“ஓ!” என்றவளுக்கு நிரல்யாவிடம் கொடுக்க முடியுமா என்று கேட்க வாயே வரவில்லை.
அமிர்தவல்லியும் அதற்குமேல் பேச்சை வளர்க்க விடவில்லை. “நீங்களாவது உங்கட வீட்டுக்கு உண்மையா இருங்கோம்மா. எங்கட பிள்ளைகள், தவறிப் போகாயினம் எண்டு நம்பித்தான் படிக்க அனுப்புறது. அந்த நம்பிக்கையைக் கெடுத்துப் போடாதீங்கோ!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
அவளிடம் அப்படிப் பேசி வைத்தாலும் அன்று வீடுவந்த கணவரை இனி என்ன செய்யப் போகிறார் என்கிற கேள்வியோடு அணுகினார்.
“என்ன செய்யக் கிடக்கு? இனி அங்கயெல்லாம் விடேலாது!” என்றார் குறையாத சினத்துடன்.
அதில் அமிர்தவல்லிக்கும் உடன்பாடுதான். ஆனால் அவளின் படிப்பு இடையில் நிற்பதில் விருப்பமில்லை.
“படிப்பு?”
“என்ன கண்டறியாத படிப்பு? உன்ர மகள் படிச்ச படிப்பைப் பாத்தாய்தானே?” என்று அதற்கும் சீறினார் அவர்.
அமிர்தவல்லிக்கு முகம் சுண்டிப் போயிற்று. இதுவரை காலத்தில் இப்படி ஒரு முகத்தைக் கணவர் அவரிடம் காட்டியதில்லை. அதைப் பிடித்துக்கொண்டு தொங்கி, மகள் பற்றிய பேச்சை அப்படியே விட விரும்பாமல், “அங்க அனுப்பச் சொல்லி நானும் சொல்லேல. இங்க சேர்த்து விடுங்கோவன்.” என்று தணிந்தே பேசினார்.
“அதுக்கு அங்க இந்த செமஸ்ட்ரை முடிக்கோணும். அதுக்கு அங்க போக வேணும். அதெல்லாம் சரி வராது!” என்று ஒரேடியாக முடித்துக்கொண்டிருந்தார் சுந்தரலிங்கம்.
சுந்தரலிங்கத்தின் குரல் உயர்ந்தபோதே படக்கென்று எழுந்து வந்து, மாடிப் படியருகில் நின்ற நிரல்யா திகைத்துப் போனாள். எப்படியும் படிப்பை நிறுத்தமாட்டார்கள் என்று நம்பிக்கொண்டு இருந்தாளே!
இனியும் அமைதியாக இருக்க முடியாது என்று தெரிந்துவிட, அடுத்தநாள் சுந்தரலிங்கம் வீட்டில் இல்லாத நேரம் அன்னையைத் தேடி வந்தாள்.
பகல் சமையலில் மும்முரமாய் இருந்த அமிர்தவல்லி, “அம்மா…” என்ற மகளின் கண்ணீர்க் குரலில் வேகமாகத் திரும்பிப் பார்த்தார்.
ஒரு பழைய சட்டை, கடைசியாக எப்போது வாரினாளோ என்று தெரியாத அளவுக்குக் கலைந்து கிடந்த தலை, அழுது சிவந்த விழிகள், தடித்த கண்மடல்கள், அதைத்த முகம் என்று அவள் நின்ற கோலம் கண்டு ஒருகணம் துடித்துப்போனார்.
அவளுக்கும் அன்னையின் பார்வையில் கண்ணீர் கொட்டியது. “எக்ஸாம் எழுத மட்டும் போயிற்று வாறன் அம்மா. பிறகு நீங்க சொன்ன மாதிரி இங்கயே எங்கயாவது சேர்த்து விடுங்க. தொடந்து படிக்கிறன். பிளீஸ் அம்மா, எனக்குப் படிக்கோணும்.” என்று கெஞ்சினாள்.
“இந்த அறிவு தேவையில்லாத வேலைகளப் பாக்க முதல் இருந்திருக்க வேணும்!” என்றார் பட்டென்று.
பதில் சொல்லத் தெரியாமல் கண்ணீர் உகுத்தாள் நிரல்யா. அப்படி அவளைப் பார்க்க முடியாமல் அவருக்கும் உள்ளம் பிசைந்தது. இத்தனை நாள்கள் கழிந்திருந்ததாலோ என்னவோ அவள் மீதான கோபம் கொஞ்சம் குறைந்து நிதானத்துக்கு வந்திருந்தார்.
“நீயாத்தான் பிள்ளை உன்ர வாழ்க்கையைக் கெடுத்து வச்சிருக்கிறாய். என்னை என்ன செய்யச் சொல்லுறாய்? அப்பா வெளில எப்பிடி இருந்தாலும் ஒரு நாள் உன்னட்டக் கோபப்பட்டு இருப்பாரா? இல்ல, என்னட்டத்தான் இப்பிடி எப்பயாவது கதைச்சிருக்கிறாரா? நீ முகத்தைத் திருப்பிக்கொண்டு திரிஞ்ச காலத்தில கூட ஒரு வார்த்த கதைக்க மாட்டியா எண்டு உன்ர முகத்தை முகத்தைப் பாத்த மனுசன எப்பிடி மாத்தி வச்சிருக்கிறாய் எண்டு விளங்குதா?” அவரும் பொறுக்க மாட்டாமல் பொருமினார்.
அதற்கு அவளால் அழ மட்டுமே முடிந்தது. “ப்ளீஸ் அம்மா. அப்பாவோட இன்னொருக்காக் கதைங்களன். இனி அப்பிடி எல்லாம் நடக்க மாட்டன். எக்ஸாம் மட்டும் எழுதிப்போட்டு வாறனே.” என்று மீண்டும் கெஞ்சினாள்.
என்னவோ அவருக்கு அதற்குமேல் அவளிடம் கோபப்பட முடியவில்லை. “கேட்டுப் பாக்கிறன். ஆனா, ஓம் எண்டு சொல்லுவார் எண்டு நினைக்கேல்ல. அவருக்கு உன்னில இருந்த நம்பிக்கை மொத்தமா போயிற்றுது!” என்றவருக்கு தன் தலையில் தானே மண்ணை அள்ளிக் கொட்டிக்கொண்ட மகளை எண்ணிக் கவலைதான்.
அன்று இரவு திரும்பவும் பேச்சை எடுத்தார்.
“உனக்கு ஒருக்கா சொன்னா விளங்காதா? திரும்ப திரும்ப அந்தக் கதையையே எடுக்காத!” என்று ஆரம்பிக்க முதலே அடித்து மூடினார் சுந்தரலிங்கம்.
“அப்பா ப்ளீஸ்…” நிரல்யாவின் கண்ணீர்க் குரல் படியின் பாதியிலிருந்து கேட்டது. சுந்தரலிங்கத்தின் முன்னாலிருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆனந்தனின் கை, ஒரு முறை அப்படியே அந்தரத்தில் நின்று போயிற்று. நிமிர்ந்தே பார்க்காமல் திரும்பவும் உணவில் கவனமானான்.
சுந்தரலிங்கமும் மகளைத் திரும்பியும் பார்க்கவில்லை. முகம் சினத்தில் சிவக்க தட்டில் பார்வையைப் பதித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
“ப்ளீஸ் அப்பா. இனி இப்பிடியெல்லாம் நடக்க மாட்டன். எக்ஸாம் எழுத மட்டும் விடுங்கோ. எனக்குப் படிக்கோணும்.” என்று அழுதாள்.
“அவதான் சொல்லுறாவே. இனி அங்க நாங்க விடப்போறேல்ல தானே. வேணுமெண்டா நந்தன் கூட்டிக்கொண்டு போயிற்று அங்கேயே இருந்து கையோட கூட்டிக்கொண்டே வரட்டும்.” அமிர்தவல்லியும் அவளுக்காய்க் கதைத்தார்.
இல்ல மாமி. கம்பசுக்குள்ள நாங்க போகேலாது. அதைவிட, என்னதான் பயந்து நடுங்கினாலும் தான் நினைச்சதைப் பிடிவாதமா நிண்டு செய்றதுதான் அவளின்ர குணம். அவள் சொல்லுறதை நம்பி அனுப்ப வேண்டாம். அப்பிடிப் படிச்சே ஆகவேணுமெண்டால் இங்க வேற ஏதாவது கோர்ஸ் எடுத்துப் பகடிக்கச் சொல்லுங்க.” என்று இடையிட்டுச் சொன்னான் அனந்தன்.
இதை எதிர்பாராத நிரல்யா திகைத்துப்போனாள். அதுவும் ஒருகணம்தான். அன்று சிசிரவை அந்த அடி அடித்து அவன் உடம்பைப் புண்ணாக்கியது போதாது என்று அவள் படிப்பிலும் விளையாடுவானா என்கிற ஆத்திரம் கிளம்ப, “அதச் சொல்ல நீங்க ஆரு? எங்கயோ இருந்த உங்களக் கூட்டிக்கொண்டு வந்து வீட்டில வச்சிருந்தா எல்லாத்துக்கையும் தலையிடுவீங்களா நீங்க?” என்றாள் பட்டென்று.
சாப்பிட்டுக்கொண்டிருந்த அனந்தன் விறைத்து நிமிர்ந்தான்.
அதற்குள், “அறஞ்சன் எண்டா? பொம்பிளைப் பிள்ளை, கை நீட்டக் கூடாது எண்டு பாத்தா என்ன கதை கதைக்கிறாய் நீ?” என்று சாப்பிட்டுக்கொண்டிருந்த கையை உதறிக்கொண்டு அவளுக்கு அடிக்கப் பாய்ந்தார் சுந்தரலிங்கம்.
அதைக் கண்டு அமிர்தவல்லி நெஞ்சை பற்றிக்கொண்டு நின்றுவிட, இடையில் புகுந்து அவரை அழைத்துவந்து மீண்டும் இருத்தியது அனந்தன்தான்.
அப்போதும் சினமடங்காமல், “பாத்தியா உன்ர மகளின்ர வாய்க் கொழுப்பை? இவளுக்காகத்தான் நீ கதைச்சுக்கொண்டு நிக்கிறாய்!” என்று அதற்கும் மனைவியிடம்தான் சீறினார் சுந்தரலிங்கம்.
அனந்தன் அதற்குமேல் சாப்பிடவில்லை. கையைக் கழுவிக்கொண்டு மேலேறினான். “அவள் கதைச்சதைப் பெருசா எடுக்காம சாப்பிடப்பு!” என்ற அமிர்தவல்லியிடம், “காணும் மாமி.” என்றுவிட்டு விடுவிடு என்று படியேறியவன் அவளைக் கடக்கும் வேளையில் நொடி தாமதித்து, “எனக்கு உன்னத்தான் கொல்ல ஆத்திரமா இருக்கு. அதுக்குத் தைரியம் இல்லாமத்தான் அவனை முறிச்சு அனுப்பினான். இனியும் நீ ஆரு, உனக்கு என்ன உரிமை இருக்கு கேட்டுக்கொண்டு இருந்தாய் எண்டு வை, தெரியும் பிறகு?” என்று சீறிவிட்டு அவளைக் கடந்துபோயிருந்தான்.
நடுங்கிப்போனாள் நிரல்யா. மாட்டை அடிப்பதுபோல் சிசிரவை அவன் அடித்ததால் உண்டான வெறுப்பு நெஞ்சில் மண்டிக் கிடந்ததும், இவனே மறுத்தால் அப்பா அசையவே மாட்டார் என்கிற பதற்றமும் சேரத்தான் அவனிடம் பாய்ந்திருந்தாள். அவனானால் அவளைக் கொல்லும் ஆத்திரத்தில் இருக்கிறானாமே! இனிப் படிப்பு? மெல்ல அறைக்குள் புகுந்துகொண்டவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவேயில்லை.
தொடரும்...
நேற்றுச் சொன்ன அதே டயலாக்தான். முடிந்தால் வியாழன் அடுத்த அத்தியாயம் வரும். இல்லை என்றால் வெள்ளி. (சும்மா சும்மா சொல்லுறேன் என்று நினைக்காதீங்க மக்களே. இதெல்லாம் பீல் குட் எபிஸோட்ஸ் இல்லை. ஒவ்வொரு எபி முடியும்போதும் மைண்ட் அவ்வளவு பாரமா இருக்கு. இப்ப இந்த நிமிஷம் நாளைக்கு எபி எழுத முடியும் என்கிற நம்பிக்கை இல்லை. ஆனா, நாளைக்கு முடிந்தால் எழுதிடுவேன். நீங்க எதிர்பார்த்து ஏமாந்திட கூடாது என்றுதான் நானே முதலே சொல்லிடுறேன். எழுதி முடிச்சிட்டா போட்டுடுவேன். டீல் ஓகே தானே?)
அமிர்தவல்லியும் அதற்குமேல் பேச்சை வளர்க்க விடவில்லை. “நீங்களாவது உங்கட வீட்டுக்கு உண்மையா இருங்கோம்மா. எங்கட பிள்ளைகள், தவறிப் போகாயினம் எண்டு நம்பித்தான் படிக்க அனுப்புறது. அந்த நம்பிக்கையைக் கெடுத்துப் போடாதீங்கோ!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
அவளிடம் அப்படிப் பேசி வைத்தாலும் அன்று வீடுவந்த கணவரை இனி என்ன செய்யப் போகிறார் என்கிற கேள்வியோடு அணுகினார்.
“என்ன செய்யக் கிடக்கு? இனி அங்கயெல்லாம் விடேலாது!” என்றார் குறையாத சினத்துடன்.
அதில் அமிர்தவல்லிக்கும் உடன்பாடுதான். ஆனால் அவளின் படிப்பு இடையில் நிற்பதில் விருப்பமில்லை.
“படிப்பு?”
“என்ன கண்டறியாத படிப்பு? உன்ர மகள் படிச்ச படிப்பைப் பாத்தாய்தானே?” என்று அதற்கும் சீறினார் அவர்.
அமிர்தவல்லிக்கு முகம் சுண்டிப் போயிற்று. இதுவரை காலத்தில் இப்படி ஒரு முகத்தைக் கணவர் அவரிடம் காட்டியதில்லை. அதைப் பிடித்துக்கொண்டு தொங்கி, மகள் பற்றிய பேச்சை அப்படியே விட விரும்பாமல், “அங்க அனுப்பச் சொல்லி நானும் சொல்லேல. இங்க சேர்த்து விடுங்கோவன்.” என்று தணிந்தே பேசினார்.
“அதுக்கு அங்க இந்த செமஸ்ட்ரை முடிக்கோணும். அதுக்கு அங்க போக வேணும். அதெல்லாம் சரி வராது!” என்று ஒரேடியாக முடித்துக்கொண்டிருந்தார் சுந்தரலிங்கம்.
சுந்தரலிங்கத்தின் குரல் உயர்ந்தபோதே படக்கென்று எழுந்து வந்து, மாடிப் படியருகில் நின்ற நிரல்யா திகைத்துப் போனாள். எப்படியும் படிப்பை நிறுத்தமாட்டார்கள் என்று நம்பிக்கொண்டு இருந்தாளே!
இனியும் அமைதியாக இருக்க முடியாது என்று தெரிந்துவிட, அடுத்தநாள் சுந்தரலிங்கம் வீட்டில் இல்லாத நேரம் அன்னையைத் தேடி வந்தாள்.
பகல் சமையலில் மும்முரமாய் இருந்த அமிர்தவல்லி, “அம்மா…” என்ற மகளின் கண்ணீர்க் குரலில் வேகமாகத் திரும்பிப் பார்த்தார்.
ஒரு பழைய சட்டை, கடைசியாக எப்போது வாரினாளோ என்று தெரியாத அளவுக்குக் கலைந்து கிடந்த தலை, அழுது சிவந்த விழிகள், தடித்த கண்மடல்கள், அதைத்த முகம் என்று அவள் நின்ற கோலம் கண்டு ஒருகணம் துடித்துப்போனார்.
அவளுக்கும் அன்னையின் பார்வையில் கண்ணீர் கொட்டியது. “எக்ஸாம் எழுத மட்டும் போயிற்று வாறன் அம்மா. பிறகு நீங்க சொன்ன மாதிரி இங்கயே எங்கயாவது சேர்த்து விடுங்க. தொடந்து படிக்கிறன். பிளீஸ் அம்மா, எனக்குப் படிக்கோணும்.” என்று கெஞ்சினாள்.
“இந்த அறிவு தேவையில்லாத வேலைகளப் பாக்க முதல் இருந்திருக்க வேணும்!” என்றார் பட்டென்று.
பதில் சொல்லத் தெரியாமல் கண்ணீர் உகுத்தாள் நிரல்யா. அப்படி அவளைப் பார்க்க முடியாமல் அவருக்கும் உள்ளம் பிசைந்தது. இத்தனை நாள்கள் கழிந்திருந்ததாலோ என்னவோ அவள் மீதான கோபம் கொஞ்சம் குறைந்து நிதானத்துக்கு வந்திருந்தார்.
“நீயாத்தான் பிள்ளை உன்ர வாழ்க்கையைக் கெடுத்து வச்சிருக்கிறாய். என்னை என்ன செய்யச் சொல்லுறாய்? அப்பா வெளில எப்பிடி இருந்தாலும் ஒரு நாள் உன்னட்டக் கோபப்பட்டு இருப்பாரா? இல்ல, என்னட்டத்தான் இப்பிடி எப்பயாவது கதைச்சிருக்கிறாரா? நீ முகத்தைத் திருப்பிக்கொண்டு திரிஞ்ச காலத்தில கூட ஒரு வார்த்த கதைக்க மாட்டியா எண்டு உன்ர முகத்தை முகத்தைப் பாத்த மனுசன எப்பிடி மாத்தி வச்சிருக்கிறாய் எண்டு விளங்குதா?” அவரும் பொறுக்க மாட்டாமல் பொருமினார்.
அதற்கு அவளால் அழ மட்டுமே முடிந்தது. “ப்ளீஸ் அம்மா. அப்பாவோட இன்னொருக்காக் கதைங்களன். இனி அப்பிடி எல்லாம் நடக்க மாட்டன். எக்ஸாம் மட்டும் எழுதிப்போட்டு வாறனே.” என்று மீண்டும் கெஞ்சினாள்.
என்னவோ அவருக்கு அதற்குமேல் அவளிடம் கோபப்பட முடியவில்லை. “கேட்டுப் பாக்கிறன். ஆனா, ஓம் எண்டு சொல்லுவார் எண்டு நினைக்கேல்ல. அவருக்கு உன்னில இருந்த நம்பிக்கை மொத்தமா போயிற்றுது!” என்றவருக்கு தன் தலையில் தானே மண்ணை அள்ளிக் கொட்டிக்கொண்ட மகளை எண்ணிக் கவலைதான்.
அன்று இரவு திரும்பவும் பேச்சை எடுத்தார்.
“உனக்கு ஒருக்கா சொன்னா விளங்காதா? திரும்ப திரும்ப அந்தக் கதையையே எடுக்காத!” என்று ஆரம்பிக்க முதலே அடித்து மூடினார் சுந்தரலிங்கம்.
“அப்பா ப்ளீஸ்…” நிரல்யாவின் கண்ணீர்க் குரல் படியின் பாதியிலிருந்து கேட்டது. சுந்தரலிங்கத்தின் முன்னாலிருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆனந்தனின் கை, ஒரு முறை அப்படியே அந்தரத்தில் நின்று போயிற்று. நிமிர்ந்தே பார்க்காமல் திரும்பவும் உணவில் கவனமானான்.
சுந்தரலிங்கமும் மகளைத் திரும்பியும் பார்க்கவில்லை. முகம் சினத்தில் சிவக்க தட்டில் பார்வையைப் பதித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
“ப்ளீஸ் அப்பா. இனி இப்பிடியெல்லாம் நடக்க மாட்டன். எக்ஸாம் எழுத மட்டும் விடுங்கோ. எனக்குப் படிக்கோணும்.” என்று அழுதாள்.
“அவதான் சொல்லுறாவே. இனி அங்க நாங்க விடப்போறேல்ல தானே. வேணுமெண்டா நந்தன் கூட்டிக்கொண்டு போயிற்று அங்கேயே இருந்து கையோட கூட்டிக்கொண்டே வரட்டும்.” அமிர்தவல்லியும் அவளுக்காய்க் கதைத்தார்.
இல்ல மாமி. கம்பசுக்குள்ள நாங்க போகேலாது. அதைவிட, என்னதான் பயந்து நடுங்கினாலும் தான் நினைச்சதைப் பிடிவாதமா நிண்டு செய்றதுதான் அவளின்ர குணம். அவள் சொல்லுறதை நம்பி அனுப்ப வேண்டாம். அப்பிடிப் படிச்சே ஆகவேணுமெண்டால் இங்க வேற ஏதாவது கோர்ஸ் எடுத்துப் பகடிக்கச் சொல்லுங்க.” என்று இடையிட்டுச் சொன்னான் அனந்தன்.
இதை எதிர்பாராத நிரல்யா திகைத்துப்போனாள். அதுவும் ஒருகணம்தான். அன்று சிசிரவை அந்த அடி அடித்து அவன் உடம்பைப் புண்ணாக்கியது போதாது என்று அவள் படிப்பிலும் விளையாடுவானா என்கிற ஆத்திரம் கிளம்ப, “அதச் சொல்ல நீங்க ஆரு? எங்கயோ இருந்த உங்களக் கூட்டிக்கொண்டு வந்து வீட்டில வச்சிருந்தா எல்லாத்துக்கையும் தலையிடுவீங்களா நீங்க?” என்றாள் பட்டென்று.
சாப்பிட்டுக்கொண்டிருந்த அனந்தன் விறைத்து நிமிர்ந்தான்.
அதற்குள், “அறஞ்சன் எண்டா? பொம்பிளைப் பிள்ளை, கை நீட்டக் கூடாது எண்டு பாத்தா என்ன கதை கதைக்கிறாய் நீ?” என்று சாப்பிட்டுக்கொண்டிருந்த கையை உதறிக்கொண்டு அவளுக்கு அடிக்கப் பாய்ந்தார் சுந்தரலிங்கம்.
அதைக் கண்டு அமிர்தவல்லி நெஞ்சை பற்றிக்கொண்டு நின்றுவிட, இடையில் புகுந்து அவரை அழைத்துவந்து மீண்டும் இருத்தியது அனந்தன்தான்.
அப்போதும் சினமடங்காமல், “பாத்தியா உன்ர மகளின்ர வாய்க் கொழுப்பை? இவளுக்காகத்தான் நீ கதைச்சுக்கொண்டு நிக்கிறாய்!” என்று அதற்கும் மனைவியிடம்தான் சீறினார் சுந்தரலிங்கம்.
அனந்தன் அதற்குமேல் சாப்பிடவில்லை. கையைக் கழுவிக்கொண்டு மேலேறினான். “அவள் கதைச்சதைப் பெருசா எடுக்காம சாப்பிடப்பு!” என்ற அமிர்தவல்லியிடம், “காணும் மாமி.” என்றுவிட்டு விடுவிடு என்று படியேறியவன் அவளைக் கடக்கும் வேளையில் நொடி தாமதித்து, “எனக்கு உன்னத்தான் கொல்ல ஆத்திரமா இருக்கு. அதுக்குத் தைரியம் இல்லாமத்தான் அவனை முறிச்சு அனுப்பினான். இனியும் நீ ஆரு, உனக்கு என்ன உரிமை இருக்கு கேட்டுக்கொண்டு இருந்தாய் எண்டு வை, தெரியும் பிறகு?” என்று சீறிவிட்டு அவளைக் கடந்துபோயிருந்தான்.
நடுங்கிப்போனாள் நிரல்யா. மாட்டை அடிப்பதுபோல் சிசிரவை அவன் அடித்ததால் உண்டான வெறுப்பு நெஞ்சில் மண்டிக் கிடந்ததும், இவனே மறுத்தால் அப்பா அசையவே மாட்டார் என்கிற பதற்றமும் சேரத்தான் அவனிடம் பாய்ந்திருந்தாள். அவனானால் அவளைக் கொல்லும் ஆத்திரத்தில் இருக்கிறானாமே! இனிப் படிப்பு? மெல்ல அறைக்குள் புகுந்துகொண்டவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவேயில்லை.
தொடரும்...
நேற்றுச் சொன்ன அதே டயலாக்தான். முடிந்தால் வியாழன் அடுத்த அத்தியாயம் வரும். இல்லை என்றால் வெள்ளி. (சும்மா சும்மா சொல்லுறேன் என்று நினைக்காதீங்க மக்களே. இதெல்லாம் பீல் குட் எபிஸோட்ஸ் இல்லை. ஒவ்வொரு எபி முடியும்போதும் மைண்ட் அவ்வளவு பாரமா இருக்கு. இப்ப இந்த நிமிஷம் நாளைக்கு எபி எழுத முடியும் என்கிற நம்பிக்கை இல்லை. ஆனா, நாளைக்கு முடிந்தால் எழுதிடுவேன். நீங்க எதிர்பார்த்து ஏமாந்திட கூடாது என்றுதான் நானே முதலே சொல்லிடுறேன். எழுதி முடிச்சிட்டா போட்டுடுவேன். டீல் ஓகே தானே?)
Last edited: