இன்று காலை, இவளைத் தவிர எல்லோரும் திருமணத்துக்குச் சென்றிருக்கையில் கிடைத்த தனிமை, அடுத்து என்னவென்று முடிவெடுக்க வைத்திருந்தது. தன்னிலையில், தானெடுக்கும் முடிவே மிகப் பொருத்தமென்று உறுதியாக நம்பினாள், இலக்கியா.
‘விரும்பினது ரெண்டுபேரும் தானே? இப்ப நீ மட்டும் முடிவெடுத்தால் சரியா? வேந்தன் இத ஏற்றுக்கொள்வானா?" இடையிட்டது மனம்.
‘நானே விருப்பம் இல்லையெண்டு சொல்லுறன் பிறகென்ன! விருப்பம் எண்டால் ஏற்கட்டும் இல்லையோ என்னவாவும் செய்யட்டும்.' விரக்தியில் இப்படித்தான் எண்ணிக்கொண்டாள். கண்ணீர் தான் அடம்பிடித்து வெளியேறிக்கொண்டிருந்தது. தன்னில் தானே கோபப்பட்டுக்கொண்டிருந்தவள் அப்படியே ஓய்ந்து கண்ணயர்ந்துமிருந்தாள்.
கல்யாணத்துக்குச் சென்றிருந்த மாறன், நாதன் குடும்பத்தோடு கவியும் வந்தே இவளை எழுப்பியிருந்தனர்.
“நல்லா நித்திர கொண்டியாம்மா? அதான் முகம் தெளிஞ்சிருக்கு!" கழுத்தில் கைவைத்துப் பார்த்தார், ரதி.
"மாமியும் அக்காவும் உன்னக் கட்டாயம் கூட்டிக்கொண்டு வரச் சொன்னவே. ஏன் விட்டுட்டு வந்தீங்க எண்டு கொண்டு நிண்டவே." என்றார் ரதி.
"அதுதான், வேணும் எண்டால் கொஞ்ச நேரம் நிண்டுபோட்டு வரலாம், எழும்பி வெளிக்கிடு இலக்கி!" வரவேற்புக்கு அணிய எடுத்துவைத்திருந்த உடையை எடுத்து வைத்தபடி சொன்னாள், கவி.
இவள் எவ்வளவோ மறுத்தும் விடாது அழைத்தும் வந்துவிட்டார்கள்.
"கவி உங்களைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தன், நல்லவேள நேரத்துக்கே வந்திட்டிங்க. கொஞ்சம் வாங்கம்மா." வந்ததும் வராததுமாக அவளை அழைத்துச் சென்றுவிட்டார், மணப்பெண்ணின் அன்னை. தந்தையும் மலரும் அமர்ந்திருந்ததைப் பார்த்துவிட்டு அவர்களோடு சென்றமர்ந்துகொண்டாள், இவள்.
அந்த நேரம் தான் ரத்னாவின் அழைப்பு வந்தது. எடுத்துக் கதைத்த சுதர்சன், பரபரப்போடு எழுந்தார்.
“வேந்தன் ஆக்கள் எல்லாரும் வந்திருக்கீனமாம் மா! தங்கச்சிக்கு வேந்தனட அம்மா நல்ல சிநேகிதியாம். இன்னும் தங்களுக்கு விசயம் தெரியும் போல காட்டிக்கொள்ளேல்லையாம். வேந்தன் சொல்ல வர வர ஒரு மாதிரி தவிர்த்திட்டுக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாவாம்!" பரபரத்த சுதர்சனம், குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு வாசல் நோக்கி நகர, அப்படியே அதிர்வோடு அமர்ந்திருந்தாள், இலக்கியா.
'இப்ப இங்க வச்சு என்ன நடக்கப் போகுது!' அவள் நெஞ்சு படீர் படீரென்று அடித்துக்கொண்டது. ‘மொத்த உறவுகளின் முன்னால குடும்பத்துக்கே அவமானம் வந்திருமோ!’ உடலில் நடுக்கமோடியது.
‘வேந்தன்ட அம்மா கவியப் பெண் எண்டு காட்ட, வேந்தன் என்ன சும்மாவா இருப்பார்? உனக்கும் எனக்குமிடையில் ஏதுமில்லையென்று சொல்லவேண்டும் என்ற முடிவோடுதான் இருந்தாள். அதற்கிடையில் இங்க வரும்படியாகிட்டு. இப்போ!
எழுந்து வாசல்புறமாக நடந்தாள். அப்போதுதான், வேந்தனை ஒரு இளம்பெண் கைபிடித்து இழுத்து வருவதைக் கண்டாள். 'வேந்தன்ட அக்கா போல இருக்கே!' புகைப்படத்தில் அவன் காட்டியதாக ஒரு நினைவு.
மெல்ல ஓரமாக வந்து நின்று அவதானித்தாள். இரு பக்கக் குடும்பத்திலும் அத்தனை மகிழ்வு! பரபரப்போடு வந்திணைந்த கவியைக் கேட்கவே வேணாம், மலர்ந்து நின்றாள்.
வேந்தன் முகத்தில் கூட உச்சபட்ச வியப்பே! 'கவி பக்கம் கைகாட்டப்படும் போது?’ எண்ணியவள் நயனங்களில் நீர் முத்துக் கோர்வைகள் உதிர்ந்தன. மனதோடு துவண்டு நிற்கவில்லை, கால்கள். அருகிலிருந்த கதவால் வெளியேறியிருந்தாள், இலக்கியா.
வாகனச் சாரதி அங்கு தான் நின்றுகொண்டிருந்தார். "அங்கிள் ஹோட்டலில விடுறிங்களா?" கேட்டவள் முகம் பார்த்துவிட்டு எதையும் கேட்காது சாரதியாசனத்தை நிறைத்தாரவர்.
வாகனம் மண்டபம் விட்டு வெளியில் வந்து சில நிமிடங்களில் மாறனுக்கழைத்துச் சொன்னாள்.
அடுத்து?
கடந்த இரு கிழமைகளில் எத்தனையோ தடவைகள் அவனுக்குக் குறுஞ்செய்திகளைத் தட்டியனுப்பியுள்ளாள், இவள்; அப்போதெல்லாம், பெரும்பாலுமே அவளுதடுகள் முறுவல் வசப்பட்டிருக்கும்; இதயமோ, சந்தோசக்குமிழிகளின் ஆரவாரப் பிடியிலில் திமிறிக்கொண்டிருக்கும்; சந்தோசமோ, சீண்டலோ, கோபமோ, யார் பார்வையிலும் பட்டுவிடுமோவென்ற கள்ளத்தனமான ஆராச்சி முன்னிலையில் காவலுக்கிருக்கும்; இத்தனைக்கும் மத்தியில், தம்மிருவருக்குமிடையிலான உணர்வுகளைத் தட்டியனுப்பும் விரல்களில் நிறையவே திடமிருக்கும்.
இன்றோ, அவை சோர்வுடன் நடுங்கின; இதயம் மொத்தமும் துவண்டு கிடந்தது; உதடுகள் காய்ந்து, நாவறண்டு உடல் கனத்தது; எப்படி அவற்றைத் தட்டினாள் என்றே தெரியாது. எழுதிவிட்டதை அனுப்ப மட்டும் துளியும் யோசிக்கவில்லை; பட்டென்று ஒரே தட்டில் அனுப்பிவிட்டிருந்தது, வலக்கையின் ஆட்காட்டிவிரல்! அதேவேகத்தில் கைபேசியை அணைத்தும் விட்டாள்.
'எல்லாம் முடிஞ்சிட்டு!' விழிகளை மூடிக்கொண்டு இருக்கையில் தலைசாய்த்தவளின் சிந்தனா சக்தி மொத்தமாக வேலை நிறுத்தத்தில் இறங்கிவிட்டிருந்தது.
அடுத்த ஆறேழு நிமிடங்கள் அவளுக்கு யுகமெனக் கழிந்திருக்க, "வந்து சேர்ந்திட்டம் மா!" யன்னலில் மெல்லத் தட்டினார், சாரதி ஐயா.
“ஓ! வந்திட்டமோ!” திடுக்கிட்டு பார்த்தவள் விழிகளின் சிவப்பில் சற்றே தயங்கினாரவர். "உங்களுக்கு...நீங்க ஓகே தானே? ஏதாவது வேணுமா? இல்லை, நான் திரும்பிப் போகலாமா?" கேட்டார். மிகவும் வேண்டிய உறவினர்கள் என்று வேந்தன் சொல்லியிருந்தானே!
"நான்...ஓகே அங்கிள். நீங்க போங்க!" முயன்று திடமாகவே சொல்லிவிட்டிறங்கியவள் சிறு தலையசைப்போடு விறுவிறுவென்று நடந்தாள்.
தம் அறையைத் திறந்த வேகத்தில் அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்டவளுக்கு, கல்யாண வரவேற்பிலிருந்து புறப்பட்டு வந்துவிட்டதைப் போல் எங்கேயாவது போக முடிந்தால் என்றிருந்தது. அதுவே, அவளுள் துளியேனும் நிம்மதி தரும் போலிருந்தது. இக்கணம், சொந்தம் சுற்றமென்று சொல்லும் எவரையும் பார்க்க விரும்பவில்லை. அவளுக்குத் தேவை தனிமை!
'எங்க போவன்?!' பொலபொலவென்று விழிகளால் வழிந்த கண்ணீரைத் துடைக்க முயலாது முன்னாலுள்ள சுவரை வெறித்தபடி அமர்ந்திருந்தாள், இலக்கியா.
'நான் அனுப்பினதப் பார்த்திட்டு 'உன்ர முகத்திலும் விழியேன்' என்ற முடிவு அவனுள் வரவேண்டும்.' மனதார வேண்டவும் செய்தாள். ஒருவேளை நாங்கள் காதலிக்கிறம் என்றது அவனால் வெளிவந்துவிட்டாலும், 'நான் கடைசிவரை இப்பச் சொன்னதிலிருந்து மாறப்போறதில்ல!' உறுதி கொண்டது மனம். அதைத் தக்க வைக்க வேண்டுமே! மிகையாகவே தவித்துப் போனாளவள். விரும்பியவனை வெறுக்கின்றேன் என்று அவன் முகத்துக்கு நேரே அடித்துச் சொல்லும் சந்தர்ப்பம் வந்துவிட்டால்!?
கொஞ்சம் தண்ணீர் குடித்தால் நல்லது போலிருந்தாலும் அவள் அசையவில்லை.
இப்படி இவள் தன்னைத் தானே வதைத்துக் கொண்டிருக்கையில் கதவு தட்டப்பட்டது. மெல்லிய தட்டுத்தான், அதிலொரு அவசரமிருந்தது. திடுக்கிட்டுவிட்டாள். கண்களை அழுந்தத் துடைத்தும் பார்த்தாள். அது எங்கே? எழுந்த வேகத்தில் மடியிலிருந்து தொப்பென்று விழுந்திட்டு கைபேசி. அதைக் கவனியாது மெல்ல நகர்ந்து சென்றவள், “ஆர் அது?” ஆங்கிலத்தில் கேட்டபடி கதவிலிருந்த சிறு துளைக் கண்ணாடி வழியே கண்வைத்துப் பார்த்தவள், மறுநொடி, மயங்கிச் சரிந்திருந்தாள்.
தடாலென்று கேட்ட சத்தத்தில் கணம் அதிர்ந்து நின்றுவிட்டான், வேந்தன். மறுநொடியே சுதாகரித்து, "இலக்கி...கதவைத் திற!" தட்டினான்.
'என்ன சத்தம் அது? இந்த அறையில்தான் கேட்டிச்சா?' சந்தேகம் கூட வந்திட்டு.
"இலக்கி!" சற்றே பலமாகத் தட்டியவனுள் இலேசான பதற்றமும்.
‘விரும்பினது ரெண்டுபேரும் தானே? இப்ப நீ மட்டும் முடிவெடுத்தால் சரியா? வேந்தன் இத ஏற்றுக்கொள்வானா?" இடையிட்டது மனம்.
‘நானே விருப்பம் இல்லையெண்டு சொல்லுறன் பிறகென்ன! விருப்பம் எண்டால் ஏற்கட்டும் இல்லையோ என்னவாவும் செய்யட்டும்.' விரக்தியில் இப்படித்தான் எண்ணிக்கொண்டாள். கண்ணீர் தான் அடம்பிடித்து வெளியேறிக்கொண்டிருந்தது. தன்னில் தானே கோபப்பட்டுக்கொண்டிருந்தவள் அப்படியே ஓய்ந்து கண்ணயர்ந்துமிருந்தாள்.
கல்யாணத்துக்குச் சென்றிருந்த மாறன், நாதன் குடும்பத்தோடு கவியும் வந்தே இவளை எழுப்பியிருந்தனர்.
“நல்லா நித்திர கொண்டியாம்மா? அதான் முகம் தெளிஞ்சிருக்கு!" கழுத்தில் கைவைத்துப் பார்த்தார், ரதி.
"மாமியும் அக்காவும் உன்னக் கட்டாயம் கூட்டிக்கொண்டு வரச் சொன்னவே. ஏன் விட்டுட்டு வந்தீங்க எண்டு கொண்டு நிண்டவே." என்றார் ரதி.
"அதுதான், வேணும் எண்டால் கொஞ்ச நேரம் நிண்டுபோட்டு வரலாம், எழும்பி வெளிக்கிடு இலக்கி!" வரவேற்புக்கு அணிய எடுத்துவைத்திருந்த உடையை எடுத்து வைத்தபடி சொன்னாள், கவி.
இவள் எவ்வளவோ மறுத்தும் விடாது அழைத்தும் வந்துவிட்டார்கள்.
"கவி உங்களைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தன், நல்லவேள நேரத்துக்கே வந்திட்டிங்க. கொஞ்சம் வாங்கம்மா." வந்ததும் வராததுமாக அவளை அழைத்துச் சென்றுவிட்டார், மணப்பெண்ணின் அன்னை. தந்தையும் மலரும் அமர்ந்திருந்ததைப் பார்த்துவிட்டு அவர்களோடு சென்றமர்ந்துகொண்டாள், இவள்.
அந்த நேரம் தான் ரத்னாவின் அழைப்பு வந்தது. எடுத்துக் கதைத்த சுதர்சன், பரபரப்போடு எழுந்தார்.
“வேந்தன் ஆக்கள் எல்லாரும் வந்திருக்கீனமாம் மா! தங்கச்சிக்கு வேந்தனட அம்மா நல்ல சிநேகிதியாம். இன்னும் தங்களுக்கு விசயம் தெரியும் போல காட்டிக்கொள்ளேல்லையாம். வேந்தன் சொல்ல வர வர ஒரு மாதிரி தவிர்த்திட்டுக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாவாம்!" பரபரத்த சுதர்சனம், குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு வாசல் நோக்கி நகர, அப்படியே அதிர்வோடு அமர்ந்திருந்தாள், இலக்கியா.
'இப்ப இங்க வச்சு என்ன நடக்கப் போகுது!' அவள் நெஞ்சு படீர் படீரென்று அடித்துக்கொண்டது. ‘மொத்த உறவுகளின் முன்னால குடும்பத்துக்கே அவமானம் வந்திருமோ!’ உடலில் நடுக்கமோடியது.
‘வேந்தன்ட அம்மா கவியப் பெண் எண்டு காட்ட, வேந்தன் என்ன சும்மாவா இருப்பார்? உனக்கும் எனக்குமிடையில் ஏதுமில்லையென்று சொல்லவேண்டும் என்ற முடிவோடுதான் இருந்தாள். அதற்கிடையில் இங்க வரும்படியாகிட்டு. இப்போ!
எழுந்து வாசல்புறமாக நடந்தாள். அப்போதுதான், வேந்தனை ஒரு இளம்பெண் கைபிடித்து இழுத்து வருவதைக் கண்டாள். 'வேந்தன்ட அக்கா போல இருக்கே!' புகைப்படத்தில் அவன் காட்டியதாக ஒரு நினைவு.
மெல்ல ஓரமாக வந்து நின்று அவதானித்தாள். இரு பக்கக் குடும்பத்திலும் அத்தனை மகிழ்வு! பரபரப்போடு வந்திணைந்த கவியைக் கேட்கவே வேணாம், மலர்ந்து நின்றாள்.
வேந்தன் முகத்தில் கூட உச்சபட்ச வியப்பே! 'கவி பக்கம் கைகாட்டப்படும் போது?’ எண்ணியவள் நயனங்களில் நீர் முத்துக் கோர்வைகள் உதிர்ந்தன. மனதோடு துவண்டு நிற்கவில்லை, கால்கள். அருகிலிருந்த கதவால் வெளியேறியிருந்தாள், இலக்கியா.
வாகனச் சாரதி அங்கு தான் நின்றுகொண்டிருந்தார். "அங்கிள் ஹோட்டலில விடுறிங்களா?" கேட்டவள் முகம் பார்த்துவிட்டு எதையும் கேட்காது சாரதியாசனத்தை நிறைத்தாரவர்.
வாகனம் மண்டபம் விட்டு வெளியில் வந்து சில நிமிடங்களில் மாறனுக்கழைத்துச் சொன்னாள்.
அடுத்து?
கடந்த இரு கிழமைகளில் எத்தனையோ தடவைகள் அவனுக்குக் குறுஞ்செய்திகளைத் தட்டியனுப்பியுள்ளாள், இவள்; அப்போதெல்லாம், பெரும்பாலுமே அவளுதடுகள் முறுவல் வசப்பட்டிருக்கும்; இதயமோ, சந்தோசக்குமிழிகளின் ஆரவாரப் பிடியிலில் திமிறிக்கொண்டிருக்கும்; சந்தோசமோ, சீண்டலோ, கோபமோ, யார் பார்வையிலும் பட்டுவிடுமோவென்ற கள்ளத்தனமான ஆராச்சி முன்னிலையில் காவலுக்கிருக்கும்; இத்தனைக்கும் மத்தியில், தம்மிருவருக்குமிடையிலான உணர்வுகளைத் தட்டியனுப்பும் விரல்களில் நிறையவே திடமிருக்கும்.
இன்றோ, அவை சோர்வுடன் நடுங்கின; இதயம் மொத்தமும் துவண்டு கிடந்தது; உதடுகள் காய்ந்து, நாவறண்டு உடல் கனத்தது; எப்படி அவற்றைத் தட்டினாள் என்றே தெரியாது. எழுதிவிட்டதை அனுப்ப மட்டும் துளியும் யோசிக்கவில்லை; பட்டென்று ஒரே தட்டில் அனுப்பிவிட்டிருந்தது, வலக்கையின் ஆட்காட்டிவிரல்! அதேவேகத்தில் கைபேசியை அணைத்தும் விட்டாள்.
'எல்லாம் முடிஞ்சிட்டு!' விழிகளை மூடிக்கொண்டு இருக்கையில் தலைசாய்த்தவளின் சிந்தனா சக்தி மொத்தமாக வேலை நிறுத்தத்தில் இறங்கிவிட்டிருந்தது.
அடுத்த ஆறேழு நிமிடங்கள் அவளுக்கு யுகமெனக் கழிந்திருக்க, "வந்து சேர்ந்திட்டம் மா!" யன்னலில் மெல்லத் தட்டினார், சாரதி ஐயா.
“ஓ! வந்திட்டமோ!” திடுக்கிட்டு பார்த்தவள் விழிகளின் சிவப்பில் சற்றே தயங்கினாரவர். "உங்களுக்கு...நீங்க ஓகே தானே? ஏதாவது வேணுமா? இல்லை, நான் திரும்பிப் போகலாமா?" கேட்டார். மிகவும் வேண்டிய உறவினர்கள் என்று வேந்தன் சொல்லியிருந்தானே!
"நான்...ஓகே அங்கிள். நீங்க போங்க!" முயன்று திடமாகவே சொல்லிவிட்டிறங்கியவள் சிறு தலையசைப்போடு விறுவிறுவென்று நடந்தாள்.
தம் அறையைத் திறந்த வேகத்தில் அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்டவளுக்கு, கல்யாண வரவேற்பிலிருந்து புறப்பட்டு வந்துவிட்டதைப் போல் எங்கேயாவது போக முடிந்தால் என்றிருந்தது. அதுவே, அவளுள் துளியேனும் நிம்மதி தரும் போலிருந்தது. இக்கணம், சொந்தம் சுற்றமென்று சொல்லும் எவரையும் பார்க்க விரும்பவில்லை. அவளுக்குத் தேவை தனிமை!
'எங்க போவன்?!' பொலபொலவென்று விழிகளால் வழிந்த கண்ணீரைத் துடைக்க முயலாது முன்னாலுள்ள சுவரை வெறித்தபடி அமர்ந்திருந்தாள், இலக்கியா.
'நான் அனுப்பினதப் பார்த்திட்டு 'உன்ர முகத்திலும் விழியேன்' என்ற முடிவு அவனுள் வரவேண்டும்.' மனதார வேண்டவும் செய்தாள். ஒருவேளை நாங்கள் காதலிக்கிறம் என்றது அவனால் வெளிவந்துவிட்டாலும், 'நான் கடைசிவரை இப்பச் சொன்னதிலிருந்து மாறப்போறதில்ல!' உறுதி கொண்டது மனம். அதைத் தக்க வைக்க வேண்டுமே! மிகையாகவே தவித்துப் போனாளவள். விரும்பியவனை வெறுக்கின்றேன் என்று அவன் முகத்துக்கு நேரே அடித்துச் சொல்லும் சந்தர்ப்பம் வந்துவிட்டால்!?
கொஞ்சம் தண்ணீர் குடித்தால் நல்லது போலிருந்தாலும் அவள் அசையவில்லை.
இப்படி இவள் தன்னைத் தானே வதைத்துக் கொண்டிருக்கையில் கதவு தட்டப்பட்டது. மெல்லிய தட்டுத்தான், அதிலொரு அவசரமிருந்தது. திடுக்கிட்டுவிட்டாள். கண்களை அழுந்தத் துடைத்தும் பார்த்தாள். அது எங்கே? எழுந்த வேகத்தில் மடியிலிருந்து தொப்பென்று விழுந்திட்டு கைபேசி. அதைக் கவனியாது மெல்ல நகர்ந்து சென்றவள், “ஆர் அது?” ஆங்கிலத்தில் கேட்டபடி கதவிலிருந்த சிறு துளைக் கண்ணாடி வழியே கண்வைத்துப் பார்த்தவள், மறுநொடி, மயங்கிச் சரிந்திருந்தாள்.
தடாலென்று கேட்ட சத்தத்தில் கணம் அதிர்ந்து நின்றுவிட்டான், வேந்தன். மறுநொடியே சுதாகரித்து, "இலக்கி...கதவைத் திற!" தட்டினான்.
'என்ன சத்தம் அது? இந்த அறையில்தான் கேட்டிச்சா?' சந்தேகம் கூட வந்திட்டு.
"இலக்கி!" சற்றே பலமாகத் தட்டியவனுள் இலேசான பதற்றமும்.