மனம் - 3:
ஒருவாரம் சென்றிருக்க,
“ஓகே மனோஜ். உங்க டவுட்ஸை ஒரு மீட்டிங் அரேஞ் பண்ணி டிஸ்கஸ் பண்ணலாம்.” என ஃபோன் பேசியபடியே லிஃட்டின் உள்ளே நுழைந்த குருபிரசாத்தின் காலில் ஒரு ஐடி கார்ட் கயிறில்லாமல் தட்டுப்பட்டது. அதை கையில் எடுத்தவன் செக்யூரிட்டியிடம் கொடுக்கலாம் என அதனை திருப்பி பார்த்தான்.
அதில், மஞ்சள் நிற உடையில், உதட்டில் உறைந்த புன்னகையுடன் அட்சயாவின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தை வருட நீண்ட அவனின் வலக்கை கட்டைவிரலை மடக்கிக்கொண்டான்.
அவனது தளம் வந்ததும் வெளியேற, அங்கே அட்சயா அவளின் ஐடி கார்டை தேடிக் கொண்டிருப்பது தெரிந்தது. லிஃப்டில் இருந்து வெளியே வந்தவன் அவளை பார்த்து, “எக்ஸ்க்யூஸ் மீ மேடம்.” என சத்தமாக அழைத்தான்.
யார் என திரும்பி பார்த்தவள் குருவை கவனித்து, “என்னையா?” என கையால் அவளை சுட்டிக்காட்டி கேட்டாள்.
மெரூன் நிற சட்டையை முழங்கைவரை மடித்துவிட்டிருந்தவன் அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்றிருந்தபடியே ‘ஆம்’ என தலையை மட்டும் அசைத்தான். மனதில் மூண்ட பயத்துடன் அவனை நோக்கி நடக்க தொடங்கினாள்.
விரைவாக அலுவலகம் வந்திருந்த அட்சயா, அவளின் அலுவலக அறைக்குள் செல்ல அக்சஸ் வைக்கும் பொழுது தான் ஐடி கார்ட் இல்லாமல் கையில் வெறும் கயிறு மட்டும் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தாள். லிஃட்டின் கூட்டத்தில் அது கீழே விழுந்ததை அவளால் கவனிக்கவில்லை.
“எதுக்கு எப்பவும் ஐடி கார்டை கழுத்துல போடாம கைலையே வெச்சிக்கிட்டு இருக்க அச்சு? ஒருநாள் எங்கயாவது அது விழுந்தாதான் தெரியும்.” என பவ்யா அன்றொருநாள் அவளை எச்சரித்தது நினைவு வந்தது. “இந்த பவ்யா வாயை வெச்சாதால தான்..” என புலம்பிக்கொண்டே லிஃட்டின் அருகில் தேடிக் கொண்டிருந்தவளை தான் குருபிரசாத் அழைத்தான்.
அருகில் வந்தவளிடம், “இது உன்னோடது தான.” என ஐடி கார்டை அவளின் முகத்திற்கு நேராக குரு உயர்த்தினான்.
‘ஆம்.’ என தலையை மட்டும் அசைத்தவளை பார்த்து, ‘பேசுனா முத்து உதிர்ந்திடும் போல..’ என மனதோடு நினைத்துக்கொண்டு அவளின் கையில் கொடுத்தான்.
அதனை வாங்கி ரோப்பில் மாட்டியவள் “சாரி..” என்றாள். அதில், அவன் புருவம் சுருக்கியதை பார்த்து, “இல்ல. இல்ல. அது வந்து தேங்க்ஸ்..” என உளரி கொண்டு வேகமாக ஓடியேவிட்டாள். அவள் செல்வதையே பார்த்த குருபிரசாத்தும் அமைதியாக உள்ளே சென்றான்.
“நிகில். இந்த வேலையை புதுசா வந்தவங்களை பார்க்க சொல்லிட்டு நீங்க வேற ஒர்க் பாருங்க?” என முன்னிருந்தவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான் குருபிரசாத்.
“இப்ப வர ஜூனியர்ஸுக்கு ஒன்னொண்ணும் பத்து முறை சொல்லிக்கொடுக்கிற மாதிரி இருக்கு குரு. அதுக்கு நானே பண்ணிடுவேன் போல..” என அவன் அலுத்துக்கொள்ள.
“ரெண்டு மூணு நாள் அவங்க கூட கனெக்ட் பண்ணி சொல்லிக் கொடுத்துட்டு, அடுத்து அவங்களையே பண்ண சொல்லுங்க. அவங்களுக்கு எந்த வேலையும் கொடுக்காம நீங்களே எல்லாத்தையும் பார்த்தா எப்படி?” என அழுத்தமாக கேட்டான் குருபிரசாத்.
“ஓகே குரு. நான் அவங்களுக்கு சொல்லிக் கொடுக்குறேன்” என்றான் நிகில்.
அவன் அப்படி சொன்னாலும் அன்று மதியம் ஒருமணி போல் குருபிரசாத்தே அவர்களின் டீமிற்கு மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தான். அவர்கள் குழுவில் வேறு மாநிலத்தில் இருப்பவர்களும் பணிபுரிவதால் அனைவருமே இணைய வழியில் தொடர்பில் இருந்தனர்.
புதிதாக சேர்ந்தவர்களை பற்றி கேட்டறிந்த குருபிரசாத்,
பொறுமையாக என்ன செய்யவேண்டும் எப்படி செய்ய வேண்டும் என அனைத்தையும் விளக்கியவன், “டவுட்ஸ் இருந்தா நிகில் கிட்ட கேளுங்க. அவர் உங்கள கைட் பண்ணுவாங்க.” என்று தொடர்ந்தான். அதனை பவ்யா ஸ்பீக்கரில் போட்டுவிட்டு நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தாள். அவளின் அருகில் அமர்ந்திருந்த அட்சயாவின் காதிலும் அட்சரம் பிசகாமல் குருபிரசாத்தின் குரல் தெளிவாகவே கேட்டது.
“குருபிரசாத், வெரி ஹண்டசம்ல அச்சு” என பவ்யா அவளிடம் ஏற்கனவே கூறியிருக்க, காரணம் தெரியாமலே அவளின் மீது எரிச்சல் வந்தது அவளுக்கு.
குருவின் குரல் அட்சயாவின் செவியில் விழ விழ அவளின் நினைவுகள் பின்னோக்கி சென்றன. ‘அன்றும் இப்படி தானே! அவள் குடும்பம் மொத்தத்தையும் எதிர்த்து அவளுக்காக நின்றான். அவள் குடும்பம் மட்டும் இல்லாமல் அவனின் குடும்பத்தையும் எதிர்த்து தான் நின்றான். அனைத்தையும் பார்த்துக் கொள்வேன் என்ற திடம் அவனிடம் நிறையவே இருந்ததே! ஆனால் நடந்தது வேறாகி போனதே!’ என அவளின் மனம் எடுத்துக்கொடுக்க, தலையை உலுக்கி அந்த எண்ணத்தை புறக்கணித்தவள் அவ்விடத்தில் இருந்து எழுந்து சென்றாள்.
ஒருவாரம் சென்றிருக்க,
“ஓகே மனோஜ். உங்க டவுட்ஸை ஒரு மீட்டிங் அரேஞ் பண்ணி டிஸ்கஸ் பண்ணலாம்.” என ஃபோன் பேசியபடியே லிஃட்டின் உள்ளே நுழைந்த குருபிரசாத்தின் காலில் ஒரு ஐடி கார்ட் கயிறில்லாமல் தட்டுப்பட்டது. அதை கையில் எடுத்தவன் செக்யூரிட்டியிடம் கொடுக்கலாம் என அதனை திருப்பி பார்த்தான்.
அதில், மஞ்சள் நிற உடையில், உதட்டில் உறைந்த புன்னகையுடன் அட்சயாவின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தை வருட நீண்ட அவனின் வலக்கை கட்டைவிரலை மடக்கிக்கொண்டான்.
அவனது தளம் வந்ததும் வெளியேற, அங்கே அட்சயா அவளின் ஐடி கார்டை தேடிக் கொண்டிருப்பது தெரிந்தது. லிஃப்டில் இருந்து வெளியே வந்தவன் அவளை பார்த்து, “எக்ஸ்க்யூஸ் மீ மேடம்.” என சத்தமாக அழைத்தான்.
யார் என திரும்பி பார்த்தவள் குருவை கவனித்து, “என்னையா?” என கையால் அவளை சுட்டிக்காட்டி கேட்டாள்.
மெரூன் நிற சட்டையை முழங்கைவரை மடித்துவிட்டிருந்தவன் அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்றிருந்தபடியே ‘ஆம்’ என தலையை மட்டும் அசைத்தான். மனதில் மூண்ட பயத்துடன் அவனை நோக்கி நடக்க தொடங்கினாள்.
விரைவாக அலுவலகம் வந்திருந்த அட்சயா, அவளின் அலுவலக அறைக்குள் செல்ல அக்சஸ் வைக்கும் பொழுது தான் ஐடி கார்ட் இல்லாமல் கையில் வெறும் கயிறு மட்டும் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தாள். லிஃட்டின் கூட்டத்தில் அது கீழே விழுந்ததை அவளால் கவனிக்கவில்லை.
“எதுக்கு எப்பவும் ஐடி கார்டை கழுத்துல போடாம கைலையே வெச்சிக்கிட்டு இருக்க அச்சு? ஒருநாள் எங்கயாவது அது விழுந்தாதான் தெரியும்.” என பவ்யா அன்றொருநாள் அவளை எச்சரித்தது நினைவு வந்தது. “இந்த பவ்யா வாயை வெச்சாதால தான்..” என புலம்பிக்கொண்டே லிஃட்டின் அருகில் தேடிக் கொண்டிருந்தவளை தான் குருபிரசாத் அழைத்தான்.
அருகில் வந்தவளிடம், “இது உன்னோடது தான.” என ஐடி கார்டை அவளின் முகத்திற்கு நேராக குரு உயர்த்தினான்.
‘ஆம்.’ என தலையை மட்டும் அசைத்தவளை பார்த்து, ‘பேசுனா முத்து உதிர்ந்திடும் போல..’ என மனதோடு நினைத்துக்கொண்டு அவளின் கையில் கொடுத்தான்.
அதனை வாங்கி ரோப்பில் மாட்டியவள் “சாரி..” என்றாள். அதில், அவன் புருவம் சுருக்கியதை பார்த்து, “இல்ல. இல்ல. அது வந்து தேங்க்ஸ்..” என உளரி கொண்டு வேகமாக ஓடியேவிட்டாள். அவள் செல்வதையே பார்த்த குருபிரசாத்தும் அமைதியாக உள்ளே சென்றான்.
“நிகில். இந்த வேலையை புதுசா வந்தவங்களை பார்க்க சொல்லிட்டு நீங்க வேற ஒர்க் பாருங்க?” என முன்னிருந்தவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான் குருபிரசாத்.
“இப்ப வர ஜூனியர்ஸுக்கு ஒன்னொண்ணும் பத்து முறை சொல்லிக்கொடுக்கிற மாதிரி இருக்கு குரு. அதுக்கு நானே பண்ணிடுவேன் போல..” என அவன் அலுத்துக்கொள்ள.
“ரெண்டு மூணு நாள் அவங்க கூட கனெக்ட் பண்ணி சொல்லிக் கொடுத்துட்டு, அடுத்து அவங்களையே பண்ண சொல்லுங்க. அவங்களுக்கு எந்த வேலையும் கொடுக்காம நீங்களே எல்லாத்தையும் பார்த்தா எப்படி?” என அழுத்தமாக கேட்டான் குருபிரசாத்.
“ஓகே குரு. நான் அவங்களுக்கு சொல்லிக் கொடுக்குறேன்” என்றான் நிகில்.
அவன் அப்படி சொன்னாலும் அன்று மதியம் ஒருமணி போல் குருபிரசாத்தே அவர்களின் டீமிற்கு மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தான். அவர்கள் குழுவில் வேறு மாநிலத்தில் இருப்பவர்களும் பணிபுரிவதால் அனைவருமே இணைய வழியில் தொடர்பில் இருந்தனர்.
புதிதாக சேர்ந்தவர்களை பற்றி கேட்டறிந்த குருபிரசாத்,
பொறுமையாக என்ன செய்யவேண்டும் எப்படி செய்ய வேண்டும் என அனைத்தையும் விளக்கியவன், “டவுட்ஸ் இருந்தா நிகில் கிட்ட கேளுங்க. அவர் உங்கள கைட் பண்ணுவாங்க.” என்று தொடர்ந்தான். அதனை பவ்யா ஸ்பீக்கரில் போட்டுவிட்டு நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தாள். அவளின் அருகில் அமர்ந்திருந்த அட்சயாவின் காதிலும் அட்சரம் பிசகாமல் குருபிரசாத்தின் குரல் தெளிவாகவே கேட்டது.
“குருபிரசாத், வெரி ஹண்டசம்ல அச்சு” என பவ்யா அவளிடம் ஏற்கனவே கூறியிருக்க, காரணம் தெரியாமலே அவளின் மீது எரிச்சல் வந்தது அவளுக்கு.
குருவின் குரல் அட்சயாவின் செவியில் விழ விழ அவளின் நினைவுகள் பின்னோக்கி சென்றன. ‘அன்றும் இப்படி தானே! அவள் குடும்பம் மொத்தத்தையும் எதிர்த்து அவளுக்காக நின்றான். அவள் குடும்பம் மட்டும் இல்லாமல் அவனின் குடும்பத்தையும் எதிர்த்து தான் நின்றான். அனைத்தையும் பார்த்துக் கொள்வேன் என்ற திடம் அவனிடம் நிறையவே இருந்ததே! ஆனால் நடந்தது வேறாகி போனதே!’ என அவளின் மனம் எடுத்துக்கொடுக்க, தலையை உலுக்கி அந்த எண்ணத்தை புறக்கணித்தவள் அவ்விடத்தில் இருந்து எழுந்து சென்றாள்.