வேந்தன் நெற்றி மேலேறியிறங்கியது.
“நீங்க எனக்கு என்ன சொன்னீங்க? அப்பா கனடா போய்ட்டார் எண்டா, இப்ப இங்க வந்து நிக்கிறார்! பெரியக்காவுக்கும் மகனுக்கும் காய்ச்சல் அது இது எண்டிங்க எண்டா இப்பிடி வெளிக்கிட்டுக் குடும்பா வந்து நிக்கிறா! சின்னக்கா குடும்பமும் நிக்கீனம்!" கேட்டவனைப் பார்த்த ரத்னாவின் முகம் முழுதும் நகைப்பு!
"அதேன் இங்க நிண்டு கேட்கிற... வா!" கரத்தைப் பற்றியபடி விரைந்து நடந்தார்.
அவர்கள் மண்டப வாசலை அடையமுதல் உள்ளிருந்து விரைந்து வந்த்திருந்தார்கள், இலக்கியாவின் குடும்பத்தினர்! மொத்தக் குடும்பத்தின் முகத்திலும் வியப்புக் கலந்த சந்தோசம்!
வேந்தனோ சிலையாகவே நின்றுவிட்டான். "ம்மா! என்னம்மா நடக்குது இங்க?!" அவனுக்கு நம்பவே முடியாதிருந்தது. இலக்கியாவின் குடும்பத்தினர் தன் குடும்பத்தோடு வந்திணைந்து நின்ற விதத்தைப் பார்க்கையில் விசயம் இரண்டு குடும்பத்துக்கும் தெரிந்து விட்டதென்று புரிந்திட்டு, அவனுக்கு.
"ஒண்ணுமே விளங்காத மாதிரி நிக்கிறதப் பாருங்க!" செல்ல முறைப்போடு வந்து இழுத்துக்கொண்டு சென்றாள், அவன் பெரிய தமக்கை.
"ஏன் தம்பி நீங்க மட்டும் தான் சர்ப்பரைஸ் தர நினைப்பீங்களோ! எப்பிடி எங்கட சர்ப்பரைஸ்?" சின்னத் தமக்கை.
இவனோ, சங்கடத்தோடு நாதனையும் மாறனையும் பார்த்துவிட்டு இலக்கியின் தந்தையைப் பார்த்து அடக்கமாகவே முறுவலித்தான். “இங்க வரும் வரைக்கும் உங்கட சொந்தக்காரரிண்ட கலியாணத்துக்குத்தான் வாறம் எண்டு தெரியாது அங்கிள்." சொல்லவும் செய்தான்.
நாதன் வந்து இறுக அணைத்து முதுகில் தட்டிவிட்டு, “மனம் நிறைஞ்ச சந்தோசம் தம்பி!" மனதாரச் சொன்னார். அடுத்தடுத்து, சுதர்சன், மாறன், சிவா என்று கட்டியணைக்க, அவன் தமக்கைமார் சீண்டலோடு பார்த்து நின்றார்கள்.
“நல்ல ஆளணி உள்ள இடமாத்தான் பிடிச்சிருக்கிற என்னடா!" அவர்களின் முணுமுணுப்பைக் காதுகளில் வாங்கியவன் முறைத்தான்.
"அப்பா அது..." நகர்ந்து தந்தையின் கரங்களைப் பற்றிக்கொண்டான்.
"நேர்ல சொல்லுவம் எண்டு நினைச்சன். அதுக்க பெரிய பிளான் எல்லாம் போட்டு எனக்கு வேலையே இல்லாமல் செய்தாச்சு!" சொன்னவன் குரலில் மகிழ்வு துள்ளிற்று!
“அடடே ரத்னா அக்கா வாங்க வாங்க!" திருமணப்பெண்ணின் தாயான மலரின் தங்கை மகள், விரைந்து வந்து வரவேற்றார்.
"ஏன் வெளில நிக்கிறீங்க, உள்ள வாங்க!" அழைத்துக்கொண்டு நகர்ந்தவர், "இவையளைத் தெரியுமா? சுகுணா அண்ணி நீங்களே இவயளப் பார்த்துக்கொள்ளுங்கோ!" அழைத்துச் சென்று அமர்த்திவிட்டு நகர்ந்து விட்டார்.
"எப்பிடிம்மா தெரியும்? வினித்தா மதியா உளறினது? சொல்லவே இல்ல எண்டு சாதிச்சான்கள்." என்றபடி நாதனுக்கருகில் அமர்ந்து கொண்டான், வேந்தன். அவன் மறுபுறம் தந்தை. தாய். நீளமாகப் போட்டிருந்த மேசையில் இரு குடும்பங்களும் எதிரெதிரே அமர்ந்துகொண்டார்கள். அப்போதுதான் இவர்களைக் கண்டுவிட்டு விரைந்து வந்திணைந்துகொண்டாள், கவி.
வந்ததிலிருந்து அவர்களோடு கதைத்தாலும், ‘எங்க இவள்?’ அவன் விழிகளோ இலக்கியாவைத் தேடியபடி!
"அவன் மதிய நேர்ல காணட்டும் எண்டுதான் இருக்கிறன்; பொல்லாத கல்லுளிமங்கன் ஒரு வார்த்த விடேல்ல. விக்கியும் சொல்லேல்ல. நீயும் வினித்தும் கதைச்சதக் கேட்டுட்டு அவன்ட அம்மாதான் சொன்னவா." என்ற ரத்னா, "எனக்குமே பிள்ளையப் பாத்தோன்ன பிடிச்சிருந்ததுதான்." என்றவர் பார்வை தள்ளியமர்ந்திருந்த கவியில்!
"வாம்மா, இப்பிடிப் பக்கத்தில வந்திருங்க!" தன்னருகில் வெறுமையாகவிருந்த இருக்கையைக் காட்டியழைத்தார்.
நாதனோடு கதைக்க முயன்ற வேந்தன் சட்டென்று திரும்பினான், இலக்கியாவைக் கண்டுவிடும் ஆவலோடு! முதல் நாளிலிருந்து கைபேசியைக் கூடத் தொடாது கலியாணத்து வந்தவளாச்சே!
அங்கேயோ, படபடத்த விழிகளோடும் இதழ்கள் நிறைந்த முறுவலோடும் வேந்தனைப் பார்த்த படி வந்தமர்ந்தது, கவி.
பேயறைந்தது போலாகிற்று வேந்தனுக்கு. மனதளவில் கடுமையாக அதிர்ந்திருவனால் சில கணங்கள் அசையக்கூட முடியவில்லை. அவன் புத்தி வேலையே செய்யவில்லை. கவியையே பார்த்திருந்தான் போலும்.
"போதுமடா தம்பி! நாங்களும் இருக்கிறம்." எதிரிலமர்ந்திருந்த சின்னத் தமக்கையின் சீண்டல் மட்டுமல்ல இவன் காலில் ஒரு மிதி கூடப் போட்டாளவள். பட்டென்று கலைந்தவன், "அங்கிள்!" நாதனின் கரத்தை அழுந்தப்பற்றியவனுக்கு வார்த்தைகள் வரேனென்றது.
‘அம்மா என்ன செய்து வச்சிருக்கிறீங்க?’ மனதுள் அலறியபடி தாய் புறம் பார்த்து முறைத்தான். அவன் மாற்றத்தை எல்லோருமே அவதானித்தார்கள். கவியுட்பட! இதுவரை தன்னை அவன் விரும்பவில்லை என்பது அவளுக்கு ஓரளவு தெரியும். அது எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. வீட்டினர் 'இவள் உனக்கானவள்' என்று கைகாட்டும் போது மறுக்கக் காரணம் இருக்காதென்றே நினைத்திருந்தாள். அதுபார்த்தால்...இவ்வளவு அதிர்வு ஏன்? உனக்கே உனக்கென்று நீட்டிப் பிடித்த பொருள் கைக்கெட்டும் தூரம் வந்து பட்டென்று விலகிவிட்ட உணர்வின் தாக்கத்தில் இருந்தாளாவள்.
மீண்டும் நாதனிடம் திரும்பியவன், "ஒரு நிமிசம் அங்கிள், வாறிங்களா?" எழுந்துவிட்டான்.
உறவினர் திருமண வீடு; கொஞ்சம் கொஞ்சமாக விருந்தினரை உள்வாங்கிக் கொண்டிருந்தது, மண்டபம்; அதற்குள் வச்சு இதை எப்படிக் கதைப்பது? 'ஐயோ!' என்றாகிற்று அவனுக்கு.
'முதல் இவள் எங்க?' மனதுள் பதற்றம் வேறு.
வேந்தனின் வேகநடைக்குத் தாக்குப் பிடிக்க முடியவில்லை, நாதனால். 'நிச்சயமாக ஏதோவொரு பிரச்சனை இருக்கு!' மனம் வேறு பதற்றத்தில் குதித்திருக்க, பின்னால் விரைந்தார்.
மண்டபத்தை விட்டு வெளியில் வந்த வேகத்தில், "அங்கிள் எப்படிச் சொல்ல எண்டே தெரியேல்ல. அம்மாவே பிழையா விளங்கி...பச்! வினித்ட அம்மா அரைகுறையா எதையோ சொல்லிப்போட்டா போல! இது எங்கட வாழ்க்கை. முறையா ரெண்டு குடும்பத்திட்டையும் சொல்லிச் செய்யவேணும் எண்டுதான் அவ்வவளவு பொறுத்திருந்தது. வெளிக்கிட்ட பயணம் நல்ல படியா முடியட்டும் எண்டு நாள்கள எண்ணிக்கொண்டு காத்திருந்தம் அங்கிள்!" சொன்னவன் கண்கள் கலங்கிற்று.
‘பிழையா விளங்கியது எண்டால் என்ன அர்த்தம்?’ நாதன் முகம் இறுக்கத்துக்குப் போயிருந்தது. அதை அவன் பொருட்படுத்தவில்லை.
"நானும் இலக்கியாவும் ஒருத்தர ஒருத்தர் விரும்பிறம் அங்கிள்." தொடங்கியவன், படபடவென்று ஒரே முச்சில் கொட்டிவிட்டான். இதை நாதனோ, இவர்கள் பின்னாலேயே எழுந்து வந்த அவர் சகோதர்களோ சற்றுமே எதிர்பார்க்கவில்லை என்றது அவர்கள் அதிர்வில் நின்ற நிலை.
நாதனின் பார்வை தன் பின்னால் செல்லத் திரும்பிப் பார்த்தான் வேந்தன். அவர்கள் நின்ற நிலையில் மிகவுமே அந்தரப்பட்டுவிட்டான்.
" அம்மா ஆக்கள் இப்பிடியெல்லாம் அவசரப்பட்டு உங்கட வீட்டில கதைப்பினம் எண்டு நான் கனவிலும் நினைகேல்ல! சொறி எண்டெல்லாம் ஈசியாச் சொல்லவும் முடியேல்ல! கவி...எனக்கு நல்லதொரு ஃபிரெண்ட், அதையும் விட என்ர இலக்கியாவிட சகோதரி. உங்கள் எல்லாரையுமே அப்பிடித்தான் நான் பார்த்தன். அடிக்கடி என்ர குடும்பத்தோட வாற உணர்வு எண்டு சொன்னது எல்லாமே அதை மனதில வச்சுத்தான்."
“நீங்க எனக்கு என்ன சொன்னீங்க? அப்பா கனடா போய்ட்டார் எண்டா, இப்ப இங்க வந்து நிக்கிறார்! பெரியக்காவுக்கும் மகனுக்கும் காய்ச்சல் அது இது எண்டிங்க எண்டா இப்பிடி வெளிக்கிட்டுக் குடும்பா வந்து நிக்கிறா! சின்னக்கா குடும்பமும் நிக்கீனம்!" கேட்டவனைப் பார்த்த ரத்னாவின் முகம் முழுதும் நகைப்பு!
"அதேன் இங்க நிண்டு கேட்கிற... வா!" கரத்தைப் பற்றியபடி விரைந்து நடந்தார்.
அவர்கள் மண்டப வாசலை அடையமுதல் உள்ளிருந்து விரைந்து வந்த்திருந்தார்கள், இலக்கியாவின் குடும்பத்தினர்! மொத்தக் குடும்பத்தின் முகத்திலும் வியப்புக் கலந்த சந்தோசம்!
வேந்தனோ சிலையாகவே நின்றுவிட்டான். "ம்மா! என்னம்மா நடக்குது இங்க?!" அவனுக்கு நம்பவே முடியாதிருந்தது. இலக்கியாவின் குடும்பத்தினர் தன் குடும்பத்தோடு வந்திணைந்து நின்ற விதத்தைப் பார்க்கையில் விசயம் இரண்டு குடும்பத்துக்கும் தெரிந்து விட்டதென்று புரிந்திட்டு, அவனுக்கு.
"ஒண்ணுமே விளங்காத மாதிரி நிக்கிறதப் பாருங்க!" செல்ல முறைப்போடு வந்து இழுத்துக்கொண்டு சென்றாள், அவன் பெரிய தமக்கை.
"ஏன் தம்பி நீங்க மட்டும் தான் சர்ப்பரைஸ் தர நினைப்பீங்களோ! எப்பிடி எங்கட சர்ப்பரைஸ்?" சின்னத் தமக்கை.
இவனோ, சங்கடத்தோடு நாதனையும் மாறனையும் பார்த்துவிட்டு இலக்கியின் தந்தையைப் பார்த்து அடக்கமாகவே முறுவலித்தான். “இங்க வரும் வரைக்கும் உங்கட சொந்தக்காரரிண்ட கலியாணத்துக்குத்தான் வாறம் எண்டு தெரியாது அங்கிள்." சொல்லவும் செய்தான்.
நாதன் வந்து இறுக அணைத்து முதுகில் தட்டிவிட்டு, “மனம் நிறைஞ்ச சந்தோசம் தம்பி!" மனதாரச் சொன்னார். அடுத்தடுத்து, சுதர்சன், மாறன், சிவா என்று கட்டியணைக்க, அவன் தமக்கைமார் சீண்டலோடு பார்த்து நின்றார்கள்.
“நல்ல ஆளணி உள்ள இடமாத்தான் பிடிச்சிருக்கிற என்னடா!" அவர்களின் முணுமுணுப்பைக் காதுகளில் வாங்கியவன் முறைத்தான்.
"அப்பா அது..." நகர்ந்து தந்தையின் கரங்களைப் பற்றிக்கொண்டான்.
"நேர்ல சொல்லுவம் எண்டு நினைச்சன். அதுக்க பெரிய பிளான் எல்லாம் போட்டு எனக்கு வேலையே இல்லாமல் செய்தாச்சு!" சொன்னவன் குரலில் மகிழ்வு துள்ளிற்று!
“அடடே ரத்னா அக்கா வாங்க வாங்க!" திருமணப்பெண்ணின் தாயான மலரின் தங்கை மகள், விரைந்து வந்து வரவேற்றார்.
"ஏன் வெளில நிக்கிறீங்க, உள்ள வாங்க!" அழைத்துக்கொண்டு நகர்ந்தவர், "இவையளைத் தெரியுமா? சுகுணா அண்ணி நீங்களே இவயளப் பார்த்துக்கொள்ளுங்கோ!" அழைத்துச் சென்று அமர்த்திவிட்டு நகர்ந்து விட்டார்.
"எப்பிடிம்மா தெரியும்? வினித்தா மதியா உளறினது? சொல்லவே இல்ல எண்டு சாதிச்சான்கள்." என்றபடி நாதனுக்கருகில் அமர்ந்து கொண்டான், வேந்தன். அவன் மறுபுறம் தந்தை. தாய். நீளமாகப் போட்டிருந்த மேசையில் இரு குடும்பங்களும் எதிரெதிரே அமர்ந்துகொண்டார்கள். அப்போதுதான் இவர்களைக் கண்டுவிட்டு விரைந்து வந்திணைந்துகொண்டாள், கவி.
வந்ததிலிருந்து அவர்களோடு கதைத்தாலும், ‘எங்க இவள்?’ அவன் விழிகளோ இலக்கியாவைத் தேடியபடி!
"அவன் மதிய நேர்ல காணட்டும் எண்டுதான் இருக்கிறன்; பொல்லாத கல்லுளிமங்கன் ஒரு வார்த்த விடேல்ல. விக்கியும் சொல்லேல்ல. நீயும் வினித்தும் கதைச்சதக் கேட்டுட்டு அவன்ட அம்மாதான் சொன்னவா." என்ற ரத்னா, "எனக்குமே பிள்ளையப் பாத்தோன்ன பிடிச்சிருந்ததுதான்." என்றவர் பார்வை தள்ளியமர்ந்திருந்த கவியில்!
"வாம்மா, இப்பிடிப் பக்கத்தில வந்திருங்க!" தன்னருகில் வெறுமையாகவிருந்த இருக்கையைக் காட்டியழைத்தார்.
நாதனோடு கதைக்க முயன்ற வேந்தன் சட்டென்று திரும்பினான், இலக்கியாவைக் கண்டுவிடும் ஆவலோடு! முதல் நாளிலிருந்து கைபேசியைக் கூடத் தொடாது கலியாணத்து வந்தவளாச்சே!
அங்கேயோ, படபடத்த விழிகளோடும் இதழ்கள் நிறைந்த முறுவலோடும் வேந்தனைப் பார்த்த படி வந்தமர்ந்தது, கவி.
பேயறைந்தது போலாகிற்று வேந்தனுக்கு. மனதளவில் கடுமையாக அதிர்ந்திருவனால் சில கணங்கள் அசையக்கூட முடியவில்லை. அவன் புத்தி வேலையே செய்யவில்லை. கவியையே பார்த்திருந்தான் போலும்.
"போதுமடா தம்பி! நாங்களும் இருக்கிறம்." எதிரிலமர்ந்திருந்த சின்னத் தமக்கையின் சீண்டல் மட்டுமல்ல இவன் காலில் ஒரு மிதி கூடப் போட்டாளவள். பட்டென்று கலைந்தவன், "அங்கிள்!" நாதனின் கரத்தை அழுந்தப்பற்றியவனுக்கு வார்த்தைகள் வரேனென்றது.
‘அம்மா என்ன செய்து வச்சிருக்கிறீங்க?’ மனதுள் அலறியபடி தாய் புறம் பார்த்து முறைத்தான். அவன் மாற்றத்தை எல்லோருமே அவதானித்தார்கள். கவியுட்பட! இதுவரை தன்னை அவன் விரும்பவில்லை என்பது அவளுக்கு ஓரளவு தெரியும். அது எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. வீட்டினர் 'இவள் உனக்கானவள்' என்று கைகாட்டும் போது மறுக்கக் காரணம் இருக்காதென்றே நினைத்திருந்தாள். அதுபார்த்தால்...இவ்வளவு அதிர்வு ஏன்? உனக்கே உனக்கென்று நீட்டிப் பிடித்த பொருள் கைக்கெட்டும் தூரம் வந்து பட்டென்று விலகிவிட்ட உணர்வின் தாக்கத்தில் இருந்தாளாவள்.
மீண்டும் நாதனிடம் திரும்பியவன், "ஒரு நிமிசம் அங்கிள், வாறிங்களா?" எழுந்துவிட்டான்.
உறவினர் திருமண வீடு; கொஞ்சம் கொஞ்சமாக விருந்தினரை உள்வாங்கிக் கொண்டிருந்தது, மண்டபம்; அதற்குள் வச்சு இதை எப்படிக் கதைப்பது? 'ஐயோ!' என்றாகிற்று அவனுக்கு.
'முதல் இவள் எங்க?' மனதுள் பதற்றம் வேறு.
வேந்தனின் வேகநடைக்குத் தாக்குப் பிடிக்க முடியவில்லை, நாதனால். 'நிச்சயமாக ஏதோவொரு பிரச்சனை இருக்கு!' மனம் வேறு பதற்றத்தில் குதித்திருக்க, பின்னால் விரைந்தார்.
மண்டபத்தை விட்டு வெளியில் வந்த வேகத்தில், "அங்கிள் எப்படிச் சொல்ல எண்டே தெரியேல்ல. அம்மாவே பிழையா விளங்கி...பச்! வினித்ட அம்மா அரைகுறையா எதையோ சொல்லிப்போட்டா போல! இது எங்கட வாழ்க்கை. முறையா ரெண்டு குடும்பத்திட்டையும் சொல்லிச் செய்யவேணும் எண்டுதான் அவ்வவளவு பொறுத்திருந்தது. வெளிக்கிட்ட பயணம் நல்ல படியா முடியட்டும் எண்டு நாள்கள எண்ணிக்கொண்டு காத்திருந்தம் அங்கிள்!" சொன்னவன் கண்கள் கலங்கிற்று.
‘பிழையா விளங்கியது எண்டால் என்ன அர்த்தம்?’ நாதன் முகம் இறுக்கத்துக்குப் போயிருந்தது. அதை அவன் பொருட்படுத்தவில்லை.
"நானும் இலக்கியாவும் ஒருத்தர ஒருத்தர் விரும்பிறம் அங்கிள்." தொடங்கியவன், படபடவென்று ஒரே முச்சில் கொட்டிவிட்டான். இதை நாதனோ, இவர்கள் பின்னாலேயே எழுந்து வந்த அவர் சகோதர்களோ சற்றுமே எதிர்பார்க்கவில்லை என்றது அவர்கள் அதிர்வில் நின்ற நிலை.
நாதனின் பார்வை தன் பின்னால் செல்லத் திரும்பிப் பார்த்தான் வேந்தன். அவர்கள் நின்ற நிலையில் மிகவுமே அந்தரப்பட்டுவிட்டான்.
" அம்மா ஆக்கள் இப்பிடியெல்லாம் அவசரப்பட்டு உங்கட வீட்டில கதைப்பினம் எண்டு நான் கனவிலும் நினைகேல்ல! சொறி எண்டெல்லாம் ஈசியாச் சொல்லவும் முடியேல்ல! கவி...எனக்கு நல்லதொரு ஃபிரெண்ட், அதையும் விட என்ர இலக்கியாவிட சகோதரி. உங்கள் எல்லாரையுமே அப்பிடித்தான் நான் பார்த்தன். அடிக்கடி என்ர குடும்பத்தோட வாற உணர்வு எண்டு சொன்னது எல்லாமே அதை மனதில வச்சுத்தான்."