அத்தியாயம்-6
மகளை ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த கவிக்கு மனம் கொதித்துக்கொண்டிருந்தது. என்ன பேச்சுப் பேசிவிட்டான். அதுவும் அவளைப் பார்த்து! அதுவும் அவன்! அவளைப் பற்றிக் கேவலமாகக் கதைக்க அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஆத்திரம் அடங்க மறுத்தது அவளுக்கு.
பன்னிரண்டு வருடங்களுக்கு முதலில் பட்ட காயம் ஆறவே மாட்டேன் என்று வடுவாகிப்போனாலும், பெரும் முயற்சி செய்து அதை ஒதுக்கி, மகள் மட்டுமே எதிர்காலம் என்று முடிவெடுத்து, தன்னைத் தானே செதுக்கி கிட்டத்தட்ட ஒரு இரும்பு மனுசியாய் வாழ்ந்துகொண்டு இருப்பவளைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டான்!?
என்றும் போல் அன்றும் மனதின் குமுறல்களைச் சொல்ல யாருமற்ற தனிமை, மகளிடம் எதையும் காட்டிக்கொள்ள முடியாத வெறுமை, அவளை முற்றிலுமாக உலுக்கியது.
வீடு வந்ததும், "கண்மணியின் வீட்டுக்கு போய் வரவா அம்மா...?" என்று பாவை கேட்கவும், அப்போதைய நிலையில் தனிமையை விரும்பியவள், "போய்வா கவி. ஆனால் மாலைக்குள் வந்துவிடு. சைக்கிளில் செல்வது கவனம்.." என்று மகளை அனுப்பி வைத்தாள்.
வீட்டின் உள்ளே சென்றவளுக்கு, உடையை மாற்றும் அளவுக்குக் கூட மனதிலும் உடலிலும் தெம்பில்லாமல், கட்டிலில் விழுந்தவளின் கண்களோ கண்ணீரைச் சொரிந்தது.
நடந்தவைகளை ஒதுக்கி, யார் மேலும் குற்றம் சுமத்தாது, விதியின் மேல் பழியைப் போட்டுவிட்டு, வாழ்வின் மிகுதியை வாழும் வழியைப் பார்த்தவளை பார்த்து எப்படி பேசிவிட்டான் அந்த ரவி.
மனதின் ஆழத்தில் அமிழ்ந்து கிடந்த நினைவுகள் தறிகெட்டு ஓடியது கவிக்கு.........
மலையகம், இலங்கையின் அழகு கொஞ்சும் மலைப்பகுதி. தேயிலை பயிரிடுவதை பிரதானமாக கொண்ட, எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று மின்னும் பசுமை நகரம்.
மெல்லிய குளிருக்கு ஏதுவாக, வெள்ளைச் சீருடைக்கு மேலாக பச்சை நிற கோர்ட் ஒன்றை அணிந்து, பள்ளி செல்லத் தயாராகி, "அம்மா, நான் பள்ளிக்கூடம் போய்வருகிறேன்...." என்று, வெளியே நின்று கத்தினாள் பதினைந்து வயதுக் கவிநயா.
"எதற்கடி கத்தி ஊரைக் கூட்டுகிறாய்? இன்றாவது யாருடனும் சண்டை பிடிக்காமல் பள்ளி முடிந்ததும் வீடு வந்துசேர்..." சற்றே சினத்துசன் சொன்னார், கவியின் தாய் மரகதம்.
பாசம் என்பது மருந்துக்கும் இல்லை அந்தக் குரலில். பின்னே, அவள் வெளியே சென்றாலே வம்புடன் தான் வீடு வருவாள் என்பதால், கவியிடம் பேசும்போது மரகதத்தின் குரலில் எப்போதும் ஒரு கடுப்பு குடியிருக்கும்.
"யாரும் என்னுடன் வம்பு இழுக்காதவரை நானும் யாருடனும் சண்டை பிடிக்க மாட்டேன். யாராவது சண்டைக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை...." என்றவள், அதற்கு மேல் நிற்காது பள்ளி ‘பாக்’கை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினாள்.
அவளுக்குத் தெரியும், அதற்கு மேலும் நின்றால் அம்மாவின் வசவை வாங்க வேண்டும் என்று. தினமும் காலைப்பொழுதில் தாய்க்கும் மகளுக்கும் நடக்கும் இந்தப் போராட்டம் அந்த ஊரே அறிந்த ஒன்றுதான்.
கவி பள்ளி முடிந்து வீடு வரமுதலே, அவள் வீதியில் செய்த வாய்ச்சண்டை யார் மூலமாவது மரகதத்தின் காதுக்கு எட்டிவிடும். பிறகு என்ன, அடுப்பு எரிக்க வைத்திருக்கும் விறகுக் கட்டையால் மகளை மொத்துவதும், இரவு முழுக்க அழும் கவி அடுத்தநாள் வழமை போல் யாருடனாவது வம்பு வளர்ப்பதும் அந்த வீட்டில் வழமையான விடயம்.
"உன்னை திருத்தவே முடியாது. ஆனால், இன்றும் ஏதாவது என் காதில் உன்னை பற்றி விழட்டும், உன் காலை ஓடித்துவிடுகிறேன்.." என்று மகளை திட்டியபடியே தன் சமையல் வேலையைத் தொடங்கினார் மரகதம்.
மரகதம் வேலை செய்த தேயிலைத் தோட்டத்துக்கு, கண்காணியாக வந்த சுப்பையாவை நல்லவன் என்று நம்பி, மனதை மட்டுமல்லாமல் உடலையும் சேர்த்து அவனிடம் பறிகொடுத்ததில், மரகதத்தின் வயிற்றில் கவி உண்டானாள்.
பெற்றவர்களை சிறு வயதிலேயே இழந்து, கிடைக்கும் வீட்டு வாசல்களில் தூங்கி, பழைய உணவையும் பழுதான சோற்றையும் உண்டு வளர்ந்த மரகதத்துக்கு, ஆர்வமுடன் ஒருவன் தன்னை பார்த்ததிலேயே மகிழ்ந்துபோனார்.
காதலுக்கும் காமத்துக்கும் வேற்றுமை தெரியா வயதில், காதல் என்று நம்பி கற்பைப் பறிகொடுத்த பிறகே, அவனின் சுயரூபம் தெரிந்தது அவருக்கு.
சங்கடமும் சந்தோசமும் நிறைந்த மனநிலையோடு, தான் தாயாகி இருப்பதை சுப்பையாவிடம் தெரிவித்தபோது தான், அவர் ஏற்கனவே திருமணமாவர் என்பதே மரகதத்துக்குக் தெரியவந்தது.
ஒரு வாய் சோற்றைக் கூட அது பழையதாக இருந்தாலும் உழைத்துத் தின்ற மறத்தி அல்லவா மரகதம், அவனின் முகத்துக்கு நேரேயே காறி உமிழ்ந்தவர், தன்னால் உழைத்து தன்னையும், தன் வயிற்றில் வளரும் சிசுவையும் காக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையுடன், அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறி இப்போது இருக்கும் கிராமத்துக்குக் குடிவந்தார்.
சுப்பையாவுக்கோ விட்டது தொல்லை என்கிற எண்ணம். அவன் பிறகு மரகதத்தை சந்திக்க முயலவில்லை.
வயிற்றில் குழந்தையும், தான் பெற்றுக்கொண்ட அனுபவமும், மறுபடியும் தேயிலைத் தோட்டத்துக்கு வேலைக்குச் செல்வதற்கு அவரை அனுமதிக்க மறுத்தது.
வாழ்வாதாரத்துக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தவருக்கு, தேயிலை தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கான உணவை சமைத்து விற்கலாம் என்கிற எண்ணம் உண்டானது.
அன்றிலிருந்து சிறுகச்சிறுக தன் தொழிலை மேம்படுத்தியவர், ஓகோ என்று வாழாவிட்டாலும் தேவையான அளவு உழைப்போடு நிம்மதியாகவே வாழ்ந்தார்.
ஆனாலும், உடலாலும் உள்ளத்தாலும் மிகவும் நொந்திருந்தார் மரகதம். சொந்தம் என்று யாருமில்லாத நிலையும், சுயநலமற்ற அன்புக்கு ஏங்கிய தான் ஒருவனின் உடல் தேவைக்கு இரையானதும், அவரைப் பெரிதும் பாதித்தது.
அதனாலேயே, மகளைக் கவனமாக வளர்க்கவேண்டும் என்கிற எண்ணத்தில், அவளுக்கான அடக்குமுறைகளை மிகவும் கடுமையாகக் கையாண்டார். பிறப்பிலேயே வாயாடியாகப் பிறந்த கவிநயா, தாயின் புத்திமதிகளைக் கேட்டுக்கொண்ட போதிலும், ஒரு அளவுக்கு மேல் வாயை அடக்க முடிந்ததில்லை அவளால்.
அதனாலேயே தாயிடம் தினமும் திட்டும் அடியும் வாங்கியே அவளின் நாட்கள் நகர்ந்தது.
வீட்டிலிருந்து பள்ளிக்கு அந்த மலைப்பாதையில் நடந்துகொண்டிருந்தாள் கவி. மலையின் கீழே பள்ளி இருப்பதால், இறக்கமான பாதையில் வேக வேகமாக நடந்தவளை, "அடியே குண்டுப் பூசணி. மெதுவாக நட. நிலம் நடுங்குகிறது பார்...." என்றொரு குரல் அவளைச் சீண்டியது.
இன்றாவது யாருடனும் சண்டை பிடிக்கக்கூடாது என்று நினைத்தவளின் பொறுமை பறக்க, "அடேய் விருமாண்டி! கையில் கிடைத்தாய் என்றால் உன்னை வெறும் ஆண்டி ஆக்கிவிடுவேன். மரியாதையாக வாயை மூடிக்கொண்டு ஓடிவிடு..." என்றாள் கோபத்துடன்.
யார் என்று தெரிந்தபோதும் அந்தக் குரலுக்குரியவன் எங்கிருக்கிறான் என்று தன்னுடைய பெரிய கண்களை நாலாபக்கமும் சுழற்றினாள் கவி.
"ஏய் கறுப்பி, உன் கண் என்ன காத்தாடியா? இந்த சுழற்றுச் சுழற்றுகிறாய்..."
இப்போதும் உருவம் இல்லாது குரல் மட்டும் வந்தது.
கறுப்பி என்கிற அழைப்பு அவளிடம் கொஞ்சமாக இருந்த நிதானத்தையும் இழக்க வைத்தது.
"அடேய் தைரியம் கெட்டவனே. வெளியே வாடா. உன்னை என்ன செய்கிறேன் பார்....." கோபம் தலைக்கேற, நிலத்தில் கிடந்த கல்லொன்றை எடுத்து, பேச்சுக்குரல் வந்த திசைப்பக்காமாக குறி பார்த்தாள் கவி.
"ஐயோ கவி எறிந்துவிடாதே. நானும் இருக்கிறேன்." என்றபடி, மரத்தின் பின்னால் ரவியின் கைப்பிடியில் மாட்டியிருந்த வசந்தராஜ், ரவியை உதறிவிட்டு வெளியே வந்தான்.
"ராஜண்ணா, அந்த எருமையை வெளியே வரச்சொல்லுங்கள். இன்று அவன் மண்டையை உடைக்காமல் நான் போகமாட்டேன்.." என்றவளின் உதடுகளும் கண்களும் கோபத்தில் துடித்தது.
அவளின் பெரிய கண்கள் ஆடும் கரகாட்டத்தைப் பார்த்துச் சிரித்தவாறே, மரத்தின் மறைவில் இருந்து வெளியே வந்தான் ரவி. "என்னடி செய்வாய்? எங்கே உடை பார்ப்போம் என் மண்டையை. குண்டுக் கத்தரிக்காய். நீ நிலத்தில் உருள்வதற்குத்தான் சரியடி..." மறுபடியும் அவளைச் சீண்டினான்.
"அடேய் கொக்கத்தடி. உன்னை ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் அந்த லைட் போஸ்ட்டில் அடித்து தொங்க விடுகிறேனா இல்லையா பார்...." உதடு துடிக்க வார்த்தையாடியவளை, "கவி!!" என்ற ராஜின் குரல் அடக்கியது.
"என்னை மட்டும் அடக்குங்கள் அண்ணா. அவனை ஒன்றும் சொல்லாதீர்கள்...." ராஜிடமும் கோபத்துடன் கத்தியவளிடம், "உங்கள் இருவருக்கும் தான் சொல்கிறேன். யாராவது என் பேச்சைக் கேட்கிறீர்களா?" என்றான் சிறு சலிப்புடன் ராஜ்.
"என்னைக் கறுப்பி என்று சொல்லவேண்டாம் என்று அவனிடம் சொல்லுங்கள் ராஜண்ணா..." என்று கவி முறையிடவும்,
"உனக்கும் எனக்கும் ஒரே வயதுதான். ஆனாலும் உன்னை அண்ணா என்று கூப்பிடுபவள் என்னை மட்டும் ஏன் அவன் இவன் என்று சொல்ல வேண்டும். முதலில் என்னையும் அண்ணா என்று கூப்பிடச்சொல் அவளை...." என்று தானும் முறையிட்டான் ரவிவர்மன்.
"என்னது? உன்னை நான் அண்ணா என்று கூப்பிடுவதா? ஆடு மாட்டை எல்லாம் நான் அண்ணா என்று சொல்வதில்லை..." நக்கலாக சொன்னவளைப் பார்த்து முறைத்த ரவி, "போடி! நீ பெரிய மகாராணி. நீ அண்ணா என்று கூப்பிடவில்லை என்றுதான் நான் இங்கே ஏங்குகிறேன். அடி குண்டுப் பூசணி நீ ஒரு மண்டுப் பூசணி...." என்றான் அவனும் விடாது.
"அடேய் எருமை மாடு. என்னைக் குண்டு என்று சொல்வாயா?" என்று கேட்டபடி, கையில் இருந்த கல்லோடு அவனைத் துரத்தியவளின் கையில் அகப்படாமல் பாய்ந்து ஓடினான் ரவி.
"கவி, நில். கவி.. சொல்கிறேன் இல்லையா. நீங்கள் இருவருமே திருந்தப்போவது இல்லை. கவி...நில்!! பள்ளிக்கு நேரமாகிறது. அவனைத் துரத்துவதை விட்டுவிட்டு பள்ளிக்குச் செல்...." என்ற ராஜின் குரலுக்கு, மனமே இல்லாமல் நின்றவளுக்கு, ரவியை த் துரத்திக்கொண்டு ஓடியதில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.
"அவன் மட்டும் என் கையில் கிடைத்தான் சாம்பல் ஆக்கிவிடுவேன். சொல்லி வையுங்கள் அவனிடம்..." என்று, அப்போதும் மூச்சு வாங்கியபடி,ரவியைக் கைநீட்டி எச்சரித்துவிட்டு பள்ளிக்கு நடையை கட்டினாள் கவி.
‘என் கையில் மாட்டுடா. உனக்கு சங்குதான். வரவர உன் ஆட்டம் அதிகமாகிறது. என்னைக் குண்டு என்று சொன்ன உன் வாயிலேயே ஒரு குத்து விடுகிறேன்...’ என்று அவனைத் திட்டியபடி பள்ளி சென்றவள், அங்கே தோழிகளுடன் கூடியவுடன் வரும் வழியில் நடந்தவைகளை தற்காலிகமாக மறந்துபோனாள்.
மகளை ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த கவிக்கு மனம் கொதித்துக்கொண்டிருந்தது. என்ன பேச்சுப் பேசிவிட்டான். அதுவும் அவளைப் பார்த்து! அதுவும் அவன்! அவளைப் பற்றிக் கேவலமாகக் கதைக்க அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஆத்திரம் அடங்க மறுத்தது அவளுக்கு.
பன்னிரண்டு வருடங்களுக்கு முதலில் பட்ட காயம் ஆறவே மாட்டேன் என்று வடுவாகிப்போனாலும், பெரும் முயற்சி செய்து அதை ஒதுக்கி, மகள் மட்டுமே எதிர்காலம் என்று முடிவெடுத்து, தன்னைத் தானே செதுக்கி கிட்டத்தட்ட ஒரு இரும்பு மனுசியாய் வாழ்ந்துகொண்டு இருப்பவளைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டான்!?
என்றும் போல் அன்றும் மனதின் குமுறல்களைச் சொல்ல யாருமற்ற தனிமை, மகளிடம் எதையும் காட்டிக்கொள்ள முடியாத வெறுமை, அவளை முற்றிலுமாக உலுக்கியது.
வீடு வந்ததும், "கண்மணியின் வீட்டுக்கு போய் வரவா அம்மா...?" என்று பாவை கேட்கவும், அப்போதைய நிலையில் தனிமையை விரும்பியவள், "போய்வா கவி. ஆனால் மாலைக்குள் வந்துவிடு. சைக்கிளில் செல்வது கவனம்.." என்று மகளை அனுப்பி வைத்தாள்.
வீட்டின் உள்ளே சென்றவளுக்கு, உடையை மாற்றும் அளவுக்குக் கூட மனதிலும் உடலிலும் தெம்பில்லாமல், கட்டிலில் விழுந்தவளின் கண்களோ கண்ணீரைச் சொரிந்தது.
நடந்தவைகளை ஒதுக்கி, யார் மேலும் குற்றம் சுமத்தாது, விதியின் மேல் பழியைப் போட்டுவிட்டு, வாழ்வின் மிகுதியை வாழும் வழியைப் பார்த்தவளை பார்த்து எப்படி பேசிவிட்டான் அந்த ரவி.
மனதின் ஆழத்தில் அமிழ்ந்து கிடந்த நினைவுகள் தறிகெட்டு ஓடியது கவிக்கு.........
மலையகம், இலங்கையின் அழகு கொஞ்சும் மலைப்பகுதி. தேயிலை பயிரிடுவதை பிரதானமாக கொண்ட, எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று மின்னும் பசுமை நகரம்.
மெல்லிய குளிருக்கு ஏதுவாக, வெள்ளைச் சீருடைக்கு மேலாக பச்சை நிற கோர்ட் ஒன்றை அணிந்து, பள்ளி செல்லத் தயாராகி, "அம்மா, நான் பள்ளிக்கூடம் போய்வருகிறேன்...." என்று, வெளியே நின்று கத்தினாள் பதினைந்து வயதுக் கவிநயா.
"எதற்கடி கத்தி ஊரைக் கூட்டுகிறாய்? இன்றாவது யாருடனும் சண்டை பிடிக்காமல் பள்ளி முடிந்ததும் வீடு வந்துசேர்..." சற்றே சினத்துசன் சொன்னார், கவியின் தாய் மரகதம்.
பாசம் என்பது மருந்துக்கும் இல்லை அந்தக் குரலில். பின்னே, அவள் வெளியே சென்றாலே வம்புடன் தான் வீடு வருவாள் என்பதால், கவியிடம் பேசும்போது மரகதத்தின் குரலில் எப்போதும் ஒரு கடுப்பு குடியிருக்கும்.
"யாரும் என்னுடன் வம்பு இழுக்காதவரை நானும் யாருடனும் சண்டை பிடிக்க மாட்டேன். யாராவது சண்டைக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை...." என்றவள், அதற்கு மேல் நிற்காது பள்ளி ‘பாக்’கை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினாள்.
அவளுக்குத் தெரியும், அதற்கு மேலும் நின்றால் அம்மாவின் வசவை வாங்க வேண்டும் என்று. தினமும் காலைப்பொழுதில் தாய்க்கும் மகளுக்கும் நடக்கும் இந்தப் போராட்டம் அந்த ஊரே அறிந்த ஒன்றுதான்.
கவி பள்ளி முடிந்து வீடு வரமுதலே, அவள் வீதியில் செய்த வாய்ச்சண்டை யார் மூலமாவது மரகதத்தின் காதுக்கு எட்டிவிடும். பிறகு என்ன, அடுப்பு எரிக்க வைத்திருக்கும் விறகுக் கட்டையால் மகளை மொத்துவதும், இரவு முழுக்க அழும் கவி அடுத்தநாள் வழமை போல் யாருடனாவது வம்பு வளர்ப்பதும் அந்த வீட்டில் வழமையான விடயம்.
"உன்னை திருத்தவே முடியாது. ஆனால், இன்றும் ஏதாவது என் காதில் உன்னை பற்றி விழட்டும், உன் காலை ஓடித்துவிடுகிறேன்.." என்று மகளை திட்டியபடியே தன் சமையல் வேலையைத் தொடங்கினார் மரகதம்.
மரகதம் வேலை செய்த தேயிலைத் தோட்டத்துக்கு, கண்காணியாக வந்த சுப்பையாவை நல்லவன் என்று நம்பி, மனதை மட்டுமல்லாமல் உடலையும் சேர்த்து அவனிடம் பறிகொடுத்ததில், மரகதத்தின் வயிற்றில் கவி உண்டானாள்.
பெற்றவர்களை சிறு வயதிலேயே இழந்து, கிடைக்கும் வீட்டு வாசல்களில் தூங்கி, பழைய உணவையும் பழுதான சோற்றையும் உண்டு வளர்ந்த மரகதத்துக்கு, ஆர்வமுடன் ஒருவன் தன்னை பார்த்ததிலேயே மகிழ்ந்துபோனார்.
காதலுக்கும் காமத்துக்கும் வேற்றுமை தெரியா வயதில், காதல் என்று நம்பி கற்பைப் பறிகொடுத்த பிறகே, அவனின் சுயரூபம் தெரிந்தது அவருக்கு.
சங்கடமும் சந்தோசமும் நிறைந்த மனநிலையோடு, தான் தாயாகி இருப்பதை சுப்பையாவிடம் தெரிவித்தபோது தான், அவர் ஏற்கனவே திருமணமாவர் என்பதே மரகதத்துக்குக் தெரியவந்தது.
ஒரு வாய் சோற்றைக் கூட அது பழையதாக இருந்தாலும் உழைத்துத் தின்ற மறத்தி அல்லவா மரகதம், அவனின் முகத்துக்கு நேரேயே காறி உமிழ்ந்தவர், தன்னால் உழைத்து தன்னையும், தன் வயிற்றில் வளரும் சிசுவையும் காக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையுடன், அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறி இப்போது இருக்கும் கிராமத்துக்குக் குடிவந்தார்.
சுப்பையாவுக்கோ விட்டது தொல்லை என்கிற எண்ணம். அவன் பிறகு மரகதத்தை சந்திக்க முயலவில்லை.
வயிற்றில் குழந்தையும், தான் பெற்றுக்கொண்ட அனுபவமும், மறுபடியும் தேயிலைத் தோட்டத்துக்கு வேலைக்குச் செல்வதற்கு அவரை அனுமதிக்க மறுத்தது.
வாழ்வாதாரத்துக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தவருக்கு, தேயிலை தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கான உணவை சமைத்து விற்கலாம் என்கிற எண்ணம் உண்டானது.
அன்றிலிருந்து சிறுகச்சிறுக தன் தொழிலை மேம்படுத்தியவர், ஓகோ என்று வாழாவிட்டாலும் தேவையான அளவு உழைப்போடு நிம்மதியாகவே வாழ்ந்தார்.
ஆனாலும், உடலாலும் உள்ளத்தாலும் மிகவும் நொந்திருந்தார் மரகதம். சொந்தம் என்று யாருமில்லாத நிலையும், சுயநலமற்ற அன்புக்கு ஏங்கிய தான் ஒருவனின் உடல் தேவைக்கு இரையானதும், அவரைப் பெரிதும் பாதித்தது.
அதனாலேயே, மகளைக் கவனமாக வளர்க்கவேண்டும் என்கிற எண்ணத்தில், அவளுக்கான அடக்குமுறைகளை மிகவும் கடுமையாகக் கையாண்டார். பிறப்பிலேயே வாயாடியாகப் பிறந்த கவிநயா, தாயின் புத்திமதிகளைக் கேட்டுக்கொண்ட போதிலும், ஒரு அளவுக்கு மேல் வாயை அடக்க முடிந்ததில்லை அவளால்.
அதனாலேயே தாயிடம் தினமும் திட்டும் அடியும் வாங்கியே அவளின் நாட்கள் நகர்ந்தது.
வீட்டிலிருந்து பள்ளிக்கு அந்த மலைப்பாதையில் நடந்துகொண்டிருந்தாள் கவி. மலையின் கீழே பள்ளி இருப்பதால், இறக்கமான பாதையில் வேக வேகமாக நடந்தவளை, "அடியே குண்டுப் பூசணி. மெதுவாக நட. நிலம் நடுங்குகிறது பார்...." என்றொரு குரல் அவளைச் சீண்டியது.
இன்றாவது யாருடனும் சண்டை பிடிக்கக்கூடாது என்று நினைத்தவளின் பொறுமை பறக்க, "அடேய் விருமாண்டி! கையில் கிடைத்தாய் என்றால் உன்னை வெறும் ஆண்டி ஆக்கிவிடுவேன். மரியாதையாக வாயை மூடிக்கொண்டு ஓடிவிடு..." என்றாள் கோபத்துடன்.
யார் என்று தெரிந்தபோதும் அந்தக் குரலுக்குரியவன் எங்கிருக்கிறான் என்று தன்னுடைய பெரிய கண்களை நாலாபக்கமும் சுழற்றினாள் கவி.
"ஏய் கறுப்பி, உன் கண் என்ன காத்தாடியா? இந்த சுழற்றுச் சுழற்றுகிறாய்..."
இப்போதும் உருவம் இல்லாது குரல் மட்டும் வந்தது.
கறுப்பி என்கிற அழைப்பு அவளிடம் கொஞ்சமாக இருந்த நிதானத்தையும் இழக்க வைத்தது.
"அடேய் தைரியம் கெட்டவனே. வெளியே வாடா. உன்னை என்ன செய்கிறேன் பார்....." கோபம் தலைக்கேற, நிலத்தில் கிடந்த கல்லொன்றை எடுத்து, பேச்சுக்குரல் வந்த திசைப்பக்காமாக குறி பார்த்தாள் கவி.
"ஐயோ கவி எறிந்துவிடாதே. நானும் இருக்கிறேன்." என்றபடி, மரத்தின் பின்னால் ரவியின் கைப்பிடியில் மாட்டியிருந்த வசந்தராஜ், ரவியை உதறிவிட்டு வெளியே வந்தான்.
"ராஜண்ணா, அந்த எருமையை வெளியே வரச்சொல்லுங்கள். இன்று அவன் மண்டையை உடைக்காமல் நான் போகமாட்டேன்.." என்றவளின் உதடுகளும் கண்களும் கோபத்தில் துடித்தது.
அவளின் பெரிய கண்கள் ஆடும் கரகாட்டத்தைப் பார்த்துச் சிரித்தவாறே, மரத்தின் மறைவில் இருந்து வெளியே வந்தான் ரவி. "என்னடி செய்வாய்? எங்கே உடை பார்ப்போம் என் மண்டையை. குண்டுக் கத்தரிக்காய். நீ நிலத்தில் உருள்வதற்குத்தான் சரியடி..." மறுபடியும் அவளைச் சீண்டினான்.
"அடேய் கொக்கத்தடி. உன்னை ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் அந்த லைட் போஸ்ட்டில் அடித்து தொங்க விடுகிறேனா இல்லையா பார்...." உதடு துடிக்க வார்த்தையாடியவளை, "கவி!!" என்ற ராஜின் குரல் அடக்கியது.
"என்னை மட்டும் அடக்குங்கள் அண்ணா. அவனை ஒன்றும் சொல்லாதீர்கள்...." ராஜிடமும் கோபத்துடன் கத்தியவளிடம், "உங்கள் இருவருக்கும் தான் சொல்கிறேன். யாராவது என் பேச்சைக் கேட்கிறீர்களா?" என்றான் சிறு சலிப்புடன் ராஜ்.
"என்னைக் கறுப்பி என்று சொல்லவேண்டாம் என்று அவனிடம் சொல்லுங்கள் ராஜண்ணா..." என்று கவி முறையிடவும்,
"உனக்கும் எனக்கும் ஒரே வயதுதான். ஆனாலும் உன்னை அண்ணா என்று கூப்பிடுபவள் என்னை மட்டும் ஏன் அவன் இவன் என்று சொல்ல வேண்டும். முதலில் என்னையும் அண்ணா என்று கூப்பிடச்சொல் அவளை...." என்று தானும் முறையிட்டான் ரவிவர்மன்.
"என்னது? உன்னை நான் அண்ணா என்று கூப்பிடுவதா? ஆடு மாட்டை எல்லாம் நான் அண்ணா என்று சொல்வதில்லை..." நக்கலாக சொன்னவளைப் பார்த்து முறைத்த ரவி, "போடி! நீ பெரிய மகாராணி. நீ அண்ணா என்று கூப்பிடவில்லை என்றுதான் நான் இங்கே ஏங்குகிறேன். அடி குண்டுப் பூசணி நீ ஒரு மண்டுப் பூசணி...." என்றான் அவனும் விடாது.
"அடேய் எருமை மாடு. என்னைக் குண்டு என்று சொல்வாயா?" என்று கேட்டபடி, கையில் இருந்த கல்லோடு அவனைத் துரத்தியவளின் கையில் அகப்படாமல் பாய்ந்து ஓடினான் ரவி.
"கவி, நில். கவி.. சொல்கிறேன் இல்லையா. நீங்கள் இருவருமே திருந்தப்போவது இல்லை. கவி...நில்!! பள்ளிக்கு நேரமாகிறது. அவனைத் துரத்துவதை விட்டுவிட்டு பள்ளிக்குச் செல்...." என்ற ராஜின் குரலுக்கு, மனமே இல்லாமல் நின்றவளுக்கு, ரவியை த் துரத்திக்கொண்டு ஓடியதில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.
"அவன் மட்டும் என் கையில் கிடைத்தான் சாம்பல் ஆக்கிவிடுவேன். சொல்லி வையுங்கள் அவனிடம்..." என்று, அப்போதும் மூச்சு வாங்கியபடி,ரவியைக் கைநீட்டி எச்சரித்துவிட்டு பள்ளிக்கு நடையை கட்டினாள் கவி.
‘என் கையில் மாட்டுடா. உனக்கு சங்குதான். வரவர உன் ஆட்டம் அதிகமாகிறது. என்னைக் குண்டு என்று சொன்ன உன் வாயிலேயே ஒரு குத்து விடுகிறேன்...’ என்று அவனைத் திட்டியபடி பள்ளி சென்றவள், அங்கே தோழிகளுடன் கூடியவுடன் வரும் வழியில் நடந்தவைகளை தற்காலிகமாக மறந்துபோனாள்.