பயணத்தின் பதின்மூன்றாம் நாள்...
"நீடில்ஸ்ல இருந்து ‘கிரிஃபித் ஒப்செர்வடோரி’ (The Griffith Observatory) நாலரை மணித்தியாலத்தில போயிரலாம் என்ன வேந்தன்?" மாறன் கேட்டதற்கு, "ஓம், பதினொன்றரைக்கு முதலே போயிரலாம் எண்டு நினைக்கிறன்." என்றானவன்.
"அங்க பார்த்திட்டு லொஸ் ஏஞ்சல் சிட்டில நடந்து திரிஞ்சிட்டு அப்பிடியே ஷொப்பிங் கொஞ்சம் செய்திட்டு..." இப்படியே மாறி மாறி கதைபட்டு, கலகலப்போடு பயணப்பட்டவர்கள் காலை பதினொன்று கடக்கையில், கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸின் ‘ஹொலிவுட் மலை’யில் தெற்கு நோக்கிய சரிவிலுள்ள ‘கிரிஃபித் பூங்கா’வில் அமைந்துள்ள ‘கிரிஃபித் ஆய்வகத்தை’ அண்மித்திருந்தார்கள். கடல் மட்டத்திலிருந்து 1134 அடியுயரத்திலிருந்தது, பொதுமக்களின் பார்வைக்கென்றே அமைக்கப்பட்ட அவ்வாய்வகம்.
மீண்டும் ஒரு மலைப்பாதைப் பயணம்.
“ரோட்டு ஒடுக்கமா இருக்கு, பார்த்துத் தம்பி.” என்ற சுகுணாவின் குரலில் இலேசான பயம்.
வேந்தன் முறுவலித்தான். அந்தச் சாட்டில் பின்புறம் பாய்ந்த பார்வை இலக்கியாவில் பட்டு மீண்டது. அவள் பார்வையோ வெளிபுறத்தில். உதயத்தின் மலர்வு அவள் முகத்திலும் குடியிருந்தது. முதல் நாள் மாலைப்பொழுதில் பல்பொருள் அங்காடியில், சிறு பொழுதேனும் அவளோடு கழிக்க முடிந்ததில் அவனுக்குமே பலத்த சந்தோசம் தான். தாமிருவர் மட்டுமாக அங்காடி வண்டிலைத் தள்ளியபடி கதைத்துப் பேசியபடியே தேவையானவற்றைத் தெரிந்தெடுக்கையிலெல்லாம் கற்பனையில் அவளுடனான வாழ்வே வலம் வந்திருந்தது. ‘எப்படா கலியாணம் கட்டப் போற?’ என்று, தாய் அலுத்துக் கொண்டதும் தான்.
வீட்டினரின் விருப்பைத் தட்டிக் கழித்த காத்திருப்பு இவளைச் சந்திக்கத்தானே! மீண்டும் பார்வை பின்புறம் பாய்ந்தது. இந்தப் பயணத்தில் இவர்களின் நெருக்கத்துக்குத் துணைபோனதன் பெரும்பங்காற்றிய உள்க்கண்ணாடி பளிச்சென்று தன் கடமையில் கண்ணாக இருந்தது.
“சனமாக் கிடக்கு...பார்க்கிங் எல்லாம் கிட்டவா கிடைக்குமோ என்னவோ!” என்ற நாதன், அவளையே சுற்றி நின்ற அவன் மனதைத் திருப்ப முயன்றார்.
“லீவு நேரம் இப்பிடித்தான் அங்கிள். கிட்டவா கிடைச்சா நல்லம், இல்லாட்டியும் நடக்கிறதுக்கு யோசிக்கிற ஆக்கள் இல்லத் தானே!” சீண்டலாகச் சொன்னவன் இலக்கியாவின் கடியை எதிர்பார்த்தான்.
அவள் ஏமாற்றவில்லை. தாமதியாது முறைத்தவளின் முறைப்பை முறுவலோடு ஏற்றுவிட்டு அவன் பார்வை திரும்புகையில், “தம்பி அதால திரும்ப வேணும் என்ன?” நாதன் சொல்லிக்கொண்டிருக்கையில் வாகனம் தாண்டிவிட்டிருந்தது.
“பச்!” திருப்பத்தைத் தவற விட்டவனுக்கு தன்னிலேயே கோபமெழுந்தது.
“சரி சரி...திரும்பி வரலாம் தானே?” ஆறுதலாகச் சொல்லி விட்டாலும் நெளிந்து வளைந்து முன்னேறிய குறுகலான பாதையில் தான் நாதனின் பார்வை.
வாகனம் ஊர்ந்து செல்ல, உள்ளே இருந்தவர்களின் மனதில் இலேசான கிலியை உண்டு பண்ணியது, அச்சூழல்.
“பெரிசா எல்லாம் தனக்குத் தெரியும் எண்டு இருந்தா இப்பிடித்தான் நடக்கும்.” இலக்கியாவின் சீண்டலில் வேந்தன் முகத்தில் முறுவல் படர்ந்தது.
“திரும்பி வர நிறையத் தூரம் போக வேணும் போல!” நாதனுக்கும் யோசனை.
இடையில், முன்புறமிருந்து வந்த காருக்கு வழிவிட நன்றாக ஒதுங்கி வாகனத்தை நிறுத்தினான். அவர்கள் நிறுத்திய பக்கத்தில் கிடுகிடு சரிவு! உள்ளேயிருந்தவர்களில் பெரும்பான்மையினர் கண்கள் மூடிக்கொண்டன.
‘வாகனத்துள் அசைந்தாலே பிரண்டு விடுவோமோ’ யன்னலோரமிருந்த சுகுணாவின் விழிகள் இறுக மூடிக்கொண்டன. அருகிலிருந்த ராஜியின் மகளை இறுக அணைத்துப் பிடித்தும் கொண்டார்.
“இப்ப மட்டும் சின்னதா சறுக்கினாச் சரி!” ஆரூரன் முணுமுணுக்க, “நல்லதாக் கதைக்க வராது உனக்கு!” அவன் தாய் கோபிக்க, “அப்ப இண்டையான் நாள் சரி! இப்பிடியே மலைக்காட்டுக்க சுத்திப்போட்டு இருக்க வேண்டியதுதான். கனவு கண்டு கொண்டு காரோடினா இப்பிடித்தான்!” இலக்கியாவின் சீண்டல் வேறு இடைபுகுந்தது.
மீண்டும் வாகனத்தை ஓட்டத் தொடங்கியிருந்த வேந்தன் பார்வை ரியர் வியூ மிரரை உரச முதலே, “இலக்கி!” கண்டிப்போடு வெளிப்பட்டிருந்தது, கவியின் குரல்.
“உனக்கு எத்தின தரம் சொன்னாலும் விளங்காதா? மெண்டல் போல கதைக்கிற. முதல் எந்த நேரம் எப்பிடிக் கதைக்கிறது எண்ட சென்சும் இல்ல.” அவள் சீறலில் இலக்கியின் முகம் சுருங்கிப் போயிற்று. அதைப் பார்த்த வேந்தன் சட்டென்று ஓரமாக நிறுத்திவிட்டான்.
“தம்பி ஏன்? பின்னால் கார் ஒண்டு நிக்குது, நாம போனாத் தான் அதும்...” நாதன் சொல்லிக் கொண்டிருக்கவே பின்னால் திரும்பியவன், “அவா பகிடிக்குக் கதைக்கிறா எண்டளவுக்கு விளங்காமல் இருக்க நான் முட்டாளில்ல கவி. சோ...என்ன வச்சு நீங்க கொழுவல் படாதீங்க!” சொன்னவன் முகத்திலிருந்த இறுக்கத்தில் கவியின் முகம் சிறுத்திட்டு.
“அவேட கதைகளை எல்லாம் காதிலும் வாங்காதீங்க தம்பி.” பட்டென்று நாதன் சொல்ல, “நான் நல்லதுக்குத்தான் சொன்னன்.” இறங்கிவிட்ட குரலில் சொன்னாள் கவி.
“இதில என்ன நல்லது இருக்கு. அதோட இது எத்தினையாவது தடவையா என்ன வச்சு பிரச்சினை வருது!” அதே இறுக்கத்தோடு சொல்லிக்கொண்டே வாகனத்தை இயக்க, சங்கடத்தோடு வேந்தனில் நிலைத்திருந்த நாதனின் விழிகள் கண்டிப்போடு தமையன் மகளில் படிந்தது.
"நீடில்ஸ்ல இருந்து ‘கிரிஃபித் ஒப்செர்வடோரி’ (The Griffith Observatory) நாலரை மணித்தியாலத்தில போயிரலாம் என்ன வேந்தன்?" மாறன் கேட்டதற்கு, "ஓம், பதினொன்றரைக்கு முதலே போயிரலாம் எண்டு நினைக்கிறன்." என்றானவன்.
"அங்க பார்த்திட்டு லொஸ் ஏஞ்சல் சிட்டில நடந்து திரிஞ்சிட்டு அப்பிடியே ஷொப்பிங் கொஞ்சம் செய்திட்டு..." இப்படியே மாறி மாறி கதைபட்டு, கலகலப்போடு பயணப்பட்டவர்கள் காலை பதினொன்று கடக்கையில், கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸின் ‘ஹொலிவுட் மலை’யில் தெற்கு நோக்கிய சரிவிலுள்ள ‘கிரிஃபித் பூங்கா’வில் அமைந்துள்ள ‘கிரிஃபித் ஆய்வகத்தை’ அண்மித்திருந்தார்கள். கடல் மட்டத்திலிருந்து 1134 அடியுயரத்திலிருந்தது, பொதுமக்களின் பார்வைக்கென்றே அமைக்கப்பட்ட அவ்வாய்வகம்.
மீண்டும் ஒரு மலைப்பாதைப் பயணம்.
“ரோட்டு ஒடுக்கமா இருக்கு, பார்த்துத் தம்பி.” என்ற சுகுணாவின் குரலில் இலேசான பயம்.
வேந்தன் முறுவலித்தான். அந்தச் சாட்டில் பின்புறம் பாய்ந்த பார்வை இலக்கியாவில் பட்டு மீண்டது. அவள் பார்வையோ வெளிபுறத்தில். உதயத்தின் மலர்வு அவள் முகத்திலும் குடியிருந்தது. முதல் நாள் மாலைப்பொழுதில் பல்பொருள் அங்காடியில், சிறு பொழுதேனும் அவளோடு கழிக்க முடிந்ததில் அவனுக்குமே பலத்த சந்தோசம் தான். தாமிருவர் மட்டுமாக அங்காடி வண்டிலைத் தள்ளியபடி கதைத்துப் பேசியபடியே தேவையானவற்றைத் தெரிந்தெடுக்கையிலெல்லாம் கற்பனையில் அவளுடனான வாழ்வே வலம் வந்திருந்தது. ‘எப்படா கலியாணம் கட்டப் போற?’ என்று, தாய் அலுத்துக் கொண்டதும் தான்.
வீட்டினரின் விருப்பைத் தட்டிக் கழித்த காத்திருப்பு இவளைச் சந்திக்கத்தானே! மீண்டும் பார்வை பின்புறம் பாய்ந்தது. இந்தப் பயணத்தில் இவர்களின் நெருக்கத்துக்குத் துணைபோனதன் பெரும்பங்காற்றிய உள்க்கண்ணாடி பளிச்சென்று தன் கடமையில் கண்ணாக இருந்தது.
“சனமாக் கிடக்கு...பார்க்கிங் எல்லாம் கிட்டவா கிடைக்குமோ என்னவோ!” என்ற நாதன், அவளையே சுற்றி நின்ற அவன் மனதைத் திருப்ப முயன்றார்.
“லீவு நேரம் இப்பிடித்தான் அங்கிள். கிட்டவா கிடைச்சா நல்லம், இல்லாட்டியும் நடக்கிறதுக்கு யோசிக்கிற ஆக்கள் இல்லத் தானே!” சீண்டலாகச் சொன்னவன் இலக்கியாவின் கடியை எதிர்பார்த்தான்.
அவள் ஏமாற்றவில்லை. தாமதியாது முறைத்தவளின் முறைப்பை முறுவலோடு ஏற்றுவிட்டு அவன் பார்வை திரும்புகையில், “தம்பி அதால திரும்ப வேணும் என்ன?” நாதன் சொல்லிக்கொண்டிருக்கையில் வாகனம் தாண்டிவிட்டிருந்தது.
“பச்!” திருப்பத்தைத் தவற விட்டவனுக்கு தன்னிலேயே கோபமெழுந்தது.
“சரி சரி...திரும்பி வரலாம் தானே?” ஆறுதலாகச் சொல்லி விட்டாலும் நெளிந்து வளைந்து முன்னேறிய குறுகலான பாதையில் தான் நாதனின் பார்வை.
வாகனம் ஊர்ந்து செல்ல, உள்ளே இருந்தவர்களின் மனதில் இலேசான கிலியை உண்டு பண்ணியது, அச்சூழல்.
“பெரிசா எல்லாம் தனக்குத் தெரியும் எண்டு இருந்தா இப்பிடித்தான் நடக்கும்.” இலக்கியாவின் சீண்டலில் வேந்தன் முகத்தில் முறுவல் படர்ந்தது.
“திரும்பி வர நிறையத் தூரம் போக வேணும் போல!” நாதனுக்கும் யோசனை.
இடையில், முன்புறமிருந்து வந்த காருக்கு வழிவிட நன்றாக ஒதுங்கி வாகனத்தை நிறுத்தினான். அவர்கள் நிறுத்திய பக்கத்தில் கிடுகிடு சரிவு! உள்ளேயிருந்தவர்களில் பெரும்பான்மையினர் கண்கள் மூடிக்கொண்டன.
‘வாகனத்துள் அசைந்தாலே பிரண்டு விடுவோமோ’ யன்னலோரமிருந்த சுகுணாவின் விழிகள் இறுக மூடிக்கொண்டன. அருகிலிருந்த ராஜியின் மகளை இறுக அணைத்துப் பிடித்தும் கொண்டார்.
“இப்ப மட்டும் சின்னதா சறுக்கினாச் சரி!” ஆரூரன் முணுமுணுக்க, “நல்லதாக் கதைக்க வராது உனக்கு!” அவன் தாய் கோபிக்க, “அப்ப இண்டையான் நாள் சரி! இப்பிடியே மலைக்காட்டுக்க சுத்திப்போட்டு இருக்க வேண்டியதுதான். கனவு கண்டு கொண்டு காரோடினா இப்பிடித்தான்!” இலக்கியாவின் சீண்டல் வேறு இடைபுகுந்தது.
மீண்டும் வாகனத்தை ஓட்டத் தொடங்கியிருந்த வேந்தன் பார்வை ரியர் வியூ மிரரை உரச முதலே, “இலக்கி!” கண்டிப்போடு வெளிப்பட்டிருந்தது, கவியின் குரல்.
“உனக்கு எத்தின தரம் சொன்னாலும் விளங்காதா? மெண்டல் போல கதைக்கிற. முதல் எந்த நேரம் எப்பிடிக் கதைக்கிறது எண்ட சென்சும் இல்ல.” அவள் சீறலில் இலக்கியின் முகம் சுருங்கிப் போயிற்று. அதைப் பார்த்த வேந்தன் சட்டென்று ஓரமாக நிறுத்திவிட்டான்.
“தம்பி ஏன்? பின்னால் கார் ஒண்டு நிக்குது, நாம போனாத் தான் அதும்...” நாதன் சொல்லிக் கொண்டிருக்கவே பின்னால் திரும்பியவன், “அவா பகிடிக்குக் கதைக்கிறா எண்டளவுக்கு விளங்காமல் இருக்க நான் முட்டாளில்ல கவி. சோ...என்ன வச்சு நீங்க கொழுவல் படாதீங்க!” சொன்னவன் முகத்திலிருந்த இறுக்கத்தில் கவியின் முகம் சிறுத்திட்டு.
“அவேட கதைகளை எல்லாம் காதிலும் வாங்காதீங்க தம்பி.” பட்டென்று நாதன் சொல்ல, “நான் நல்லதுக்குத்தான் சொன்னன்.” இறங்கிவிட்ட குரலில் சொன்னாள் கவி.
“இதில என்ன நல்லது இருக்கு. அதோட இது எத்தினையாவது தடவையா என்ன வச்சு பிரச்சினை வருது!” அதே இறுக்கத்தோடு சொல்லிக்கொண்டே வாகனத்தை இயக்க, சங்கடத்தோடு வேந்தனில் நிலைத்திருந்த நாதனின் விழிகள் கண்டிப்போடு தமையன் மகளில் படிந்தது.