அத்தியாயம் 18
கேசிகன் காட்டும் அவசியமே இல்லாமல், அவர்களின் சுப்பர் மார்க்கெட் தூரத்தில் தெரிய ஆரம்பித்ததுமே, “நவி அன்ட்ரி, அங்க பாருங்கோ. அதுதான் எங்கட சுப்பர் மார்க்கெட். நாங்க யாழ்ப்பாணத்திலயும் ஒண்டு திறக்கப் போறம். அது இவ்வளவு பெருசு.” என்று தகப்பனின் முன்னிருந்தபடியே தன் கைகள் இரண்டையும் தன்னால் முடிந்தவரையில் விரித்துக் காட்டிச் சொன்னான் சஜிதன்.
கேசிகன் முகத்தில் விரிந்த முறுவல். அந்த முறுவலோடே ‘மொழி சுப்பர் மார்கெட்’ முன்னே கொண்டுபோய் பைக்கை நிறுத்தினான்.
“இறங்கு, நான் சொல்லவே தேவையில்லாம பெரிய மனுசன் சொல்லிட்டார். இதான் எங்கட கடை.” என்றபடி தம் இருவடைய ஹெல்மெட்டுகளையும் கழற்றி சீட்டினுள் வைத்துவிட்டு, அவளுடையதற்காகத் திரும்பினான்.
அதற்குள் வேகமாகத் தன்னுடையைதைக் கழற்றிக் கையில் வைத்திருந்தாள் அவள். ‘அவ்வளவு வேகம்’ என்பதுபோல் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அதைக் கையுடன் எடுத்துக்கொண்டு அவளையும் அழைத்துக்கொண்டு நடந்தான்.
உள்ளே செல்ல முதல் அண்ணாந்து பார்த்தாள் நாவினி. கடையின் பெயர் மொழி என்று இருப்பதால் பார்க்கிறாளோ என்று தயங்கி, “அது அப்ப…” என்று ஆரம்பித்தவன், “‘ழி’ல வாற சுழில இங்கிலிஷ் எழுத்து கே மறைஞ்சு கிடக்கு என்ன?” என்று அவள் சொல்லவும் அதிர்ந்து நின்றுவிட்டான்.
இது அவனே ஆசையாசையாக வடிவமைத்தது. ‘இதில ஒண்டு மறைஞ்சிருக்கு. என்ன எண்டு சொல்லு பாப்பம்?’ என்று இவன் கேட்டும், நிறைமொழி கடைசிவரையிலும் கண்டுபிடிக்கவே இல்லை. அதில் இவனுக்குச் சின்ன மனச்சிணுக்கமும் அந்த நாள்களில் வந்திருந்தது. ஆனால் இன்று, அவன் சொல்லாமலேயே இவள் கண்டுபிடித்திருந்தாள்.
“நவி…”
“இல்ல, பாத்ததும் அதுதான் கண்ணில பட்டது. அதான்.” என்று இலகுவாகச் சொல்லிவிட்டு நடந்தாள். ஆனால், உள்ளே ஒரு வலி. எந்தளவில் நேசித்து வாழ்ந்திருந்தால் இந்தளவில் யோசித்து நடந்திருப்பான்?
அவளிடமிருந்து தகவல் எதுவும் இல்லை என்றதும் காத்து காத்து இருந்தவன் ஒரு கட்டத்தில் தன் காத்திருப்பின் காலத்தை முடித்துக்கொண்டு, வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறான் என்று புரிந்தாலும், என்னை அவனால் தவறாக நினைக்க முடிந்திருக்கிறதே என்கிற எண்ணம் அவள் மென் இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது.
அவனுடைய ‘பெட்டச்சி’ அப்படி நடப்பாளா என்று கூடவா யோசிக்கவில்லை. அவளுக்கு அந்தச் சந்தேகம் வரவேயில்லையே. காத்திருப்பேன் என்று சொன்னவன் காத்துக்கொண்டே இருப்பான் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையோடு வாழ்ந்தாளே.
“நவி!” என்றவனின் அழுத்தமான அழைப்பில்தான் புறவுலகில் கவனமில்லாது கடைக்குள் நடந்துகொண்டிருந்தவள் சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தாள். அந்த விழிகளில் தெரிந்த அலைப்புறுதலில் கேசிகனுக்கு ஒரு நொடி சுவாசிக்க இயலாமல் போயிற்று.
“என்ன?” என்றான் தன்னை மீறி.
“என்ன என்ன?” என்றாள் தன்னைச் சமாளித்துக்கொண்டு. அப்போதுதான் அவன் அருகில் இன்னொருவர் நிற்பது கண்டு, கேள்வியோடு அவனை ஏறிட்டாள்.
“இவர்தான் நான் இல்லாத நேரத்தில கடையப் பொறுப்பா பாக்கிறவர். உனக்கு அறிமுகப்படுத்தக் கூப்பிட்டனான்.” என்றான் அவனும் அவர் முன்னே எதையும் காட்டிக்கொள்ளாது.
அவரோடு இன்முகமாக இரண்டு வார்த்தை பேசினாள். அவர் அகன்றதும் அவன் பார்வை தன் மீது கேள்வியுடன் படிவது தெரிந்தாலும் காட்டிக்கொள்ளாமல் கடையைப் பார்வையால் அலசினாள்.
அளவான கடை. வரும் வழியில், ‘இது சின்ன கடைதான்’ என்று அவன் சொன்னதுபோல் அல்லாமல் அடக்கமான, அனைத்துப் பொருள்களும் கிடைக்கக்கூடிய வகையில் மென் பச்சையும் வெள்ளையும் தீமாகக் கொண்டு கடை முழுவதையும் அமைத்திருந்தான்.
கடையின் நேர்த்தியும் சிறு துரும்பு தூசு கூட இல்லாத துப்பரவும்தான் பளிச்சென்று முதல் பார்வையிலேயே பட்டது. அதைப் போலவே மொழி என்று எழுதப்பட்ட மென் பச்சையும் வெள்ளையும் சேர்ந்த டீ ஷேர்ட் அணிந்து பணிபுரிந்தவர்களும் மலர்ந்த முகத்துடன் எல்லோரையும் கவனித்துக்கொண்டிருந்தனர்.
உண்மையைச் சொல்லப்போனால் அவளுக்கு விடவும் சஜிதனுக்குத்தான் அங்கு ராஜ மரியாதை நடந்தது. அவன் வேறு, “நாங்க பிள்ளையாரப்பாட்டப் போய், கலியாணம் செய்து நவி அன்ட்ரிய எங்களோடயே கூட்டிக்கொண்டு வந்திட்டம் தெரியுமா?” என்று அங்குப் பணிபுரிகிறவர்களிடம் கதைகள் சொன்னான்.
எல்லோர் முகத்திலும் முறுவல். “இந்தப் பெரிய மனுசனை விட்டா வீட்டு விசயம் எல்லாத்தையும் போஸ்ட்டர் அடிச்சு ஒட்டுவான்.” என்று அவனைத் தூக்கிக்கொண்டு அலுவலக அறைக்கு அவளை அழைத்துச் சென்றான் கேசிகன்.
அது ஏசி போடப்பட்ட அறை. அங்கே இருந்த மேசையில் நிறைமொழியின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. தகப்பனின் இருக்கையில் ஏறி, மேசையில் கையை ஊன்றி அதை எட்டி எடுத்து, “அம்மா!” என்று முத்தமிட்டுவிட்டுத் தகப்பனிடமும் நீட்டினான் சஜிதன்.
செய்வது அறியாது திகைத்த கேசிகன் நாவினியைத் திரும்பிப் பார்த்தான். இதை நாவினியும் எதிர்பார்க்கவில்லை. எப்படி வினையாற்றுவது என்று தெரியாது திகைத்தாள். அந்தப் புகைப்படத்தைக் கண்டதும் அவன் முகத்தில் அப்பிக்கொண்ட சோகத்தையும், விழிகளில் தெரிந்த அலைப்புறுதலையும் கண்டு மிக ஆழமாக அடிவாங்கினாள்.
இது ஒன்றும் அவள் அறியா உண்மை இல்லையே. அந்தப் பெண்ணோடு வாழ்ந்து, அதன் சாட்சியாக மகனையே கையில் வைத்திருக்கிறவன், புகைப்படத்துக்குக் கொடுக்கப்போகிற ஒரு இதழ் ஒற்றுதலில் என்ன நடந்துவிடப் போகிறது?
ஒன்றுமேயில்லை. ஒன்றுமே இல்லை!
தன் துயரைத் தொண்டைக் குழியால் விழுங்கிவிட்டு, “அவர் குழந்தை. எந்த வழக்கத்தையும் மாத்த வேண்டாம்.” என்று அவனைப் பாராமல் சொல்லிவிட்டு வேறுபுறம் திரும்பிக்கொண்டாள்.
கேசிகனின் உள்ளமும் துடித்தது. அங்கே புகைப்படத்தில் புன்னகைத்துக்கொண்டிருந்தவளைப் பார்த்தான். அவளுக்காக அழுவானா, இங்கே முகம் திருப்பி நிற்கிறவளைப் பார்ப்பானா?
மகன் வேறு பார்த்துக்கொண்டிருக்கிறானே. எப்போதுமே நிறைமொழிக்கு நேரிலேயே கொடுக்கிறவன் போன்று தன் உதடுகளை அழுத்தி எடுக்கிறவன் இன்று மகனுக்காக ஃபிரேமின் விளிம்பில் ஒற்றி எடுத்துவிட்டு அதை மேசையில் கவிழ்த்து வைத்தான்.
அவன் மகன் விட வேண்டுமே. “அப்பா, அப்பிடி வைக்கிறேல்ல. அம்மா எங்களைப் பாக்கிற மாதிரி வைக்கோணும்.” என்றபடி நிமிர்த்தி வைத்தான்.
கேசிகனுக்கு மிகவும் தர்மசங்கடமான நிலை. “என்ன குடிக்கத் தர? ஐஸ்…” சூழ்நிலையைச் சீராக்கவேண்டி குரலைச் செருமிக்கொண்டு வினவினான்.
அவளுக்குத்தான் உள்ளம் போதும் போதும் என்கிற அளவில் குளிர்ந்து கிடக்கிறதே. “சஜுக்குட்டிக்கு என்ன வேணும்?” என்று சின்னவனிடம் வினவினாள்.
“ஐஸ் ஐஸ் ஐஸ்!” என்று தகப்பனின் இருக்கையில் நின்று குதித்தான் அவன்.
“இப்பிடிக் குதிக்கக் கூடாது செல்லம்.” என்று அவனிடம் பேச்சுக் கொடுத்து அவள் தன்னைச் சமாளிக்க முயல, அவனும் தன்னை நிலைப்படுத்த எண்ணி வெளியே சென்றான்.
திரும்பி வரும்போது இருவருக்குமான ஐஸ் அவன் இரு கைகளிலும் இருந்தது.
“உங்களுக்கு?” நாவினியும் சமாளித்து வினவினாள்.
“நான் சோடா ஏதும் குடிக்கிறன். ஒரு பத்து நிமிசம் இரு. அதுக்குப் பிறகு வந்து கடையச் சுத்திக் காட்டுறன்.”
“இல்ல பிரச்சினை இல்ல. நீங்க வேலையப் பாருங்க.”
ஒரு நொடி அவளைப் பார்வையால் அளந்துவிட்டுப் போனான் அவன்.
அதுவரையில் அவன் தந்த ஐஸிலேயே கவனமாக இருந்தவள் பார்வை, அவன் போனதும் நிறைமொழியிடம் ஓடிற்று. இவளுக்கு அவள் ‘மொழி அக்கா’. அமைதியானவள். கூடவே அன்பானவள். இன்று யோசித்துப் பார்க்கையில் அவளும் இவனை நேசித்திருக்க வேண்டும் என்று தோன்றிற்று.
அந்த நாள்களில் இவளைக் கூப்பிட்டுப் பேச்சுக் கொடுத்துக்கொண்டே இவளின் கேசி அண்ணாவைப் பற்றியும் விசாரித்திருக்கிறாள். அன்று இந்தளவு தெளிவு இல்லாதவளும் அவனைப் பற்றிச் சகலதும் சொல்லியிருக்கிறாள்.
நல்ல காலம், தன் காதலில் தோற்று, இவளைப் போன்று உடலிலிருந்து உயிரை உருவி எடுப்பது போன்ற வலிகளை எல்லாம் அவள் அனுபவிக்கவில்லை. ஆசைப்பட்டவனையே மணந்து, ஆசைப்பட்டது போலவே வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறாள்.
இல்லாமல் ஒரு புகைப்படமே ஒருவனின் மனத்தையும் முகத்தையும் கசக்கும் வல்லமை கொண்டதாக இருக்குமா என்ன?
அதேயளவு பாதிப்பை அவள் அவனுள் நிகழ்த்தியிருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் அவள் பற்றிய தகவல் எதுவும் இல்லை என்றதும் அடுத்து என்று போயிருப்பானா? தான் எதிலோ தோற்றுவிட்ட உணர்வு அடிபட்ட புறாவாக அவள் இதயத்தைத் துடிக்க வைத்தது.
அங்கே இருந்த சிசிடிவிகளில் அவன் ஏதோ லிஸ்ட்டுகள் சரி பார்ப்பதும், பணியாளர்களுடன் என்னவோ பேசுவதும், சில கைப்பேசி அழைப்புகளை மேற்கொள்வதும் தெரிந்தது.
காலம் அவனைப் பொறுப்பும் முதிர்ச்சியும் மிக்கவனாக மாற்றியிருந்தது. அப்போதும் அப்படித்தான். என்றாலும் இன்றைய அவனிடத்தில் தோற்றத்தில் மட்டுமல்லாது குணாதிசயத்திலும் நிறைய மாற்றங்கள். முன்னர் போன்ற இலகுவான பாவம், விளையாட்டுக் குணங்கள் எல்லாமே காணாமல் போயிருந்தன. சஜிதனோடான பொழுதுகள் மட்டுமே முகம் நிறைந்த சிரிப்பைக் காணலாம்.
பத்து நிமிடங்கள் என்றவன் அரை மணி நேரம் சென்றுதான் வந்தான். “கடை பாப்பம் வா!”
“இல்ல, உங்களுக்கு இன்னும் வேலைகள் இருக்குப் போலயே. நீங்க பாருங்கோ. நான் சஜுவோட கடையப் பாக்கிறன்.” சற்று முன்னர் நடந்தவை அவனை நிறைமொழியின் கணவனாகக் காட்டிவிட நாசுக்காக அவனைத் தவிர்த்தாள்.
அவன் பார்வை அவளில் கூர்மையோடு படிவது தெரிந்தாலும் அவன் புறம் பார்வையைத் திருப்பவில்லை அவள்.
அவளைக் காப்பாற்றுகிறவனாக, “நவி அன்ட்ரிக்கு நானே சுத்திக் காட்டுறன். ஆனா, கடைக்க ஓடித் திரிஞ்சு எதையும் தட்டிக் கொட்டக் கூடாது சரியோ?” என்று அவள் கரம் பற்றி அழைத்துக்கொண்டு நடந்தான் அவன் மகன்.
போகவா என்பதுபோல் திரும்பி இவனைப் பார்த்துக்கொண்டே அவள் அவனோடு இழுபட்டாள். ஏதோ ஒரு வகையில் அதற்கு முந்தைய அவள் பேச்சை அவளின் அந்தப் பார்வை ஈடுகட்டிவிட, உதட்டோரம் அரும்பிய சின்ன முறுவலோடு போ என்று தலையை அசைத்துச் சொன்னான் அவன்.
உண்மையில் அவனுக்கு நிறைய வேலைகள் இருந்தன. திருமண அலைச்சல்களால் கடைக்கு ஒழுங்காக வரக் கிடைத்திருக்கவில்லை. தன் இருக்கையில் அமர்ந்து அவற்றைப் பார்க்க ஆரம்பிகையில் நிறைமொழி கண்ணில் பட்டாள்.
அவளையே பார்த்தான். மெல்ல விரல் நீட்டி அவள் கன்னம் வருடப்போனவனால் இன்று ஏனோ முடியவில்லை. நாவினிக்குத் தவறிழைக்கும் உணர்வு. கண்ணோரம் கண்ணீர்ப் பூக்கள் இலேசாகப் பூத்தன. பெரு மூச்சு ஒன்றுடன் அவளைக் கவிழ்த்து வைத்துவிட்டுத் தன் வேலைகளில் ஆழ்ந்தான்.
நேரம் நழுவியதை அவன் உணரவேயில்லை. ஓரளவுக்கு வேலைகள் முடிவுக்கு வருகையில்தான் போன இவர்களைக் காணவில்லையே என்று நிமிர்ந்து சிசிடிவியில் தேடினான்.
தரையை உரசிச் செல்லும் பிங்க் வண்ணச் சுடிதாரில் ஒரு முழு ரோசாவாகவே அவள் நடக்க, அவளிடம் என்னவோ சொல்லிக் காட்டிக்கொண்டிருந்த மகனைக் கண்டு பக்கென்று சிரித்திருந்தான்.
அவளின் நீண்ட கைப்பிடி கொண்ட கைப்பையை மூன்றாகச் சுற்றித் தோளில் குறுக்காகப் போட்டுக்கொண்டு ஓடி ஓடி என்னவெல்லாமோ சொல்லிக்கொண்டிருந்தான் அவன்.
சிசிடிவியிலேயே தன்னிச்சையாய் மகனை வழித்துக் கொஞ்சியவனுக்கு அதற்குமேல் இங்கிருந்து வேலை பார்க்க முடியவில்லை. எழுந்து அவர்களிடம் சென்றான்.
“உனக்கு ஏதும் வேணுமெண்டால் எடு.”
தமக்கு பின்னால் திடீரென்று கேட்ட அவன் குரலில் திரும்பிப் பார்த்துவிட்டு, “நாளைக்கு வெளிக்கிடுற எனக்கு என்ன தேவ இருக்கப் போகுது?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.
“ஓம் என்ன?” அதை மறந்திருந்தவன் நெஞ்சில் ஏதோ அடைக்கும் உணர்வு.
“இனி எப்ப வருவாய்?”
“இனி ஏன் நான் வர?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.
ஏன், நான் இல்லையா என்று கேட்கமுடியாமல் நின்றான் அவன். ஆனாலும், “வர வசதிப்பட்டா வந்திட்டுப் போ.” என்று மட்டும் சொன்னான்.
சரி என்று தலையை அசைத்தாள் நாவினி.
கேசிகன் காட்டும் அவசியமே இல்லாமல், அவர்களின் சுப்பர் மார்க்கெட் தூரத்தில் தெரிய ஆரம்பித்ததுமே, “நவி அன்ட்ரி, அங்க பாருங்கோ. அதுதான் எங்கட சுப்பர் மார்க்கெட். நாங்க யாழ்ப்பாணத்திலயும் ஒண்டு திறக்கப் போறம். அது இவ்வளவு பெருசு.” என்று தகப்பனின் முன்னிருந்தபடியே தன் கைகள் இரண்டையும் தன்னால் முடிந்தவரையில் விரித்துக் காட்டிச் சொன்னான் சஜிதன்.
கேசிகன் முகத்தில் விரிந்த முறுவல். அந்த முறுவலோடே ‘மொழி சுப்பர் மார்கெட்’ முன்னே கொண்டுபோய் பைக்கை நிறுத்தினான்.
“இறங்கு, நான் சொல்லவே தேவையில்லாம பெரிய மனுசன் சொல்லிட்டார். இதான் எங்கட கடை.” என்றபடி தம் இருவடைய ஹெல்மெட்டுகளையும் கழற்றி சீட்டினுள் வைத்துவிட்டு, அவளுடையதற்காகத் திரும்பினான்.
அதற்குள் வேகமாகத் தன்னுடையைதைக் கழற்றிக் கையில் வைத்திருந்தாள் அவள். ‘அவ்வளவு வேகம்’ என்பதுபோல் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அதைக் கையுடன் எடுத்துக்கொண்டு அவளையும் அழைத்துக்கொண்டு நடந்தான்.
உள்ளே செல்ல முதல் அண்ணாந்து பார்த்தாள் நாவினி. கடையின் பெயர் மொழி என்று இருப்பதால் பார்க்கிறாளோ என்று தயங்கி, “அது அப்ப…” என்று ஆரம்பித்தவன், “‘ழி’ல வாற சுழில இங்கிலிஷ் எழுத்து கே மறைஞ்சு கிடக்கு என்ன?” என்று அவள் சொல்லவும் அதிர்ந்து நின்றுவிட்டான்.
இது அவனே ஆசையாசையாக வடிவமைத்தது. ‘இதில ஒண்டு மறைஞ்சிருக்கு. என்ன எண்டு சொல்லு பாப்பம்?’ என்று இவன் கேட்டும், நிறைமொழி கடைசிவரையிலும் கண்டுபிடிக்கவே இல்லை. அதில் இவனுக்குச் சின்ன மனச்சிணுக்கமும் அந்த நாள்களில் வந்திருந்தது. ஆனால் இன்று, அவன் சொல்லாமலேயே இவள் கண்டுபிடித்திருந்தாள்.
“நவி…”
“இல்ல, பாத்ததும் அதுதான் கண்ணில பட்டது. அதான்.” என்று இலகுவாகச் சொல்லிவிட்டு நடந்தாள். ஆனால், உள்ளே ஒரு வலி. எந்தளவில் நேசித்து வாழ்ந்திருந்தால் இந்தளவில் யோசித்து நடந்திருப்பான்?
அவளிடமிருந்து தகவல் எதுவும் இல்லை என்றதும் காத்து காத்து இருந்தவன் ஒரு கட்டத்தில் தன் காத்திருப்பின் காலத்தை முடித்துக்கொண்டு, வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறான் என்று புரிந்தாலும், என்னை அவனால் தவறாக நினைக்க முடிந்திருக்கிறதே என்கிற எண்ணம் அவள் மென் இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது.
அவனுடைய ‘பெட்டச்சி’ அப்படி நடப்பாளா என்று கூடவா யோசிக்கவில்லை. அவளுக்கு அந்தச் சந்தேகம் வரவேயில்லையே. காத்திருப்பேன் என்று சொன்னவன் காத்துக்கொண்டே இருப்பான் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையோடு வாழ்ந்தாளே.
“நவி!” என்றவனின் அழுத்தமான அழைப்பில்தான் புறவுலகில் கவனமில்லாது கடைக்குள் நடந்துகொண்டிருந்தவள் சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தாள். அந்த விழிகளில் தெரிந்த அலைப்புறுதலில் கேசிகனுக்கு ஒரு நொடி சுவாசிக்க இயலாமல் போயிற்று.
“என்ன?” என்றான் தன்னை மீறி.
“என்ன என்ன?” என்றாள் தன்னைச் சமாளித்துக்கொண்டு. அப்போதுதான் அவன் அருகில் இன்னொருவர் நிற்பது கண்டு, கேள்வியோடு அவனை ஏறிட்டாள்.
“இவர்தான் நான் இல்லாத நேரத்தில கடையப் பொறுப்பா பாக்கிறவர். உனக்கு அறிமுகப்படுத்தக் கூப்பிட்டனான்.” என்றான் அவனும் அவர் முன்னே எதையும் காட்டிக்கொள்ளாது.
அவரோடு இன்முகமாக இரண்டு வார்த்தை பேசினாள். அவர் அகன்றதும் அவன் பார்வை தன் மீது கேள்வியுடன் படிவது தெரிந்தாலும் காட்டிக்கொள்ளாமல் கடையைப் பார்வையால் அலசினாள்.
அளவான கடை. வரும் வழியில், ‘இது சின்ன கடைதான்’ என்று அவன் சொன்னதுபோல் அல்லாமல் அடக்கமான, அனைத்துப் பொருள்களும் கிடைக்கக்கூடிய வகையில் மென் பச்சையும் வெள்ளையும் தீமாகக் கொண்டு கடை முழுவதையும் அமைத்திருந்தான்.
கடையின் நேர்த்தியும் சிறு துரும்பு தூசு கூட இல்லாத துப்பரவும்தான் பளிச்சென்று முதல் பார்வையிலேயே பட்டது. அதைப் போலவே மொழி என்று எழுதப்பட்ட மென் பச்சையும் வெள்ளையும் சேர்ந்த டீ ஷேர்ட் அணிந்து பணிபுரிந்தவர்களும் மலர்ந்த முகத்துடன் எல்லோரையும் கவனித்துக்கொண்டிருந்தனர்.
உண்மையைச் சொல்லப்போனால் அவளுக்கு விடவும் சஜிதனுக்குத்தான் அங்கு ராஜ மரியாதை நடந்தது. அவன் வேறு, “நாங்க பிள்ளையாரப்பாட்டப் போய், கலியாணம் செய்து நவி அன்ட்ரிய எங்களோடயே கூட்டிக்கொண்டு வந்திட்டம் தெரியுமா?” என்று அங்குப் பணிபுரிகிறவர்களிடம் கதைகள் சொன்னான்.
எல்லோர் முகத்திலும் முறுவல். “இந்தப் பெரிய மனுசனை விட்டா வீட்டு விசயம் எல்லாத்தையும் போஸ்ட்டர் அடிச்சு ஒட்டுவான்.” என்று அவனைத் தூக்கிக்கொண்டு அலுவலக அறைக்கு அவளை அழைத்துச் சென்றான் கேசிகன்.
அது ஏசி போடப்பட்ட அறை. அங்கே இருந்த மேசையில் நிறைமொழியின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. தகப்பனின் இருக்கையில் ஏறி, மேசையில் கையை ஊன்றி அதை எட்டி எடுத்து, “அம்மா!” என்று முத்தமிட்டுவிட்டுத் தகப்பனிடமும் நீட்டினான் சஜிதன்.
செய்வது அறியாது திகைத்த கேசிகன் நாவினியைத் திரும்பிப் பார்த்தான். இதை நாவினியும் எதிர்பார்க்கவில்லை. எப்படி வினையாற்றுவது என்று தெரியாது திகைத்தாள். அந்தப் புகைப்படத்தைக் கண்டதும் அவன் முகத்தில் அப்பிக்கொண்ட சோகத்தையும், விழிகளில் தெரிந்த அலைப்புறுதலையும் கண்டு மிக ஆழமாக அடிவாங்கினாள்.
இது ஒன்றும் அவள் அறியா உண்மை இல்லையே. அந்தப் பெண்ணோடு வாழ்ந்து, அதன் சாட்சியாக மகனையே கையில் வைத்திருக்கிறவன், புகைப்படத்துக்குக் கொடுக்கப்போகிற ஒரு இதழ் ஒற்றுதலில் என்ன நடந்துவிடப் போகிறது?
ஒன்றுமேயில்லை. ஒன்றுமே இல்லை!
தன் துயரைத் தொண்டைக் குழியால் விழுங்கிவிட்டு, “அவர் குழந்தை. எந்த வழக்கத்தையும் மாத்த வேண்டாம்.” என்று அவனைப் பாராமல் சொல்லிவிட்டு வேறுபுறம் திரும்பிக்கொண்டாள்.
கேசிகனின் உள்ளமும் துடித்தது. அங்கே புகைப்படத்தில் புன்னகைத்துக்கொண்டிருந்தவளைப் பார்த்தான். அவளுக்காக அழுவானா, இங்கே முகம் திருப்பி நிற்கிறவளைப் பார்ப்பானா?
மகன் வேறு பார்த்துக்கொண்டிருக்கிறானே. எப்போதுமே நிறைமொழிக்கு நேரிலேயே கொடுக்கிறவன் போன்று தன் உதடுகளை அழுத்தி எடுக்கிறவன் இன்று மகனுக்காக ஃபிரேமின் விளிம்பில் ஒற்றி எடுத்துவிட்டு அதை மேசையில் கவிழ்த்து வைத்தான்.
அவன் மகன் விட வேண்டுமே. “அப்பா, அப்பிடி வைக்கிறேல்ல. அம்மா எங்களைப் பாக்கிற மாதிரி வைக்கோணும்.” என்றபடி நிமிர்த்தி வைத்தான்.
கேசிகனுக்கு மிகவும் தர்மசங்கடமான நிலை. “என்ன குடிக்கத் தர? ஐஸ்…” சூழ்நிலையைச் சீராக்கவேண்டி குரலைச் செருமிக்கொண்டு வினவினான்.
அவளுக்குத்தான் உள்ளம் போதும் போதும் என்கிற அளவில் குளிர்ந்து கிடக்கிறதே. “சஜுக்குட்டிக்கு என்ன வேணும்?” என்று சின்னவனிடம் வினவினாள்.
“ஐஸ் ஐஸ் ஐஸ்!” என்று தகப்பனின் இருக்கையில் நின்று குதித்தான் அவன்.
“இப்பிடிக் குதிக்கக் கூடாது செல்லம்.” என்று அவனிடம் பேச்சுக் கொடுத்து அவள் தன்னைச் சமாளிக்க முயல, அவனும் தன்னை நிலைப்படுத்த எண்ணி வெளியே சென்றான்.
திரும்பி வரும்போது இருவருக்குமான ஐஸ் அவன் இரு கைகளிலும் இருந்தது.
“உங்களுக்கு?” நாவினியும் சமாளித்து வினவினாள்.
“நான் சோடா ஏதும் குடிக்கிறன். ஒரு பத்து நிமிசம் இரு. அதுக்குப் பிறகு வந்து கடையச் சுத்திக் காட்டுறன்.”
“இல்ல பிரச்சினை இல்ல. நீங்க வேலையப் பாருங்க.”
ஒரு நொடி அவளைப் பார்வையால் அளந்துவிட்டுப் போனான் அவன்.
அதுவரையில் அவன் தந்த ஐஸிலேயே கவனமாக இருந்தவள் பார்வை, அவன் போனதும் நிறைமொழியிடம் ஓடிற்று. இவளுக்கு அவள் ‘மொழி அக்கா’. அமைதியானவள். கூடவே அன்பானவள். இன்று யோசித்துப் பார்க்கையில் அவளும் இவனை நேசித்திருக்க வேண்டும் என்று தோன்றிற்று.
அந்த நாள்களில் இவளைக் கூப்பிட்டுப் பேச்சுக் கொடுத்துக்கொண்டே இவளின் கேசி அண்ணாவைப் பற்றியும் விசாரித்திருக்கிறாள். அன்று இந்தளவு தெளிவு இல்லாதவளும் அவனைப் பற்றிச் சகலதும் சொல்லியிருக்கிறாள்.
நல்ல காலம், தன் காதலில் தோற்று, இவளைப் போன்று உடலிலிருந்து உயிரை உருவி எடுப்பது போன்ற வலிகளை எல்லாம் அவள் அனுபவிக்கவில்லை. ஆசைப்பட்டவனையே மணந்து, ஆசைப்பட்டது போலவே வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறாள்.
இல்லாமல் ஒரு புகைப்படமே ஒருவனின் மனத்தையும் முகத்தையும் கசக்கும் வல்லமை கொண்டதாக இருக்குமா என்ன?
அதேயளவு பாதிப்பை அவள் அவனுள் நிகழ்த்தியிருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் அவள் பற்றிய தகவல் எதுவும் இல்லை என்றதும் அடுத்து என்று போயிருப்பானா? தான் எதிலோ தோற்றுவிட்ட உணர்வு அடிபட்ட புறாவாக அவள் இதயத்தைத் துடிக்க வைத்தது.
அங்கே இருந்த சிசிடிவிகளில் அவன் ஏதோ லிஸ்ட்டுகள் சரி பார்ப்பதும், பணியாளர்களுடன் என்னவோ பேசுவதும், சில கைப்பேசி அழைப்புகளை மேற்கொள்வதும் தெரிந்தது.
காலம் அவனைப் பொறுப்பும் முதிர்ச்சியும் மிக்கவனாக மாற்றியிருந்தது. அப்போதும் அப்படித்தான். என்றாலும் இன்றைய அவனிடத்தில் தோற்றத்தில் மட்டுமல்லாது குணாதிசயத்திலும் நிறைய மாற்றங்கள். முன்னர் போன்ற இலகுவான பாவம், விளையாட்டுக் குணங்கள் எல்லாமே காணாமல் போயிருந்தன. சஜிதனோடான பொழுதுகள் மட்டுமே முகம் நிறைந்த சிரிப்பைக் காணலாம்.
பத்து நிமிடங்கள் என்றவன் அரை மணி நேரம் சென்றுதான் வந்தான். “கடை பாப்பம் வா!”
“இல்ல, உங்களுக்கு இன்னும் வேலைகள் இருக்குப் போலயே. நீங்க பாருங்கோ. நான் சஜுவோட கடையப் பாக்கிறன்.” சற்று முன்னர் நடந்தவை அவனை நிறைமொழியின் கணவனாகக் காட்டிவிட நாசுக்காக அவனைத் தவிர்த்தாள்.
அவன் பார்வை அவளில் கூர்மையோடு படிவது தெரிந்தாலும் அவன் புறம் பார்வையைத் திருப்பவில்லை அவள்.
அவளைக் காப்பாற்றுகிறவனாக, “நவி அன்ட்ரிக்கு நானே சுத்திக் காட்டுறன். ஆனா, கடைக்க ஓடித் திரிஞ்சு எதையும் தட்டிக் கொட்டக் கூடாது சரியோ?” என்று அவள் கரம் பற்றி அழைத்துக்கொண்டு நடந்தான் அவன் மகன்.
போகவா என்பதுபோல் திரும்பி இவனைப் பார்த்துக்கொண்டே அவள் அவனோடு இழுபட்டாள். ஏதோ ஒரு வகையில் அதற்கு முந்தைய அவள் பேச்சை அவளின் அந்தப் பார்வை ஈடுகட்டிவிட, உதட்டோரம் அரும்பிய சின்ன முறுவலோடு போ என்று தலையை அசைத்துச் சொன்னான் அவன்.
உண்மையில் அவனுக்கு நிறைய வேலைகள் இருந்தன. திருமண அலைச்சல்களால் கடைக்கு ஒழுங்காக வரக் கிடைத்திருக்கவில்லை. தன் இருக்கையில் அமர்ந்து அவற்றைப் பார்க்க ஆரம்பிகையில் நிறைமொழி கண்ணில் பட்டாள்.
அவளையே பார்த்தான். மெல்ல விரல் நீட்டி அவள் கன்னம் வருடப்போனவனால் இன்று ஏனோ முடியவில்லை. நாவினிக்குத் தவறிழைக்கும் உணர்வு. கண்ணோரம் கண்ணீர்ப் பூக்கள் இலேசாகப் பூத்தன. பெரு மூச்சு ஒன்றுடன் அவளைக் கவிழ்த்து வைத்துவிட்டுத் தன் வேலைகளில் ஆழ்ந்தான்.
நேரம் நழுவியதை அவன் உணரவேயில்லை. ஓரளவுக்கு வேலைகள் முடிவுக்கு வருகையில்தான் போன இவர்களைக் காணவில்லையே என்று நிமிர்ந்து சிசிடிவியில் தேடினான்.
தரையை உரசிச் செல்லும் பிங்க் வண்ணச் சுடிதாரில் ஒரு முழு ரோசாவாகவே அவள் நடக்க, அவளிடம் என்னவோ சொல்லிக் காட்டிக்கொண்டிருந்த மகனைக் கண்டு பக்கென்று சிரித்திருந்தான்.
அவளின் நீண்ட கைப்பிடி கொண்ட கைப்பையை மூன்றாகச் சுற்றித் தோளில் குறுக்காகப் போட்டுக்கொண்டு ஓடி ஓடி என்னவெல்லாமோ சொல்லிக்கொண்டிருந்தான் அவன்.
சிசிடிவியிலேயே தன்னிச்சையாய் மகனை வழித்துக் கொஞ்சியவனுக்கு அதற்குமேல் இங்கிருந்து வேலை பார்க்க முடியவில்லை. எழுந்து அவர்களிடம் சென்றான்.
“உனக்கு ஏதும் வேணுமெண்டால் எடு.”
தமக்கு பின்னால் திடீரென்று கேட்ட அவன் குரலில் திரும்பிப் பார்த்துவிட்டு, “நாளைக்கு வெளிக்கிடுற எனக்கு என்ன தேவ இருக்கப் போகுது?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.
“ஓம் என்ன?” அதை மறந்திருந்தவன் நெஞ்சில் ஏதோ அடைக்கும் உணர்வு.
“இனி எப்ப வருவாய்?”
“இனி ஏன் நான் வர?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.
ஏன், நான் இல்லையா என்று கேட்கமுடியாமல் நின்றான் அவன். ஆனாலும், “வர வசதிப்பட்டா வந்திட்டுப் போ.” என்று மட்டும் சொன்னான்.
சரி என்று தலையை அசைத்தாள் நாவினி.