அத்தியாயம் 1
"பளார்" என்று கன்னத்தில் விழுந்த அறையில் அதிர்ந்து நின்றான் அந்த இளையவன். கிட்டத்தட்ட அவனுக்கு 15 வயது இருக்கலாம். கன்றிச் சிவந்த கன்னமும், கலங்கிய கண்களும் அவனுக்கு விழுந்த அறையின் வேகம் பலம் என்பதை காட்டியது.
தன்னருகில் இருந்த தோழியை இழுத்து, "இவள் வயதுக்கு வந்துவிட்டாளா என்பதை அறிந்து என்ன செய்யப்போகிறாய் நீ?" என்று கோபமாகக் கேட்ட ஓவியப்பாவையின் முகத்தைப் பார்க்கவே அவனுக்குப் பயமாக இருந்தது.
கறுப்பு நிற ரோஜா அவள். பன்னிரண்டே வயது நிரம்பிய நடமாடும் பூந்தோட்டம். இன்றோ புயலாக நின்றாள். அவளைப் பார்க்க அவளின் தோழி கண்மணிக்கே பயமாக இருந்தது.
"பாவை, வாடி போகலாம்..." என்றாள் ஓவியப்பாவையின் கைகளைப் பிடித்தபடி நடுங்கிய குரலில்.
கண்மணியைத் திரும்பிப் பார்த்து முறைத்தவள், அவனின் புறம் திரும்பினாள். அந்த இளையவனுக்கோ நண்பர்கள் முன் இப்படி அடித்துவிட்டாளே என்று அசிங்கமாக இருந்தது. போதாக்குறைக்கு பன்னிரண்டே வயதான சிறுமி தன்னை அடிப்பதா, தான் அவளைப் பார்த்துப் பயப்படுவதா என்று கொதித்தவன், அறை விழுந்ததில் கலங்கிய கண்களை விரித்து அவளை முறைத்து, "உன்னிடமா கேட்டேன். அவளிடம் தானே கேட்டேன்..." என்றான் கோபத்துடன்.
"ஓ… என்னிடமும் கேட்பாயா? கேட்டுப்பார்! அப்போது தெரியும். அவளிடம் கேட்டதனால் ஒரு அறையோடு விட்டேன். இதுவே என்னிடம் கேட்டிருக்க இன்றிலிருந்து நீ ஊமையாகி இருப்பாய்..." என்றாள் குறையாத கோபத்துடன்.
"போடி கறுப்பி கிழிப்பாய்! நீ என் நாக்கை அறுக்கும் வரை நான் பார்த்துக்கொண்டா இருப்பேன்..." நக்கலாகக் கேட்டவனிடம் அதைவிட நக்கலாக, "இப்போது உன்னை அறைந்தேனே, நீ என்ன கிழித்தாய் எருமை?" என்றாள் பாவை.
மலையகத்திலிருந்து வவுனியாவுக்கு வந்த பஸ்ஸிலிருந்து இறங்கிய ரவிவர்மனின் காதுகளில் இந்த "கறுப்பி" மற்றும் "எருமை" என்கிற சொற்கள் விழுந்தது. அதைக் கேட்டவன் முகம் கல்லாக இறுகியது. இறுகிய முகத்துடன் இவர்களின் புறமாக முகத்தைத் திருப்பியவனின் கண்களில் முகம் முழுக்கக் கோபத்துடன் திட்டிக் கொண்டிருந்த ஓவியப்பாவை விழுந்தாள்.
காரணம் இன்றியே அவனுக்கு அவளைப் பிடிக்காமல் போனது. என்ன பிள்ளைகள் இவர்கள். இந்தச் சின்ன வயதிலேயே இப்படி வாயடிக்கிறாள். வளர்ந்தால் எவ்வளவு வாயடிப்பாள். இப்போதே ஆண்களை மதிக்கக் காணோம். பிறகு? ச்சே… ச்சே… பெண்களா இதுகள். என்று அவன் சிந்தனை, ஒரு சிறு பெண்ணைப் பற்றி இப்படி நினைக்கிறோமே என்கிற எண்ணமின்றி, அவனை மீறிச் சென்றது. ஆனாலும் அந்த மாணவர்கள் நின்ற இடத்துக்கு அருகிலேயே சென்று நின்றுகொண்டான்.
அவன் பிறந்து வளர்ந்தது எல்லாமே இலங்கையின் அழகு கொஞ்சும் மலையகத்தில். இதுதான் முதன் முதலாக வவுனியா வருகிறான். அவன் அன்னைக்கு மலையக வாசம், தனிமை என்று சலிப்புத் தட்டவே வவுனியாவுக்கு குடி வரலாமா என்கிற எண்ணம் தோன்றியது.
மலையகத்தில் படிக்க முடிந்தாலும் வேலை வாய்ப்பு என்பது மற்றைய நகரங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவே. அதனால் அங்குப் படித்தாலும் வேலை என்று வருகையில் பலர் ஊர் மாறிவிடுவர். அப்படி மாறிய சிலர் வவுனியாவில் இருப்பதில், ஊர் மாறலாம் என்கிற எண்ணம் வந்தவுடன் தாய்க்கும் மகனுக்கும் நினைவில் தோன்றிய இடம் வவுனியாவே. இதற்கு, அவன் தாயின் தோழி காஞ்சனாவின் தூண்டுதலும் அதிகம். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் வவுனியாவுக்கு வந்துவிடும்படி அழைத்துக்கொண்டே இருந்தார் அவர்.
வவுனியா அவர்களுக்குப் பொருந்துமா என்று பார்க்கவே, முதலில் தனியாக ரவிவர்மன் அங்கு வந்திருக்கிறான். அம்மாவின் நெருங்கிய தோழி காஞ்சனா குடும்பத்துடன் வவுனியாவில் வசிக்கிறார். அவரின் மகன் நந்தன் ரவிவர்மனின் நண்பனும் கூட.
மொத்தமாக இடம் மாறுவதற்கு முதலில், வீடு முதல் அடிப்படைத் தேவைகளை கவனிப்பதற்காக பஸ்ஸில் வந்து, வவுனியா பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, அங்கு நின்ற பள்ளி மாணவர்களின் இந்தப் பேச்சையே ரவிவர்மன் முதலில் கேட்டான். கேட்டவனுக்கோ கோபம் வந்தது. ஆனாலும் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு அமைதியாக நின்றான்.
பள்ளி முடிந்து பஸ்ஸில் செல்லும் பல பள்ளி மாணவர்கள் அங்குக் கூடுவதும் அவர்களுக்குள் எப்போதும் சிறு சிறு சலசலப்பு வருவதும் வழமை. ஆனால் இன்று அந்த மாணவர்களில் ஒருவனின் பேச்சு சற்று அதிக்கபடியாக மாறியதில் அவனை அறைந்துவிட்டாள் ஓவியப்பாவை. அதற்காக அவள் மரியாதை அற்ற பெண்குழந்தை அல்ல!
அவளுடன் நட்பாக, பாசமாகப் பழகுபவர்களுக்கு மிகவும் அருமையான சிறு பெண் அவள். பிழை என்று கண்டுவிட்டால் பயப்படாமல் தட்டியும் கேட்பாள். இன்றும் அதுவே நடந்தது. ஆனால் நடந்த விடயம் முழுதும் தெரியாத ரவிவர்மனுக்கு ஆண் பிள்ளைகளுடன் வாயடிக்கும் ஒரு பெண்ணாகவே அவள் தெரிந்தாள்.
பள்ளிப் பருவத்தில் இவை எல்லாம் சாதாரணம் என்பதை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு புத்தியற்றவன் அல்ல அவன். ஆனாலும் மனதின் சில நினைவுகள் அதனைச் சிந்திக்க விட மறுத்தது.
தன்னைப் பற்றி ஒருவர் தவறாகக் கணிப்பிடுவது தெரியாத அந்த அழகிய சிறுமலர், "என்னை முறைத்தது போதும், உங்கள் பஸ் வரும் இடத்துக்கு மரியாதையாகச் செல்லுங்கள்.." என்று அந்த மாணவர்களைப் பார்த்து அதட்டலாகவே சொன்னாள்.
அவளின் அறையிலும் அதட்டலிலும் கோபம் கொண்ட அந்த மாணவன் இவளை நோக்கி நகரவே, கையில் வட்டாரியை பிடித்துக்கொண்டாள் ஓவியப்பாவை. கிட்ட வந்தால் அவன் கையில் குத்திவிடும் எண்ணத்துடன். அப்போதுபார்த்து அந்த மாணவனின் பள்ளி ஆசிரியை ஒருவர் வர, மற்ற மாணவர்கள் அவனை "வாடா, மிஸ் வருகிறார்..." என்றபடி இழுத்துச்சென்றனர்.
"அடியே கறுப்பி உனக்கு நாளைக்கு இருக்கடி..." அந்த மாணவன் கோபத்தில் சொல்லவும், "போடா குரங்கு, நாளை விஷயத்தை நாளைக்குப் பார்ப்போம்.." என்றாள் ஓவியப்பாவையும்.
இதைக் கேட்ட ரவிவர்மனுக்குப் பொறுமை பறந்தது.
"என்ன பெண்பிள்ளை நீ? அறிவில்லை? அவனுடன் சரிக்குச் சமமாகச் சண்டை பிடிக்கிறாயே. கொஞ்சம் வாயடக்கத்தையும் கற்றுக்கொள்! நாளை அவன் உன்னை ஏதாவது செய்தால் என்ன செய்வாய்?" மெல்லிய குரலில் வார்த்தைகளைக் கடினமாகக் கோர்த்து அதட்டினான்.
திகைத்துப்போனாள் பாவை. சம்மந்தமே இல்லாமல் அருகில் நின்ற ஒருவர் தன்னைத் திட்டவும் அதிர்ந்தவள், "அவன் என்ன சொன்னான் என்று தெரியாமல் பேசாதீர்கள் அண்… அங்..." என்று திடமாக ஆரம்பித்தவளுக்கு, அவனை அண்ணா என்று கூப்பிடுவதா அல்லது அங்கிள் என்று கூப்பிடுவதா என்கிற சந்தேகம் வந்தது.
"அவன் என்ன சொன்னாலும் முதலில் நீ பெண்பிள்ளையாக அடக்க ஒடுக்கமாக இருக்கப் பழகு!" என்றவனின் பேச்சில், ஓவியப்பாவைக்கு கண்கள் கலங்கி அழுகை வந்துவிடும்போல் இருந்தது.
இவனைப் போன்ற வயதில் பெரியவர்கள் இதுவரை அவளைத் திட்டியது கிடையாது. ஏன் கடிந்துகொண்டது கூட இல்லை. சக மாணவ மாணவியருக்கு அவள் வாயாடியாக இருந்தாலும், பெரியவர்களுக்கு மரியாதை தெரிந்த அன்பான சிறு குழந்தையே.
இயல்பிலேயே மனத்திடம் உள்ளவள் என்பதால், அழுகையை அடக்கி, "நான் எப்படி இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்! என்னுடைய அம்மா என்னை நன்றாகத்தான் வளர்த்திருக்கிறார். நீங்கள் ஒன்றும் சொல்லத்தேவை இல்லை." என்றாள் அழுகுரலை திடமாகக் காட்டமுயன்றபடி.
"உன் அம்மாவின் வளர்ப்பின் திறத்தைத்தான் சற்று முன் பார்த்தேனே." என்றான் ஏளனமாக ரவிவர்மன்.
பாவைக்கு மனம் கொதித்தது. அவளுக்காகவே வாழும் அவளில் உயிரையே வைத்திருக்கும் அவளுடைய தாயை ஒருவர் குறையாகச் சொல்வதா?
வயதில் பெரியவன் என்பதால் கோபத்தை கட்டுப்படுத்தி, "அங்கிள்!" என்றாள் அழுத்தமான குரலில் அதட்டலாக.
அந்த அதட்டலான அங்கிள் என்கிற அழைப்பு, இத்தோடு நிறுத்து, என் அம்மாவைக் குறை சொல்லாதே என்கிற பல விடயங்களை அடக்கி வெளி வந்தது.
அவன் வேறு என்னவோ சொல்ல வரவும், இவர்களின் பஸ் வரவும் சரியாக இருந்தது. அதுவரை பயந்து நடுங்கிக்கொண்டு இருந்த கண்மணி, தங்கள் இருவரினதும் பள்ளி பாகைத் தானே சுமந்தபடி, " வாடி பாவை. பஸ் வந்துவிட்டது." என்று சொல்லி ஓவியப்பாவையை இழுத்துக்கொண்டு சென்றாள்.
அவளின் இழுவைக்கு இசைந்தபடி கண்மணியுடன் நடந்தாலும், பாவையின் கண்கள் ரவிவர்மனை முறைத்தது. ரவிவர்மனுக்கும் கோபம் வந்தது. ‘பார்வையை பார். வயதில் பெரியவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்றே தெரியாதவள்’ என்று மனதிலேயே புகைந்தான்.
நல்லதற்கு ஒன்று சொன்னால் கேட்கும் பழக்கம் இந்தப் பெண்களுக்கே இல்லை என்று புகைந்துகொண்டிருந்தவனின் அருகில், தனது காரைக் கொண்டுவந்து நிறுத்தினான் நந்தன்.
"வாடா ரவி. வருவதற்கு கொஞ்சம் பிந்திவிட்டதடா..." மன்னிப்புகுரலில் சொன்னவாறே இறங்கிய நந்தனை முறைத்த ரவிவர்மன், "எப்போதாவது நீ சொன்ன நேரத்திற்கு வந்திருக்கிறாயா? பிறகு எதற்குக் காரணம் சொல்கிறாய். காரை எடு!" என்றபடி உள்ளே ஏறினான்.
இவனின் இந்தச் சிடுசிடுப்பு பழகிய நந்தனும், "சிடு சிடுக்காவிட்டால் நீ ரவி இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, என் பழக்கத்தை மாற்றிக்கொண்டால் நான் நந்தன் இல்லை என்பதும்.." என்றவாறே காரை வீடு நோக்கிச் செலுத்தினான்.
பஸ்ஸில் சென்றுகொண்டிருந்த ஓவியப்பாவையின் மனது கலங்கி இருந்தது. அவளை அவன் சொன்னவை எல்லாம் மறந்துபோக, அவன் தன் தாயைக் குறையாகச் சொல்லிவிட்டானே என்று அந்தச் சின்ன இதயம் தவித்தது. அவளின் சகலதும் அவள் தாய். இன்றுவரை இறந்த தந்தையின் நினைவுகள் வராமல், அப்பா இல்லையே என்கிற குறை தெரியாமல் தன்னை வளர்ப்பவரைப் பற்றி ஒருவர் குறையாகச் சொல்லிவிட்டாரே என்று வருந்தினாள்.
பள்ளியால் வீட்டுக்கு வந்த மகளின் முகம் வாடி இருந்ததைப் பார்த்த கவிநயாவின் நெற்றி சுருங்கியது. எப்போதும் சிரிப்பும் நிமிர்வும் தவழும் முகம் அவள் மகளினது. சிறுவயதில், அழுதால் கூட அழகாய்த் தோன்றும் அவள் கண்ணின் மணியின் முகம் சோர்ந்து இருந்ததில் மனம் தவித்தபோதும் அதை வெளியே காட்டாது, "என்ன நடந்தது பாவை. முகம் சோர்ந்து தெரிகிறதே. உடம்பு சரியில்லையா உனக்கு?" என்று மென்மையாக இருந்தாலும் கம்பீரமாக வந்தது கவிநயாவின் குரல்.
தாயின் பரிவில் அழுகை வரவும், பள்ளி பாகை கீழே போட்டவள், தாயின் இடையை கட்டிப்பிடித்தபடி, "அம்மா, உங்களை ஒரு அங்கிள் பிழையாகச் சொல்லிவிட்டார். எனக்கு அவர் மீது நிறையக் கோபம். திட்டுவதற்குள் பஸ் வந்துவிட்டது. அவர் எப்படி என் அம்மாவைக் குற்றம் சாட்டலாம்." என்றவளின் அழுகை நிறைந்த ஆதங்கக் குரலில், கவிநயாவின் இதயம் ஒரு தடவை நின்று துடித்தது.
என்னைப் பற்றி இங்கு ஒருவருக்குதானே தெரியும். அவர் அப்படி எதுவும் பிழையாகச் சொல்லமாட்டாரே. பின்னே யார் என்னைப் பற்றித் தவறாகச் சொன்னது, எதைச் சொல்லி என் குழந்தையின் மனதை யார் வருத்தியது என்று மனதால் மருகியவள், அதைக் காட்டாது, "பாவை, இங்கே பார். முதலில் அழுகையை நிறுத்து, அம்மாக்கு அழுவது பிடிக்காது என்று உனக்குத் தெரியும் தானே! பிறகு என்ன அழுகை. எந்த விசயத்துக்கும் அழுகை தீர்வல்ல என்று உனக்குச் சொல்லியிருக்கிறேன் தானே. அழுவதை நிறுத்திவிட்டு முதலில் நடந்ததை சொல்லு!" என்று அதட்டினாள்.
"பளார்" என்று கன்னத்தில் விழுந்த அறையில் அதிர்ந்து நின்றான் அந்த இளையவன். கிட்டத்தட்ட அவனுக்கு 15 வயது இருக்கலாம். கன்றிச் சிவந்த கன்னமும், கலங்கிய கண்களும் அவனுக்கு விழுந்த அறையின் வேகம் பலம் என்பதை காட்டியது.
தன்னருகில் இருந்த தோழியை இழுத்து, "இவள் வயதுக்கு வந்துவிட்டாளா என்பதை அறிந்து என்ன செய்யப்போகிறாய் நீ?" என்று கோபமாகக் கேட்ட ஓவியப்பாவையின் முகத்தைப் பார்க்கவே அவனுக்குப் பயமாக இருந்தது.
கறுப்பு நிற ரோஜா அவள். பன்னிரண்டே வயது நிரம்பிய நடமாடும் பூந்தோட்டம். இன்றோ புயலாக நின்றாள். அவளைப் பார்க்க அவளின் தோழி கண்மணிக்கே பயமாக இருந்தது.
"பாவை, வாடி போகலாம்..." என்றாள் ஓவியப்பாவையின் கைகளைப் பிடித்தபடி நடுங்கிய குரலில்.
கண்மணியைத் திரும்பிப் பார்த்து முறைத்தவள், அவனின் புறம் திரும்பினாள். அந்த இளையவனுக்கோ நண்பர்கள் முன் இப்படி அடித்துவிட்டாளே என்று அசிங்கமாக இருந்தது. போதாக்குறைக்கு பன்னிரண்டே வயதான சிறுமி தன்னை அடிப்பதா, தான் அவளைப் பார்த்துப் பயப்படுவதா என்று கொதித்தவன், அறை விழுந்ததில் கலங்கிய கண்களை விரித்து அவளை முறைத்து, "உன்னிடமா கேட்டேன். அவளிடம் தானே கேட்டேன்..." என்றான் கோபத்துடன்.
"ஓ… என்னிடமும் கேட்பாயா? கேட்டுப்பார்! அப்போது தெரியும். அவளிடம் கேட்டதனால் ஒரு அறையோடு விட்டேன். இதுவே என்னிடம் கேட்டிருக்க இன்றிலிருந்து நீ ஊமையாகி இருப்பாய்..." என்றாள் குறையாத கோபத்துடன்.
"போடி கறுப்பி கிழிப்பாய்! நீ என் நாக்கை அறுக்கும் வரை நான் பார்த்துக்கொண்டா இருப்பேன்..." நக்கலாகக் கேட்டவனிடம் அதைவிட நக்கலாக, "இப்போது உன்னை அறைந்தேனே, நீ என்ன கிழித்தாய் எருமை?" என்றாள் பாவை.
மலையகத்திலிருந்து வவுனியாவுக்கு வந்த பஸ்ஸிலிருந்து இறங்கிய ரவிவர்மனின் காதுகளில் இந்த "கறுப்பி" மற்றும் "எருமை" என்கிற சொற்கள் விழுந்தது. அதைக் கேட்டவன் முகம் கல்லாக இறுகியது. இறுகிய முகத்துடன் இவர்களின் புறமாக முகத்தைத் திருப்பியவனின் கண்களில் முகம் முழுக்கக் கோபத்துடன் திட்டிக் கொண்டிருந்த ஓவியப்பாவை விழுந்தாள்.
காரணம் இன்றியே அவனுக்கு அவளைப் பிடிக்காமல் போனது. என்ன பிள்ளைகள் இவர்கள். இந்தச் சின்ன வயதிலேயே இப்படி வாயடிக்கிறாள். வளர்ந்தால் எவ்வளவு வாயடிப்பாள். இப்போதே ஆண்களை மதிக்கக் காணோம். பிறகு? ச்சே… ச்சே… பெண்களா இதுகள். என்று அவன் சிந்தனை, ஒரு சிறு பெண்ணைப் பற்றி இப்படி நினைக்கிறோமே என்கிற எண்ணமின்றி, அவனை மீறிச் சென்றது. ஆனாலும் அந்த மாணவர்கள் நின்ற இடத்துக்கு அருகிலேயே சென்று நின்றுகொண்டான்.
அவன் பிறந்து வளர்ந்தது எல்லாமே இலங்கையின் அழகு கொஞ்சும் மலையகத்தில். இதுதான் முதன் முதலாக வவுனியா வருகிறான். அவன் அன்னைக்கு மலையக வாசம், தனிமை என்று சலிப்புத் தட்டவே வவுனியாவுக்கு குடி வரலாமா என்கிற எண்ணம் தோன்றியது.
மலையகத்தில் படிக்க முடிந்தாலும் வேலை வாய்ப்பு என்பது மற்றைய நகரங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவே. அதனால் அங்குப் படித்தாலும் வேலை என்று வருகையில் பலர் ஊர் மாறிவிடுவர். அப்படி மாறிய சிலர் வவுனியாவில் இருப்பதில், ஊர் மாறலாம் என்கிற எண்ணம் வந்தவுடன் தாய்க்கும் மகனுக்கும் நினைவில் தோன்றிய இடம் வவுனியாவே. இதற்கு, அவன் தாயின் தோழி காஞ்சனாவின் தூண்டுதலும் அதிகம். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் வவுனியாவுக்கு வந்துவிடும்படி அழைத்துக்கொண்டே இருந்தார் அவர்.
வவுனியா அவர்களுக்குப் பொருந்துமா என்று பார்க்கவே, முதலில் தனியாக ரவிவர்மன் அங்கு வந்திருக்கிறான். அம்மாவின் நெருங்கிய தோழி காஞ்சனா குடும்பத்துடன் வவுனியாவில் வசிக்கிறார். அவரின் மகன் நந்தன் ரவிவர்மனின் நண்பனும் கூட.
மொத்தமாக இடம் மாறுவதற்கு முதலில், வீடு முதல் அடிப்படைத் தேவைகளை கவனிப்பதற்காக பஸ்ஸில் வந்து, வவுனியா பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, அங்கு நின்ற பள்ளி மாணவர்களின் இந்தப் பேச்சையே ரவிவர்மன் முதலில் கேட்டான். கேட்டவனுக்கோ கோபம் வந்தது. ஆனாலும் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு அமைதியாக நின்றான்.
பள்ளி முடிந்து பஸ்ஸில் செல்லும் பல பள்ளி மாணவர்கள் அங்குக் கூடுவதும் அவர்களுக்குள் எப்போதும் சிறு சிறு சலசலப்பு வருவதும் வழமை. ஆனால் இன்று அந்த மாணவர்களில் ஒருவனின் பேச்சு சற்று அதிக்கபடியாக மாறியதில் அவனை அறைந்துவிட்டாள் ஓவியப்பாவை. அதற்காக அவள் மரியாதை அற்ற பெண்குழந்தை அல்ல!
அவளுடன் நட்பாக, பாசமாகப் பழகுபவர்களுக்கு மிகவும் அருமையான சிறு பெண் அவள். பிழை என்று கண்டுவிட்டால் பயப்படாமல் தட்டியும் கேட்பாள். இன்றும் அதுவே நடந்தது. ஆனால் நடந்த விடயம் முழுதும் தெரியாத ரவிவர்மனுக்கு ஆண் பிள்ளைகளுடன் வாயடிக்கும் ஒரு பெண்ணாகவே அவள் தெரிந்தாள்.
பள்ளிப் பருவத்தில் இவை எல்லாம் சாதாரணம் என்பதை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு புத்தியற்றவன் அல்ல அவன். ஆனாலும் மனதின் சில நினைவுகள் அதனைச் சிந்திக்க விட மறுத்தது.
தன்னைப் பற்றி ஒருவர் தவறாகக் கணிப்பிடுவது தெரியாத அந்த அழகிய சிறுமலர், "என்னை முறைத்தது போதும், உங்கள் பஸ் வரும் இடத்துக்கு மரியாதையாகச் செல்லுங்கள்.." என்று அந்த மாணவர்களைப் பார்த்து அதட்டலாகவே சொன்னாள்.
அவளின் அறையிலும் அதட்டலிலும் கோபம் கொண்ட அந்த மாணவன் இவளை நோக்கி நகரவே, கையில் வட்டாரியை பிடித்துக்கொண்டாள் ஓவியப்பாவை. கிட்ட வந்தால் அவன் கையில் குத்திவிடும் எண்ணத்துடன். அப்போதுபார்த்து அந்த மாணவனின் பள்ளி ஆசிரியை ஒருவர் வர, மற்ற மாணவர்கள் அவனை "வாடா, மிஸ் வருகிறார்..." என்றபடி இழுத்துச்சென்றனர்.
"அடியே கறுப்பி உனக்கு நாளைக்கு இருக்கடி..." அந்த மாணவன் கோபத்தில் சொல்லவும், "போடா குரங்கு, நாளை விஷயத்தை நாளைக்குப் பார்ப்போம்.." என்றாள் ஓவியப்பாவையும்.
இதைக் கேட்ட ரவிவர்மனுக்குப் பொறுமை பறந்தது.
"என்ன பெண்பிள்ளை நீ? அறிவில்லை? அவனுடன் சரிக்குச் சமமாகச் சண்டை பிடிக்கிறாயே. கொஞ்சம் வாயடக்கத்தையும் கற்றுக்கொள்! நாளை அவன் உன்னை ஏதாவது செய்தால் என்ன செய்வாய்?" மெல்லிய குரலில் வார்த்தைகளைக் கடினமாகக் கோர்த்து அதட்டினான்.
திகைத்துப்போனாள் பாவை. சம்மந்தமே இல்லாமல் அருகில் நின்ற ஒருவர் தன்னைத் திட்டவும் அதிர்ந்தவள், "அவன் என்ன சொன்னான் என்று தெரியாமல் பேசாதீர்கள் அண்… அங்..." என்று திடமாக ஆரம்பித்தவளுக்கு, அவனை அண்ணா என்று கூப்பிடுவதா அல்லது அங்கிள் என்று கூப்பிடுவதா என்கிற சந்தேகம் வந்தது.
"அவன் என்ன சொன்னாலும் முதலில் நீ பெண்பிள்ளையாக அடக்க ஒடுக்கமாக இருக்கப் பழகு!" என்றவனின் பேச்சில், ஓவியப்பாவைக்கு கண்கள் கலங்கி அழுகை வந்துவிடும்போல் இருந்தது.
இவனைப் போன்ற வயதில் பெரியவர்கள் இதுவரை அவளைத் திட்டியது கிடையாது. ஏன் கடிந்துகொண்டது கூட இல்லை. சக மாணவ மாணவியருக்கு அவள் வாயாடியாக இருந்தாலும், பெரியவர்களுக்கு மரியாதை தெரிந்த அன்பான சிறு குழந்தையே.
இயல்பிலேயே மனத்திடம் உள்ளவள் என்பதால், அழுகையை அடக்கி, "நான் எப்படி இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்! என்னுடைய அம்மா என்னை நன்றாகத்தான் வளர்த்திருக்கிறார். நீங்கள் ஒன்றும் சொல்லத்தேவை இல்லை." என்றாள் அழுகுரலை திடமாகக் காட்டமுயன்றபடி.
"உன் அம்மாவின் வளர்ப்பின் திறத்தைத்தான் சற்று முன் பார்த்தேனே." என்றான் ஏளனமாக ரவிவர்மன்.
பாவைக்கு மனம் கொதித்தது. அவளுக்காகவே வாழும் அவளில் உயிரையே வைத்திருக்கும் அவளுடைய தாயை ஒருவர் குறையாகச் சொல்வதா?
வயதில் பெரியவன் என்பதால் கோபத்தை கட்டுப்படுத்தி, "அங்கிள்!" என்றாள் அழுத்தமான குரலில் அதட்டலாக.
அந்த அதட்டலான அங்கிள் என்கிற அழைப்பு, இத்தோடு நிறுத்து, என் அம்மாவைக் குறை சொல்லாதே என்கிற பல விடயங்களை அடக்கி வெளி வந்தது.
அவன் வேறு என்னவோ சொல்ல வரவும், இவர்களின் பஸ் வரவும் சரியாக இருந்தது. அதுவரை பயந்து நடுங்கிக்கொண்டு இருந்த கண்மணி, தங்கள் இருவரினதும் பள்ளி பாகைத் தானே சுமந்தபடி, " வாடி பாவை. பஸ் வந்துவிட்டது." என்று சொல்லி ஓவியப்பாவையை இழுத்துக்கொண்டு சென்றாள்.
அவளின் இழுவைக்கு இசைந்தபடி கண்மணியுடன் நடந்தாலும், பாவையின் கண்கள் ரவிவர்மனை முறைத்தது. ரவிவர்மனுக்கும் கோபம் வந்தது. ‘பார்வையை பார். வயதில் பெரியவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்றே தெரியாதவள்’ என்று மனதிலேயே புகைந்தான்.
நல்லதற்கு ஒன்று சொன்னால் கேட்கும் பழக்கம் இந்தப் பெண்களுக்கே இல்லை என்று புகைந்துகொண்டிருந்தவனின் அருகில், தனது காரைக் கொண்டுவந்து நிறுத்தினான் நந்தன்.
"வாடா ரவி. வருவதற்கு கொஞ்சம் பிந்திவிட்டதடா..." மன்னிப்புகுரலில் சொன்னவாறே இறங்கிய நந்தனை முறைத்த ரவிவர்மன், "எப்போதாவது நீ சொன்ன நேரத்திற்கு வந்திருக்கிறாயா? பிறகு எதற்குக் காரணம் சொல்கிறாய். காரை எடு!" என்றபடி உள்ளே ஏறினான்.
இவனின் இந்தச் சிடுசிடுப்பு பழகிய நந்தனும், "சிடு சிடுக்காவிட்டால் நீ ரவி இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, என் பழக்கத்தை மாற்றிக்கொண்டால் நான் நந்தன் இல்லை என்பதும்.." என்றவாறே காரை வீடு நோக்கிச் செலுத்தினான்.
பஸ்ஸில் சென்றுகொண்டிருந்த ஓவியப்பாவையின் மனது கலங்கி இருந்தது. அவளை அவன் சொன்னவை எல்லாம் மறந்துபோக, அவன் தன் தாயைக் குறையாகச் சொல்லிவிட்டானே என்று அந்தச் சின்ன இதயம் தவித்தது. அவளின் சகலதும் அவள் தாய். இன்றுவரை இறந்த தந்தையின் நினைவுகள் வராமல், அப்பா இல்லையே என்கிற குறை தெரியாமல் தன்னை வளர்ப்பவரைப் பற்றி ஒருவர் குறையாகச் சொல்லிவிட்டாரே என்று வருந்தினாள்.
பள்ளியால் வீட்டுக்கு வந்த மகளின் முகம் வாடி இருந்ததைப் பார்த்த கவிநயாவின் நெற்றி சுருங்கியது. எப்போதும் சிரிப்பும் நிமிர்வும் தவழும் முகம் அவள் மகளினது. சிறுவயதில், அழுதால் கூட அழகாய்த் தோன்றும் அவள் கண்ணின் மணியின் முகம் சோர்ந்து இருந்ததில் மனம் தவித்தபோதும் அதை வெளியே காட்டாது, "என்ன நடந்தது பாவை. முகம் சோர்ந்து தெரிகிறதே. உடம்பு சரியில்லையா உனக்கு?" என்று மென்மையாக இருந்தாலும் கம்பீரமாக வந்தது கவிநயாவின் குரல்.
தாயின் பரிவில் அழுகை வரவும், பள்ளி பாகை கீழே போட்டவள், தாயின் இடையை கட்டிப்பிடித்தபடி, "அம்மா, உங்களை ஒரு அங்கிள் பிழையாகச் சொல்லிவிட்டார். எனக்கு அவர் மீது நிறையக் கோபம். திட்டுவதற்குள் பஸ் வந்துவிட்டது. அவர் எப்படி என் அம்மாவைக் குற்றம் சாட்டலாம்." என்றவளின் அழுகை நிறைந்த ஆதங்கக் குரலில், கவிநயாவின் இதயம் ஒரு தடவை நின்று துடித்தது.
என்னைப் பற்றி இங்கு ஒருவருக்குதானே தெரியும். அவர் அப்படி எதுவும் பிழையாகச் சொல்லமாட்டாரே. பின்னே யார் என்னைப் பற்றித் தவறாகச் சொன்னது, எதைச் சொல்லி என் குழந்தையின் மனதை யார் வருத்தியது என்று மனதால் மருகியவள், அதைக் காட்டாது, "பாவை, இங்கே பார். முதலில் அழுகையை நிறுத்து, அம்மாக்கு அழுவது பிடிக்காது என்று உனக்குத் தெரியும் தானே! பிறகு என்ன அழுகை. எந்த விசயத்துக்கும் அழுகை தீர்வல்ல என்று உனக்குச் சொல்லியிருக்கிறேன் தானே. அழுவதை நிறுத்திவிட்டு முதலில் நடந்ததை சொல்லு!" என்று அதட்டினாள்.