உந்தன் உயிராக 14
மூன்று மாதங்களுக்குப் பிறகு...
உக்கடம் ஏரி... நடைமேடை பகுதியில் போடப்பட்டிருந்த கல் மேடையில் தவிப்போடு அமர்ந்திருந்தாள் செந்தாழினி.
கண்கள் வீங்கி சிவந்திருந்தன. திகழோவியனுக்காகக் காத்திருக்கிறாள்.
அன்று கோவிலில் என்ன பேசுவது என்ன செய்வதென்று எதுவும் தெரியாது, அறிந்து கொண்ட விஷயத்திலிருந்து எப்படி மீள்வது, என்ன முடிவெடுப்பது என எதுவும் புரியாது, அகம் சேர்ந்த கசப்பினை உள்ளுக்குள் துளி துளியாய் வேதனையோடு விழுங்கியவாறு, முகம் கூட பார்க்க முடியாது அமைதியாக பிரிந்திருந்தனர்.
"மாமா" என்றழைத்தவளை பட்டென்று அப்படி அழைக்காதே என்று சொல்லிவிட்டான்.
ஏன் அவ்வாறு கூறினானென்று அவனுகேத் தெரியவில்லை.
'தெரிந்துகொண்ட உறவு முறையால் தன்னைப்போல் மனம் உறவுக்கு மதிப்பளிக்க எண்ணியதா?' என மனதிற்குள் போட்டு ஆராய்ந்தவனாக, கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்தது முதல் தனத்தறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்று கொண்டிறிருக்கிறான்.
செந்தாழினியின் மீதான நேசம் இக்கணமும் இதயத்தின் மேலே ததும்பி அலையாடுகிறது.
அவளை வேறொரு பந்தத்தில் நிறுத்தி வைத்து விலக்க முடியாதென சிறு அலசலுக்குப்பின் கண்டுகொண்டவனுக்கு, தங்களுக்கிடையே திடீரென முளைத்து பெரும் விருட்சமாய் தடையமைத்து நிற்கும் புதிய உறவுமுறையின் மீது அத்தனை ஆத்திரம் முகிழ்த்தது.
'இன்று தெரியாதது தெரியாமலே போயிருக்கலாமே' என நொடிக்கு நொடி அவனது உள்ளம் குமுறிக் கொண்டிருக்கிறது.
எத்தனை அழகாய் துவங்கி, மலர்ச்சியாய் வளர்ந்த காதல். இப்படி ஒரு நொடியில் கருகிப் போகுமென சிறு பொழுதில் ஒரு நொடியேனும் இருவரில் ஒருவரும் நினைத்திருக்கமாட்டார்கள்.
நெஞ்சம் அடைத்து, தொண்டையில் வலி கூடிட, கண்கள் உடைபெடுத்து கன்னம் உருண்டன கண்ணீர்.
தரையில் மண்டியிட்டு பின் படிந்த கால்கள் மீதே மடங்கி அமர்ந்தவன், தரையில் அழுத்தமாக ஓங்கி ஓங்கி அடித்தான்.
இதயத்தில் குத்திக் கொண்டிருக்கும் வலியை விட, அவ்வலி அத்தனை பெரிதாக தெரியவில்லை.
'நீயில்லாம முடியாதுடி... எப்புடி தாழினி?' என்று மனதோடு கேட்டுக்கொண்டவனுக்கு இதனை சரி செய்யும் பாதை தான் தெரியவில்லை.
சீர் செய்திட வேண்டுமென்றால் வாழ்க்கையையே பிறப்பிலிருந்து மாற்றியமைத்திட வேண்டுமே! முடிந்திடுமா? இனி வாய்ப்புகள் மறுஜென்மமென்ற ஒன்று உண்டென்றால் தான்.
உண்மையான பந்தமறியாது, சூழ்நிலை கைதிகளாக, விதியின் புயலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன காதல் நெஞ்சங்கள்.
நெஞ்சில் உயிராக நிறைந்திட்ட காதலெல்லாம் வேள்வித் தீயில் பொசுங்கிக் கொண்டிருக்கிறது.
அழுது புலம்பி ஓய்ந்தவன், தீர்க்கமான ஓர் முடிவெடுத்தவனாக செந்தாழினிக்கு அழைத்திட்டான்.
இரவு முழுக்க அழைப்புகள் நீண்டன. ஏற்கப்படவில்லை. குறுந்தகவல்கள் பறந்தன. பார்க்கப்படவில்லை.
அவளின் நிலையை அவனால் உணர முடியுமே! உணர்ந்து கொண்டான். இக்கணம் தன்னைக் காட்டிலும் அவளின் நிலை மோசமாக இருந்திடுமே! அவளை அவனன்றி வேறு யாரால் அதீதமாக புரிந்துகொள்ள முடியும்? உயிரில் உள்வாங்கிக்கொள்ள முடியும்?
அவளாக அமைதி அடைந்து, முடிவெடுத்து வரட்டுமென காத்திருக்கத் துவங்கினான்.
அடுத்தநாள் வேலைக்கு சென்றும் மனம் ஒருநிலையில்லாது தவித்துக்கொண்டே இருக்கிறதென நினைத்தவன் அன்றைய பொழுது நள்ளிரவு தாண்டிய வேளையில் நேரத்தைப் பார்க்காது மணிக்கு அழைத்திருந்தான்.
இரவு நேரப்பணியில் அப்போதுதான் சிறு ஓய்வாக அமர்ந்த மணி முதல் அழைப்பிலே எடுத்திருக்க...
"தூங்கலையாடா?" என்று எவ்வளவோ முயற்சித்தும் வலி நிறைந்த குரலை மாற்ற முடியாது திக்கலோடு வினவியிருந்தான்.
"நைட் ஷிஃப்ட்" என்ற மணி, "என்னமாச்சு திகழு... குரல் வாட்டமா தெரியுது" என்று நண்பனை நொடியில் அவதானித்தவனாகக் கேட்டான்.
நேற்றைய தின நிகழ்வை வலியோடு சொல்லிய திகழோவியன், "அவள் என் தங்..." என அந்த வார்த்தையை கூட சொல்ல முடியாது நிறுத்தியிருந்தான்.
உண்மை தெரிந்ததும் திகழ், செந்தா கொண்ட அதிர்விற்கு சற்றும் குறைவில்லாது மணியும் அதிர்வை உள்வாங்கியிருந்தான்.
"என்னடா சொல்ற நீ?" என்ற மணி இருக்கையை விட்டே எழுந்திருந்தான்.
"அவள் ஐயனும், என்ட்ர ஐயனும் அண்ணன், தம்பியாம்!" கடுகடுவென சொல்லியிருந்தான்.
"இதெப்புடிடா... இம்புட்டு வருஷமா தெரியாமலா இருந்துச்சு?"
"எல்லா அப்பா மாறியும் இவரும் எங்கூடால இருந்திருந்தா, அவரு பக்கட்டிக்கு இப்படியொரு சொந்தமிருக்குன்னு மொகம் தெரியலன்னாலும், பேராவது தெரிஞ்சிருக்குமே!" என்ற திகழோவியன், "அம்மா ஒருநாளும் அவங்க ஒரமுற பத்தியே பேசினதில்லைடா" என்று சலிப்பாகக் கூறினான்.
"அட்லீஸ்ட் தாய் மாமான்னு இருக்க சொந்ததுக்கூட உறவாட விட்டு, வர போவ பழக்கியிருந்தா... முன்னவே அவளையும் தெரிஞ்சிருக்கும். அவள் என்ன பந்தமுன்னும் தெரிஞ்சிருக்கும்" என்று ஆற்றாமையாக மொழிந்தான்.
மணிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
"இப்போ என்னடா பண்ணலாம் இருக்க... செந்தா என்ன சொல்லுச்சு?"
"என்ன பண்ணலாம்?" என்ற திகழோவியன், "நீ என்ட்ர இடத்திலிருந்தா என்ன பண்ணுவ?" எனக் கேட்டிருந்தான்.
"நானா?" "நானு..." மணிக்கு நொடியில் மண்டை வெடித்துவிடும் போலிருந்தது.
"என்ட்ரகிட்ட கேட்டா நானென்னடா சொல்ல?" என்ற மணி, "காதல் முக்கியம்டா... ஆனா அதைவிட உறவுன்னு ஒன்னு இருக்கே! சேர்ந்தாலும் வரம்பு மீறின உறவாத்தான் பார்ப்பாங்க. நிம்மதியா வாழவிடமாட்டாங்க" என்றான்.
மணி சொல்வது நிதர்சனம். ஆனால் திகழோவியனால் ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை.
"அதுக்காக சட்டு சட்டுன்னு சொக்காவை மாத்துற மாதிரி மனசை மாத்திக்க முடியாதே. அவளை போய் நானெப்படிடா அப்படி பார்க்க முடியுமா? இதுதான் உண்மைன்னு தெரிஞ்சும் அவளை அந்த உறவுல நிறுத்தி வைக்க முடியலடா. எம்புட்டுக்கோ முயற்சி பண்ணி பார்த்துப்புட்டேன். சத்தியமா முடியலடா. அவள் தான் என் பொண்டாட்டின்னு..." என்றவன் வேகமாக வார்த்தையை நிறுத்தியிருந்தான்.
"உன்னால இப்பைக்கு இப்படியும் சொல்ல முடியலதான. காதல் தான். பக்கட்டிக்கு இருந்து பார்த்திருக்கேனே! உம்மட மாதிரி வேறவொரு காதலை பார்த்ததுமில்லை. ஆனா ஒண்ணுமே பண்ணமுடியாத சூழ்நிலையில இருக்கோம். புரிஞ்சிக்கோ திகழு. தங்கச்சியையே கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு ஊர் அம்புட்டுக்கு பேசும். நமக்கே நெறிமுறைன்னு ஒண்ணு இருக்கே. இப்பைக்கு காதலை விட்டுக்கொடுக்க முடியாம, வேகத்துல ஒரு முடிவை எடுத்துப்புடலாம். பின்னாடி ரொம்பவே உறுத்தலா மாறிப்போவும்" என்று தன்னளவில் எடுத்துக்கூறினான்.
"அப்போ நாங்க பிரியனும்னு தான் நீ சொல்லவர்றியா?"
"நானென்ன சொல்றன்னு உனக்கே புரியும்."
"இப்பைக்கு எந்தவொரு முடிவும் எடுக்காம கொஞ்சநாளுக்கு ஆறப்போடுன்னு மனசு சொல்லுது" என்றான் திகழோவியன்.
"நல்லது... அதுவும் சரிதான். பொறுமையா விஷயத்தை ஆறப்போட்டாலே ஒரு தெளிவை கொடுக்கும்" என்ற மணி, "நல்ல முடிவுடா!" என்றான்.
"ஆனா காதல் அப்படியே தான் இருக்கும். அதுல எந்த மாத்தமும் இல்லை" என்று திகழோவியன் சொல்லிய அழுத்தத்தில் மணிக்கு பயந்து வந்தது.
இப்போதைக்கு பொறுமையாக இருந்துவிட்டு, பின்னாளில் தனக்கு வேண்டியதை செய்து, சமூகத்தில் நெறி தவறியவன் என்ற பெயரைப் பெற்றிடுவானோ என நண்பனுக்காக அச்சம் கொண்டான்.
பொல்லாத சமூகமாயிற்றே! உண்மை எதுவென ஆராய்ந்துப் பார்த்திடாது தீர்ப்பு வழங்கிடுமே!
"என்னடா அமைதியாகிட்ட?"
"என்ன சொல்லணும் தெரியலடா!"
"அமைதியா இருக்க வேண்டியதுதான்" என்ற திகழோவியன், "உன்றகிட்ட பேசினா நல்லாயிருக்கும் தோணிச்சு. அதான் நேரங்காலம் பார்க்காம கூப்பிட்டுப்புட்டேன்" என்றான்.
"அடிவாங்குவ நீ" என்ற மணி, "பேசினியா?" என்றான்.
"இல்லடா... கால் பண்ணேன் எடுக்கல. நானொரு முடிவுக்கு வந்திருக்க மாதிரி அவளும் ஒரு முடிவுக்கு வரணும்ல... வரட்டும். அவளே கூப்பிடுவா! அடுத்த வாரத்துல பரீட்சை வேற. என்னாலதான் அவளை பார்க்க முடியாது. நீ அவளைப் பார்த்து எதையும் போட்டு குழப்பிக்காம பரீட்சையை நல்லா எழுத சொல்லு" என்றான்.
"ம்ம்டா."
நண்பனிடம் பகிர்ந்துக்கொண்டதால் அந்த நேரத்திற்கு மனதின் வலி மட்டுப்பட்டது போலிருக்க, மேலும் சில நிமிட பேச்சிற்குப்பின் அழைப்பைத் துண்டித்திருந்தான்.
அவளாக ஒரு முடிவெடுத்து வரட்டுமென நினைத்தவனால், அவளிடம் பேசாது இருக்க முடியாது, அடுத்த இரண்டு நாளிலே கல்யாணிக்கு சொல்லாது வேலைக்கு செல்வதைப்போன்று தொண்டாமுத்தூர் சென்றுவிட்டான்.
வரவே வராத பிள்ளையை வீட்டிற்குள் அழைத்து, மணியில் அவனுக்கு பிடித்த உணவெல்லாம் செய்து கொண்டாடி மகிழ்ந்துவிட்டார் காமாட்சி.
"பொண்ணுகூட இல்லை. பொறவு என்னத்துக்குங்மா மருமகனுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம்!" என்று சுகிர்தன் கேலி செய்ய... "அவனுக்கு தாய் மாமன் வீடுடா இது. பொண்ணு இருந்தாதான்னு இல்லை. அவனுக்கு அடுத்து தான் உனக்கே உரிமை" என்று திகழோவியனை செல்லம் கொஞ்சி சில மணி நேரத்தில் அத்தனை சீராட்டியிருந்தார் காமாட்சி.
சுகிர்தனுக்கு பதில் வழங்கியிருந்தாலும், வேறொரு பதிலை அவரது ஆழ் மனம் மட்டுமே அறிந்திடும்.
காமாட்சி பிறந்தவுடன் இறந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் அவரது இளைய மகன் உயிரோடிருந்திருந்தால் அவனும் திகழோவியன் போன்றுதான் இருந்திருப்பான்.
திகழோவியனுக்கு பிறந்தநாளே, இறந்தநாளாகியிருந்தது. விதியென சொல்லிக்கொண்டாலும் கல்யாணி மற்றும் ராஜேந்திரன் ஆடிய ஆட்டத்தால்.
"வாடா நம்மட காட்டுப்பக்கட்டிக்கு போய் வருவோம்" என்று சுகிர்தன் அழைத்திட சரியென்றான்.
அங்கு வந்து வீட்டு வாயிலில் வண்டியை நிறுத்தியதுமே திகழோவியனுக்கு கண்கள் பக்கத்து வீட்டில் தான் நிலைத்தது.
"உன்ற மாமாவூட்டுக்கு பக்கத்து வூடுதான் செந்தா வூடு." எப்போதோ மணி சொல்லியதை வைத்து, வலது பக்கம் எந்தவொரு வீடுமில்லாது இருக்கவே, இடதுபக்கமிருக்கும் வீடாகத்தான் இருக்குமென்று அவ்வீட்டை பார்வையால் சுற்றிவந்தான்.
அரவம் ஏதுமில்லை.
வீட்டுக்குள்ளே இருந்தால் அவளை பார்க்க முடியாதென சுகிர்தன் அழைத்ததும் அவனுடன் கிளம்பிவிட்டான்.
"உன்ற அம்மா உன்னைய இக்கட்டிக்கு அனுப்பமாட்டாங்களே! இன்னைக்கு எப்படி விட்டாங்க?" வீட்டிற்கு பின்னாலிருக்கும் வரப்பு மீது நடந்திட சுகிர்தன் திகழிடம் கேட்டான்.
"நான் வந்தது அம்மாக்கு தெரியாதுங் மாமா!" என்று திகழோவியன் சொல்ல, "தெரிஞ்சுச்சுன்னா சும்மா விடுவாங்களா?" என்றான் சுகிர்தன்.
"பார்த்துக்கலாமுங்க" என்ற திகழோவியன், சுகிர்தன் பின்னால் நடந்தாலும், அவனது பேச்சுக்கு பதில் பேசினாலும் கண்கள் என்னவோ செந்தாழினியின் வீட்டைத்தான் மேய்ந்தன.
"அந்த வூடு செந்தாழினியோடாதுதானுங் மாமா?" சுகிர்தனிடமே கேட்டுவிட்டான்.
"அந்த பிள்ளையை உனக்கெப்புடி டா தெரியும்?"
"கூடப்படிச்ச புள்ளைங்க மாமா? ஜூனியர். ஒரே டிபார்ட்மெண்டு."
"ஓ... அதுதான். ஆனா இப்பை அந்தப்புள்ளையை பார்த்தாலும் பேசிக்காத... அவள் ஐயனுக்கும், உன்ற மாமனுக்கும் தினம் ஒரு யுத்தம் தான்" என்றான் சுகிர்தன்.
"சரிங்மாமா" என்று திகழோவியன் கூற, அவனுக்கு முன்னால் நடந்த சுகிர்தன் நடை நின்றது.
"என்னாச்சுங் மாமா?"
"உன்ற பேச்சுக்கு காரணமான புள்ளையே இக்கட்டிக்கு இட்டேரி தடத்துல உட்கார்ந்திருக்குடா" என்றான் சுகிர்தன்.
அவனை எட்டிக்கொண்டு திகழோவியன் முன்னால் பார்க்க, வரப்பில் கால்களைக் கட்டிக்கொண்டு, கையின் மீது தலை சாய்த்து, உணர்வற்ற பார்வையோடு, சுழித்து ஓடும் வாய்க்கால் நீரினை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் செந்தாழினி.
அவளின் தோற்றம், பார்த்ததும் திகழோவியனை உருக்குலைத்தது.
"என்ன சடவோ தெரியல. வா நாம பொறத்தால போவோம்" என்று சுகிர்தன் திரும்பிட, "பார்த்துப்பேசி வெகு நாளாச்சுங் மாமா! ரெண்டு வார்த்தை பேசிப்போட்டு வரட்டுங்ளா?" என்றான் திகழோவியன்.
தொடர்ச்சி கீழே...
மூன்று மாதங்களுக்குப் பிறகு...
உக்கடம் ஏரி... நடைமேடை பகுதியில் போடப்பட்டிருந்த கல் மேடையில் தவிப்போடு அமர்ந்திருந்தாள் செந்தாழினி.
கண்கள் வீங்கி சிவந்திருந்தன. திகழோவியனுக்காகக் காத்திருக்கிறாள்.
அன்று கோவிலில் என்ன பேசுவது என்ன செய்வதென்று எதுவும் தெரியாது, அறிந்து கொண்ட விஷயத்திலிருந்து எப்படி மீள்வது, என்ன முடிவெடுப்பது என எதுவும் புரியாது, அகம் சேர்ந்த கசப்பினை உள்ளுக்குள் துளி துளியாய் வேதனையோடு விழுங்கியவாறு, முகம் கூட பார்க்க முடியாது அமைதியாக பிரிந்திருந்தனர்.
"மாமா" என்றழைத்தவளை பட்டென்று அப்படி அழைக்காதே என்று சொல்லிவிட்டான்.
ஏன் அவ்வாறு கூறினானென்று அவனுகேத் தெரியவில்லை.
'தெரிந்துகொண்ட உறவு முறையால் தன்னைப்போல் மனம் உறவுக்கு மதிப்பளிக்க எண்ணியதா?' என மனதிற்குள் போட்டு ஆராய்ந்தவனாக, கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்தது முதல் தனத்தறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்று கொண்டிறிருக்கிறான்.
செந்தாழினியின் மீதான நேசம் இக்கணமும் இதயத்தின் மேலே ததும்பி அலையாடுகிறது.
அவளை வேறொரு பந்தத்தில் நிறுத்தி வைத்து விலக்க முடியாதென சிறு அலசலுக்குப்பின் கண்டுகொண்டவனுக்கு, தங்களுக்கிடையே திடீரென முளைத்து பெரும் விருட்சமாய் தடையமைத்து நிற்கும் புதிய உறவுமுறையின் மீது அத்தனை ஆத்திரம் முகிழ்த்தது.
'இன்று தெரியாதது தெரியாமலே போயிருக்கலாமே' என நொடிக்கு நொடி அவனது உள்ளம் குமுறிக் கொண்டிருக்கிறது.
எத்தனை அழகாய் துவங்கி, மலர்ச்சியாய் வளர்ந்த காதல். இப்படி ஒரு நொடியில் கருகிப் போகுமென சிறு பொழுதில் ஒரு நொடியேனும் இருவரில் ஒருவரும் நினைத்திருக்கமாட்டார்கள்.
நெஞ்சம் அடைத்து, தொண்டையில் வலி கூடிட, கண்கள் உடைபெடுத்து கன்னம் உருண்டன கண்ணீர்.
தரையில் மண்டியிட்டு பின் படிந்த கால்கள் மீதே மடங்கி அமர்ந்தவன், தரையில் அழுத்தமாக ஓங்கி ஓங்கி அடித்தான்.
இதயத்தில் குத்திக் கொண்டிருக்கும் வலியை விட, அவ்வலி அத்தனை பெரிதாக தெரியவில்லை.
'நீயில்லாம முடியாதுடி... எப்புடி தாழினி?' என்று மனதோடு கேட்டுக்கொண்டவனுக்கு இதனை சரி செய்யும் பாதை தான் தெரியவில்லை.
சீர் செய்திட வேண்டுமென்றால் வாழ்க்கையையே பிறப்பிலிருந்து மாற்றியமைத்திட வேண்டுமே! முடிந்திடுமா? இனி வாய்ப்புகள் மறுஜென்மமென்ற ஒன்று உண்டென்றால் தான்.
உண்மையான பந்தமறியாது, சூழ்நிலை கைதிகளாக, விதியின் புயலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன காதல் நெஞ்சங்கள்.
நெஞ்சில் உயிராக நிறைந்திட்ட காதலெல்லாம் வேள்வித் தீயில் பொசுங்கிக் கொண்டிருக்கிறது.
அழுது புலம்பி ஓய்ந்தவன், தீர்க்கமான ஓர் முடிவெடுத்தவனாக செந்தாழினிக்கு அழைத்திட்டான்.
இரவு முழுக்க அழைப்புகள் நீண்டன. ஏற்கப்படவில்லை. குறுந்தகவல்கள் பறந்தன. பார்க்கப்படவில்லை.
அவளின் நிலையை அவனால் உணர முடியுமே! உணர்ந்து கொண்டான். இக்கணம் தன்னைக் காட்டிலும் அவளின் நிலை மோசமாக இருந்திடுமே! அவளை அவனன்றி வேறு யாரால் அதீதமாக புரிந்துகொள்ள முடியும்? உயிரில் உள்வாங்கிக்கொள்ள முடியும்?
அவளாக அமைதி அடைந்து, முடிவெடுத்து வரட்டுமென காத்திருக்கத் துவங்கினான்.
அடுத்தநாள் வேலைக்கு சென்றும் மனம் ஒருநிலையில்லாது தவித்துக்கொண்டே இருக்கிறதென நினைத்தவன் அன்றைய பொழுது நள்ளிரவு தாண்டிய வேளையில் நேரத்தைப் பார்க்காது மணிக்கு அழைத்திருந்தான்.
இரவு நேரப்பணியில் அப்போதுதான் சிறு ஓய்வாக அமர்ந்த மணி முதல் அழைப்பிலே எடுத்திருக்க...
"தூங்கலையாடா?" என்று எவ்வளவோ முயற்சித்தும் வலி நிறைந்த குரலை மாற்ற முடியாது திக்கலோடு வினவியிருந்தான்.
"நைட் ஷிஃப்ட்" என்ற மணி, "என்னமாச்சு திகழு... குரல் வாட்டமா தெரியுது" என்று நண்பனை நொடியில் அவதானித்தவனாகக் கேட்டான்.
நேற்றைய தின நிகழ்வை வலியோடு சொல்லிய திகழோவியன், "அவள் என் தங்..." என அந்த வார்த்தையை கூட சொல்ல முடியாது நிறுத்தியிருந்தான்.
உண்மை தெரிந்ததும் திகழ், செந்தா கொண்ட அதிர்விற்கு சற்றும் குறைவில்லாது மணியும் அதிர்வை உள்வாங்கியிருந்தான்.
"என்னடா சொல்ற நீ?" என்ற மணி இருக்கையை விட்டே எழுந்திருந்தான்.
"அவள் ஐயனும், என்ட்ர ஐயனும் அண்ணன், தம்பியாம்!" கடுகடுவென சொல்லியிருந்தான்.
"இதெப்புடிடா... இம்புட்டு வருஷமா தெரியாமலா இருந்துச்சு?"
"எல்லா அப்பா மாறியும் இவரும் எங்கூடால இருந்திருந்தா, அவரு பக்கட்டிக்கு இப்படியொரு சொந்தமிருக்குன்னு மொகம் தெரியலன்னாலும், பேராவது தெரிஞ்சிருக்குமே!" என்ற திகழோவியன், "அம்மா ஒருநாளும் அவங்க ஒரமுற பத்தியே பேசினதில்லைடா" என்று சலிப்பாகக் கூறினான்.
"அட்லீஸ்ட் தாய் மாமான்னு இருக்க சொந்ததுக்கூட உறவாட விட்டு, வர போவ பழக்கியிருந்தா... முன்னவே அவளையும் தெரிஞ்சிருக்கும். அவள் என்ன பந்தமுன்னும் தெரிஞ்சிருக்கும்" என்று ஆற்றாமையாக மொழிந்தான்.
மணிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
"இப்போ என்னடா பண்ணலாம் இருக்க... செந்தா என்ன சொல்லுச்சு?"
"என்ன பண்ணலாம்?" என்ற திகழோவியன், "நீ என்ட்ர இடத்திலிருந்தா என்ன பண்ணுவ?" எனக் கேட்டிருந்தான்.
"நானா?" "நானு..." மணிக்கு நொடியில் மண்டை வெடித்துவிடும் போலிருந்தது.
"என்ட்ரகிட்ட கேட்டா நானென்னடா சொல்ல?" என்ற மணி, "காதல் முக்கியம்டா... ஆனா அதைவிட உறவுன்னு ஒன்னு இருக்கே! சேர்ந்தாலும் வரம்பு மீறின உறவாத்தான் பார்ப்பாங்க. நிம்மதியா வாழவிடமாட்டாங்க" என்றான்.
மணி சொல்வது நிதர்சனம். ஆனால் திகழோவியனால் ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை.
"அதுக்காக சட்டு சட்டுன்னு சொக்காவை மாத்துற மாதிரி மனசை மாத்திக்க முடியாதே. அவளை போய் நானெப்படிடா அப்படி பார்க்க முடியுமா? இதுதான் உண்மைன்னு தெரிஞ்சும் அவளை அந்த உறவுல நிறுத்தி வைக்க முடியலடா. எம்புட்டுக்கோ முயற்சி பண்ணி பார்த்துப்புட்டேன். சத்தியமா முடியலடா. அவள் தான் என் பொண்டாட்டின்னு..." என்றவன் வேகமாக வார்த்தையை நிறுத்தியிருந்தான்.
"உன்னால இப்பைக்கு இப்படியும் சொல்ல முடியலதான. காதல் தான். பக்கட்டிக்கு இருந்து பார்த்திருக்கேனே! உம்மட மாதிரி வேறவொரு காதலை பார்த்ததுமில்லை. ஆனா ஒண்ணுமே பண்ணமுடியாத சூழ்நிலையில இருக்கோம். புரிஞ்சிக்கோ திகழு. தங்கச்சியையே கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு ஊர் அம்புட்டுக்கு பேசும். நமக்கே நெறிமுறைன்னு ஒண்ணு இருக்கே. இப்பைக்கு காதலை விட்டுக்கொடுக்க முடியாம, வேகத்துல ஒரு முடிவை எடுத்துப்புடலாம். பின்னாடி ரொம்பவே உறுத்தலா மாறிப்போவும்" என்று தன்னளவில் எடுத்துக்கூறினான்.
"அப்போ நாங்க பிரியனும்னு தான் நீ சொல்லவர்றியா?"
"நானென்ன சொல்றன்னு உனக்கே புரியும்."
"இப்பைக்கு எந்தவொரு முடிவும் எடுக்காம கொஞ்சநாளுக்கு ஆறப்போடுன்னு மனசு சொல்லுது" என்றான் திகழோவியன்.
"நல்லது... அதுவும் சரிதான். பொறுமையா விஷயத்தை ஆறப்போட்டாலே ஒரு தெளிவை கொடுக்கும்" என்ற மணி, "நல்ல முடிவுடா!" என்றான்.
"ஆனா காதல் அப்படியே தான் இருக்கும். அதுல எந்த மாத்தமும் இல்லை" என்று திகழோவியன் சொல்லிய அழுத்தத்தில் மணிக்கு பயந்து வந்தது.
இப்போதைக்கு பொறுமையாக இருந்துவிட்டு, பின்னாளில் தனக்கு வேண்டியதை செய்து, சமூகத்தில் நெறி தவறியவன் என்ற பெயரைப் பெற்றிடுவானோ என நண்பனுக்காக அச்சம் கொண்டான்.
பொல்லாத சமூகமாயிற்றே! உண்மை எதுவென ஆராய்ந்துப் பார்த்திடாது தீர்ப்பு வழங்கிடுமே!
"என்னடா அமைதியாகிட்ட?"
"என்ன சொல்லணும் தெரியலடா!"
"அமைதியா இருக்க வேண்டியதுதான்" என்ற திகழோவியன், "உன்றகிட்ட பேசினா நல்லாயிருக்கும் தோணிச்சு. அதான் நேரங்காலம் பார்க்காம கூப்பிட்டுப்புட்டேன்" என்றான்.
"அடிவாங்குவ நீ" என்ற மணி, "பேசினியா?" என்றான்.
"இல்லடா... கால் பண்ணேன் எடுக்கல. நானொரு முடிவுக்கு வந்திருக்க மாதிரி அவளும் ஒரு முடிவுக்கு வரணும்ல... வரட்டும். அவளே கூப்பிடுவா! அடுத்த வாரத்துல பரீட்சை வேற. என்னாலதான் அவளை பார்க்க முடியாது. நீ அவளைப் பார்த்து எதையும் போட்டு குழப்பிக்காம பரீட்சையை நல்லா எழுத சொல்லு" என்றான்.
"ம்ம்டா."
நண்பனிடம் பகிர்ந்துக்கொண்டதால் அந்த நேரத்திற்கு மனதின் வலி மட்டுப்பட்டது போலிருக்க, மேலும் சில நிமிட பேச்சிற்குப்பின் அழைப்பைத் துண்டித்திருந்தான்.
அவளாக ஒரு முடிவெடுத்து வரட்டுமென நினைத்தவனால், அவளிடம் பேசாது இருக்க முடியாது, அடுத்த இரண்டு நாளிலே கல்யாணிக்கு சொல்லாது வேலைக்கு செல்வதைப்போன்று தொண்டாமுத்தூர் சென்றுவிட்டான்.
வரவே வராத பிள்ளையை வீட்டிற்குள் அழைத்து, மணியில் அவனுக்கு பிடித்த உணவெல்லாம் செய்து கொண்டாடி மகிழ்ந்துவிட்டார் காமாட்சி.
"பொண்ணுகூட இல்லை. பொறவு என்னத்துக்குங்மா மருமகனுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம்!" என்று சுகிர்தன் கேலி செய்ய... "அவனுக்கு தாய் மாமன் வீடுடா இது. பொண்ணு இருந்தாதான்னு இல்லை. அவனுக்கு அடுத்து தான் உனக்கே உரிமை" என்று திகழோவியனை செல்லம் கொஞ்சி சில மணி நேரத்தில் அத்தனை சீராட்டியிருந்தார் காமாட்சி.
சுகிர்தனுக்கு பதில் வழங்கியிருந்தாலும், வேறொரு பதிலை அவரது ஆழ் மனம் மட்டுமே அறிந்திடும்.
காமாட்சி பிறந்தவுடன் இறந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் அவரது இளைய மகன் உயிரோடிருந்திருந்தால் அவனும் திகழோவியன் போன்றுதான் இருந்திருப்பான்.
திகழோவியனுக்கு பிறந்தநாளே, இறந்தநாளாகியிருந்தது. விதியென சொல்லிக்கொண்டாலும் கல்யாணி மற்றும் ராஜேந்திரன் ஆடிய ஆட்டத்தால்.
"வாடா நம்மட காட்டுப்பக்கட்டிக்கு போய் வருவோம்" என்று சுகிர்தன் அழைத்திட சரியென்றான்.
அங்கு வந்து வீட்டு வாயிலில் வண்டியை நிறுத்தியதுமே திகழோவியனுக்கு கண்கள் பக்கத்து வீட்டில் தான் நிலைத்தது.
"உன்ற மாமாவூட்டுக்கு பக்கத்து வூடுதான் செந்தா வூடு." எப்போதோ மணி சொல்லியதை வைத்து, வலது பக்கம் எந்தவொரு வீடுமில்லாது இருக்கவே, இடதுபக்கமிருக்கும் வீடாகத்தான் இருக்குமென்று அவ்வீட்டை பார்வையால் சுற்றிவந்தான்.
அரவம் ஏதுமில்லை.
வீட்டுக்குள்ளே இருந்தால் அவளை பார்க்க முடியாதென சுகிர்தன் அழைத்ததும் அவனுடன் கிளம்பிவிட்டான்.
"உன்ற அம்மா உன்னைய இக்கட்டிக்கு அனுப்பமாட்டாங்களே! இன்னைக்கு எப்படி விட்டாங்க?" வீட்டிற்கு பின்னாலிருக்கும் வரப்பு மீது நடந்திட சுகிர்தன் திகழிடம் கேட்டான்.
"நான் வந்தது அம்மாக்கு தெரியாதுங் மாமா!" என்று திகழோவியன் சொல்ல, "தெரிஞ்சுச்சுன்னா சும்மா விடுவாங்களா?" என்றான் சுகிர்தன்.
"பார்த்துக்கலாமுங்க" என்ற திகழோவியன், சுகிர்தன் பின்னால் நடந்தாலும், அவனது பேச்சுக்கு பதில் பேசினாலும் கண்கள் என்னவோ செந்தாழினியின் வீட்டைத்தான் மேய்ந்தன.
"அந்த வூடு செந்தாழினியோடாதுதானுங் மாமா?" சுகிர்தனிடமே கேட்டுவிட்டான்.
"அந்த பிள்ளையை உனக்கெப்புடி டா தெரியும்?"
"கூடப்படிச்ச புள்ளைங்க மாமா? ஜூனியர். ஒரே டிபார்ட்மெண்டு."
"ஓ... அதுதான். ஆனா இப்பை அந்தப்புள்ளையை பார்த்தாலும் பேசிக்காத... அவள் ஐயனுக்கும், உன்ற மாமனுக்கும் தினம் ஒரு யுத்தம் தான்" என்றான் சுகிர்தன்.
"சரிங்மாமா" என்று திகழோவியன் கூற, அவனுக்கு முன்னால் நடந்த சுகிர்தன் நடை நின்றது.
"என்னாச்சுங் மாமா?"
"உன்ற பேச்சுக்கு காரணமான புள்ளையே இக்கட்டிக்கு இட்டேரி தடத்துல உட்கார்ந்திருக்குடா" என்றான் சுகிர்தன்.
அவனை எட்டிக்கொண்டு திகழோவியன் முன்னால் பார்க்க, வரப்பில் கால்களைக் கட்டிக்கொண்டு, கையின் மீது தலை சாய்த்து, உணர்வற்ற பார்வையோடு, சுழித்து ஓடும் வாய்க்கால் நீரினை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் செந்தாழினி.
அவளின் தோற்றம், பார்த்ததும் திகழோவியனை உருக்குலைத்தது.
"என்ன சடவோ தெரியல. வா நாம பொறத்தால போவோம்" என்று சுகிர்தன் திரும்பிட, "பார்த்துப்பேசி வெகு நாளாச்சுங் மாமா! ரெண்டு வார்த்தை பேசிப்போட்டு வரட்டுங்ளா?" என்றான் திகழோவியன்.
தொடர்ச்சி கீழே...