“சரி விடு ராஜம். நீ எப்பவும் இல்லை எண்ட பாட்டுத்தானே பாடுவ. சீட்டுக்கு வாறியா இல்லையா? அதை மட்டும் சொல்லு.” கேலிபோலச் சொன்னார், ஆன்ட்டி.
அவர் நேருக்கு நேராகக் கதைப்பவர். சித்தி அவரிடம் அவ்வளவாகக் கதை வளர்க்க விரும்பமாட்டார். அவர் அப்பால் போகவிட்டுக் கொஞ்சநேரம் நல்லாவே திட்டு விழும்.
“இந்த மனிசி சரியான வினைப்பிடிச்சது; எதுக்கெடுத்தாலும் செத்துப் போன உன்ர அம்மாவோட என்னை ஒப்பிட்டுக் கொண்டு...” பார்வையால் என்னை நெருப்பாகச் சுடுவார்.
அதோடு நிறுத்தவும் மாட்டார்.
“அற்ப ஆயுசில போனாலும் அந்த மனிசியை யாரும் மறக்கத் தயாரில்லை. விடிஞ்சாப் பொழுதுபட்டால் மாங்கு மாங்கென்று இந்த வீட்டுக்காக உழைக்கிற என்னைச் சீ நாயென்றும் சீந்துவார் இல்ல.” கண்ணைக் கசக்குவார்.
“என்ன சொல்லுற ராஜம்?” மீண்டும் கேட்டார் ஆன்ட்டி.
“பாதிச்சீட்டுக்கு எண்டா வாறன் அக்கா. ஐயாயிரம் தானே? உதயாட சம்பளத்தில எப்பிடியும் கட்டலாம்.” இப்படியே சிலநிமிடங்கள் கதைத்துவிட்டு வெளியேறினார் அவர்.
“காணுற நேரமெல்லாம் அவள்ட உழைப்பில இருக்கிறம் எண்டு சொல்லாட்டி இந்தப் புனிதமக்காக்குத் திண்டது செமிக்காதாம்.” முணுமுணுபோடு உள்ளே வந்த சித்தி, அங்கே தயங்கி நின்ற எங்களை முறைப்போடு தான் எதிர்கொண்டார்.
“உதயாதான் ஆம்பிள போல வீட்டப் பாக்கிறாளே!” இப்போதெல்லாம் அடிக்கடிக் கேட்கும் பேச்சு!
சின்ன வயதில் தாயை இழந்தவள், இன்று தகப்பனும் இல்லை; என்றாலும் படித்து ஒருநிலைக்கு வந்துவிட்டாளே என்ற பாசத்தில் உற்றமும் சுற்றமும் சொல்வதிது.
சித்தியின் முகத்தில் ஜொலித்த கோபத்துக்குக் காரணமும் இந்தப் பேச்சுத்தான் என்று எனக்கு நன்றாகவே தெரியும். கூடவே என் உருவம் அப்படியே அம்மாவை உரித்து வைத்திருப்பதுவும்.
நானென்ன செய்யட்டும்? உருவை மாற்றவா முடியும்? முதல், தாயின் உருவில் மகள் இருப்பதில் பிழை என்ன? தீபி கூடத்தான் சித்தி போலவே இருக்கிறாள்.
அடுத்து, இப்படிக் கதைப்பவர்களிடம் சென்று வேண்டாமென்று சொல்லிக்கொண்டிருக்க முடியுமா?
என்னைப் பார்த்த சித்தியின் பார்வை அப்படியே என்னருகில், அதுவும், என் கரத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு நிற்கும் தங்கை கவியில்.
“ஊரான் என்ன சொல்லுறான் எண்டு கவலைப்பட்டு என்ன பயன்? நான் பெத்ததுகளுக்கும் இவள்தான் பெரிசு; நான் ரெண்டாம் பட்சம்.” எரிச்சலோடு சொல்ல, “அம்மா!” கவி வாய் திறக்க, என் பிடியிலிருந்த அவள் கரத்தில் அழுத்தி, ‘சும்மாயிரு!’ கட்டுப்படுத்திவிட்டேன்.
விளக்கு வைக்கும் நேரத்தில் ஒரு குட்டிச்சண்டையை அரங்கேற்ற வேண்டுமா?
நான் கவியின் கரத்தை அழுத்தியதைச் சித்தி அவதானித்து விட்டார். போச்சுடா!
“அம்மா எண்ட, மிச்சத்த விழுங்கீட்ட; எல்லாம் முடிஞ்சு, என்னோட கதைக்கிறத்துக்கும் இவள்ட அனுமதி வேணும் போலக் கிடக்கே!” சிடுசிடுப்போடு சொல்லி முடிக்கவில்லை, மீண்டும் குறுக்கிட்டிருந்தாள் கவி.
“ஐயோம்மா! உங்களோட வர வர ஒரே தொல்...” முழுவதையும் சொல்லவிடவில்லை நான் - மீண்டும் அவள் கரத்தை நன்றாகவே அழுத்தியிருந்தேன்.
“அக்கா! நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்கோ!” அவள் கேட்டால் தானே?
“இந்த அம்மாக்கு ஒண்டும் விளங்காதக்கா… ஏதேதோ உளருரா!”
அவள் என்னைப் பார்த்துக் கதைத்துக்கொண்டிருக்கையில் விசுக்கென்று வந்த சித்தி பளாரென்று அறைந்து விட்டார்.
என்னையில்லை, அவளை. இதை, அவளோ நானோ கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கவி மட்டும் முன்னரே கண்டிருந்தால் ஒரே ஓட்டமாக ஓடியிருப்பாள். இலேசில் பிடிபடவே மாட்டாள்.
தங்கையின் முகத்தைப் பரிவோடு பார்த்தேன். கன்னத்தில் பளிச்சென்று விரல் தடங்கள் தெரிந்தன.
‘பாவம்! எனக்காகக் கதைச்சு... உனக்கு ஏன்டி இந்த வேல? சும்மா இரு என்றனே!’
பார்வையால்தான் கதைத்தேன். வாய் திறந்தால் இன்றைக்குக் கவியின் நிலைதான் பரிதாபமாகிவிடும்.
“என்ன கொழுப்புக் கூடிட்டே?” கவியிடம் உறுமிவிட்டு என்னைப் பார்த்தார் சித்தி.
“என்ர பிள்ளைகளையே எனக்கு எதிராத் திருப்பி விடுறியோ!”
என் முன்னால், இல்லை...கொஞ்சமென்றால் கண்களில் குத்துமளவிற்கு வந்திருந்தது சித்தியின் ஆட்காட்டி விரல்.
ஓரடி பின்வாங்கினேன். கவியும் சேர்ந்து நகர்ந்தாள்.
அவர் நேருக்கு நேராகக் கதைப்பவர். சித்தி அவரிடம் அவ்வளவாகக் கதை வளர்க்க விரும்பமாட்டார். அவர் அப்பால் போகவிட்டுக் கொஞ்சநேரம் நல்லாவே திட்டு விழும்.
“இந்த மனிசி சரியான வினைப்பிடிச்சது; எதுக்கெடுத்தாலும் செத்துப் போன உன்ர அம்மாவோட என்னை ஒப்பிட்டுக் கொண்டு...” பார்வையால் என்னை நெருப்பாகச் சுடுவார்.
அதோடு நிறுத்தவும் மாட்டார்.
“அற்ப ஆயுசில போனாலும் அந்த மனிசியை யாரும் மறக்கத் தயாரில்லை. விடிஞ்சாப் பொழுதுபட்டால் மாங்கு மாங்கென்று இந்த வீட்டுக்காக உழைக்கிற என்னைச் சீ நாயென்றும் சீந்துவார் இல்ல.” கண்ணைக் கசக்குவார்.
“என்ன சொல்லுற ராஜம்?” மீண்டும் கேட்டார் ஆன்ட்டி.
“பாதிச்சீட்டுக்கு எண்டா வாறன் அக்கா. ஐயாயிரம் தானே? உதயாட சம்பளத்தில எப்பிடியும் கட்டலாம்.” இப்படியே சிலநிமிடங்கள் கதைத்துவிட்டு வெளியேறினார் அவர்.
“காணுற நேரமெல்லாம் அவள்ட உழைப்பில இருக்கிறம் எண்டு சொல்லாட்டி இந்தப் புனிதமக்காக்குத் திண்டது செமிக்காதாம்.” முணுமுணுபோடு உள்ளே வந்த சித்தி, அங்கே தயங்கி நின்ற எங்களை முறைப்போடு தான் எதிர்கொண்டார்.
“உதயாதான் ஆம்பிள போல வீட்டப் பாக்கிறாளே!” இப்போதெல்லாம் அடிக்கடிக் கேட்கும் பேச்சு!
சின்ன வயதில் தாயை இழந்தவள், இன்று தகப்பனும் இல்லை; என்றாலும் படித்து ஒருநிலைக்கு வந்துவிட்டாளே என்ற பாசத்தில் உற்றமும் சுற்றமும் சொல்வதிது.
சித்தியின் முகத்தில் ஜொலித்த கோபத்துக்குக் காரணமும் இந்தப் பேச்சுத்தான் என்று எனக்கு நன்றாகவே தெரியும். கூடவே என் உருவம் அப்படியே அம்மாவை உரித்து வைத்திருப்பதுவும்.
நானென்ன செய்யட்டும்? உருவை மாற்றவா முடியும்? முதல், தாயின் உருவில் மகள் இருப்பதில் பிழை என்ன? தீபி கூடத்தான் சித்தி போலவே இருக்கிறாள்.
அடுத்து, இப்படிக் கதைப்பவர்களிடம் சென்று வேண்டாமென்று சொல்லிக்கொண்டிருக்க முடியுமா?
என்னைப் பார்த்த சித்தியின் பார்வை அப்படியே என்னருகில், அதுவும், என் கரத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு நிற்கும் தங்கை கவியில்.
“ஊரான் என்ன சொல்லுறான் எண்டு கவலைப்பட்டு என்ன பயன்? நான் பெத்ததுகளுக்கும் இவள்தான் பெரிசு; நான் ரெண்டாம் பட்சம்.” எரிச்சலோடு சொல்ல, “அம்மா!” கவி வாய் திறக்க, என் பிடியிலிருந்த அவள் கரத்தில் அழுத்தி, ‘சும்மாயிரு!’ கட்டுப்படுத்திவிட்டேன்.
விளக்கு வைக்கும் நேரத்தில் ஒரு குட்டிச்சண்டையை அரங்கேற்ற வேண்டுமா?
நான் கவியின் கரத்தை அழுத்தியதைச் சித்தி அவதானித்து விட்டார். போச்சுடா!
“அம்மா எண்ட, மிச்சத்த விழுங்கீட்ட; எல்லாம் முடிஞ்சு, என்னோட கதைக்கிறத்துக்கும் இவள்ட அனுமதி வேணும் போலக் கிடக்கே!” சிடுசிடுப்போடு சொல்லி முடிக்கவில்லை, மீண்டும் குறுக்கிட்டிருந்தாள் கவி.
“ஐயோம்மா! உங்களோட வர வர ஒரே தொல்...” முழுவதையும் சொல்லவிடவில்லை நான் - மீண்டும் அவள் கரத்தை நன்றாகவே அழுத்தியிருந்தேன்.
“அக்கா! நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்கோ!” அவள் கேட்டால் தானே?
“இந்த அம்மாக்கு ஒண்டும் விளங்காதக்கா… ஏதேதோ உளருரா!”
அவள் என்னைப் பார்த்துக் கதைத்துக்கொண்டிருக்கையில் விசுக்கென்று வந்த சித்தி பளாரென்று அறைந்து விட்டார்.
என்னையில்லை, அவளை. இதை, அவளோ நானோ கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கவி மட்டும் முன்னரே கண்டிருந்தால் ஒரே ஓட்டமாக ஓடியிருப்பாள். இலேசில் பிடிபடவே மாட்டாள்.
தங்கையின் முகத்தைப் பரிவோடு பார்த்தேன். கன்னத்தில் பளிச்சென்று விரல் தடங்கள் தெரிந்தன.
‘பாவம்! எனக்காகக் கதைச்சு... உனக்கு ஏன்டி இந்த வேல? சும்மா இரு என்றனே!’
பார்வையால்தான் கதைத்தேன். வாய் திறந்தால் இன்றைக்குக் கவியின் நிலைதான் பரிதாபமாகிவிடும்.
“என்ன கொழுப்புக் கூடிட்டே?” கவியிடம் உறுமிவிட்டு என்னைப் பார்த்தார் சித்தி.
“என்ர பிள்ளைகளையே எனக்கு எதிராத் திருப்பி விடுறியோ!”
என் முன்னால், இல்லை...கொஞ்சமென்றால் கண்களில் குத்துமளவிற்கு வந்திருந்தது சித்தியின் ஆட்காட்டி விரல்.
ஓரடி பின்வாங்கினேன். கவியும் சேர்ந்து நகர்ந்தாள்.