அத்தியாயம்-33
“நமக்குள் மன்னிப்பு எல்லாம் எதற்கு லயா? வெண்பாவை வா என்று எதற்காகக் கூப்பிட்டேன் என்று நீ புரிந்து கொண்டாலே போதும். அதோடு, இதையெல்லாம் முதலே சொல்லாமல் விட்டது என் தவறும் தானே. அப்போ நானும் மன்னிப்புக் கேட்கவா?” என்று அவன் கேட்டபோது,
“இல்லையில்லை..” என்றாள் அவள் விழுந்தடித்துக்கொண்டு.
அதில் அவன் முகத்தில் புன்னகை அரும்பியது. அதைப்பார்த்துவிட்டு சட்டென்று அவன் மடியில் ஏறி அமர்ந்துகொண்டாள் இலக்கியா.
அதிசயமாக மனைவியைப் பார்த்தான் தர்சன். அவனிடம் அன்பை கொட்டிய நாட்களில் கூட அவள் இப்படி நடந்துகொண்டது இல்லை. ஆனாலும், அவளின் அந்த நெருக்கத்தை அவன் மனம் உள்ளூர வெகுவாக ரசித்தது.
அவளோ அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனைத் தன்னோடு சேர்த்து அணைத்தாள்.
அவனது அனுமதி இன்றியே அவன் கைகளும் அவளை வளைக்க, “இன்றைக்கு என்னடி ஆச்சு உனக்கு?” என்று கிறங்கிப்போய்க் கேட்டான்.
“ம்.. இந்த முரடன் மேல் பைத்தியம் ஆச்சாம்..” என்று செல்லம் கொஞ்சியவள், “நாம் நம் வீட்டுக்கே போகலாமா அத்தான்?” என்றாள் கெஞ்சலாக.
“ஏனாம்? என் லயாவுக்கு இங்கே என்ன குறையாம்? இங்கே என்றால் காலநேரம் பார்க்காமல், யாரும் வந்து விடுவார்களோ என்கிற பயமில்லாமல் கொஞ்சிக் குலாவலாமே..” என்றான் கண்ணைச் சிமிட்டி, குறும்பாக நகைத்தபடி.
அவளுக்கும் இங்கேயே இருக்க விருப்பம்தான். அவனோடு எப்போதுமே தொற்றிக்கொண்டு திரிய ஆசைதான். ஆனால், இவ்வளவு தூரம் வெண்பாவை பற்றியும், அவன் செய்த பிழைகளைப் பற்றியும் சொல்கிறான் என்றால், மனதுக்குள் அதையெல்லாம் நினைத்து வருந்துகிறான் என்றுதானே அர்த்தம். தன்னால் தான் வெண்பாவுக்கும் இந்த நிலை என்கிற குற்றக் குறுகுறுப்பில் தவிப்பவனை இன்னும் வேதனைப்படுத்தும் விதமாக அல்லவா, அவனை அவன் குடும்பத்திலிருந்து பிரித்துக்கொண்டு வந்துவிட்டாள். அதை அவள் நிவர்த்திச் செய்யவேண்டாமா?
“அங்கேயும் நம்முடைய அறைக்குள் யார் வரப்போகிறார்களாம்? இல்லாவிட்டாலும் நீங்கள் தள்ளியிருந்து விரதம் காக்கிற ஆள் பாருங்கள். எங்கே இருந்தாலும் இந்தக் கொஞ்சலும் குலாவளும் குறையாது. அதனால் அங்கேயே போகலாம்.” என்று, அப்போதும் அங்கே செல்வதிலேயே குறியாக இருந்தாள் இலக்கியா.
“வெண்பா இன்னும் அங்கேதான் இருக்கிறாள்.”
“அவள் இருந்தால் என்ன அத்தான். நாம் நம்பாட்டுக்கு இருக்கலாமே. அது நம் வீடு. அவள் அங்கு வந்திருக்கும் விருந்தாளி. விருந்தாளிக்காக நாம் வீட்டை விட்டு வெளியேற முடியுமா என்ன?”
முதலில் வெண்பா மேலிருந்த வெறுப்பு இப்போது குறைந்திருந்தாலும், அவளை மதிக்கத் தோன்றவில்லை இலக்கியாவுக்கு. மனதில் வேறொருவன் இருந்ததினால் தர்சனின் தாலியை அவள் கழட்டியதை கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டவளால், கணவனின் குடும்பத்தைப் பழிவாங்கும் எண்ணத்தோடு அமலனின் திருமணத்தன்று அவள் வெளியேறியதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அதோடு, கணவன் தாலிகட்டிய ஒருத்தியை பார்க்கவோ, அவளோடு பேசவோ, சுமூகமாகப் போகவோ என்றைக்குமே இலக்கியாவால் முடியாது!
ஆனால், கணவனுக்காக, அவன் மன நிம்மதிக்காக இந்த ஒருமாதம் அவளால் வெண்பாவை பொறுக்க இயலுமே!
தர்சனுக்கும் மனைவி தனக்காகப் பேசுகிறாள் என்று புரிந்தது. வெண்பா இருக்கும் வீட்டில் கணமும் இருக்கமாட்டேன் என்று அன்று வீட்டை விட்டே வெளியேறியவள், இன்று அதே வீட்டுக்குப் போகலாம் என்கிறாள் என்றால், அதன் காரணம் அவள் அவன்மேல் வைத்திருக்கும் அன்பும் நம்பிக்கையும் அல்லவா! அப்படியானவளின் மனதை வருத்தும் ஒரு செயலை இனியும் அவன் செய்வதா?
“கொஞ்ச நாட்கள் இங்கே இருக்கலாம் லயா. புதிய கடைக்கான வேலைகளும் இருக்கிறது. அங்கே இருந்தால், உன்னை விட்டுவிட்டு வந்து என்னால் இங்கே நிம்மதியாக வேலை பார்க்க முடியாது. அதோடு, அப்பா அம்மாவிடம் இங்கே இருக்கப்போகிறோம் என்று சொல்லி, வீட்டுப் பொருட்கள் முதல்கொண்டு எல்லாவற்றையும் மாற்றிவிட்டு திரும்ப அங்கே வருகிறோம் என்றால் என்னைத் துரத்தித் துரத்தித்தான் அடிப்பார்கள்.” என்றான், ஏதோ அவர்களுக்கு எல்லாம் பயந்தவன் போல்.
இதெல்லாம் அவனுக்கு ஒரு விசயமே அல்லதான் என்றாலும், அவன் சொன்னதுபோல இங்கே இருக்க என்று வந்தாயிற்று. பிறகு எதற்கு வந்த உடனேயே ஓடுவான் என்று எண்ணியவள், “மாமாவும் மாமியும் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்களோ தெரியாது அத்தான்..” என்றாள் குரலில் கவலை தொனிக்க.
“அவர்கள் ஒன்றுமே நினைக்க மாட்டார்கள். அதனால் சும்மா சும்மா எதையாவது நினைத்து கவலைப் படாதே!” என்று அதட்டினான் தர்சன்.
“என்றாலும்..” என்று மனச் சுணக்கத்தோடு அவள் இழுக்க, “நான் இப்படித் தனியாகப் போகப்போகிறேன் என்று சொன்னபோது, அப்பா என்ன சொன்னார் தெரியுமா? அம்மா அப்பா எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு மனைவியும் முக்கியம் என்றார். அதோடு, என் மருமகளைப் பற்றி எனக்குத் தெரியும். அதனால் அவள் மனம் நோகாதபடிக்கு நீ நடந்துகொள். அவள் எங்கள் மனம் நோகாமல் நடந்துகொள்வாள் என்றார் லயா. அம்மாவைப் பற்றி நான் சொல்லவே தேவையில்லை. இப்போது சொல் அவர்கள் உன்னைப்பற்றித் தவறாக நினைப்பார்களா?” என்று அவன் கேட்டபோது,
இல்லை என்பதாகத் தலையாட்டியவளின் விழிகள் நெகிழ்ச்சியில் கலங்கத் தொடங்கியது.
அவளின் மனநிலையை மாற்ற எண்ணி, “நான் நிம்மதியாகத் தூங்கி இரண்டு நாட்கள் ஆகிறது. வருகிறாயா இருவருமாகத் தூங்கலாம்..” என்று கள்ளச் சிரிப்புடன் கேட்டான் தர்சன்.
அவன் முகத்திலும் களைப்புத் தென்படவே, “வருகிறேன். ஆனால், எந்தச் சேட்டையும் செய்யாமல் உறங்கவேண்டும். இல்லை என்றால் அடிதான் வாங்குவீர்கள்.” என்றவள், கணவனோடு உறங்கச் சென்றாள்.
“அத்தான், எழுந்திருங்கள். விட்டால் கும்பகர்ணன் மாதிரி தூங்கிவீர்கள் போலவே..” என்று அவனைத் தட்டி எழுப்பினாள் இலக்கியா.
“இன்னும் கொஞ்சநேரம் தூங்கவிடு லயா..” என்று, தூக்கம் நிறைந்த கரகரப்பான குரலில் சொன்னவனின் கையொன்று நீண்டுவந்து அவளின் இடையை வளைத்தது.
“முடியாது! பிறகு இரவுக்கு நித்திரை வராது அத்தான். எழுந்திருங்கள்.”
“இன்று இரவுக்குச் சிவராத்திரி என்றபடியால் தான் இப்போதே தூங்கிக் கொள்கிறேன்.” என்றான் அவன்.
“என்னது? இன்றைக்குச் சிவராத்திரியா? இருக்காதே..” என்று அவள் குழம்பும்போதே, கண்கள் மூடியிருந்தபோதும் அவன் உடல் சிரிப்பில் குலுங்கியது.
அப்போதுதான் அவன் சொன்னதன் அர்த்தம் புரிய, முகம் சிவந்துபோனது அவளுக்கு. “உங்களை..!” என்று பல்லைக் கடித்த மனைவியை, தன்னருகே சாய்த்துக்கொண்டான் தர்சன்.
அவனை அண்டிப் படுத்துக்கொண்டே, “ஐயோ அத்தான்! உங்களை எழும்பச் சொன்னால் என்னையும் படுக்க வைக்கிறீர்களே..” என்றாள் பொய்யான சலிப்போடு.
அவளின் கழுத்தருகே நெருங்கி வாசம் பிடித்தபடியே, “குளித்தாயா?” என்று அவன் கேட்க,
“ம்ம்..” என்று, அவனுடைய சூடான மூச்சுக்காற்றினால் உண்டான சிலிர்ப்பில் முணுமுணுத்தாள் அவள்.
“என்னையும் கூப்பிட்டு இருக்கலாமே..”
“எங்கே?” புரியாமல் கேட்டாள் லயா.
“குளிக்கத்தான்..” என்றான் அந்தக் கள்ளன்.
இலக்கியாவுக்கோ சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. அவன் தோளில் செல்லமாக அடித்து, “உங்களைத் திருத்தவே முடியாது அத்தான்..” என்றாள் சிரிப்பும் சிணுங்களுமாக.
அவளின் அந்தக் கரத்தைப் பற்றித் தன் கழுத்தைச் சுற்றிப் போட்டுவிட்டவனின் வாயோ, “கட்டிய புருசனையே கைநீட்டி அடிக்கிறாயா? பொறு பொறு. என் மகள் வரட்டும். அவளிடம் சொல்லிக் கொடுக்கிறேன் உன்னை!” என்றது. கையோ அவளின் வயிற்றை இதமாகத் தடவிக்கொடுத்தது.
“பிறக்கப்போவது என் மகன். அவன் வரட்டும், அவனைக்கொண்டே உங்களுக்கு அடி போடுகிறேன்.” என்றாள் அவள்.
“எனக்கு மகள்தான் வேண்டும்!”
“எனக்கு மகன்தான் வேண்டும்!”
“இல்லை மகள்!”
“முடியாது! மகன்தான் வருவான்.”
“பார்க்கலாமா?”
“பார்க்கலாம்.”
“நான் சொல்வதுபோல் மகள் பிறந்தால் என்ன தருவாய்?”
“அடுத்ததாக ஒரு மகனைப் பெற்றுத் தருகிறேன்.” என்றவள், “மகன் பிறந்தால் நீங்கள் என்ன தருவீர்கள்?” என்று கேட்டாள்.
“இன்னொரு மகளுக்கும் உன்னை அம்மா ஆக்குகிறேன்டி. சரியா..” என்றவனின் பேச்சுப் புரிந்தபோது, அவளுக்கு வெட்கத்தோடு சிரிப்பும் போட்டிபோட்டுக்கொண்டு வந்தது.
அப்படியே எத்தனை பிள்ளைகளைப் பெறுவானாம்? என்று நினைக்கையிலேயே, அவன் எத்தனைக்கும் தயார்தான் என்று எண்ணம் ஓடியது அவளுக்கு.
சேச்சே! இதென்ன வெட்கம் கெட்ட நினைப்பு என்று மனதுக்குள் தன்னையே அதட்டியவள், “உங்களை என்ன செய்தால் தகும்?” என்று அவனிடம் பொய்க்கோபம் காட்டினாள்.
“என்ன வேண்டுமானாலும் செய் என்றுதானே நானும் சொல்கிறேன். நீதான் ஒன்றுமே செய்யமாட்டேன் என்கிறாய். என்னையாவது செய்யவிடு.” என்றவனின் உதடுகள் அவளின் கழுத்து வளைவுக்குள் நுழைந்துகொண்டது.
சிலிர்ப்புடன் நெளிந்தவளின் உதடுகளோ, “அத்..தான்..” என்று சிணுங்கியது.
“உன் அத்தானுக்கு என்னவாம்..” கழுத்திலிருந்து கன்னக்கதுப்புக்கு உதடுகளை நகர்த்தியபடி, கிறக்கமாகக் கேட்டவனின் மீசையின் குறுகுறுப்பும், உதடுகளின் இம்சையும் அவளைச் சொர்க்கலோகத்துக்கே அழைத்துச் சென்றது.
இவனை விட்டால் இதோடு நிறுத்தமாட்டான் என்று எண்ணியவள் அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள். “உங்களுக்காக மெனக்கெட்டு கேசரி எல்லாம் செய்து வைத்துவிட்டு எழுப்ப வந்தால், நீங்கள் உங்கள் வேலையை ஆரம்பிக்கிறீர்களே அத்தான். முதலில் எழுந்திருங்கள்.” என்றவளின் இதழ்களை வேகமாக அணைத்துக்கொண்டன அவனுடைய உதடுகள்.
அதில் உள்ளம் மயங்கினாலும், “ம்..ம்..” என்று சிணுங்கி, முயன்று அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள், “அநியாயம் செய்கிறீர்கள் அத்தான்.” என்று குற்றப் பத்திரிக்கை வாசித்தாள்.
“நீதானே கேசரி செய்ததாகச் சொன்னாய்..”
“அதற்கு?”
“அதைத்தான் ருசி பார்த்தேன்.” என்று மயக்கத்தோடு சொன்னவனின் விரல்கள் அவளின் செவ்விதழ்களைத் தடவிக்கொடுத்தது.
“தேனை விடச் சுவையாக இருந்தது.” என்றவன், மீண்டும் மீண்டும் அதைச் சுவைக்கத் தவறவில்லை.
கணவனின் கையணைப்போடு இதழணைப்பும் சேர்ந்துகொண்டதில் முற்றிலுமாக மயங்கிப்போனவள், அவனைக் கட்டிலில் இருந்து எழுப்புவதற்குள் படாத பாடு பட்டுத்தான் போனாள்.
குளித்துவிட்டு வந்தவனுக்குக் கேசரியையும், தேநீரையும் ஆர்வமாகக் கொடுத்து, “எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் அத்தான்? இரவுக்குப் பிட்டும் சாம்பாரும் கூட வைத்துவிட்டேன்.” என்று இலக்கியா சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே, அமலனின் கார் வந்து நின்றது.
“நமக்குள் மன்னிப்பு எல்லாம் எதற்கு லயா? வெண்பாவை வா என்று எதற்காகக் கூப்பிட்டேன் என்று நீ புரிந்து கொண்டாலே போதும். அதோடு, இதையெல்லாம் முதலே சொல்லாமல் விட்டது என் தவறும் தானே. அப்போ நானும் மன்னிப்புக் கேட்கவா?” என்று அவன் கேட்டபோது,
“இல்லையில்லை..” என்றாள் அவள் விழுந்தடித்துக்கொண்டு.
அதில் அவன் முகத்தில் புன்னகை அரும்பியது. அதைப்பார்த்துவிட்டு சட்டென்று அவன் மடியில் ஏறி அமர்ந்துகொண்டாள் இலக்கியா.
அதிசயமாக மனைவியைப் பார்த்தான் தர்சன். அவனிடம் அன்பை கொட்டிய நாட்களில் கூட அவள் இப்படி நடந்துகொண்டது இல்லை. ஆனாலும், அவளின் அந்த நெருக்கத்தை அவன் மனம் உள்ளூர வெகுவாக ரசித்தது.
அவளோ அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனைத் தன்னோடு சேர்த்து அணைத்தாள்.
அவனது அனுமதி இன்றியே அவன் கைகளும் அவளை வளைக்க, “இன்றைக்கு என்னடி ஆச்சு உனக்கு?” என்று கிறங்கிப்போய்க் கேட்டான்.
“ம்.. இந்த முரடன் மேல் பைத்தியம் ஆச்சாம்..” என்று செல்லம் கொஞ்சியவள், “நாம் நம் வீட்டுக்கே போகலாமா அத்தான்?” என்றாள் கெஞ்சலாக.
“ஏனாம்? என் லயாவுக்கு இங்கே என்ன குறையாம்? இங்கே என்றால் காலநேரம் பார்க்காமல், யாரும் வந்து விடுவார்களோ என்கிற பயமில்லாமல் கொஞ்சிக் குலாவலாமே..” என்றான் கண்ணைச் சிமிட்டி, குறும்பாக நகைத்தபடி.
அவளுக்கும் இங்கேயே இருக்க விருப்பம்தான். அவனோடு எப்போதுமே தொற்றிக்கொண்டு திரிய ஆசைதான். ஆனால், இவ்வளவு தூரம் வெண்பாவை பற்றியும், அவன் செய்த பிழைகளைப் பற்றியும் சொல்கிறான் என்றால், மனதுக்குள் அதையெல்லாம் நினைத்து வருந்துகிறான் என்றுதானே அர்த்தம். தன்னால் தான் வெண்பாவுக்கும் இந்த நிலை என்கிற குற்றக் குறுகுறுப்பில் தவிப்பவனை இன்னும் வேதனைப்படுத்தும் விதமாக அல்லவா, அவனை அவன் குடும்பத்திலிருந்து பிரித்துக்கொண்டு வந்துவிட்டாள். அதை அவள் நிவர்த்திச் செய்யவேண்டாமா?
“அங்கேயும் நம்முடைய அறைக்குள் யார் வரப்போகிறார்களாம்? இல்லாவிட்டாலும் நீங்கள் தள்ளியிருந்து விரதம் காக்கிற ஆள் பாருங்கள். எங்கே இருந்தாலும் இந்தக் கொஞ்சலும் குலாவளும் குறையாது. அதனால் அங்கேயே போகலாம்.” என்று, அப்போதும் அங்கே செல்வதிலேயே குறியாக இருந்தாள் இலக்கியா.
“வெண்பா இன்னும் அங்கேதான் இருக்கிறாள்.”
“அவள் இருந்தால் என்ன அத்தான். நாம் நம்பாட்டுக்கு இருக்கலாமே. அது நம் வீடு. அவள் அங்கு வந்திருக்கும் விருந்தாளி. விருந்தாளிக்காக நாம் வீட்டை விட்டு வெளியேற முடியுமா என்ன?”
முதலில் வெண்பா மேலிருந்த வெறுப்பு இப்போது குறைந்திருந்தாலும், அவளை மதிக்கத் தோன்றவில்லை இலக்கியாவுக்கு. மனதில் வேறொருவன் இருந்ததினால் தர்சனின் தாலியை அவள் கழட்டியதை கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டவளால், கணவனின் குடும்பத்தைப் பழிவாங்கும் எண்ணத்தோடு அமலனின் திருமணத்தன்று அவள் வெளியேறியதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அதோடு, கணவன் தாலிகட்டிய ஒருத்தியை பார்க்கவோ, அவளோடு பேசவோ, சுமூகமாகப் போகவோ என்றைக்குமே இலக்கியாவால் முடியாது!
ஆனால், கணவனுக்காக, அவன் மன நிம்மதிக்காக இந்த ஒருமாதம் அவளால் வெண்பாவை பொறுக்க இயலுமே!
தர்சனுக்கும் மனைவி தனக்காகப் பேசுகிறாள் என்று புரிந்தது. வெண்பா இருக்கும் வீட்டில் கணமும் இருக்கமாட்டேன் என்று அன்று வீட்டை விட்டே வெளியேறியவள், இன்று அதே வீட்டுக்குப் போகலாம் என்கிறாள் என்றால், அதன் காரணம் அவள் அவன்மேல் வைத்திருக்கும் அன்பும் நம்பிக்கையும் அல்லவா! அப்படியானவளின் மனதை வருத்தும் ஒரு செயலை இனியும் அவன் செய்வதா?
“கொஞ்ச நாட்கள் இங்கே இருக்கலாம் லயா. புதிய கடைக்கான வேலைகளும் இருக்கிறது. அங்கே இருந்தால், உன்னை விட்டுவிட்டு வந்து என்னால் இங்கே நிம்மதியாக வேலை பார்க்க முடியாது. அதோடு, அப்பா அம்மாவிடம் இங்கே இருக்கப்போகிறோம் என்று சொல்லி, வீட்டுப் பொருட்கள் முதல்கொண்டு எல்லாவற்றையும் மாற்றிவிட்டு திரும்ப அங்கே வருகிறோம் என்றால் என்னைத் துரத்தித் துரத்தித்தான் அடிப்பார்கள்.” என்றான், ஏதோ அவர்களுக்கு எல்லாம் பயந்தவன் போல்.
இதெல்லாம் அவனுக்கு ஒரு விசயமே அல்லதான் என்றாலும், அவன் சொன்னதுபோல இங்கே இருக்க என்று வந்தாயிற்று. பிறகு எதற்கு வந்த உடனேயே ஓடுவான் என்று எண்ணியவள், “மாமாவும் மாமியும் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்களோ தெரியாது அத்தான்..” என்றாள் குரலில் கவலை தொனிக்க.
“அவர்கள் ஒன்றுமே நினைக்க மாட்டார்கள். அதனால் சும்மா சும்மா எதையாவது நினைத்து கவலைப் படாதே!” என்று அதட்டினான் தர்சன்.
“என்றாலும்..” என்று மனச் சுணக்கத்தோடு அவள் இழுக்க, “நான் இப்படித் தனியாகப் போகப்போகிறேன் என்று சொன்னபோது, அப்பா என்ன சொன்னார் தெரியுமா? அம்மா அப்பா எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு மனைவியும் முக்கியம் என்றார். அதோடு, என் மருமகளைப் பற்றி எனக்குத் தெரியும். அதனால் அவள் மனம் நோகாதபடிக்கு நீ நடந்துகொள். அவள் எங்கள் மனம் நோகாமல் நடந்துகொள்வாள் என்றார் லயா. அம்மாவைப் பற்றி நான் சொல்லவே தேவையில்லை. இப்போது சொல் அவர்கள் உன்னைப்பற்றித் தவறாக நினைப்பார்களா?” என்று அவன் கேட்டபோது,
இல்லை என்பதாகத் தலையாட்டியவளின் விழிகள் நெகிழ்ச்சியில் கலங்கத் தொடங்கியது.
அவளின் மனநிலையை மாற்ற எண்ணி, “நான் நிம்மதியாகத் தூங்கி இரண்டு நாட்கள் ஆகிறது. வருகிறாயா இருவருமாகத் தூங்கலாம்..” என்று கள்ளச் சிரிப்புடன் கேட்டான் தர்சன்.
அவன் முகத்திலும் களைப்புத் தென்படவே, “வருகிறேன். ஆனால், எந்தச் சேட்டையும் செய்யாமல் உறங்கவேண்டும். இல்லை என்றால் அடிதான் வாங்குவீர்கள்.” என்றவள், கணவனோடு உறங்கச் சென்றாள்.
“அத்தான், எழுந்திருங்கள். விட்டால் கும்பகர்ணன் மாதிரி தூங்கிவீர்கள் போலவே..” என்று அவனைத் தட்டி எழுப்பினாள் இலக்கியா.
“இன்னும் கொஞ்சநேரம் தூங்கவிடு லயா..” என்று, தூக்கம் நிறைந்த கரகரப்பான குரலில் சொன்னவனின் கையொன்று நீண்டுவந்து அவளின் இடையை வளைத்தது.
“முடியாது! பிறகு இரவுக்கு நித்திரை வராது அத்தான். எழுந்திருங்கள்.”
“இன்று இரவுக்குச் சிவராத்திரி என்றபடியால் தான் இப்போதே தூங்கிக் கொள்கிறேன்.” என்றான் அவன்.
“என்னது? இன்றைக்குச் சிவராத்திரியா? இருக்காதே..” என்று அவள் குழம்பும்போதே, கண்கள் மூடியிருந்தபோதும் அவன் உடல் சிரிப்பில் குலுங்கியது.
அப்போதுதான் அவன் சொன்னதன் அர்த்தம் புரிய, முகம் சிவந்துபோனது அவளுக்கு. “உங்களை..!” என்று பல்லைக் கடித்த மனைவியை, தன்னருகே சாய்த்துக்கொண்டான் தர்சன்.
அவனை அண்டிப் படுத்துக்கொண்டே, “ஐயோ அத்தான்! உங்களை எழும்பச் சொன்னால் என்னையும் படுக்க வைக்கிறீர்களே..” என்றாள் பொய்யான சலிப்போடு.
அவளின் கழுத்தருகே நெருங்கி வாசம் பிடித்தபடியே, “குளித்தாயா?” என்று அவன் கேட்க,
“ம்ம்..” என்று, அவனுடைய சூடான மூச்சுக்காற்றினால் உண்டான சிலிர்ப்பில் முணுமுணுத்தாள் அவள்.
“என்னையும் கூப்பிட்டு இருக்கலாமே..”
“எங்கே?” புரியாமல் கேட்டாள் லயா.
“குளிக்கத்தான்..” என்றான் அந்தக் கள்ளன்.
இலக்கியாவுக்கோ சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. அவன் தோளில் செல்லமாக அடித்து, “உங்களைத் திருத்தவே முடியாது அத்தான்..” என்றாள் சிரிப்பும் சிணுங்களுமாக.
அவளின் அந்தக் கரத்தைப் பற்றித் தன் கழுத்தைச் சுற்றிப் போட்டுவிட்டவனின் வாயோ, “கட்டிய புருசனையே கைநீட்டி அடிக்கிறாயா? பொறு பொறு. என் மகள் வரட்டும். அவளிடம் சொல்லிக் கொடுக்கிறேன் உன்னை!” என்றது. கையோ அவளின் வயிற்றை இதமாகத் தடவிக்கொடுத்தது.
“பிறக்கப்போவது என் மகன். அவன் வரட்டும், அவனைக்கொண்டே உங்களுக்கு அடி போடுகிறேன்.” என்றாள் அவள்.
“எனக்கு மகள்தான் வேண்டும்!”
“எனக்கு மகன்தான் வேண்டும்!”
“இல்லை மகள்!”
“முடியாது! மகன்தான் வருவான்.”
“பார்க்கலாமா?”
“பார்க்கலாம்.”
“நான் சொல்வதுபோல் மகள் பிறந்தால் என்ன தருவாய்?”
“அடுத்ததாக ஒரு மகனைப் பெற்றுத் தருகிறேன்.” என்றவள், “மகன் பிறந்தால் நீங்கள் என்ன தருவீர்கள்?” என்று கேட்டாள்.
“இன்னொரு மகளுக்கும் உன்னை அம்மா ஆக்குகிறேன்டி. சரியா..” என்றவனின் பேச்சுப் புரிந்தபோது, அவளுக்கு வெட்கத்தோடு சிரிப்பும் போட்டிபோட்டுக்கொண்டு வந்தது.
அப்படியே எத்தனை பிள்ளைகளைப் பெறுவானாம்? என்று நினைக்கையிலேயே, அவன் எத்தனைக்கும் தயார்தான் என்று எண்ணம் ஓடியது அவளுக்கு.
சேச்சே! இதென்ன வெட்கம் கெட்ட நினைப்பு என்று மனதுக்குள் தன்னையே அதட்டியவள், “உங்களை என்ன செய்தால் தகும்?” என்று அவனிடம் பொய்க்கோபம் காட்டினாள்.
“என்ன வேண்டுமானாலும் செய் என்றுதானே நானும் சொல்கிறேன். நீதான் ஒன்றுமே செய்யமாட்டேன் என்கிறாய். என்னையாவது செய்யவிடு.” என்றவனின் உதடுகள் அவளின் கழுத்து வளைவுக்குள் நுழைந்துகொண்டது.
சிலிர்ப்புடன் நெளிந்தவளின் உதடுகளோ, “அத்..தான்..” என்று சிணுங்கியது.
“உன் அத்தானுக்கு என்னவாம்..” கழுத்திலிருந்து கன்னக்கதுப்புக்கு உதடுகளை நகர்த்தியபடி, கிறக்கமாகக் கேட்டவனின் மீசையின் குறுகுறுப்பும், உதடுகளின் இம்சையும் அவளைச் சொர்க்கலோகத்துக்கே அழைத்துச் சென்றது.
இவனை விட்டால் இதோடு நிறுத்தமாட்டான் என்று எண்ணியவள் அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள். “உங்களுக்காக மெனக்கெட்டு கேசரி எல்லாம் செய்து வைத்துவிட்டு எழுப்ப வந்தால், நீங்கள் உங்கள் வேலையை ஆரம்பிக்கிறீர்களே அத்தான். முதலில் எழுந்திருங்கள்.” என்றவளின் இதழ்களை வேகமாக அணைத்துக்கொண்டன அவனுடைய உதடுகள்.
அதில் உள்ளம் மயங்கினாலும், “ம்..ம்..” என்று சிணுங்கி, முயன்று அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள், “அநியாயம் செய்கிறீர்கள் அத்தான்.” என்று குற்றப் பத்திரிக்கை வாசித்தாள்.
“நீதானே கேசரி செய்ததாகச் சொன்னாய்..”
“அதற்கு?”
“அதைத்தான் ருசி பார்த்தேன்.” என்று மயக்கத்தோடு சொன்னவனின் விரல்கள் அவளின் செவ்விதழ்களைத் தடவிக்கொடுத்தது.
“தேனை விடச் சுவையாக இருந்தது.” என்றவன், மீண்டும் மீண்டும் அதைச் சுவைக்கத் தவறவில்லை.
கணவனின் கையணைப்போடு இதழணைப்பும் சேர்ந்துகொண்டதில் முற்றிலுமாக மயங்கிப்போனவள், அவனைக் கட்டிலில் இருந்து எழுப்புவதற்குள் படாத பாடு பட்டுத்தான் போனாள்.
குளித்துவிட்டு வந்தவனுக்குக் கேசரியையும், தேநீரையும் ஆர்வமாகக் கொடுத்து, “எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் அத்தான்? இரவுக்குப் பிட்டும் சாம்பாரும் கூட வைத்துவிட்டேன்.” என்று இலக்கியா சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே, அமலனின் கார் வந்து நின்றது.
Last edited by a moderator: