அத்தியாயம் 22
கிட்டத்தட்ட அப்பாவும் மகனும் வந்து ஒரு மாதமாகிற்று. சஜிதனுக்கு இன்னும் கிண்டர் கார்டனில் இடம் கிடைக்காததால் இருவரும் வீட்டில்தான் இருந்தனர்.
சில நேரங்களில் உதயன் எங்காவது தனியாகச் செல்வதானால் கேசிகனையும் அழைத்துப்போவான். எல்லாமே புதிது என்பதில் அவனோடு கூடவே சென்று அந்த நாட்டின் நடப்பை, வழக்கங்களை அறிந்துகொள்வதில் இவனுக்கும் ஆர்வமே.
பெரும்பான்மை நாள்களின் அவனது பகல் நேரத்துச் சமையல் பிரேமாவோடு வீடியோ கோலில் இருந்தபடியேதான் நடக்கும். அப்படியே அவரையும் அங்கே சாப்பிட வைத்துவிடுவான். அவரும் அவன் சமையலுக்கான உத்திகளைச் சொல்லிக்கொடுத்தபடியே பேரனோடு ஆசை தீரப் பேசிவிடுவார்.
மாலையில் நாவினி வேலை முடிந்து வந்தபிறகு தானே அவளுக்கு அழைத்துக் கதைப்பார். அவர்கள் மூவரையும் குடும்பமாகப் பார்க்கக் கிடைப்பது அப்போதுதான் என்பதில் அதைத் தவற விடவே மாட்டார். அப்படியான பொழுதுகளில்தான் அவர்களை உன்னிப்பாக அவர் கவனிப்பதும்.
மூவரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள் என்பதைத் தாண்டி, கணவன் மனைவிக்கிடையிலான அந்த அந்நியோன்யம் எவ்வளவு தேடியும் அவர் கண்ணில் படுவதாக இல்லை. ஒரேயொரு ஆறுதல் நாவினியும் சஜிதனும் மிக நன்றாகவே ஒட்டிக்கொண்டிருந்தனர்.
அந்த, ‘நவி அன்ட்ரி’ மட்டும் இன்னும் மாறவில்லை. அதை மாற்ற முயலாத மகன் மீது மெல்லிய கோபம் கூட உண்டாயிற்று அவருக்கு. அன்று அவர் காணொளி அழைப்பில் இருக்கையில் தோடம்பழத்தை உரித்து, அதை ஒவ்வொரு சுளைகளாகப் பிரித்து, கண்ணாடிக் கிண்ணத்தினுள் போட்டு எடுத்துக்கொண்டு வந்த நாவினி, “சஜுக்குட்டி! அன்ட்ரிட்ட வாங்கோ. தோடம்பழம் சாப்பிடுவம்.” என்று அழைத்தாள்.
“இன்னும் என்னம்மா அன்ட்ரி? அம்மா எண்டு சொல்லிக்குடுங்கோ.” பட்டென்று சொன்னார் பிரேமா.
திகைத்து நிமிர்ந்த நாவினி, வேகமாகத் திரும்பிக் கேசிகனைத்தான் பார்த்தாள். அவனும் இதை எதிர்பார்க்கவில்லை என்று அவன் முகமே சொல்லிற்று.
“என்ன தம்பி, நீங்களாவது இதையெல்லாம் சொல்லிக் குடுக்கிறேல்லையாப்பு? இன்னும் எத்தின நாளைக்கு அன்ட்ரி எண்டு சொல்லுவார்?” என்று மகனை அதட்டிவிட்டு, “சஜுக்குட்டி! அப்பம்மாவப் பாருங்கோ. சாரு அண்ணா பிரியா அன்ட்ரிய எப்பிடிக் கூப்பிடுறவர்?” என்று பேரனிடம் வினவினார்.
“அம்மா எண்டு.” நாவினியின் மடியில் அமர்ந்திருந்த குட்டிக் கண்ணனும் அழகாகப் பதில் சொன்னான்.
“அதே மாதிரி எங்கட செல்லமும் நவி அன்ட்ரிய அம்மா எண்டுதானே கூப்பிடோணும். அதுக்குத்தானே உங்கட அப்பா அப்புச்சாமிட்ட போய் நவி அம்மாவக் கலியாணம் முடிச்சவர்.” என்று எடுத்துச் சொன்னார் பெரியவர்.
“அப்ப மொழி அம்மா?” கெட்டிக்காரக் குழந்தை எழுப்பிய கேள்வியை விடவும், அத்தனை காலமும் அம்மாவாக இருந்தவளை அவனே ‘மொழி அம்மா’வாக மாற்றியதில் ஒரு கணம் துடித்து நிமிர்ந்தான் கேசிகன்.
நாவினி இமைகளைச் சிமிட்டக் கூட இல்லை. துடிக்கும் அவனையே அகன்ற விழிகளில் வேதனை துலங்கப் பார்த்திருந்தாள்.
“மொழி அம்மா அப்புச்சாமிட்ட போயிற்றா எல்லா? அவாக்குப் பதிலா எங்கட சஜுக்குட்டிய ஆரு பாக்கிறது? நவி அம்மாதானே?”
அவன் மேலும் கீழுமாகப் பெரிதாகத் தலையை அசைத்து ஆமோதித்தான்.
“அப்ப அவாவை நீங்க அம்மா எண்டுதானே கூப்பிடோணும். நீங்க வேணுமெண்டா நவி அம்மாவக் கேளுங்கோ. அவாக்கும் அதுதான் விருப்பமாம்.”
“ஓமா?” என்றான் சின்னவன் அவளிடம் திரும்பி. என்ன சொல்லுவாள்? அங்கே ஒருவன் இதையெல்லாம் ஏற்க முடியாமல் நெருப்பில் விழுந்த புழுவாகத் துடித்துக்கொண்டு இருக்கையில் ஆம் என்று எப்படிச் சொல்லுவாள்?
“நாவினி, தம்பி கேக்கிறான் எல்லாம்மா? பதிலச் சொல்லுங்கோ.” பிரேமாவுக்கு மகன் மருமகள் இருவர் மீதும் பயங்கரக் கோபம். சின்னவன் முன் கொஞ்சம் பிசகினாலும் எல்லாம் பிழைத்துவிடும் என்பதில் மிகுந்த பொறுமையோடு அந்தச் சூழ்நிலையை நாசூக்காய் நகர்த்தினார்.
“உங்களுக்கு எப்பிடி விருப்பமோ அப்பிடிக் கூப்பிடுங்க செல்லம்.” அவன் பார்வையில் சிறு ஆமோதிப்பும் இல்லாதபோது பிரேமா சொன்னதுபோல் அவளால் சொல்ல முடியவில்லை.
“உங்கட அப்பாவையும் கேளுங்கோ?” ஒரு முடிவுடன் இருந்த பிரேமா விடுவதாக இல்லை.
“அப்பா, நவி அன்ட்ரிய எப்பிடிக் கூப்பிட? மொழி அம்மா அப்புச்சாமிட்ட போனதால நவி அம்மா எண்டு கூப்பிடவா?”
கணவன் மனைவி இருவருமே சோஃபாவில் அமர்ந்திருந்துதான் பிரேமாவுடன் பேசிக்கொண்டிருந்தனர். நாவினியின் மடியில் இருந்த மகனைத் தூக்கித் தன் மார்போடு சேர்த்தணைத்தவனின் விழிகள் பனித்தன. மனக்கண்ணில் நிறைமொழி வந்து புன்னகைக்க, “அம்மா எண்டுதான் கூப்பிடோணும். அவாதான் இனிப் பிள்ளைக்கு அம்மா.” என்றான் அவன் நெற்றி முட்டி.
“பிறகு என்ன அப்பாவே சொல்லிட்டார். அங்க பாருங்கோ, தம்பின்ர அம்மா அழுதுகொண்டு இருக்கிறா. அவான்ர கண்ணைத் துடைச்சு விட்டுட்டுச் சிரிக்கச் சொல்லுங்கோ பாப்பம்.” என்றதும் தகப்பனின் கையில் இருந்தவன் நாவினியைத் திரும்பிப் பார்த்தான்.
அவள் சிரிப்பும் அழுகையுமாயாகக் கண்களைத் துடைத்தாள். “நவி அன்ட்… அம்மா அழக் கூடாது. சின்ன பிள்ளைகள்தான் அழுறது.” என்று தன் பிஞ்சுக் கைகளால் தானும் துடைத்துவிட்டான்.
உடைந்து விம்மினாள் நாவினி. பிரேமாதான் கனிவுடன் அவளை அதட்டி அடக்கினார். அவர் அழைப்பைத் துண்டித்த பிறகும் கணவன் மனைவி இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
சாருகனின் கார்களை வைத்து விளையாடிக்கொண்டிருந்த சின்னவனின் சலசலப்பு மட்டுமே அங்குக் கேட்டுக்கொண்டிருந்தது. அதுவும் எதையாவது சொல்கையில் அவன் அம்மாவையும் அன்ட்ரியையும் போட்டுக் குழப்பியடிப்பது நாவினிக்கு இலேசான புன்னகையோடு சேர்த்துக் கண்ணீரையும் தோற்றுவித்தது. திரும்பிக் கேசிகனைப் பார்த்தாள்.
மகன் மீது பார்வை இருந்தாலும் அவன் இங்கில்லை என்று விளங்கிற்று. வேதனையோடு அவனையே பார்த்தாள். தன் எதிர்பார்ப்பு இப்போதும் தோற்றுப்போனது புரிந்தது.
சட்டென்று எழுந்து சமையலறைக்கு நடந்தாள். பகல் அவன் சமைத்த கறிகள் இருந்தன. ரொட்டி சுட்டால் போதும். ஒரு கிண்ணத்தில் பச்சை மாவை எடுத்துப் போட்டாள். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாம் தேவையான அளவு எடுத்துச் சின்ன சின்னதாக நறுக்கிப் போட்டாள்.
கூடவே தேவையான உப்பும் தேங்காய்ப்பூவும் சேர்த்து, இளஞ்சசூட்டுத் தண்ணீரும் எண்ணெய் கொஞ்சமும் விட்டு நன்றாகக் குழைத்து எடுத்தாள். அவற்றை அளவான உருண்டைகளாக்கி மூடி வைத்துவிட்டுச் சின்னவனுக்கு கிரேப்ஸ் செய்து கொடுத்தாள்.
அப்போதும் கேசிகனிடம் அசைவே இல்லை. இந்தளவிலா நிறைமொழி அவனோடு இரண்டரக் கலந்திருக்கிறாள்? அவள் அவன் மனைவி, அந்நியோன்யமாக வாழ்ந்தவர்கள், இன்று அவள் இல்லை என்றாலும் அந்த வலி இருக்கும் என்று அறிவு எடுத்துச் சொன்னாலும் மனம் தாங்க முடியாமல் சுருண்டது.
அவளையும்தானே நேசித்தான். இன்னும் சொல்லப்போனால் அவன் முதல் காதல் அவள். அப்படியிருக்க இந்தளவு பாதிப்பை அவள் அவனுள் நிகழ்த்தியிருக்கவில்லையே. அப்படி இருந்திருந்தால் அவள் பற்றிய தகவல் எதுவும் இல்லை என்றதும் அடுத்து என்று போயிருப்பானா?
தான் தன் காதலில் தோற்றுப்போனோம் என்பதும், நிறைமொழியளவு அவன் இதயத்தின் அடியாழம் வரை ஊடுருவும் சக்தி தனக்கு இருக்கவில்லை என்பதும் அடிபட்ட புறாவாக அவள் இதயத்தைத் துடிக்க வைத்தன.
சட்டென்று இறங்கிவிட்ட சூடான கண்ணீரை அவன் பார்த்துவிட முதல் துடைத்துக்கொண்டாலும் அது நிற்பதாய் இல்லை. கொட்டும் கண்ணீரைத் துடைத்துவிட்டபடியேதான் ரொட்டிகளைச் சுட்டாள்.
“என்னட்டச் சொல்லியிருக்க நானும் வந்திருப்பனே.” திடீரென்று பின்னால் கேட்ட குரலில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் நாவினி
“நவி என்ன, அழுறியா?” அவள் கண்களின் சிவப்பையும் இமைகளில் படிந்திருந்த ஈரத்தையும் கண்டு அதிர்ந்து கேட்டான்.
சட்டென்று தலையைக் குனிந்து புறங்கையால் கண்களைத் துடைத்துக்கொண்டு, “இல்ல. அது ஏதோ…” என்று அவள் சமாளிக்க முயல, “நீ திரும்பு முதல்!” என்று அவள் கரம் பற்றித் திருப்பினான் அவன்.
கண்கள், மூக்கு, முகமெல்லாம் செக்கச் சிவந்திருப்பதைக் கண்டு திகைத்தான். “நவி என்னம்மா?” என்று அவளை அணைக்க வர, “ப்ளீஸ்!” என்று விலகினாள் அவள்.
ஒன்றும் புரியமாட்டேன் என்றது அவனுக்கு. “என்ன எண்டு சொல்லு நவி. இப்பிடி எல்லாத்தையும் உன்ர மனதுக்கயே வச்சிருக்காத.” என்று அதட்டினான்.
சமாளித்துப் புன்னகைக்க முயன்றாலும் கண்ணீர் அரும்பிற்று அவளுக்கு. திரும்ப திரும்ப அவன் விசாரித்தும் மனம் திறக்க மறுத்தாள் அவள்.
அவனுக்கு முகம் மாறியது. “அப்ப என்ன எண்டு சொல்ல மாட்டாய்?” என்றான் இறுக்கமான குரலில்.
“இல்ல. உண்மையா ஒண்டும் இல்ல.”
“ஓ சரி!” என்றுவிட்டுப் போய்த் தொலைக்காட்சியைப் போட்டுக்கொண்டு அமர்ந்துகொண்டான். “அப்பா, டெலிடபீஸ் போடுங்கோ!” என்றபடி ஓடிவந்து தகப்பனின் மடியில் ஏறி அமர்ந்தான் மகன். அதைச் செய்தாலும் அவனிடம் தென்பட்ட இறுக்கமே அவன் கோபத்தின் அளவைச் சொல்லிற்று.
நாவினி பரிதவித்துப்போனாள். முதலில் அவளால் இதை அவனிடம் பேச முடியும் என்கிற நம்பிக்கை இல்லை. பேசி வீண் பிரச்சனைகளை உருவாக்கத் தைரியமில்லை. சின்னவனும் இருக்கிறானே. ரொட்டிகளைச் சுட்டு முடித்து, கறிகளையும் சூடு செய்து கொண்டுவந்து மேசையில் வைத்துவிட்டு அவனைச் சாப்பிட அழைத்தாள்
அவன் அசையவே இல்லை. சின்னவன் கவனத்தைக் கவராமல் அங்கேயே நின்று கெஞ்சலாகப் பார்த்தாள். அவன் திரும்புவதாகவே இல்லை.
கேசிகனின் இந்த முகம் அவளுக்குப் புதிது. அவளின் கேசி அவள் தவறே செய்தால் கூடத் தண்டிக்காமல் தட்டிக்கொடுத்துப் புரியவைப்பான். ஆனால் இவன்…
திரும்பவும் கண்ணீர் பெருகும்போலிருக்கவும் பேசாமல் சாப்பாட்டை மூடி வைத்துவிட்டுத் தன் அலுவலக அறைக்குள் நுழைந்துகொண்டாள். வேலை பார்க்கும் மனநிலை கொஞ்சமும் இல்லை. கண்ணீர் மட்டும் ஏன் என்றில்லாமல் பெருகிற்று.
இல்லாத பெற்றோர்களை எண்ணி அழுதாளா, இல்லை இழந்துவிட்ட தன் காதலை எண்ணி அழுதாளா, இப்படி வாழ்க்கையை செம்மையாகக் கொண்டு போக முடியாமல் அல்லாடும் தன் இயலாமையை எண்ணி அழுதாளா, இல்லை அவன் காட்டும் இந்தக் கடின முகத்தினால் அழுதாளா அவளுக்குத் தெரியாது.
ஒரு கட்டத்தில் உதடுகள் காய்ந்து, தொண்டை உலர்ந்து, கண்கள் எரியவும் போய் முகத்தை அடித்துக் கழுவினாள். சின்னவன் உறங்குவதற்கான நேரம் வந்திருந்தது. திரும்பவும் விறாந்தைக்கு வந்து பார்த்தாள்.
அவள் எண்ணியதுபோல் தகப்பனின் மார்பில் தலையை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக மாற்றி மாற்றி வைத்தபடி உறக்கமும் விழிப்புமாக இருந்தான் அவன்.
இவளைக் கண்டுவிட்டு, “நவி அன்… அம்மா.” என்றான் அந்த உறக்கக் கலக்கத்திலும்.
அவனாவது அவளுக்கு இருக்கிறானே. உள்ளம் கனிய, “மேல போய்ப் படுப்பம்.” என்றபடி வந்து அவனைத் தூக்கிக்கொண்டு
மேலே போனாள். அவனை நெருங்கிச் சின்னவனைத் தூக்குகையில் நெஞ்சம் படபடக்காமல் இல்லை. ஆனாலும் சமாளித்திருந்தாள்.
அவள் முகத்தை ஒருமுறை நன்றாகப் பார்த்துவிட்டு, “நவி அன்… அம்மா அழுதவாவா?” என்றான் சின்னவன்.
இவளுக்கு நாசி விடைத்துக்கொண்டு வந்தது. ஆனாலும் முறுவலித்து, “இல்லையே. அது அப்போத சந்தோசத்தில அழுதது. இப்பவும் தெரியுது.” என்று சொன்னாள்.
“அப்ப நான் அம்மா கூப்பிடவா?” என்று தலையையும் ஆட்டிக் கேட்டான் அவன்.
“ஓம் கூப்பிடுங்க செல்லம்.”
“அம்மா!” அவள் கழுத்தைத் தன் பிஞ்சுக் கரங்களினால் கட்டிக்கொண்டு அவன் சொல்ல அவள் விழிகளில் நீர் திரண்டுபோயிற்று.
கிட்டத்தட்ட அப்பாவும் மகனும் வந்து ஒரு மாதமாகிற்று. சஜிதனுக்கு இன்னும் கிண்டர் கார்டனில் இடம் கிடைக்காததால் இருவரும் வீட்டில்தான் இருந்தனர்.
சில நேரங்களில் உதயன் எங்காவது தனியாகச் செல்வதானால் கேசிகனையும் அழைத்துப்போவான். எல்லாமே புதிது என்பதில் அவனோடு கூடவே சென்று அந்த நாட்டின் நடப்பை, வழக்கங்களை அறிந்துகொள்வதில் இவனுக்கும் ஆர்வமே.
பெரும்பான்மை நாள்களின் அவனது பகல் நேரத்துச் சமையல் பிரேமாவோடு வீடியோ கோலில் இருந்தபடியேதான் நடக்கும். அப்படியே அவரையும் அங்கே சாப்பிட வைத்துவிடுவான். அவரும் அவன் சமையலுக்கான உத்திகளைச் சொல்லிக்கொடுத்தபடியே பேரனோடு ஆசை தீரப் பேசிவிடுவார்.
மாலையில் நாவினி வேலை முடிந்து வந்தபிறகு தானே அவளுக்கு அழைத்துக் கதைப்பார். அவர்கள் மூவரையும் குடும்பமாகப் பார்க்கக் கிடைப்பது அப்போதுதான் என்பதில் அதைத் தவற விடவே மாட்டார். அப்படியான பொழுதுகளில்தான் அவர்களை உன்னிப்பாக அவர் கவனிப்பதும்.
மூவரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள் என்பதைத் தாண்டி, கணவன் மனைவிக்கிடையிலான அந்த அந்நியோன்யம் எவ்வளவு தேடியும் அவர் கண்ணில் படுவதாக இல்லை. ஒரேயொரு ஆறுதல் நாவினியும் சஜிதனும் மிக நன்றாகவே ஒட்டிக்கொண்டிருந்தனர்.
அந்த, ‘நவி அன்ட்ரி’ மட்டும் இன்னும் மாறவில்லை. அதை மாற்ற முயலாத மகன் மீது மெல்லிய கோபம் கூட உண்டாயிற்று அவருக்கு. அன்று அவர் காணொளி அழைப்பில் இருக்கையில் தோடம்பழத்தை உரித்து, அதை ஒவ்வொரு சுளைகளாகப் பிரித்து, கண்ணாடிக் கிண்ணத்தினுள் போட்டு எடுத்துக்கொண்டு வந்த நாவினி, “சஜுக்குட்டி! அன்ட்ரிட்ட வாங்கோ. தோடம்பழம் சாப்பிடுவம்.” என்று அழைத்தாள்.
“இன்னும் என்னம்மா அன்ட்ரி? அம்மா எண்டு சொல்லிக்குடுங்கோ.” பட்டென்று சொன்னார் பிரேமா.
திகைத்து நிமிர்ந்த நாவினி, வேகமாகத் திரும்பிக் கேசிகனைத்தான் பார்த்தாள். அவனும் இதை எதிர்பார்க்கவில்லை என்று அவன் முகமே சொல்லிற்று.
“என்ன தம்பி, நீங்களாவது இதையெல்லாம் சொல்லிக் குடுக்கிறேல்லையாப்பு? இன்னும் எத்தின நாளைக்கு அன்ட்ரி எண்டு சொல்லுவார்?” என்று மகனை அதட்டிவிட்டு, “சஜுக்குட்டி! அப்பம்மாவப் பாருங்கோ. சாரு அண்ணா பிரியா அன்ட்ரிய எப்பிடிக் கூப்பிடுறவர்?” என்று பேரனிடம் வினவினார்.
“அம்மா எண்டு.” நாவினியின் மடியில் அமர்ந்திருந்த குட்டிக் கண்ணனும் அழகாகப் பதில் சொன்னான்.
“அதே மாதிரி எங்கட செல்லமும் நவி அன்ட்ரிய அம்மா எண்டுதானே கூப்பிடோணும். அதுக்குத்தானே உங்கட அப்பா அப்புச்சாமிட்ட போய் நவி அம்மாவக் கலியாணம் முடிச்சவர்.” என்று எடுத்துச் சொன்னார் பெரியவர்.
“அப்ப மொழி அம்மா?” கெட்டிக்காரக் குழந்தை எழுப்பிய கேள்வியை விடவும், அத்தனை காலமும் அம்மாவாக இருந்தவளை அவனே ‘மொழி அம்மா’வாக மாற்றியதில் ஒரு கணம் துடித்து நிமிர்ந்தான் கேசிகன்.
நாவினி இமைகளைச் சிமிட்டக் கூட இல்லை. துடிக்கும் அவனையே அகன்ற விழிகளில் வேதனை துலங்கப் பார்த்திருந்தாள்.
“மொழி அம்மா அப்புச்சாமிட்ட போயிற்றா எல்லா? அவாக்குப் பதிலா எங்கட சஜுக்குட்டிய ஆரு பாக்கிறது? நவி அம்மாதானே?”
அவன் மேலும் கீழுமாகப் பெரிதாகத் தலையை அசைத்து ஆமோதித்தான்.
“அப்ப அவாவை நீங்க அம்மா எண்டுதானே கூப்பிடோணும். நீங்க வேணுமெண்டா நவி அம்மாவக் கேளுங்கோ. அவாக்கும் அதுதான் விருப்பமாம்.”
“ஓமா?” என்றான் சின்னவன் அவளிடம் திரும்பி. என்ன சொல்லுவாள்? அங்கே ஒருவன் இதையெல்லாம் ஏற்க முடியாமல் நெருப்பில் விழுந்த புழுவாகத் துடித்துக்கொண்டு இருக்கையில் ஆம் என்று எப்படிச் சொல்லுவாள்?
“நாவினி, தம்பி கேக்கிறான் எல்லாம்மா? பதிலச் சொல்லுங்கோ.” பிரேமாவுக்கு மகன் மருமகள் இருவர் மீதும் பயங்கரக் கோபம். சின்னவன் முன் கொஞ்சம் பிசகினாலும் எல்லாம் பிழைத்துவிடும் என்பதில் மிகுந்த பொறுமையோடு அந்தச் சூழ்நிலையை நாசூக்காய் நகர்த்தினார்.
“உங்களுக்கு எப்பிடி விருப்பமோ அப்பிடிக் கூப்பிடுங்க செல்லம்.” அவன் பார்வையில் சிறு ஆமோதிப்பும் இல்லாதபோது பிரேமா சொன்னதுபோல் அவளால் சொல்ல முடியவில்லை.
“உங்கட அப்பாவையும் கேளுங்கோ?” ஒரு முடிவுடன் இருந்த பிரேமா விடுவதாக இல்லை.
“அப்பா, நவி அன்ட்ரிய எப்பிடிக் கூப்பிட? மொழி அம்மா அப்புச்சாமிட்ட போனதால நவி அம்மா எண்டு கூப்பிடவா?”
கணவன் மனைவி இருவருமே சோஃபாவில் அமர்ந்திருந்துதான் பிரேமாவுடன் பேசிக்கொண்டிருந்தனர். நாவினியின் மடியில் இருந்த மகனைத் தூக்கித் தன் மார்போடு சேர்த்தணைத்தவனின் விழிகள் பனித்தன. மனக்கண்ணில் நிறைமொழி வந்து புன்னகைக்க, “அம்மா எண்டுதான் கூப்பிடோணும். அவாதான் இனிப் பிள்ளைக்கு அம்மா.” என்றான் அவன் நெற்றி முட்டி.
“பிறகு என்ன அப்பாவே சொல்லிட்டார். அங்க பாருங்கோ, தம்பின்ர அம்மா அழுதுகொண்டு இருக்கிறா. அவான்ர கண்ணைத் துடைச்சு விட்டுட்டுச் சிரிக்கச் சொல்லுங்கோ பாப்பம்.” என்றதும் தகப்பனின் கையில் இருந்தவன் நாவினியைத் திரும்பிப் பார்த்தான்.
அவள் சிரிப்பும் அழுகையுமாயாகக் கண்களைத் துடைத்தாள். “நவி அன்ட்… அம்மா அழக் கூடாது. சின்ன பிள்ளைகள்தான் அழுறது.” என்று தன் பிஞ்சுக் கைகளால் தானும் துடைத்துவிட்டான்.
உடைந்து விம்மினாள் நாவினி. பிரேமாதான் கனிவுடன் அவளை அதட்டி அடக்கினார். அவர் அழைப்பைத் துண்டித்த பிறகும் கணவன் மனைவி இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
சாருகனின் கார்களை வைத்து விளையாடிக்கொண்டிருந்த சின்னவனின் சலசலப்பு மட்டுமே அங்குக் கேட்டுக்கொண்டிருந்தது. அதுவும் எதையாவது சொல்கையில் அவன் அம்மாவையும் அன்ட்ரியையும் போட்டுக் குழப்பியடிப்பது நாவினிக்கு இலேசான புன்னகையோடு சேர்த்துக் கண்ணீரையும் தோற்றுவித்தது. திரும்பிக் கேசிகனைப் பார்த்தாள்.
மகன் மீது பார்வை இருந்தாலும் அவன் இங்கில்லை என்று விளங்கிற்று. வேதனையோடு அவனையே பார்த்தாள். தன் எதிர்பார்ப்பு இப்போதும் தோற்றுப்போனது புரிந்தது.
சட்டென்று எழுந்து சமையலறைக்கு நடந்தாள். பகல் அவன் சமைத்த கறிகள் இருந்தன. ரொட்டி சுட்டால் போதும். ஒரு கிண்ணத்தில் பச்சை மாவை எடுத்துப் போட்டாள். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாம் தேவையான அளவு எடுத்துச் சின்ன சின்னதாக நறுக்கிப் போட்டாள்.
கூடவே தேவையான உப்பும் தேங்காய்ப்பூவும் சேர்த்து, இளஞ்சசூட்டுத் தண்ணீரும் எண்ணெய் கொஞ்சமும் விட்டு நன்றாகக் குழைத்து எடுத்தாள். அவற்றை அளவான உருண்டைகளாக்கி மூடி வைத்துவிட்டுச் சின்னவனுக்கு கிரேப்ஸ் செய்து கொடுத்தாள்.
அப்போதும் கேசிகனிடம் அசைவே இல்லை. இந்தளவிலா நிறைமொழி அவனோடு இரண்டரக் கலந்திருக்கிறாள்? அவள் அவன் மனைவி, அந்நியோன்யமாக வாழ்ந்தவர்கள், இன்று அவள் இல்லை என்றாலும் அந்த வலி இருக்கும் என்று அறிவு எடுத்துச் சொன்னாலும் மனம் தாங்க முடியாமல் சுருண்டது.
அவளையும்தானே நேசித்தான். இன்னும் சொல்லப்போனால் அவன் முதல் காதல் அவள். அப்படியிருக்க இந்தளவு பாதிப்பை அவள் அவனுள் நிகழ்த்தியிருக்கவில்லையே. அப்படி இருந்திருந்தால் அவள் பற்றிய தகவல் எதுவும் இல்லை என்றதும் அடுத்து என்று போயிருப்பானா?
தான் தன் காதலில் தோற்றுப்போனோம் என்பதும், நிறைமொழியளவு அவன் இதயத்தின் அடியாழம் வரை ஊடுருவும் சக்தி தனக்கு இருக்கவில்லை என்பதும் அடிபட்ட புறாவாக அவள் இதயத்தைத் துடிக்க வைத்தன.
சட்டென்று இறங்கிவிட்ட சூடான கண்ணீரை அவன் பார்த்துவிட முதல் துடைத்துக்கொண்டாலும் அது நிற்பதாய் இல்லை. கொட்டும் கண்ணீரைத் துடைத்துவிட்டபடியேதான் ரொட்டிகளைச் சுட்டாள்.
“என்னட்டச் சொல்லியிருக்க நானும் வந்திருப்பனே.” திடீரென்று பின்னால் கேட்ட குரலில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் நாவினி
“நவி என்ன, அழுறியா?” அவள் கண்களின் சிவப்பையும் இமைகளில் படிந்திருந்த ஈரத்தையும் கண்டு அதிர்ந்து கேட்டான்.
சட்டென்று தலையைக் குனிந்து புறங்கையால் கண்களைத் துடைத்துக்கொண்டு, “இல்ல. அது ஏதோ…” என்று அவள் சமாளிக்க முயல, “நீ திரும்பு முதல்!” என்று அவள் கரம் பற்றித் திருப்பினான் அவன்.
கண்கள், மூக்கு, முகமெல்லாம் செக்கச் சிவந்திருப்பதைக் கண்டு திகைத்தான். “நவி என்னம்மா?” என்று அவளை அணைக்க வர, “ப்ளீஸ்!” என்று விலகினாள் அவள்.
ஒன்றும் புரியமாட்டேன் என்றது அவனுக்கு. “என்ன எண்டு சொல்லு நவி. இப்பிடி எல்லாத்தையும் உன்ர மனதுக்கயே வச்சிருக்காத.” என்று அதட்டினான்.
சமாளித்துப் புன்னகைக்க முயன்றாலும் கண்ணீர் அரும்பிற்று அவளுக்கு. திரும்ப திரும்ப அவன் விசாரித்தும் மனம் திறக்க மறுத்தாள் அவள்.
அவனுக்கு முகம் மாறியது. “அப்ப என்ன எண்டு சொல்ல மாட்டாய்?” என்றான் இறுக்கமான குரலில்.
“இல்ல. உண்மையா ஒண்டும் இல்ல.”
“ஓ சரி!” என்றுவிட்டுப் போய்த் தொலைக்காட்சியைப் போட்டுக்கொண்டு அமர்ந்துகொண்டான். “அப்பா, டெலிடபீஸ் போடுங்கோ!” என்றபடி ஓடிவந்து தகப்பனின் மடியில் ஏறி அமர்ந்தான் மகன். அதைச் செய்தாலும் அவனிடம் தென்பட்ட இறுக்கமே அவன் கோபத்தின் அளவைச் சொல்லிற்று.
நாவினி பரிதவித்துப்போனாள். முதலில் அவளால் இதை அவனிடம் பேச முடியும் என்கிற நம்பிக்கை இல்லை. பேசி வீண் பிரச்சனைகளை உருவாக்கத் தைரியமில்லை. சின்னவனும் இருக்கிறானே. ரொட்டிகளைச் சுட்டு முடித்து, கறிகளையும் சூடு செய்து கொண்டுவந்து மேசையில் வைத்துவிட்டு அவனைச் சாப்பிட அழைத்தாள்
அவன் அசையவே இல்லை. சின்னவன் கவனத்தைக் கவராமல் அங்கேயே நின்று கெஞ்சலாகப் பார்த்தாள். அவன் திரும்புவதாகவே இல்லை.
கேசிகனின் இந்த முகம் அவளுக்குப் புதிது. அவளின் கேசி அவள் தவறே செய்தால் கூடத் தண்டிக்காமல் தட்டிக்கொடுத்துப் புரியவைப்பான். ஆனால் இவன்…
திரும்பவும் கண்ணீர் பெருகும்போலிருக்கவும் பேசாமல் சாப்பாட்டை மூடி வைத்துவிட்டுத் தன் அலுவலக அறைக்குள் நுழைந்துகொண்டாள். வேலை பார்க்கும் மனநிலை கொஞ்சமும் இல்லை. கண்ணீர் மட்டும் ஏன் என்றில்லாமல் பெருகிற்று.
இல்லாத பெற்றோர்களை எண்ணி அழுதாளா, இல்லை இழந்துவிட்ட தன் காதலை எண்ணி அழுதாளா, இப்படி வாழ்க்கையை செம்மையாகக் கொண்டு போக முடியாமல் அல்லாடும் தன் இயலாமையை எண்ணி அழுதாளா, இல்லை அவன் காட்டும் இந்தக் கடின முகத்தினால் அழுதாளா அவளுக்குத் தெரியாது.
ஒரு கட்டத்தில் உதடுகள் காய்ந்து, தொண்டை உலர்ந்து, கண்கள் எரியவும் போய் முகத்தை அடித்துக் கழுவினாள். சின்னவன் உறங்குவதற்கான நேரம் வந்திருந்தது. திரும்பவும் விறாந்தைக்கு வந்து பார்த்தாள்.
அவள் எண்ணியதுபோல் தகப்பனின் மார்பில் தலையை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக மாற்றி மாற்றி வைத்தபடி உறக்கமும் விழிப்புமாக இருந்தான் அவன்.
இவளைக் கண்டுவிட்டு, “நவி அன்… அம்மா.” என்றான் அந்த உறக்கக் கலக்கத்திலும்.
அவனாவது அவளுக்கு இருக்கிறானே. உள்ளம் கனிய, “மேல போய்ப் படுப்பம்.” என்றபடி வந்து அவனைத் தூக்கிக்கொண்டு
மேலே போனாள். அவனை நெருங்கிச் சின்னவனைத் தூக்குகையில் நெஞ்சம் படபடக்காமல் இல்லை. ஆனாலும் சமாளித்திருந்தாள்.
அவள் முகத்தை ஒருமுறை நன்றாகப் பார்த்துவிட்டு, “நவி அன்… அம்மா அழுதவாவா?” என்றான் சின்னவன்.
இவளுக்கு நாசி விடைத்துக்கொண்டு வந்தது. ஆனாலும் முறுவலித்து, “இல்லையே. அது அப்போத சந்தோசத்தில அழுதது. இப்பவும் தெரியுது.” என்று சொன்னாள்.
“அப்ப நான் அம்மா கூப்பிடவா?” என்று தலையையும் ஆட்டிக் கேட்டான் அவன்.
“ஓம் கூப்பிடுங்க செல்லம்.”
“அம்மா!” அவள் கழுத்தைத் தன் பிஞ்சுக் கரங்களினால் கட்டிக்கொண்டு அவன் சொல்ல அவள் விழிகளில் நீர் திரண்டுபோயிற்று.