அத்தியாயம்-10
"அம்மா......" வீட்டிற்குள் வரும்போதே தாயை அழைத்தபடி வந்தாள் ஓவியப்பாவை.
நினைவுலகில் தேங்கிவிட்ட கவிக்கு பாவை அழைத்தது கேட்கவில்லை.
"அம்மா! அம்மா..? எங்கே இருக்கிறீர்கள்? அம்மா...??" அந்த வீட்டின் சிறிய விறாந்தையில் தாயைக் காணாது, சமையல் அறைக்குள் பார்த்தவள் அங்கும் இல்லை என்றவுடன், "அம்மா....." என்றபடி படுக்கை அறைக்குள் எட்டி பார்த்தாள்.
தாய் கட்டிலில் படுத்திருப்பதைப் பார்த்ததும் பாவையின் முகத்தில் கலவரம். இருட்டும் மாலை வேளையில் தாயை இப்படி அவள் பார்த்தது இல்லை.
"என்னம்மா? உடம்புக்கு ஏதுமா?" என்று பதட்டத்துடன் கேட்டவளின் பூக்கரங்களோ தாயின் நெற்றியை பரிசோதித்தது.
மகளின் ஸ்பரிசத்தில் உணர்வுக்கு வந்த கவி, "என்னது?? என்ன?" என்று விழுந்தடித்துக்கொண்டு எழுந்தாள்.
"என்னது என்னம்மா...? என்ன நடந்தது? எதற்கு அழுகிறீர்கள்..?" இப்போது பாவையின் குரலிலும் கலக்கம். விட்டால் அழுதுவிடுவாள் போலிருந்தாள்.
"அழுகிறேனா...?" சிறு வியப்புடன் கன்னங்களைத் தொட்டுப் பார்த்த கவிக்கு, தன்னுடைய இயலாமை கண்ணீராக வெளிவந்ததை நினைத்து வெறுப்பாக இருந்தது.
"நான் எதற்காக அழவேண்டும்.... என் செல்லக்குட்டி பாவை இருக்கையில்...ம்?" என்று, தன் மனதை மறைத்து மகளிடம் செல்லம் கொஞ்சினாள் அந்தத் தாய்.
"அதைத் தான் நானும் கேட்கிறேன். எதற்காக அழுதீர்கள்?"
மகளின் புத்திசாலித்தனமும் பிடிவாதமும் அறிந்தவள், "இல்லைடா. நான் அழவில்லை. இன்று வெயிலில் அலைந்ததில் தலை வலிப்பது போல் இருந்ததா.. அதனால் படுத்துவிட்டேன். கண்ணும் எரிந்தது. அது கண்ணீராக வந்திருக்கிறது போலும்..." என்றவள் மகள் தொடர்ந்து எதுவோ கேட்க வரவும்,
"அதைவிடு! உடை எல்லாம் அழுக்காக தெரிகிறதே மண்ணில் உருண்டு பிரண்டீர்களா....ம்?" என்று சிறு அதட்டலுடன் கேட்டாள்.
"அதம்மா.. அது.. ஓடிப்பிடித்து விளையாடினோமா.. மணி என்னைப் பிடித்து இழுத்தாளா.. நான் மண்ணில் விழுந்துவிட்டேன். அதனால் இப்படி ஆகிவிட்டது..." குனிந்து தன் சட்டையைப் பார்த்தபடி, தயக்கத்தோடு சொன்னாள்.
"என் வளர்ந்த செல்லம் இன்னும் குழந்தையாகவே இருக்கிறாளே..” என்று கவி சொன்னதுதான் தாமதம்,
"அம்மா...! நான் ஒன்றும் குழந்தை இல்லை.... வளர்ந்து விட்டேனாக்கும்...." என்று ரோசப்பட்டாள் அவள் பெண்!
பாசத்தோடு மகளின் தலையை வருடி, "ஆமாம், என் மகள் வளர்ந்துவிட்டாள். எனக்கு வேறு என்ன வேண்டும்?” என்ற கவி, அதை யாருக்குச் சொன்னாள்? அவளுக்கேவா அல்லது மகளுக்கா?
“சரிம்மா. நீ போய்க் குளித்துவிட்டு வா. பார் ஒரே அழுக்காக இருக்கிறாய்...." என்று கவி தொடர்ந்து சொல்லவும், பாவை குளிப்பதற்குச் சென்றாள்.
மகளைத் திசை திருப்பி அனுப்பிய கவிக்கு பெருமூச்சொன்று வெளியேறியது.
வேதனையில் வெந்து, அதை வெளியே காட்டாது மறைப்பதில் மனதாலேயே நொந்து, ஒருவழியாக அனைத்தையும் ஒதுக்கி, நிஜத்தை உணர்ந்து மகளுக்காக என்று வாழ ஆரம்பித்து மகிழ்ச்சியாக என்று இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழ்ந்து வந்தவளின் நிறைவை, மறுபடியும் அவள் முன்னால் வந்து நின்று ஒரே நிமிடத்தில் குலைத்துவிட்டானே...
தாலி என்கிற பெயரில் ஒன்றைக் கட்டி, சுழற்றிய பந்தை அலட்சியமாகத் தூக்கி எறிவது போல், என் வாழ்வை நாசம் செய்து என்னை நாதியற்றவள் ஆக்கி நடுவீதியில் கைவிட்டானே.. அவன் வெறி இன்னுமே அடங்கவில்லையா?
நான் செய்த பாவம் என்ன? அறியா வயதில் துடுக்காகப் பேசியதா? அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா...? சிட்டுக்குருவியாய் சுற்றித் திரிந்தவளை சுட்டுப் பொசுக்கியவனை கடவுள் தண்டிக்கவே மாட்டாரா?
சோதனைகளையும் வேதனைகளையும் தங்குவதற்கு ஒரு அளவு வேண்டாமா? ஓட ஓட விரட்டுகிறானே! ஒதுங்க ஒதுங்கக் கலைக்கிறானே. என் வாழ்வில் வசந்தம் என்பதே கிடையாதா....?
கழிவிரக்கம் தன்னையே தாக்கியதில், நெஞ்சே வெடித்துவிடும்போல் வலித்தது கவிக்கு. கண்களில் கண்ணீர் வழிய வலித்த நெஞ்சைத் தானே தடவியவள், நினைக்கக் கூடாது! நடந்துமுடிந்தவைகளை இனி நினைக்கவே கூடாது! என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
மகள் குளித்து முடித்தற்கான சத்தம் கேட்கவே கண்களை அழுத்தித் துடைத்துக்கொண்டாள். ஒதுக்கிய மனதின் குப்பைகள் ஒதுக்கியதாகவே இருக்கட்டும் என்று முடிவெடுத்து, தானும் முகம் கழுவச் சென்றாள் கவி.
தோட்டத்தில் இருந்து வீட்டினுள் சென்ற ரவி, "தலை வலிக்கிறது அம்மா. நான் கொஞ்சம் ஓய்வாகப் படுக்கப்போகிறேன். நந்தனின் அறைக்கு போகவா ஆன்ட்டி..." என்று தாயிடம் ஆரம்பித்து காஞ்சனாவிடம் கேட்டான்.
"இதை எல்லாமா கேட்பாய்? போ… போய் நன்றாகத் தூங்கு..." என்று அதட்டினார் காஞ்சனா.
"இரவில் முழித்திருந்து வேலை பார்க்காதே என்றால் கேட்டுவிடாதே. இப்போது தலைவலிக்கிறது என்கிறாய்..." என்று மகனை கடிந்த சகுந்தலா,
"தலைவலி மாத்திரை எதுவும் தரவா ரவி...?" என்று பரிவுடன் கேட்டார்.
"இல்லைமா. கொஞ்சம் கண் மூடிச் சாய்ந்திருந்தாலே போதும்."
"தேநீர் கொஞ்சம் குடித்து பார்க்கிறீர்களா ரவி? சுகமாக இருக்கும்...." இவர்களின் பேச்சைக் கேட்டவாறே வந்த தாரிகா கேட்டாள்.
அவளைப் பார்த்து இதமாகப் புன்னகைத்தவன், "எதுவும் வேண்டாம் தாரிகா. நான் கொஞ்சம் படுத்திருந்துவிட்டு வருகிறேன்..." என்று சொல்லிவிட்டு, நந்தனின் அறைக்குள் புகுந்துகொண்ட ரவி கூண்டுப்புலியாக நடைபோட்டான்.
அவன் போவதையே பாத்திருந்த சகுந்தலா, "இன்றே கல்யாண உடைகளை எடுத்துவிட்டால் மிகுதி வேலைகள் இலகுவாக இருக்கும் என்று பார்த்தால், இவன் தலை வலி என்று சொல்கிறானே...." என்றார்.
"எதற்கு சலித்துக்கொள்கிறாய் சக்கு. அவன் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து வரட்டும். பிறகு போகலாம்..." என்று அவரைச் சமாதானப்படுத்தினார் காஞ்சனா.
"ம்.. சரிதான்..." என்றார் சகுந்தலா.
அறைக்குள் வந்த ரவிக்கு, மனதில் இருந்த புழுக்கம் தாங்கமுடியாது இருக்கவே, அணிந்திருந்த ஷர்ட்டின் கழுத்து பட்டன்களை கழட்டி ஷர்ட்டை பின்பக்கமாக இழுத்துவிட்டான். ஜன்னல் வழியே சில்லென்று வீசிய மாலை நேரக் காற்றுக் கூட அவனின் மனவெப்பத்தைப் போக்க முடியாமல் தோற்றுப்போனது!
இதுவரை வெளியே காட்டிய அமைதிவேஷம் கலைய அவனின் கண்கள் கோபத்தில் சிவந்தது. அந்தச் சிறுவயதில், புத்தி இல்லாமல் செய்த தவறை மனதிலிருந்து முற்றிலுமாக தூக்கிபோட முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறான் அவன். அவளானாள் ஊருக்கு ஒரு பொய்க்கதையை சொல்லிவிட்டு, குடும்பம் குழந்தை என்று வாழ்கிறாளே.... இவளெல்லாம் ஒரு பெண்? சை!
ஆனால் ஒன்று! இதுவரை அவன் மனதில் இருந்த ஒருவித குற்ற உணர்வு குறைந்திருப்பதை உணரமுடிந்தது. இனியாவது அம்மா சொல்வது போல் தாரிகாவை மணமுடித்து நன்றாக வாழவேண்டும். அதுவும் அந்தக் கறுப்பிக்கு முன்னால் குடும்பம் குழந்தை என்று வாழ்ந்து காட்டவேண்டும். காட்டுகிறேன்! வாழ்ந்து காட்டுகிறேன்டி..! நீயே பொறாமைப் படும் அளவுக்கு வாழ்ந்து காட்டுகிறேன் என்று கருவியது அவன் மனது!
என்னதான் திட்டம் போட்டாலும் தான் எதிலேயோ தோற்றுவிட்டதாக தவிக்கும் மனதின் குமுறலை அடக்கமுடியவில்லை அவனால். அதற்கான காரணமும் பிடிபட மறுத்தது.
'என்ன வாழ்க்கையடா இது....' என்று சலித்தவனின் அறைக்கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் நந்தன்.
வந்தவனின் பார்வையோ இவனையே கூர்ந்தது. அவன் கேட்க நினைப்பது புர்ந்தபோதும், "என்ன நந்தா...?” என்று கேட்டான் ரவி.
அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, "சாந்தியும் தாரிகாவும் வவுனியா டவுனுக்கு உடைகள் எடுக்க போகபோகிறார்களாம், என்னையும் உன்னையும் வர சொன்னார்கள். வருகிறாயா?" என்று கேட்டவனின் குரலில், நீ வரவேண்டும் என்கிற கண்டிப்பு இருந்தது.
புரிந்தபோதும், "ச்சு, நான் வரவி......" என்று ஆரம்பித்தவனுக்கு, தனக்காக நிச்சயிக்கப்பட்டவளை எத்தனை நாளைக்கு தவிர்க்கமுடியும் என்கிற கேள்வி எழுந்தது. அதோடு சற்று முன் வாழ்ந்துகாட்டவேண்டும் என்று எடுத்த முடிவும் உந்த, "வருகிறேன்டா. தயாராகச்சொல்லி தாரிகாவிடம் சொல்லு. நான் குளித்துவிட்டு வருகிறேன்..." என்றான்.
ஏதோ ஒருவித பிடிவாதம் கலந்திருந்தது அவன் குரலில்.
மலர்ந்த முகத்துடன், "நான் சொல்லிவிடுகிறேன்.நீ விரைவாக வா....." என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறினான் நந்தன்.
நந்தனும் சாந்தியும் கை கோர்த்துச் சிரித்துக் கதைத்தபடி முற்றத்தில் நிற்க, தாரிகா சோபாவில் அமர்ந்திருக்க, தயாராகி வெளியே வந்தான் ரவி.
அவனைக் கண்டதும் முகம் மலர ஓடிவந்து அவன் கையேடு தன் கையைக் கோர்த்துக்கொண்டாள் தாரிகா. கொஞ்சம் தடுமாறியபோதும், அவளிடம் மெல்லிய சிரிப்பொன்றைச் சிந்திவிட்டு தானும் அவள் கையை பிடித்துக்கொண்டான்.
அவர்கள் வருவதைக் கண்டதும், "போவோமா...." என்று நந்தன் கேட்க, "போகலாமே..." என்றாள் தாரிகா ராகமாக.
சாந்தியும் தாரிகாவும் நந்தனைப் பார்த்துக் கலகலத்துச் சிரிக்க,
"நக்கல்??" நக்கலாக நந்தன் கேட்க,
"இல்லை விக்கல்..!" என்றது சாந்தினி.
ரவி அமைதியாக வந்தாலும் இவர்களின் சீண்டல்களை ரசித்தபடியே வந்தான். தாரிகாவின் கலகலப்பு அவனுக்குப் பிடித்திருந்தது.
காரைப் பார்க் பண்ணிவிட்டு நால்வரும் மங்கையர் ஆடையகத்துக்குள் நுழைந்தனர்.
சாந்தியும் தாரிகாவும் ஆடைகளுக்குள் புதைந்துவிட, "இனிக் குண்டு விழுந்தால் கூட அசையமாட்டார்கள் ரவி...." என்ற நந்தன், "எடுத்து முடித்ததும் எங்களை கூப்பிடுங்கள்.வெளியே நிற்கிறோம்..." என்று பெண்களிடம் சொல்லிவிட்டு, ரவியோடு கடைக்கு வெளியே சென்றான்.
எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு அவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைத்துத்தான் ரவி வந்தான். ஆனால் அவனால் முடியவில்லை! இந்த இயலாமைக்கான காரணமும் புரியவில்லை!
செல்லரிப்பது போல் மனதின் ஓரத்தில் வலியொன்று முணுக் முணுக் என்று வலித்துக்கொண்டே இருந்தது.
பெண்களுடன் கலகலத்துக்கொண்டு வந்தாலும், ரவியை கவனித்துக்கொண்டுதான் இருந்தான் நந்தன்.
"உனக்கு என்னடா பிரச்சினை...?"
கடையின் வெளியே வந்ததும் எந்தவிதமான சுற்றி வளைப்பும் இன்றி நேரடியாகவே கேட்டான் நந்தன். எதிர்பார்த்த கேள்விதான். ஆனாலும் பதில் சொல்ல முடியவில்லை அவனால்..
நந்தனின் முகத்தைத் திரும்பிப் பார்த்தவன், எதுவும் பேசாமல் மறுபடியும் வீதியில் பார்வையைப் பதித்தான்.
"வாயைத் திறந்து சொல்லு ரவி! உனக்கு என்ன பிரச்சினை? இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லையா...? அப்படியும் தெரியவில்லையே...." என்றான் நந்தன்.
தானும் தாரிகாவும் கைகளைக் கோர்த்தபடி வந்ததைச் சொல்கிறான் என்று புரிந்தது. ஆனாலும் பேசாமலே நின்றான் ரவி.
"உனக்கு வேறு ஏதோ பிரச்சினை என்று நினைக்கிறேன்... வசந்தனை உனக்கு முதலே தெரியுமா...? அல்லது கவியைத் தெரியுமா...?" விடாமல் கேட்டான் நந்தன்.
பிரச்சினையின் ஆரம்பப் புள்ளியைத் தொட்டுவிட்ட நண்பனைத் திரும்பிப் பார்த்தவன் மெல்லிய சிரிப்பொன்றை மெச்சுதலோடு சிந்தினான்.
"பல்லைக் காட்டாமல் பதிலைச் சொல்லு....!" கடுப்புடன் நந்தன் கேட்கவும்,
"நான் எங்கேடா பல்லைக் காட்டினேன்? பல்லுத் தெரியாமல் தானே சிரித்தேன்..." என்றான் அகன்ற சிரிப்புடன் ரவி.
"இந்த விளக்கம் இப்போது எனக்கு ரொம்ப முக்கியம்!! பேச்சை மாற்றாமல் பதிலைச் சொல்லு ரவி..." என்றவனின் பொறுமை பறந்துகொண்டிருந்தது.
"ப்ச், எதை என்று சொல்லடா...." என்று ரவி ஆரம்பிக்கவும் நந்தனின் கைபேசி சத்தம் போடவும் சரியாக இருந்தது.
ரவியை முறைத்தபடியே அழைப்பை எடுத்து, "சொல்லுடா..." என்றான் நந்தன்.
"நந்தா, நீ செக்குகளில் கையெழுத்துப் போடவில்லை. ஆனால் இன்று வங்கியில் செக்குகள் போடவேண்டும். இன்று ஆபீசுக்கு வருவாயா...?" என்றான் அந்தப் பக்கத்திலிருந்து வசந்தராஜ்.
"அம்மா......" வீட்டிற்குள் வரும்போதே தாயை அழைத்தபடி வந்தாள் ஓவியப்பாவை.
நினைவுலகில் தேங்கிவிட்ட கவிக்கு பாவை அழைத்தது கேட்கவில்லை.
"அம்மா! அம்மா..? எங்கே இருக்கிறீர்கள்? அம்மா...??" அந்த வீட்டின் சிறிய விறாந்தையில் தாயைக் காணாது, சமையல் அறைக்குள் பார்த்தவள் அங்கும் இல்லை என்றவுடன், "அம்மா....." என்றபடி படுக்கை அறைக்குள் எட்டி பார்த்தாள்.
தாய் கட்டிலில் படுத்திருப்பதைப் பார்த்ததும் பாவையின் முகத்தில் கலவரம். இருட்டும் மாலை வேளையில் தாயை இப்படி அவள் பார்த்தது இல்லை.
"என்னம்மா? உடம்புக்கு ஏதுமா?" என்று பதட்டத்துடன் கேட்டவளின் பூக்கரங்களோ தாயின் நெற்றியை பரிசோதித்தது.
மகளின் ஸ்பரிசத்தில் உணர்வுக்கு வந்த கவி, "என்னது?? என்ன?" என்று விழுந்தடித்துக்கொண்டு எழுந்தாள்.
"என்னது என்னம்மா...? என்ன நடந்தது? எதற்கு அழுகிறீர்கள்..?" இப்போது பாவையின் குரலிலும் கலக்கம். விட்டால் அழுதுவிடுவாள் போலிருந்தாள்.
"அழுகிறேனா...?" சிறு வியப்புடன் கன்னங்களைத் தொட்டுப் பார்த்த கவிக்கு, தன்னுடைய இயலாமை கண்ணீராக வெளிவந்ததை நினைத்து வெறுப்பாக இருந்தது.
"நான் எதற்காக அழவேண்டும்.... என் செல்லக்குட்டி பாவை இருக்கையில்...ம்?" என்று, தன் மனதை மறைத்து மகளிடம் செல்லம் கொஞ்சினாள் அந்தத் தாய்.
"அதைத் தான் நானும் கேட்கிறேன். எதற்காக அழுதீர்கள்?"
மகளின் புத்திசாலித்தனமும் பிடிவாதமும் அறிந்தவள், "இல்லைடா. நான் அழவில்லை. இன்று வெயிலில் அலைந்ததில் தலை வலிப்பது போல் இருந்ததா.. அதனால் படுத்துவிட்டேன். கண்ணும் எரிந்தது. அது கண்ணீராக வந்திருக்கிறது போலும்..." என்றவள் மகள் தொடர்ந்து எதுவோ கேட்க வரவும்,
"அதைவிடு! உடை எல்லாம் அழுக்காக தெரிகிறதே மண்ணில் உருண்டு பிரண்டீர்களா....ம்?" என்று சிறு அதட்டலுடன் கேட்டாள்.
"அதம்மா.. அது.. ஓடிப்பிடித்து விளையாடினோமா.. மணி என்னைப் பிடித்து இழுத்தாளா.. நான் மண்ணில் விழுந்துவிட்டேன். அதனால் இப்படி ஆகிவிட்டது..." குனிந்து தன் சட்டையைப் பார்த்தபடி, தயக்கத்தோடு சொன்னாள்.
"என் வளர்ந்த செல்லம் இன்னும் குழந்தையாகவே இருக்கிறாளே..” என்று கவி சொன்னதுதான் தாமதம்,
"அம்மா...! நான் ஒன்றும் குழந்தை இல்லை.... வளர்ந்து விட்டேனாக்கும்...." என்று ரோசப்பட்டாள் அவள் பெண்!
பாசத்தோடு மகளின் தலையை வருடி, "ஆமாம், என் மகள் வளர்ந்துவிட்டாள். எனக்கு வேறு என்ன வேண்டும்?” என்ற கவி, அதை யாருக்குச் சொன்னாள்? அவளுக்கேவா அல்லது மகளுக்கா?
“சரிம்மா. நீ போய்க் குளித்துவிட்டு வா. பார் ஒரே அழுக்காக இருக்கிறாய்...." என்று கவி தொடர்ந்து சொல்லவும், பாவை குளிப்பதற்குச் சென்றாள்.
மகளைத் திசை திருப்பி அனுப்பிய கவிக்கு பெருமூச்சொன்று வெளியேறியது.
வேதனையில் வெந்து, அதை வெளியே காட்டாது மறைப்பதில் மனதாலேயே நொந்து, ஒருவழியாக அனைத்தையும் ஒதுக்கி, நிஜத்தை உணர்ந்து மகளுக்காக என்று வாழ ஆரம்பித்து மகிழ்ச்சியாக என்று இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழ்ந்து வந்தவளின் நிறைவை, மறுபடியும் அவள் முன்னால் வந்து நின்று ஒரே நிமிடத்தில் குலைத்துவிட்டானே...
தாலி என்கிற பெயரில் ஒன்றைக் கட்டி, சுழற்றிய பந்தை அலட்சியமாகத் தூக்கி எறிவது போல், என் வாழ்வை நாசம் செய்து என்னை நாதியற்றவள் ஆக்கி நடுவீதியில் கைவிட்டானே.. அவன் வெறி இன்னுமே அடங்கவில்லையா?
நான் செய்த பாவம் என்ன? அறியா வயதில் துடுக்காகப் பேசியதா? அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா...? சிட்டுக்குருவியாய் சுற்றித் திரிந்தவளை சுட்டுப் பொசுக்கியவனை கடவுள் தண்டிக்கவே மாட்டாரா?
சோதனைகளையும் வேதனைகளையும் தங்குவதற்கு ஒரு அளவு வேண்டாமா? ஓட ஓட விரட்டுகிறானே! ஒதுங்க ஒதுங்கக் கலைக்கிறானே. என் வாழ்வில் வசந்தம் என்பதே கிடையாதா....?
கழிவிரக்கம் தன்னையே தாக்கியதில், நெஞ்சே வெடித்துவிடும்போல் வலித்தது கவிக்கு. கண்களில் கண்ணீர் வழிய வலித்த நெஞ்சைத் தானே தடவியவள், நினைக்கக் கூடாது! நடந்துமுடிந்தவைகளை இனி நினைக்கவே கூடாது! என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
மகள் குளித்து முடித்தற்கான சத்தம் கேட்கவே கண்களை அழுத்தித் துடைத்துக்கொண்டாள். ஒதுக்கிய மனதின் குப்பைகள் ஒதுக்கியதாகவே இருக்கட்டும் என்று முடிவெடுத்து, தானும் முகம் கழுவச் சென்றாள் கவி.
தோட்டத்தில் இருந்து வீட்டினுள் சென்ற ரவி, "தலை வலிக்கிறது அம்மா. நான் கொஞ்சம் ஓய்வாகப் படுக்கப்போகிறேன். நந்தனின் அறைக்கு போகவா ஆன்ட்டி..." என்று தாயிடம் ஆரம்பித்து காஞ்சனாவிடம் கேட்டான்.
"இதை எல்லாமா கேட்பாய்? போ… போய் நன்றாகத் தூங்கு..." என்று அதட்டினார் காஞ்சனா.
"இரவில் முழித்திருந்து வேலை பார்க்காதே என்றால் கேட்டுவிடாதே. இப்போது தலைவலிக்கிறது என்கிறாய்..." என்று மகனை கடிந்த சகுந்தலா,
"தலைவலி மாத்திரை எதுவும் தரவா ரவி...?" என்று பரிவுடன் கேட்டார்.
"இல்லைமா. கொஞ்சம் கண் மூடிச் சாய்ந்திருந்தாலே போதும்."
"தேநீர் கொஞ்சம் குடித்து பார்க்கிறீர்களா ரவி? சுகமாக இருக்கும்...." இவர்களின் பேச்சைக் கேட்டவாறே வந்த தாரிகா கேட்டாள்.
அவளைப் பார்த்து இதமாகப் புன்னகைத்தவன், "எதுவும் வேண்டாம் தாரிகா. நான் கொஞ்சம் படுத்திருந்துவிட்டு வருகிறேன்..." என்று சொல்லிவிட்டு, நந்தனின் அறைக்குள் புகுந்துகொண்ட ரவி கூண்டுப்புலியாக நடைபோட்டான்.
அவன் போவதையே பாத்திருந்த சகுந்தலா, "இன்றே கல்யாண உடைகளை எடுத்துவிட்டால் மிகுதி வேலைகள் இலகுவாக இருக்கும் என்று பார்த்தால், இவன் தலை வலி என்று சொல்கிறானே...." என்றார்.
"எதற்கு சலித்துக்கொள்கிறாய் சக்கு. அவன் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து வரட்டும். பிறகு போகலாம்..." என்று அவரைச் சமாதானப்படுத்தினார் காஞ்சனா.
"ம்.. சரிதான்..." என்றார் சகுந்தலா.
அறைக்குள் வந்த ரவிக்கு, மனதில் இருந்த புழுக்கம் தாங்கமுடியாது இருக்கவே, அணிந்திருந்த ஷர்ட்டின் கழுத்து பட்டன்களை கழட்டி ஷர்ட்டை பின்பக்கமாக இழுத்துவிட்டான். ஜன்னல் வழியே சில்லென்று வீசிய மாலை நேரக் காற்றுக் கூட அவனின் மனவெப்பத்தைப் போக்க முடியாமல் தோற்றுப்போனது!
இதுவரை வெளியே காட்டிய அமைதிவேஷம் கலைய அவனின் கண்கள் கோபத்தில் சிவந்தது. அந்தச் சிறுவயதில், புத்தி இல்லாமல் செய்த தவறை மனதிலிருந்து முற்றிலுமாக தூக்கிபோட முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறான் அவன். அவளானாள் ஊருக்கு ஒரு பொய்க்கதையை சொல்லிவிட்டு, குடும்பம் குழந்தை என்று வாழ்கிறாளே.... இவளெல்லாம் ஒரு பெண்? சை!
ஆனால் ஒன்று! இதுவரை அவன் மனதில் இருந்த ஒருவித குற்ற உணர்வு குறைந்திருப்பதை உணரமுடிந்தது. இனியாவது அம்மா சொல்வது போல் தாரிகாவை மணமுடித்து நன்றாக வாழவேண்டும். அதுவும் அந்தக் கறுப்பிக்கு முன்னால் குடும்பம் குழந்தை என்று வாழ்ந்து காட்டவேண்டும். காட்டுகிறேன்! வாழ்ந்து காட்டுகிறேன்டி..! நீயே பொறாமைப் படும் அளவுக்கு வாழ்ந்து காட்டுகிறேன் என்று கருவியது அவன் மனது!
என்னதான் திட்டம் போட்டாலும் தான் எதிலேயோ தோற்றுவிட்டதாக தவிக்கும் மனதின் குமுறலை அடக்கமுடியவில்லை அவனால். அதற்கான காரணமும் பிடிபட மறுத்தது.
'என்ன வாழ்க்கையடா இது....' என்று சலித்தவனின் அறைக்கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் நந்தன்.
வந்தவனின் பார்வையோ இவனையே கூர்ந்தது. அவன் கேட்க நினைப்பது புர்ந்தபோதும், "என்ன நந்தா...?” என்று கேட்டான் ரவி.
அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, "சாந்தியும் தாரிகாவும் வவுனியா டவுனுக்கு உடைகள் எடுக்க போகபோகிறார்களாம், என்னையும் உன்னையும் வர சொன்னார்கள். வருகிறாயா?" என்று கேட்டவனின் குரலில், நீ வரவேண்டும் என்கிற கண்டிப்பு இருந்தது.
புரிந்தபோதும், "ச்சு, நான் வரவி......" என்று ஆரம்பித்தவனுக்கு, தனக்காக நிச்சயிக்கப்பட்டவளை எத்தனை நாளைக்கு தவிர்க்கமுடியும் என்கிற கேள்வி எழுந்தது. அதோடு சற்று முன் வாழ்ந்துகாட்டவேண்டும் என்று எடுத்த முடிவும் உந்த, "வருகிறேன்டா. தயாராகச்சொல்லி தாரிகாவிடம் சொல்லு. நான் குளித்துவிட்டு வருகிறேன்..." என்றான்.
ஏதோ ஒருவித பிடிவாதம் கலந்திருந்தது அவன் குரலில்.
மலர்ந்த முகத்துடன், "நான் சொல்லிவிடுகிறேன்.நீ விரைவாக வா....." என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறினான் நந்தன்.
நந்தனும் சாந்தியும் கை கோர்த்துச் சிரித்துக் கதைத்தபடி முற்றத்தில் நிற்க, தாரிகா சோபாவில் அமர்ந்திருக்க, தயாராகி வெளியே வந்தான் ரவி.
அவனைக் கண்டதும் முகம் மலர ஓடிவந்து அவன் கையேடு தன் கையைக் கோர்த்துக்கொண்டாள் தாரிகா. கொஞ்சம் தடுமாறியபோதும், அவளிடம் மெல்லிய சிரிப்பொன்றைச் சிந்திவிட்டு தானும் அவள் கையை பிடித்துக்கொண்டான்.
அவர்கள் வருவதைக் கண்டதும், "போவோமா...." என்று நந்தன் கேட்க, "போகலாமே..." என்றாள் தாரிகா ராகமாக.
சாந்தியும் தாரிகாவும் நந்தனைப் பார்த்துக் கலகலத்துச் சிரிக்க,
"நக்கல்??" நக்கலாக நந்தன் கேட்க,
"இல்லை விக்கல்..!" என்றது சாந்தினி.
ரவி அமைதியாக வந்தாலும் இவர்களின் சீண்டல்களை ரசித்தபடியே வந்தான். தாரிகாவின் கலகலப்பு அவனுக்குப் பிடித்திருந்தது.
காரைப் பார்க் பண்ணிவிட்டு நால்வரும் மங்கையர் ஆடையகத்துக்குள் நுழைந்தனர்.
சாந்தியும் தாரிகாவும் ஆடைகளுக்குள் புதைந்துவிட, "இனிக் குண்டு விழுந்தால் கூட அசையமாட்டார்கள் ரவி...." என்ற நந்தன், "எடுத்து முடித்ததும் எங்களை கூப்பிடுங்கள்.வெளியே நிற்கிறோம்..." என்று பெண்களிடம் சொல்லிவிட்டு, ரவியோடு கடைக்கு வெளியே சென்றான்.
எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு அவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைத்துத்தான் ரவி வந்தான். ஆனால் அவனால் முடியவில்லை! இந்த இயலாமைக்கான காரணமும் புரியவில்லை!
செல்லரிப்பது போல் மனதின் ஓரத்தில் வலியொன்று முணுக் முணுக் என்று வலித்துக்கொண்டே இருந்தது.
பெண்களுடன் கலகலத்துக்கொண்டு வந்தாலும், ரவியை கவனித்துக்கொண்டுதான் இருந்தான் நந்தன்.
"உனக்கு என்னடா பிரச்சினை...?"
கடையின் வெளியே வந்ததும் எந்தவிதமான சுற்றி வளைப்பும் இன்றி நேரடியாகவே கேட்டான் நந்தன். எதிர்பார்த்த கேள்விதான். ஆனாலும் பதில் சொல்ல முடியவில்லை அவனால்..
நந்தனின் முகத்தைத் திரும்பிப் பார்த்தவன், எதுவும் பேசாமல் மறுபடியும் வீதியில் பார்வையைப் பதித்தான்.
"வாயைத் திறந்து சொல்லு ரவி! உனக்கு என்ன பிரச்சினை? இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லையா...? அப்படியும் தெரியவில்லையே...." என்றான் நந்தன்.
தானும் தாரிகாவும் கைகளைக் கோர்த்தபடி வந்ததைச் சொல்கிறான் என்று புரிந்தது. ஆனாலும் பேசாமலே நின்றான் ரவி.
"உனக்கு வேறு ஏதோ பிரச்சினை என்று நினைக்கிறேன்... வசந்தனை உனக்கு முதலே தெரியுமா...? அல்லது கவியைத் தெரியுமா...?" விடாமல் கேட்டான் நந்தன்.
பிரச்சினையின் ஆரம்பப் புள்ளியைத் தொட்டுவிட்ட நண்பனைத் திரும்பிப் பார்த்தவன் மெல்லிய சிரிப்பொன்றை மெச்சுதலோடு சிந்தினான்.
"பல்லைக் காட்டாமல் பதிலைச் சொல்லு....!" கடுப்புடன் நந்தன் கேட்கவும்,
"நான் எங்கேடா பல்லைக் காட்டினேன்? பல்லுத் தெரியாமல் தானே சிரித்தேன்..." என்றான் அகன்ற சிரிப்புடன் ரவி.
"இந்த விளக்கம் இப்போது எனக்கு ரொம்ப முக்கியம்!! பேச்சை மாற்றாமல் பதிலைச் சொல்லு ரவி..." என்றவனின் பொறுமை பறந்துகொண்டிருந்தது.
"ப்ச், எதை என்று சொல்லடா...." என்று ரவி ஆரம்பிக்கவும் நந்தனின் கைபேசி சத்தம் போடவும் சரியாக இருந்தது.
ரவியை முறைத்தபடியே அழைப்பை எடுத்து, "சொல்லுடா..." என்றான் நந்தன்.
"நந்தா, நீ செக்குகளில் கையெழுத்துப் போடவில்லை. ஆனால் இன்று வங்கியில் செக்குகள் போடவேண்டும். இன்று ஆபீசுக்கு வருவாயா...?" என்றான் அந்தப் பக்கத்திலிருந்து வசந்தராஜ்.