்சயே இருப்பா எண்டா கேட்டிருக்கலாம். அவா இனி அங்கதான் எண்டு சொன்னவா.” என்று சொன்னார்.
பேரனிடம் விளையாடுவதுபோல் காட்டிக்கொண்டு, “அது அவே ரெண்டு பேருக்கையும் முந்தி விருப்பம் இருந்திருக்கு போல.” என்று இழுத்தார்.
“என்ன சொல்லுறீங்க?” பிரேமாவால் இதை மருந்துக்கும் நம்ப முடியவில்லை. இருவருமே அவர் பார்க்க வளர்ந்த பிள்ளைகள். ஒரு நாளும் அப்படி ஒரு சந்தேகம் அவருக்கு வந்ததேயில்லையே.
“இல்ல. அவே தங்களுக்கயே இதைப் பற்றிக் கதைச்சுக்கொண்டது இல்லையாம். அப்ப அவா சின்ன பிள்ளைதானே. கொஞ்சம் வளரட்டும் எண்டு இருந்திருக்கிறார் போல. அவா ஜெர்மன் போனதோட அது அப்பிடியே விடுபட்டுட்டுதாம். அதாலதான் கலியாணத்துக்கு நாங்க கேட்ட நேரம் மாட்டன் எண்டு நிண்டிருக்கிறார். அதான்… அவாக்கும் அங்க கலியாணத்துக்குப் பாக்கினம் எண்டேக்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கலாமே எண்டு நினைச்சன்.” மென்று விழுங்கி ஒரு வழியாகச் சொன்னார் சாரதா.
ஒரு பயம் பிடித்து ஆட்டாமல் இல்லை. ஆனால், ஒரு அளவிற்கு மேலே மனச்சாட்சியைத் தூக்கி எறியவும் முடியவில்லை.
பிரேமாவுக்கு இன்னுமே அதிர்ச்சி நீங்கியபாடாக இல்லை. இந்த முறை அவள் வந்தபோது கூட அப்படி எதையும் அவன் காட்டிக்கொள்ளவில்லையே.
“என்ன யோசிக்கிறீங்கள்?”
“இல்ல, நீங்க இவ்வளவு சொல்லியும் நம்பேலாமா கிடக்கு. ஆனா… அவா அங்க. தம்பிக்குக் கடை, வாழ்க்கை எல்லாம் இஞ்ச. பிறகு எப்பிடி ரெண்டு பேருக்கும் பொருந்தி வரும்? எனக்கு எண்டு இருக்கிறதும் அவன் ஒருத்தன்தான். அவனையும் அங்க அனுப்பிப்போட்டு…” என்கையிலேயே அவர் விழிகள் கலங்கிப்போயின.
இதைச் சாரதா யோசிக்கத் தவறியிருந்தார். கேசிகனுக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே அவர் கணவர் அவரை விட்டுவிட்டுப் போயிருந்தார். அப்படியிருக்க அவனை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்த, வாழும் பெண்மணி எப்படி அவனையும் பேரனையும் பிரிந்து வாழ்வார்?
“இன்னொரு கலியாணம் வேணவே வேணாம் எண்டு நிக்கிற தம்பி, அவா எண்டா ஓம் எண்டு சொல்லுவாரோ எண்டு நினைச்சுத்தான் இதச் சொன்னனான். இப்ப உங்கட இடத்தில இருந்து யோசிக்க நீங்க சொல்லுறது சரியாத்தான் இருக்கு. அதால நிறைய யோசிக்காதீங்கோ. நாங்க இஞ்சயே அவருக்குப் பாப்பம்.” என்றுவிட்டுப் புறப்பட்டிருந்தார் அவர்.
பிரேமாவால் அப்படி அமைதியாக இருக்க முடியவில்லை. மகன் மனத்தில் ஒருத்தி இருந்திருக்கிறாள் என்கிற எண்ணமே போட்டு அரித்தது. முதல் முறை என்ன நடந்து பிரிந்தார்கள் என்று அவருக்குத் தெரியாது. இந்த முறை அவளோடு சேர்வதற்கு வழி இருந்தும் தனக்காக யோசித்து, அவன் ஆசைப்பட்ட ஒன்றை நடத்திக்கொடுக்காமல் விடுவதா என்று அல்லாடினார்.
ஆசைப்பட்டவளை மணந்தால் அன்னை தனியாகிப்போவார் என்று எண்ணித்தான் அவனும் அதைப் பற்றிப் பேசாமல் இருக்கிறானோ என்று நினைத்த மாத்திரத்தில் சர்ரென்று கன்னத்தில் கண்ணீர் இறங்கிற்று.
அவருக்குக் கணவர் வாய்க்கவில்லை என்பது உண்மைதான். இல்லாமல் காரணமே சொல்லாமல் இரண்டு வயது மகனோடு இருந்த மனைவியை விட்டுவிட்டு ஒருவனால் ஓடிப்போக முடியுமா?
ஆனால், அவர் மகன் அருமையானவனாயிற்றே. அவருக்குச் சிறு குறையும் இல்லாது பார்த்துக்கொள்கிறவன். அவனுக்கு அவர் என்ன செய்யப்போகிறார்?
இரண்டு நாள்களாகவே அவர் முகம் சரியில்லை என்பதைக் கேசிகன் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். தினமும் கோயிலுக்கு வேறு போய் வந்துகொண்டிருந்தார். மனத்தில் நிம்மதி இல்லாத பொழுதுகளில்தான் கோயிலே கதி என்று கிடப்பார் என்று தெரியும். அதில் ஒரு நாள் அவரைப் பிடித்து வைத்து விசாரித்தான்.
முதலில் ஒன்றுமில்லை என்று சமாளிக்கப் பார்த்தாலும் அவரால் முடியவில்லை. அவருக்கென்று இருப்பதும் அவன் ஒருவன்தானே.
“நாவினிய உனக்குப் பிடிக்குமா தம்பி?” கூர்மையான பார்வையை அவனிலேயே நிலைக்க விட்டபடி வினவினார்.
இதை எதிர்பாராதவன், “அம்மா!” என்றான் வேறு பேச வராமல்.
“அம்மாட்ட ஒரு வார்த்த சொல்லேல்லையே நீ?”
“உங்களுக்கு ஆர் இதையெல்லாம் சொன்னது?”
“அப்ப அது உண்மை.”
“ஐயோ அம்மா. அது இப்ப இல்ல. அவள் இஞ்ச இருந்த காலத்தில.”
“எப்பவா இருந்தா என்ன தம்பி? அம்மாட்டச் சொல்லேல்லையே நீங்க. ஏனப்பு? அவா இஞ்ச வந்திருந்த நேரமாவது சொல்லியிருக்கலாமே.”
“ப்ச் அம்மா! அது சின்ன வயசில வந்த ஆச எண்டு எத்தின தரம் சொல்லுறது? அத விடுங்கோ.”
அவர் நம்பாமல் பார்த்தார். முழுவதுமாகத் தெரியாமல் விடமாட்டார் என்று புரிந்தது. அதே நேரத்தில் முடிந்தவற்றைப் பேசத்தான் வேண்டுமா என்றும் நினைத்து மௌனம் காத்தான்.
கடைசியில் அவர் விடுத்து விடுத்துக் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலாமல், தமக்குள்ள உண்டான விருப்பத்தையும், அது கடிதப் போக்கு வரத்தாகத் தொடர்ந்ததையும், ஒரு கட்டத்தில் அவளிடமிருந்து பதில் எதுவும் வராது போனதையும், தன்னால் முடிந்தவரையில் தான் முயற்சித்ததையும் அவன் சொன்னபோது, அப்படி என்னாயிற்று என்று அவருக்கும் யோசனையாயிற்று.
“அவாட்ட இத நீ கேக்கேல்லையா?”
“அண்டைக்கு எங்கட வீட்டுக்கு வந்திட்டுப் போனாளே. அண்டைக்குக் கேட்டனான். ஒண்டுமே சொல்லேல்ல அவள்.”
முற்றிலுமாக முடிந்து போனதைப் பற்றிப் பேசிப் பிரயோசனம் இல்லை என்று நினைத்திருப்பாள் என்று நினைத்தார். கூடவே, “அவா அப்பிடியான பிள்ளை இல்லையே தம்பி. அது ஏன் உனக்குத் தெரியாமப் போனது? என்னட்ட ஒரு வார்த்த சொல்லியெல்லா ஐயா இருக்கோணும். அபியோட நான் கதச்சிருப்பனே. இப்ப என்னவோ யோசிக்க யோசிக்க உன்னாலதான் அந்தப் பிள்ளை இப்ப வரை கட்டாம இருக்கிறாவோ எண்டு இருக்கு.” என்றதும் ஒன்றுமே சொல்ல இயலாமல் நின்றான் அவன்.
“அவா சொல்லேல்ல எண்டு நீ விட்டிருக்கக் கூடாது. என்ன நடந்தது எண்டு கேட்டுத் தெரிஞ்சிருக்கோணும்.”
அவனும் எத்தனையோ நாள்களாக இதைத்தான் நினைத்து நினைத்து அல்லலுறுகிறான். ஆனால், கண்ணீரைத் தேக்கி அவனைப் பார்த்து முறுவலித்தவளை அவனால் எதற்கும் வற்புறுத்த இயலாமல் இருந்ததே. என்ன செய்ய?