மனம் - 7
நிலைமை கைமீறி சென்றதை உணர்ந்த ரோஷன், “வாங்க வாங்க எல்லாரும் வாங்க. நம்ம அட்சயா என்ன காரியம் பண்ணுறான்னு உங்க கண்ணால நீங்களே பாருங்க. ஏன்டா எங்க வீட்டு பொண்ணு பின்னாடி சுத்துறனு தட்டிக்கேட்ட என்னையவே இவன் அடிச்சிட்டான்.” என கதையையே மொத்தமாக மாற்றி சொன்னான்.
அங்கிருந்த சூழலில் சட்டையில்லாமல் துண்டுடன் நின்றிருந்த குருவையும் தலை கலைந்து தாவணி நழுங்கி இருந்த அட்சயாவையும் தான் அனைவரும் குறுகுறுவென கூறு போட்டனர். இவர்கள் போட்ட கூச்சலில் ஃபோன் பேசிக்கொண்டிருந்த அபிலாஷும் கீழிறங்கி வந்துவிட்டான்.
விஷயத்தை கேள்விபட்ட பரிமளம், ஆவுடையப்பன் சபாபதி, கங்கா மற்றும் பூர்ணிமா என அனைவருமே பதறியடித்து மேலே வந்தனர். அவர்களுக்கும் அங்கே என்ன நடக்கிறது என புரியவில்லை.
அதுவரை மற்றவர்களின் பார்வையில் கூனிக்குறுகி நின்றிருந்த அட்சயா பரிமளத்தை கண்டதும்,
“அம்மா..” என அவரின் கைபிடித்தவள் “ம்மா.. அம்மா இந்த ரோஷன் பொய் சொல்லுறான் ம்மா. நான் பூர்ணி கூப்பிட்டான்னு தான் இங்க வந்தேன் ஆனா இங்க வந்ததுக்கு அப்புறம் தான் எனக்கு தெரியுது. இவன் தான் என்னை பொய் சொல்லி இங்க வர வெச்சிருக்கான்.” என அழுதபடியே அட்சயா தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.
“பூர்ணிமா எதுக்கு அட்சயா. வேற யாரோ தங்கியிருக்க ரூமுக்கு உன்னை வர சொல்ல போறா? மாட்டிக்கிட்டேன்னு என் தங்கச்சி மேல பழியை போடுறீயா?” என நக்கலாக சிரித்தான் ரோஷன்.
“ம்மா நிஜமா மா. வேணும்னா என்னோட ஃபோன் கூட செக் பண்ணி பாருங்க. பூர்ணி போன்ல இருந்து தான் அவசரம்னு இந்த ரூம்க்கு வர சொல்லி மெசேஜ் வந்துச்சு.” என மொபைலை காட்டினாள்.
அதில் அனைவரின் கவனமும் பூர்ணிமாவின் பக்கம் சென்றது. சபாபதியோ அவளை குற்றம் சாட்டும் பாவனையில் பார்த்து வைத்தான். அதில் உள்ளுக்குள் எதோ உடைவது போல் பூர்ணிமாவிற்கு இருந்தது. ஆனாலும், “என்னோட ஃபோனை சார்ஜ்ல போட்டு வெச்சிருந்தேன். இப்ப ஃபோன் என்கிட்ட இல்ல..”
அனைவரும் வந்தவுடன் குளியலறைக்குள் உடை மாற்ற சென்றிருந்தான் குருபிரசாத். அவன் மாற்றிவிட்டு வெளியே வர அனைவருமே குருபிரசாத்தை தான் குற்றவாளியாக பார்த்தனர்.
அங்கே கீழ கிடந்த பூர்ணிமாவின் ஃபோனை அப்பொழுது தான் பார்ப்பது போல் எடுத்த ரோஷன். “இதோ பூரணியோட ஃபோனும் இங்க தான் இருக்கு. அப்ப இவன் தான் அட்சயாக்கு மெசேஜ் பண்ணி வர வெச்சிருக்கான்.” என தான் தப்பிப்பதற்கு ஏதேதோ காரணங்களை அடுக்கி மற்றவரை திசை திருப்பிக் கொண்டிருந்தான், ரோஷன்.
ரோஷனின் நண்பன் ஏற்பாடு செய்த ஆளோ, “எங்க வீட்டு பொண்ணுக்கு பதினெட்டு வயசு முடிஞ்சதால தப்பிச்சிருக்க டா நீ. இல்லைனா போட்சோ வழக்கு போட்டு, உன்னை உள்ள தள்ளி உனக்கு வாழ்க்கையே இல்லாம பண்ணிருப்போம்.”
குருவோ அலட்டிக் கொள்ளாமல், “இந்த பொண்ணு பெரு தான் அட்சயாவா? அதுவே எனக்கு இப்ப தான் தெரியும். அப்புறம் பூர்ணிமானு சொன்னீங்களே அது யாருன்னு கூட எனக்கு தெரியாது. போலீஸ் போவீங்களா வாங்க போகலாம். பயப்படுறதுக்கு நான் ஒரு தப்பும் செய்யலையே..” என கைகளை கட்டி அமைதியாக அதே சமயம் அழுத்தமாக உரைத்தான். அவன் நின்ற தோரணையை அவனிடம் பொய் இல்லை என உரைத்துவிட்டது.
“ஆமா ம்மா. அவங்களுக்கு என்னை யாருனே தெரியாது. அவங்க தான் என்னை ரோஷன் கிட்ட இருந்து காப்பாத்தினாங்க..” என அந்த சூழ்நிலையிலும் குருபிரசாத்திற்கு ஆதரவாக பேசிய அட்சயாவை வியந்து பார்த்தான் குருபிரசாத்.
“போதும் அட்சயா. உண்மை தெரிஞ்சிடுச்சுன்னு என்மேல பழி போட்டு இவனை காப்பாத்த நினைக்காத.” என ரோஷன் சொல்ல, அங்கிருந்த உறவினர் கூட்டம் அட்சயாவை தான் சந்தேகமாக பார்த்தனர்.
ரோஷனின் கண்ணசைவில்
கூட்டத்தில் இருந்த ஒருவர், “இவன் தான் நம்ம வீட்டு பொண்ணுகிட்ட வம்பு பண்ணிருக்கான். இவனை சும்மா விடாதீங்க..” என குருவின் அருகில் வர,
“ஒரு நிமிஷம்.” என அவர்களை தடுத்து நிறுத்தியவன், “இங்க என்ன நடந்துச்சுன்னு வெளிய இருக்க CCTV மூலமா உண்மை தெரிஞ்சிடும்.” என குரு சொன்னான்.
“இங்க மேல்மாடில CCTV வேலை செய்யாதுன்னு தெரிஞ்சே தான நீ சொல்லுற?” என குருவை ஏளனமாக கேட்டான் ரோஷன்.
“யார் சொன்னா வேலை செய்யாதுன்னு? நேத்து நைட்டே அதை ரிப்பேர் பண்ணுயாச்சு..” என உதட்டோர சிரிப்பில் சொன்னான் குருபிரசாத்.
இந்த விஷயம் ரோஷனிற்கே புதியது! அவன் நேற்று மாலையே இங்கே வந்து பார்த்திருக்க CCTV வேலை செய்யவில்லை என சொல்லியிருந்தனர். அதன் பொருட்டே யோசிக்காமல் நாச வேலையில் துணிந்து இறங்கினான். ஆனால் இப்பொழுது என்ன செய்வது என மீண்டும் குருட்டு வழியில் யோசிக்க துவங்குனான். காலம் எல்லா நேரமும் வஞ்சகர்களுக்கு வசப்படுவதில்லையே! அப்படியிருந்தால் உலகம் எப்படி இயங்கும்?
ஆளாளுக்கு தன் பெண்ணை பற்றி பேசுவதில் வேதனையடைந்த பரிமளம் அழுகையில் இருந்தார்.
“அக்கா நீயாவது என்னை நம்பு க்கா.” என சிறுப்பிள்ளையாய் அழுகையுடன் கேட்ட அட்சயாவின் ஒரு கையை கங்கா பிடித்துக்கொள்ள மற்றொரு கையை பூர்ணிமா ஆதரவாக பற்றியிருந்தாள்.
அன்று வினாத்தாளை திருத்தும் பணியாக கோபிநாத் வேறொரு பள்ளிக்கு சென்றிருந்தார். ஆகையால், கங்கா எவ்வளவு முயன்றும் கோபிநாத்தை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவர் இருந்திருந்தால் இந்த சூழ்நிலையை நிச்சயம் சரியாக கையாள்வார் என கங்காவிற்கு புரிந்தது.
அட்சயாவின் வீட்டினருக்கு அவளின் மேல் நிச்சயம் சந்தேகம் இல்லை. ஆனால் மகளை அனைவரின் முன்பும் நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தனர். அதனால் யாரையும் நம்பாமல் சபாபதியே நேராக சென்று அங்கிருந்த CCTV காட்சியை மண்டபத்தில் இருக்கும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப சொன்னான்.
நிலைமை கைமீறி சென்றதை உணர்ந்த ரோஷன், “வாங்க வாங்க எல்லாரும் வாங்க. நம்ம அட்சயா என்ன காரியம் பண்ணுறான்னு உங்க கண்ணால நீங்களே பாருங்க. ஏன்டா எங்க வீட்டு பொண்ணு பின்னாடி சுத்துறனு தட்டிக்கேட்ட என்னையவே இவன் அடிச்சிட்டான்.” என கதையையே மொத்தமாக மாற்றி சொன்னான்.
அங்கிருந்த சூழலில் சட்டையில்லாமல் துண்டுடன் நின்றிருந்த குருவையும் தலை கலைந்து தாவணி நழுங்கி இருந்த அட்சயாவையும் தான் அனைவரும் குறுகுறுவென கூறு போட்டனர். இவர்கள் போட்ட கூச்சலில் ஃபோன் பேசிக்கொண்டிருந்த அபிலாஷும் கீழிறங்கி வந்துவிட்டான்.
விஷயத்தை கேள்விபட்ட பரிமளம், ஆவுடையப்பன் சபாபதி, கங்கா மற்றும் பூர்ணிமா என அனைவருமே பதறியடித்து மேலே வந்தனர். அவர்களுக்கும் அங்கே என்ன நடக்கிறது என புரியவில்லை.
அதுவரை மற்றவர்களின் பார்வையில் கூனிக்குறுகி நின்றிருந்த அட்சயா பரிமளத்தை கண்டதும்,
“அம்மா..” என அவரின் கைபிடித்தவள் “ம்மா.. அம்மா இந்த ரோஷன் பொய் சொல்லுறான் ம்மா. நான் பூர்ணி கூப்பிட்டான்னு தான் இங்க வந்தேன் ஆனா இங்க வந்ததுக்கு அப்புறம் தான் எனக்கு தெரியுது. இவன் தான் என்னை பொய் சொல்லி இங்க வர வெச்சிருக்கான்.” என அழுதபடியே அட்சயா தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.
“பூர்ணிமா எதுக்கு அட்சயா. வேற யாரோ தங்கியிருக்க ரூமுக்கு உன்னை வர சொல்ல போறா? மாட்டிக்கிட்டேன்னு என் தங்கச்சி மேல பழியை போடுறீயா?” என நக்கலாக சிரித்தான் ரோஷன்.
“ம்மா நிஜமா மா. வேணும்னா என்னோட ஃபோன் கூட செக் பண்ணி பாருங்க. பூர்ணி போன்ல இருந்து தான் அவசரம்னு இந்த ரூம்க்கு வர சொல்லி மெசேஜ் வந்துச்சு.” என மொபைலை காட்டினாள்.
அதில் அனைவரின் கவனமும் பூர்ணிமாவின் பக்கம் சென்றது. சபாபதியோ அவளை குற்றம் சாட்டும் பாவனையில் பார்த்து வைத்தான். அதில் உள்ளுக்குள் எதோ உடைவது போல் பூர்ணிமாவிற்கு இருந்தது. ஆனாலும், “என்னோட ஃபோனை சார்ஜ்ல போட்டு வெச்சிருந்தேன். இப்ப ஃபோன் என்கிட்ட இல்ல..”
அனைவரும் வந்தவுடன் குளியலறைக்குள் உடை மாற்ற சென்றிருந்தான் குருபிரசாத். அவன் மாற்றிவிட்டு வெளியே வர அனைவருமே குருபிரசாத்தை தான் குற்றவாளியாக பார்த்தனர்.
அங்கே கீழ கிடந்த பூர்ணிமாவின் ஃபோனை அப்பொழுது தான் பார்ப்பது போல் எடுத்த ரோஷன். “இதோ பூரணியோட ஃபோனும் இங்க தான் இருக்கு. அப்ப இவன் தான் அட்சயாக்கு மெசேஜ் பண்ணி வர வெச்சிருக்கான்.” என தான் தப்பிப்பதற்கு ஏதேதோ காரணங்களை அடுக்கி மற்றவரை திசை திருப்பிக் கொண்டிருந்தான், ரோஷன்.
ரோஷனின் நண்பன் ஏற்பாடு செய்த ஆளோ, “எங்க வீட்டு பொண்ணுக்கு பதினெட்டு வயசு முடிஞ்சதால தப்பிச்சிருக்க டா நீ. இல்லைனா போட்சோ வழக்கு போட்டு, உன்னை உள்ள தள்ளி உனக்கு வாழ்க்கையே இல்லாம பண்ணிருப்போம்.”
குருவோ அலட்டிக் கொள்ளாமல், “இந்த பொண்ணு பெரு தான் அட்சயாவா? அதுவே எனக்கு இப்ப தான் தெரியும். அப்புறம் பூர்ணிமானு சொன்னீங்களே அது யாருன்னு கூட எனக்கு தெரியாது. போலீஸ் போவீங்களா வாங்க போகலாம். பயப்படுறதுக்கு நான் ஒரு தப்பும் செய்யலையே..” என கைகளை கட்டி அமைதியாக அதே சமயம் அழுத்தமாக உரைத்தான். அவன் நின்ற தோரணையை அவனிடம் பொய் இல்லை என உரைத்துவிட்டது.
“ஆமா ம்மா. அவங்களுக்கு என்னை யாருனே தெரியாது. அவங்க தான் என்னை ரோஷன் கிட்ட இருந்து காப்பாத்தினாங்க..” என அந்த சூழ்நிலையிலும் குருபிரசாத்திற்கு ஆதரவாக பேசிய அட்சயாவை வியந்து பார்த்தான் குருபிரசாத்.
“போதும் அட்சயா. உண்மை தெரிஞ்சிடுச்சுன்னு என்மேல பழி போட்டு இவனை காப்பாத்த நினைக்காத.” என ரோஷன் சொல்ல, அங்கிருந்த உறவினர் கூட்டம் அட்சயாவை தான் சந்தேகமாக பார்த்தனர்.
ரோஷனின் கண்ணசைவில்
கூட்டத்தில் இருந்த ஒருவர், “இவன் தான் நம்ம வீட்டு பொண்ணுகிட்ட வம்பு பண்ணிருக்கான். இவனை சும்மா விடாதீங்க..” என குருவின் அருகில் வர,
“ஒரு நிமிஷம்.” என அவர்களை தடுத்து நிறுத்தியவன், “இங்க என்ன நடந்துச்சுன்னு வெளிய இருக்க CCTV மூலமா உண்மை தெரிஞ்சிடும்.” என குரு சொன்னான்.
“இங்க மேல்மாடில CCTV வேலை செய்யாதுன்னு தெரிஞ்சே தான நீ சொல்லுற?” என குருவை ஏளனமாக கேட்டான் ரோஷன்.
“யார் சொன்னா வேலை செய்யாதுன்னு? நேத்து நைட்டே அதை ரிப்பேர் பண்ணுயாச்சு..” என உதட்டோர சிரிப்பில் சொன்னான் குருபிரசாத்.
இந்த விஷயம் ரோஷனிற்கே புதியது! அவன் நேற்று மாலையே இங்கே வந்து பார்த்திருக்க CCTV வேலை செய்யவில்லை என சொல்லியிருந்தனர். அதன் பொருட்டே யோசிக்காமல் நாச வேலையில் துணிந்து இறங்கினான். ஆனால் இப்பொழுது என்ன செய்வது என மீண்டும் குருட்டு வழியில் யோசிக்க துவங்குனான். காலம் எல்லா நேரமும் வஞ்சகர்களுக்கு வசப்படுவதில்லையே! அப்படியிருந்தால் உலகம் எப்படி இயங்கும்?
ஆளாளுக்கு தன் பெண்ணை பற்றி பேசுவதில் வேதனையடைந்த பரிமளம் அழுகையில் இருந்தார்.
“அக்கா நீயாவது என்னை நம்பு க்கா.” என சிறுப்பிள்ளையாய் அழுகையுடன் கேட்ட அட்சயாவின் ஒரு கையை கங்கா பிடித்துக்கொள்ள மற்றொரு கையை பூர்ணிமா ஆதரவாக பற்றியிருந்தாள்.
அன்று வினாத்தாளை திருத்தும் பணியாக கோபிநாத் வேறொரு பள்ளிக்கு சென்றிருந்தார். ஆகையால், கங்கா எவ்வளவு முயன்றும் கோபிநாத்தை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவர் இருந்திருந்தால் இந்த சூழ்நிலையை நிச்சயம் சரியாக கையாள்வார் என கங்காவிற்கு புரிந்தது.
அட்சயாவின் வீட்டினருக்கு அவளின் மேல் நிச்சயம் சந்தேகம் இல்லை. ஆனால் மகளை அனைவரின் முன்பும் நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தனர். அதனால் யாரையும் நம்பாமல் சபாபதியே நேராக சென்று அங்கிருந்த CCTV காட்சியை மண்டபத்தில் இருக்கும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப சொன்னான்.