அத்தியாயம்-12
காலையில் விழித்துக்கொண்ட தர்சனுக்குத் தலையைத் தலையணையில் இருந்து தூக்கக்கூட முடியவில்லை. அந்தளவுக்கு வலித்தது. கைகள் இரண்டாலும் நெற்றியைப் பற்றியபடி புரண்டவனுக்கு, அப்போதுதான் தான் தன் அறையில் இருப்பதே உறைத்தது.
‘நேற்று குடித்துவிட்டு இங்கேயா வந்தேன்?’ என்று நினைத்த மாத்திரத்தில் பதட்டத்தோடு சட்டென்று எழுந்து அமர்ந்தான். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவன் குடிப்பது தெரிந்திருக்குமா?
இருக்கிற பிரச்சினை போதாது என்று இது வேறா என்று நினைத்து, நெற்றியில் அறைந்துகொண்டான்.
வெளியே தலைகாட்டவே ஒருமாதிரி இருந்தபோதும், குளித்துத் தயாராகி வந்தவனின் மனமோ உள்ளே தயங்க, அதைக் காட்டிக்கொள்ளாது படியிறங்கினான்.
எதிரே வந்த ஆரணி, தர்சனைக் கண்டதும் புன்னகைத்தாள்.
சங்கடத்துடன் கூடிய புன்னகையைத் தானும் சிரமப்பட்டுச் சிந்தியவன், “சாரி அண்ணி..” என்றான் உள்ளே போன குரலில்.
“எதற்கு?” புருவங்கள் சுருங்கக் கேட்டாள் ஆரணி.
நேற்று குடித்துவிட்டு வந்தேன், அதற்காக என்பானா? அல்லது உங்கள் திருமணத்தின்போது இறுதிவரை என்னால் நிற்கமுடியவில்லை, அதனால் என்பானா? அல்லது இன்னதென்று தெரியாமல் குற்ற உணர்ச்சியில் துடிக்கும் மனதை சமாதானப்படுத்த என்பானா?
எதையும் வாய்விட்டுச் சொல்ல முடியாமல், “எல்லாவற்றுக்கும் தான் அண்ணி..” என்றான் பொதுவாக.
அவனைப் புரிந்து கொண்டவளாக இதமாகப் புன்னகைத்தாள் ஆரணி. “உங்கள் அண்ணாவிடம் மன்னிப்புக் கேட்பீர்களா?”
அன்று கேட்ட மன்னிப்பு நினைவலைகளில் மிதந்தபோதும், “இல்லை.. லேசில் கேட்கமாட்டேன்..” என்றான் அவன்.
“ஏன்?”
“அவன் என் அண்ணா..”
“அவர் அண்ணா என்றால் நான் உங்கள் அண்ணி. அவரில் பாதி. என்னிடமும் நீங்கள் எதற்காகவும் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை.” என்றாள் வாஞ்சையுடன்.
“தாங்க்ஸ் அண்ணி..” என்றவனை, உரிமையோடு பொய்யாக முறைத்தாள் ஆரணி.
உதட்டில் புன்னகை தானாக மலர, “ஓகே அண்ணி! நான் சொன்ன சாரி, தாங்க்ஸ்.. இரண்டையும் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன், சரியா?” என்றான் தர்சன்.
“ம்.. சரி.” என்று தலையை அசைத்துச் சொன்னவள், “குடிக்க என்ன கொண்டுவர? டீயா? காபியா?” என்று கேட்டாள்.
“எதென்றாலும் சரிதான் அண்ணி.” என்றுவிட்டு தர்சன் அகல, சமையலறைக்குச் செல்லத் திரும்பியவள் தன்னையே விழிகளால் பருகியபடி நின்ற கணவனைக் கண்டதும் முகம் சிவந்தாள்.
அதுவரை நேரமும் மனைவியும் தம்பியும் உரையாடிக் கொண்டிருந்ததை ரசித்தபடி பார்த்துக் கொண்டிருந்த அமலன், மனைவி தன்னைப் பார்ப்பதைக் கண்டதும் இதழ்களில் உதித்த ரகசியப் புன்னகையுடன் கண்களில் குறும்பு மின்ன ஒற்றைப் புருவத்தை விசமத்துடன் தூக்கினான்.
அதைக் கண்டுகொண்டவளின் முகமோ செவ்வானமாகச் சிவந்து போனது. நேற்றுவரை அந்த வீட்டையும் வீட்டு மனிதர்களையும் அன்னியமாக எண்ணியவளை இன்று என் வீடு, என் சொந்தம் என்று உரிமையோடு நினைக்க வைத்துவிட்டானே! அதுவும் ஒரே இரவில்!
அந்த உணர்வையும் உரிமையையும் கொடுத்தவன் அவளது ஆருயிர் கணவன்! அதை மட்டுமா கொடுத்தான், அவனையும் சேர்த்தல்லவா கொடுத்தான்!
அந்த நினைவு தந்த மயக்கத்தில் அதற்குமேலும் கணவனின் முன்னால் நிற்க முடியாமல் வெட்கம் பிடுங்கித் தின்ன சமையலறைக்கு விரைந்தாள் ஆரணி. வெட்கத்தில் ஓடும் மனைவியைப் பார்த்த அமலனின் முகத்தில் சந்தோசப் புன்னகை மலர்ந்தது.
அதுவரை, அந்தப் புதுமணத் தம்பதியருக்குள் நடந்த பார்வைப் பரிமாற்றத்தை கண்டும் காணததுபோல் காட்டிக்கொண்ட தர்சன் உள்ளூரச் சிரித்துக் கொண்டான்.
அண்ணனின் மணவாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கிறது என்பது விளங்கியதில், அவன் மனதில் இருந்த சுமைகளில் ஒன்று அகன்றது.
முதல்நாள் ஏன் குடித்துவிட்டு வந்தாய் என்று கேட்கப் போகிறார்களே என்று அவன் உள்ளூரக் கலங்கிக் கொண்டிருக்க, அதைப்பற்றி யாருமே அவனிடம் கேட்கவில்லை. மஞ்சுளா உட்பட!
அது தந்தையின் உத்தரவால் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்துகொண்டவனுக்கு அவரது முகத்தை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை. அவமானத்தில் குன்றிக் குறுகிப் போனான்.
அதன்பிறகு அப்படியான தர்மசங்கடமான சூழ்நிலையை அவன் உருவாக்கவே இல்லை. தொழிலே கதி என்று கிடந்தான். தூங்குவதற்கு மட்டுமே வீட்டுக்கு வந்தான்.
“ஏன் தர்சா இப்படி உன்னை நீயே வருத்திக் கொள்கிறாய்..” என்று தாயாக மஞ்சுளா புலம்பியபோது, “கொஞ்சம் வேலைமா..” என்று முடித்துவிட்டான்.
அதையே அவர் கணவரிடமும் சொல்லிப் புலம்பியபோது, “முதலில் நடந்தவைகளில் இருந்து அவன் வெளியே வரட்டும். அதற்குக் கொஞ்ச நாட்கள் பொறு.” என்று அவரும் சொல்லிவிடவே, பொறுப்பதைத் தவிர வேறு வழியின்றிப் போனது அவருக்கு.
அதோடு, இப்போதெல்லாம் வீட்டுக்கு வருகையில் அவன் நிதானத்துடன் வருவதே தற்போதைக்குப் போதுமானதாக இருந்தது.
அன்று துவைத்துக் காயவைத்து அயர்ன் செய்த தர்சனின் உடைகளை வைப்பதற்காக அவனின் அறைக்கு எடுத்துச் சென்றார் மகேஸ்வரி.
அந்த அறைக்குள் சென்றவருக்கு, வெண்பாவின் அனைத்துப் பொருட்களும் அகற்றப்பட்டு இருப்பதைக் கண்டதும் நெஞ்சுக்குள் வலித்தது. மகள் மேல் ஆத்திரமும் கோபமும் இருந்தாலும், இப்போது எப்படி எங்கே இருக்கிறாளோ என்கிற கவலையும் அவரை அரிக்காமலில்லை!
ஆனாலும், அவளைத் தேடிப்போக மனம் இடம் கொடுக்கவில்லை. மனதைக் கல்லாக்கிக்கொண்டு அவனின் ஆடைகளைக் கப்போர்ட்டுக்குள் வைத்துவிட்டுத் திரும்பியவரின் விழிகளில் கட்டிலுக்குக் கீழே கிடந்த போத்தல்கள் சிக்கின.
அதைப் பார்த்ததும் அதிர்ந்துபோனார். வீட்டிலிருக்கும் அனைவரும் அவன் குடிப்பதை நிறுத்திவிட்டான் என்று நினைத்திருக்க, அவனோ யாருக்கும் தெரியாமல் அறையில் வைத்துக் குடிக்கிறான் என்று தெரிந்த மாத்திரத்தில், அவனை இந்த நிலைக்கு ஆளாக்கிய மகள் மேல் இன்னும் கோபம் வந்தது.
அதோடு, பகல் முழுவதும் வேலை என்கிற பெயரில் தன்னை வருத்திக் கொள்பவன் இரவில் குடித்து உடம்பைக் கெடுக்கிறானே.. இவனை இப்படியே விடக்கூடாது என்று எண்ணினார். அதோடு, மகள் செய்த தப்புக்கு அவன் தண்டனை அனுபவிப்பதா? அதை அவர் பார்த்துக்கொண்டு இருப்பதா?
ஒரு முடிவோடு அந்த அறையை விட்டு வெளியேறினார் மகேஸ்வரி.
அன்று விடுமுறை முடிந்து மீண்டும் ஆரம்பித்து இருந்தது அந்தப் பள்ளிக்கூடம். சாதாரணத் தரத்தில்(ப்ளஸ் வன்) சித்தியெய்திய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களும்(ப்ளஸ் டூ) அன்று புதிதாக ஆரம்பம் ஆனது.
ஆங்காங்கே கும்பல் கும்பலாக மாணவியர் கூடியிருக்க, தோழிகளான திவ்யா, தேவி, உமா மூவரும் உற்சாகமாக எதையெதையோ சலசலத்துக் கொண்டிருந்தனர்.
“அங்கே பாருங்கடி, தீபா வருகிறாள்..” பள்ளிக்கூட வாசலிலேயே ஒரு கண்ணை வைத்திருந்த திவ்யா சொல்லவும், எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்.
தீபாவும் தங்களை விழிகளால் தேடுவதைக் கண்டுகொண்டவர்கள், “ஹேய் தீபா.. இங்கே வாடி. நாங்கள் இங்கே இருக்கிறோம்.” என்று கைகளை உயர்த்திக்காட்டிக் கூவினர்.
இவர்களைக் கண்டுகொண்ட அவளும், “ஹேய்…!” என்றபடி ஓடிவந்தாள்.
அவளோடு இன்னொரு பெண்ணும் வருவதைக் கவனித்த தோழிகள், “யாருடி அது? புதிதாக இருக்கிறாளே..” என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர்.
“பொறு, அவளையே கேட்கலாம்..” என்றாள் உமா.
“எல்லோரும் எப்படிடி இருக்கிறீர்கள்?” என்றபடி தோழிகளைக் கட்டிக்கொண்டாள் தீபா.
யாழ்பாணத்தில் இருக்கும் அவளின் சித்தி வீட்டுக்குத் தீபா சென்றிருந்ததில் விடுமுறையின்போது சந்திக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டவே இல்லை. எனவே விசாரித்தாள்.
“எங்களுக்கு என்ன, எல்லோரும் நன்றாக இருக்கிறோம். நீ என்னடி, கொஞ்சம் உடம்பு வைத்துவிட்ட மாதிரி இருக்கே?”
“ஆமாம்டி. இந்தச் சித்தி எப்போ பார் எதையாவது என் வாயில் திணித்துக் கொண்டே இருப்பார். பிறகு எப்படி உடம்பு வைக்காமல் இருக்கும்..”
“விடு விடு.. இப்போவும் தளதளத் தக்காளிப்பழம் மாதிரி அழகாத்தான்டி இருக்கிறாய்..” என்று வாரினாள் உமா.
“உன்னை..” என்று அடிக்கக் கையை ஓங்கியவளிடம் இருந்து தப்பித்துத் தள்ளிநின்று சிரித்தாள் உமா.
இதையெல்லாம் ஒரு சின்னப் புன்னகையுடன் பார்த்து ரசித்தபடி நின்றாள் அந்தப் புதிய மாணவி.
“ஹாய்.. நான் தேவி. இந்த மாட்டுக்கு உங்களை அறிமுகம் செய்து வைக்கவேண்டும் என்கிற அறிவுகூட இல்லை.” என்று தீபாவை வைதபடி தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டாள் தேவி.
“ஹாய்.. என் பெயர் இலக்கியா. அவள் உங்களை எல்லாம் நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டிருக்கிறாள் இல்லையா. அதுதான்.” என்றாள் மென்மையான குரலில், தோழியை விட்டுக் கொடுக்காது.
அங்கிருந்த அனைவருக்கும் அவளைப் பிடித்துப் போக அந்த ஒரு செயலே போதுமானதாக இருந்தது.
காலையில் விழித்துக்கொண்ட தர்சனுக்குத் தலையைத் தலையணையில் இருந்து தூக்கக்கூட முடியவில்லை. அந்தளவுக்கு வலித்தது. கைகள் இரண்டாலும் நெற்றியைப் பற்றியபடி புரண்டவனுக்கு, அப்போதுதான் தான் தன் அறையில் இருப்பதே உறைத்தது.
‘நேற்று குடித்துவிட்டு இங்கேயா வந்தேன்?’ என்று நினைத்த மாத்திரத்தில் பதட்டத்தோடு சட்டென்று எழுந்து அமர்ந்தான். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவன் குடிப்பது தெரிந்திருக்குமா?
இருக்கிற பிரச்சினை போதாது என்று இது வேறா என்று நினைத்து, நெற்றியில் அறைந்துகொண்டான்.
வெளியே தலைகாட்டவே ஒருமாதிரி இருந்தபோதும், குளித்துத் தயாராகி வந்தவனின் மனமோ உள்ளே தயங்க, அதைக் காட்டிக்கொள்ளாது படியிறங்கினான்.
எதிரே வந்த ஆரணி, தர்சனைக் கண்டதும் புன்னகைத்தாள்.
சங்கடத்துடன் கூடிய புன்னகையைத் தானும் சிரமப்பட்டுச் சிந்தியவன், “சாரி அண்ணி..” என்றான் உள்ளே போன குரலில்.
“எதற்கு?” புருவங்கள் சுருங்கக் கேட்டாள் ஆரணி.
நேற்று குடித்துவிட்டு வந்தேன், அதற்காக என்பானா? அல்லது உங்கள் திருமணத்தின்போது இறுதிவரை என்னால் நிற்கமுடியவில்லை, அதனால் என்பானா? அல்லது இன்னதென்று தெரியாமல் குற்ற உணர்ச்சியில் துடிக்கும் மனதை சமாதானப்படுத்த என்பானா?
எதையும் வாய்விட்டுச் சொல்ல முடியாமல், “எல்லாவற்றுக்கும் தான் அண்ணி..” என்றான் பொதுவாக.
அவனைப் புரிந்து கொண்டவளாக இதமாகப் புன்னகைத்தாள் ஆரணி. “உங்கள் அண்ணாவிடம் மன்னிப்புக் கேட்பீர்களா?”
அன்று கேட்ட மன்னிப்பு நினைவலைகளில் மிதந்தபோதும், “இல்லை.. லேசில் கேட்கமாட்டேன்..” என்றான் அவன்.
“ஏன்?”
“அவன் என் அண்ணா..”
“அவர் அண்ணா என்றால் நான் உங்கள் அண்ணி. அவரில் பாதி. என்னிடமும் நீங்கள் எதற்காகவும் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை.” என்றாள் வாஞ்சையுடன்.
“தாங்க்ஸ் அண்ணி..” என்றவனை, உரிமையோடு பொய்யாக முறைத்தாள் ஆரணி.
உதட்டில் புன்னகை தானாக மலர, “ஓகே அண்ணி! நான் சொன்ன சாரி, தாங்க்ஸ்.. இரண்டையும் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன், சரியா?” என்றான் தர்சன்.
“ம்.. சரி.” என்று தலையை அசைத்துச் சொன்னவள், “குடிக்க என்ன கொண்டுவர? டீயா? காபியா?” என்று கேட்டாள்.
“எதென்றாலும் சரிதான் அண்ணி.” என்றுவிட்டு தர்சன் அகல, சமையலறைக்குச் செல்லத் திரும்பியவள் தன்னையே விழிகளால் பருகியபடி நின்ற கணவனைக் கண்டதும் முகம் சிவந்தாள்.
அதுவரை நேரமும் மனைவியும் தம்பியும் உரையாடிக் கொண்டிருந்ததை ரசித்தபடி பார்த்துக் கொண்டிருந்த அமலன், மனைவி தன்னைப் பார்ப்பதைக் கண்டதும் இதழ்களில் உதித்த ரகசியப் புன்னகையுடன் கண்களில் குறும்பு மின்ன ஒற்றைப் புருவத்தை விசமத்துடன் தூக்கினான்.
அதைக் கண்டுகொண்டவளின் முகமோ செவ்வானமாகச் சிவந்து போனது. நேற்றுவரை அந்த வீட்டையும் வீட்டு மனிதர்களையும் அன்னியமாக எண்ணியவளை இன்று என் வீடு, என் சொந்தம் என்று உரிமையோடு நினைக்க வைத்துவிட்டானே! அதுவும் ஒரே இரவில்!
அந்த உணர்வையும் உரிமையையும் கொடுத்தவன் அவளது ஆருயிர் கணவன்! அதை மட்டுமா கொடுத்தான், அவனையும் சேர்த்தல்லவா கொடுத்தான்!
அந்த நினைவு தந்த மயக்கத்தில் அதற்குமேலும் கணவனின் முன்னால் நிற்க முடியாமல் வெட்கம் பிடுங்கித் தின்ன சமையலறைக்கு விரைந்தாள் ஆரணி. வெட்கத்தில் ஓடும் மனைவியைப் பார்த்த அமலனின் முகத்தில் சந்தோசப் புன்னகை மலர்ந்தது.
அதுவரை, அந்தப் புதுமணத் தம்பதியருக்குள் நடந்த பார்வைப் பரிமாற்றத்தை கண்டும் காணததுபோல் காட்டிக்கொண்ட தர்சன் உள்ளூரச் சிரித்துக் கொண்டான்.
அண்ணனின் மணவாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கிறது என்பது விளங்கியதில், அவன் மனதில் இருந்த சுமைகளில் ஒன்று அகன்றது.
முதல்நாள் ஏன் குடித்துவிட்டு வந்தாய் என்று கேட்கப் போகிறார்களே என்று அவன் உள்ளூரக் கலங்கிக் கொண்டிருக்க, அதைப்பற்றி யாருமே அவனிடம் கேட்கவில்லை. மஞ்சுளா உட்பட!
அது தந்தையின் உத்தரவால் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்துகொண்டவனுக்கு அவரது முகத்தை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை. அவமானத்தில் குன்றிக் குறுகிப் போனான்.
அதன்பிறகு அப்படியான தர்மசங்கடமான சூழ்நிலையை அவன் உருவாக்கவே இல்லை. தொழிலே கதி என்று கிடந்தான். தூங்குவதற்கு மட்டுமே வீட்டுக்கு வந்தான்.
“ஏன் தர்சா இப்படி உன்னை நீயே வருத்திக் கொள்கிறாய்..” என்று தாயாக மஞ்சுளா புலம்பியபோது, “கொஞ்சம் வேலைமா..” என்று முடித்துவிட்டான்.
அதையே அவர் கணவரிடமும் சொல்லிப் புலம்பியபோது, “முதலில் நடந்தவைகளில் இருந்து அவன் வெளியே வரட்டும். அதற்குக் கொஞ்ச நாட்கள் பொறு.” என்று அவரும் சொல்லிவிடவே, பொறுப்பதைத் தவிர வேறு வழியின்றிப் போனது அவருக்கு.
அதோடு, இப்போதெல்லாம் வீட்டுக்கு வருகையில் அவன் நிதானத்துடன் வருவதே தற்போதைக்குப் போதுமானதாக இருந்தது.
அன்று துவைத்துக் காயவைத்து அயர்ன் செய்த தர்சனின் உடைகளை வைப்பதற்காக அவனின் அறைக்கு எடுத்துச் சென்றார் மகேஸ்வரி.
அந்த அறைக்குள் சென்றவருக்கு, வெண்பாவின் அனைத்துப் பொருட்களும் அகற்றப்பட்டு இருப்பதைக் கண்டதும் நெஞ்சுக்குள் வலித்தது. மகள் மேல் ஆத்திரமும் கோபமும் இருந்தாலும், இப்போது எப்படி எங்கே இருக்கிறாளோ என்கிற கவலையும் அவரை அரிக்காமலில்லை!
ஆனாலும், அவளைத் தேடிப்போக மனம் இடம் கொடுக்கவில்லை. மனதைக் கல்லாக்கிக்கொண்டு அவனின் ஆடைகளைக் கப்போர்ட்டுக்குள் வைத்துவிட்டுத் திரும்பியவரின் விழிகளில் கட்டிலுக்குக் கீழே கிடந்த போத்தல்கள் சிக்கின.
அதைப் பார்த்ததும் அதிர்ந்துபோனார். வீட்டிலிருக்கும் அனைவரும் அவன் குடிப்பதை நிறுத்திவிட்டான் என்று நினைத்திருக்க, அவனோ யாருக்கும் தெரியாமல் அறையில் வைத்துக் குடிக்கிறான் என்று தெரிந்த மாத்திரத்தில், அவனை இந்த நிலைக்கு ஆளாக்கிய மகள் மேல் இன்னும் கோபம் வந்தது.
அதோடு, பகல் முழுவதும் வேலை என்கிற பெயரில் தன்னை வருத்திக் கொள்பவன் இரவில் குடித்து உடம்பைக் கெடுக்கிறானே.. இவனை இப்படியே விடக்கூடாது என்று எண்ணினார். அதோடு, மகள் செய்த தப்புக்கு அவன் தண்டனை அனுபவிப்பதா? அதை அவர் பார்த்துக்கொண்டு இருப்பதா?
ஒரு முடிவோடு அந்த அறையை விட்டு வெளியேறினார் மகேஸ்வரி.
அன்று விடுமுறை முடிந்து மீண்டும் ஆரம்பித்து இருந்தது அந்தப் பள்ளிக்கூடம். சாதாரணத் தரத்தில்(ப்ளஸ் வன்) சித்தியெய்திய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களும்(ப்ளஸ் டூ) அன்று புதிதாக ஆரம்பம் ஆனது.
ஆங்காங்கே கும்பல் கும்பலாக மாணவியர் கூடியிருக்க, தோழிகளான திவ்யா, தேவி, உமா மூவரும் உற்சாகமாக எதையெதையோ சலசலத்துக் கொண்டிருந்தனர்.
“அங்கே பாருங்கடி, தீபா வருகிறாள்..” பள்ளிக்கூட வாசலிலேயே ஒரு கண்ணை வைத்திருந்த திவ்யா சொல்லவும், எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்.
தீபாவும் தங்களை விழிகளால் தேடுவதைக் கண்டுகொண்டவர்கள், “ஹேய் தீபா.. இங்கே வாடி. நாங்கள் இங்கே இருக்கிறோம்.” என்று கைகளை உயர்த்திக்காட்டிக் கூவினர்.
இவர்களைக் கண்டுகொண்ட அவளும், “ஹேய்…!” என்றபடி ஓடிவந்தாள்.
அவளோடு இன்னொரு பெண்ணும் வருவதைக் கவனித்த தோழிகள், “யாருடி அது? புதிதாக இருக்கிறாளே..” என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர்.
“பொறு, அவளையே கேட்கலாம்..” என்றாள் உமா.
“எல்லோரும் எப்படிடி இருக்கிறீர்கள்?” என்றபடி தோழிகளைக் கட்டிக்கொண்டாள் தீபா.
யாழ்பாணத்தில் இருக்கும் அவளின் சித்தி வீட்டுக்குத் தீபா சென்றிருந்ததில் விடுமுறையின்போது சந்திக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டவே இல்லை. எனவே விசாரித்தாள்.
“எங்களுக்கு என்ன, எல்லோரும் நன்றாக இருக்கிறோம். நீ என்னடி, கொஞ்சம் உடம்பு வைத்துவிட்ட மாதிரி இருக்கே?”
“ஆமாம்டி. இந்தச் சித்தி எப்போ பார் எதையாவது என் வாயில் திணித்துக் கொண்டே இருப்பார். பிறகு எப்படி உடம்பு வைக்காமல் இருக்கும்..”
“விடு விடு.. இப்போவும் தளதளத் தக்காளிப்பழம் மாதிரி அழகாத்தான்டி இருக்கிறாய்..” என்று வாரினாள் உமா.
“உன்னை..” என்று அடிக்கக் கையை ஓங்கியவளிடம் இருந்து தப்பித்துத் தள்ளிநின்று சிரித்தாள் உமா.
இதையெல்லாம் ஒரு சின்னப் புன்னகையுடன் பார்த்து ரசித்தபடி நின்றாள் அந்தப் புதிய மாணவி.
“ஹாய்.. நான் தேவி. இந்த மாட்டுக்கு உங்களை அறிமுகம் செய்து வைக்கவேண்டும் என்கிற அறிவுகூட இல்லை.” என்று தீபாவை வைதபடி தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டாள் தேவி.
“ஹாய்.. என் பெயர் இலக்கியா. அவள் உங்களை எல்லாம் நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டிருக்கிறாள் இல்லையா. அதுதான்.” என்றாள் மென்மையான குரலில், தோழியை விட்டுக் கொடுக்காது.
அங்கிருந்த அனைவருக்கும் அவளைப் பிடித்துப் போக அந்த ஒரு செயலே போதுமானதாக இருந்தது.
Last edited by a moderator: