அத்தியாயம்-7
ஜன்னல் வழியே தெரிந்த தெளிவான வானத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தான் தர்சன். அவன் உள்ளமோ என்னவென்று பிரித்தறிய முடியாத பல உணர்வுகளின் கலவைகளால் தெளிவற்றுக் கிடந்தது.
வெண்பா அவனது மனைவியாகி இன்றோடு இரண்டு வாரங்கள் ஓடியிருந்தது. ஆனால், தாலி கட்டிய அன்று அவளைப் பார்த்ததற்குப் பிறகு இன்றுவரை அவன் அவளைப் பார்க்கவே இல்லை.
அதற்கு அவன் முயலவில்லை என்பதுதான் உண்மை!
வீட்டுக்குச் செல்வதைக் கூட முடிந்தவரை குறைத்துவிட்டு, அவர்களின் அங்காடியே கதி என்று கிடந்தான்.
அதுநாள் வரை அவனைக் கடிந்துதன்னும் ஒரு வார்த்தை பேசியிராத தந்தை அன்று அவனிடம் காட்டிய கடுமையையும், அவர் வீசிய கடும் சொற்களையும் அவனால் இன்னமும் மறக்க இயலவில்லை. வீட்டினரை நிமிர்ந்து பார்க்கவே வெட்கினான். அவர்கள் சாதரணமாகப் பார்த்தாலே ஏதோ அற்ப பதரைப் பார்ப்பது போன்றே தோன்றியது.
அப்படித் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய வெண்பாவின் மீது கடுங் கோபத்தில் இருந்தான்.
அவள் அமலனுடனான திருமணத்துக்குச் சம்மதம் சொல்லாமல் இருந்திருக்க, அவன் தன் மனதை அவளுக்கு மெல்ல மெல்லப் புரிய வைத்திருப்பானே! அவளையும் அவனைக் காதலிக்க வைத்திருப்பானே!
அதையெல்லாம் கெடுத்தது அவளது அவசரப் புத்தியல்லவா. ஆனால், இன்று குற்றவாளியாக அவனல்லவா நிற்கிறான். வீட்டினர் தரமற்றவனாக அவனைப் பார்க்கும்படி செய்துவிட்டாளே!
தாலி கட்டியவளை மனைவியாக நெருங்கவும் முடியாமல், அவள் மீது கொண்ட கோபத்தைக் காட்டவும் முடியாமல் கடையே கதியென்று கிடக்கும் தன் நிலையை நினைத்தும் அவனுக்குச் சலிப்பாக இருந்தது.
அலுத்துக் களைத்து வீட்டுக்குப் போனால் அவன் அம்மாவோ, “வெண்பா கோபமாக இருக்கிறாள். அவளைச் சமாதானப்படுத்து.” என்று வற்புறுத்திக் கொண்டிருந்தார்.
அவர் மட்டுமல்ல யாரைப் பார்த்தாலும் ‘வெண்பாவை சமாதானப் படுத்துடா..’ என்கிற வார்த்தைகளையே திரும்பத் திரும்பச் சொல்லினர். இதில் இலவசப் புத்திமதி வேறு.
நொந்தே போனான் தர்சன்!
அவனுக்கும் அவளைப் பார்க்கப் பிடிக்காமலோ, பேசப் பிடிக்காமலோ அல்லதான்.
ஆனால், மனதில் இருக்கும் கோபத்தில் எதையாவது கடுமையாகச் சொல்லிவிடுவோமோ என்று பயந்தான்.
காதலைக் கூட ஒழுங்காகச் சொல்லத் தெரியாதவன் என்று அன்று அவள் மறைமுகமாகக் குட்டியது வேறு மனதுக்குள் இருந்து குடைந்தது.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாது யோசித்தபடி இருந்தவனின் கைபேசி சத்தமிடவும் அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்தான்.
“சொல்லுண்ணா..” அழைத்தது விமலன் என்றறிந்து சொன்னவனின் குரலில் சுரத்து மருந்துக்கும் இல்லை.
“உன் மனதில் நீ என்னதான்டா நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நடுச்சாமத்தில் வந்து தங்கிவிட்டுப் போவதற்கு வீடு என்ன லாட்ஜா? இப்படியே கடைதான் கதி என்று இன்னும் எத்தனை நாட்களுக்குக் கிடக்கப் போகிறாய்? ஒரு பிரச்சினை என்று வந்தால் அதைத் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு இப்படி ஓடி ஒழிந்தால் எல்லாம் சரியாகிவிடுமா?” என்று கோபப்பட்டான் தமையன்.
“எனக்குத் தைரியம் இல்லை என்று உன்னிடம் சொன்னேனா? சும்மா ஓடினேன், ஒழிந்தேன் என்று வாய்க்கு வந்ததைப் பேசாதே!” என்று எரிந்து விழுந்தான் தர்சன்.
“எனக்கு வேண்டுதல் பார், வாய்க்கு வந்ததைப் பேச. மரியாதையாக வீட்டுக்கு வந்து உன் மனைவியைச் சமாதனாப்படுத்தும் வழியைப் பார். இனியாவது பொறுப்புள்ள மனிதனாக நடந்துகொள். எதற்காக வெண்பாவின் கழுத்தில் அந்தப் பாடுபட்டுத் தாலியைக் கட்டினாய்? இப்படி நீயொரு பக்கமும் அவளொரு பக்கமுமாக இருக்கவா?” என்று விமலன் கேட்டபோது பதில் சொல்ல இயலவில்லை அவனால்.
அதோடு, அவளைத் தன் மனைவி என்று தமையன் சுட்டியது வேறு ஏதோ ஒரு வகையில் அவன் மனதைப் பாதித்தது.
இன்னுமே வெண்பாவின் மீது கோபம் இருந்தாலும் அவளைப் பார்க்கவேண்டும் போல், அவளுடன் பேசவேண்டும் போல், அவளைச் சமாதானப் படுத்தவேண்டும் போல் ஒரு உந்துதலை அந்த வார்த்தை அவனுக்குள் உண்டாக்கிற்று!
அதைத் தமையனிடம் வாய்விட்டுச் சொல்லப் பிடிக்காமல் அவன் அமைதி காக்க, “டேய்! நான் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்கிறாயா இல்லையா? அல்லது இவன் ஒரு விசரன், ஏதோ உளறுகிறான் என்று நினைக்கிறாயா?” என்றான் விமலன் கடுப்புடன்.
“கேட்கமாட்டேன் என்று சொன்னால் மட்டும் விடவா போகிறாய். அதனால் சொல்லித் தொலை!” என்றான், தன் மனத்தைக் காட்டிக் கொள்ளாமல்.
அந்தப் பக்கம் இதைக் கேட்ட விமலானோ, “டேய்! உன்னை..!” என்று பல்லைக் கடித்தான்.
பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில், “டேய் புரிந்துகொள்ளுடா! நீ இப்படி இருப்பதைப் பார்த்துக்கொண்டு நாங்கள் எப்படிடா நிம்மதியாக இருப்பது? வீட்டில் ஆளாளுக்கு ஒவ்வொரு மூலை என்று இருக்கிறோம். எவ்வளவு கலகலப்பாக இருந்த வீடு. இப்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அதைப் பழையபடி மாற்றுவது உன் கையில்தான் இருக்கிறது தர்சா. இதுக்குமேல் எது செய்வதாக இருந்தாலும் உன் விருப்பம்!” என்ற விமலன், அவனின் பதிலை எதிர்பாராது கைபேசியை அணைத்துவிட்டிருந்தான்.
தமையனின் பேச்சில் வீட்டினரைப் பற்றி யோசிக்கத் தவறிவிட்டேனே என்று குன்றிப்போனான் தர்சன்.
அம்மா, அப்பா, அமலன் என்று ஒவ்வொருவரினதும் முகங்களும் மனக்கண்ணில் வர, அதற்கு மேலும் அங்கிருக்கப் பிடிக்காமல் வீட்டுக்கு விரைந்தான்.
இரண்டுவாரப் பிரிவா, அல்லது ஆழ்மனத்தின் ஏக்கத்தைத் தமையனின் பேச்சுக் கிளறிவிட்டதா, ஏதோ ஒன்று! வெண்பாவைக் காண மனம் ஏங்க வீட்டுக்குள் நுழைந்தவனின் பார்வையில், கையிலிருந்த போட்டோவைப் பார்த்தபடி அமர்ந்திருந்த அன்னை பட்டார்.
அவரின் முகத்திலிருந்த வாட்டம் மனதைத் தாக்க, “அம்மா..!” என்று அழைத்தான் தர்சன்.
நிமிர்ந்து பார்த்த மஞ்சுளாவின் விழிகளில் சட்டெனக் கோபத்தின் சாயல். வேகமாக எழுந்து மகனருகில் வந்தவர், “இந்தா! இந்தப் போட்டோவைப் பார்! இதுதான் அமலனுக்குப் பார்த்திருக்கும் பெண். இவளையும் நீ காதலிக்கிறாயா இல்லையா என்று இப்போதே சொல்லிவிடு. பிறகு, உன்னிடம் சொல்லாமல் நாங்கள் முடிவுசெய்ய நீ அவளின் கழுத்திலும் தாலியைக் காட்டிவிட்டாய் என்றால், திரும்பவும் என்னால் அமலனுக்கு இன்னொரு பெண்ணைத் தேடமுடியாது!” என்று பட்டெனச் சொல்லிவிட்டார்.
அதைக்கேட்ட தர்சனோ சாட்டையடி வாங்கியவனாய், விருட்டென நிமிர்ந்து வலி நிறைந்த விழிகளால் அன்னையை வெறித்தான். அவன் முகமோ அவமானத்தில் குன்றிக் குறுகிச் சிதைந்தது.
காணும் பெண்களின் கழுத்திலெல்லாம் தாலியைக் கட்டுமளவுக்குத் தரம் தாழ்ந்தவனா அவன்?
மகனின் விழிகளில் தெரிந்த அடிபட்ட தோற்றத்தைப் பார்த்தவருக்கு, அப்போதுதான் தான் என்ன சொன்னோம் என்பதே உறைத்தது.
அது உறைத்த மாத்திரத்தில் விழிகள் குளமாக, மகனின் கன்னங்களைப் பற்றியவர், “கடவுளே..! என் பிள்ளையின் மனதை நானே நோகடித்துவிட்டேனா.. தர்சா அம்மா சொன்னதைப் பொருட்படுத்தாதே கண்ணா. தெரியாமல் வாயில் வந்ததை உளறிவிட்டேனப்பா.. ” என்று பரிதவித்தார்.
தன்னை அடக்க முயன்று விழிகளை இறுக மூடித் திறந்தான். அவரின் கையைத் தன் கன்னத்தோடு அழுந்த பற்றி, “நீங்கள் கூட என்னைத் தப்பாக நினைக்கிறீர்களே அம்மா. நான் அப்படிப்பட்டவனா அம்மா?” என்று தாங்கமுடியாமல் கேட்டான்.
“ஐயோ.. இல்லை கண்ணா! என் பிள்ளை சொக்கத் தங்கமாச்சே! அம்மா ஏதோ கோபத்தில் சொல்லிவிட்டேன் அப்பு. அப்பா ஒருபக்கம், அமலன் ஒருபக்கம், வெண்பா ஒருபக்கம் என்று இருக்கிறார்கள். இதற்குக் காரணமான நீயாவது சந்தோசமாக இருந்தாலும் பரவாயில்லை. அதுவும் இல்லை! இப்படி எல்லோரும் ஒவ்வொரு திசையாக இருக்கிறீர்களே என்கிற கோபத்தில் யோசிக்காமல் சொல்லிவிட்டேன் தர்சா...” என்றவரின் கண்ணீர் கன்னத்தில் இறங்கியது.
மனம் ரணமாகிப் போயிருந்தாலும் அதைத் தாய்க்குக் காட்டாமல் மறைத்துக் கொண்டவன், “விடுங்கம்மா. ஏதோ கோபத்தில் தானே சொன்னீர்கள். அதற்காக அழுவீர்களா…” என்று அவரைத் தேற்றி, அவர் கண்களையும் துடைத்துவிட்டான்.
“அம்மா மேல் கோபமில்லையே..” அப்போதும் உள்ளே போய்விட்ட குரலில் தாய் கேட்க, “இல்லைம்மா..” என்றான் மனதை மறைத்து.
அதன் பிறகே மஞ்சுளாவின் முகம் ஓரளவுக்குத் தெளிந்தது.
“போய் வெண்பாவை சமாதானப்படுத்து தர்சா. அவள் இந்த இரண்டு வாரமாக யாருடனும் கதைக்கவில்லை. ராகினி மட்டும்தான் பிடிவாதமாக அவளைச் சாப்பிட வைக்கிறாள். மகியைக் கூடப் புறக்கணித்துவிட்டாள். போப்பா.. போய் அவளோடு கதை. கதைத்து உங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு சந்தோசமாக இருங்கள்.” என்றார் அன்னையாக.
என்றும் அதைக் காதில் வாங்காமல் போகிறவன் இன்று, “சரிம்மா..” என்றுவிட்டு வெண்பாவின் அறையை நோக்கி நடந்தான்.
இனியாவது நடப்பவை அனைத்தும் நல்லதாக நடக்கட்டும் என்று எண்ணியபடி செல்லும் மகனையே பார்த்துக்கொண்டு நின்றவர், “தர்சா..” என்று மெல்ல அழைத்தார்.
நடந்துகொண்டிருந்தவன் நின்று திரும்பிக் கேள்வியாகப் பார்த்தான்.
“அவள் ஏதாவது கோபமாகப் பேசினாலும் கொஞ்சம் பொறுமையாகப் பேசு. ஏனென்றால் பிழை உன் பக்கம் தான். அதனால் உன் முன்கோபத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அவளிடம் தன்மையாகப் பேசு.” என்றார் மஞ்சுளா.
சரியென்பதாகத் தலையை அசைத்துவிட்டு மனைவியிடம் சென்றான் தர்சன்.
ஜன்னல் வழியே தெரிந்த தெளிவான வானத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தான் தர்சன். அவன் உள்ளமோ என்னவென்று பிரித்தறிய முடியாத பல உணர்வுகளின் கலவைகளால் தெளிவற்றுக் கிடந்தது.
வெண்பா அவனது மனைவியாகி இன்றோடு இரண்டு வாரங்கள் ஓடியிருந்தது. ஆனால், தாலி கட்டிய அன்று அவளைப் பார்த்ததற்குப் பிறகு இன்றுவரை அவன் அவளைப் பார்க்கவே இல்லை.
அதற்கு அவன் முயலவில்லை என்பதுதான் உண்மை!
வீட்டுக்குச் செல்வதைக் கூட முடிந்தவரை குறைத்துவிட்டு, அவர்களின் அங்காடியே கதி என்று கிடந்தான்.
அதுநாள் வரை அவனைக் கடிந்துதன்னும் ஒரு வார்த்தை பேசியிராத தந்தை அன்று அவனிடம் காட்டிய கடுமையையும், அவர் வீசிய கடும் சொற்களையும் அவனால் இன்னமும் மறக்க இயலவில்லை. வீட்டினரை நிமிர்ந்து பார்க்கவே வெட்கினான். அவர்கள் சாதரணமாகப் பார்த்தாலே ஏதோ அற்ப பதரைப் பார்ப்பது போன்றே தோன்றியது.
அப்படித் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய வெண்பாவின் மீது கடுங் கோபத்தில் இருந்தான்.
அவள் அமலனுடனான திருமணத்துக்குச் சம்மதம் சொல்லாமல் இருந்திருக்க, அவன் தன் மனதை அவளுக்கு மெல்ல மெல்லப் புரிய வைத்திருப்பானே! அவளையும் அவனைக் காதலிக்க வைத்திருப்பானே!
அதையெல்லாம் கெடுத்தது அவளது அவசரப் புத்தியல்லவா. ஆனால், இன்று குற்றவாளியாக அவனல்லவா நிற்கிறான். வீட்டினர் தரமற்றவனாக அவனைப் பார்க்கும்படி செய்துவிட்டாளே!
தாலி கட்டியவளை மனைவியாக நெருங்கவும் முடியாமல், அவள் மீது கொண்ட கோபத்தைக் காட்டவும் முடியாமல் கடையே கதியென்று கிடக்கும் தன் நிலையை நினைத்தும் அவனுக்குச் சலிப்பாக இருந்தது.
அலுத்துக் களைத்து வீட்டுக்குப் போனால் அவன் அம்மாவோ, “வெண்பா கோபமாக இருக்கிறாள். அவளைச் சமாதானப்படுத்து.” என்று வற்புறுத்திக் கொண்டிருந்தார்.
அவர் மட்டுமல்ல யாரைப் பார்த்தாலும் ‘வெண்பாவை சமாதானப் படுத்துடா..’ என்கிற வார்த்தைகளையே திரும்பத் திரும்பச் சொல்லினர். இதில் இலவசப் புத்திமதி வேறு.
நொந்தே போனான் தர்சன்!
அவனுக்கும் அவளைப் பார்க்கப் பிடிக்காமலோ, பேசப் பிடிக்காமலோ அல்லதான்.
ஆனால், மனதில் இருக்கும் கோபத்தில் எதையாவது கடுமையாகச் சொல்லிவிடுவோமோ என்று பயந்தான்.
காதலைக் கூட ஒழுங்காகச் சொல்லத் தெரியாதவன் என்று அன்று அவள் மறைமுகமாகக் குட்டியது வேறு மனதுக்குள் இருந்து குடைந்தது.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாது யோசித்தபடி இருந்தவனின் கைபேசி சத்தமிடவும் அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்தான்.
“சொல்லுண்ணா..” அழைத்தது விமலன் என்றறிந்து சொன்னவனின் குரலில் சுரத்து மருந்துக்கும் இல்லை.
“உன் மனதில் நீ என்னதான்டா நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நடுச்சாமத்தில் வந்து தங்கிவிட்டுப் போவதற்கு வீடு என்ன லாட்ஜா? இப்படியே கடைதான் கதி என்று இன்னும் எத்தனை நாட்களுக்குக் கிடக்கப் போகிறாய்? ஒரு பிரச்சினை என்று வந்தால் அதைத் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு இப்படி ஓடி ஒழிந்தால் எல்லாம் சரியாகிவிடுமா?” என்று கோபப்பட்டான் தமையன்.
“எனக்குத் தைரியம் இல்லை என்று உன்னிடம் சொன்னேனா? சும்மா ஓடினேன், ஒழிந்தேன் என்று வாய்க்கு வந்ததைப் பேசாதே!” என்று எரிந்து விழுந்தான் தர்சன்.
“எனக்கு வேண்டுதல் பார், வாய்க்கு வந்ததைப் பேச. மரியாதையாக வீட்டுக்கு வந்து உன் மனைவியைச் சமாதனாப்படுத்தும் வழியைப் பார். இனியாவது பொறுப்புள்ள மனிதனாக நடந்துகொள். எதற்காக வெண்பாவின் கழுத்தில் அந்தப் பாடுபட்டுத் தாலியைக் கட்டினாய்? இப்படி நீயொரு பக்கமும் அவளொரு பக்கமுமாக இருக்கவா?” என்று விமலன் கேட்டபோது பதில் சொல்ல இயலவில்லை அவனால்.
அதோடு, அவளைத் தன் மனைவி என்று தமையன் சுட்டியது வேறு ஏதோ ஒரு வகையில் அவன் மனதைப் பாதித்தது.
இன்னுமே வெண்பாவின் மீது கோபம் இருந்தாலும் அவளைப் பார்க்கவேண்டும் போல், அவளுடன் பேசவேண்டும் போல், அவளைச் சமாதானப் படுத்தவேண்டும் போல் ஒரு உந்துதலை அந்த வார்த்தை அவனுக்குள் உண்டாக்கிற்று!
அதைத் தமையனிடம் வாய்விட்டுச் சொல்லப் பிடிக்காமல் அவன் அமைதி காக்க, “டேய்! நான் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்கிறாயா இல்லையா? அல்லது இவன் ஒரு விசரன், ஏதோ உளறுகிறான் என்று நினைக்கிறாயா?” என்றான் விமலன் கடுப்புடன்.
“கேட்கமாட்டேன் என்று சொன்னால் மட்டும் விடவா போகிறாய். அதனால் சொல்லித் தொலை!” என்றான், தன் மனத்தைக் காட்டிக் கொள்ளாமல்.
அந்தப் பக்கம் இதைக் கேட்ட விமலானோ, “டேய்! உன்னை..!” என்று பல்லைக் கடித்தான்.
பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில், “டேய் புரிந்துகொள்ளுடா! நீ இப்படி இருப்பதைப் பார்த்துக்கொண்டு நாங்கள் எப்படிடா நிம்மதியாக இருப்பது? வீட்டில் ஆளாளுக்கு ஒவ்வொரு மூலை என்று இருக்கிறோம். எவ்வளவு கலகலப்பாக இருந்த வீடு. இப்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அதைப் பழையபடி மாற்றுவது உன் கையில்தான் இருக்கிறது தர்சா. இதுக்குமேல் எது செய்வதாக இருந்தாலும் உன் விருப்பம்!” என்ற விமலன், அவனின் பதிலை எதிர்பாராது கைபேசியை அணைத்துவிட்டிருந்தான்.
தமையனின் பேச்சில் வீட்டினரைப் பற்றி யோசிக்கத் தவறிவிட்டேனே என்று குன்றிப்போனான் தர்சன்.
அம்மா, அப்பா, அமலன் என்று ஒவ்வொருவரினதும் முகங்களும் மனக்கண்ணில் வர, அதற்கு மேலும் அங்கிருக்கப் பிடிக்காமல் வீட்டுக்கு விரைந்தான்.
இரண்டுவாரப் பிரிவா, அல்லது ஆழ்மனத்தின் ஏக்கத்தைத் தமையனின் பேச்சுக் கிளறிவிட்டதா, ஏதோ ஒன்று! வெண்பாவைக் காண மனம் ஏங்க வீட்டுக்குள் நுழைந்தவனின் பார்வையில், கையிலிருந்த போட்டோவைப் பார்த்தபடி அமர்ந்திருந்த அன்னை பட்டார்.
அவரின் முகத்திலிருந்த வாட்டம் மனதைத் தாக்க, “அம்மா..!” என்று அழைத்தான் தர்சன்.
நிமிர்ந்து பார்த்த மஞ்சுளாவின் விழிகளில் சட்டெனக் கோபத்தின் சாயல். வேகமாக எழுந்து மகனருகில் வந்தவர், “இந்தா! இந்தப் போட்டோவைப் பார்! இதுதான் அமலனுக்குப் பார்த்திருக்கும் பெண். இவளையும் நீ காதலிக்கிறாயா இல்லையா என்று இப்போதே சொல்லிவிடு. பிறகு, உன்னிடம் சொல்லாமல் நாங்கள் முடிவுசெய்ய நீ அவளின் கழுத்திலும் தாலியைக் காட்டிவிட்டாய் என்றால், திரும்பவும் என்னால் அமலனுக்கு இன்னொரு பெண்ணைத் தேடமுடியாது!” என்று பட்டெனச் சொல்லிவிட்டார்.
அதைக்கேட்ட தர்சனோ சாட்டையடி வாங்கியவனாய், விருட்டென நிமிர்ந்து வலி நிறைந்த விழிகளால் அன்னையை வெறித்தான். அவன் முகமோ அவமானத்தில் குன்றிக் குறுகிச் சிதைந்தது.
காணும் பெண்களின் கழுத்திலெல்லாம் தாலியைக் கட்டுமளவுக்குத் தரம் தாழ்ந்தவனா அவன்?
மகனின் விழிகளில் தெரிந்த அடிபட்ட தோற்றத்தைப் பார்த்தவருக்கு, அப்போதுதான் தான் என்ன சொன்னோம் என்பதே உறைத்தது.
அது உறைத்த மாத்திரத்தில் விழிகள் குளமாக, மகனின் கன்னங்களைப் பற்றியவர், “கடவுளே..! என் பிள்ளையின் மனதை நானே நோகடித்துவிட்டேனா.. தர்சா அம்மா சொன்னதைப் பொருட்படுத்தாதே கண்ணா. தெரியாமல் வாயில் வந்ததை உளறிவிட்டேனப்பா.. ” என்று பரிதவித்தார்.
தன்னை அடக்க முயன்று விழிகளை இறுக மூடித் திறந்தான். அவரின் கையைத் தன் கன்னத்தோடு அழுந்த பற்றி, “நீங்கள் கூட என்னைத் தப்பாக நினைக்கிறீர்களே அம்மா. நான் அப்படிப்பட்டவனா அம்மா?” என்று தாங்கமுடியாமல் கேட்டான்.
“ஐயோ.. இல்லை கண்ணா! என் பிள்ளை சொக்கத் தங்கமாச்சே! அம்மா ஏதோ கோபத்தில் சொல்லிவிட்டேன் அப்பு. அப்பா ஒருபக்கம், அமலன் ஒருபக்கம், வெண்பா ஒருபக்கம் என்று இருக்கிறார்கள். இதற்குக் காரணமான நீயாவது சந்தோசமாக இருந்தாலும் பரவாயில்லை. அதுவும் இல்லை! இப்படி எல்லோரும் ஒவ்வொரு திசையாக இருக்கிறீர்களே என்கிற கோபத்தில் யோசிக்காமல் சொல்லிவிட்டேன் தர்சா...” என்றவரின் கண்ணீர் கன்னத்தில் இறங்கியது.
மனம் ரணமாகிப் போயிருந்தாலும் அதைத் தாய்க்குக் காட்டாமல் மறைத்துக் கொண்டவன், “விடுங்கம்மா. ஏதோ கோபத்தில் தானே சொன்னீர்கள். அதற்காக அழுவீர்களா…” என்று அவரைத் தேற்றி, அவர் கண்களையும் துடைத்துவிட்டான்.
“அம்மா மேல் கோபமில்லையே..” அப்போதும் உள்ளே போய்விட்ட குரலில் தாய் கேட்க, “இல்லைம்மா..” என்றான் மனதை மறைத்து.
அதன் பிறகே மஞ்சுளாவின் முகம் ஓரளவுக்குத் தெளிந்தது.
“போய் வெண்பாவை சமாதானப்படுத்து தர்சா. அவள் இந்த இரண்டு வாரமாக யாருடனும் கதைக்கவில்லை. ராகினி மட்டும்தான் பிடிவாதமாக அவளைச் சாப்பிட வைக்கிறாள். மகியைக் கூடப் புறக்கணித்துவிட்டாள். போப்பா.. போய் அவளோடு கதை. கதைத்து உங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு சந்தோசமாக இருங்கள்.” என்றார் அன்னையாக.
என்றும் அதைக் காதில் வாங்காமல் போகிறவன் இன்று, “சரிம்மா..” என்றுவிட்டு வெண்பாவின் அறையை நோக்கி நடந்தான்.
இனியாவது நடப்பவை அனைத்தும் நல்லதாக நடக்கட்டும் என்று எண்ணியபடி செல்லும் மகனையே பார்த்துக்கொண்டு நின்றவர், “தர்சா..” என்று மெல்ல அழைத்தார்.
நடந்துகொண்டிருந்தவன் நின்று திரும்பிக் கேள்வியாகப் பார்த்தான்.
“அவள் ஏதாவது கோபமாகப் பேசினாலும் கொஞ்சம் பொறுமையாகப் பேசு. ஏனென்றால் பிழை உன் பக்கம் தான். அதனால் உன் முன்கோபத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அவளிடம் தன்மையாகப் பேசு.” என்றார் மஞ்சுளா.
சரியென்பதாகத் தலையை அசைத்துவிட்டு மனைவியிடம் சென்றான் தர்சன்.
Last edited by a moderator: