"பிள்ள என்னாச்சி தடிமனாக்கிப்போட்டுது போல!” இலக்கியாவினருகில் படுத்திருந்த மலர் தலையைத் தடவியபடி கேட்டார்.
“தலைக்குக் குளிச்சியாம்மா? இன்னும் ஈரமிருக்கு. இப்படியே தூங்கினா தடிமன் வராமல் என்ன வரும் சொல்லு!" கடிந்து கொண்டார்.
விரித்திருந்த கூந்தலைப் பரப்பி விட்டது, அவர் கரம். எப்போதுமே தனிப்பட்டு அவளுக்கே அவளுக்கான பரிவை வெளிப்படுத்துவார், மலர். அது அவளைச் சாதாரண நேரங்களிலேயே பலகீனப்படுத்திவிடும். இப்போது?
விழிகள் இரண்டாலும் வெளியேறியது, சூடான உப்பு நீர்.
"லேசா அப்பம்மா.... நீங்க துங்குங்கோ!" தணிந்தகுரலில் சொன்னவள், "கரைச்சல் தாறனோ?" பெரியவர் பக்கம் திரும்பாதே கேட்டாள். மெல்லிய இரவு விளக்கொளியில் தன்புறம் திரும்பிக் கிடக்கும் மலருக்கு முகத்தைக் காட்டி மேலும் கேள்விகளை வளர்க்க விரும்பவில்லை, அவள்.
"இல்ல பிள்ள நீ படு. எனக்கு எப்பவும் புது இடம் எண்டா லேசில தூக்கம் வராது." புரண்டு படுத்தாரவர்.
அதே அறையிலிருந்த மறு கட்டிலில் கவியும் சுகுணாவும் நல்ல நித்திரையிலிருந்தார்கள்!
நல்ல அலைச்சல் எல்லோர் உடலையும் அசதிக்குள்ளாக்கியிருந்தது. இரட்டிப்பாகச் சந்தோசமும் சேரவே நிறைய நேரம் கதைத்துக்கொண்டிருந்துவிட்டுத்தான் கலைந்திருந்தார்கள்.
இலக்கியாவோ, கவி வேந்தன் கலியாணப் பேச்சுச் சம்பிரதாய நடைமுறைகள் வரையும் வந்தாயிற்று என்பதைக் கேள்விப்பட்ட கணத்தில் தன்னைத் தொலைத்தவள் தான், அவர்கள் பார்வையிலிருந்து தப்பியோடி குளியலைறைக்குள் புகுந்து வாய் பொத்தி குமுறியழுதிருந்தாள். சுக்கல் சுக்கலாகிப் போயிருந்த இதயம் சுவாசிக்கவே மிகவும் சிரமப்பட்டது. சின்ன இடம், வெளியில் கேட்டுவிட்டால்? அப்போதும் பயம் வேறு ஆட்டிப்படைத்தது. நீண்ட காலத்துக்குப் பின் நன்றாகவே வேதனையை உணர்ந்து நின்றாளவள்.
"முகம் கழுவிறன் எண்டு போன இலக்கியா இன்னும் வரேல்லையா?" சுகுணாவின் குரலைத் தொடர்ந்து குளியலறைக் கதவுப் பிடி அப்படியும் இப்படியும் திருப்பப்பட்டது. அதில் தான் சுற்றமுணர்ந்திருந்தாள். பட்டென்று குளிர் நீரைத் திறந்து முகத்தில் விசிறி அடித்தாள், பலதடவைகள்.
நேரே முன்னாலிருந்த நிலைக்கண்ணாடியில் தெரிந்த தன்னுருவை அவளுக்கே சுத்தமாகப் பிடிக்கவில்லை. சற்று முன்னர் உலகை வென்றுவிட்ட மகிழ்வோடு இந்த அறைக்குள் நுழைந்தவள் இவளா என்றவகையில் விழிகள் உப்பிச் சிவந்து, மூக்குக் விடைத்து, தலைகலைந்து ஒரு மாதம் தீராத வருத்தத்தில் கிடந்த கோலத்தில் நின்ற தன்னைப் பார்த்தவள் இதழ்கள் வெறுப்பில் மடிந்தன.
எப்போதுமே தன்னில் தான் தீரா அன்பு கொண்டவள், அவள். அதுவே, எல்லாம் கடந்து இத்தனை கலகலப்போடு நடமாட வைத்திருந்தது. இக்கணமோ, தன்னைத் தானே கொடுமையாக வெறுத்தாள். கடந்த சில நிமிடங்கள் வழங்கியிருந்த மிகப்பெரிய பரிசது!
பேப்பர் டவல் ஒன்றால் முகத்தை அழுந்தத் துடைத்தபடி கதவைத் திறந்தவளைப் பார்த்த மலர் நெற்றி சுருங்கியது.
"இதென்ன பிள்ள உன்ர முகம் இப்பிடி இருக்கு! காச்சல் ஏதுமா?" கழுத்தில் கைவைத்துப் பார்த்தார். ‘வந்திறங்கேக்க நல்லா நிண்டியே, இப்ப என்ன?’ என்று, சாதாரணமாக என்றால் கேட்டிருப்பார். அவர் கவனம் முழுவதும் வேந்தனில் குவிந்திருந்ததில் இவர்களை எங்கே பார்த்தார்!
'கண்ணீர்... ஒரு துளியேனும் விட்டுவிடாதே!' பெரும் அலறலோடு மனதை அதட்டி அடக்கினாள், இலக்கியா.
"ஒண்ணுமில்ல அப்பம்மா தலையிடி அதான்." இலாவகமாக நகர்ந்து, விக்சை எடுத்து நெற்றி முழுவதும் பரபரவென்று தேய்த்துக் கொண்டவளை பின்னால் சென்று கவனிக்க அவர்களுக்கு நேரமிருக்கவில்லை. மறுநாள் காலையிலேயே மலரும் சுகுணாவும் திருமண வீட்டுக்குப் போகவிருந்தார்கள். மதியம் கோவிலில் திருமணம். அதற்குப் பத்து மணிபோல் எல்லோரும் போவதாகவும் முடிவு. இரவு வரவேற்பு. அதைப் பற்றிக் கதைத்தபடி பெண்களிருக்க, ‘அடுத்த அறைக்குச் சென்று பேசாமல் படுத்திருவம்’ என்ற முடிவோடு மெல்ல வெளியில் கால்வைத்த இலக்கியா, அதேவேகத்தில் உள்ளே இழுத்துக்கொண்டாள்.
“தலைக்குக் குளிச்சியாம்மா? இன்னும் ஈரமிருக்கு. இப்படியே தூங்கினா தடிமன் வராமல் என்ன வரும் சொல்லு!" கடிந்து கொண்டார்.
விரித்திருந்த கூந்தலைப் பரப்பி விட்டது, அவர் கரம். எப்போதுமே தனிப்பட்டு அவளுக்கே அவளுக்கான பரிவை வெளிப்படுத்துவார், மலர். அது அவளைச் சாதாரண நேரங்களிலேயே பலகீனப்படுத்திவிடும். இப்போது?
விழிகள் இரண்டாலும் வெளியேறியது, சூடான உப்பு நீர்.
"லேசா அப்பம்மா.... நீங்க துங்குங்கோ!" தணிந்தகுரலில் சொன்னவள், "கரைச்சல் தாறனோ?" பெரியவர் பக்கம் திரும்பாதே கேட்டாள். மெல்லிய இரவு விளக்கொளியில் தன்புறம் திரும்பிக் கிடக்கும் மலருக்கு முகத்தைக் காட்டி மேலும் கேள்விகளை வளர்க்க விரும்பவில்லை, அவள்.
"இல்ல பிள்ள நீ படு. எனக்கு எப்பவும் புது இடம் எண்டா லேசில தூக்கம் வராது." புரண்டு படுத்தாரவர்.
அதே அறையிலிருந்த மறு கட்டிலில் கவியும் சுகுணாவும் நல்ல நித்திரையிலிருந்தார்கள்!
நல்ல அலைச்சல் எல்லோர் உடலையும் அசதிக்குள்ளாக்கியிருந்தது. இரட்டிப்பாகச் சந்தோசமும் சேரவே நிறைய நேரம் கதைத்துக்கொண்டிருந்துவிட்டுத்தான் கலைந்திருந்தார்கள்.
இலக்கியாவோ, கவி வேந்தன் கலியாணப் பேச்சுச் சம்பிரதாய நடைமுறைகள் வரையும் வந்தாயிற்று என்பதைக் கேள்விப்பட்ட கணத்தில் தன்னைத் தொலைத்தவள் தான், அவர்கள் பார்வையிலிருந்து தப்பியோடி குளியலைறைக்குள் புகுந்து வாய் பொத்தி குமுறியழுதிருந்தாள். சுக்கல் சுக்கலாகிப் போயிருந்த இதயம் சுவாசிக்கவே மிகவும் சிரமப்பட்டது. சின்ன இடம், வெளியில் கேட்டுவிட்டால்? அப்போதும் பயம் வேறு ஆட்டிப்படைத்தது. நீண்ட காலத்துக்குப் பின் நன்றாகவே வேதனையை உணர்ந்து நின்றாளவள்.
"முகம் கழுவிறன் எண்டு போன இலக்கியா இன்னும் வரேல்லையா?" சுகுணாவின் குரலைத் தொடர்ந்து குளியலறைக் கதவுப் பிடி அப்படியும் இப்படியும் திருப்பப்பட்டது. அதில் தான் சுற்றமுணர்ந்திருந்தாள். பட்டென்று குளிர் நீரைத் திறந்து முகத்தில் விசிறி அடித்தாள், பலதடவைகள்.
நேரே முன்னாலிருந்த நிலைக்கண்ணாடியில் தெரிந்த தன்னுருவை அவளுக்கே சுத்தமாகப் பிடிக்கவில்லை. சற்று முன்னர் உலகை வென்றுவிட்ட மகிழ்வோடு இந்த அறைக்குள் நுழைந்தவள் இவளா என்றவகையில் விழிகள் உப்பிச் சிவந்து, மூக்குக் விடைத்து, தலைகலைந்து ஒரு மாதம் தீராத வருத்தத்தில் கிடந்த கோலத்தில் நின்ற தன்னைப் பார்த்தவள் இதழ்கள் வெறுப்பில் மடிந்தன.
எப்போதுமே தன்னில் தான் தீரா அன்பு கொண்டவள், அவள். அதுவே, எல்லாம் கடந்து இத்தனை கலகலப்போடு நடமாட வைத்திருந்தது. இக்கணமோ, தன்னைத் தானே கொடுமையாக வெறுத்தாள். கடந்த சில நிமிடங்கள் வழங்கியிருந்த மிகப்பெரிய பரிசது!
பேப்பர் டவல் ஒன்றால் முகத்தை அழுந்தத் துடைத்தபடி கதவைத் திறந்தவளைப் பார்த்த மலர் நெற்றி சுருங்கியது.
"இதென்ன பிள்ள உன்ர முகம் இப்பிடி இருக்கு! காச்சல் ஏதுமா?" கழுத்தில் கைவைத்துப் பார்த்தார். ‘வந்திறங்கேக்க நல்லா நிண்டியே, இப்ப என்ன?’ என்று, சாதாரணமாக என்றால் கேட்டிருப்பார். அவர் கவனம் முழுவதும் வேந்தனில் குவிந்திருந்ததில் இவர்களை எங்கே பார்த்தார்!
'கண்ணீர்... ஒரு துளியேனும் விட்டுவிடாதே!' பெரும் அலறலோடு மனதை அதட்டி அடக்கினாள், இலக்கியா.
"ஒண்ணுமில்ல அப்பம்மா தலையிடி அதான்." இலாவகமாக நகர்ந்து, விக்சை எடுத்து நெற்றி முழுவதும் பரபரவென்று தேய்த்துக் கொண்டவளை பின்னால் சென்று கவனிக்க அவர்களுக்கு நேரமிருக்கவில்லை. மறுநாள் காலையிலேயே மலரும் சுகுணாவும் திருமண வீட்டுக்குப் போகவிருந்தார்கள். மதியம் கோவிலில் திருமணம். அதற்குப் பத்து மணிபோல் எல்லோரும் போவதாகவும் முடிவு. இரவு வரவேற்பு. அதைப் பற்றிக் கதைத்தபடி பெண்களிருக்க, ‘அடுத்த அறைக்குச் சென்று பேசாமல் படுத்திருவம்’ என்ற முடிவோடு மெல்ல வெளியில் கால்வைத்த இலக்கியா, அதேவேகத்தில் உள்ளே இழுத்துக்கொண்டாள்.
Last edited: