உந்தன் உயிராக 17
ஐந்து மாதங்களுக்குப் பிறகு...
கோவில் மண்டபம்...
உற்றார் உறவினர்கள் நிறைந்திருக்க வண்ணக்கோலம் பூண்டிருந்தது.
ஒரு பக்கம் மங்கள இசை முழங்கிக் கொண்டிருக்க, மறுபக்கம் சுற்றத்தாரின் ஆர்ப்பரிப்பு.
தேவகிக்கும், காமாட்சிக்கும் அப்படியொரு ஆனந்தம். தங்களின் எண்ணம் நிறைவேறவிருக்கிறது என்பதில் கொண்டாட்டமாக திருமண வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
கோவிலில் திருமண மண்டபத்திற்கு நேரெதிர் உள்ள ஆண்டவனின் சன்னதிக்கு வலது புறமிருக்கும் தடுப்புப் பகுதிக்குள், மாப்பிள்ளை அலங்காரத்தில் அமர்ந்திருந்தான் திகழோவியன்.
அருகில் நின்றிருந்த சுகிர்தன் தம்பியின் மாப்பிள்ளை தோற்றத்தை ரசித்திருந்தான்.
"இதை போட்டுக்கோ திகழு" என்ற சுகிர்தன் மேலுமொரு தங்கச் சங்கிலியை திகழோவியனுக்கு அணிவிக்க...
"எவ்ளோங்ண்ணா போடுறது. போட்டு இருக்கிறதே போதுங்கங்" என்றான்.
"எல்லாம் இந்த ஒரு நாளைக்குடா... இந்த நாளுக்காக நீ அனுபவிச்ச வலி கொஞ்சநஞ்சமில்லையே!" என்ற சுகிர்தன், "இனிமேலாவது உன்ற மனசு நிம்மதியா இருக்கோணும்" என்றான்.
"இனிமேலுக்கு அவன் நிம்மதிக்கு என்ன குறையாம்? அதான் ஆசைப்பட்டது கை சேருதுங்களே" என்று வந்த மணி, "உன்ற அம்மணி லைனில்" என அலைபேசியை கொடுத்தான்.
"இன்னும் கொஞ்ச நேரத்துல தாலிக்கட்டப் போறான்டா... இப்பைக்கு ஃபோனா?" என்று சுகிர்தன் கேட்க, "லவ்வர்ஸா கடைசியா ஒருமுறை பேசிக்கட்டுங்க... நாம அக்கட்டிக்குப் போவோம்" என்று சுகிர்தனனை இழுத்துக்கொண்டு சற்று தள்ளிச் சென்றான் மணி.
"சொல்லுங் அம்மணி!" அலைபேசியை செவி ஏற்றியவனின் குரலில் அப்படியொரு குழைவு.
"மாமா..." அவளின் அழைப்பு காற்றாய் செவி நுழைந்திட, அவளின் மூச்சு சில்லென்று முகம் தழுவும் மாயம் அவனிடம். முன்னுச்சி கேசம் சிலிர்த்திட, மென்மையாய் இமை மூடி உள்வாங்கியிருந்தான்.
இப்போதெல்லாம் அவளின் இந்த அழைப்பில் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் முன்பைவிட சிலிர்த்து அடங்குகிறான்.
இதெப்படி சாத்தியமானது என்றால், அவர்களின் காதல் சாத்தியப்படுத்தியிருந்தது.
காதல்...
விலக்கி வைக்க நினைத்துவிட்டால் சமாதானம் செய்திட ஆயிரமாயிரம் காரணங்கள் இருந்தாலும், வேண்டாமென்று ஒதுக்கிவிடும். அதே வேண்டுமென நினைக்க... நல்லதாய் ஒரு காரணம் கூட இல்லையென்றாலும், காதலே காதலாய் சேர்ந்திடும்.
அப்படித்தான் அந்த காயம் சுமந்த நெஞ்சங்கள் சேர்ந்ததும்.
காயப்படுத்தியவளுக்கு காயமென்றதும் தன்னுடைய காயத்தை புறம் ஒதுக்கியவனாக அவளைத்தேடி ஓடி வந்திருந்தான்.
மருத்துவமனை வளாகத்தில் அவளது பெற்றோர் மட்டுமின்றி தேவகிக்கு ஆறுதலாக காமாட்சியும், அவரை அழைத்து வந்தவனாக சுகிர்தனனும் அந்த நீண்ட வராண்டாவில் நின்றிருந்தனர்.
"வேணாம்னு சொன்னவ பேச்சை இந்த மனுஷன் கேட்கவேயில்லையே! அதுக்காக பாவிமவ இப்படியொரு காரியத்தை பண்ணிப்போட்டாளே!" என்று சேலை தலைப்பை வாயில் வைத்து அழுதவராக இருந்த தேவகியின் கரத்தினை தட்டிக்கொடுத்தவராக காமாட்சி அவரின் அருகிலே அமர்ந்திருந்தார்.
"வேணாம்னு சொன்னவளுக்கு எதுவோ வேணுமா இருக்கப்போயிதான, நடக்கயிருந்ததை நிறுத்த இப்படி பண்ணியிருக்காள். அது என்னன்னு கேளு. செய்து வச்சிப்போடுவோம். கோவக்காரந்தான். அதுக்காக பெத்த பொண்ணு ஆசையை நிறைவேத்தமா என்ட்ர சொல்லுதான் பெருசுன்னு நினைக்கிற ஆளில்லை" என்ற நாராயணன், "சும்மா அழுது அலட்டக் கூடாது. மருந்து போட்டியிருப்பாங்க போய் என்னன்னு பாரு" என்று மனைவியை அதட்டியிருந்தார்.
எப்போது திருமணமென்றாலும் இப்போது வேண்டாமென அடமாக மறுத்துக்கொண்டு வரவே மகளுக்கு ஏதேனும் விருப்பமிருக்குமோ என்று சந்தேகம் எழவே, அது உண்மையா பொய்யா என அறிந்து கொள்வதற்காக இல்லாத ஒருவன் பெண் பார்க்க வருவதாக சொல்லியிருந்தார்.
விடியல் கொண்ட பிறகும் சொல்லாது அழுத்தமாக இருப்பவளிடம், இனி இந்த மறைமுக ஆட்டம் எடுபடாதெனவே நேரடியாகக் கேட்க முடிவு செய்து அவளைத் தேடிக் கொண்டு வந்தவர், அவள் சமையலறையில் இருப்பதாக கூடத்தை துடைத்துக் கொண்டிருந்த தேவகி கூற சமயலறைக்கு வந்தவர் கண்டது...
வாணலியில் சூடாக காய்ந்துக் கொண்டிருந்த எண்ணெயை, தலையை மேல்நோக்கி உயர்த்தி, கண்களை மூடி கண்ணீர் காது மடல் வழிந்தோட, ஒற்றைக் கையால் சமையல் மேடையை பற்றிப் பிடித்து, தோல் வெந்துப்போகும் வலியை தாங்கியவளாக மற்றொரு கையால் கரண்டியால் காலில் ஊற்றியபடி நின்றிருந்த மகளைத்தான்.
"செந்தா" என்று பதறி அவளின் அருகில் நாராயணன் ஓடிய சத்தத்தில் அங்கு வந்த தேவகி,
"என்ன காரியம்டி பண்ணிப்போட்ட" என்று அவளின் தோளில் அடிக்க, நாராயணன் அவளின் கையிலிருந்த கரண்டியை வாங்கி வீசியவராக அடுப்பை அணைத்திருந்தார்.
"எனக்கு எதுவும் ஆனா அபசகுனம்னு வரையிருக்கவங்க வரமாட்டாங்கங்லம்மா" என்றவள், "செத்துப்போவ விருப்பமில்லைங்க... அது தப்பாச்சே! சின்ன காயம்னா கணக்குல சேர்த்துக்க மாட்டிங்களேங்... அதான்" என்றதோடு, "இந்த காயம் சரியாப்போற வரைக்கும் கல்யாணப் பேச்சு எடுக்கமாட்டிங்களேங்பா" என்று உதடு கடித்து வலியை பொறுத்துக்கொண்டு பேசியவள் அதற்கு மேல் தீ காயத்தின் எரிச்சலை தாங்க முடியாதவளாக தரையில் சரிந்திருந்தாள்.
அவளின் பேச்சிலே தனது கணிப்பு சரியென்று உறுதிபடுத்திக்கொண்ட நாராயணன், தற்போது அவளின் காயத்தை ஆற்றுவதுதான் அவசியமென மகளை கையில் அள்ளிக்கொண்டு மருத்துவமனை விரைந்தார். அவரின் பின்னாலே கத்திக்கொண்டு வந்த தேவகியின் அழுகையில் தான் திகழோவியனின் குடும்பம் வெளிவந்திருந்தது.
அவரின் அழுகை இந்த நொடி வரை நிற்காதிருக்கவே நாராயணன் மனைவியை கடிந்துகொண்டார்.
அவர் கடிந்துகொண்ட பேச்சில், அங்கு நின்றிருந்த சுகிர்தன் மற்றும் காமாட்சிக்கு, செந்தாழினியின் இச்செயல் யாருக்காக என்று புரிந்ததோடு, நாராயணனுக்கும் அவள் யாரையோ விரும்புகிறாள் எனுமளவில் தெரிந்திருக்கு என்பதையும் விளங்கிக்கொண்டனர்.
"அவங்க காயத்துக்கு ட்ரீட்மெண்ட் முடிஞ்சுது" என்று செவிலிப்பெண் வந்து சொல்ல, திகழோவியன் வேக எட்டுக்களுடன் அங்கு வந்து சேர்ந்தான்.
"வாடா திகழு" என்ற சுகிர்தன், "ட்ரீட்மெண்ட் முடிஞ்சுது. பார்க்கலாம் சொல்லிட்டாங்" என்றான்.
"ம்ம்..." என்றவன் ஒரு காலை பின்னால் சுவற்றில் பதித்து சாய்ந்து நின்றுகொண்டான்.
காமாட்சி ஏன் வந்திருக்கிறாரென நாராயணன் ஓரளவிற்கு அறிவார். இருவருக்குமான நட்பு இத்தனை ஆண்டுகள் தெரிந்தும் கண்டுகொள்ளவில்லை. அவரின் பகை ராஜேந்திரனுடன் தான் எனுமளவிற்கு அவரும் பக்குவம் கொண்டது, கல்யாணியின் இறப்பன்று நடந்த நிகழ்வுகளால் தான். யாரும் யாருக்கும் இங்கு நிரந்தரமில்லை என்பதை புரிந்துகொண்டாலே ஒருவருடனான கோபங்கள் அர்த்தமற்றவை என்பதை புரிந்துக்கொள்ளலாம். அதனை அன்று பிரித்துக்கொண்டதாலே நாராயணன் தனது பகை என்பதை அதற்கு பின்னான நாட்களில் ராஜேந்திரனுடன் நிறுத்திக்கொண்டார். அதனாலே அன்று வரப்பு சண்டையின் போது அவரால் திகழோவியனிடம் இயல்பாக பேசிட முடிந்தது. தற்போது மனைவிக்காக வந்து நிற்பவர்களிடம் முகம் காட்டாதிருக்கவும் முடிந்தது.
'காமாட்சியைக் கூட்டிக்கொண்டு சுகிர்தன் வந்தான். ஆனால் திகழோவியன் வர காரணமென்ன?' அவரின் மனம் யோசித்துக் கொண்டிருக்க, தேவகியும் காமாட்சியும் சிகிச்சை அறைக்குள் சென்று செந்தாழினியை இருபக்கமும் தோள் தாங்கி கைத்தாங்கலாக அழைத்து வந்திருந்தனர்.
வலது காலின் பாதத்திற்கு மேல் முழுக்க தோல் சுருங்கி சிவந்து, ஆங்காங்கே நீர் கோர்த்து பார்க்கவே ரணமாக இருந்தது.
பாதத்தை ஊன்ற முடியாது ஒவ்வொரு அடிக்கும் வலியால் முகம் சுருங்க, மூச்சினை இறுக்கிப் பிடித்தும், உதடு கடித்தும் வலியைப் பொறுத்தாள்.
கண்கள் மூடி நின்றிருந்த தம்பியை தோள் தொட்டு, செந்தாழினி வருவதை சுட்டிக்காட்டினான் சுகிர்தன்.
நாராயணன் கவனித்தும் அமைதியாக இருந்தார்.
"அய்யோ முடியலங்" என்ற செந்தாழினி அடுத்த அடி வைத்திட முடியாது அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திட,
"வலிக்கும் தெரிஞ்சு செய்துகிட்டதுக்கு யாரென்ன பண்ண முடியும். அனுபவிச்சுதான் ஆவணும்" என்ற நாராயணனின் குரலில் நிமிர்ந்தவள் தனக்கு நேரெதிர் தன்னையே பார்த்தபடி நின்றிருந்த திகழோவியனின் பார்வையை இமை சிமிட்டாது தாங்கி நின்றாள்.
"ஏண்டி?" அவனின் அகக்குரல் கேட்டிட,
"வேற வழித்தெரியலங் மாமா" என அனைவருக்கும் கேட்கும்படியே பதில் வழங்கியிருந்தாள்.
அவ்வளவு தான். அவளின் தவிப்புகள் நிறைந்த அந்த மாமா என்றழைப்பில் மொத்தமாக அவள் பக்கம் சாய்ந்துவிட்டான்.
இருந்த கோபமெல்லாம் அங்கு வருவதற்கு முன்பே எங்கோ சென்று மறைந்திருக்க, அவளின் ஓவியாக அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான். கரங்களை பற்றிக்கொண்டவனாக.
தேவகி காமாட்சியை பார்க்க, காமாட்சியும், சுகிர்தனும் நாராயணனைத்தான் அதிர்வாய் நோக்கினார்.
எதுவும் பேசிவிடுவாரோ என்ற பயம் எழாமலில்லை.
"மன்னிச்சிட்டீங்களாங் மாமா" என்று உதடு துடிக்க கேட்டவளின் பின்னந்தலையில் கை வைத்தவன் தனது மார்போடு அவளின் முகம் புதைய அழுத்திக் கொண்டான்.
"எல்லாம்... எல்லாமே மறந்துப்புடலாம்" என்றவன், "புதுசா லவ் பண்ணலாங் அம்மணி" என்றான்.
"அம்மணி சொல்ல இப்போதான் மனசு வந்துச்சாங்" என்றவள் தனது தாய் தந்தையர் தங்களின் நிலையை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தும், அவனின் முதுகோடு கையிட்டு அணைத்துக் கொண்டாள்.
அவ்வழைப்பை திகழோவியன் எப்போதும் வாய் அழைப்பாகப் பயன்படுத்தியது இல்லை. ஆனால் புலனத்தில் உரையாடலில் அவனின் ஆரம்பம் அவ்வர்த்தையாகத்தான் இருக்கும்.
"அம்மணி" என்ற அவ்வெழுத்துக்கள் அவனது குரலாகத்தான் அவளின் அகம் நிறையும்.
இப்போது முதல்முறையாக அவன் சொல்லிக் கேட்க இதயத்தின் தாள லயங்கள் எல்லாம் உடலின் அணுக்களை மீட்டும் மாயம். கூடுதல் இன்பமாய் அவனின் கோபம் துறந்து ஏற்றுக்கொண்டது.
"லவ் யூங் மாமா!"
"உன்ற புள்ளயை பொறவு லவ் பண்ண சொல்லுங்மா! இவரு பார்வையே சரியில்லை" என்று சுகிர்தன் காமாட்சியின் காதில் கிசுகிசுக்க...
"லவ்வா!" என்று சத்தமாகக் கேட்டு விழிகள் விரித்தார் தேவகி.
"ஆமா... எங்களுக்கும் இப்பைக்குதான், நேத்து தெரிஞ்சுது" என்றார் காமாட்சி. நாராயணனை மறந்தவராக.
அவர்களின் பேச்சுக்கேட்டு தொண்டையை செருமி தனது இருப்பை உணர்த்தினார் நாராயணன்.
"அண்ண... அது வந்து" என காமாட்சி ஏதோ சொல்ல முற்பட...
"சுமக்க முடியாத பாரத்தை சுமந்தவன்... நானும் வலிக்க வச்சிப்புட மாட்டேன். மனசுன்னு ஒன்னு எனக்குமிருக்கு" என்ற நாராயணன், "பொறுமையா கூப்புட்டு வந்து சேருங்கங்" என்று தோளில் கிடந்த துண்டை உதறி மீண்டும் தோளில் போட்டவராக வெளிவாயில் நோக்கி சென்றார்.
தேவகியும், காமாட்சியும் அவரின் பேச்சினை நம்ப முடியாது வாய் பிளந்து பார்த்து நிற்க, சுகிர்தன் வாய் பொத்தி சிரிப்பை அடக்கினான்.
அவர் பேசிய வார்த்தைகளும், துண்டை உதறி போட்டதும், தற்போது பின் உருவம் தெரிய நிமிர்ந்து செல்வதும், சுகிர்தனனுக்கு பின்னணியில்,
"அந்த வானத்தைப்போல மனம் படைச்ச மன்னவனே..." என்ற பாட்டை எடுத்துக்கொடுக்க வந்த சிரிப்பை கட்டுப்படுத்தியிருந்தான்.
"எதுக்குடா சிரிக்கிற?" காமாட்சி அவனின் முதுகிலே அடித்தார்.
"இவங்க காதல் தெரிஞ்சதும், இவங்களுக்குள்ள என்ன பிரச்சினைங்கிறதை தாண்டி, பெருசு ரெண்டையும் என்னமாச்சும் சமாளிக்கணுமோன்னு தான் அதிகம் பயந்தேனுங். இப்போ ஒரு டிக்கெட்டு அவுட்... இன்னொரு டிக்கெட் தான் என்ன கதைன்னு தெரியலங். ஓவரா ஆடுமே" என்றான்.
"என்னவா இருந்தாலும் என்ட்ர மவன் விருப்பம் நிறைவேறனும். அதுக்கு அந்த ஆளை பொளக்கவும் நானு தயாருதான்" என்ற காமாட்சி, "இப்படி குளிர்ந்த மொவமா என்ட்ர புள்ளையை நானு பார்த்ததே இல்லை சுகிர்தா" என்று கலங்கிய கண்களை புடைவையை வளைத்து துடைத்துக் கொண்டார்.
"இனிமேலு அவனும் சந்தோஷமா இருப்பானுங்மா" என்றவன், "அவன் கூட்டியாருவான். நாம போவோம்" என இரு பெண்களையும் அழைத்துக்கொண்டு சென்றிருந்தான்.
செந்தாழினி அவனை கட்டிக்கொண்டு அவனது நெஞ்சில் முகம் புதைத்திருக்க, அவனின் கை அவளின் தலையை வருடியபடி இருந்தது.
இருவருக்குமே அக்கணங்கள் மதிப்புமிக்கவை. இருவரும் சேர்ந்திருக்கும் நொடிகள் பொக்கிஷமானவை என பிரிவின் அனுபவத்தால் உணர்ந்துகொண்டிருந்தனர்.
"நானு அன்னையப் பேச்சுக்கு எந்தவொரு விளக்கமும் சொல்லலைங்களே மாமா!"
"கோவங்கிற திரை விலகுனதும் உன்ற மனசு புரியுதுங் அம்மணி. பொறவு விளக்கம் தேவைங்களா?" அவன் கேட்டதில் அப்படியொரு ஆசுவாசம் அவளிடம்.
அவளின் அணைப்பு கூடியது.
"இப்படியே இருக்கோணும் ஆசைதாங் அம்மணி. ஆனா இது ஹாஸ்பிட்டலு..." என்று அவன் சிரியாது சொல்லியதில் அவனிலிருந்து பதறி விலகி சுற்றம் ஆராய்ந்தாள்.
"யாரும் பாக்கல..." என்றவன் குலுங்கி சிரித்திட, "போங்கங் நான் போறேனுங்" என்றவள் எழுந்த வேகத்திற்கு பாதத்தில் காயம் ஊசியாய் துளைத்திட, அவள் மீண்டும் இருக்கையில் சரியும் முன் தனது கைகளில் ஏந்தியிருந்தான்.
"மாமா..." தானாக அவளின் கைகள் அவனது கழுத்தை கோர்த்துப்பிடித்திட, அவன் மார்புரசும் முகம் நோக்கி தாழ்ந்திருந்த அவனது கண்களை விழுங்கியவளாக அழைத்திருந்தாள்.
"நாள்பூரா நீ சொல்ல கேட்டுகிட்டே இருக்கோணும் அம்மணி" என்றவன் மருத்துவமனையில் தங்களை கவனித்துப் பார்க்கும் யாரையும் பொருட்படுத்தாதவனாக வெளியேறியிருந்தான்.
அங்கிருந்து நேராக அவளது வீட்டிற்கு வந்தவன், தானே அவளை வீட்டிற்குள் தூக்கியும் சென்றான்.
தொடர்ச்சி கீழே
ஐந்து மாதங்களுக்குப் பிறகு...
கோவில் மண்டபம்...
உற்றார் உறவினர்கள் நிறைந்திருக்க வண்ணக்கோலம் பூண்டிருந்தது.
ஒரு பக்கம் மங்கள இசை முழங்கிக் கொண்டிருக்க, மறுபக்கம் சுற்றத்தாரின் ஆர்ப்பரிப்பு.
தேவகிக்கும், காமாட்சிக்கும் அப்படியொரு ஆனந்தம். தங்களின் எண்ணம் நிறைவேறவிருக்கிறது என்பதில் கொண்டாட்டமாக திருமண வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
கோவிலில் திருமண மண்டபத்திற்கு நேரெதிர் உள்ள ஆண்டவனின் சன்னதிக்கு வலது புறமிருக்கும் தடுப்புப் பகுதிக்குள், மாப்பிள்ளை அலங்காரத்தில் அமர்ந்திருந்தான் திகழோவியன்.
அருகில் நின்றிருந்த சுகிர்தன் தம்பியின் மாப்பிள்ளை தோற்றத்தை ரசித்திருந்தான்.
"இதை போட்டுக்கோ திகழு" என்ற சுகிர்தன் மேலுமொரு தங்கச் சங்கிலியை திகழோவியனுக்கு அணிவிக்க...
"எவ்ளோங்ண்ணா போடுறது. போட்டு இருக்கிறதே போதுங்கங்" என்றான்.
"எல்லாம் இந்த ஒரு நாளைக்குடா... இந்த நாளுக்காக நீ அனுபவிச்ச வலி கொஞ்சநஞ்சமில்லையே!" என்ற சுகிர்தன், "இனிமேலாவது உன்ற மனசு நிம்மதியா இருக்கோணும்" என்றான்.
"இனிமேலுக்கு அவன் நிம்மதிக்கு என்ன குறையாம்? அதான் ஆசைப்பட்டது கை சேருதுங்களே" என்று வந்த மணி, "உன்ற அம்மணி லைனில்" என அலைபேசியை கொடுத்தான்.
"இன்னும் கொஞ்ச நேரத்துல தாலிக்கட்டப் போறான்டா... இப்பைக்கு ஃபோனா?" என்று சுகிர்தன் கேட்க, "லவ்வர்ஸா கடைசியா ஒருமுறை பேசிக்கட்டுங்க... நாம அக்கட்டிக்குப் போவோம்" என்று சுகிர்தனனை இழுத்துக்கொண்டு சற்று தள்ளிச் சென்றான் மணி.
"சொல்லுங் அம்மணி!" அலைபேசியை செவி ஏற்றியவனின் குரலில் அப்படியொரு குழைவு.
"மாமா..." அவளின் அழைப்பு காற்றாய் செவி நுழைந்திட, அவளின் மூச்சு சில்லென்று முகம் தழுவும் மாயம் அவனிடம். முன்னுச்சி கேசம் சிலிர்த்திட, மென்மையாய் இமை மூடி உள்வாங்கியிருந்தான்.
இப்போதெல்லாம் அவளின் இந்த அழைப்பில் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் முன்பைவிட சிலிர்த்து அடங்குகிறான்.
இதெப்படி சாத்தியமானது என்றால், அவர்களின் காதல் சாத்தியப்படுத்தியிருந்தது.
காதல்...
விலக்கி வைக்க நினைத்துவிட்டால் சமாதானம் செய்திட ஆயிரமாயிரம் காரணங்கள் இருந்தாலும், வேண்டாமென்று ஒதுக்கிவிடும். அதே வேண்டுமென நினைக்க... நல்லதாய் ஒரு காரணம் கூட இல்லையென்றாலும், காதலே காதலாய் சேர்ந்திடும்.
அப்படித்தான் அந்த காயம் சுமந்த நெஞ்சங்கள் சேர்ந்ததும்.
காயப்படுத்தியவளுக்கு காயமென்றதும் தன்னுடைய காயத்தை புறம் ஒதுக்கியவனாக அவளைத்தேடி ஓடி வந்திருந்தான்.
மருத்துவமனை வளாகத்தில் அவளது பெற்றோர் மட்டுமின்றி தேவகிக்கு ஆறுதலாக காமாட்சியும், அவரை அழைத்து வந்தவனாக சுகிர்தனனும் அந்த நீண்ட வராண்டாவில் நின்றிருந்தனர்.
"வேணாம்னு சொன்னவ பேச்சை இந்த மனுஷன் கேட்கவேயில்லையே! அதுக்காக பாவிமவ இப்படியொரு காரியத்தை பண்ணிப்போட்டாளே!" என்று சேலை தலைப்பை வாயில் வைத்து அழுதவராக இருந்த தேவகியின் கரத்தினை தட்டிக்கொடுத்தவராக காமாட்சி அவரின் அருகிலே அமர்ந்திருந்தார்.
"வேணாம்னு சொன்னவளுக்கு எதுவோ வேணுமா இருக்கப்போயிதான, நடக்கயிருந்ததை நிறுத்த இப்படி பண்ணியிருக்காள். அது என்னன்னு கேளு. செய்து வச்சிப்போடுவோம். கோவக்காரந்தான். அதுக்காக பெத்த பொண்ணு ஆசையை நிறைவேத்தமா என்ட்ர சொல்லுதான் பெருசுன்னு நினைக்கிற ஆளில்லை" என்ற நாராயணன், "சும்மா அழுது அலட்டக் கூடாது. மருந்து போட்டியிருப்பாங்க போய் என்னன்னு பாரு" என்று மனைவியை அதட்டியிருந்தார்.
எப்போது திருமணமென்றாலும் இப்போது வேண்டாமென அடமாக மறுத்துக்கொண்டு வரவே மகளுக்கு ஏதேனும் விருப்பமிருக்குமோ என்று சந்தேகம் எழவே, அது உண்மையா பொய்யா என அறிந்து கொள்வதற்காக இல்லாத ஒருவன் பெண் பார்க்க வருவதாக சொல்லியிருந்தார்.
விடியல் கொண்ட பிறகும் சொல்லாது அழுத்தமாக இருப்பவளிடம், இனி இந்த மறைமுக ஆட்டம் எடுபடாதெனவே நேரடியாகக் கேட்க முடிவு செய்து அவளைத் தேடிக் கொண்டு வந்தவர், அவள் சமையலறையில் இருப்பதாக கூடத்தை துடைத்துக் கொண்டிருந்த தேவகி கூற சமயலறைக்கு வந்தவர் கண்டது...
வாணலியில் சூடாக காய்ந்துக் கொண்டிருந்த எண்ணெயை, தலையை மேல்நோக்கி உயர்த்தி, கண்களை மூடி கண்ணீர் காது மடல் வழிந்தோட, ஒற்றைக் கையால் சமையல் மேடையை பற்றிப் பிடித்து, தோல் வெந்துப்போகும் வலியை தாங்கியவளாக மற்றொரு கையால் கரண்டியால் காலில் ஊற்றியபடி நின்றிருந்த மகளைத்தான்.
"செந்தா" என்று பதறி அவளின் அருகில் நாராயணன் ஓடிய சத்தத்தில் அங்கு வந்த தேவகி,
"என்ன காரியம்டி பண்ணிப்போட்ட" என்று அவளின் தோளில் அடிக்க, நாராயணன் அவளின் கையிலிருந்த கரண்டியை வாங்கி வீசியவராக அடுப்பை அணைத்திருந்தார்.
"எனக்கு எதுவும் ஆனா அபசகுனம்னு வரையிருக்கவங்க வரமாட்டாங்கங்லம்மா" என்றவள், "செத்துப்போவ விருப்பமில்லைங்க... அது தப்பாச்சே! சின்ன காயம்னா கணக்குல சேர்த்துக்க மாட்டிங்களேங்... அதான்" என்றதோடு, "இந்த காயம் சரியாப்போற வரைக்கும் கல்யாணப் பேச்சு எடுக்கமாட்டிங்களேங்பா" என்று உதடு கடித்து வலியை பொறுத்துக்கொண்டு பேசியவள் அதற்கு மேல் தீ காயத்தின் எரிச்சலை தாங்க முடியாதவளாக தரையில் சரிந்திருந்தாள்.
அவளின் பேச்சிலே தனது கணிப்பு சரியென்று உறுதிபடுத்திக்கொண்ட நாராயணன், தற்போது அவளின் காயத்தை ஆற்றுவதுதான் அவசியமென மகளை கையில் அள்ளிக்கொண்டு மருத்துவமனை விரைந்தார். அவரின் பின்னாலே கத்திக்கொண்டு வந்த தேவகியின் அழுகையில் தான் திகழோவியனின் குடும்பம் வெளிவந்திருந்தது.
அவரின் அழுகை இந்த நொடி வரை நிற்காதிருக்கவே நாராயணன் மனைவியை கடிந்துகொண்டார்.
அவர் கடிந்துகொண்ட பேச்சில், அங்கு நின்றிருந்த சுகிர்தன் மற்றும் காமாட்சிக்கு, செந்தாழினியின் இச்செயல் யாருக்காக என்று புரிந்ததோடு, நாராயணனுக்கும் அவள் யாரையோ விரும்புகிறாள் எனுமளவில் தெரிந்திருக்கு என்பதையும் விளங்கிக்கொண்டனர்.
"அவங்க காயத்துக்கு ட்ரீட்மெண்ட் முடிஞ்சுது" என்று செவிலிப்பெண் வந்து சொல்ல, திகழோவியன் வேக எட்டுக்களுடன் அங்கு வந்து சேர்ந்தான்.
"வாடா திகழு" என்ற சுகிர்தன், "ட்ரீட்மெண்ட் முடிஞ்சுது. பார்க்கலாம் சொல்லிட்டாங்" என்றான்.
"ம்ம்..." என்றவன் ஒரு காலை பின்னால் சுவற்றில் பதித்து சாய்ந்து நின்றுகொண்டான்.
காமாட்சி ஏன் வந்திருக்கிறாரென நாராயணன் ஓரளவிற்கு அறிவார். இருவருக்குமான நட்பு இத்தனை ஆண்டுகள் தெரிந்தும் கண்டுகொள்ளவில்லை. அவரின் பகை ராஜேந்திரனுடன் தான் எனுமளவிற்கு அவரும் பக்குவம் கொண்டது, கல்யாணியின் இறப்பன்று நடந்த நிகழ்வுகளால் தான். யாரும் யாருக்கும் இங்கு நிரந்தரமில்லை என்பதை புரிந்துகொண்டாலே ஒருவருடனான கோபங்கள் அர்த்தமற்றவை என்பதை புரிந்துக்கொள்ளலாம். அதனை அன்று பிரித்துக்கொண்டதாலே நாராயணன் தனது பகை என்பதை அதற்கு பின்னான நாட்களில் ராஜேந்திரனுடன் நிறுத்திக்கொண்டார். அதனாலே அன்று வரப்பு சண்டையின் போது அவரால் திகழோவியனிடம் இயல்பாக பேசிட முடிந்தது. தற்போது மனைவிக்காக வந்து நிற்பவர்களிடம் முகம் காட்டாதிருக்கவும் முடிந்தது.
'காமாட்சியைக் கூட்டிக்கொண்டு சுகிர்தன் வந்தான். ஆனால் திகழோவியன் வர காரணமென்ன?' அவரின் மனம் யோசித்துக் கொண்டிருக்க, தேவகியும் காமாட்சியும் சிகிச்சை அறைக்குள் சென்று செந்தாழினியை இருபக்கமும் தோள் தாங்கி கைத்தாங்கலாக அழைத்து வந்திருந்தனர்.
வலது காலின் பாதத்திற்கு மேல் முழுக்க தோல் சுருங்கி சிவந்து, ஆங்காங்கே நீர் கோர்த்து பார்க்கவே ரணமாக இருந்தது.
பாதத்தை ஊன்ற முடியாது ஒவ்வொரு அடிக்கும் வலியால் முகம் சுருங்க, மூச்சினை இறுக்கிப் பிடித்தும், உதடு கடித்தும் வலியைப் பொறுத்தாள்.
கண்கள் மூடி நின்றிருந்த தம்பியை தோள் தொட்டு, செந்தாழினி வருவதை சுட்டிக்காட்டினான் சுகிர்தன்.
நாராயணன் கவனித்தும் அமைதியாக இருந்தார்.
"அய்யோ முடியலங்" என்ற செந்தாழினி அடுத்த அடி வைத்திட முடியாது அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திட,
"வலிக்கும் தெரிஞ்சு செய்துகிட்டதுக்கு யாரென்ன பண்ண முடியும். அனுபவிச்சுதான் ஆவணும்" என்ற நாராயணனின் குரலில் நிமிர்ந்தவள் தனக்கு நேரெதிர் தன்னையே பார்த்தபடி நின்றிருந்த திகழோவியனின் பார்வையை இமை சிமிட்டாது தாங்கி நின்றாள்.
"ஏண்டி?" அவனின் அகக்குரல் கேட்டிட,
"வேற வழித்தெரியலங் மாமா" என அனைவருக்கும் கேட்கும்படியே பதில் வழங்கியிருந்தாள்.
அவ்வளவு தான். அவளின் தவிப்புகள் நிறைந்த அந்த மாமா என்றழைப்பில் மொத்தமாக அவள் பக்கம் சாய்ந்துவிட்டான்.
இருந்த கோபமெல்லாம் அங்கு வருவதற்கு முன்பே எங்கோ சென்று மறைந்திருக்க, அவளின் ஓவியாக அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான். கரங்களை பற்றிக்கொண்டவனாக.
தேவகி காமாட்சியை பார்க்க, காமாட்சியும், சுகிர்தனும் நாராயணனைத்தான் அதிர்வாய் நோக்கினார்.
எதுவும் பேசிவிடுவாரோ என்ற பயம் எழாமலில்லை.
"மன்னிச்சிட்டீங்களாங் மாமா" என்று உதடு துடிக்க கேட்டவளின் பின்னந்தலையில் கை வைத்தவன் தனது மார்போடு அவளின் முகம் புதைய அழுத்திக் கொண்டான்.
"எல்லாம்... எல்லாமே மறந்துப்புடலாம்" என்றவன், "புதுசா லவ் பண்ணலாங் அம்மணி" என்றான்.
"அம்மணி சொல்ல இப்போதான் மனசு வந்துச்சாங்" என்றவள் தனது தாய் தந்தையர் தங்களின் நிலையை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தும், அவனின் முதுகோடு கையிட்டு அணைத்துக் கொண்டாள்.
அவ்வழைப்பை திகழோவியன் எப்போதும் வாய் அழைப்பாகப் பயன்படுத்தியது இல்லை. ஆனால் புலனத்தில் உரையாடலில் அவனின் ஆரம்பம் அவ்வர்த்தையாகத்தான் இருக்கும்.
"அம்மணி" என்ற அவ்வெழுத்துக்கள் அவனது குரலாகத்தான் அவளின் அகம் நிறையும்.
இப்போது முதல்முறையாக அவன் சொல்லிக் கேட்க இதயத்தின் தாள லயங்கள் எல்லாம் உடலின் அணுக்களை மீட்டும் மாயம். கூடுதல் இன்பமாய் அவனின் கோபம் துறந்து ஏற்றுக்கொண்டது.
"லவ் யூங் மாமா!"
"உன்ற புள்ளயை பொறவு லவ் பண்ண சொல்லுங்மா! இவரு பார்வையே சரியில்லை" என்று சுகிர்தன் காமாட்சியின் காதில் கிசுகிசுக்க...
"லவ்வா!" என்று சத்தமாகக் கேட்டு விழிகள் விரித்தார் தேவகி.
"ஆமா... எங்களுக்கும் இப்பைக்குதான், நேத்து தெரிஞ்சுது" என்றார் காமாட்சி. நாராயணனை மறந்தவராக.
அவர்களின் பேச்சுக்கேட்டு தொண்டையை செருமி தனது இருப்பை உணர்த்தினார் நாராயணன்.
"அண்ண... அது வந்து" என காமாட்சி ஏதோ சொல்ல முற்பட...
"சுமக்க முடியாத பாரத்தை சுமந்தவன்... நானும் வலிக்க வச்சிப்புட மாட்டேன். மனசுன்னு ஒன்னு எனக்குமிருக்கு" என்ற நாராயணன், "பொறுமையா கூப்புட்டு வந்து சேருங்கங்" என்று தோளில் கிடந்த துண்டை உதறி மீண்டும் தோளில் போட்டவராக வெளிவாயில் நோக்கி சென்றார்.
தேவகியும், காமாட்சியும் அவரின் பேச்சினை நம்ப முடியாது வாய் பிளந்து பார்த்து நிற்க, சுகிர்தன் வாய் பொத்தி சிரிப்பை அடக்கினான்.
அவர் பேசிய வார்த்தைகளும், துண்டை உதறி போட்டதும், தற்போது பின் உருவம் தெரிய நிமிர்ந்து செல்வதும், சுகிர்தனனுக்கு பின்னணியில்,
"அந்த வானத்தைப்போல மனம் படைச்ச மன்னவனே..." என்ற பாட்டை எடுத்துக்கொடுக்க வந்த சிரிப்பை கட்டுப்படுத்தியிருந்தான்.
"எதுக்குடா சிரிக்கிற?" காமாட்சி அவனின் முதுகிலே அடித்தார்.
"இவங்க காதல் தெரிஞ்சதும், இவங்களுக்குள்ள என்ன பிரச்சினைங்கிறதை தாண்டி, பெருசு ரெண்டையும் என்னமாச்சும் சமாளிக்கணுமோன்னு தான் அதிகம் பயந்தேனுங். இப்போ ஒரு டிக்கெட்டு அவுட்... இன்னொரு டிக்கெட் தான் என்ன கதைன்னு தெரியலங். ஓவரா ஆடுமே" என்றான்.
"என்னவா இருந்தாலும் என்ட்ர மவன் விருப்பம் நிறைவேறனும். அதுக்கு அந்த ஆளை பொளக்கவும் நானு தயாருதான்" என்ற காமாட்சி, "இப்படி குளிர்ந்த மொவமா என்ட்ர புள்ளையை நானு பார்த்ததே இல்லை சுகிர்தா" என்று கலங்கிய கண்களை புடைவையை வளைத்து துடைத்துக் கொண்டார்.
"இனிமேலு அவனும் சந்தோஷமா இருப்பானுங்மா" என்றவன், "அவன் கூட்டியாருவான். நாம போவோம்" என இரு பெண்களையும் அழைத்துக்கொண்டு சென்றிருந்தான்.
செந்தாழினி அவனை கட்டிக்கொண்டு அவனது நெஞ்சில் முகம் புதைத்திருக்க, அவனின் கை அவளின் தலையை வருடியபடி இருந்தது.
இருவருக்குமே அக்கணங்கள் மதிப்புமிக்கவை. இருவரும் சேர்ந்திருக்கும் நொடிகள் பொக்கிஷமானவை என பிரிவின் அனுபவத்தால் உணர்ந்துகொண்டிருந்தனர்.
"நானு அன்னையப் பேச்சுக்கு எந்தவொரு விளக்கமும் சொல்லலைங்களே மாமா!"
"கோவங்கிற திரை விலகுனதும் உன்ற மனசு புரியுதுங் அம்மணி. பொறவு விளக்கம் தேவைங்களா?" அவன் கேட்டதில் அப்படியொரு ஆசுவாசம் அவளிடம்.
அவளின் அணைப்பு கூடியது.
"இப்படியே இருக்கோணும் ஆசைதாங் அம்மணி. ஆனா இது ஹாஸ்பிட்டலு..." என்று அவன் சிரியாது சொல்லியதில் அவனிலிருந்து பதறி விலகி சுற்றம் ஆராய்ந்தாள்.
"யாரும் பாக்கல..." என்றவன் குலுங்கி சிரித்திட, "போங்கங் நான் போறேனுங்" என்றவள் எழுந்த வேகத்திற்கு பாதத்தில் காயம் ஊசியாய் துளைத்திட, அவள் மீண்டும் இருக்கையில் சரியும் முன் தனது கைகளில் ஏந்தியிருந்தான்.
"மாமா..." தானாக அவளின் கைகள் அவனது கழுத்தை கோர்த்துப்பிடித்திட, அவன் மார்புரசும் முகம் நோக்கி தாழ்ந்திருந்த அவனது கண்களை விழுங்கியவளாக அழைத்திருந்தாள்.
"நாள்பூரா நீ சொல்ல கேட்டுகிட்டே இருக்கோணும் அம்மணி" என்றவன் மருத்துவமனையில் தங்களை கவனித்துப் பார்க்கும் யாரையும் பொருட்படுத்தாதவனாக வெளியேறியிருந்தான்.
அங்கிருந்து நேராக அவளது வீட்டிற்கு வந்தவன், தானே அவளை வீட்டிற்குள் தூக்கியும் சென்றான்.
தொடர்ச்சி கீழே