மனம் - 2:
“நீ ஊருக்கு வர்றதுக்கு எதுக்கு டா விடி காலையிலையே எனக்கு தொந்தரவு கொடுக்குற?” என சலித்துக்கொண்டே குருபிரசாத்திடமிருந்து பேக்கை வாங்கினான் அபிலாஷ்.
“நானா உன்னை இங்க வர சொன்னேன்?” என கேட்டுக்கொண்டே காரில் ஏறி அமர்ந்த குரு கண்களை மூடி அமர்ந்துவிட்டான்.
நண்பன் தன்னை அழைக்க மாட்டான் என்று தெரிந்த அபிலாஷே அவன் வரும் நேரம் கேட்டு வண்டியுடன் கிளாம்பாக்கத்திற்கு வந்து நின்றான். அங்கிருந்து வேளச்சேரியில் இருக்கும் அவர்களின் அப்பார்ட்மெண்ட் செல்ல வேண்டும்.
குருபிரசாத்தை பற்றி அனைத்தையும் அறிந்து வைத்திருப்பவன் அபிலாஷ். இருவரும் ஒன்றாக ஒரே கல்லூரியில் படித்தவர்கள், பின் வேலைக்கென பிரிந்தாலும் அவர்களுக்குள் நட்பு தொடர்ந்துக்கொண்டே தான் இருந்தது. இரண்டு வருடம் முன்பு தான் அபிலாஷ், குருபிரசாத் வேலை பார்க்கும் அலுவலகத்திலே அவனுடன் இணைந்துக்கொண்டான்.
‘கோவில்பட்டியில் இருந்து சென்னைக்கு பன்னிரண்டு மணி நேர பயணத்தில் தூங்காததையா இப்பொழுது தூங்க போகுகிறான்?’ என அபிலாஷ் அவனை திரும்பி பார்த்தபடியே வண்டியை ஓட்டினான்.
“மொட்டை போடுற பங்க்ஷன் எப்படிடா போச்சு?”
“ம்ம்ம்.”
“தீப்பெட்டி ஆபிஸ் வேலை நல்லபடியா முடிஞ்சிதா..”
“ம்ம்ம்.”
கண்ணை மூடிக்கொண்டே ராகம் பாடியவனிடம் அபிலாஷும் அதற்குமேல் வேறேதும் கேட்கவில்லை.
அவர்கள் அபார்ட்மென்டின் முன்பு வண்டியை நிறுத்திய அபிலாஷ், “சமைக்கிறேன்னு எதையாவது பண்ணாத குரு. இன்னைக்கு ஜெசி உனக்கும் சேர்த்து சமைக்கிறேன்னு சொல்லிருக்கா. மணி ஆறு தான ஆகுது. நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.” என சொல்லிவிட்டு குருவின் வீட்டிற்கு எதிராக இருந்த அவனின் ப்ளாட்டிற்குள் நுழைந்தான் அபிலாஷ். ஜெசி என்னும் ஜெசிந்தா, அபிலாஷின் காதல் மனைவி.
இருளை விலக்கிக்கொண்டு விடிந்துக் கொண்டிருக்கும் காலை வேளையில் குருபிரசாத்திற்கு உறக்கம் வரவில்லை. எனவே, பாட்டை சத்தமாக வைத்துவிட்டு, பால்கனியை ஒட்டி போடப்பட்டிருக்கும் ட்ரெண்ட்மில்லிடம் சென்றான். அது அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று!
அவனின் மனநிலைக்கு ஏற்ப அதனின் வேகத்தை கூட்டியும் குறைத்தும் அதனில் நடப்பதோ, ஓடுவதோ என செய்வான். தற்சமயம் அலைபாயும் அவனின் மனதை அடக்குவதற்கு ட்ரெண்ட்மில்லின் வேகத்தை கூட்டிவைத்து ஓட துவங்கினான்.
கால்கள் முன்னோக்கி ஓடினாலும் அவனின் மனது பின்னோக்கி இருநாட்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வை நினைத்தது.
“நாங்க பார்த்த பொண்ணுக்கு என்ன குறை குரு? கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் என்ன?” பாக்கியம் சத்தமிட்டார்.
“நா குறைன்னு சொல்லவே இல்லையே ம்மா. எனக்கு விருப்பம் இல்லை.”
“இன்னும் அந்த பொண்னையே நினைச்சிக்கிட்டு இருக்கியா நீ?” என்ற பாக்கியத்தை குரல் ஓங்க, “பாக்கியம்.” என்ற குணசீலனின் அழைப்பில் அமைதியானார்.
குணசீலன் பாக்கியத்தை எதிர்த்து பேசுவது எல்லாம் அதிசயம் தான். எனவே, குரு அவரை வியப்பாக பார்த்தான். அவர்களுடன் இருக்கும் பாக்கியத்தின் தாய் தந்தை கூட அவரை பார்த்தனர்.
“உனக்கும் வயசை முப்பது ஆக போகுது குரு. அந்த பொண்ணு தான் வேணும்னா சொல்லு.. நாங்க பேசி பார்க்குறோம்.” என்ற குணசீலனை இடையிட்ட பாக்கியத்தை பார்வையாலே அடக்கியவர்,
“மெத்த படிச்சி வேலை பார்க்குற. எது சரியோ நீயே யோசனை பண்ணிக்கோ.” என அறைக்குள் செல்ல, அவரின் பின்னே சென்ற பாக்கியம் அவரிடம் வாக்குவாதம் செய்வது வெளியே இருந்த அனைவருக்கும் கேட்டது.
கலைவாணி, பாக்கியத்தின் தாயார், முகமே வாடிவிட்டது. “நீனு கலியாணத்துக்கு சரி சொல்லக்கூடாதா ராசா? இன்னும் அந்த பொண்ணு நினைப்பு இருக்கோ உனக்கு?” என குருவின் தடையை பிடித்து கேட்டார்.
“என்னோட விருப்பு வெறுப்பை தாண்டி, நான் யாரை கல்யாணம் பண்ணாலும், வர போறவா இவங்க சொல்லுறதை கேட்கணும்னு எதிர்பார்த்தா முடியுமா அம்மாச்சி?”,
“அவங்களை நீங்க பெத்தவங்க, அவங்க என்னை பெத்தவங்கன்னு அவங்களோட அதிகாரத்துக்கு நாம அமைதியா போனாலும் வர்றவங்களும் அமைதியா இருக்கணும்னு இல்லையே..” என இருபுருவங்களை உயர்த்தி கேட்டான்.
“ஒரே பொண்ணுன்னு நாங்க தான் ராசா அப்படி வளர்த்துட்டாம். உங்க அம்மா சொல்லுற மாதிரி அந்த பொண்ணு நினைப்பு உனக்கு இருக்கா? இருந்தா இந்த தாத்தா கிட்ட சொல்லு. உன்னோட கலியாணத்தை நடத்தி வைக்குறது என்னோட பொறுப்பு.” என துரைசாமியும் கேட்டார்.
அதில் பக்கென்று சிரித்தவன், “அப்படிலாம் எதுவும் இல்லை தாத்தா. அந்த பொண்ணை பத்தி எதுவும் பேசாதீங்க. நாளைக்கு நான் சென்னை கிளம்புறேன்.” என அத்துடன் முடித்துக் கொண்டான்.
நிகழ்விற்கு வந்தவன், ட்ரெண்ட்மில்லில் பயிற்சியை முடித்துவிட்டு குளித்துக் கிளம்ப அபிலாஷும் காலை உணவுடன் உள்ளே வந்தான்.
“ஜெசிந்தாக்கு தேவை இல்லாத வேலை அபி..” என சொன்னாலும் உணவினை வாங்கிக்கொண்டான்.
“இன்னைக்கு நான் கொடுத்தா. நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆனதும் நீ எனக்கு கொடுக்க மாட்டியா என்ன?” என்ற அபிலாஷின் எதிர் கேள்வியில் வாயை மூடிக்கொண்டான் குருபிரசாத். அபிலாஷ் கொடுத்த உணவினை உண்டுவிட்டு அவனுடனே அலுவலகம் கிளம்பிச் சென்றான்.
அவர்கள் இருவருமே ஒரே ப்ராஜெக்ட்டில் வேறு வேறு குழுவில் வேலை பார்ப்பவர்கள். அந்த குழுவிற்கு அவர்கள் தான் தலைமை வகிக்கின்றனர். எனவே அனைவருமே ஒரே தளத்தில் இருக்கும் அலுவலக அறையில் தான் வேலை செய்கின்றார்கள்.
மின்தூக்கியில் அபிலாஷுடன் ஆறாவது தளத்திற்கு வந்த குருபிரசாத்தின் மனம் நிலையில்லாமல் தவித்தது. முழுதாக நான்கு வருடங்கள் கடந்து அட்சயாவை சந்திக்க போகிறான். இந்த நான்கு வருடத்தில் அவளின் வாழ்வில் என்ன வேண்டுமென்றாலும் நடந்திருக்கலாம். எனவே, அனைத்திர்க்கும் அவனின் மனதை தயார் செய்திருந்தான்.
அவனின் மனநிலையை உணர்ந்தவனாக அலுவலக அறைக்குள் நுழைந்த அபிலாஷ் ஓரிடத்தில் எட்டி பார்த்துவிட்டு. “இன்னும் வரல போல டா.” என அவனின் இருக்கைக்கு சென்றான்.
‘ஊஃப். காலேஜ் பையன் மாதிரி பண்ணாத டா. உனக்கும் அவளுக்கும் நடுவுல எதுவும் இல்லை.’ என மானசீகமாக சொல்லிக் கொண்டவன் அவனின் இருக்கைக்கு சென்றான். ஒருவாரம் முழுக்க வீட்டில் இருந்தபடியே வேலையை பார்த்தாலும் திங்கட்கிழமை காலை என்பதால் குருவிற்கு வேலைகள் வரிசை கட்டி நிற்க, அதனை கவனிக்க சென்றான்.
“நீ ஊருக்கு வர்றதுக்கு எதுக்கு டா விடி காலையிலையே எனக்கு தொந்தரவு கொடுக்குற?” என சலித்துக்கொண்டே குருபிரசாத்திடமிருந்து பேக்கை வாங்கினான் அபிலாஷ்.
“நானா உன்னை இங்க வர சொன்னேன்?” என கேட்டுக்கொண்டே காரில் ஏறி அமர்ந்த குரு கண்களை மூடி அமர்ந்துவிட்டான்.
நண்பன் தன்னை அழைக்க மாட்டான் என்று தெரிந்த அபிலாஷே அவன் வரும் நேரம் கேட்டு வண்டியுடன் கிளாம்பாக்கத்திற்கு வந்து நின்றான். அங்கிருந்து வேளச்சேரியில் இருக்கும் அவர்களின் அப்பார்ட்மெண்ட் செல்ல வேண்டும்.
குருபிரசாத்தை பற்றி அனைத்தையும் அறிந்து வைத்திருப்பவன் அபிலாஷ். இருவரும் ஒன்றாக ஒரே கல்லூரியில் படித்தவர்கள், பின் வேலைக்கென பிரிந்தாலும் அவர்களுக்குள் நட்பு தொடர்ந்துக்கொண்டே தான் இருந்தது. இரண்டு வருடம் முன்பு தான் அபிலாஷ், குருபிரசாத் வேலை பார்க்கும் அலுவலகத்திலே அவனுடன் இணைந்துக்கொண்டான்.
‘கோவில்பட்டியில் இருந்து சென்னைக்கு பன்னிரண்டு மணி நேர பயணத்தில் தூங்காததையா இப்பொழுது தூங்க போகுகிறான்?’ என அபிலாஷ் அவனை திரும்பி பார்த்தபடியே வண்டியை ஓட்டினான்.
“மொட்டை போடுற பங்க்ஷன் எப்படிடா போச்சு?”
“ம்ம்ம்.”
“தீப்பெட்டி ஆபிஸ் வேலை நல்லபடியா முடிஞ்சிதா..”
“ம்ம்ம்.”
கண்ணை மூடிக்கொண்டே ராகம் பாடியவனிடம் அபிலாஷும் அதற்குமேல் வேறேதும் கேட்கவில்லை.
அவர்கள் அபார்ட்மென்டின் முன்பு வண்டியை நிறுத்திய அபிலாஷ், “சமைக்கிறேன்னு எதையாவது பண்ணாத குரு. இன்னைக்கு ஜெசி உனக்கும் சேர்த்து சமைக்கிறேன்னு சொல்லிருக்கா. மணி ஆறு தான ஆகுது. நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.” என சொல்லிவிட்டு குருவின் வீட்டிற்கு எதிராக இருந்த அவனின் ப்ளாட்டிற்குள் நுழைந்தான் அபிலாஷ். ஜெசி என்னும் ஜெசிந்தா, அபிலாஷின் காதல் மனைவி.
இருளை விலக்கிக்கொண்டு விடிந்துக் கொண்டிருக்கும் காலை வேளையில் குருபிரசாத்திற்கு உறக்கம் வரவில்லை. எனவே, பாட்டை சத்தமாக வைத்துவிட்டு, பால்கனியை ஒட்டி போடப்பட்டிருக்கும் ட்ரெண்ட்மில்லிடம் சென்றான். அது அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று!
அவனின் மனநிலைக்கு ஏற்ப அதனின் வேகத்தை கூட்டியும் குறைத்தும் அதனில் நடப்பதோ, ஓடுவதோ என செய்வான். தற்சமயம் அலைபாயும் அவனின் மனதை அடக்குவதற்கு ட்ரெண்ட்மில்லின் வேகத்தை கூட்டிவைத்து ஓட துவங்கினான்.
கால்கள் முன்னோக்கி ஓடினாலும் அவனின் மனது பின்னோக்கி இருநாட்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வை நினைத்தது.
“நாங்க பார்த்த பொண்ணுக்கு என்ன குறை குரு? கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் என்ன?” பாக்கியம் சத்தமிட்டார்.
“நா குறைன்னு சொல்லவே இல்லையே ம்மா. எனக்கு விருப்பம் இல்லை.”
“இன்னும் அந்த பொண்னையே நினைச்சிக்கிட்டு இருக்கியா நீ?” என்ற பாக்கியத்தை குரல் ஓங்க, “பாக்கியம்.” என்ற குணசீலனின் அழைப்பில் அமைதியானார்.
குணசீலன் பாக்கியத்தை எதிர்த்து பேசுவது எல்லாம் அதிசயம் தான். எனவே, குரு அவரை வியப்பாக பார்த்தான். அவர்களுடன் இருக்கும் பாக்கியத்தின் தாய் தந்தை கூட அவரை பார்த்தனர்.
“உனக்கும் வயசை முப்பது ஆக போகுது குரு. அந்த பொண்ணு தான் வேணும்னா சொல்லு.. நாங்க பேசி பார்க்குறோம்.” என்ற குணசீலனை இடையிட்ட பாக்கியத்தை பார்வையாலே அடக்கியவர்,
“மெத்த படிச்சி வேலை பார்க்குற. எது சரியோ நீயே யோசனை பண்ணிக்கோ.” என அறைக்குள் செல்ல, அவரின் பின்னே சென்ற பாக்கியம் அவரிடம் வாக்குவாதம் செய்வது வெளியே இருந்த அனைவருக்கும் கேட்டது.
கலைவாணி, பாக்கியத்தின் தாயார், முகமே வாடிவிட்டது. “நீனு கலியாணத்துக்கு சரி சொல்லக்கூடாதா ராசா? இன்னும் அந்த பொண்ணு நினைப்பு இருக்கோ உனக்கு?” என குருவின் தடையை பிடித்து கேட்டார்.
“என்னோட விருப்பு வெறுப்பை தாண்டி, நான் யாரை கல்யாணம் பண்ணாலும், வர போறவா இவங்க சொல்லுறதை கேட்கணும்னு எதிர்பார்த்தா முடியுமா அம்மாச்சி?”,
“அவங்களை நீங்க பெத்தவங்க, அவங்க என்னை பெத்தவங்கன்னு அவங்களோட அதிகாரத்துக்கு நாம அமைதியா போனாலும் வர்றவங்களும் அமைதியா இருக்கணும்னு இல்லையே..” என இருபுருவங்களை உயர்த்தி கேட்டான்.
“ஒரே பொண்ணுன்னு நாங்க தான் ராசா அப்படி வளர்த்துட்டாம். உங்க அம்மா சொல்லுற மாதிரி அந்த பொண்ணு நினைப்பு உனக்கு இருக்கா? இருந்தா இந்த தாத்தா கிட்ட சொல்லு. உன்னோட கலியாணத்தை நடத்தி வைக்குறது என்னோட பொறுப்பு.” என துரைசாமியும் கேட்டார்.
அதில் பக்கென்று சிரித்தவன், “அப்படிலாம் எதுவும் இல்லை தாத்தா. அந்த பொண்ணை பத்தி எதுவும் பேசாதீங்க. நாளைக்கு நான் சென்னை கிளம்புறேன்.” என அத்துடன் முடித்துக் கொண்டான்.
நிகழ்விற்கு வந்தவன், ட்ரெண்ட்மில்லில் பயிற்சியை முடித்துவிட்டு குளித்துக் கிளம்ப அபிலாஷும் காலை உணவுடன் உள்ளே வந்தான்.
“ஜெசிந்தாக்கு தேவை இல்லாத வேலை அபி..” என சொன்னாலும் உணவினை வாங்கிக்கொண்டான்.
“இன்னைக்கு நான் கொடுத்தா. நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆனதும் நீ எனக்கு கொடுக்க மாட்டியா என்ன?” என்ற அபிலாஷின் எதிர் கேள்வியில் வாயை மூடிக்கொண்டான் குருபிரசாத். அபிலாஷ் கொடுத்த உணவினை உண்டுவிட்டு அவனுடனே அலுவலகம் கிளம்பிச் சென்றான்.
அவர்கள் இருவருமே ஒரே ப்ராஜெக்ட்டில் வேறு வேறு குழுவில் வேலை பார்ப்பவர்கள். அந்த குழுவிற்கு அவர்கள் தான் தலைமை வகிக்கின்றனர். எனவே அனைவருமே ஒரே தளத்தில் இருக்கும் அலுவலக அறையில் தான் வேலை செய்கின்றார்கள்.
மின்தூக்கியில் அபிலாஷுடன் ஆறாவது தளத்திற்கு வந்த குருபிரசாத்தின் மனம் நிலையில்லாமல் தவித்தது. முழுதாக நான்கு வருடங்கள் கடந்து அட்சயாவை சந்திக்க போகிறான். இந்த நான்கு வருடத்தில் அவளின் வாழ்வில் என்ன வேண்டுமென்றாலும் நடந்திருக்கலாம். எனவே, அனைத்திர்க்கும் அவனின் மனதை தயார் செய்திருந்தான்.
அவனின் மனநிலையை உணர்ந்தவனாக அலுவலக அறைக்குள் நுழைந்த அபிலாஷ் ஓரிடத்தில் எட்டி பார்த்துவிட்டு. “இன்னும் வரல போல டா.” என அவனின் இருக்கைக்கு சென்றான்.
‘ஊஃப். காலேஜ் பையன் மாதிரி பண்ணாத டா. உனக்கும் அவளுக்கும் நடுவுல எதுவும் இல்லை.’ என மானசீகமாக சொல்லிக் கொண்டவன் அவனின் இருக்கைக்கு சென்றான். ஒருவாரம் முழுக்க வீட்டில் இருந்தபடியே வேலையை பார்த்தாலும் திங்கட்கிழமை காலை என்பதால் குருவிற்கு வேலைகள் வரிசை கட்டி நிற்க, அதனை கவனிக்க சென்றான்.