மனம் - 9
அட்சயாவின் தொலைபேசி அழைப்பின் பெயரில் அவள் தங்கியிருந்த விடுதிக்கு குரு, அபிலாஷ் மற்றும் ஜெசிந்தாவும் சென்றுக் கொண்டிருந்தனர். வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த குருவிடம், “என்னவாம் டா. ஆச்சரியமா உன்னை வர சொல்லிருக்கா?” என்றான் அபிலாஷ்.
“எனக்கும் தெர்ல டா. ரோஷன் அவங்க ஊர்ல தான் இருக்கான் அது கன்பார்ம். எதுவும் பிரச்சனை இல்லாம கூப்பிட்டிருக்க மாட்டா..” என்ற குரு வாகனத்தை அட்சயா தங்கியிருக்கும் விடுதியின் முன் நிறுத்தினான்.
அங்கு வாசலிலே இரவுடையில் நின்றிருந்த அட்சயாவின் கண்கள் அவள் அழுதிருந்ததை பறைசாற்றியது.
காரிலிருந்து இறங்கியவர்கள் அட்சயாவின் அருகில் சென்றனர். அவர்களை பார்த்த விடுதியின் காப்பாளர். “நீங்க தான் இந்த பொண்ணுக்கு சொந்தகாரங்களா சார்? இந்த பொண்ணு கூட தங்கியிருக்க பொண்ணோட ஐஞ்சு பவுன் செய்யினை இவங்க திருடிட்டதா சொல்லுறாங்க. இவங்க கிட்ட கேட்டா இவங்க எடுக்கவே இல்லை; எனக்கு அதை பத்தி ஒண்ணுமே தெரியாதுன்னு சாதிக்குறாங்க. அந்த பொண்ணு போலீஸ் போவேன்னு மிரட்டிட்டு இருக்கா. அதான் அட்சயா கிட்ட அவளுக்கு தெரிஞ்சவங்களை கூப்பிட சொன்னேன்.” என கடகடவென சொன்னார்.
“எனக்கு அதை பத்தி எதுவும் தெரியாது..” என்றாள் அட்சயா குனிந்த தலையுடன்.
“ரூம்ல ஒழுங்கா தேடி பார்த்தீங்களா?” என்றான் குரு யோசனையுடன்.
“நல்லா பார்த்துச்சு சார். நானே நேரடியா போய் ரூம் முழுக்க தேடி பார்த்தேன். இருங்க அந்த பொண்ணையே கூப்பிடுறேன்.” என ஷீலாவை அழைத்தார். அவளின் முகத்திலும் அழுத தடம் தெரிந்தது.
வேகமாக குருவின் அருகில் வந்தவள், “நீங்க தான அன்னைக்கு இவ கூட இங்க வந்திருந்தது சார்? இவ கிட்ட சொல்லி என்னோட செயினை கொடுக்க சொல்லுங்க ப்ளீஸ். எங்க அப்பா ஆசையா வாங்கி கொடுத்தது.” என அழுதாள்.
“அட்சயா தான் பார்க்கலனு சொல்லுறாளே. அண்ட் ரூம் முழுக்க பார்த்துச்சு தான? மத்தவங்க ரூம்லயும் நீங்க நல்லா பாருங்க. தேவை இல்லாம எதுக்கு அவ மேல சந்தேகப்படுறீங்க?” என்றான் குரு.
“எல்லாரோட ரூம்லயும் பார்த்துச்சு சார். நேத்து நைட் என்னோட பில்லோக்கு கீழ தான் வெச்சிருந்தேன். காலைல காணோம். இவ மட்டும் தான் என்னோட ரூம்ல இருந்தா. அப்ப அவ மேல தான சந்தேகம் வரும்?” என அட்சயாவை முறைத்தாள் ஷீலா.
அட்சயாவிற்கு அசிங்கமாக இருந்தது. ‘திருடி’ என்ற பழியை அவளின் மீது சுமத்தி காலையில் இருந்தே இப்படி தான் அவளை கீழாக அனைவரிடமும் பேசிக் கொண்டிருக்கிறாள் ஷீலா.
“நாம ரெண்டு பேரும் ரெண்டு மாசமா ஒரே ரூம்ல ஷரிங்ல இருக்கோம். ஆனா நீ என்னையே சந்தேகப்படுறீயா?” என்ற அட்சயாவின் குரலில் உணர்வே இல்லை.
அன்று மாலை தான் அட்சயா விடுதியை காலி செய்யவிருக்கிறாள். ஆனால் இப்பொழுது இப்படி ஆகும் என அவள் சுத்தமாக நினைக்கவில்லை. இன்னும் சற்று நேரத்தில் சபாபதியும் வந்துவிடுவான். அவனிடம் என்ன சொல்வது என நினைக்க நினைக்க அவளின் கண்ணில் இருந்து கோடாக கண்ணீர் இறங்கியது.
“நீ எடுத்திருந்தா கொடுத்துடு அட்சயா. இல்லனா நா போலீஸ் போவேன்.” என ஷீலா மீண்டும் மிரட்ட தொடங்கவும் செய்யாத தப்பிற்கு அட்சயாவிற்கு பயம் வந்துவிட்டது. பழக்கமில்லாத ஊரில் போலீஸ் ஸ்டேஷன் என்றதும் பயந்தவள் நொடியும் யோசிக்காமல் தான் குருபிரசாத்திற்கு அழைத்துவிட்டாள்.
“இங்க என்ன நடக்குதுனே எனக்கு தெரியல. நிஜமா நான் அதை எடுக்கல..” என குருவை பார்த்தாள்.
அவளை அந்நிலையில் பார்க்கவே அவனுக்கு மனம் பிசைந்தது. நேற்றிரவு அணிந்திருந்த இரவுடையில் தலை கலைந்து கண்கள் கலங்கி நின்றிருந்தாள். “அழுதா சரியாகிடுமா?” என அவளின் கண்களை துடைத்தவன், “போ போய் வேற டிரஸ் மாத்திட்டு வா.” என்றவனை புரியாமல் பார்த்தாள்.
“போ.” என்றவன் ஜெசிந்தாவையும் அவளின் உடன் அனுப்பினான். சிறிது நேரம் யாருக்கோ அழைத்து பேசிக் கொண்டிருந்தான். பின் சில நிமிடங்களில் அவனுக்கும் ஓரிரு அழைப்பு வர, அதிலும் பேசிவிட்டு அவன் திரும்ப அட்சயா சுடிதார் அணிந்து வந்திருந்தாள். கூந்தலை மொத்தமாக போனி டேயிலில் அடக்கியிருந்தாள்.
“சார். நான் இங்க அவ்ளோ டென்சன்ல இருக்கேன். நீங்க கூலா இருக்கீங்க. எடுத்ததுல உங்களுக்கும் பங்கு இருக்குனு சொல்லிட்டாளா? அதான் அமைதியா இருக்கீங்களா? எனக்கு இப்பவே என்னோட செயின் வரணும். இல்லனா அவங்க எடுத்ததுக்கு மதிப்பா பணமாவது நீங்க கொடுக்கணும். இல்லைனா நான் போலீஸ் போவேன்.” என ஷீலா மீண்டும் கத்தினான்.
அபிலாஷிடம் ஏதோ சொல்லிவிட்டு அவனை அனுப்பிவைத்த குரு, “நானும் அதையே தான் சொல்லுறேன். ஐஞ்சு பவுனை சாதாரணமா விட முடியாது. உடனே போலீஸ் காம்பலைன்ட் கொடுங்க போங்க.” என்றான் அலட்டிக்கொள்ளமல்.
“என்ன சார் போலீஸ் போக மாட்டேன்னு பார்க்குறீங்களா? எதோ ரெண்டு மாசம் பழகினதால தான் இவ்ளோ நேரம் அமைதியா இருந்தேன். இருங்க இப்பவே போலீசுக்கு கால் பண்ணுறேன்..” என்றவளை தடுத்தாள் அட்சயா.
அதில் குரு அவளை முறைக்க, “நான் தான் எடுக்கலனு சொல்லுறேனே ஷீலா. அப்புறம் எதுக்கு போலீஸ் போகணும்?” என குருவிடம் திரும்பாமலே கேட்க,
“எனக்கு என்னோட நகை வேணும் இல்ல அதுக்கு இணையா காசு வேணும். அப்படியில்லனா நான் போலீஸ் போவேன். நீ தான் என்கூட இருந்த உன்மேல தான் நான் காம்பலைன்ட் கொடுப்பேன்.” என ஷீலா சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.
‘மறுபடி போலீஸ் ஸ்டேஷனா? ஒருமுறை அங்க போய் மொத்த வாழ்க்கையையும் தொலைச்சது பத்தாதா?’ என்றவளின் உடல் வெடவெடுத்தது. “பார்த்தியா போலீஸ்னு சொன்னதும் உன்னோட உடம்பு நடுங்குது. அப்ப நீ தான் அதை எடுத்திருக்க. ஒழுங்கா கொடுத்துடு அட்சயா..” என ஷீலா மீண்டும் மீண்டும் அட்சயாவின் மீதே பழியை சுமத்தினாள்.
குருவின் அருகில் சென்ற அட்சயா, “அவ கேட்குற காசை கொடுத்துடவா? ஈவ்னிங் நான் வேற ஹாஸ்டல் மாறிடுவேன். இதுக்கு அப்புறம் எந்த பிரச்சனையும் வராது தான?” என அவனின் முகத்தை பார்க்க, குரு அவளை முறைத்துக் கொண்டு இருந்தான்.
“அப்ப எதுக்கு டி எனக்கு கால் பண்ணி வர சொன்ன?” என சீறினான் குரு.
“வேற என்ன பண்ணுறது?” என திருதிருத்தவளிடம்,
“அவ சொல்ற செயினை நீ பார்த்துருக்கியா?”
“ம்ம்ம். ஒரு வாட்டி காட்டினா நான் பார்த்துருக்கேன். நேத்து நைட் அவ தூங்குறப்ப பார்த்த ஞாபகம் இல்லை.” என்றாள் அட்சயா. அன்றொருநாள் அட்சயா புடவை அணிந்த பொழுது, இந்த செய்யினை போட்டுக்கோ அட்சயா நல்லாருக்கும் என ஷீலா கொடுத்ததும் அதை அட்சயா மறுத்ததும் அவளுக்கு நினைவு வந்தது.
“அவங்களோட பேக்ல செக் பண்ணியா?”
“ஆமா.. காலைல இருந்து எங்க ரூம்ல ஒரு சின்ன இடம் கூட விடாம தேடிட்டோம்.” என அட்சயா சோர்வுடன் சொன்னாள்.
அந்நேரம் இரு காவலர்களுடன் அபிலாஷ்
அங்கே வந்தான். “இவங்க செயின் தான் காணோமாம் மேடம். என்னனு பாருங்க.” என குருவே அவர்களிடம் நேராக சொல்லிவிட்டான்.
இதனை ஷீலாவே எதிர்பார்க்கவில்லை. போலீஸ் அவர்களின் பாணியில் விசாரிக்க ஓரளவு சமாளித்தாள். பின் அவர்களின் அறைக்குள் சென்று தேட செயின் கிடைக்கவில்லை. மாறாக ஒரு அடகு கடையின் ரசீது தான் கிடைத்தது.
பின் ஷீலாவே அனைத்தையும் ஒப்புக்கொண்டாள். தொலைந்து போனதாக சொன்ன செயின் அவளின் காதலனுக்காக அடகு வைத்ததாகவும் இப்பொழுது ஊருக்கு போக நகை வேண்டும் என்றவுடன் அட்சயாவை வைத்து பணம் பறிக்க நாடகமாடியதாகவும் ஒப்புக்கொண்டாள்.
அவளின் முன்னே சென்ற அட்சயா அவளின் கன்னத்திலே ஓங்கி அறைந்தாள். காலையில் இருந்து எவ்வளவு இழிவான சொற்களையெல்லாம் அவளிடமிருந்து கேட்டிருந்தாள். “சாரி அட்சயா.. சார் ப்ளீஸ் கேஸை வாபாஸ் வாங்குங்க. எங்க வீட்டுக்கு தெரிஞ்சா நா அவ்ளோதான்.” என்றவளிடம் குரு கருணையே காட்டவில்லை.
“நீங்க ஸ்டேஷன் வந்து எழுதி கொடுங்க சார்.” என குருவிடம் சொன்ன போலீஸ் ஷீலாவுடன் முன்னே சென்றுவிட்டார்கள்.
ஏமாற்றபட்ட உணர்வில் அட்சயாவின் முகம் வெளிறி இருந்தது. “பிரச்சனைனு வந்தா ஃபேஸ் பண்ணனும். நாம தப்பிச்சா போதும்னு ஓட கூடாது.” என குரு குட்டு வைத்தான்.
“அது.. போலீஸ்னு சொன்னதும் எனக்கு பயமாகிடுச்சு. அதுக்கு தான் உங்களையும் கூப்பிட்டேன். சாரி..” என்றாள்.
அப்பொழுதே நேரம் பண்ணிரண்டை கடந்திருக்க அப்பொழுது தான் சபாபதி அங்கு வந்தான். “உங்க தங்கச்சியை பார்த்துக்கோங்க.” என்ற குரு அபிலாஷ், ஜெசிந்தாவை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான்.
நடந்ததை கேட்ட சபாபதி விடுதி உரிமையாளரிடம் சண்டையிட்டுவிட்டு அட்சயாவை அந்த விடுதியில் இருந்து மொத்தமாக அழைத்து சென்றுவிட்டான்.
இங்கு போலீஸ் ஸ்டேஷன் வந்த குருபிரசாத் ஷீலாவின் மேல் புகார் கொடுத்துவிட்டு வெளியேறினான்.
போலீஸ் ஸ்டேஷன் வரும்வரை தைரியமாக இருந்தவனுக்கு அங்கு உள்ளே போகும் பொழுதே அட்சயா சொன்னது போல் மனது பிசைந்தது. இதே போன்ற ஒரு போலீஸ் ஸ்டேஷனில் தான் அவனின் திருமணமும் முறிந்திருந்தது!
மதியத்திற்கு மேல் வீட்டிற்கு வந்தவன், குளித்து உடை மாற்றி அபிலாஷின் கட்டயத்தில் அவனின் வீட்டிலே சாப்பிட்டுவிட்டு வந்தவனுக்கு அடுத்து என்ன என புரியவில்லை.
ஒரு பிரச்சனை என்றதும் இவனை தான் அட்சயா அழைத்தாள் என்பதே அவனுக்கு இதமாக இருந்தது. ‘இன்னைக்கு கூப்பிட்டவ,
அன்னைக்கு விட்டுட்டு போனா தான..?’ என்றவனின் சிந்தனை அவன் திருமணம் புரிந்த நாளிற்கு சென்றது.
அட்சயாவின் தொலைபேசி அழைப்பின் பெயரில் அவள் தங்கியிருந்த விடுதிக்கு குரு, அபிலாஷ் மற்றும் ஜெசிந்தாவும் சென்றுக் கொண்டிருந்தனர். வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த குருவிடம், “என்னவாம் டா. ஆச்சரியமா உன்னை வர சொல்லிருக்கா?” என்றான் அபிலாஷ்.
“எனக்கும் தெர்ல டா. ரோஷன் அவங்க ஊர்ல தான் இருக்கான் அது கன்பார்ம். எதுவும் பிரச்சனை இல்லாம கூப்பிட்டிருக்க மாட்டா..” என்ற குரு வாகனத்தை அட்சயா தங்கியிருக்கும் விடுதியின் முன் நிறுத்தினான்.
அங்கு வாசலிலே இரவுடையில் நின்றிருந்த அட்சயாவின் கண்கள் அவள் அழுதிருந்ததை பறைசாற்றியது.
காரிலிருந்து இறங்கியவர்கள் அட்சயாவின் அருகில் சென்றனர். அவர்களை பார்த்த விடுதியின் காப்பாளர். “நீங்க தான் இந்த பொண்ணுக்கு சொந்தகாரங்களா சார்? இந்த பொண்ணு கூட தங்கியிருக்க பொண்ணோட ஐஞ்சு பவுன் செய்யினை இவங்க திருடிட்டதா சொல்லுறாங்க. இவங்க கிட்ட கேட்டா இவங்க எடுக்கவே இல்லை; எனக்கு அதை பத்தி ஒண்ணுமே தெரியாதுன்னு சாதிக்குறாங்க. அந்த பொண்ணு போலீஸ் போவேன்னு மிரட்டிட்டு இருக்கா. அதான் அட்சயா கிட்ட அவளுக்கு தெரிஞ்சவங்களை கூப்பிட சொன்னேன்.” என கடகடவென சொன்னார்.
“எனக்கு அதை பத்தி எதுவும் தெரியாது..” என்றாள் அட்சயா குனிந்த தலையுடன்.
“ரூம்ல ஒழுங்கா தேடி பார்த்தீங்களா?” என்றான் குரு யோசனையுடன்.
“நல்லா பார்த்துச்சு சார். நானே நேரடியா போய் ரூம் முழுக்க தேடி பார்த்தேன். இருங்க அந்த பொண்ணையே கூப்பிடுறேன்.” என ஷீலாவை அழைத்தார். அவளின் முகத்திலும் அழுத தடம் தெரிந்தது.
வேகமாக குருவின் அருகில் வந்தவள், “நீங்க தான அன்னைக்கு இவ கூட இங்க வந்திருந்தது சார்? இவ கிட்ட சொல்லி என்னோட செயினை கொடுக்க சொல்லுங்க ப்ளீஸ். எங்க அப்பா ஆசையா வாங்கி கொடுத்தது.” என அழுதாள்.
“அட்சயா தான் பார்க்கலனு சொல்லுறாளே. அண்ட் ரூம் முழுக்க பார்த்துச்சு தான? மத்தவங்க ரூம்லயும் நீங்க நல்லா பாருங்க. தேவை இல்லாம எதுக்கு அவ மேல சந்தேகப்படுறீங்க?” என்றான் குரு.
“எல்லாரோட ரூம்லயும் பார்த்துச்சு சார். நேத்து நைட் என்னோட பில்லோக்கு கீழ தான் வெச்சிருந்தேன். காலைல காணோம். இவ மட்டும் தான் என்னோட ரூம்ல இருந்தா. அப்ப அவ மேல தான சந்தேகம் வரும்?” என அட்சயாவை முறைத்தாள் ஷீலா.
அட்சயாவிற்கு அசிங்கமாக இருந்தது. ‘திருடி’ என்ற பழியை அவளின் மீது சுமத்தி காலையில் இருந்தே இப்படி தான் அவளை கீழாக அனைவரிடமும் பேசிக் கொண்டிருக்கிறாள் ஷீலா.
“நாம ரெண்டு பேரும் ரெண்டு மாசமா ஒரே ரூம்ல ஷரிங்ல இருக்கோம். ஆனா நீ என்னையே சந்தேகப்படுறீயா?” என்ற அட்சயாவின் குரலில் உணர்வே இல்லை.
அன்று மாலை தான் அட்சயா விடுதியை காலி செய்யவிருக்கிறாள். ஆனால் இப்பொழுது இப்படி ஆகும் என அவள் சுத்தமாக நினைக்கவில்லை. இன்னும் சற்று நேரத்தில் சபாபதியும் வந்துவிடுவான். அவனிடம் என்ன சொல்வது என நினைக்க நினைக்க அவளின் கண்ணில் இருந்து கோடாக கண்ணீர் இறங்கியது.
“நீ எடுத்திருந்தா கொடுத்துடு அட்சயா. இல்லனா நா போலீஸ் போவேன்.” என ஷீலா மீண்டும் மிரட்ட தொடங்கவும் செய்யாத தப்பிற்கு அட்சயாவிற்கு பயம் வந்துவிட்டது. பழக்கமில்லாத ஊரில் போலீஸ் ஸ்டேஷன் என்றதும் பயந்தவள் நொடியும் யோசிக்காமல் தான் குருபிரசாத்திற்கு அழைத்துவிட்டாள்.
“இங்க என்ன நடக்குதுனே எனக்கு தெரியல. நிஜமா நான் அதை எடுக்கல..” என குருவை பார்த்தாள்.
அவளை அந்நிலையில் பார்க்கவே அவனுக்கு மனம் பிசைந்தது. நேற்றிரவு அணிந்திருந்த இரவுடையில் தலை கலைந்து கண்கள் கலங்கி நின்றிருந்தாள். “அழுதா சரியாகிடுமா?” என அவளின் கண்களை துடைத்தவன், “போ போய் வேற டிரஸ் மாத்திட்டு வா.” என்றவனை புரியாமல் பார்த்தாள்.
“போ.” என்றவன் ஜெசிந்தாவையும் அவளின் உடன் அனுப்பினான். சிறிது நேரம் யாருக்கோ அழைத்து பேசிக் கொண்டிருந்தான். பின் சில நிமிடங்களில் அவனுக்கும் ஓரிரு அழைப்பு வர, அதிலும் பேசிவிட்டு அவன் திரும்ப அட்சயா சுடிதார் அணிந்து வந்திருந்தாள். கூந்தலை மொத்தமாக போனி டேயிலில் அடக்கியிருந்தாள்.
“சார். நான் இங்க அவ்ளோ டென்சன்ல இருக்கேன். நீங்க கூலா இருக்கீங்க. எடுத்ததுல உங்களுக்கும் பங்கு இருக்குனு சொல்லிட்டாளா? அதான் அமைதியா இருக்கீங்களா? எனக்கு இப்பவே என்னோட செயின் வரணும். இல்லனா அவங்க எடுத்ததுக்கு மதிப்பா பணமாவது நீங்க கொடுக்கணும். இல்லைனா நான் போலீஸ் போவேன்.” என ஷீலா மீண்டும் கத்தினான்.
அபிலாஷிடம் ஏதோ சொல்லிவிட்டு அவனை அனுப்பிவைத்த குரு, “நானும் அதையே தான் சொல்லுறேன். ஐஞ்சு பவுனை சாதாரணமா விட முடியாது. உடனே போலீஸ் காம்பலைன்ட் கொடுங்க போங்க.” என்றான் அலட்டிக்கொள்ளமல்.
“என்ன சார் போலீஸ் போக மாட்டேன்னு பார்க்குறீங்களா? எதோ ரெண்டு மாசம் பழகினதால தான் இவ்ளோ நேரம் அமைதியா இருந்தேன். இருங்க இப்பவே போலீசுக்கு கால் பண்ணுறேன்..” என்றவளை தடுத்தாள் அட்சயா.
அதில் குரு அவளை முறைக்க, “நான் தான் எடுக்கலனு சொல்லுறேனே ஷீலா. அப்புறம் எதுக்கு போலீஸ் போகணும்?” என குருவிடம் திரும்பாமலே கேட்க,
“எனக்கு என்னோட நகை வேணும் இல்ல அதுக்கு இணையா காசு வேணும். அப்படியில்லனா நான் போலீஸ் போவேன். நீ தான் என்கூட இருந்த உன்மேல தான் நான் காம்பலைன்ட் கொடுப்பேன்.” என ஷீலா சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.
‘மறுபடி போலீஸ் ஸ்டேஷனா? ஒருமுறை அங்க போய் மொத்த வாழ்க்கையையும் தொலைச்சது பத்தாதா?’ என்றவளின் உடல் வெடவெடுத்தது. “பார்த்தியா போலீஸ்னு சொன்னதும் உன்னோட உடம்பு நடுங்குது. அப்ப நீ தான் அதை எடுத்திருக்க. ஒழுங்கா கொடுத்துடு அட்சயா..” என ஷீலா மீண்டும் மீண்டும் அட்சயாவின் மீதே பழியை சுமத்தினாள்.
குருவின் அருகில் சென்ற அட்சயா, “அவ கேட்குற காசை கொடுத்துடவா? ஈவ்னிங் நான் வேற ஹாஸ்டல் மாறிடுவேன். இதுக்கு அப்புறம் எந்த பிரச்சனையும் வராது தான?” என அவனின் முகத்தை பார்க்க, குரு அவளை முறைத்துக் கொண்டு இருந்தான்.
“அப்ப எதுக்கு டி எனக்கு கால் பண்ணி வர சொன்ன?” என சீறினான் குரு.
“வேற என்ன பண்ணுறது?” என திருதிருத்தவளிடம்,
“அவ சொல்ற செயினை நீ பார்த்துருக்கியா?”
“ம்ம்ம். ஒரு வாட்டி காட்டினா நான் பார்த்துருக்கேன். நேத்து நைட் அவ தூங்குறப்ப பார்த்த ஞாபகம் இல்லை.” என்றாள் அட்சயா. அன்றொருநாள் அட்சயா புடவை அணிந்த பொழுது, இந்த செய்யினை போட்டுக்கோ அட்சயா நல்லாருக்கும் என ஷீலா கொடுத்ததும் அதை அட்சயா மறுத்ததும் அவளுக்கு நினைவு வந்தது.
“அவங்களோட பேக்ல செக் பண்ணியா?”
“ஆமா.. காலைல இருந்து எங்க ரூம்ல ஒரு சின்ன இடம் கூட விடாம தேடிட்டோம்.” என அட்சயா சோர்வுடன் சொன்னாள்.
அந்நேரம் இரு காவலர்களுடன் அபிலாஷ்
அங்கே வந்தான். “இவங்க செயின் தான் காணோமாம் மேடம். என்னனு பாருங்க.” என குருவே அவர்களிடம் நேராக சொல்லிவிட்டான்.
இதனை ஷீலாவே எதிர்பார்க்கவில்லை. போலீஸ் அவர்களின் பாணியில் விசாரிக்க ஓரளவு சமாளித்தாள். பின் அவர்களின் அறைக்குள் சென்று தேட செயின் கிடைக்கவில்லை. மாறாக ஒரு அடகு கடையின் ரசீது தான் கிடைத்தது.
பின் ஷீலாவே அனைத்தையும் ஒப்புக்கொண்டாள். தொலைந்து போனதாக சொன்ன செயின் அவளின் காதலனுக்காக அடகு வைத்ததாகவும் இப்பொழுது ஊருக்கு போக நகை வேண்டும் என்றவுடன் அட்சயாவை வைத்து பணம் பறிக்க நாடகமாடியதாகவும் ஒப்புக்கொண்டாள்.
அவளின் முன்னே சென்ற அட்சயா அவளின் கன்னத்திலே ஓங்கி அறைந்தாள். காலையில் இருந்து எவ்வளவு இழிவான சொற்களையெல்லாம் அவளிடமிருந்து கேட்டிருந்தாள். “சாரி அட்சயா.. சார் ப்ளீஸ் கேஸை வாபாஸ் வாங்குங்க. எங்க வீட்டுக்கு தெரிஞ்சா நா அவ்ளோதான்.” என்றவளிடம் குரு கருணையே காட்டவில்லை.
“நீங்க ஸ்டேஷன் வந்து எழுதி கொடுங்க சார்.” என குருவிடம் சொன்ன போலீஸ் ஷீலாவுடன் முன்னே சென்றுவிட்டார்கள்.
ஏமாற்றபட்ட உணர்வில் அட்சயாவின் முகம் வெளிறி இருந்தது. “பிரச்சனைனு வந்தா ஃபேஸ் பண்ணனும். நாம தப்பிச்சா போதும்னு ஓட கூடாது.” என குரு குட்டு வைத்தான்.
“அது.. போலீஸ்னு சொன்னதும் எனக்கு பயமாகிடுச்சு. அதுக்கு தான் உங்களையும் கூப்பிட்டேன். சாரி..” என்றாள்.
அப்பொழுதே நேரம் பண்ணிரண்டை கடந்திருக்க அப்பொழுது தான் சபாபதி அங்கு வந்தான். “உங்க தங்கச்சியை பார்த்துக்கோங்க.” என்ற குரு அபிலாஷ், ஜெசிந்தாவை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான்.
நடந்ததை கேட்ட சபாபதி விடுதி உரிமையாளரிடம் சண்டையிட்டுவிட்டு அட்சயாவை அந்த விடுதியில் இருந்து மொத்தமாக அழைத்து சென்றுவிட்டான்.
இங்கு போலீஸ் ஸ்டேஷன் வந்த குருபிரசாத் ஷீலாவின் மேல் புகார் கொடுத்துவிட்டு வெளியேறினான்.
போலீஸ் ஸ்டேஷன் வரும்வரை தைரியமாக இருந்தவனுக்கு அங்கு உள்ளே போகும் பொழுதே அட்சயா சொன்னது போல் மனது பிசைந்தது. இதே போன்ற ஒரு போலீஸ் ஸ்டேஷனில் தான் அவனின் திருமணமும் முறிந்திருந்தது!
மதியத்திற்கு மேல் வீட்டிற்கு வந்தவன், குளித்து உடை மாற்றி அபிலாஷின் கட்டயத்தில் அவனின் வீட்டிலே சாப்பிட்டுவிட்டு வந்தவனுக்கு அடுத்து என்ன என புரியவில்லை.
ஒரு பிரச்சனை என்றதும் இவனை தான் அட்சயா அழைத்தாள் என்பதே அவனுக்கு இதமாக இருந்தது. ‘இன்னைக்கு கூப்பிட்டவ,
அன்னைக்கு விட்டுட்டு போனா தான..?’ என்றவனின் சிந்தனை அவன் திருமணம் புரிந்த நாளிற்கு சென்றது.