ஸ்கை வோக்கிலிருந்து முதல் ஆளாக வெளியில் வந்திருந்த இலக்கியா, அதல பாதாளம் என்பார்களே அப்படிச் சரிந்து இறங்கிய கண்யனை வீடியோ எடுப்பதில் முனைந்துவிட்டாள்.
இளையவர்களும், அப்படியே சுற்றத்தை உள்வாங்கிக்கொண்டே நகர்ந்து அங்கிருந்த குன்றிலேறிச் சென்று புகைப்படமெடுப்பதில் முனைந்தார்கள். அஜியும் அவர்களோடு இணைந்து கொண்டாள்.
குன்றிலேறி கரமிரண்டையும் விரித்தபடி ஆகாயத்தைப் பார்த்து நின்றவளை ஆரூரன் கைபேசிக்குள் அடக்கினானென்றால், விழிகளால் உள்ளிழுத்து இதயத்துள் அடைத்துக் கொண்டான், வேந்தன்.
"ஹாஃப் ஜீன்ஸ் போட்ட தேவதை என்ன அண்ணா?! ரசியுங்கோ ரசியுங்கோ!" வேந்தன் முதுகில் தட்டிச் சொன்ன வினித், "டோய் ஏன்டா? நிண்டு ஒரு நிமிசம் கதைக்கக் கிடைக்குதில்ல எண்டா இப்படித் தூர நிண்டு பார்க்கிறதும் பொறுக்கேல்லையா உனக்கு?" எரிச்சல் பட்ட தமையனைப் பார்த்து வாய்விட்டே நகைத்தான்.
"நீங்க பேசாமல் இப்பவே பெரியம்மாக்குச் சொல்லி இலக்கியாட அம்மாவோட கதைச்சிருங்க. பிறகு என்ன? மிச்ச ரெண்டு நாள் சரி சோடியா, மற்றவேக்கு மறைக்கத் தேவையில்லாமல் சுற்றலாம்." கண்ணடித்தபடி ஆலோசனை சொன்னான்.
"பச்! அம்மா ஆக்களுக்கு நேர்ல போய்ச் சொல்லலாம் டா. அதும் இன்னும் ரெண்டு நாட்கள்தானே!" வேந்தன்.
"அப்ப, இப்படித் தள்ளி நிண்டு பெருமுச்சு விடக் கூடாது!" என்றவன், முறைத்த தமையனிடம், "இல்லையோ உங்களுக்குப் பதிலா நானே சொல்லவா?" மீண்டும் கண்ணடித்தவனை இப்போது முறைத்தான், வேந்தன்.
“நானா சொல்ல முதல் ஆரிட்டையாவது வாய் விட்டியோ... நல்லா உத படுவ தம்பி!” எச்சரிக்க, “என்ன இப்பிடி வெருட்டுறீங்க?” என்றபடி வந்திருந்தாள், வினித்தின் வருங்கால மனைவி. பக்கத்தில் அதே கேள்வி பார்வையிலிருக்க, கவி.
"ஹா..ஹா...அண்ணோய்..." வினித் சிரித்த சிரிப்பில் பெண்கள் பார்வை வேந்தனை ஆராய்ந்தன.
"போடா டேய்..." மழுப்பிவிட்டு பட்டென்று நகர்ந்துவிட்டான், அவன். வினித் சிரிப்பு மட்டுமல்ல, "என்னத்தச் சொல்ல வேணாம் எண்டவர்?" கவியின் குரலும் தொடர்ந்தாலும் அவன் திரும்பவில்லை.
"சொல்ல விருப்பமோ சொல்லு, வேல மிச்சம்!" முணுமுணுத்தபடி வந்தவனை, "என்ன தனியாக் கதைக்கிறீங்க வேந்தன்?" எதிர்கொண்டான், மாறன்.
"இல்ல இல்ல ஒண்ணும் இல்ல." சமாளித்துவிட்டாலும் பார்வை பறந்துபோய் குன்றிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த இலக்கியாவில் பட்டுத் திரும்பியது. மாறன் பார்வையும் அங்கே சென்றுவிட்டு வந்தது, "கவின் அவளப்போட்டு ஒரு வழி பண்ணுறான்." என்றபடி.
இடையில், "இல்ல... என்னவோ இருக்கு...ரகசியம் போல!" என்றபடி வந்த கவி, வேந்தனைப் பார்த்த பார்வையில் அவன் பலமாகவே சிரித்துவிட, பட்டென்று வந்து மோதியது இலக்கியாவின் பார்வை.
"அப்படி என்ன இரகசியம்...சொல்லுங்க வேந்தன், வினித் அண்ணா என்ன சொல்லப் போறன் எண்டவர்? எங்களிட்டையா?" அவள் விடாது பிடித்துத் தொங்க, அதையும் இதையும் சொல்லி அவள் கவனைத்தை வேறு வழிக்குத் திரும்புவதில் கண்ணும் கருத்துமாக நின்றானவன்.
இப்படி, அவர்கள் அளவளாவி நின்றதைப் பார்த்துவிட்டு அப்பால் விலகி நடந்த இலக்கியாவின் மனம் ஒரு நிலையில் இல்லவே இல்லை. இருந்தாலும், எதையுமே வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அஜி, ராஜியின் பிள்ளைகளோடு கதைத்தபடியே மெல்ல மெல்ல நகர்ந்து வந்தவர்கள், “அவையளும் இங்கதானே வருவீனம், நாம போய்ப் பார்ப்பம்.” என்று, ராஜியின் மகள் ஆசைப்படவே பரிசுப் பொருட்கள் வாங்கும் கடைக்குள் உள்ளிட்டார்கள்.
சிறிது நேரம் சென்றிருக்கும், “உங்கள என்ன செய்யிறது? அங்க தேடினா இங்க வந்து நிக்கிறீங்க? சொல்லிப்போட்டு வந்திருக்கலாமே அஜி." மாறன் வர, தொடர்ந்து மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள்.
அதன் பின்னர் எல்லோருமாக பிட்சா ரெஸ்டாரண்ட் சென்று கலகலப்பாக உணவையும் முடித்த பின்னர், வினித் ஆட்கள் விடை பெற்றுக்கொண்டார்கள்.
" ‘நீடில்ஸ்’ல தானே தங்க இருக்கிறீங்க? இங்க இருந்து மூண்டு மூண்டரை மணிநேர ஓட்டம் என்ன?" வினித் கேட்க, "ஓம், எப்படியும் நாலு மணித்தியாலம் ஆகும். ஆறுதலாப் போகலாம்." மணி பார்த்தபடி சொன்னான், வேந்தன்.
“வேந்தன் நானே ஓடுறன்.” என்றாள் கவி. பதில் சொல்லவில்லை அவன். வினித் ஆட்கள் விடைபெற்றுச் செல்லவும் தாமதியாது வந்து சாரதியாசத்தை நிறைத்துவிட்டான்.
அதைப்பார்த்த ஆரூரன் வாய்விட்டுச் சிரிக்க, கவியின் முகம் கோணிவிட்டது.
“காலமையே இண்டைக்கு நான் ஓடுறன் எண்டு சொல்லிட்டன் வேந்தன், பிளீஸ் இறங்குங்கோ!" மல்லுக்குத் தயாராகிவிட்டாள். அதைப் பார்த்துக்கொண்டே உள்ளேயேறி கடைசி இருக்கையில் அமர்ந்த வேகத்தில், எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கத் தொடங்கிய இலக்கியாவைத் தொடர்ந்து விட்டு கவியில் படிந்த வேந்தன் பார்வையில், உண்மையில் சின்ன யோசனை மின்னியதோ என்றளவில் இருந்தது. அக்கணத்தில் தான், தன்னுடனான கவியின் பேச்சு, செய்கைகள் இலக்கியாவைப் பாதிக்குதோவென்ற எண்ணம் அவனுள் முளைத்தது. அதேநேரம், கவியும் எப்போதேன்றில்லாது மிக்க உரிமையோடு கதைப்பதையும் அப்போதுதான் உணர்ந்து கொண்டான்.
அதையுணர்ந்த மறுநொடி முகத்தில் வெகுவாகவே அமைதி!
"இல்ல, இனி இருட்டிரும். இடையில நிண்டு இறங்கி ஏறுறத விட இப்பவே நான் ஓடுறன்." திட்டமாகவே சொல்லிவிட்டான். அவள் முகம் கூம்பிப் போயிற்று! என்றாலும், தாமதியாது முன்னிருக்கையில் ஏறிக்கொண்டவள், “நான் வீடியோ எடுக்கப் போறன். இதில இருந்தாத்தான் நல்லா எடுக்க ஏலும்.” பெல்ட்டைப் போட்டுக்கொண்டாள்.
இளையவர்களும், அப்படியே சுற்றத்தை உள்வாங்கிக்கொண்டே நகர்ந்து அங்கிருந்த குன்றிலேறிச் சென்று புகைப்படமெடுப்பதில் முனைந்தார்கள். அஜியும் அவர்களோடு இணைந்து கொண்டாள்.
குன்றிலேறி கரமிரண்டையும் விரித்தபடி ஆகாயத்தைப் பார்த்து நின்றவளை ஆரூரன் கைபேசிக்குள் அடக்கினானென்றால், விழிகளால் உள்ளிழுத்து இதயத்துள் அடைத்துக் கொண்டான், வேந்தன்.
"ஹாஃப் ஜீன்ஸ் போட்ட தேவதை என்ன அண்ணா?! ரசியுங்கோ ரசியுங்கோ!" வேந்தன் முதுகில் தட்டிச் சொன்ன வினித், "டோய் ஏன்டா? நிண்டு ஒரு நிமிசம் கதைக்கக் கிடைக்குதில்ல எண்டா இப்படித் தூர நிண்டு பார்க்கிறதும் பொறுக்கேல்லையா உனக்கு?" எரிச்சல் பட்ட தமையனைப் பார்த்து வாய்விட்டே நகைத்தான்.
"நீங்க பேசாமல் இப்பவே பெரியம்மாக்குச் சொல்லி இலக்கியாட அம்மாவோட கதைச்சிருங்க. பிறகு என்ன? மிச்ச ரெண்டு நாள் சரி சோடியா, மற்றவேக்கு மறைக்கத் தேவையில்லாமல் சுற்றலாம்." கண்ணடித்தபடி ஆலோசனை சொன்னான்.
"பச்! அம்மா ஆக்களுக்கு நேர்ல போய்ச் சொல்லலாம் டா. அதும் இன்னும் ரெண்டு நாட்கள்தானே!" வேந்தன்.
"அப்ப, இப்படித் தள்ளி நிண்டு பெருமுச்சு விடக் கூடாது!" என்றவன், முறைத்த தமையனிடம், "இல்லையோ உங்களுக்குப் பதிலா நானே சொல்லவா?" மீண்டும் கண்ணடித்தவனை இப்போது முறைத்தான், வேந்தன்.
“நானா சொல்ல முதல் ஆரிட்டையாவது வாய் விட்டியோ... நல்லா உத படுவ தம்பி!” எச்சரிக்க, “என்ன இப்பிடி வெருட்டுறீங்க?” என்றபடி வந்திருந்தாள், வினித்தின் வருங்கால மனைவி. பக்கத்தில் அதே கேள்வி பார்வையிலிருக்க, கவி.
"ஹா..ஹா...அண்ணோய்..." வினித் சிரித்த சிரிப்பில் பெண்கள் பார்வை வேந்தனை ஆராய்ந்தன.
"போடா டேய்..." மழுப்பிவிட்டு பட்டென்று நகர்ந்துவிட்டான், அவன். வினித் சிரிப்பு மட்டுமல்ல, "என்னத்தச் சொல்ல வேணாம் எண்டவர்?" கவியின் குரலும் தொடர்ந்தாலும் அவன் திரும்பவில்லை.
"சொல்ல விருப்பமோ சொல்லு, வேல மிச்சம்!" முணுமுணுத்தபடி வந்தவனை, "என்ன தனியாக் கதைக்கிறீங்க வேந்தன்?" எதிர்கொண்டான், மாறன்.
"இல்ல இல்ல ஒண்ணும் இல்ல." சமாளித்துவிட்டாலும் பார்வை பறந்துபோய் குன்றிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த இலக்கியாவில் பட்டுத் திரும்பியது. மாறன் பார்வையும் அங்கே சென்றுவிட்டு வந்தது, "கவின் அவளப்போட்டு ஒரு வழி பண்ணுறான்." என்றபடி.
இடையில், "இல்ல... என்னவோ இருக்கு...ரகசியம் போல!" என்றபடி வந்த கவி, வேந்தனைப் பார்த்த பார்வையில் அவன் பலமாகவே சிரித்துவிட, பட்டென்று வந்து மோதியது இலக்கியாவின் பார்வை.
"அப்படி என்ன இரகசியம்...சொல்லுங்க வேந்தன், வினித் அண்ணா என்ன சொல்லப் போறன் எண்டவர்? எங்களிட்டையா?" அவள் விடாது பிடித்துத் தொங்க, அதையும் இதையும் சொல்லி அவள் கவனைத்தை வேறு வழிக்குத் திரும்புவதில் கண்ணும் கருத்துமாக நின்றானவன்.
இப்படி, அவர்கள் அளவளாவி நின்றதைப் பார்த்துவிட்டு அப்பால் விலகி நடந்த இலக்கியாவின் மனம் ஒரு நிலையில் இல்லவே இல்லை. இருந்தாலும், எதையுமே வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அஜி, ராஜியின் பிள்ளைகளோடு கதைத்தபடியே மெல்ல மெல்ல நகர்ந்து வந்தவர்கள், “அவையளும் இங்கதானே வருவீனம், நாம போய்ப் பார்ப்பம்.” என்று, ராஜியின் மகள் ஆசைப்படவே பரிசுப் பொருட்கள் வாங்கும் கடைக்குள் உள்ளிட்டார்கள்.
சிறிது நேரம் சென்றிருக்கும், “உங்கள என்ன செய்யிறது? அங்க தேடினா இங்க வந்து நிக்கிறீங்க? சொல்லிப்போட்டு வந்திருக்கலாமே அஜி." மாறன் வர, தொடர்ந்து மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள்.
அதன் பின்னர் எல்லோருமாக பிட்சா ரெஸ்டாரண்ட் சென்று கலகலப்பாக உணவையும் முடித்த பின்னர், வினித் ஆட்கள் விடை பெற்றுக்கொண்டார்கள்.
" ‘நீடில்ஸ்’ல தானே தங்க இருக்கிறீங்க? இங்க இருந்து மூண்டு மூண்டரை மணிநேர ஓட்டம் என்ன?" வினித் கேட்க, "ஓம், எப்படியும் நாலு மணித்தியாலம் ஆகும். ஆறுதலாப் போகலாம்." மணி பார்த்தபடி சொன்னான், வேந்தன்.
“வேந்தன் நானே ஓடுறன்.” என்றாள் கவி. பதில் சொல்லவில்லை அவன். வினித் ஆட்கள் விடைபெற்றுச் செல்லவும் தாமதியாது வந்து சாரதியாசத்தை நிறைத்துவிட்டான்.
அதைப்பார்த்த ஆரூரன் வாய்விட்டுச் சிரிக்க, கவியின் முகம் கோணிவிட்டது.
“காலமையே இண்டைக்கு நான் ஓடுறன் எண்டு சொல்லிட்டன் வேந்தன், பிளீஸ் இறங்குங்கோ!" மல்லுக்குத் தயாராகிவிட்டாள். அதைப் பார்த்துக்கொண்டே உள்ளேயேறி கடைசி இருக்கையில் அமர்ந்த வேகத்தில், எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கத் தொடங்கிய இலக்கியாவைத் தொடர்ந்து விட்டு கவியில் படிந்த வேந்தன் பார்வையில், உண்மையில் சின்ன யோசனை மின்னியதோ என்றளவில் இருந்தது. அக்கணத்தில் தான், தன்னுடனான கவியின் பேச்சு, செய்கைகள் இலக்கியாவைப் பாதிக்குதோவென்ற எண்ணம் அவனுள் முளைத்தது. அதேநேரம், கவியும் எப்போதேன்றில்லாது மிக்க உரிமையோடு கதைப்பதையும் அப்போதுதான் உணர்ந்து கொண்டான்.
அதையுணர்ந்த மறுநொடி முகத்தில் வெகுவாகவே அமைதி!
"இல்ல, இனி இருட்டிரும். இடையில நிண்டு இறங்கி ஏறுறத விட இப்பவே நான் ஓடுறன்." திட்டமாகவே சொல்லிவிட்டான். அவள் முகம் கூம்பிப் போயிற்று! என்றாலும், தாமதியாது முன்னிருக்கையில் ஏறிக்கொண்டவள், “நான் வீடியோ எடுக்கப் போறன். இதில இருந்தாத்தான் நல்லா எடுக்க ஏலும்.” பெல்ட்டைப் போட்டுக்கொண்டாள்.
Last edited: