நிகேதன் வீடு வரும்போது நேரம் பதினொன்றைத் தாண்டியிருந்தது. பெரும் சண்டை ஒன்றில் அன்றைய நாள் ஆரம்பித்ததாலோ என்னவோ அந்த நாளே அவனுக்குச் சரியில்லை. கிளிநொச்சி ட்ரிப் போனவனின் டயர் இடையில் பஞ்சராகி, உச்சி ...
உறவில் ஒருவரின் மகள் பூப்பெய்துவிட்டாள் என்று பார்த்துவரச் சென்றிருந்தார் அமராவதி. மாலை வீடு திரும்பியபோது தலைகீழாக மாறிப்போயிருந்த வீட்டு நிலையைக் கண்டு அதிர்ந்துபோனார். நடந்ததை கயலினி மூலம் அறிந்துக...
புதுக் கணவன். முதல் சண்டை. கலங்கிப்போய் அமர்ந்திருந்தாள் கயலினி. ராகவன் மலை இறங்குவேனா என்று நின்றான். “அங்க கேக்க முதல் என்னட்ட ஒரு வார்த்த கேக்கவேணும் எண்டு யோசிக்க மாட்டியா நீ? உன்ர அண்ணாவும் அண்ணி...
“அண்ணா.. அது.. எங்களுக்கு உங்கட அறைய தாறீங்களா?” நிகேதனுக்கு அவளின் கேள்வி புரியவில்லை. அவர்களின் அறைக்கு என்ன குறை? அப்போதுதான் குளித்துவிட்டு வந்த ஆரணியிடம் பார்வை சென்றுவர, தங்கையைத் திரும்பிக் கேள...
அந்த ஒரு மாதத்தையும் கடத்துவதற்குள் ஆரணி திணறிப்போனாள். கைபேசியில் கூடப் பேச முடியாத நிலை. எந்த நேரமும் பிரச்சாரமும் கோஷமும் சுற்றிவர ஆட்களும் இருந்ததில் மெசேஜ் மட்டுமே அனுப்பிக்கொள்ள முடிந்தது. எப்போ...
கயலினியின் திருமணம் எந்தக் குறையும் இல்லாமல் சீரும் சிறப்புமாக நடந்தேறியது. அவர்களின் இனசனம், சொந்தபந்தம், அயலட்டை எல்லோருமே ஆச்சரியப்படுகிற அளவுக்கு நடாத்தி முடித்தான் நிகேதன். கையில் பிடிக்க முடியாத...
அவரின் நல்ல பிள்ளையில் அவளுக்குச் சிரிப்பு வரும் போலிருந்தது. இந்த நல்ல பிள்ளையைப் பற்றி அவளுக்குத்தானே தெரியும். நிகேதனை ஒருமுறை நன்றாகப் பார்த்தாள். மீசைக்கடியில் இருந்த அவன் உதடுகளின் அசைவு அவனும் ...
ஆரணிக்கு மூன்று நாட்களும் செமினார் நன்றாகவே போனது. தவறவிடாமல் வந்தது மிகவும் நல்லதாகப் போயிற்று என்று நினைக்கிற அளவில் மிக மிகப் பிரயோசனமாகவே இருந்தது. காலை எட்டுக்கு ஆரம்பித்தால் பன்னிரண்டுக்கு முடிய...
இன்று இரண்டு மணி நேரங்கள் கழிந்தும் அவன் திருப்பி அழைக்கவில்லை என்றதும் மனதில் பாரத்துடன் மீண்டும் அழைத்தாள். அரை மணித்தியாலம் கழித்து மீண்டும். ஏன் இவ்வளவு கோபம்? அவள் பேசியது பிழைதான். தாலிக்கொடியை ...
உறக்கம் கலையும்போதே ஆரணிக்குத் தலை விண் விண் என்று வலித்தது. நெற்றிப்பொட்டை அழுத்தி அழுத்தி விட்டபிறகுதான் விழிகளை மெல்லத் திறக்க முடிந்தது. அருகில் நிகேதன் உறங்கிக்கொண்டு இருந்தான். ‘எப்போது வந்தான்?...
