உந்தன் உயிராக 12
அந்த காலை நேரம் அத்தனை ரம்யமிக்கதாக இருந்தது திகழுக்கு. காரணம் அவனவள்.
இத்தனை வருட காதலில் ஒரு முறை கூட நிகழ்ந்திடாத முழு இரவு உரையாடல்.
என்ன பேசினார்கள்? பேசியதெல்லாம் அர்த்தமானதா? என கேட்டால் அவர்களுக்கும் தெரியாது. ஆனால் நீண்ட இரவில் இருவருக்குமாய் அரங்கேறிய பேச்சுக்கள் சங்கீத ஸ்வரங்களாய்...
செந்தாவின் எண்ணை பதிந்து வைத்ததற்கே அவ்வளவு விசாரணை செய்த கல்யாணி மீண்டும் இதுபோன்று அலைபேசியை தினம் தினம் ஆய்வு செய்தால் எனும் பெரும் வினாவில்... தனது காதலை மறைத்து வைப்பதில் உடன்பாடில்லை என்றாலும் மகன் பாசத்தில் கல்யாணி என்னவும் செய்வார் என்று மனதோடு வைத்துக் கொண்டான்.
எப்போது கல்யாணியின் தாய்ப்பாசம் தனக்கு விலங்காகிறது என உணரத் துவங்கினானோ, அவரின் அன்புக்கு தானாக அடங்கிப் போகாமல் அவரால் கட்டுப்படுத்தப்படுகிறோம் என விளங்கிக் கொண்டானோ அது முதல் சிறு சிறு விடயங்களில் தனது அதிருப்தியை, விருப்பமின்மையை காட்டத் துவங்கினான் திகழோவியன்.
அவரின் அன்பு தன்னிடத்தில் திணிப்பாக மாறிவிட்டது என்பதை அறிந்து கொள்வதற்கே அவனுக்கு இத்தனை வருடங்கள் ஆகி இருக்கிறது.
அவரின் அந்த அன்பின் சிறையும், பாசத்திணிப்பும் தனது காதலுக்கு தடையாக அமர்ந்திடுமோ எனும் பயம் எழுந்திட அவரின் கைப்பிடிக்கல்லிருந்து மெல்ல வெளிவர துவங்கினான். அதனை அவர் உணராது பார்த்துக் கொண்டான்.
அதில் முதலாவது தினமும் அவர் குளிக்க வைப்பது, தன்னுடைய ஆடைத்தேர்வு, அவருடன் உறங்குவது என அனைத்திற்கும் அவர் நோகாது தகுந்த காரணங்கள் கூறி எட்ட நிற்க வைத்தான்.
இதில் கல்யாணிக்கு ஏகப்பட்ட வருத்தங்கள்.
இருப்பினும், "இருவது வயதுக்கு மேல ஆவதுங்மா... இன்னமும் நீங்க குளிக்க வைக்கிறது ரொம்பவே கூச்சமா இருக்குங்மா. தலை தேச்சிக்க என்னால ஆவாதுங்களா? இனி என்ட்ர சின்ன சின்ன வேலையையும் நான் பார்த்துக்கிறேனுங்மா" என அவன் நேரடியாக அழுத்தமாக சொல்லும்போது அவரால் மறுக்க முடியவில்லை.
'இப்போதெல்லாம் தனது தங்கோ, கன்னுக்குட்டி, கண்ணு, சாமி ஆகிய அழைப்புகள் அவனிடம் வேலை செய்வதில்லை' என்பதை புரிந்து கொண்டார்.
அதிலும் கோவிந்தன் அன்று பேசியப்பேச்சில், "ரொம்ப இறுக்கி பிடிச்சா மூச்சு முட்டிப்போவும்" என சொல்லியதில் உண்மை உள்ளது என கொஞ்சமே கொஞ்சம் திகழிடம் தனது பிடியை தளர்த்தினார்.
அதில் திகழாக அவரை எட்ட நிற்க வைத்து தனக்குத்தானே செய்து கொள்ளும் சிறு சிறு விஷயங்கள் மட்டுமே அடக்கம்.
இப்போதெல்லாம் கல்யாணி பிடிவாதம் திகழிடம் எடுபடுவதில்லை.
தனக்கு விருப்பப்பட்ட இருசக்கர வாகனத்தில் தான் பணிக்கு செல்கிறான். இரவு நேரம் தான் வீடு திரும்புவான். விடுமுறை தினங்களில் நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறான். அவர்களின் ஊர் மைதானத்தில் நண்பர்களுடன் அரட்டையில் கலந்துகொள்கிறான்.
இதிலெல்லாம் அவனை கட்டுப்படுத்த நினைத்தாலும் இப்போதெல்லாம் கல்யாணியால் முடியவில்லை.
அன்றொரு நாள் அப்படித்தான், விடுமுறை நாளில் கிளம்பி நின்ற திகழோவியன் எங்கு செல்கிறேனென்று முன்னதாக சொல்லாது, வண்டியை வெளியில் தள்ளியபடி,
"தொண்டாமுத்தூர் போய் வாரனுங்... மாமா வீடு எப்படியிருக்குன்னு தெரியாதுங்களே! பார்த்துப்போட்டு வர்றேனுங். அத்தையும் போன் பண்ணும்போதெல்லாம் வந்து போ கண்ணுங்கிறாங்க... இன்னைக்கு சுதிர்தா மாமாவுக்கு பொறந்தநாளாச்சே போய் வாரனுங்க" என்று வண்டியில் ஏறி அமர்ந்தான்.
அவனுக்கு செந்தாழினியை நேரில் பார்க்க வேண்டுமென்ற எண்ணமும்.
இத்தனை வருடம் தான் காத்து வரும் பெரும் ரகசியம் உடைபட்டுவிடுமோ எனும் அச்சம் சூழ நொடியில் கல்யாணி வெறிபிடித்தவராக மாறியிருந்தார்.
"நீ போகக்கூடாது திகழு" என்று வண்டிக்கு முன் வந்து நின்றவர், திகழ் சுதாரிக்கும் முன்பு வண்டியிலிருந்து சாவியை எடுத்திருந்தார்.
"ம்மா... என்ன பண்றீங்கங்" என்றவன் வண்டியை விட்டு இறங்கி, அவரை நெருங்கி, சாவியை வாங்க முயன்றான்.
அவரோ "கொடுக்கமாட்டேன்" என அவனை திமிரி விலக்குவதில் அத்தனை ஆவேசம் காண்பிக்க,
"நானு பஸ்ல போயிருக்கிறேனுங்மா" என்று தெருவில் நடக்கத் துவங்க, "கண்ணு திகழு" என்று ஈனக்குரலில் விளித்தவர், அவன் திரும்பிப் பார்த்திடவே மயங்கி விழுந்திருந்தார்.
பதறி ஓடி வந்தவன் அவரைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் செல்ல,
"என்னாச்சு?" என பக்கம் வந்தார் கோவிந்தன். அதுவரை உள்ளிருந்து வெளியில் இருவரின் பேச்சினையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்.
உண்மை தெரிந்ததற்கு பின்னர் திகழிடம் ஓரிரு வார்த்தைகள் பேசத் துவங்கியிருந்தார் கோவிந்தன்.
"தெரியல... மயங்கிட்டாங்க" என்று திகழ் கூற,
"கோவமா கத்தி பேசினதுல பிரஷர் கூடியிருக்கும்" என்ற கோவிந்தன், அவரின் முகத்தில் தண்ணீர் தெளிக்க, மெல்ல கண் விழித்தார் கல்யாணி.
"ம்மா ஒண்ணுமாவலங்களே!" என்று உண்மையான தவிப்போடு திகழோவியன் கேட்டிட, "உன்ற மடியில கிடக்கிற வரை எனக்கு ஒண்ணுமாவது தங்கோ" என்று அவனின் தாடை பிடித்தவர், "இப்போலாம் இந்த அம்மாவை பிடிக்காம போயிடுச்சா கண்ணு?" என்றார்.
"அப்படியில்லங்மா" என்ற திகழ், "உங்களைவிட்டு எங்கங்போறேன். என்ட்ர தாய்மாமா வீடுதானுங்களே" என்றான்.
"உனக்கு அவங்களை பார்க்கனும்னா சொல்லு கண்ணு... நான் இக்கட்டிக்கு வரவைக்கிறேன். நீ இம்புட்டு தொலைவு தனியா போவவேணாம் சாமி" என்றார்.
திகழோவியன் கோவிந்தனைப் பார்க்க, வழக்கம்போல் தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லையென ஒதுங்கிக்கொண்டார் அவர்.
"உன்னை தொலைவுல அனுப்பி வச்சிப்போட்டு நான் தவிச்சி காத்துக்கெடக்கோனும் தங்கோ" என்றவர் கண்களில் கண்ணீரை கொட்ட, "சரிங்மா போவலங்... நீங்க ரெஸ்ட் எடுங்கங்" என்று எழுந்து நின்றவன், "இப்படியே நீங்க பண்றதும் சரியாப்படலங்" எனக்கூறி அறைக்குள் சென்று மறைந்தான்.
அடுத்தநொடி கண்களை துடைத்துக்கொண்டு எழுந்து நின்ற கல்யாணியை வெறுப்பாகப் பார்த்த கோவிந்தன்,
"நல்ல நடிப்பு" என்றார்.
"யாரு நடிச்சா?" என்ற கல்யாணி, "நிஜத்துக்கும் இப்போலாம் அடிக்கடி மண்டைவலி வருது" என்றார்.
"ஆனா இப்பைக்கு நீ மயக்கம் போட்டது பொய்தானா?"
"ம்க்கும்..."
"அவனக்கே எல்லாம் புரிய ஆரம்பிச்சிடுச்சு. எனக்கு தெரிய வந்த மாதிரி ஒருநாள் அவனுக்கும் உண்மை தெரிய வரும். அப்போ அவன் முழுசா உன்னை வெறுக்கப்போறான் பாரு" என்று கோவிந்தன் சொல்லிட, கல்யாணிக்கு திகழோவியனை மீண்டும் தனது கைக்குள் கொண்டுவரும் வேகம்.
எவ்வளவு முயன்றும் கல்யாணியால் வளர்ந்து நிற்கும் ஆண் மகனை ஐந்து வயது பிள்ளையாக மாற்றி தனது தாயெனும் சிறைக்குள் அடக்கிட முடியவில்லை.
செந்தா நினைத்த நேரம் அவனிடம் பேசிட, அவனுக்கு குறுந்தகவல் அனுப்பிட அனுமதி கேட்டதற்கு பின்னால், இரவில் சில நிமிடங்கள் அவளுடன் உரையாடத் துவங்கியிருந்தான். பேசி முடித்த அடுத்த கணம் தகவல்களை அழிக்கவும் பழகியிருந்தான்.
ஒருநாள் கல்யாணி உறங்கிவிட்டதாக எண்ணி திகழோவியன் செந்தாழினியிடம் புலனத்தில் உரையாடிவிட்டு உறங்க கண்களை மூடிட, கல்யாணி அவனது அலைபேசியை எடுத்து ஆராய்ந்துப் பார்த்தார். தற்செயலாக அவர் புறம் திரும்பிய திகழோவியன் அவரின் அச்செயலைக் கண்டு அதிர்ந்துதான் போனான்.
பெற்றவர்களுக்கு காதல் தவறான ஒன்றுதான். அதற்காக இந்தளவிற்கு இறங்கி, தான் யாருடன் பழகுகிறேன், பேசுகிறேன் என்று வேவு பார்க்க வேண்டுமா என்று கல்யாணியின் அச்செயல் ஆதங்கமாக திகழின் மனதில் தேங்கியது.
அடுத்தநாளே தன்னுடைய அறையில் கல்யாணி தன்னுடன் உறங்குவதை தடுத்திருந்தான்.
"நீங்க என்ட்ர ரூம்ல தூங்குறீங்கன்னே நைட்ல படிக்க முடியாம போவுதுங்மா" என்று காரணம் சொல்லியவன், "பையன் எனக்கு சில விஷயங்கள், நீங்க கூடாலே இருக்கும்போது சங்கடமா இருக்குங்மா" என்று மேலும் ஏதேதோ காரணம் சொல்லி அறையை தானிருக்கும் நேரங்களில் தாழிடத் துவங்கியிருந்தான்.
திகழோவியனிடம் முளைக்கும் மாற்றங்களையெல்லாம் மீண்டும் மாற்றிட வேண்டுமென கல்யாணி என்னென்னவோ செய்தும் முடியாமல் போனது. வருடங்களும் ஓடியிருந்தது.
காலை முகம்கொள்ளா மலர்ச்சியுடன் அறையைவிட்டு வெளியில் வந்த மகனின் மீது ஆராய்வாகப் படிந்தது கல்யாணியின் முகம்.
"என்ன சாப்பாடுங்மா?" கேட்டுக்கொண்டே வந்தமர்ந்தவன் முன்பு, தட்டை வைத்த கல்யாணி,
"நைட்டெல்லாம் உன்ற ரூம்ல பேச்சு சத்தமா இருந்துச்சு கண்ணு. யாரு கூடலா தங்கோ பேசிட்டு இருந்த?" என்றார்.
"யாரோட பேசினா என்னங்மா?" பட்டென்று திருப்பிக் கேட்டிருந்தான்.
"நான் கேட்கக்கூடாதா சாமி?" அவர் உடனடியாக தனது அழுகையை கையிலெடுக்க,
"சாப்பாடே வேணாமுங்க" என்று எழுந்தவன், பையை எடுத்துக்கொண்டு அலுவலகம் புறப்பட்டிருந்தான்.
இரவு தன்னவளுடன் உரையாடியதால் உண்டான மொத்த மகிழ்வும் காணாமல் போயிருந்தது.
திகழோவியனுக்கு கல்யாணி யாருடன் பேசினாய் என்று கேட்டதெல்லாம் வருத்தமில்லை. பாதி இரவிற்கு மேல் துவங்கிய உரையாடல். அதனை அவர் கேட்பதுதான்... அந்த நேரத்தில் அவன் பேசுவது அவருக்குத் தெரிந்திருக்கிறதென்றால் கதவில் காது வைத்துக் கேட்காமல் எப்படி? ஓட்டுக்கேட்பது, அந்த நேரத்தில் தன்னை கண்காணிப்பது அவனுக்கு அப்படியொரு கோபத்தைக் கொடுத்தது. ஆனால் அவரிடம் காட்டிட முடியாதே!
மொத்த கோபத்தையும் வண்டியின் வேகத்தில் காண்பித்தான்.
சட்டைப் பையிலிருந்த அலைபேசி ஒலியெழுப்பிட, தான் வந்த வேகம் கண்டு கல்யாணித்தான் அழைப்பாராக இருக்குமென்று கண்டுகொள்ளவே இல்லை.
மீண்டும் ஒலிக்கவே தான் எடுக்காது ஓயாதென, வண்டியை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு, அலைபேசியை கையிலெடுத்தான்.
செந்தாழினியின் முகம் திரை நிறைத்திருக்க, ஏற்று காதில் வைத்தான்.
நொடியில் முகத்திலும் மனதிலும் வெடிக்க துடித்த கோப உணர்வுகள் யாவும் மாயமானது. இதழில் குறுநகை பூத்தது.
"ஆபீஸ் போயிட்டீங்களாங் மாமா?" என வேகமாகக் கேட்டிருந்தாள்.
எப்போதும்போல் அந்த மாமா என்ற வார்த்தையில் கட்டுண்டு உருகிக் கரைந்தான்.
அந்த மாமா எனும் அழைப்பு அவர்களுக்குள் உறவாடத் துவங்கியதே ஒருவித அழகியல் தான்.
அப்போது திகழோவியன் படிப்பில் இறுதி ஆண்டில் இருந்தான்.
தினமும் கல்லூரியில் பார்த்துக்கொண்டாலும், அவர்களின் பேச்சு புலனம் வழிதான்.
எதிரெதிரே நின்றிருந்தாலும் அதில் தான் பேசிக்கொள்வார்கள்.
அப்படித்தான் வகுப்பிலிருந்த செந்தாழினி திகழோவியனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிட, அவனும் ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனித்தவனாக பெஞ்சுக்கு கீழே அலைபேசியை மறைத்து வைத்து பதில் அனுப்பிக் கொண்டிருந்தான்.
"ஒரு சிங்கிள் பையன நீ வெறுப்பேத்திக்கிட்டே இருக்க மச்சான்" என்று மணி புலம்பும் அளவுக்கு இருக்கும்.
எழுத்தாக வந்து கொண்டிருந்த உரையாடலுக்கு நடுவில் திடீரென குரல் பதிவு வரவும்...
திகழோவியன், "க்ளாஸ்ல இருக்கேன். டெக்ஸ்ட்டா அனுப்பு!" என்று அனுப்பியது அவளால் பார்க்க முடியாமல் போனது.
அவளிடமிருந்து பதில் வராதுபோகவே,
"அவளுக்கு க்ளாஸ் ஸ்டார்ட் ஆகிடுச்சிப்போலடா" என்று பாடத்தில் கவனமான திகழோவியன், வகுப்பு முடிவடைந்ததற்கான ஒலி அடிக்கவும் மணியுடன் வெளியேறினான்.
"மதியம் கிளாஸ் இல்லை. கிளம்புரியா?" என்றான் மணி.
"செந்தாழினியை பார்க்கணும்டா. காலையில நான் வரதுக்குள்ள அவளுக்கு கிளாஸ் ஆரம்பிச்சிடுச்சு. லஞ்ச் பாக்ஸ் மாத்தி வைக்கப்போனப்பவும் பார்க்க முடியல" என்ற திகழோவியன், "நீ கிளம்புடா. இப்போ பஸ் விட்டா, பொறவு செக்கென்ட் சிங்கில் லேட்டாகும் உனக்கு" என்றான்.
"சரிடா... பார்த்துக்கோ" என்ற மணி சென்றிட, நூலகத்திற்கு முன்னிருந்த மரத்துக்கு கீழ் வந்தமர்ந்தான் திகழோவியன்.
செந்தாழினி இறுதியாக அனுப்பிய குரல் பதிவு நினைவுவர, அலைபேசியை எடுத்தான்.
கிட்டதட்ட ஏழு நிமிட குரல் பதிவு.
"இம்புட்டுக்கு அப்படியென்ன" என்ற யோசனையோடே அதனை ஒலிக்கச் செய்தான்.
"எனக்கும் என்ட்ர மாமாவுக்கும் கல்யாணப் பேச்சு பேசுறாங்க செந்தா" என்று வசந்தியின் குரல் கேட்க, "அதுக்குள்ளவா கல்யாணம்?" என்று கேட்டது செந்தாழினியின் குரல்.
இருவரும் பேசிக்கொண்டது தவறுதலாக வந்துவிட்டதென திகழ் நினைக்க,
"அவரு வெளிநாட்டுக்குப் போறாரு புள்ள... அதான் நிச்சயம் போட்டுப்புடலாம் பேசிக்கிறாங்க" என்றாள் வசந்தி.
வசந்தியின் தனிப்பட்ட விஷயமென்பதால், தான் கேட்பது நன்றாக இருக்காதென நினைத்து திகழ் அணைக்க முயல,
"ஓ" என்ற செந்தாழினியின் குரல் அவனைத் தடுத்திருந்தது.
"குரல்லே சுருட்டி வச்சிக்கிறா?" என்று புன்னகைத்த திகழோவியன், அடுத்து செந்தா கேட்டதில் சுவாரஸ்யமானான்.
"நீ அவங்களை மாமான்னு தான் கூப்பிடுவியா?" எனக் கேட்டாள்.
"இப்பவரைக்கும் இல்ல. கொஞ்சம் டெரர் பீஸ். பேசினதுமில்லை. ஆனா பார்க்க மட்டும் செய்வேன். இனி கூப்பிட வேண்டியதுதான். கட்டிக்கிடப்போறவங்கள மாமான்னு சொன்னாதான் நல்லாயிருக்கும். எங்க அம்மா இப்பவும் எங்க ஐயனை அப்படித்தான் கூப்பிடுறாங்க" என்ற வசந்தி, "உங்க அம்மா கூப்பிட்டதில்லையா?" என்றாள்.
"நான் கவனிச்ச வரைக்கும் இல்லை. தனியா கூப்பிட்டுப்பாங்களா இருக்கும்" என்றாள் செந்தாழினி.
"அதைவிடு... நீ லவ் பண்றவங்களை மாமா சொன்னதில்லையா?" என்றாள்.
"வசந்தி இதென்னப் பேச்சு?" என்ற செந்தாழினி, நொடியில் சுதாரித்து "நான் லவ் பண்றேன்னு யாரு புள்ள சொன்னது உனக்கு?" என்று விழி விரித்தாள்.
"யாரு சொல்லோணும்... மொச புடிக்கிற நாய் மூஞ்ச பார்த்தா தெரியாது" என்ற வசந்தி, "லவ் பண்ற பொண்ணுங்க பண்ற அத்தனை விஷயமும் பண்ற. அப்புறம் கண்டுபிடிக்கலனா நானென்ன உன் பிரண்டு. இதுல உன்ற கூடவே வேற திரியுறேன். ஆனால் ஆள் யாருன்னுதான் தெரியல" என்றாள்.
"சொல்லக்கூடாதுன்னு இல்லை..." என்று செந்தாழினி இழுக்க...
"காரணம் என்னவா வேணும்னாலும் இருக்கட்டும். நீ நான் கேட்டதுக்கு பதில்சொல்லு" என்றாள்.
"கூப்பிட்டதில்லை வசந்தி" என்ற செந்தாழினி, "எப்பையாவது பேர் மட்டும் சொல்லுவேன்" என்றான்.
"அடிபோடி போக்கத்தவளே... அதெல்லாம் தனி ஃபீல்'டி. சில விஷயமெல்லாம் இப்பைக்கு தான் ரசிக்க முடியும். அழகாவும் இருக்கும்" என்ற வசந்தி, "என்ற மாமனை மாமா சொல்லவே எனக்குள்ள குஷியாவுது புள்ள" என்றாள்.
"எனக்கு அப்பப்போ தோணும். பெரியவங்க, சட்டுன்னு பேர் சொல்லவும் ஒரு மாதிரி இருக்கும்... இருந்தாலும், அவங்களுக்கு புடிக்கலன்னா என்ன பண்றது?" என்று செந்தாழினி ஒருவித தயக்கமான குரலில் மொழிய, திகழோவியனின் இதழ் மலர்ந்து விரிந்தது.
அதற்கடுத்து, "மேம் லேபுக்கு வர சொல்றாங்க" என்று வேறொரு பெண்ணின் குரல் கேட்க, பதிவு முடிந்திருந்தது.
அவர்களுக்குள்ளான இயல்பான உரையாடல், ஆனால் திகழோவியனுக்குள் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது.
அதிலும், "கூப்பிடணும் தோணும்" என்ற செந்தாழினியின் அந்நேர குரல் அவனுள் ஏதோ செய்தது.
கல்யாணியைத் தாண்டி நெருக்கமான உறவென்றால் மணி தான். ஆனால் அனைத்துமாகிய முதல் உறவு அவனின் செந்தாழினி.
தொடர்ச்சி கீழே...
அந்த காலை நேரம் அத்தனை ரம்யமிக்கதாக இருந்தது திகழுக்கு. காரணம் அவனவள்.
இத்தனை வருட காதலில் ஒரு முறை கூட நிகழ்ந்திடாத முழு இரவு உரையாடல்.
என்ன பேசினார்கள்? பேசியதெல்லாம் அர்த்தமானதா? என கேட்டால் அவர்களுக்கும் தெரியாது. ஆனால் நீண்ட இரவில் இருவருக்குமாய் அரங்கேறிய பேச்சுக்கள் சங்கீத ஸ்வரங்களாய்...
செந்தாவின் எண்ணை பதிந்து வைத்ததற்கே அவ்வளவு விசாரணை செய்த கல்யாணி மீண்டும் இதுபோன்று அலைபேசியை தினம் தினம் ஆய்வு செய்தால் எனும் பெரும் வினாவில்... தனது காதலை மறைத்து வைப்பதில் உடன்பாடில்லை என்றாலும் மகன் பாசத்தில் கல்யாணி என்னவும் செய்வார் என்று மனதோடு வைத்துக் கொண்டான்.
எப்போது கல்யாணியின் தாய்ப்பாசம் தனக்கு விலங்காகிறது என உணரத் துவங்கினானோ, அவரின் அன்புக்கு தானாக அடங்கிப் போகாமல் அவரால் கட்டுப்படுத்தப்படுகிறோம் என விளங்கிக் கொண்டானோ அது முதல் சிறு சிறு விடயங்களில் தனது அதிருப்தியை, விருப்பமின்மையை காட்டத் துவங்கினான் திகழோவியன்.
அவரின் அன்பு தன்னிடத்தில் திணிப்பாக மாறிவிட்டது என்பதை அறிந்து கொள்வதற்கே அவனுக்கு இத்தனை வருடங்கள் ஆகி இருக்கிறது.
அவரின் அந்த அன்பின் சிறையும், பாசத்திணிப்பும் தனது காதலுக்கு தடையாக அமர்ந்திடுமோ எனும் பயம் எழுந்திட அவரின் கைப்பிடிக்கல்லிருந்து மெல்ல வெளிவர துவங்கினான். அதனை அவர் உணராது பார்த்துக் கொண்டான்.
அதில் முதலாவது தினமும் அவர் குளிக்க வைப்பது, தன்னுடைய ஆடைத்தேர்வு, அவருடன் உறங்குவது என அனைத்திற்கும் அவர் நோகாது தகுந்த காரணங்கள் கூறி எட்ட நிற்க வைத்தான்.
இதில் கல்யாணிக்கு ஏகப்பட்ட வருத்தங்கள்.
இருப்பினும், "இருவது வயதுக்கு மேல ஆவதுங்மா... இன்னமும் நீங்க குளிக்க வைக்கிறது ரொம்பவே கூச்சமா இருக்குங்மா. தலை தேச்சிக்க என்னால ஆவாதுங்களா? இனி என்ட்ர சின்ன சின்ன வேலையையும் நான் பார்த்துக்கிறேனுங்மா" என அவன் நேரடியாக அழுத்தமாக சொல்லும்போது அவரால் மறுக்க முடியவில்லை.
'இப்போதெல்லாம் தனது தங்கோ, கன்னுக்குட்டி, கண்ணு, சாமி ஆகிய அழைப்புகள் அவனிடம் வேலை செய்வதில்லை' என்பதை புரிந்து கொண்டார்.
அதிலும் கோவிந்தன் அன்று பேசியப்பேச்சில், "ரொம்ப இறுக்கி பிடிச்சா மூச்சு முட்டிப்போவும்" என சொல்லியதில் உண்மை உள்ளது என கொஞ்சமே கொஞ்சம் திகழிடம் தனது பிடியை தளர்த்தினார்.
அதில் திகழாக அவரை எட்ட நிற்க வைத்து தனக்குத்தானே செய்து கொள்ளும் சிறு சிறு விஷயங்கள் மட்டுமே அடக்கம்.
இப்போதெல்லாம் கல்யாணி பிடிவாதம் திகழிடம் எடுபடுவதில்லை.
தனக்கு விருப்பப்பட்ட இருசக்கர வாகனத்தில் தான் பணிக்கு செல்கிறான். இரவு நேரம் தான் வீடு திரும்புவான். விடுமுறை தினங்களில் நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறான். அவர்களின் ஊர் மைதானத்தில் நண்பர்களுடன் அரட்டையில் கலந்துகொள்கிறான்.
இதிலெல்லாம் அவனை கட்டுப்படுத்த நினைத்தாலும் இப்போதெல்லாம் கல்யாணியால் முடியவில்லை.
அன்றொரு நாள் அப்படித்தான், விடுமுறை நாளில் கிளம்பி நின்ற திகழோவியன் எங்கு செல்கிறேனென்று முன்னதாக சொல்லாது, வண்டியை வெளியில் தள்ளியபடி,
"தொண்டாமுத்தூர் போய் வாரனுங்... மாமா வீடு எப்படியிருக்குன்னு தெரியாதுங்களே! பார்த்துப்போட்டு வர்றேனுங். அத்தையும் போன் பண்ணும்போதெல்லாம் வந்து போ கண்ணுங்கிறாங்க... இன்னைக்கு சுதிர்தா மாமாவுக்கு பொறந்தநாளாச்சே போய் வாரனுங்க" என்று வண்டியில் ஏறி அமர்ந்தான்.
அவனுக்கு செந்தாழினியை நேரில் பார்க்க வேண்டுமென்ற எண்ணமும்.
இத்தனை வருடம் தான் காத்து வரும் பெரும் ரகசியம் உடைபட்டுவிடுமோ எனும் அச்சம் சூழ நொடியில் கல்யாணி வெறிபிடித்தவராக மாறியிருந்தார்.
"நீ போகக்கூடாது திகழு" என்று வண்டிக்கு முன் வந்து நின்றவர், திகழ் சுதாரிக்கும் முன்பு வண்டியிலிருந்து சாவியை எடுத்திருந்தார்.
"ம்மா... என்ன பண்றீங்கங்" என்றவன் வண்டியை விட்டு இறங்கி, அவரை நெருங்கி, சாவியை வாங்க முயன்றான்.
அவரோ "கொடுக்கமாட்டேன்" என அவனை திமிரி விலக்குவதில் அத்தனை ஆவேசம் காண்பிக்க,
"நானு பஸ்ல போயிருக்கிறேனுங்மா" என்று தெருவில் நடக்கத் துவங்க, "கண்ணு திகழு" என்று ஈனக்குரலில் விளித்தவர், அவன் திரும்பிப் பார்த்திடவே மயங்கி விழுந்திருந்தார்.
பதறி ஓடி வந்தவன் அவரைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் செல்ல,
"என்னாச்சு?" என பக்கம் வந்தார் கோவிந்தன். அதுவரை உள்ளிருந்து வெளியில் இருவரின் பேச்சினையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்.
உண்மை தெரிந்ததற்கு பின்னர் திகழிடம் ஓரிரு வார்த்தைகள் பேசத் துவங்கியிருந்தார் கோவிந்தன்.
"தெரியல... மயங்கிட்டாங்க" என்று திகழ் கூற,
"கோவமா கத்தி பேசினதுல பிரஷர் கூடியிருக்கும்" என்ற கோவிந்தன், அவரின் முகத்தில் தண்ணீர் தெளிக்க, மெல்ல கண் விழித்தார் கல்யாணி.
"ம்மா ஒண்ணுமாவலங்களே!" என்று உண்மையான தவிப்போடு திகழோவியன் கேட்டிட, "உன்ற மடியில கிடக்கிற வரை எனக்கு ஒண்ணுமாவது தங்கோ" என்று அவனின் தாடை பிடித்தவர், "இப்போலாம் இந்த அம்மாவை பிடிக்காம போயிடுச்சா கண்ணு?" என்றார்.
"அப்படியில்லங்மா" என்ற திகழ், "உங்களைவிட்டு எங்கங்போறேன். என்ட்ர தாய்மாமா வீடுதானுங்களே" என்றான்.
"உனக்கு அவங்களை பார்க்கனும்னா சொல்லு கண்ணு... நான் இக்கட்டிக்கு வரவைக்கிறேன். நீ இம்புட்டு தொலைவு தனியா போவவேணாம் சாமி" என்றார்.
திகழோவியன் கோவிந்தனைப் பார்க்க, வழக்கம்போல் தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லையென ஒதுங்கிக்கொண்டார் அவர்.
"உன்னை தொலைவுல அனுப்பி வச்சிப்போட்டு நான் தவிச்சி காத்துக்கெடக்கோனும் தங்கோ" என்றவர் கண்களில் கண்ணீரை கொட்ட, "சரிங்மா போவலங்... நீங்க ரெஸ்ட் எடுங்கங்" என்று எழுந்து நின்றவன், "இப்படியே நீங்க பண்றதும் சரியாப்படலங்" எனக்கூறி அறைக்குள் சென்று மறைந்தான்.
அடுத்தநொடி கண்களை துடைத்துக்கொண்டு எழுந்து நின்ற கல்யாணியை வெறுப்பாகப் பார்த்த கோவிந்தன்,
"நல்ல நடிப்பு" என்றார்.
"யாரு நடிச்சா?" என்ற கல்யாணி, "நிஜத்துக்கும் இப்போலாம் அடிக்கடி மண்டைவலி வருது" என்றார்.
"ஆனா இப்பைக்கு நீ மயக்கம் போட்டது பொய்தானா?"
"ம்க்கும்..."
"அவனக்கே எல்லாம் புரிய ஆரம்பிச்சிடுச்சு. எனக்கு தெரிய வந்த மாதிரி ஒருநாள் அவனுக்கும் உண்மை தெரிய வரும். அப்போ அவன் முழுசா உன்னை வெறுக்கப்போறான் பாரு" என்று கோவிந்தன் சொல்லிட, கல்யாணிக்கு திகழோவியனை மீண்டும் தனது கைக்குள் கொண்டுவரும் வேகம்.
எவ்வளவு முயன்றும் கல்யாணியால் வளர்ந்து நிற்கும் ஆண் மகனை ஐந்து வயது பிள்ளையாக மாற்றி தனது தாயெனும் சிறைக்குள் அடக்கிட முடியவில்லை.
செந்தா நினைத்த நேரம் அவனிடம் பேசிட, அவனுக்கு குறுந்தகவல் அனுப்பிட அனுமதி கேட்டதற்கு பின்னால், இரவில் சில நிமிடங்கள் அவளுடன் உரையாடத் துவங்கியிருந்தான். பேசி முடித்த அடுத்த கணம் தகவல்களை அழிக்கவும் பழகியிருந்தான்.
ஒருநாள் கல்யாணி உறங்கிவிட்டதாக எண்ணி திகழோவியன் செந்தாழினியிடம் புலனத்தில் உரையாடிவிட்டு உறங்க கண்களை மூடிட, கல்யாணி அவனது அலைபேசியை எடுத்து ஆராய்ந்துப் பார்த்தார். தற்செயலாக அவர் புறம் திரும்பிய திகழோவியன் அவரின் அச்செயலைக் கண்டு அதிர்ந்துதான் போனான்.
பெற்றவர்களுக்கு காதல் தவறான ஒன்றுதான். அதற்காக இந்தளவிற்கு இறங்கி, தான் யாருடன் பழகுகிறேன், பேசுகிறேன் என்று வேவு பார்க்க வேண்டுமா என்று கல்யாணியின் அச்செயல் ஆதங்கமாக திகழின் மனதில் தேங்கியது.
அடுத்தநாளே தன்னுடைய அறையில் கல்யாணி தன்னுடன் உறங்குவதை தடுத்திருந்தான்.
"நீங்க என்ட்ர ரூம்ல தூங்குறீங்கன்னே நைட்ல படிக்க முடியாம போவுதுங்மா" என்று காரணம் சொல்லியவன், "பையன் எனக்கு சில விஷயங்கள், நீங்க கூடாலே இருக்கும்போது சங்கடமா இருக்குங்மா" என்று மேலும் ஏதேதோ காரணம் சொல்லி அறையை தானிருக்கும் நேரங்களில் தாழிடத் துவங்கியிருந்தான்.
திகழோவியனிடம் முளைக்கும் மாற்றங்களையெல்லாம் மீண்டும் மாற்றிட வேண்டுமென கல்யாணி என்னென்னவோ செய்தும் முடியாமல் போனது. வருடங்களும் ஓடியிருந்தது.
காலை முகம்கொள்ளா மலர்ச்சியுடன் அறையைவிட்டு வெளியில் வந்த மகனின் மீது ஆராய்வாகப் படிந்தது கல்யாணியின் முகம்.
"என்ன சாப்பாடுங்மா?" கேட்டுக்கொண்டே வந்தமர்ந்தவன் முன்பு, தட்டை வைத்த கல்யாணி,
"நைட்டெல்லாம் உன்ற ரூம்ல பேச்சு சத்தமா இருந்துச்சு கண்ணு. யாரு கூடலா தங்கோ பேசிட்டு இருந்த?" என்றார்.
"யாரோட பேசினா என்னங்மா?" பட்டென்று திருப்பிக் கேட்டிருந்தான்.
"நான் கேட்கக்கூடாதா சாமி?" அவர் உடனடியாக தனது அழுகையை கையிலெடுக்க,
"சாப்பாடே வேணாமுங்க" என்று எழுந்தவன், பையை எடுத்துக்கொண்டு அலுவலகம் புறப்பட்டிருந்தான்.
இரவு தன்னவளுடன் உரையாடியதால் உண்டான மொத்த மகிழ்வும் காணாமல் போயிருந்தது.
திகழோவியனுக்கு கல்யாணி யாருடன் பேசினாய் என்று கேட்டதெல்லாம் வருத்தமில்லை. பாதி இரவிற்கு மேல் துவங்கிய உரையாடல். அதனை அவர் கேட்பதுதான்... அந்த நேரத்தில் அவன் பேசுவது அவருக்குத் தெரிந்திருக்கிறதென்றால் கதவில் காது வைத்துக் கேட்காமல் எப்படி? ஓட்டுக்கேட்பது, அந்த நேரத்தில் தன்னை கண்காணிப்பது அவனுக்கு அப்படியொரு கோபத்தைக் கொடுத்தது. ஆனால் அவரிடம் காட்டிட முடியாதே!
மொத்த கோபத்தையும் வண்டியின் வேகத்தில் காண்பித்தான்.
சட்டைப் பையிலிருந்த அலைபேசி ஒலியெழுப்பிட, தான் வந்த வேகம் கண்டு கல்யாணித்தான் அழைப்பாராக இருக்குமென்று கண்டுகொள்ளவே இல்லை.
மீண்டும் ஒலிக்கவே தான் எடுக்காது ஓயாதென, வண்டியை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு, அலைபேசியை கையிலெடுத்தான்.
செந்தாழினியின் முகம் திரை நிறைத்திருக்க, ஏற்று காதில் வைத்தான்.
நொடியில் முகத்திலும் மனதிலும் வெடிக்க துடித்த கோப உணர்வுகள் யாவும் மாயமானது. இதழில் குறுநகை பூத்தது.
"ஆபீஸ் போயிட்டீங்களாங் மாமா?" என வேகமாகக் கேட்டிருந்தாள்.
எப்போதும்போல் அந்த மாமா என்ற வார்த்தையில் கட்டுண்டு உருகிக் கரைந்தான்.
அந்த மாமா எனும் அழைப்பு அவர்களுக்குள் உறவாடத் துவங்கியதே ஒருவித அழகியல் தான்.
அப்போது திகழோவியன் படிப்பில் இறுதி ஆண்டில் இருந்தான்.
தினமும் கல்லூரியில் பார்த்துக்கொண்டாலும், அவர்களின் பேச்சு புலனம் வழிதான்.
எதிரெதிரே நின்றிருந்தாலும் அதில் தான் பேசிக்கொள்வார்கள்.
அப்படித்தான் வகுப்பிலிருந்த செந்தாழினி திகழோவியனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிட, அவனும் ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனித்தவனாக பெஞ்சுக்கு கீழே அலைபேசியை மறைத்து வைத்து பதில் அனுப்பிக் கொண்டிருந்தான்.
"ஒரு சிங்கிள் பையன நீ வெறுப்பேத்திக்கிட்டே இருக்க மச்சான்" என்று மணி புலம்பும் அளவுக்கு இருக்கும்.
எழுத்தாக வந்து கொண்டிருந்த உரையாடலுக்கு நடுவில் திடீரென குரல் பதிவு வரவும்...
திகழோவியன், "க்ளாஸ்ல இருக்கேன். டெக்ஸ்ட்டா அனுப்பு!" என்று அனுப்பியது அவளால் பார்க்க முடியாமல் போனது.
அவளிடமிருந்து பதில் வராதுபோகவே,
"அவளுக்கு க்ளாஸ் ஸ்டார்ட் ஆகிடுச்சிப்போலடா" என்று பாடத்தில் கவனமான திகழோவியன், வகுப்பு முடிவடைந்ததற்கான ஒலி அடிக்கவும் மணியுடன் வெளியேறினான்.
"மதியம் கிளாஸ் இல்லை. கிளம்புரியா?" என்றான் மணி.
"செந்தாழினியை பார்க்கணும்டா. காலையில நான் வரதுக்குள்ள அவளுக்கு கிளாஸ் ஆரம்பிச்சிடுச்சு. லஞ்ச் பாக்ஸ் மாத்தி வைக்கப்போனப்பவும் பார்க்க முடியல" என்ற திகழோவியன், "நீ கிளம்புடா. இப்போ பஸ் விட்டா, பொறவு செக்கென்ட் சிங்கில் லேட்டாகும் உனக்கு" என்றான்.
"சரிடா... பார்த்துக்கோ" என்ற மணி சென்றிட, நூலகத்திற்கு முன்னிருந்த மரத்துக்கு கீழ் வந்தமர்ந்தான் திகழோவியன்.
செந்தாழினி இறுதியாக அனுப்பிய குரல் பதிவு நினைவுவர, அலைபேசியை எடுத்தான்.
கிட்டதட்ட ஏழு நிமிட குரல் பதிவு.
"இம்புட்டுக்கு அப்படியென்ன" என்ற யோசனையோடே அதனை ஒலிக்கச் செய்தான்.
"எனக்கும் என்ட்ர மாமாவுக்கும் கல்யாணப் பேச்சு பேசுறாங்க செந்தா" என்று வசந்தியின் குரல் கேட்க, "அதுக்குள்ளவா கல்யாணம்?" என்று கேட்டது செந்தாழினியின் குரல்.
இருவரும் பேசிக்கொண்டது தவறுதலாக வந்துவிட்டதென திகழ் நினைக்க,
"அவரு வெளிநாட்டுக்குப் போறாரு புள்ள... அதான் நிச்சயம் போட்டுப்புடலாம் பேசிக்கிறாங்க" என்றாள் வசந்தி.
வசந்தியின் தனிப்பட்ட விஷயமென்பதால், தான் கேட்பது நன்றாக இருக்காதென நினைத்து திகழ் அணைக்க முயல,
"ஓ" என்ற செந்தாழினியின் குரல் அவனைத் தடுத்திருந்தது.
"குரல்லே சுருட்டி வச்சிக்கிறா?" என்று புன்னகைத்த திகழோவியன், அடுத்து செந்தா கேட்டதில் சுவாரஸ்யமானான்.
"நீ அவங்களை மாமான்னு தான் கூப்பிடுவியா?" எனக் கேட்டாள்.
"இப்பவரைக்கும் இல்ல. கொஞ்சம் டெரர் பீஸ். பேசினதுமில்லை. ஆனா பார்க்க மட்டும் செய்வேன். இனி கூப்பிட வேண்டியதுதான். கட்டிக்கிடப்போறவங்கள மாமான்னு சொன்னாதான் நல்லாயிருக்கும். எங்க அம்மா இப்பவும் எங்க ஐயனை அப்படித்தான் கூப்பிடுறாங்க" என்ற வசந்தி, "உங்க அம்மா கூப்பிட்டதில்லையா?" என்றாள்.
"நான் கவனிச்ச வரைக்கும் இல்லை. தனியா கூப்பிட்டுப்பாங்களா இருக்கும்" என்றாள் செந்தாழினி.
"அதைவிடு... நீ லவ் பண்றவங்களை மாமா சொன்னதில்லையா?" என்றாள்.
"வசந்தி இதென்னப் பேச்சு?" என்ற செந்தாழினி, நொடியில் சுதாரித்து "நான் லவ் பண்றேன்னு யாரு புள்ள சொன்னது உனக்கு?" என்று விழி விரித்தாள்.
"யாரு சொல்லோணும்... மொச புடிக்கிற நாய் மூஞ்ச பார்த்தா தெரியாது" என்ற வசந்தி, "லவ் பண்ற பொண்ணுங்க பண்ற அத்தனை விஷயமும் பண்ற. அப்புறம் கண்டுபிடிக்கலனா நானென்ன உன் பிரண்டு. இதுல உன்ற கூடவே வேற திரியுறேன். ஆனால் ஆள் யாருன்னுதான் தெரியல" என்றாள்.
"சொல்லக்கூடாதுன்னு இல்லை..." என்று செந்தாழினி இழுக்க...
"காரணம் என்னவா வேணும்னாலும் இருக்கட்டும். நீ நான் கேட்டதுக்கு பதில்சொல்லு" என்றாள்.
"கூப்பிட்டதில்லை வசந்தி" என்ற செந்தாழினி, "எப்பையாவது பேர் மட்டும் சொல்லுவேன்" என்றான்.
"அடிபோடி போக்கத்தவளே... அதெல்லாம் தனி ஃபீல்'டி. சில விஷயமெல்லாம் இப்பைக்கு தான் ரசிக்க முடியும். அழகாவும் இருக்கும்" என்ற வசந்தி, "என்ற மாமனை மாமா சொல்லவே எனக்குள்ள குஷியாவுது புள்ள" என்றாள்.
"எனக்கு அப்பப்போ தோணும். பெரியவங்க, சட்டுன்னு பேர் சொல்லவும் ஒரு மாதிரி இருக்கும்... இருந்தாலும், அவங்களுக்கு புடிக்கலன்னா என்ன பண்றது?" என்று செந்தாழினி ஒருவித தயக்கமான குரலில் மொழிய, திகழோவியனின் இதழ் மலர்ந்து விரிந்தது.
அதற்கடுத்து, "மேம் லேபுக்கு வர சொல்றாங்க" என்று வேறொரு பெண்ணின் குரல் கேட்க, பதிவு முடிந்திருந்தது.
அவர்களுக்குள்ளான இயல்பான உரையாடல், ஆனால் திகழோவியனுக்குள் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது.
அதிலும், "கூப்பிடணும் தோணும்" என்ற செந்தாழினியின் அந்நேர குரல் அவனுள் ஏதோ செய்தது.
கல்யாணியைத் தாண்டி நெருக்கமான உறவென்றால் மணி தான். ஆனால் அனைத்துமாகிய முதல் உறவு அவனின் செந்தாழினி.
தொடர்ச்சி கீழே...