அத்தியாயம்-6
தன்னுடைய அறைக்குள் கூண்டுப் புலியென நடைபோட்டுக் கொண்டிருந்தான் தர்சன்.
அவனால் சற்று முன் அன்னை சொன்னதை ஜீரணிக்கவே முடியவில்லை. அந்தளவுக்கு மனம் கொதித்தது, ஆவேசம் கொண்டது, ஆத்திரப் பட்டது, வேதனையில் துடித்தது.
அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதையே சிந்திக்க இயலாமல் தவித்தான்.
இப்படிச் செய்துவிட்டாளே என்பதிலேயே நின்று உழன்றது அவன் எண்ணங்கள்!
தன் மனதை அவளிடம் சொல்லியும், நீதான் என் மனைவி என்று பட்டவர்த்தனமாக அறிவித்த பிறகும் அவனை மறுத்துவிட்டாளே!
அதுவும், அவனைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் இருந்தும் அதை வேண்டுமென்றே உதறியிருக்கிறாள்!
ஒரு ஆண்மகனாகத் தன்மானம் அடிபட்டு நின்றான்!
மிகவும் சாதுர்யமாகத் திட்டமிட்டு நடந்து கொண்டிருக்கிறாள் என்று நினைக்க நினைக்க மனம் கொதித்தது!
அவளைத் தனது காதலியாக, வருங்கால மனைவியாக அவன் நினைக்கத் தொடங்கியது நான்கைந்து நாட்களாகத்தான் என்றாலும், அதில் எத்தனை கற்பனைகள்? எத்தனை கனவுகள்!
அனைத்தும் பொய்யாவதா?
இருளின் மறைவில் அவளுடன் அவன் கண்ட இனிய கனவுகளை அவள் இன்னொருவனுடன் நிஜத்தில் வாழ்வதா? நினைக்கவே கசந்தது!
அதுவும் தன் தமையனையே கட்டி, தன் கண்ணெதிரிலேயே அவள் நடமாட, அதைப்பார்த்துக்கொண்டு அவன் நிற்பதா?
முதலில் அது முடியுமா அவனால்?
முடியாது என்று அடித்துச் சொன்னது மனது!
இனி என்ன செய்வது?
ஒரு வழியுமே புலப்படவில்லை.
தாய் தந்தையிடம் சொல்ல முடியாது. சொன்னால், அவளுக்கு உன்னைப் பிடிக்கவில்லையே என்பார்கள்.
அமலனிடம் தன் மனதைச் சொல்லி, அவனும் அவளைக் காதலிப்பதாகச் சொல்லிவிட்டால்.. ஒரு பெண்ணுக்காக அண்ணனும் தம்பியும் சண்டையிட்டுக் கொள்வதா?
அதன்பிறகு அவளை யார் மணந்தாலும் மற்றவர் அந்த வீட்டில் இருக்கத்தான் முடியுமா?
அனைத்து வழிகளையும் அல்லவா அடைத்துவிட்டாள்!
அப்போது யாரோ மாடியேறும் ஓசையில் அவன் நடை சட்டென நின்று காதுகள் கூர்மை பெற்றன.
அந்தக் காலடி ஓசையை வைத்தே மேலே வருவது வெண்பா என்பதைக் கண்டுகொண்டான் தர்சன்!
ஆத்திரம் மேலோங்க, முகம் பாறையென இறுக தன்னுடைய அறையிலிருந்து அவன் வெளியே வரவும் அவள் மாடியேறி முடிக்கவும் சரியாக இருந்தது.
திடீரென அவனை எதிரில் சந்திப்போம் என்று எதிர்பாராததில் ஒருநொடி திகைத்து நின்றாள் வெண்பா.
உடனேயே தன்னைச் சமாளித்துக்கொண்டவள், அவனைக் கண்டும் காணததுபோல் அலட்சியம் செய்து நடந்தாள்.
ஆத்திரத்தில் பல்லைக் கடித்தவன் அவள் முன்னே கையை நீட்டி மறித்தான்.
“ஏன் வெண்பா இப்படிச் செய்தாய்?”
நின்ற இடத்திலேயே நின்றபடி திரும்பியவள், “நான் என்ன செய்தேன்?” என்று எதிர்க்கேள்வி கேட்டாள்.
“நான் உன்னை விரும்புகிறேன் என்று தெரிந்தும் அமலனைக் கட்டிக் கொள்வதாக எதற்குச் சொன்னாய்?”
புருவங்களை உச்சிமேட்டுக்கே உயர்த்தினாள் வெண்பா.
“என்னது? நீங்கள் என்னை விரும்புகிறீர்களா? இது எப்போது?” அவள் குரலில் அளவுக்கு அதிகமாக வியப்பு வியாப்பித்திருந்தது. விழிகளோ அவனைப் பார்த்து ஏளனத்துடன் நகைத்தன.
“என்னடி, என்னை முட்டாளாக்கிவிட்டதாக நினைப்பா? நீதான் என் மனைவி என்று உன்னிடம் நான் சொல்லவில்லை?” என்றான் சீறலாக.
அவன் குரலில், அதில் தெரிந்த எரிமலையின் சீற்றத்தில் அவள் மேனியில் நடுக்கம் ஒன்று ஓடி மறைந்தது.
ஆனாலும் இவனால் என்னை என்ன செய்துவிட முடியும் என்று எண்ணியவள், திமிராகத் தலையைச் சிலுப்பிக் கொண்டாள்.
“எது? அன்று உன்னைத்தான் கட்டிக்கொள்வேன் என்று கட்டளையாகச் சொன்னீர்களே.. அதுவா? அதற்குப் பெயர்தான் ‘விரும்புவது’ போல. இது எனக்குத் தெரியாதே!” என்று எள்ளி நகையாடினாள்.
ஆத்திரத்தின் அளவு மிகுந்ததில் விழிகளை இறுக மூடித்திறந்தான் தர்சன்.
“ஏன் வெண்பா, கட்டளையாகச் சொன்னால் அது காதல் இல்லையா? மற்றவர்களைப் போன்று நயமாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அதற்காக என்னை விட்டுவிட்டு இன்னொருவனைக் கட்டுவாயா?” என்று வலி நிறைந்த குரலில் தன்னால் இயன்றவரை நிதானமாகக் கேட்டான் தர்சன்.
அப்படிப் பணிந்து பேசுபவனைப் பார்க்கவே அவள் மனது குதூகலித்தது!
இப்படி எத்தனை தடவைகள் அந்தச் சின்ன வயதில் அவனிடம் அவள் கெஞ்சியிருப்பாள், அழுதிருப்பாள், மன்றாடியிருப்பாள்.
அப்போதெல்லாம் அதைக் காதிலேயே வாங்காமல், அவள் செய்த சின்னச் சின்னப் பிழைகளுக்கு எல்லாம் மரத்தோடு மரமாக அவளை அவன் கயிற்றால் கட்டிய நாட்கள் எத்தனை, கம்பால் அடித்த நாட்கள் எத்தனை, அவளுக்கு இரவில் பயம் காட்டி நடுங்க வைத்த நாட்கள் தான் எத்தனை?
அது எல்லாவற்றுக்கும் திருப்பிக் கொடுக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடுவதா?
சிறு வயதில், அவனை எதிர்க்க முடியாத இயலாமையால் அவள் மனதில் கோபமாக விழுந்த விதை இன்று பெரும் வெறுப்பாக வளர்ந்து, ஆலமரமாக நின்று அவனைப் பழிவாங்கத் துடித்தது!
“அதென்ன இன்னொருவன் என்கிறீர்கள்? அமலன் உங்கள் அண்ணன் இல்லையா.. அவரைத்தானே எனக்கு மாப்பிள்ளையாகப் பார்த்திருக்கிறார்கள்.” என்று குதர்க்கமாகப் பேசி, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச முயன்றாள் வெண்பா.
“அவனை உன் மாப்பிள்ளை என்று இன்னொரு தடவை சொன்னாயானால் அடித்துப் பல்லைக் கழட்டி விடுவேன் ராஸ்கல்! நான் தான்டி உனக்கு மாப்பிள்ளை!” உக்கிரமாகச் சொன்னான் அவன்.
“இதென்ன பெருங்கொடுமையாக இருக்கிறது? இந்த வீட்டுப் பெரிய மனிதர்கள்தான் அமலனை எனக்குப் பேசி முடித்தார்கள். நீங்களானால் இப்படிச் சொல்கிறீர்கள். அப்படி என்றால் உங்கள் அம்மா அப்பாவின் பேச்சுக்கு மதிப்பே இல்லையா? அல்லது மதிக்கத் தேவையற்ற மனிதர்களா அவர்கள்?” என்று ஒருவிதக் குரூரத்துடன் அவள் கேட்டபோது வாயடைத்து நின்றான் தர்சன்.
அவன் நிலையைத் தனக்குச் சாதாமாக்கிக் கொண்டு அங்கிருந்து நடந்தாள் வெண்பா.
ஏதோ தோன்றவும் நின்று திரும்பியவள், “என் வாழ்க்கை என் விருப்பம்! எனக்கு விருப்பமானதை நான் செய்தே தீருவேன்! அதை யாராலும் மாற்றவே முடியாது!” என்றாள் அழுத்தம் திருத்தமான குரலில்.
அதற்கிடையில் தன்னைச் சமாளித்துக் கொண்ட தர்சனும், “நீ அளவுக்கு அதிகமாகவே பேசிவிட்டாய் வெண்பா. இனி உன் வாழ்க்கையில் நீ நினைப்பது எதுவுமே நடக்காது. அமலனுடன் உன் திருமணம் நடக்கவே நடக்காது!” என்றான் அவனும் அழுத்தமான குரலில்!
‘அது எனக்குத் தெரிந்த விஷயம்தானே!’ என்று உள்ளூர எள்ளலோடு எண்ணியவள், அவன் பேச்சை அலட்சியம் செய்து நடந்தாள்.
அடுத்தநாள் மாலை வேலை முடிந்து, களைத்துப்போய் வீட்டுக்கு வந்தான் தர்சன். முதல்நாள் தாய் சொன்னவைகளாலும், வெண்பாவின் எடுத்தெரிந்த பேச்சினாலும் இரவு முழுவதும் தூக்கமின்றித் தவித்தவனை அன்று வேலையும் நெட்டி முறித்தது.
நல்ல தூக்கமும் இன்றி, களைத்த முகத்துடன் காரிலிருந்து அவன் இறங்க, “தர்சா, நாங்கள் இங்கே இருக்கிறோம்..” என்று தோட்டத்தில் இருந்து குரல்கொடுத்தான் அமலன்.
மனச்சோர்வில் எதையும் கவனிக்காமல் வந்தவன், அவனது குரல் கேட்டு அங்கே திரும்பிப் பார்த்தான். பார்த்தவனின் முகம் மீண்டும் கோபத்திலும், கொதிப்பிலும் கடினப்பட்டது.
காரணம், அவனது தாய் தந்தையர் உட்பட, அத்தை மகேஸ்வரி முதல் விமலனின் குடும்பம் என்று எல்லோரும் அமர்ந்திருக்க, வெண்பாவோ அமலனுக்கு அருகில் அமர்ந்திருந்தாள்.
அதுமட்டுமின்றி இவனைக் கண்டதும் அவள் இதழ்களில் உதித்த ஏளனப் புன்னகையைக் கண்டவனுக்கோ கண்மண் தெரியாத கோபம் எழுந்தது.
அந்தக் கோபத்திலும் ஒன்றுமட்டும் மிக நன்றாகப் புரிந்தது தர்சனுக்கு.
அவனுக்கு அண்ணியாக வருபவள் அன்னையின் இடத்தில் அவன் நிறுத்த வேண்டியவள். அப்படி வெண்பாவை எந்தக் காலத்திலும் அவனால் நிறுத்தவும் முடியாது, நினைக்கவும் முடியாது!
அதோடு, இவனை வெறுப்பேற்றுவதற்காக என்று அவள் அமலனோடு நெருங்கிப்பழக, அவன் இவள்மேல் நேசம் கொண்டுவிட்டால் என்ன செய்வது?
அண்ணனும் தம்பியும் ஒருத்தியையே காதலிப்பதா? பிறகு இருவரில் யார் அவளைக் கட்டிக் கொண்டாலும் அடுத்தவரின் நிலை என்ன?
எனவே தான் நேற்றிரவு எடுத்த முடிவை உடனேயே செயலாக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்தவன், அவர்களை நோக்கி நிதானமாக நடந்தான்.
நேரே வெண்பாவை நெருங்கியவன் அடுத்து செய்த காரியத்தில் அங்கிருந்த அனைவருமே ஒருநொடி அதிர்ந்து உறைந்து நின்றனர்.
அடுத்தநொடியே,
“தர்சா..!”
“டேய்..!”
தன்னுடைய அறைக்குள் கூண்டுப் புலியென நடைபோட்டுக் கொண்டிருந்தான் தர்சன்.
அவனால் சற்று முன் அன்னை சொன்னதை ஜீரணிக்கவே முடியவில்லை. அந்தளவுக்கு மனம் கொதித்தது, ஆவேசம் கொண்டது, ஆத்திரப் பட்டது, வேதனையில் துடித்தது.
அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதையே சிந்திக்க இயலாமல் தவித்தான்.
இப்படிச் செய்துவிட்டாளே என்பதிலேயே நின்று உழன்றது அவன் எண்ணங்கள்!
தன் மனதை அவளிடம் சொல்லியும், நீதான் என் மனைவி என்று பட்டவர்த்தனமாக அறிவித்த பிறகும் அவனை மறுத்துவிட்டாளே!
அதுவும், அவனைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் இருந்தும் அதை வேண்டுமென்றே உதறியிருக்கிறாள்!
ஒரு ஆண்மகனாகத் தன்மானம் அடிபட்டு நின்றான்!
மிகவும் சாதுர்யமாகத் திட்டமிட்டு நடந்து கொண்டிருக்கிறாள் என்று நினைக்க நினைக்க மனம் கொதித்தது!
அவளைத் தனது காதலியாக, வருங்கால மனைவியாக அவன் நினைக்கத் தொடங்கியது நான்கைந்து நாட்களாகத்தான் என்றாலும், அதில் எத்தனை கற்பனைகள்? எத்தனை கனவுகள்!
அனைத்தும் பொய்யாவதா?
இருளின் மறைவில் அவளுடன் அவன் கண்ட இனிய கனவுகளை அவள் இன்னொருவனுடன் நிஜத்தில் வாழ்வதா? நினைக்கவே கசந்தது!
அதுவும் தன் தமையனையே கட்டி, தன் கண்ணெதிரிலேயே அவள் நடமாட, அதைப்பார்த்துக்கொண்டு அவன் நிற்பதா?
முதலில் அது முடியுமா அவனால்?
முடியாது என்று அடித்துச் சொன்னது மனது!
இனி என்ன செய்வது?
ஒரு வழியுமே புலப்படவில்லை.
தாய் தந்தையிடம் சொல்ல முடியாது. சொன்னால், அவளுக்கு உன்னைப் பிடிக்கவில்லையே என்பார்கள்.
அமலனிடம் தன் மனதைச் சொல்லி, அவனும் அவளைக் காதலிப்பதாகச் சொல்லிவிட்டால்.. ஒரு பெண்ணுக்காக அண்ணனும் தம்பியும் சண்டையிட்டுக் கொள்வதா?
அதன்பிறகு அவளை யார் மணந்தாலும் மற்றவர் அந்த வீட்டில் இருக்கத்தான் முடியுமா?
அனைத்து வழிகளையும் அல்லவா அடைத்துவிட்டாள்!
அப்போது யாரோ மாடியேறும் ஓசையில் அவன் நடை சட்டென நின்று காதுகள் கூர்மை பெற்றன.
அந்தக் காலடி ஓசையை வைத்தே மேலே வருவது வெண்பா என்பதைக் கண்டுகொண்டான் தர்சன்!
ஆத்திரம் மேலோங்க, முகம் பாறையென இறுக தன்னுடைய அறையிலிருந்து அவன் வெளியே வரவும் அவள் மாடியேறி முடிக்கவும் சரியாக இருந்தது.
திடீரென அவனை எதிரில் சந்திப்போம் என்று எதிர்பாராததில் ஒருநொடி திகைத்து நின்றாள் வெண்பா.
உடனேயே தன்னைச் சமாளித்துக்கொண்டவள், அவனைக் கண்டும் காணததுபோல் அலட்சியம் செய்து நடந்தாள்.
ஆத்திரத்தில் பல்லைக் கடித்தவன் அவள் முன்னே கையை நீட்டி மறித்தான்.
“ஏன் வெண்பா இப்படிச் செய்தாய்?”
நின்ற இடத்திலேயே நின்றபடி திரும்பியவள், “நான் என்ன செய்தேன்?” என்று எதிர்க்கேள்வி கேட்டாள்.
“நான் உன்னை விரும்புகிறேன் என்று தெரிந்தும் அமலனைக் கட்டிக் கொள்வதாக எதற்குச் சொன்னாய்?”
புருவங்களை உச்சிமேட்டுக்கே உயர்த்தினாள் வெண்பா.
“என்னது? நீங்கள் என்னை விரும்புகிறீர்களா? இது எப்போது?” அவள் குரலில் அளவுக்கு அதிகமாக வியப்பு வியாப்பித்திருந்தது. விழிகளோ அவனைப் பார்த்து ஏளனத்துடன் நகைத்தன.
“என்னடி, என்னை முட்டாளாக்கிவிட்டதாக நினைப்பா? நீதான் என் மனைவி என்று உன்னிடம் நான் சொல்லவில்லை?” என்றான் சீறலாக.
அவன் குரலில், அதில் தெரிந்த எரிமலையின் சீற்றத்தில் அவள் மேனியில் நடுக்கம் ஒன்று ஓடி மறைந்தது.
ஆனாலும் இவனால் என்னை என்ன செய்துவிட முடியும் என்று எண்ணியவள், திமிராகத் தலையைச் சிலுப்பிக் கொண்டாள்.
“எது? அன்று உன்னைத்தான் கட்டிக்கொள்வேன் என்று கட்டளையாகச் சொன்னீர்களே.. அதுவா? அதற்குப் பெயர்தான் ‘விரும்புவது’ போல. இது எனக்குத் தெரியாதே!” என்று எள்ளி நகையாடினாள்.
ஆத்திரத்தின் அளவு மிகுந்ததில் விழிகளை இறுக மூடித்திறந்தான் தர்சன்.
“ஏன் வெண்பா, கட்டளையாகச் சொன்னால் அது காதல் இல்லையா? மற்றவர்களைப் போன்று நயமாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அதற்காக என்னை விட்டுவிட்டு இன்னொருவனைக் கட்டுவாயா?” என்று வலி நிறைந்த குரலில் தன்னால் இயன்றவரை நிதானமாகக் கேட்டான் தர்சன்.
அப்படிப் பணிந்து பேசுபவனைப் பார்க்கவே அவள் மனது குதூகலித்தது!
இப்படி எத்தனை தடவைகள் அந்தச் சின்ன வயதில் அவனிடம் அவள் கெஞ்சியிருப்பாள், அழுதிருப்பாள், மன்றாடியிருப்பாள்.
அப்போதெல்லாம் அதைக் காதிலேயே வாங்காமல், அவள் செய்த சின்னச் சின்னப் பிழைகளுக்கு எல்லாம் மரத்தோடு மரமாக அவளை அவன் கயிற்றால் கட்டிய நாட்கள் எத்தனை, கம்பால் அடித்த நாட்கள் எத்தனை, அவளுக்கு இரவில் பயம் காட்டி நடுங்க வைத்த நாட்கள் தான் எத்தனை?
அது எல்லாவற்றுக்கும் திருப்பிக் கொடுக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடுவதா?
சிறு வயதில், அவனை எதிர்க்க முடியாத இயலாமையால் அவள் மனதில் கோபமாக விழுந்த விதை இன்று பெரும் வெறுப்பாக வளர்ந்து, ஆலமரமாக நின்று அவனைப் பழிவாங்கத் துடித்தது!
“அதென்ன இன்னொருவன் என்கிறீர்கள்? அமலன் உங்கள் அண்ணன் இல்லையா.. அவரைத்தானே எனக்கு மாப்பிள்ளையாகப் பார்த்திருக்கிறார்கள்.” என்று குதர்க்கமாகப் பேசி, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச முயன்றாள் வெண்பா.
“அவனை உன் மாப்பிள்ளை என்று இன்னொரு தடவை சொன்னாயானால் அடித்துப் பல்லைக் கழட்டி விடுவேன் ராஸ்கல்! நான் தான்டி உனக்கு மாப்பிள்ளை!” உக்கிரமாகச் சொன்னான் அவன்.
“இதென்ன பெருங்கொடுமையாக இருக்கிறது? இந்த வீட்டுப் பெரிய மனிதர்கள்தான் அமலனை எனக்குப் பேசி முடித்தார்கள். நீங்களானால் இப்படிச் சொல்கிறீர்கள். அப்படி என்றால் உங்கள் அம்மா அப்பாவின் பேச்சுக்கு மதிப்பே இல்லையா? அல்லது மதிக்கத் தேவையற்ற மனிதர்களா அவர்கள்?” என்று ஒருவிதக் குரூரத்துடன் அவள் கேட்டபோது வாயடைத்து நின்றான் தர்சன்.
அவன் நிலையைத் தனக்குச் சாதாமாக்கிக் கொண்டு அங்கிருந்து நடந்தாள் வெண்பா.
ஏதோ தோன்றவும் நின்று திரும்பியவள், “என் வாழ்க்கை என் விருப்பம்! எனக்கு விருப்பமானதை நான் செய்தே தீருவேன்! அதை யாராலும் மாற்றவே முடியாது!” என்றாள் அழுத்தம் திருத்தமான குரலில்.
அதற்கிடையில் தன்னைச் சமாளித்துக் கொண்ட தர்சனும், “நீ அளவுக்கு அதிகமாகவே பேசிவிட்டாய் வெண்பா. இனி உன் வாழ்க்கையில் நீ நினைப்பது எதுவுமே நடக்காது. அமலனுடன் உன் திருமணம் நடக்கவே நடக்காது!” என்றான் அவனும் அழுத்தமான குரலில்!
‘அது எனக்குத் தெரிந்த விஷயம்தானே!’ என்று உள்ளூர எள்ளலோடு எண்ணியவள், அவன் பேச்சை அலட்சியம் செய்து நடந்தாள்.
அடுத்தநாள் மாலை வேலை முடிந்து, களைத்துப்போய் வீட்டுக்கு வந்தான் தர்சன். முதல்நாள் தாய் சொன்னவைகளாலும், வெண்பாவின் எடுத்தெரிந்த பேச்சினாலும் இரவு முழுவதும் தூக்கமின்றித் தவித்தவனை அன்று வேலையும் நெட்டி முறித்தது.
நல்ல தூக்கமும் இன்றி, களைத்த முகத்துடன் காரிலிருந்து அவன் இறங்க, “தர்சா, நாங்கள் இங்கே இருக்கிறோம்..” என்று தோட்டத்தில் இருந்து குரல்கொடுத்தான் அமலன்.
மனச்சோர்வில் எதையும் கவனிக்காமல் வந்தவன், அவனது குரல் கேட்டு அங்கே திரும்பிப் பார்த்தான். பார்த்தவனின் முகம் மீண்டும் கோபத்திலும், கொதிப்பிலும் கடினப்பட்டது.
காரணம், அவனது தாய் தந்தையர் உட்பட, அத்தை மகேஸ்வரி முதல் விமலனின் குடும்பம் என்று எல்லோரும் அமர்ந்திருக்க, வெண்பாவோ அமலனுக்கு அருகில் அமர்ந்திருந்தாள்.
அதுமட்டுமின்றி இவனைக் கண்டதும் அவள் இதழ்களில் உதித்த ஏளனப் புன்னகையைக் கண்டவனுக்கோ கண்மண் தெரியாத கோபம் எழுந்தது.
அந்தக் கோபத்திலும் ஒன்றுமட்டும் மிக நன்றாகப் புரிந்தது தர்சனுக்கு.
அவனுக்கு அண்ணியாக வருபவள் அன்னையின் இடத்தில் அவன் நிறுத்த வேண்டியவள். அப்படி வெண்பாவை எந்தக் காலத்திலும் அவனால் நிறுத்தவும் முடியாது, நினைக்கவும் முடியாது!
அதோடு, இவனை வெறுப்பேற்றுவதற்காக என்று அவள் அமலனோடு நெருங்கிப்பழக, அவன் இவள்மேல் நேசம் கொண்டுவிட்டால் என்ன செய்வது?
அண்ணனும் தம்பியும் ஒருத்தியையே காதலிப்பதா? பிறகு இருவரில் யார் அவளைக் கட்டிக் கொண்டாலும் அடுத்தவரின் நிலை என்ன?
எனவே தான் நேற்றிரவு எடுத்த முடிவை உடனேயே செயலாக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்தவன், அவர்களை நோக்கி நிதானமாக நடந்தான்.
நேரே வெண்பாவை நெருங்கியவன் அடுத்து செய்த காரியத்தில் அங்கிருந்த அனைவருமே ஒருநொடி அதிர்ந்து உறைந்து நின்றனர்.
அடுத்தநொடியே,
“தர்சா..!”
“டேய்..!”
Last edited by a moderator: