மறுநாள், பயணத்தின் இறுதிநாள்!
“என்ன தம்பி நேரத்துக்கே ரெடியாகிட்டிங்க? டீ கூட குடிகேல்ல, இங்க வந்து இருக்கிறீங்க!” என்றபடி வந்த நாதன், “சரி சரி கதைச்சிட்டு வாங்க.” அவன் அலைபேசியில் கதைத்துக்கொண்டிருப்பதைக் கண்டுவிட்டுக் கன்டீன் பக்கம் நடந்தார்.
முதல் நாள் அறைக்குப் போன வேகத்தில் படுத்துறங்கிப் போனான், வேந்தன். அதுவே நேரத்துக்கே எழுந்தும் விட்டான். மெல்லத் தயாராகி வெளியில் வந்தவன் அமைதியாகவிருந்த விடுதி வரவேற்பிலமர்ந்து முக்கியமான அலவலக வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்பால் நகர்ந்துவிட்டாலும் நாதனின் பார்வை வேந்தனில் தானிருந்தது. இவர்களோடு தங்கிய போதெல்லாம், இருந்து சிறிதுநேரம் கதைத்து மறுநாள் பயணம் விபரங்களை ஆலோசித்துவிட்டே தூங்குவான். நேற்றோ, உள்ளிட்ட வேகத்துக்குக் குளித்துவிட்டுப் படுத்துவிட்டான்.
நாதனுக்கும் மனதில் வருத்தம்தான். தான் பார்த்த பார்வை அவனுக்கு விளங்கிவிட்டதென்று புரிந்ததில் வந்த வருத்தமது. அவரையும் மீறித்தான் அப்படிப் பார்த்திருந்தார். அவன் அறிமுகமாகிய நாளிலிருந்த தம்மில் ஒருவனாக அவனைப் பிடித்திருந்தது. ‘அப்படியிருக்க...’ தலையை உலுக்கிக்கொண்டவர் அவன் கைபேசியை வைக்கவும், “தம்பி அறையில கோப்பி இருக்கு குடிச்சிட்டு வாங்கோவன்.” என்றபடி வந்தார்.
“கன்டினில குடிச்சிட்டன் அங்கிள்." என்றவன், கேட்டவர் முக மாறுதலை உணர்ந்ததும், "இரவு நேரத்துக்கே தூங்கிட்டன் தானே, விடியப்புறமே எழும்பிட்டன் அங்கிள். உங்களக் குழப்ப வேணாம் எண்டு இங்க வந்திருந்தன். கொஞ்சம் வேலைகள் பார்த்தன்." சமாதானமாகச் சொன்னபடி கரமிரண்டையும் தலைக்குப் பின்னால் உயர்த்திக் கோர்த்துநெட்டி முறித்தான்.
"அப்பச் சரி." அவன் குரலில் எந்தவித பேதத்தையும் உணராத நாதன் நிம்மதி கொண்டார்.
“எல்லாரும் வர சாப்பிட்டுட்டு வெளிக்கிடுவம்.” அவனருகில் அமர்ந்து கொண்டார்.
"ஓம், ஏழுக்கு வெளிக்கிட்டாலும் போதும்." என்றவன், "இண்டைக்குப் பின்னேரம் ஹோட்டலில் விட்டுட்டு நான் இந்த வாகனத்த கொண்டு போறன். உங்களுக்கு மிச்ச அஞ்சு நாட்களுக்கும் பெரிய வேன் ஒண்டு ட்ரைவரோட அரேஞ் பண்ணிட்டன். நாம அங்க போக அவர் வந்து நிப்பார்." என்றான், கணனியில் பார்வை இருக்க.
“பெரிய வேனெல்லாம் எதுக்குத் தம்பி? இதே போதும்."
“எப்பிடிப் போதும், இன்னும் நாலு பேர் வருகினம் தானே?".
"அது சமாளிக்கலாம் தம்பி."
"எனக்கு இதில ஒரு பிரச்சனையும் இல்ல அங்கிள்." என்றவனிடம், தொண்டைவரை வந்ததைக் கதைக்க முயலாது விழுங்கிக்கொண்டார், நாதன்.
அந்நேரம், “நாங்க எல்லாரும் ரெடியாகிட்டம் இங்க என்ன ரெண்டு பேரும் தனியா இருந்து கதைக்கிறீங்க?" என்றபடி வந்தான் ஆரூரன். பின்னால் மற்றவர்கள்.
"அப்ப சாப்பிட்டுட்டு வெளிக்கிடுவம்." எழுந்த நாதன் வந்தவர்களோடு நடக்க, கவியின் பார்வையைக் கவனமாகத் தவிர்த்துவிட்டெழுந்த வேந்தன் பார்வை கைபேசியில்.
காலை கண்விழித்ததும் இலக்கியாவுக்குக் குறுஞ்செய்தி தட்டிவிட்டே தயாராகி வந்திருந்தான்.
அதற்குப் பதில் வந்திருந்தது, 'என்ன நேரத்துக்கே கோழி கூவீட்டு?' என்று. இப்போதுதான் பார்த்தான்.
உதடுகளில் முறுவல் படர, ‘எல்லாரும் வந்திட்டினம் எங்க இன்னும் காணேல்ல?' தட்டிவிட்டபடி நடந்தான். அதையேதான் நாதனும் கேட்டார்.
“அவையள் எப்பவும் போல கடைசி!" ஆரூரன் சொல்ல, "கவின் இப்பத் தான் எழும்பினான் அண்ணா. இலக்கிதான் வெளிக்கிடுத்திறா. வந்திருவினம்." என்றான், மாறன்.
எல்லாரும் தத்தமக்கு வேண்டியதை வாங்கி உண்ணத் தொடங்கிய பின்னரே அஜி கவினோடு வந்தாள், இலக்கியா. எதிர்பார்த்திருந்தவன் கண்களோடு மின்னலாகப் பார்வை உரசிவிட்டு நகர, அவன் முகம் சுருங்கியது. அவள் விழிகளிரண்டும் அந்தளவுக்கு வீங்கிக் கிடந்தன.
'என்ன நடந்தது ஏன் முகமெல்லாம் வீங்கியிருக்கு?' இருக்கையில் இருக்க முதலே முனகிய கைபேசியைப் பார்த்தவள் இதழ்களில் மெல்லிய முறுவல்! அவளையே பார்த்திருந்தவன் அதை உள்வாங்கிக் கொண்டான்.
"அதெல்லாம் ஒண்ணுமில்ல. முழுகீட்டுப் படுத்ததாக்கும். ஒரே கண்ணெரிச்சல்!' தட்டி அனுப்பினாள்.
"அத வச்சிப்போட்டுச் சாப்பிட்டுட்டு வெளிக்கிடுங்க!" நாதன் அவளுக்குத்தான் சொன்னார். அதன் பிறகு, விரைவில் அன்றைய நாள் பயணத்தை ஆரம்பித்தார்கள்.
“என்ன தம்பி நேரத்துக்கே ரெடியாகிட்டிங்க? டீ கூட குடிகேல்ல, இங்க வந்து இருக்கிறீங்க!” என்றபடி வந்த நாதன், “சரி சரி கதைச்சிட்டு வாங்க.” அவன் அலைபேசியில் கதைத்துக்கொண்டிருப்பதைக் கண்டுவிட்டுக் கன்டீன் பக்கம் நடந்தார்.
முதல் நாள் அறைக்குப் போன வேகத்தில் படுத்துறங்கிப் போனான், வேந்தன். அதுவே நேரத்துக்கே எழுந்தும் விட்டான். மெல்லத் தயாராகி வெளியில் வந்தவன் அமைதியாகவிருந்த விடுதி வரவேற்பிலமர்ந்து முக்கியமான அலவலக வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்பால் நகர்ந்துவிட்டாலும் நாதனின் பார்வை வேந்தனில் தானிருந்தது. இவர்களோடு தங்கிய போதெல்லாம், இருந்து சிறிதுநேரம் கதைத்து மறுநாள் பயணம் விபரங்களை ஆலோசித்துவிட்டே தூங்குவான். நேற்றோ, உள்ளிட்ட வேகத்துக்குக் குளித்துவிட்டுப் படுத்துவிட்டான்.
நாதனுக்கும் மனதில் வருத்தம்தான். தான் பார்த்த பார்வை அவனுக்கு விளங்கிவிட்டதென்று புரிந்ததில் வந்த வருத்தமது. அவரையும் மீறித்தான் அப்படிப் பார்த்திருந்தார். அவன் அறிமுகமாகிய நாளிலிருந்த தம்மில் ஒருவனாக அவனைப் பிடித்திருந்தது. ‘அப்படியிருக்க...’ தலையை உலுக்கிக்கொண்டவர் அவன் கைபேசியை வைக்கவும், “தம்பி அறையில கோப்பி இருக்கு குடிச்சிட்டு வாங்கோவன்.” என்றபடி வந்தார்.
“கன்டினில குடிச்சிட்டன் அங்கிள்." என்றவன், கேட்டவர் முக மாறுதலை உணர்ந்ததும், "இரவு நேரத்துக்கே தூங்கிட்டன் தானே, விடியப்புறமே எழும்பிட்டன் அங்கிள். உங்களக் குழப்ப வேணாம் எண்டு இங்க வந்திருந்தன். கொஞ்சம் வேலைகள் பார்த்தன்." சமாதானமாகச் சொன்னபடி கரமிரண்டையும் தலைக்குப் பின்னால் உயர்த்திக் கோர்த்துநெட்டி முறித்தான்.
"அப்பச் சரி." அவன் குரலில் எந்தவித பேதத்தையும் உணராத நாதன் நிம்மதி கொண்டார்.
“எல்லாரும் வர சாப்பிட்டுட்டு வெளிக்கிடுவம்.” அவனருகில் அமர்ந்து கொண்டார்.
"ஓம், ஏழுக்கு வெளிக்கிட்டாலும் போதும்." என்றவன், "இண்டைக்குப் பின்னேரம் ஹோட்டலில் விட்டுட்டு நான் இந்த வாகனத்த கொண்டு போறன். உங்களுக்கு மிச்ச அஞ்சு நாட்களுக்கும் பெரிய வேன் ஒண்டு ட்ரைவரோட அரேஞ் பண்ணிட்டன். நாம அங்க போக அவர் வந்து நிப்பார்." என்றான், கணனியில் பார்வை இருக்க.
“பெரிய வேனெல்லாம் எதுக்குத் தம்பி? இதே போதும்."
“எப்பிடிப் போதும், இன்னும் நாலு பேர் வருகினம் தானே?".
"அது சமாளிக்கலாம் தம்பி."
"எனக்கு இதில ஒரு பிரச்சனையும் இல்ல அங்கிள்." என்றவனிடம், தொண்டைவரை வந்ததைக் கதைக்க முயலாது விழுங்கிக்கொண்டார், நாதன்.
அந்நேரம், “நாங்க எல்லாரும் ரெடியாகிட்டம் இங்க என்ன ரெண்டு பேரும் தனியா இருந்து கதைக்கிறீங்க?" என்றபடி வந்தான் ஆரூரன். பின்னால் மற்றவர்கள்.
"அப்ப சாப்பிட்டுட்டு வெளிக்கிடுவம்." எழுந்த நாதன் வந்தவர்களோடு நடக்க, கவியின் பார்வையைக் கவனமாகத் தவிர்த்துவிட்டெழுந்த வேந்தன் பார்வை கைபேசியில்.
காலை கண்விழித்ததும் இலக்கியாவுக்குக் குறுஞ்செய்தி தட்டிவிட்டே தயாராகி வந்திருந்தான்.
அதற்குப் பதில் வந்திருந்தது, 'என்ன நேரத்துக்கே கோழி கூவீட்டு?' என்று. இப்போதுதான் பார்த்தான்.
உதடுகளில் முறுவல் படர, ‘எல்லாரும் வந்திட்டினம் எங்க இன்னும் காணேல்ல?' தட்டிவிட்டபடி நடந்தான். அதையேதான் நாதனும் கேட்டார்.
“அவையள் எப்பவும் போல கடைசி!" ஆரூரன் சொல்ல, "கவின் இப்பத் தான் எழும்பினான் அண்ணா. இலக்கிதான் வெளிக்கிடுத்திறா. வந்திருவினம்." என்றான், மாறன்.
எல்லாரும் தத்தமக்கு வேண்டியதை வாங்கி உண்ணத் தொடங்கிய பின்னரே அஜி கவினோடு வந்தாள், இலக்கியா. எதிர்பார்த்திருந்தவன் கண்களோடு மின்னலாகப் பார்வை உரசிவிட்டு நகர, அவன் முகம் சுருங்கியது. அவள் விழிகளிரண்டும் அந்தளவுக்கு வீங்கிக் கிடந்தன.
'என்ன நடந்தது ஏன் முகமெல்லாம் வீங்கியிருக்கு?' இருக்கையில் இருக்க முதலே முனகிய கைபேசியைப் பார்த்தவள் இதழ்களில் மெல்லிய முறுவல்! அவளையே பார்த்திருந்தவன் அதை உள்வாங்கிக் கொண்டான்.
"அதெல்லாம் ஒண்ணுமில்ல. முழுகீட்டுப் படுத்ததாக்கும். ஒரே கண்ணெரிச்சல்!' தட்டி அனுப்பினாள்.
"அத வச்சிப்போட்டுச் சாப்பிட்டுட்டு வெளிக்கிடுங்க!" நாதன் அவளுக்குத்தான் சொன்னார். அதன் பிறகு, விரைவில் அன்றைய நாள் பயணத்தை ஆரம்பித்தார்கள்.
Last edited: