அத்தியாயம்-11
கண்ணனும் தேவனும் செய்த கேலியில் காயப்பட்டிருந்த ரவியின் மனது, ஆறுதல் தேடி அலைந்துகொண்டிருந்தது. ராஜ் அருகில் இருந்திருக்க இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்திராமல் போயிருக்கலாம்.
ராஜுக்கும் ரவிக்கும் ஒரே வயது என்றாலும், பொறுப்புணர்ச்சி ரவியை விட ராஜுக்கு சற்று அதிகமே! வறுமை அவனுக்கு அதை உணர்த்தி இருந்தது.
வாழ்வின் நிதர்சனங்களை அறிந்த ராஜின் வழிநடத்தல் தேவையான நேரத்தில் கிடைக்காததிலும், எபோதும் வம்பிழுக்கும் கவி திடீரென்று அமைதி காத்ததிலும் காயப்பட்டு இருந்த ரவியின் மனது பெருமளவில் தடுமாறியது.
அந்தத் தடுமாற்றம் அவனின் சுயத்தை இழக்க வைத்து கவியின் வாழ்வில் விதியாக மாறி விளையாடிவிட்டது.
கோவில் பிரகாரத்தில் அமர்ந்து முகத்தைக் கைகளால் மூடிக் கதறி அழுதுகொண்டு இருப்பவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது ரவிக்கு. இதுவரை அவள் அழுது அவன் பார்த்ததில்லை! எவ்வளவுதான் கிண்டல் செய்தாலும் கோபம் கொண்டு முறைக்கும் முகம், இன்று அழுகையில் கசங்குவதைத் தாங்கமுடியாமல், "அழாதே கவி...!" என்றான் மெல்ல.
"இதைக் கழட்டிவிடுகிறாயா...?" கன்னத்தில் வழிந்த கண்ணீரோடு, நிமிர்ந்துபார்த்துக் கேட்டவளின் கண்களில் இறைஞ்சல் இருந்தது.
"நீ முதலில் அழுவதை நிறுத்து..!"
அவன் அழுத்திச் சொல்லவும், "கழட்ட மாட்டாயா.....?" பரிதாபமாகக் கேட்டாள் கவி.
ரவிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று அவனுமே நினைத்ததில்லையே. ஆனால் நடந்துவிட்டது! இனி என்ன செய்வது என்றும் புரியவில்லை.
கோவிலைச் சுற்றிப் பார்வையை வேகமாக சுழற்றியவனுக்கு, ஐயரும் ஆட்டோகாரனும் எப்போது வேண்டுமானாலும் வந்துவிடலாம் என்று தோன்றியது. அதற்கிடையில் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தாலும் கட்டிய தாலியைக் கழட்டும் எண்ணம் சிறிதும் இல்லை அவனுக்கு!
"முதலில் அழுவதை நிறுத்திவிட்டு எழுந்திரு கவி...! யாராவது வந்தால் என்ன நினைப்பார்கள்...."
அப்போதுதான் தானிருக்கும் சூழலை உணர்ந்து பதறி எழுந்தவளின் கைகள் தானாகத் தாலியைத் தாவணிக்குள் விட்டு மறைத்துக்கொண்டது. அவளின் கைகள் செய்த செயலைத் தன் கண்களால் படம் எடுத்தவனின் உடலில், ஒருவித உணர்வுகளின் தாக்கம். தாலி மறைந்துகொண்ட இடத்தை சிலநொடிகள் தீண்டிசென்றது அவன் விழிகள்!
இது எதையும் உணராத கவி, "இருட்டுகிறது வர்மா. நான் வீட்டுக்குப் போகவேண்டும். இதைக் கழட்டித் தந்துவிட்டு நான் போகவா......" நயமாகக் கேட்டவளின் விழிகளும் அச்சத்துடன் அந்த கோவிலையே வலம் வந்தது. 'நல்ல காலம் ஐயரைக் காணவில்லை' என்றும் அந்த இளம் மனது எண்ணிக்கொண்டது.
தாலியை கழட்டுவதிலேயே அவள் குறியாக நிற்கவும், தடுமாறிய அவன் மனது மீண்டும் கோபம் கொண்டது!
"என்னடி? வாய் ஓயாமல் கழட்டு கழட்டு என்கிறாய். இதைக் கழட்டுவதற்கா உன் கழுத்தில் கட்டினேன்.." என்று அவன் சிடுசிடுக்கவும், மறுபடியும் பயத்தில் நடுங்கியது அவள் மேனி.
இதுவரை அவள் அறியாத ரவிவர்மனை அல்லவா இப்போது பார்க்கிறாள். கல்லால் அடித்து மண்டையை உடைத்தபோது கூட சிரித்தபடி நின்றவன் இன்று இப்படி கோபத்தோடு நிற்கவும் மீண்டும் கண்களில் கண்ணீர் திரண்டது அவளுக்கு!
தாலி ஒன்றைக் கட்டிவிட்டாலே, ஒருவித ஆதிக்கத்தை மனைவி மேல் செலுத்துவது ஆண்களின் இயல்பு! ஆனால் அதைப் புரிந்துகொள்ளும் வயது கவிக்கு இல்லாமல் போனதுதான் பரிதாபம்!
"இல்லாவிட்டால் நான் வீட்டுக்குப் போகமுடியாது வர்மா. அம்மா அடித்தே கொன்றுவிடுவார்கள். எனக்குப் பயமாக இருக்கிறது!" கோபம், அதட்டல், அழுகை எதுவும் அவனிடம் எடுபடாமல் போனதில் இப்போது கெஞ்சியது அவள் குரல்.
"வளவளகாமல் கொஞ்சம் பேசாமல் இரடி...!" அவளிடம் எரிந்து விழுந்தவனுக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை.
யாரும் வந்துவிடுவார்களோ என்கிற பதட்டம், இனி என்ன செய்வது என்கிற தடுமாற்றம். இந்த அவதி எல்லாம் அவனுக்கு பழக்கமில்லாத விடயங்கள். எனவே சிந்திக்காது,
"நீ வீட்டுக்கு போ. உன் அம்மா அடிக்கமாட்டார்கள். நான் ராஜிடம் சொல்லிவிடுகிறேன்..." என்று, என்ன செய்வது என்று புரியாமலேயே ஒரு பதிலைச் சொன்னான்.
"வீட்டுக்கா..? ம்கூம்....! நான் போகமாட்டேன்! இப்படியே நான் போகமாட்டேன்... எனக்கு இந்தத் தாலி வேண்டாம்....நீயே வைத்துக்கொள்!" என்றபடி அவள் மீண்டும் தாலியைப் பற்றபோக,
அவளின் பின் பிடரியில் கைவைத்துத் தன்னை நோக்கி இழுத்து, "ஏய்!!, அதை கழட்டினால் உன்னை கொன்றுவிடுவேன் என்று சொன்னேனா இல்லையா...!?" என்று உறுமினான் ரவி.
ஏற்கனவே பயத்தில் நடுங்கியவளின் மேனி, எதிர்பாராமல் அவன் இழுத்ததில் அவனின் மார்பிலேயே வந்து மோதியது. அவன் நெஞ்சில் வந்து விழுந்தவள் பயத்தில் அவன் கைகளையே இறுகப்பற்றி, உதடுகள் துடிக்க, மூக்கு விடைக்க, அகன்ற கண்களில் கண்ணீரையும் அச்சத்தையும் நிரப்பி அவனை அண்ணார்ந்து பார்த்தாள்.
அவளைக் குனிந்து பார்த்தவனுக்கு, அவள் மனதின் போராட்டம் அந்த குழந்தை முகத்தில் தெரிந்தது போலும், முகம் கனிய கைகள் இரண்டாலும் அவளை சுற்றிவளைத்தான் ஆறுதலாக.
ஒரு கையால் அவள் தலையைத் தன் மார்போடு அழுத்திக்கொண்டு, "பயப்படாதே...! நான் இருக்கிறேன்...!" என்றான் இதமாக தன்னையும் மீறி!
அந்த நொடியில் அந்த இதம் அவளுக்கும் தேவை பட்டது போலும், "பயமாக இருக்கிறது வர்மா....." கேவலுடன் சொன்னவள் அவன் நெஞ்சிலேயே தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.
"ச்சு, அழாதடி...! அதுதான் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேனில்லையா....!" என்றான் மெல்லிய அதட்டலாக.
"ம்...ம்..." கேவல் குறைந்தபோதும் கண்ணீர் வழிந்தது கண்களில்.
இனி என்ன செய்வது என்கிற யோசனை இருவருக்குமே வரவில்லை. அதற்கான அனுபவம் இல்லாத வயதல்லவா! இப்போது என்ன செய்வது என்று மட்டுமே சிந்தித்தனர்.
பொது இடத்தில் அதுவும் கோவிலில் நிற்கிறோம் என்பதை மறந்து அணைத்தபடி நின்றவர்களுக்கு, ஒருவரின் அருகாமை மற்றவருக்கு மிகவுமே தேவைப்பட்டது அந்த நேரத்தில்!
அதுவும் கவிக்கு, அம்மாவின் அடியில் இருந்து தன்னைக் காக்கப்போகிறவன் அவனே என்று நம்பியதில், அவனை இறுகக் கட்டிக்கொடு கண்ணை முடி அவனில் சாய்ந்திருந்தாள்.
தூரத்தில் ஐயர் வருவதைக் கண்ட ரவி, "கவி, எழுந்திரு! ஐயா வருகிறார்." எனவும்,
"ஐயோ! அவர் பாத்தால் அவர் மூலம் அம்மாவுக்கு எப்படியும் தெரிந்துவிடும்." என்றவளின் உதடுகள் மறுபடியும் அழுகையில் வளைந்தது.
"பேசாமல் இருடி லூசு..!" என்று சினந்தவன், "வா வெளியே போகலாம். இல்லையில்லை.. நீ வெளியே போ. நான் வருகிறேன்..." என்றான் அவசரமாக.
"வருவாய் தானே வர்மா...." பயத்தில் நடுங்கியவளை முறைத்தவன், "வராமல் எங்கே போகபோகிறேன். போ வருகிறேன்...!" என்றான் மீண்டும் அதட்டலாக.
ஐயர் நெருங்குவதைக் கண்டவள் வேகமாக வெளியே செல்லவும், கஷ்டப்பட்டு சாதாரணமாகப் புன்னகைத்து, "வருகிறேன் ஐயா...." என்று அவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.
"தம்பி! பூசைத் தட்டை விட்டுவிட்டுப் போகிறாயே...." என்று அவர் சொல்லவும், அசட்டுப் புன்னகை ஒன்றைச் சிந்தி, "மறந்துவிட்டேன் ஐயா.” என்றபடி தட்டை எடுத்தான்.
"நான் வரும்வரை இருந்ததுக்கு மிகவும் நன்றி தம்பி! கவனமாகப் போய்வா.... அம்மாவிடம் நான் கேட்டதாகச் சொல்லிவிடு...!" என்றுவிட்டுத் தன் வேலையைப் பாக்கப்போனார் அவர்.
வெளியே வந்தவனைக் கண்டவுடன், அவன் அருகில் ஓடிச்சென்று அவன் கையைப் பிடித்துக்கொண்டாள் கவி.
அவள் கையை உதறியவன், "லூசு, யாராவது பார்த்துவிட்டால் பிரச்சினை ஆகிவிடும். தள்ளி நில்லு!" என்று சிடுசிடுத்தான்.
"ஆமாமில்லை...." என்றவள் அவன் பின்னுக்கு மறைந்து நின்றுகொண்டாள். அந்த நேரத்தல் அவன் முதுகுப்பகுதியே அவளுக்கு மறைவிடமாகத் தோன்றியது போலும்....
இப்போது தாய்க்கு என்ன சொல்வது, என்ன செய்வது என்று தெரியாமல் நின்றவன், தாயைக் கைபேசியில் அழைத்தான். "அம்மா, இங்கே என் நண்பன் ஒருவனின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை... அதனால் அவனுடன் மருத்துவமனைக்குப் போகிறேன்..." என்று வாயில் வந்த பொய்யை அப்படியே சொன்னான்.
"ரவி...?!? ரவி கொஞ்சம் மெதுவாகச் சொல்லு. எதற்குப் படபடக்கிறாய்? யாருக்கு என்ன?"
"அது... அம்மா... அது, என் நண்பனின் தாய்க்கு உடம்பு சரியில்லை... அதனால் அவனுடன் மருத்துவமனைக்குப் போகிறேன்..." சொன்னதையே மறுபடியும் ஒப்பித்தான்.
"யாரின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை? அவரின் உடம்புக்கு என்ன? நீ ஏன் போகவேண்டும்?"
அவரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் முழித்தவன், "அம்மா...! அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை என்று அவன் உதவிக்கு கூப்பிடுகிறான். நீங்களானால் கேள்வி மேல் கேள்வி கேட்கிறீர்கள்?" என்று தாயிடமே எரிந்து விழுந்தான்.
பின்னே, இல்லாத நண்பனை யார் என்று சொல்வான்?
சில நொடிகள் அமைதியில் கழிய, "உனக்கு எதற்கு இவ்வளவு கோபம் என்று எனக்குப் புரியவில்லை! உன்னை உதவி செய்ய வேண்டாம் என்று நான் சொல்லவில்லையே... ஒருவருக்கு ஒன்று என்றால் என்னவென்று விசாரிப்பது இயல்பான ஒன்று! சரி, நீ உதவியைச் செய்! ஆனால் நேரம் கடத்தாமல் வீடு வந்துசேர்." சிறு கண்டிப்புடன் பதில் சொன்னவர்,
"பூசையை முடித்துவிட்டாயா..? ஐயா என்ன சொன்னார்?" என்று கேட்கவும், குற்ற உணர்ச்சியில் தொண்டை அடைக்க, "ம். பூசை செய்துவிட்டேன் அம்மா. ஐயா உங்களைக் கேட்டதாக சொல்லச் சொன்னார்..." என்று இழுத்தவன், "சாரிமா...." என்றான் உள்ளத்தில் இருந்து.
அவன் மனதே அவனைக் குற்றம் சாட்டியது! தான் சொன்ன பொய்யை நம்பி, யாருக்கு என்ன என்று விபரத்தைக் கூடச் சரியாகக் கேட்காது, தன் கோபத்துக்கு மதிப்பளித்த தாய்க்கு துரோகம் செய்துவிட்டோம் என்பது புரிந்தது அவனுக்கு.
அந்தக் குற்ற உணர்ச்சியில் அவன் மன்னிப்புக் கேட்க, சகுந்தலாவோ மகன் கோபத்தில் பேசியதற்கு மன்னிப்புக் கேட்பதாக நினைத்து, முகம் மலர, "சரிதான்! உன் மன்னிப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்..!" என்று சிரிப்புடன் சொன்னவர், "நீ சைக்கிளிலும் போகவில்லையே ரவி... ஆட்டோகார அண்ணா வந்துவிட்டானா... அவனுடனேயே நீ மருத்துவமனைக்கு போ..." என்றார் மகனின் நலனில் அக்கறை உள்ள தாயாக.
கண்ணனும் தேவனும் செய்த கேலியில் காயப்பட்டிருந்த ரவியின் மனது, ஆறுதல் தேடி அலைந்துகொண்டிருந்தது. ராஜ் அருகில் இருந்திருக்க இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்திராமல் போயிருக்கலாம்.
ராஜுக்கும் ரவிக்கும் ஒரே வயது என்றாலும், பொறுப்புணர்ச்சி ரவியை விட ராஜுக்கு சற்று அதிகமே! வறுமை அவனுக்கு அதை உணர்த்தி இருந்தது.
வாழ்வின் நிதர்சனங்களை அறிந்த ராஜின் வழிநடத்தல் தேவையான நேரத்தில் கிடைக்காததிலும், எபோதும் வம்பிழுக்கும் கவி திடீரென்று அமைதி காத்ததிலும் காயப்பட்டு இருந்த ரவியின் மனது பெருமளவில் தடுமாறியது.
அந்தத் தடுமாற்றம் அவனின் சுயத்தை இழக்க வைத்து கவியின் வாழ்வில் விதியாக மாறி விளையாடிவிட்டது.
கோவில் பிரகாரத்தில் அமர்ந்து முகத்தைக் கைகளால் மூடிக் கதறி அழுதுகொண்டு இருப்பவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது ரவிக்கு. இதுவரை அவள் அழுது அவன் பார்த்ததில்லை! எவ்வளவுதான் கிண்டல் செய்தாலும் கோபம் கொண்டு முறைக்கும் முகம், இன்று அழுகையில் கசங்குவதைத் தாங்கமுடியாமல், "அழாதே கவி...!" என்றான் மெல்ல.
"இதைக் கழட்டிவிடுகிறாயா...?" கன்னத்தில் வழிந்த கண்ணீரோடு, நிமிர்ந்துபார்த்துக் கேட்டவளின் கண்களில் இறைஞ்சல் இருந்தது.
"நீ முதலில் அழுவதை நிறுத்து..!"
அவன் அழுத்திச் சொல்லவும், "கழட்ட மாட்டாயா.....?" பரிதாபமாகக் கேட்டாள் கவி.
ரவிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று அவனுமே நினைத்ததில்லையே. ஆனால் நடந்துவிட்டது! இனி என்ன செய்வது என்றும் புரியவில்லை.
கோவிலைச் சுற்றிப் பார்வையை வேகமாக சுழற்றியவனுக்கு, ஐயரும் ஆட்டோகாரனும் எப்போது வேண்டுமானாலும் வந்துவிடலாம் என்று தோன்றியது. அதற்கிடையில் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தாலும் கட்டிய தாலியைக் கழட்டும் எண்ணம் சிறிதும் இல்லை அவனுக்கு!
"முதலில் அழுவதை நிறுத்திவிட்டு எழுந்திரு கவி...! யாராவது வந்தால் என்ன நினைப்பார்கள்...."
அப்போதுதான் தானிருக்கும் சூழலை உணர்ந்து பதறி எழுந்தவளின் கைகள் தானாகத் தாலியைத் தாவணிக்குள் விட்டு மறைத்துக்கொண்டது. அவளின் கைகள் செய்த செயலைத் தன் கண்களால் படம் எடுத்தவனின் உடலில், ஒருவித உணர்வுகளின் தாக்கம். தாலி மறைந்துகொண்ட இடத்தை சிலநொடிகள் தீண்டிசென்றது அவன் விழிகள்!
இது எதையும் உணராத கவி, "இருட்டுகிறது வர்மா. நான் வீட்டுக்குப் போகவேண்டும். இதைக் கழட்டித் தந்துவிட்டு நான் போகவா......" நயமாகக் கேட்டவளின் விழிகளும் அச்சத்துடன் அந்த கோவிலையே வலம் வந்தது. 'நல்ல காலம் ஐயரைக் காணவில்லை' என்றும் அந்த இளம் மனது எண்ணிக்கொண்டது.
தாலியை கழட்டுவதிலேயே அவள் குறியாக நிற்கவும், தடுமாறிய அவன் மனது மீண்டும் கோபம் கொண்டது!
"என்னடி? வாய் ஓயாமல் கழட்டு கழட்டு என்கிறாய். இதைக் கழட்டுவதற்கா உன் கழுத்தில் கட்டினேன்.." என்று அவன் சிடுசிடுக்கவும், மறுபடியும் பயத்தில் நடுங்கியது அவள் மேனி.
இதுவரை அவள் அறியாத ரவிவர்மனை அல்லவா இப்போது பார்க்கிறாள். கல்லால் அடித்து மண்டையை உடைத்தபோது கூட சிரித்தபடி நின்றவன் இன்று இப்படி கோபத்தோடு நிற்கவும் மீண்டும் கண்களில் கண்ணீர் திரண்டது அவளுக்கு!
தாலி ஒன்றைக் கட்டிவிட்டாலே, ஒருவித ஆதிக்கத்தை மனைவி மேல் செலுத்துவது ஆண்களின் இயல்பு! ஆனால் அதைப் புரிந்துகொள்ளும் வயது கவிக்கு இல்லாமல் போனதுதான் பரிதாபம்!
"இல்லாவிட்டால் நான் வீட்டுக்குப் போகமுடியாது வர்மா. அம்மா அடித்தே கொன்றுவிடுவார்கள். எனக்குப் பயமாக இருக்கிறது!" கோபம், அதட்டல், அழுகை எதுவும் அவனிடம் எடுபடாமல் போனதில் இப்போது கெஞ்சியது அவள் குரல்.
"வளவளகாமல் கொஞ்சம் பேசாமல் இரடி...!" அவளிடம் எரிந்து விழுந்தவனுக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை.
யாரும் வந்துவிடுவார்களோ என்கிற பதட்டம், இனி என்ன செய்வது என்கிற தடுமாற்றம். இந்த அவதி எல்லாம் அவனுக்கு பழக்கமில்லாத விடயங்கள். எனவே சிந்திக்காது,
"நீ வீட்டுக்கு போ. உன் அம்மா அடிக்கமாட்டார்கள். நான் ராஜிடம் சொல்லிவிடுகிறேன்..." என்று, என்ன செய்வது என்று புரியாமலேயே ஒரு பதிலைச் சொன்னான்.
"வீட்டுக்கா..? ம்கூம்....! நான் போகமாட்டேன்! இப்படியே நான் போகமாட்டேன்... எனக்கு இந்தத் தாலி வேண்டாம்....நீயே வைத்துக்கொள்!" என்றபடி அவள் மீண்டும் தாலியைப் பற்றபோக,
அவளின் பின் பிடரியில் கைவைத்துத் தன்னை நோக்கி இழுத்து, "ஏய்!!, அதை கழட்டினால் உன்னை கொன்றுவிடுவேன் என்று சொன்னேனா இல்லையா...!?" என்று உறுமினான் ரவி.
ஏற்கனவே பயத்தில் நடுங்கியவளின் மேனி, எதிர்பாராமல் அவன் இழுத்ததில் அவனின் மார்பிலேயே வந்து மோதியது. அவன் நெஞ்சில் வந்து விழுந்தவள் பயத்தில் அவன் கைகளையே இறுகப்பற்றி, உதடுகள் துடிக்க, மூக்கு விடைக்க, அகன்ற கண்களில் கண்ணீரையும் அச்சத்தையும் நிரப்பி அவனை அண்ணார்ந்து பார்த்தாள்.
அவளைக் குனிந்து பார்த்தவனுக்கு, அவள் மனதின் போராட்டம் அந்த குழந்தை முகத்தில் தெரிந்தது போலும், முகம் கனிய கைகள் இரண்டாலும் அவளை சுற்றிவளைத்தான் ஆறுதலாக.
ஒரு கையால் அவள் தலையைத் தன் மார்போடு அழுத்திக்கொண்டு, "பயப்படாதே...! நான் இருக்கிறேன்...!" என்றான் இதமாக தன்னையும் மீறி!
அந்த நொடியில் அந்த இதம் அவளுக்கும் தேவை பட்டது போலும், "பயமாக இருக்கிறது வர்மா....." கேவலுடன் சொன்னவள் அவன் நெஞ்சிலேயே தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.
"ச்சு, அழாதடி...! அதுதான் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேனில்லையா....!" என்றான் மெல்லிய அதட்டலாக.
"ம்...ம்..." கேவல் குறைந்தபோதும் கண்ணீர் வழிந்தது கண்களில்.
இனி என்ன செய்வது என்கிற யோசனை இருவருக்குமே வரவில்லை. அதற்கான அனுபவம் இல்லாத வயதல்லவா! இப்போது என்ன செய்வது என்று மட்டுமே சிந்தித்தனர்.
பொது இடத்தில் அதுவும் கோவிலில் நிற்கிறோம் என்பதை மறந்து அணைத்தபடி நின்றவர்களுக்கு, ஒருவரின் அருகாமை மற்றவருக்கு மிகவுமே தேவைப்பட்டது அந்த நேரத்தில்!
அதுவும் கவிக்கு, அம்மாவின் அடியில் இருந்து தன்னைக் காக்கப்போகிறவன் அவனே என்று நம்பியதில், அவனை இறுகக் கட்டிக்கொடு கண்ணை முடி அவனில் சாய்ந்திருந்தாள்.
தூரத்தில் ஐயர் வருவதைக் கண்ட ரவி, "கவி, எழுந்திரு! ஐயா வருகிறார்." எனவும்,
"ஐயோ! அவர் பாத்தால் அவர் மூலம் அம்மாவுக்கு எப்படியும் தெரிந்துவிடும்." என்றவளின் உதடுகள் மறுபடியும் அழுகையில் வளைந்தது.
"பேசாமல் இருடி லூசு..!" என்று சினந்தவன், "வா வெளியே போகலாம். இல்லையில்லை.. நீ வெளியே போ. நான் வருகிறேன்..." என்றான் அவசரமாக.
"வருவாய் தானே வர்மா...." பயத்தில் நடுங்கியவளை முறைத்தவன், "வராமல் எங்கே போகபோகிறேன். போ வருகிறேன்...!" என்றான் மீண்டும் அதட்டலாக.
ஐயர் நெருங்குவதைக் கண்டவள் வேகமாக வெளியே செல்லவும், கஷ்டப்பட்டு சாதாரணமாகப் புன்னகைத்து, "வருகிறேன் ஐயா...." என்று அவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.
"தம்பி! பூசைத் தட்டை விட்டுவிட்டுப் போகிறாயே...." என்று அவர் சொல்லவும், அசட்டுப் புன்னகை ஒன்றைச் சிந்தி, "மறந்துவிட்டேன் ஐயா.” என்றபடி தட்டை எடுத்தான்.
"நான் வரும்வரை இருந்ததுக்கு மிகவும் நன்றி தம்பி! கவனமாகப் போய்வா.... அம்மாவிடம் நான் கேட்டதாகச் சொல்லிவிடு...!" என்றுவிட்டுத் தன் வேலையைப் பாக்கப்போனார் அவர்.
வெளியே வந்தவனைக் கண்டவுடன், அவன் அருகில் ஓடிச்சென்று அவன் கையைப் பிடித்துக்கொண்டாள் கவி.
அவள் கையை உதறியவன், "லூசு, யாராவது பார்த்துவிட்டால் பிரச்சினை ஆகிவிடும். தள்ளி நில்லு!" என்று சிடுசிடுத்தான்.
"ஆமாமில்லை...." என்றவள் அவன் பின்னுக்கு மறைந்து நின்றுகொண்டாள். அந்த நேரத்தல் அவன் முதுகுப்பகுதியே அவளுக்கு மறைவிடமாகத் தோன்றியது போலும்....
இப்போது தாய்க்கு என்ன சொல்வது, என்ன செய்வது என்று தெரியாமல் நின்றவன், தாயைக் கைபேசியில் அழைத்தான். "அம்மா, இங்கே என் நண்பன் ஒருவனின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை... அதனால் அவனுடன் மருத்துவமனைக்குப் போகிறேன்..." என்று வாயில் வந்த பொய்யை அப்படியே சொன்னான்.
"ரவி...?!? ரவி கொஞ்சம் மெதுவாகச் சொல்லு. எதற்குப் படபடக்கிறாய்? யாருக்கு என்ன?"
"அது... அம்மா... அது, என் நண்பனின் தாய்க்கு உடம்பு சரியில்லை... அதனால் அவனுடன் மருத்துவமனைக்குப் போகிறேன்..." சொன்னதையே மறுபடியும் ஒப்பித்தான்.
"யாரின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை? அவரின் உடம்புக்கு என்ன? நீ ஏன் போகவேண்டும்?"
அவரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் முழித்தவன், "அம்மா...! அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை என்று அவன் உதவிக்கு கூப்பிடுகிறான். நீங்களானால் கேள்வி மேல் கேள்வி கேட்கிறீர்கள்?" என்று தாயிடமே எரிந்து விழுந்தான்.
பின்னே, இல்லாத நண்பனை யார் என்று சொல்வான்?
சில நொடிகள் அமைதியில் கழிய, "உனக்கு எதற்கு இவ்வளவு கோபம் என்று எனக்குப் புரியவில்லை! உன்னை உதவி செய்ய வேண்டாம் என்று நான் சொல்லவில்லையே... ஒருவருக்கு ஒன்று என்றால் என்னவென்று விசாரிப்பது இயல்பான ஒன்று! சரி, நீ உதவியைச் செய்! ஆனால் நேரம் கடத்தாமல் வீடு வந்துசேர்." சிறு கண்டிப்புடன் பதில் சொன்னவர்,
"பூசையை முடித்துவிட்டாயா..? ஐயா என்ன சொன்னார்?" என்று கேட்கவும், குற்ற உணர்ச்சியில் தொண்டை அடைக்க, "ம். பூசை செய்துவிட்டேன் அம்மா. ஐயா உங்களைக் கேட்டதாக சொல்லச் சொன்னார்..." என்று இழுத்தவன், "சாரிமா...." என்றான் உள்ளத்தில் இருந்து.
அவன் மனதே அவனைக் குற்றம் சாட்டியது! தான் சொன்ன பொய்யை நம்பி, யாருக்கு என்ன என்று விபரத்தைக் கூடச் சரியாகக் கேட்காது, தன் கோபத்துக்கு மதிப்பளித்த தாய்க்கு துரோகம் செய்துவிட்டோம் என்பது புரிந்தது அவனுக்கு.
அந்தக் குற்ற உணர்ச்சியில் அவன் மன்னிப்புக் கேட்க, சகுந்தலாவோ மகன் கோபத்தில் பேசியதற்கு மன்னிப்புக் கேட்பதாக நினைத்து, முகம் மலர, "சரிதான்! உன் மன்னிப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்..!" என்று சிரிப்புடன் சொன்னவர், "நீ சைக்கிளிலும் போகவில்லையே ரவி... ஆட்டோகார அண்ணா வந்துவிட்டானா... அவனுடனேயே நீ மருத்துவமனைக்கு போ..." என்றார் மகனின் நலனில் அக்கறை உள்ள தாயாக.