உந்தன் உயிராக 11
வீட்டிற்குள் வந்த ராஜேந்திரன் தன்னை மோதியதுகூட தெரியாது வேகமாக வெளியேறும் திகழையே பார்த்தபடி நின்றுவிட, மகனின் பின்னே வந்த கல்யாணி தன்னுடைய அண்ணனைப் பார்த்ததும் தொண்டையை செருமினார்.
"வாங்ண்ணா!" என்றழைத்த கல்யாணியின் குரலில் பார்வையை திருப்பி வீட்டிற்குள் வந்தார் ராஜேந்திரன்.
"சட்டுன்னு நெடு நெடுன்னு வளர்ந்துபுட்டான்" என்று திகழைப்பற்றி பேசியவராக ராஜேந்திரன் இருக்கையில் அமர,
"என்னங்ண்ணா திடீர்னு?" என்றவாறே அவரின் எதிரில் அமர்ந்தார் கல்யாணி.
"மாப்பிள்ளை இல்லையாம்மா?" என்று ராஜேந்திரன் கேட்க,
"என்ன விசயமாங்ண்ணா?" என்றார் கல்யாணி.
"எல்லாம் தெரிய வேண்டிய விசயத்தை தெரியப்படுத்தனுமே" என்ற ராஜேந்திரன், "உன்ற அண்ணி அங்க தெவசம் பண்ணிக்கிட்டு இருக்கா. அதான் அவளுக்கும், உன்ற புருஷனுக்கு மட்டும் உண்மையை சொல்லிப்புடுவோம்" என்றார்.
அவர் சொல்லி முடித்ததுதான், அங்கு முற்றத்தில் வைத்திருந்த பூந்தொட்டியை எடுத்து ராஜேந்திரன் தலைமீது போட வந்துவிட்டார் கல்யாணி.
"அய்யோ கல்யாணி என்ன பண்ற?" என்று ராஜேந்திரன் சுதாரித்து தொட்டியை பிடுங்கி கீழே வைத்தார்.
"என்ன உண்மை... எந்த உண்மை" என்று கேட்ட கல்யாணி, "அதெல்லாம் ஒண்ணுமில்லை. காலத்துக்கும் யார்கிட்டவும் சொல்லமாட்டேன்னு சொல்லியிருக்கீங்" என்றார்.
"சொன்னதான். என்ட்ர மனசுக்குமே இந்த விஷயம் கடைசி வரைக்கும் யாருக்கும் தெரியக்கூடாதுங்கிறது தான் எண்ணம்!" என்ற ராஜேந்திரன், "உயிரோட இருக்க புள்ளைக்கு வருசா வருசம் உன்ற அண்ணி தெவசம் கொடுக்கிறது எனக்கு ஒப்பல. ரொம்பவே வேதனையா, சங்கடமா இருக்கு" என்றார்.
"ஓஹோ... உண்மையை சொல்லிக்காட்டி, இருபது வருசத்துக்கு முன்னாடி மறைஞ்ச என் வலியை திரும்ப எனக்கு கொடுக்கலாம்னு பாக்குறியாங்ண்ணா... இம்புட்டு வருசம் கொடுக்காத மாதிரி இப்போ வந்து சடவுற" என்ற கல்யாணி ராஜேந்திரன் எதிர்பார்க்காது, அங்கிருந்த கத்தியை எடுத்து தன் கழுத்தில் வைத்துக் கொண்டார்.
"நான் என் உசுருக்கும் மேல பாசம் காட்டி வளர்த்திருக்கேன். அவ்ளோ லேசுல விட்டுக்கொடுத்துப்புட மாட்டேன். நீ மட்டும் உண்மையை சொல்லிப்பாரு, என்ட்ர உசுரு இருந்த தடம் இல்லாம அழிச்சிக்குவேன்" என்றார். அப்பட்டமான மிரட்டல்.
"அன்னைக்கு நான் செத்துப்போவேன்னு தான செஞ்ச, எப்பைக்கும் யாருக்கும் எதுவும் தெரியாது. நாமளும் சொல்லிக்கத் தேவையில்லைன்னு சொல்லிப்போட்டு இப்போ வந்து உண்மையை சொல்லணும், உரக்க சொல்லணும்னு நாடகம் போடுற?" என்ற கல்யாணி, "நீ இப்படியெல்லாம் பண்ணுவன்னு தெரிஞ்சுதான்... தாய் மாமா வீடுன்னு கூட அனுப்பாமா, பொறந்த வீடுன்னு நானும் அக்கட்டிக்கு எட்டிப்பார்க்காம இருக்கேன்" என்றார்.
ராஜேந்திரனுக்கு அன்னைக்கு யோசிக்காது முடிவெடுத்தது, இன்றளவிலும் சரியெனும் எண்ணம் தான். சாகப்போன உயிரை தனது செயல் இத்தனை வருடங்கள் உயிருடன் வாழ வைத்திருக்கிறதே எனும் நிம்மதி. நல்லதை தான் செய்திருக்கிறோம் எனும் நம்பிக்கை.
ஆனால் தான் செய்த செயலால் தனது வீட்டில் நடைபெறும் திதி நிகழ்வைத்தான் அவரால் ஏற்க முடியவில்லை.
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் எனும் வரையறை தான்.
"இப்பவும் ஊர் உலகத்துக்கு சொல்லப்போறதில்லை கல்யாணி. காமாட்சிக்கிட்டயும், உன்ற புருஷன்கிட்டயும் மட்டும் சொல்லுவோம்" என்று அவர் முடிக்கும் முன்பு கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தியிருந்தார்.
அதில் சிறு கீறல் ஏற்பட்டு துளி ரத்தம் எட்டிப்பார்க்க, ராஜேந்திரன் பதறிவிட்டார்.
'எல்லாம் பிள்ளைப்பாசம்! எந்த எல்லைக்கும் போவ வைக்குது' என நிறுத்தியவர், "அப்பைக்கும், இப்பைக்கும் உனக்கு நல்லதுன்னுதான் போறேன்" என்று மேற்கொண்டு எதுவும் பேசாது வெளியேறியிருந்தார்.
அன்று தங்கையின் திருமண வாழ்வு முக்கியமாகப்பட்டது. இன்று இத்தனை வயதிற்கு மேல் உண்மை தெரிந்தால் என்ன எனும் நிலை. தெரியும் உண்மை பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். பலரால் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஒருமுறை முயன்று பார்ப்போமென எண்ணியவர், தங்கையின் செயலில் தெரியாமலே போகட்டுமென திரும்பிச் சென்றிருந்தார்.
ராஜேந்திரன் சென்றதும் வேகமாக கதவடைத்துவிட்டுத் திரும்பிய கல்யாணி அங்கு நின்றிருந்த கோவிந்தனை கண்டதும் அதிர்ந்தார்.
அவரின் அதிர்வெல்லாம் ஒரு நொடி தான்... அலட்சியமாக அவரைத் தாண்டிக்கொண்டு அடி வைத்தார் கல்யாணி.
"என்ட்ர இத்தனை வருஷ விடைத்தெறியாத கேள்விக்கு விடை கிடைச்சிடுச்சு" என்று கோவிந்தன் சொல்ல, கல்யாணி அவரின் முன் வந்தார்.
"என்ன கேள்வி? என்ன விடை?" கல்யாணி ஒன்றும் தெரியாததைப்போன்று கேட்க, அவரிடம் விரக்தியாய் சிறு முறுவல்.
"விதைக்கவே முடியாத காட்டுல அறுவடை எப்படின்னு?" என்று கேள்வியை நிறுத்திய கோவிந்தன், "விதைக்க காடும் தேவையில்லை, விதையும் தேவையில்லை, சுத்தி இருக்கவங்களை முட்டாளாக்கினா போதும்னு அண்ணனும் தங்கச்சியும் புரிய வச்சிடீங்க!"
"தெரிஞ்சதை யார்கிட்டவும் சொல்லாம இருந்தா நல்லது" என்று கல்யாணி கூற,
"உன்னோட தாய்பாசத்துக்காக இன்னொரு தாயை இருவது வருசமா தவிக்க வச்சிக்கிட்டு இருக்கன்னு உன்ற மனசுக்கு புரியலையா கல்யாணி. குற்றவுணர்வா இல்லையா! படிச்ச படிப்பு, உன்ற வேலை எதுவும் மேன்மையை சொல்லித்தரலாயா?" எனக் கேட்டார் கோவிந்தன்.
"உம்மட அம்மா தினம் என்னை குத்திக்காட்டி பேசுவாங்களே அப்போ உங்க அம்மாவுக்கு மென்மையை சொல்லித்தர வேண்டியதுதான" என்ற கல்யாணி, "நான் சந்தோஷமா, நிம்மதியா இருக்கிறது புடிக்கலையா?" என்று ஆக்ரோஷமாகக் கத்தியிருந்தார்.
"நீ என்ன சொன்னாலும் இனிமேலும் என்னால அமைதியா இருக்க முடியாது... உன்ற பாசங்கிற சிறையில அந்த பயிர் வாடி வதங்குறதை இதுக்கு பொறவும் என்னால பார்த்துக்கிட்டு இருக்க முடியாது. உன் கைக்குள்ள பொத்தி வச்சிக்கணும்னு எவ்வளவு இறுக்கம்? ஒருகட்டத்துக்கு மேல மூச்சுமுட்ட ஆரம்பிச்சிடும். வாடுறதுக்குள்ள சேர வேண்டிய இடத்துல சேர்த்துபுடு" என்றார்.
"என்ன புதுசா அவன் மேல பாசம்?" முகம் சுளித்தவராகக் கேட்டிருந்தார் கல்யாணி.
"நீ எங்கடி பாசம் காட்ட விட்ட... ஒரு பொழுது நான் தூக்கிப் பார்க்க விட்டிருப்பியா?" என்றவர், "என் ரத்தமில்லனாலும், நீ ஏதோ வேலை பார்த்திருக்கன்னு புரிஞ்சாலும், ஊர் பேச்சுல இருந்து உன்ற மனசுக்கு நிம்மதி கிடைக்குதேன்னு அமைதியா இருந்தது என் தப்பு" என்றார் கோவிந்தன்
கல்யாணி முறைத்துகொண்டே எதுவும் பேசாது நின்றிருக்க,
"நீ அனுபவிச்ச வலிதான அவங்களுக்கும். உண்மை தெரிஞ்சும் நானெப்படி அமைதியா இருக்கிறது" என்றார் கோவிந்தன்.
"போங்க... போய் சொல்லுங்கங். அதெல்லாம் பார்க்க நான் உசுரோடிருந்தாதானுங்களே" என்று கண்களை துடைத்தார் கல்யாணி. மெல்லிய விசும்பலோடு.
"உன்ற கரைச்சலுக்கும் மிரட்டலுக்கும் உன்ற அண்ணன் வேணா பயப்படலாம். எதையெதை தானமா கொடுக்கணும் விவஸ்தையில்லாம கொடுத்திருக்கலாம். ஆனா நான் அப்படியில்ல. இருபது வருஷமா ஒரு தாயோட கண்ணீருக்கு காரணமாயிருக்க உன்ற பக்கமெல்லாம் உன்னையை விரும்பி கட்டுன பாவத்துக்கு காலத்துக்கும் என்ட்ர தலையில தூக்கி சுமக்க முடியாது. இப்போவே தொண்டாமுத்தூர் கிளம்புறேன். நீயும் வர்ற" என்று கோவிந்தன் அறைக்குள் நுழைய, பின்வாசல் கதவு படீரென திறக்கும் சத்தம் கேட்டு வேகமாக அவர் செல்ல, தோட்டத்திலிருந்த கிணற்றில் குதித்திருந்தார் கல்யாணி.
"கல்யாணி..." பெருங்கூவலோடு தானும் கிணற்றில் குதித்த கோவிந்தன், நீரில் அமிழ்ந்து வெளிவந்து மீண்டும் மூழ்கிய கல்யாணியின் கற்றை கூந்தலை பிடித்திழுத்து, மெல்ல தூக்கி வந்து கிணற்றுப் படிகளில் அமர்த்தினார்.
உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும், தலை வலியை கொடுக்க, கண்களை சுருக்கி மூடி திறந்தார்.
கணவர் தன்னைக் காப்பாற்றி விடுவாரென்று கல்யாணிக்கு நன்கு தெரியும். அதற்காகத்தானே கதவை அதிக சத்தத்தோடு திறந்திருந்தார்.
எவ்வளவு தான் கோபம், ஏமாற்றமிருந்தாலும், இன்னமும் கல்யாணி கோவிந்தனின் காதல் மனைவி தானே! கல்யாணியின் செயல்களால் விலகியிருந்தாலும் வைத்த காதல் இல்லையென்றாகாதே!
"கூடயிருக்க யாரும் நிம்மதியா இருக்கவேக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா?" அத்தனை கோபமாகக் கேட்ட கோவிந்தன், கிணற்று சுவற்றிலே கையை மடக்கி வேகமாகக் குத்தியிருந்தார்.
"தெரிஞ்சதை தெரிஞ்சமாதிரியே காட்டிக்காம நீங்க அமைதியா இருந்தா யார் நிம்மதிக்கும் ஒண்ணுமாகாது" என்ற கல்யாணி, தலையில் சுரீரென்று வலி கொடுக்கவே, அழித்துப் பிடித்தார். நொடியில் வலி மறைந்திருந்தது.
"இப்போ புரிஞ்சிருக்குமே உங்களுக்கு. நான் செத்துப்போவேன்னு நடிப்புக்கு சொல்லல... இதுக்கு பொறவு என்ன பண்ணனும் நினைக்கிறீங்களா பண்ணிக்கோங்க" என்று அமர்ந்திருந்த படியிலிருந்து எழுந்து மேலே சென்றுவிட்டார் கல்யாணி.
ஆரம்பத்தில் எழுந்த சந்தேகத்தால் பேசுவதை குறைத்து விலகியிருந்த கோவிந்தன், இன்று முழு உண்மை தெரிந்த பிறகு மொத்தமாக வெறுத்தேவிட்டார்.
உண்மையை சொல்ல முடியாத கோபம் அவருள் கனன்றுகொண்டே இருந்தது.
அக்கணம் முதல் கல்யாணியின் முகம் பார்ப்பதையே தவிர்த்து ஏற்கப் பழக ஆரம்பித்தார்.
தொடர்ச்சி கீழே
வீட்டிற்குள் வந்த ராஜேந்திரன் தன்னை மோதியதுகூட தெரியாது வேகமாக வெளியேறும் திகழையே பார்த்தபடி நின்றுவிட, மகனின் பின்னே வந்த கல்யாணி தன்னுடைய அண்ணனைப் பார்த்ததும் தொண்டையை செருமினார்.
"வாங்ண்ணா!" என்றழைத்த கல்யாணியின் குரலில் பார்வையை திருப்பி வீட்டிற்குள் வந்தார் ராஜேந்திரன்.
"சட்டுன்னு நெடு நெடுன்னு வளர்ந்துபுட்டான்" என்று திகழைப்பற்றி பேசியவராக ராஜேந்திரன் இருக்கையில் அமர,
"என்னங்ண்ணா திடீர்னு?" என்றவாறே அவரின் எதிரில் அமர்ந்தார் கல்யாணி.
"மாப்பிள்ளை இல்லையாம்மா?" என்று ராஜேந்திரன் கேட்க,
"என்ன விசயமாங்ண்ணா?" என்றார் கல்யாணி.
"எல்லாம் தெரிய வேண்டிய விசயத்தை தெரியப்படுத்தனுமே" என்ற ராஜேந்திரன், "உன்ற அண்ணி அங்க தெவசம் பண்ணிக்கிட்டு இருக்கா. அதான் அவளுக்கும், உன்ற புருஷனுக்கு மட்டும் உண்மையை சொல்லிப்புடுவோம்" என்றார்.
அவர் சொல்லி முடித்ததுதான், அங்கு முற்றத்தில் வைத்திருந்த பூந்தொட்டியை எடுத்து ராஜேந்திரன் தலைமீது போட வந்துவிட்டார் கல்யாணி.
"அய்யோ கல்யாணி என்ன பண்ற?" என்று ராஜேந்திரன் சுதாரித்து தொட்டியை பிடுங்கி கீழே வைத்தார்.
"என்ன உண்மை... எந்த உண்மை" என்று கேட்ட கல்யாணி, "அதெல்லாம் ஒண்ணுமில்லை. காலத்துக்கும் யார்கிட்டவும் சொல்லமாட்டேன்னு சொல்லியிருக்கீங்" என்றார்.
"சொன்னதான். என்ட்ர மனசுக்குமே இந்த விஷயம் கடைசி வரைக்கும் யாருக்கும் தெரியக்கூடாதுங்கிறது தான் எண்ணம்!" என்ற ராஜேந்திரன், "உயிரோட இருக்க புள்ளைக்கு வருசா வருசம் உன்ற அண்ணி தெவசம் கொடுக்கிறது எனக்கு ஒப்பல. ரொம்பவே வேதனையா, சங்கடமா இருக்கு" என்றார்.
"ஓஹோ... உண்மையை சொல்லிக்காட்டி, இருபது வருசத்துக்கு முன்னாடி மறைஞ்ச என் வலியை திரும்ப எனக்கு கொடுக்கலாம்னு பாக்குறியாங்ண்ணா... இம்புட்டு வருசம் கொடுக்காத மாதிரி இப்போ வந்து சடவுற" என்ற கல்யாணி ராஜேந்திரன் எதிர்பார்க்காது, அங்கிருந்த கத்தியை எடுத்து தன் கழுத்தில் வைத்துக் கொண்டார்.
"நான் என் உசுருக்கும் மேல பாசம் காட்டி வளர்த்திருக்கேன். அவ்ளோ லேசுல விட்டுக்கொடுத்துப்புட மாட்டேன். நீ மட்டும் உண்மையை சொல்லிப்பாரு, என்ட்ர உசுரு இருந்த தடம் இல்லாம அழிச்சிக்குவேன்" என்றார். அப்பட்டமான மிரட்டல்.
"அன்னைக்கு நான் செத்துப்போவேன்னு தான செஞ்ச, எப்பைக்கும் யாருக்கும் எதுவும் தெரியாது. நாமளும் சொல்லிக்கத் தேவையில்லைன்னு சொல்லிப்போட்டு இப்போ வந்து உண்மையை சொல்லணும், உரக்க சொல்லணும்னு நாடகம் போடுற?" என்ற கல்யாணி, "நீ இப்படியெல்லாம் பண்ணுவன்னு தெரிஞ்சுதான்... தாய் மாமா வீடுன்னு கூட அனுப்பாமா, பொறந்த வீடுன்னு நானும் அக்கட்டிக்கு எட்டிப்பார்க்காம இருக்கேன்" என்றார்.
ராஜேந்திரனுக்கு அன்னைக்கு யோசிக்காது முடிவெடுத்தது, இன்றளவிலும் சரியெனும் எண்ணம் தான். சாகப்போன உயிரை தனது செயல் இத்தனை வருடங்கள் உயிருடன் வாழ வைத்திருக்கிறதே எனும் நிம்மதி. நல்லதை தான் செய்திருக்கிறோம் எனும் நம்பிக்கை.
ஆனால் தான் செய்த செயலால் தனது வீட்டில் நடைபெறும் திதி நிகழ்வைத்தான் அவரால் ஏற்க முடியவில்லை.
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் எனும் வரையறை தான்.
"இப்பவும் ஊர் உலகத்துக்கு சொல்லப்போறதில்லை கல்யாணி. காமாட்சிக்கிட்டயும், உன்ற புருஷன்கிட்டயும் மட்டும் சொல்லுவோம்" என்று அவர் முடிக்கும் முன்பு கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தியிருந்தார்.
அதில் சிறு கீறல் ஏற்பட்டு துளி ரத்தம் எட்டிப்பார்க்க, ராஜேந்திரன் பதறிவிட்டார்.
'எல்லாம் பிள்ளைப்பாசம்! எந்த எல்லைக்கும் போவ வைக்குது' என நிறுத்தியவர், "அப்பைக்கும், இப்பைக்கும் உனக்கு நல்லதுன்னுதான் போறேன்" என்று மேற்கொண்டு எதுவும் பேசாது வெளியேறியிருந்தார்.
அன்று தங்கையின் திருமண வாழ்வு முக்கியமாகப்பட்டது. இன்று இத்தனை வயதிற்கு மேல் உண்மை தெரிந்தால் என்ன எனும் நிலை. தெரியும் உண்மை பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். பலரால் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஒருமுறை முயன்று பார்ப்போமென எண்ணியவர், தங்கையின் செயலில் தெரியாமலே போகட்டுமென திரும்பிச் சென்றிருந்தார்.
ராஜேந்திரன் சென்றதும் வேகமாக கதவடைத்துவிட்டுத் திரும்பிய கல்யாணி அங்கு நின்றிருந்த கோவிந்தனை கண்டதும் அதிர்ந்தார்.
அவரின் அதிர்வெல்லாம் ஒரு நொடி தான்... அலட்சியமாக அவரைத் தாண்டிக்கொண்டு அடி வைத்தார் கல்யாணி.
"என்ட்ர இத்தனை வருஷ விடைத்தெறியாத கேள்விக்கு விடை கிடைச்சிடுச்சு" என்று கோவிந்தன் சொல்ல, கல்யாணி அவரின் முன் வந்தார்.
"என்ன கேள்வி? என்ன விடை?" கல்யாணி ஒன்றும் தெரியாததைப்போன்று கேட்க, அவரிடம் விரக்தியாய் சிறு முறுவல்.
"விதைக்கவே முடியாத காட்டுல அறுவடை எப்படின்னு?" என்று கேள்வியை நிறுத்திய கோவிந்தன், "விதைக்க காடும் தேவையில்லை, விதையும் தேவையில்லை, சுத்தி இருக்கவங்களை முட்டாளாக்கினா போதும்னு அண்ணனும் தங்கச்சியும் புரிய வச்சிடீங்க!"
"தெரிஞ்சதை யார்கிட்டவும் சொல்லாம இருந்தா நல்லது" என்று கல்யாணி கூற,
"உன்னோட தாய்பாசத்துக்காக இன்னொரு தாயை இருவது வருசமா தவிக்க வச்சிக்கிட்டு இருக்கன்னு உன்ற மனசுக்கு புரியலையா கல்யாணி. குற்றவுணர்வா இல்லையா! படிச்ச படிப்பு, உன்ற வேலை எதுவும் மேன்மையை சொல்லித்தரலாயா?" எனக் கேட்டார் கோவிந்தன்.
"உம்மட அம்மா தினம் என்னை குத்திக்காட்டி பேசுவாங்களே அப்போ உங்க அம்மாவுக்கு மென்மையை சொல்லித்தர வேண்டியதுதான" என்ற கல்யாணி, "நான் சந்தோஷமா, நிம்மதியா இருக்கிறது புடிக்கலையா?" என்று ஆக்ரோஷமாகக் கத்தியிருந்தார்.
"நீ என்ன சொன்னாலும் இனிமேலும் என்னால அமைதியா இருக்க முடியாது... உன்ற பாசங்கிற சிறையில அந்த பயிர் வாடி வதங்குறதை இதுக்கு பொறவும் என்னால பார்த்துக்கிட்டு இருக்க முடியாது. உன் கைக்குள்ள பொத்தி வச்சிக்கணும்னு எவ்வளவு இறுக்கம்? ஒருகட்டத்துக்கு மேல மூச்சுமுட்ட ஆரம்பிச்சிடும். வாடுறதுக்குள்ள சேர வேண்டிய இடத்துல சேர்த்துபுடு" என்றார்.
"என்ன புதுசா அவன் மேல பாசம்?" முகம் சுளித்தவராகக் கேட்டிருந்தார் கல்யாணி.
"நீ எங்கடி பாசம் காட்ட விட்ட... ஒரு பொழுது நான் தூக்கிப் பார்க்க விட்டிருப்பியா?" என்றவர், "என் ரத்தமில்லனாலும், நீ ஏதோ வேலை பார்த்திருக்கன்னு புரிஞ்சாலும், ஊர் பேச்சுல இருந்து உன்ற மனசுக்கு நிம்மதி கிடைக்குதேன்னு அமைதியா இருந்தது என் தப்பு" என்றார் கோவிந்தன்
கல்யாணி முறைத்துகொண்டே எதுவும் பேசாது நின்றிருக்க,
"நீ அனுபவிச்ச வலிதான அவங்களுக்கும். உண்மை தெரிஞ்சும் நானெப்படி அமைதியா இருக்கிறது" என்றார் கோவிந்தன்.
"போங்க... போய் சொல்லுங்கங். அதெல்லாம் பார்க்க நான் உசுரோடிருந்தாதானுங்களே" என்று கண்களை துடைத்தார் கல்யாணி. மெல்லிய விசும்பலோடு.
"உன்ற கரைச்சலுக்கும் மிரட்டலுக்கும் உன்ற அண்ணன் வேணா பயப்படலாம். எதையெதை தானமா கொடுக்கணும் விவஸ்தையில்லாம கொடுத்திருக்கலாம். ஆனா நான் அப்படியில்ல. இருபது வருஷமா ஒரு தாயோட கண்ணீருக்கு காரணமாயிருக்க உன்ற பக்கமெல்லாம் உன்னையை விரும்பி கட்டுன பாவத்துக்கு காலத்துக்கும் என்ட்ர தலையில தூக்கி சுமக்க முடியாது. இப்போவே தொண்டாமுத்தூர் கிளம்புறேன். நீயும் வர்ற" என்று கோவிந்தன் அறைக்குள் நுழைய, பின்வாசல் கதவு படீரென திறக்கும் சத்தம் கேட்டு வேகமாக அவர் செல்ல, தோட்டத்திலிருந்த கிணற்றில் குதித்திருந்தார் கல்யாணி.
"கல்யாணி..." பெருங்கூவலோடு தானும் கிணற்றில் குதித்த கோவிந்தன், நீரில் அமிழ்ந்து வெளிவந்து மீண்டும் மூழ்கிய கல்யாணியின் கற்றை கூந்தலை பிடித்திழுத்து, மெல்ல தூக்கி வந்து கிணற்றுப் படிகளில் அமர்த்தினார்.
உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும், தலை வலியை கொடுக்க, கண்களை சுருக்கி மூடி திறந்தார்.
கணவர் தன்னைக் காப்பாற்றி விடுவாரென்று கல்யாணிக்கு நன்கு தெரியும். அதற்காகத்தானே கதவை அதிக சத்தத்தோடு திறந்திருந்தார்.
எவ்வளவு தான் கோபம், ஏமாற்றமிருந்தாலும், இன்னமும் கல்யாணி கோவிந்தனின் காதல் மனைவி தானே! கல்யாணியின் செயல்களால் விலகியிருந்தாலும் வைத்த காதல் இல்லையென்றாகாதே!
"கூடயிருக்க யாரும் நிம்மதியா இருக்கவேக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா?" அத்தனை கோபமாகக் கேட்ட கோவிந்தன், கிணற்று சுவற்றிலே கையை மடக்கி வேகமாகக் குத்தியிருந்தார்.
"தெரிஞ்சதை தெரிஞ்சமாதிரியே காட்டிக்காம நீங்க அமைதியா இருந்தா யார் நிம்மதிக்கும் ஒண்ணுமாகாது" என்ற கல்யாணி, தலையில் சுரீரென்று வலி கொடுக்கவே, அழித்துப் பிடித்தார். நொடியில் வலி மறைந்திருந்தது.
"இப்போ புரிஞ்சிருக்குமே உங்களுக்கு. நான் செத்துப்போவேன்னு நடிப்புக்கு சொல்லல... இதுக்கு பொறவு என்ன பண்ணனும் நினைக்கிறீங்களா பண்ணிக்கோங்க" என்று அமர்ந்திருந்த படியிலிருந்து எழுந்து மேலே சென்றுவிட்டார் கல்யாணி.
ஆரம்பத்தில் எழுந்த சந்தேகத்தால் பேசுவதை குறைத்து விலகியிருந்த கோவிந்தன், இன்று முழு உண்மை தெரிந்த பிறகு மொத்தமாக வெறுத்தேவிட்டார்.
உண்மையை சொல்ல முடியாத கோபம் அவருள் கனன்றுகொண்டே இருந்தது.
அக்கணம் முதல் கல்யாணியின் முகம் பார்ப்பதையே தவிர்த்து ஏற்கப் பழக ஆரம்பித்தார்.
தொடர்ச்சி கீழே