வேந்தன், பட்டென்று எழுந்து நாதனோடு சென்ற விதம் எல்லோரையும் போல் கவியின் நெற்றியையும் சுருங்க வைத்திருந்தது. அப்படியிருக்கையில், அதில் நின்று யோசிக்க முடியாது வந்தழைத்துச் சென்றுவிட்டாள், மணப்பெண்ணின் தோழியொருத்தி.
அங்கு, அவர்கள் கேட்டதைச் செய்துகொண்டிருந்தவள் மனம் நிலையில்லாது தத்தளித்துக்கொண்டேயிருந்தது. என்னவென்று அறிந்தால்தான் நிம்மதியாக இருக்கும் என்ற கட்டத்தில், கைவேலையை அப்படியே விட்டுவிட்டு மெல்ல நழுவி முன்வாயில் நோக்கி வர, சிவாவும் மாறனும் உள்ளே நுழைந்து வேந்தனின் பெற்றோர் பக்கமும் திரும்பாது இறுகிய முகத்தோடு கடந்து செல்வதைக் கண்டவள் மேலும் குழம்பியே போனாள்.
மறுநொடியே, "ஏதோ பெரிசா நடந்திருக்கு!" முணுமுணுப்போடு வேந்தன் பெற்றோரை நோக்கிச் சென்றிருந்தாள்.
தம்மை நோக்கி வந்தவளைக் கண்டதும் தாமதிக்கவில்லை, நடந்தவற்றை ஒன்றுவிடாது கொட்டிவிட்டார், ரத்னா.
"விக்கிட அம்மா சொல்லேக்க உங்கட தங்கச்சி என்ர நினைவில் வரவே இல்லம்மா. உங்களத் தானே தம்பியோட கன தடவை கண்டிருந்தன். அதுவோ என்னவோ அப்பிடி நினைச்சுக் கதைச்சு ...பச்! எல்லாம் என்ர முட்டாள்தனம். பிள்ளையின்ர மனசையும் நல்லாவே கஷ்ட்டப்படுத்திட்டன்." அவள் கரம்பற்றி கண்ணீரோடு மன்னிப்புக் கேட்டிருந்தார்.
கேட்டிருந்த கவிதான் அவர் சொன்னவற்றை ஏற்கவே தடுமாறிப்போனாள். இதயம் அடைத்திட்டு! அப்பவே இலக்கியாவிடம் கேட்டிருந்தாளே! சந்தேகமும் பட்டிருந்தாள். முன்னப்பின்ன அறியேன் என்று சாதித்தவள், இன்று காதலிக்கிறார்களாமே! அவள் மறைக்கப்போய் இன்று தானல்லவா அந்தரப்பட்டு நிற்கவேண்டியுள்ளது! இவ்வளவும் செய்துவிட்டு, 'தன்ர விருப்பத்த மறந்து எனக்குப் பிச்சை வேறு போடுறாளாமே!' அதில் இன்னமும் கோபமேறியது, கவிக்கு.
'என்னைப்பற்றி இவள் என்ன நினைச்சுக்கொண்டாள்? ஆசைப்பட்டது வேணும் எண்டு நிக்கிறனான் தான்; அதுக்காக இன்னொருத்தியை விரும்புகிறவனையுமா? ச்சே!' அருவருப்பாக இருந்தது அவளுக்கு. தங்கை மீது அளவுக்கும் மீறிய கோபமேற்பட்டது.
'அவ்வளவு கீழ்த்தரமா என்னை நினைக்க அவள் ஆர்? இல்ல ஆர் எண்டு கேக்கிறன்?' விறுவிறுவென்று சென்று பளார் பளாரென்று இழுக்கும் ஆவேசம்!
அந்தக் கோபமே அவளைச் சுதாகரிக்க வைத்திருந்தது. சிலநாட்கள்தான் என்றாலும் வேந்தனை அவள் விரும்பினாள், மனதார! உறுதியாகத் தாயிடம் சொல்லுமளவுக்கு! அவனுக்கும் அவளுக்கும் திருமணம் என்றதில் மிகுந்த ஆனந்தத்திலிருந்தாள். சற்றுமுன் அவன் வந்திறங்கி நின்ற கணம் உரிமையோடு இரசித்தாள். இதோ இந்தக்கணம் அதுவெல்லாம் இல்லவே இல்லையாம். கடிகார நெட்டை முள் ஒரு சுற்றுச் சுற்றமுதல் இதுதான் வாழ்க்கையென்றிருந்தது அந்நியமாகியிருந்தது. முகத்திலறைந்த உண்மை இதயத்திலும் விழுந்ததுதான். இல்லையென்று சாதிக்கப்போவதில்லை. அதற்காக, வெட்ட வெளிச்சமாகக் கிடக்கும் உண்மையை மறுக்கவும் மாட்டாள்.
நிமிர்ந்து நின்று வேந்தனின் பெற்றோர்களை நேருக்கு நேராகப் பார்த்துத் தேற்றினாள்.
"அய்யோ ஆன்ட்டி, இப்ப என்ன நடந்திட்டு எண்டு நீங்க இப்பிடி நிக்கிறிங்க? இதில எல்லாம் என்ன இருக்கு? யோசிச்சுப் பார்த்தா ஆரிலும் பிழ இல்ல. விடுங்கோ விடுங்கோ!" அவரைக் கட்டிப் பிடித்து ஆறுதல் சொன்னாள்.
"நாம விரும்பிறது எல்லாம் எல்லா நேரத்திலும் கிடைக்காது தானே ஆன்ட்டி. அதுக்குப் போய் நீங்க மன்னிப்பு அது இதெண்டு கொண்டு" உரிமையோடு கண்டித்தவள், அவர் விழிகளால் கண்ணீரைத் தள்ள வைத்து விட்டாள்.
“எப்படி இருந்தாலும் நீங்க எனக்கு மாமி. சொந்தம் சொந்தம் தான்."
ரத்னா அழுதே விட்டார். வேந்தனின் தந்தைக்குக் கூட கண்கள் கலங்கிப் போயின.
‘இப்பிடி ஒரு தங்கமான மருமகள் எனக்குக் கிடைக்கேல்லையே!’ ஏக்கமோட, “எனக்கு இன்னொரு மகன் இல்லையே எண்டு இப்பக் கவலையா இருக்கம்மா!" அவளை இறுகக் கட்டிப் பிடித்தபடி சொன்னார் ரத்னா. கலங்கிய விழிகளை அவர் பார்வையில் படாது மறைக்க முடியவில்லை, கவியால்.
மகள், வாசலில் நின்று இவர்களோடு கதைப்பதைக் கண்டுவிட்டு வந்திருந்த சுகுணா நடந்தவற்றைக் கேட்டுச் சிலையாக நின்றிருந்தார். இலக்கியாவின் செய்கையில் மனதுள் வெகுண்டு போனார்.
'எத்தனை சந்தர்ப்பங்களில சொல்லி இருக்கலாம்? இதென்ன கள்ளத்தனம்? என்ர மகள் விரும்பிறன் எண்ட உடனே சொல்லேல்லையா? ரெண்டு பேரையும் ஒரே மாதிரித்தானே வளத்தன். இண்டைக்கு என்ர மகள் மனமுடைஞ்சு அதை மறைச்சுக்கொண்டு நிக்கிறது மாதிரிச் செய்து போட்டாள்.' மனதுள் கொந்தளித்ததை வெளியில் காட்டாதிருக்கப் பெரும் பாடுபட்டுவிட்டாரவர்.
தாயைக் கண்டதும் அவர் நின்ற நிலையிலேயே தாம் கதைத்தவற்றைக் கேட்டுவிட்டார் என்று புரிந்து கொண்டாள், கவி.
"ம்மா ஒண்ணும் இல்ல நான் ஓகே!" தாயிடம் நகர்ந்தவள், அதற்குள், "நீங்க எல்லாரும் எங்களை மன்னிக்க வேணும், அவசரப்பட்டு..." சுகுணாவின் கரத்தைப் பற்றிக்கொண்டு ஆரம்பித்த வேந்தன் அன்னையை முறைத்தாள்.
"ஆன்ட்டி இப்ப உங்களுக்கு அடிதான் போடப் போறன்! கண்ணைத் துடையுங்கோ, என்ன ஏதெண்டு ஆரும் வந்து கேட்க முதல் உள்ள வந்திருங்கோ!" கண்களைத் துடைத்தவரை கை பிடித்து அழைத்துச் சென்று முதலிருந்த இடத்தில் அமர்த்த, "என்னப்பா நடந்திட்டு? ஏதாவது பிரச்சினையோ?" கேட்ட மனைவிமாருக்கு, "கலியாணம் முடியவிட்டுக் கதைப்பம்." என்ற மாறனும் சிவாவும் அவளையே தான் பார்த்திருந்தார்கள். அவள்தான் ஒருவரையும் பார்க்கவில்லை.
"எங்க இந்த அம்மா, பார்த்திட்டு வாறன் இருங்கோ!" நகர்ந்தவள் கரத்தைப் பற்றி நிறுத்தினார், ரத்னா.
"இந்தாங்க இது உங்களுக்கு எண்டு நான் பாத்துப் பாத்து வாங்கினது." வரும் போது கொண்டு வந்த பரிசுப்பொருள் வேந்தன் கையிலிருந்து அவன் பெரிய தமக்கை கைக்குப் போய் மேசைக்கு வந்திருந்தது. அதையெடுத்து அவள் கரத்தில் கொடுத்த போது கொடுத்தவரினதும் வாங்கினவளினதும் விழிகள் கலங்கிமுட்டிப் போயின.
"தாங்க்ஸ் ஆன்ட்டி!" சொல்லிவிட்டு நிற்காது நகர்ந்தவள் தாயை நாடிச் சென்றாள்.
அவரோ, இறுகிப்போன முகத்தோடு கைபேசியில் கதைத்துக்கொண்டிருந்தவர் மகளைக் கண்டதும் அழைப்பைத்துண்டித்துவிட்டு என்ன கதைப்பதென்று புரியாது அவளை அணைத்துக் கொண்டார்.
'உன்ர விருப்பத்த என்னட்டச் சொல்லியும் நிறைவேற்றி வைக்க முடியாமல் போய்ட்டம்மா!' மனதுள் அழுதார், சுகுணா.
"ம்மா உண்மையா எனக்கு...நான் பெரிசா எடுக்கேல்லம்மா விடுங்கோ!" கவி.
"போற வாறா சனம் எல்லாம் பார்த்துக்கொண்டு போகுது உள்ள வாங்க, எங்க அப்பாவும் நாதன் சித்தப்பாவும்? ஆரூரனும் கண்ணில படேல்ல!" சுற்றிலும் விழிகளை ஓட்டியபடி கேட்டவள், தனக்குக் கவலையில்லை என்றமாதிரி நடிக்கிறாள் என்றே பட்டது சுகுணாவுக்கு.
மகளை இந்தளவுக்கு தர்மசங்கடமான நிலையில் நிறுத்தியது இலக்கியாதானே! அவளில் கோபம் அதிகரித்துக்கொண்டே போயிற்று!
"அங்க அறைக்குப் போன இலக்கியா மயங்கி விழுந்திட்டாளாம். அப்பாக்கு எடுத்தனான், சொன்னார். இந்தப் பிள்ளை இன்னும் என்ன என்ன நாடகம் போடப் போகுதோ!" கோபத்தோடு சொன்னவர் கரத்தைப் பற்றி, "மயங்கிப் போட்டாளோ! ஏன் என்ன நடந்திட்டு? வாங்க, பக்கத்தில தானே போய்ப் பார்த்திட்டு வந்திருவம்." அதுவரை இலக்கியிலிருந்து கோபம் எங்கு போனதென்று தெரியவில்லை, பரபரத்தாள் கவி.
அங்கு, அவர்கள் கேட்டதைச் செய்துகொண்டிருந்தவள் மனம் நிலையில்லாது தத்தளித்துக்கொண்டேயிருந்தது. என்னவென்று அறிந்தால்தான் நிம்மதியாக இருக்கும் என்ற கட்டத்தில், கைவேலையை அப்படியே விட்டுவிட்டு மெல்ல நழுவி முன்வாயில் நோக்கி வர, சிவாவும் மாறனும் உள்ளே நுழைந்து வேந்தனின் பெற்றோர் பக்கமும் திரும்பாது இறுகிய முகத்தோடு கடந்து செல்வதைக் கண்டவள் மேலும் குழம்பியே போனாள்.
மறுநொடியே, "ஏதோ பெரிசா நடந்திருக்கு!" முணுமுணுப்போடு வேந்தன் பெற்றோரை நோக்கிச் சென்றிருந்தாள்.
தம்மை நோக்கி வந்தவளைக் கண்டதும் தாமதிக்கவில்லை, நடந்தவற்றை ஒன்றுவிடாது கொட்டிவிட்டார், ரத்னா.
"விக்கிட அம்மா சொல்லேக்க உங்கட தங்கச்சி என்ர நினைவில் வரவே இல்லம்மா. உங்களத் தானே தம்பியோட கன தடவை கண்டிருந்தன். அதுவோ என்னவோ அப்பிடி நினைச்சுக் கதைச்சு ...பச்! எல்லாம் என்ர முட்டாள்தனம். பிள்ளையின்ர மனசையும் நல்லாவே கஷ்ட்டப்படுத்திட்டன்." அவள் கரம்பற்றி கண்ணீரோடு மன்னிப்புக் கேட்டிருந்தார்.
கேட்டிருந்த கவிதான் அவர் சொன்னவற்றை ஏற்கவே தடுமாறிப்போனாள். இதயம் அடைத்திட்டு! அப்பவே இலக்கியாவிடம் கேட்டிருந்தாளே! சந்தேகமும் பட்டிருந்தாள். முன்னப்பின்ன அறியேன் என்று சாதித்தவள், இன்று காதலிக்கிறார்களாமே! அவள் மறைக்கப்போய் இன்று தானல்லவா அந்தரப்பட்டு நிற்கவேண்டியுள்ளது! இவ்வளவும் செய்துவிட்டு, 'தன்ர விருப்பத்த மறந்து எனக்குப் பிச்சை வேறு போடுறாளாமே!' அதில் இன்னமும் கோபமேறியது, கவிக்கு.
'என்னைப்பற்றி இவள் என்ன நினைச்சுக்கொண்டாள்? ஆசைப்பட்டது வேணும் எண்டு நிக்கிறனான் தான்; அதுக்காக இன்னொருத்தியை விரும்புகிறவனையுமா? ச்சே!' அருவருப்பாக இருந்தது அவளுக்கு. தங்கை மீது அளவுக்கும் மீறிய கோபமேற்பட்டது.
'அவ்வளவு கீழ்த்தரமா என்னை நினைக்க அவள் ஆர்? இல்ல ஆர் எண்டு கேக்கிறன்?' விறுவிறுவென்று சென்று பளார் பளாரென்று இழுக்கும் ஆவேசம்!
அந்தக் கோபமே அவளைச் சுதாகரிக்க வைத்திருந்தது. சிலநாட்கள்தான் என்றாலும் வேந்தனை அவள் விரும்பினாள், மனதார! உறுதியாகத் தாயிடம் சொல்லுமளவுக்கு! அவனுக்கும் அவளுக்கும் திருமணம் என்றதில் மிகுந்த ஆனந்தத்திலிருந்தாள். சற்றுமுன் அவன் வந்திறங்கி நின்ற கணம் உரிமையோடு இரசித்தாள். இதோ இந்தக்கணம் அதுவெல்லாம் இல்லவே இல்லையாம். கடிகார நெட்டை முள் ஒரு சுற்றுச் சுற்றமுதல் இதுதான் வாழ்க்கையென்றிருந்தது அந்நியமாகியிருந்தது. முகத்திலறைந்த உண்மை இதயத்திலும் விழுந்ததுதான். இல்லையென்று சாதிக்கப்போவதில்லை. அதற்காக, வெட்ட வெளிச்சமாகக் கிடக்கும் உண்மையை மறுக்கவும் மாட்டாள்.
நிமிர்ந்து நின்று வேந்தனின் பெற்றோர்களை நேருக்கு நேராகப் பார்த்துத் தேற்றினாள்.
"அய்யோ ஆன்ட்டி, இப்ப என்ன நடந்திட்டு எண்டு நீங்க இப்பிடி நிக்கிறிங்க? இதில எல்லாம் என்ன இருக்கு? யோசிச்சுப் பார்த்தா ஆரிலும் பிழ இல்ல. விடுங்கோ விடுங்கோ!" அவரைக் கட்டிப் பிடித்து ஆறுதல் சொன்னாள்.
"நாம விரும்பிறது எல்லாம் எல்லா நேரத்திலும் கிடைக்காது தானே ஆன்ட்டி. அதுக்குப் போய் நீங்க மன்னிப்பு அது இதெண்டு கொண்டு" உரிமையோடு கண்டித்தவள், அவர் விழிகளால் கண்ணீரைத் தள்ள வைத்து விட்டாள்.
“எப்படி இருந்தாலும் நீங்க எனக்கு மாமி. சொந்தம் சொந்தம் தான்."
ரத்னா அழுதே விட்டார். வேந்தனின் தந்தைக்குக் கூட கண்கள் கலங்கிப் போயின.
‘இப்பிடி ஒரு தங்கமான மருமகள் எனக்குக் கிடைக்கேல்லையே!’ ஏக்கமோட, “எனக்கு இன்னொரு மகன் இல்லையே எண்டு இப்பக் கவலையா இருக்கம்மா!" அவளை இறுகக் கட்டிப் பிடித்தபடி சொன்னார் ரத்னா. கலங்கிய விழிகளை அவர் பார்வையில் படாது மறைக்க முடியவில்லை, கவியால்.
மகள், வாசலில் நின்று இவர்களோடு கதைப்பதைக் கண்டுவிட்டு வந்திருந்த சுகுணா நடந்தவற்றைக் கேட்டுச் சிலையாக நின்றிருந்தார். இலக்கியாவின் செய்கையில் மனதுள் வெகுண்டு போனார்.
'எத்தனை சந்தர்ப்பங்களில சொல்லி இருக்கலாம்? இதென்ன கள்ளத்தனம்? என்ர மகள் விரும்பிறன் எண்ட உடனே சொல்லேல்லையா? ரெண்டு பேரையும் ஒரே மாதிரித்தானே வளத்தன். இண்டைக்கு என்ர மகள் மனமுடைஞ்சு அதை மறைச்சுக்கொண்டு நிக்கிறது மாதிரிச் செய்து போட்டாள்.' மனதுள் கொந்தளித்ததை வெளியில் காட்டாதிருக்கப் பெரும் பாடுபட்டுவிட்டாரவர்.
தாயைக் கண்டதும் அவர் நின்ற நிலையிலேயே தாம் கதைத்தவற்றைக் கேட்டுவிட்டார் என்று புரிந்து கொண்டாள், கவி.
"ம்மா ஒண்ணும் இல்ல நான் ஓகே!" தாயிடம் நகர்ந்தவள், அதற்குள், "நீங்க எல்லாரும் எங்களை மன்னிக்க வேணும், அவசரப்பட்டு..." சுகுணாவின் கரத்தைப் பற்றிக்கொண்டு ஆரம்பித்த வேந்தன் அன்னையை முறைத்தாள்.
"ஆன்ட்டி இப்ப உங்களுக்கு அடிதான் போடப் போறன்! கண்ணைத் துடையுங்கோ, என்ன ஏதெண்டு ஆரும் வந்து கேட்க முதல் உள்ள வந்திருங்கோ!" கண்களைத் துடைத்தவரை கை பிடித்து அழைத்துச் சென்று முதலிருந்த இடத்தில் அமர்த்த, "என்னப்பா நடந்திட்டு? ஏதாவது பிரச்சினையோ?" கேட்ட மனைவிமாருக்கு, "கலியாணம் முடியவிட்டுக் கதைப்பம்." என்ற மாறனும் சிவாவும் அவளையே தான் பார்த்திருந்தார்கள். அவள்தான் ஒருவரையும் பார்க்கவில்லை.
"எங்க இந்த அம்மா, பார்த்திட்டு வாறன் இருங்கோ!" நகர்ந்தவள் கரத்தைப் பற்றி நிறுத்தினார், ரத்னா.
"இந்தாங்க இது உங்களுக்கு எண்டு நான் பாத்துப் பாத்து வாங்கினது." வரும் போது கொண்டு வந்த பரிசுப்பொருள் வேந்தன் கையிலிருந்து அவன் பெரிய தமக்கை கைக்குப் போய் மேசைக்கு வந்திருந்தது. அதையெடுத்து அவள் கரத்தில் கொடுத்த போது கொடுத்தவரினதும் வாங்கினவளினதும் விழிகள் கலங்கிமுட்டிப் போயின.
"தாங்க்ஸ் ஆன்ட்டி!" சொல்லிவிட்டு நிற்காது நகர்ந்தவள் தாயை நாடிச் சென்றாள்.
அவரோ, இறுகிப்போன முகத்தோடு கைபேசியில் கதைத்துக்கொண்டிருந்தவர் மகளைக் கண்டதும் அழைப்பைத்துண்டித்துவிட்டு என்ன கதைப்பதென்று புரியாது அவளை அணைத்துக் கொண்டார்.
'உன்ர விருப்பத்த என்னட்டச் சொல்லியும் நிறைவேற்றி வைக்க முடியாமல் போய்ட்டம்மா!' மனதுள் அழுதார், சுகுணா.
"ம்மா உண்மையா எனக்கு...நான் பெரிசா எடுக்கேல்லம்மா விடுங்கோ!" கவி.
"போற வாறா சனம் எல்லாம் பார்த்துக்கொண்டு போகுது உள்ள வாங்க, எங்க அப்பாவும் நாதன் சித்தப்பாவும்? ஆரூரனும் கண்ணில படேல்ல!" சுற்றிலும் விழிகளை ஓட்டியபடி கேட்டவள், தனக்குக் கவலையில்லை என்றமாதிரி நடிக்கிறாள் என்றே பட்டது சுகுணாவுக்கு.
மகளை இந்தளவுக்கு தர்மசங்கடமான நிலையில் நிறுத்தியது இலக்கியாதானே! அவளில் கோபம் அதிகரித்துக்கொண்டே போயிற்று!
"அங்க அறைக்குப் போன இலக்கியா மயங்கி விழுந்திட்டாளாம். அப்பாக்கு எடுத்தனான், சொன்னார். இந்தப் பிள்ளை இன்னும் என்ன என்ன நாடகம் போடப் போகுதோ!" கோபத்தோடு சொன்னவர் கரத்தைப் பற்றி, "மயங்கிப் போட்டாளோ! ஏன் என்ன நடந்திட்டு? வாங்க, பக்கத்தில தானே போய்ப் பார்த்திட்டு வந்திருவம்." அதுவரை இலக்கியிலிருந்து கோபம் எங்கு போனதென்று தெரியவில்லை, பரபரத்தாள் கவி.