அத்தியாயம்-7
நெற்றியில் கட்டுடன் வந்தவனைப் பார்த்துப் பதறி, "என்ன நடந்தது ரவி? சைக்கிளால் விழுந்தாயா?" என்று கேட்ட சகுந்தலாவிடம், "ஆ..மா..ம் அம்மா....." என்றான் ரவி தடுமாற்றத்துடன், தாயின் முகம் பாராது.
பின்னே, முதன் முதலாகத் தாயிடம் பொய் சொல்கிறான் அல்லவா. அவனில் உயிரையே வைத்திருக்கும், அவனுக்காகவே வாழும் அம்மாவிடம் ஒரு பொய்யைச் சொன்னதில் மனம் தடுமாறியது. அதற்காக நடந்ததைச் சொல்லவும் விரும்பவில்லை அவன். என்னதான் மகனில் பாசமாக இருந்தாலும், வசதியற்றவர்களுடன், அதுவும் கூலிக்கு வேலை செய்து பிழைப்பவர்களிடம் அவன் பழகுவதில் சகுந்தலாவுக்கு உடன்பாடு இல்லை.
ராஜின் தந்தையும் தாயும் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறிப்பவர்கள் என்பதால், அவனுடன் ரவி பழகுவதையே விரும்பாதவர் சகுந்தலா. ஆனால் மகனின் உயிர் நண்பன் ராஜ் என்பதால் பொறுத்துக் கொள்பவர், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவனின் நட்பை விடசொல்லி சொல்வதையும் தவறவிடுவதில்லை.
அப்படியானவரிடம், சமையல் வேலை செய்பவளின் மகள் தன் மண்டையை உடைத்தாள் என்று சொன்னால், என்ன சொல்வாரோ என்கிற பயமும், கவியைக் காட்டிக்கொடுக்க மனது விரும்பாததிலும், தாய் 'சைக்கிளால் விழுந்தாயா' என்று கேட்கவும் ஆம் என்றுவிட்டான் அவன்.
"கவனமாக ஓட்டக்கூடாதா ரவி? சின்னக் காயம் என்றபடியால் பரவாயில்லை. இதுவே பெரிதாக ஏதும் நடந்திருந்தால்..."என்று, பரிதவிப்புடன் கண்கலங்கச் சொன்னவரின் கைகளோ ஆதுரத்துடன் மகனின் நெற்றிக்காயத்தை தடவிக்கொடுத்தது.
குற்ற உணர்ச்சியால் மனம் சுட்ட போதும், தாயின் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் பொத்திக்கொண்டவன், "அம்மா, சின்னக் காயம்தானே. இனிப் பார்த்து ஒட்டுகிறேன்....!" என்றான் ரவி.
"வா. எதற்கும் ஒரு முறை வைத்தியரிடம் காட்டிவிடலாம். அப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கும்!" என்று அழைத்தவரிடம், "அம்மா, ராஜுடன் சென்று வைத்தியரை பார்த்து மருந்து கட்டிக்கொண்டுதான் வருகிறேன்..." என்றான் ஆறுதலாக.
அவனை முறைத்தவர், "அவனைப் பார்க்கப்போய்த்தான் விழுந்திருக்கிறாய் இல்லையா...! முதலில் அவனுடன் பழகுவதை நிறுத்து! இங்கிருந்து தினமும் அந்த மலைக்குச் சைக்கிளை மிதிக்கிறாயே, உனக்கு என்ன வேண்டுதலா?" என்றார் கோபத்துடன்.
"அம்மா, அவன் என் நண்பன்! தயவு செய்து இந்தப் பேச்சை விடுங்கள்! எனக்கு தலை வலிக்கிறது. நான் கொஞ்சம் தூங்கபோகிறேன்..." என்றான் சோர்வுடன்.
மகனின் முகம் வாடவும், "சரிசரி. அவனைப் பற்றி நான் எதுவும் கதைக்கவில்லை. நீ சாப்பிட்டு விட்டுத் தூங்கு." என்றவர், அவனுக்கு உணவை எடுத்து வைத்தார். இரவு உணவினை முடித்துக்கொண்டு கட்டிலில் விழுந்தவனின் மனம் எழுத்தில் வடிக்கமுடியா பரவசத்தில் மிதந்தது.
இதுவரை அறியாத ஒரு உணர்வு, தேகம் முழுதும் பஞ்சாய்ப் பறப்பது போல் இருந்தது ரவிக்கு. பட்ட காயத்தால் தலை வலித்தபோதும், அதுகூடச் சுகமாக இருந்தது அவனுக்கு! பாடவேண்டும் போல் தோன்றியது. ஆனால் பாட்டு வரவில்லை. துள்ளிகுதித்து ஆடவேண்டும் போலிருந்தது. தலைவலி ஆடவிட மறுத்தது. இதழ்களில் ஒரு புன்னகை. கண்களோ முகட்டில் தெரிந்த ஏதோ ஒன்றைத் தன்னை மறந்து ரசித்தது. இத்தனைக்கும் காரணம், இன்று மாலை கண்ணனால் அவனுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட 'காதல்' என்கிற ஒரு சொல்லே!
தூக்கம் வரமாட்டேன் என்று அடம்பிடித்தாலும், கண்ணை மூடிப் படுத்திருந்தவனின் மனமோ முழித்துக் கிடந்தது. உணர்வுகளின் பரபரப்பில் தூக்கம் இன்றியே அன்றைய இரவை கழித்தவன், அடுத்த நாள் காலை உற்சாகமாக பள்ளிக்குத் தயாராகிச் சென்றான்.
அதுவரை ராஜை மட்டுமே பார்க்கச் சென்ற ரவி, இன்று இனம் புரியா ஒரு தேடலையும் சுமந்துகொண்டு ராஜின் கிராமத்துக்கு சைக்கிளை மிதித்தான்.
எதை எதிர்பார்க்கிறோம் என்றே தெரியாத ஒரு எதிர்பார்ப்பு, எதற்கு இந்த பரபரப்பு என்றே தெரியாத ஒரு தடுமாற்றம் அவனைச் சூழ்ந்திருந்தது.
அந்தப் பாதையையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த ரவியின் கண்கள் தூரத்தில் வந்துகொண்டிருந்த கவியைக் கண்டுகொண்டது. பளிச்சிடலுடன் கண்கள் விரிய, சிறு சிரிப்புடன் அவளையே பாத்திருந்தவனை முறைத்தவாறே நடந்து வந்தாள் கவிநயா.
அவனின் பார்வை அவளின் முகத்தை விட்டு அகலாமல் தொடரவே, "என்னடா எலும்புக்கூடு. நேற்று வாங்கியது போதாதா?" என்றவளின் கண்களோ, ஏளனமாக அவனின் நெற்றியைத் தொட்டு மீண்டது. அவன் மண்டையை உடைத்துவிட்டாளாம்!
அப்போதும் சிரிப்பு மாறாது, ரசனையான பார்வையால் அவளை அளந்துகொண்டே, "என் மண்டையை உடைத்தும் உன் கோபம் போகவில்லையா...?" என்று சிறு நகை கலந்த குரலில் கேட்டான்.
அவனின் கோபம் இல்லா குரலில், ஏன் சீண்டல் கூட இல்லாமல் வந்த சாதாரண குரலில் திகைத்து நின்றாள் கவிநயா.
என்னதான் தைரியமாக காட்டிக்கொண்டாலும், அவனின் மண்டையை உடைத்ததை நினைக்கையில் அவளுக்குள் சிறு பயம் இருந்தது உண்மை. அவனுக்கு கோபம் வந்திருக்குமோ, இன்று என்னைக் கண்டவுடன் அடித்து விடுவானோ அல்லது பயங்கரமாக மிரட்டுவானோ என்று பயந்துகொண்டே தான் அவள் பள்ளிக்கு நடந்துவந்தது.
பயத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் அலட்சியம் காட்டி நடந்துவந்தவள், அவனின் மனநிலையை அறியவே தைரியமாக பேசுவது போல் பேச்சை ஆரம்பித்ததும். அவன் மிக இலகுவாகக் கதைத்ததில், ‘இவனுக்கு மண்டையில் அடி பட்டதில் ஏதும் நடந்துவிட்டதோ...’ என்று குழம்பியவள், அவனை உற்றுப் பார்த்துவிட்டு விறு விறுவென நடந்து சென்றாள்.
பின்னே, கோபம் எதுவும் இல்லாமல் இருப்பவனிடம் வம்பை வளர்த்து அவன் அடித்துவிட்டால் என்ன செய்வது? எனவே நல்ல பிள்ளையாக எட்டி நடந்தாள். அவள் போவதையே பாத்திருந்தவனின் உள்ளத்தில் ஏனோ ஒரு துள்ளல்!
ரவிக்கு மனம் இதமாக சுகமாக இசை பாடியது. காரணம் இல்லா இந்த சுகத்துக்கான காரணத்தைத் தேடாது, உதட்டில் வற்றாத புன்னகையுடன், அவள் தன் பார்வையில் இருந்து மறையும்வரை அவளையே பாத்திருந்தவன், சைக்கிளில் அமர்ந்து அதை மிதித்தான்.
எதிரே ராஜ் வரவும், "ஹாய்டா...." என்றான் மலர்ந்த சிரிப்போடு.
அவனைக் குறுகுறு என்று பார்த்த ராஜ், "என்னடா.... இவ்வளவு சந்தோசமாக இருக்கிறாய்? என்ன விஷயம்? நேற்று மண்டை உடைந்ததில் எதுவும் பிசகிவிட்டதா?" என்றான், தலையைக் கையினால் தொட்டுக்காட்டி.
சத்தமாகச் சிரித்த ரவி, "அப்படி எதுவும் இல்லைடா மச்சான். ஒரு மனிதன் சிரிப்பது ஒரு குற்றமா? இல்லை, சந்தோசமாக இருப்பது குற்றமா? மனம் விட்டுச் சிரிப்பவனை உங்கள் ஊரில் லூசு என்று சொல்வீர்களா?" என்றான் சிரிப்போடு.
ரவியைக் கையெடுத்துக் கும்பிட்ட ராஜ், "என்னை விட்டுடு ராசா! மச்சான் என்று உறவு வேறு கொண்டாடுகிறாய். உனக்கு என்னவோ ஆகிவிட்டது! அது மட்டும் மிக நன்றாக விளங்குகிறது எனக்கு! மலிந்தால் சந்தைக்கு வரும்தானே… அப்போது கேட்கிறேன்...!" என்றவனின் செயலில், மறுபடியும் வாய்விட்டுச் சிரித்தான் ரவி.
கரிய முகத்தில், அரும்பிய மீசையுடன் கம்பீரமாக வெண்பற்கள் தெரியச் சிரித்தவனை பார்த்த ராஜின் முகத்திலும் மெல்லிய சிரிப்பொன்று ஓடியது.
"விட்டால் இன்று முழுதும் நீ சிரித்துக்கொண்டே இருப்பாய்! பள்ளிக்கு நேரமாகிவிட்டது. வா போகலாம்..." என்றபடி ராஜ் சைக்கிளை மிதிக்கவும், ரவியும் அவனோடு சென்றான்.
"இன்று நீ வருவதற்கு நேரம் பிந்திவிட்டதே, ஏன் ராஜ்?" சைக்கிளை மிதித்தபடி கேட்டான் ரவி.
"ப்ச்! மறுபடியும் அப்பாவுக்கு முடியாமல் போய்விட்டது ரவி. வேலைக்கு போகவேண்டாம் என்று சொன்னால், சாப்பாட்டுக்கு வழி என்ன என்று கேட்கிறார். அம்மா மட்டும் வேலை செய்தால் வீட்டுச் செலவுக்கும் போதாது. பேசாமல் படிப்பைத் தூக்கி மூலையில் போட்டுவிட்டு வேலையைப் பார்க்கலாமா என்றும் தோன்றுகிறது. அதுதான் இன்று அப்பாவை வீட்டில் மறித்துவிட்டு வேலைக்கு நான் போகலாம் என்று நினைத்தேன். அவரோ, தான் வேலைக்கு போவதாகச் சொல்லி என்னைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டார். அதுதான் வருவதற்கு கொஞ்சம் பிந்திவிட்டது." என்றவனின் குரலில் சோர்வு நிரம்பி வழிந்தது.
ஏழ்மை, மனிதனின் தன்னம்பிக்கையை அடியோடு அழிக்கும் மிகப் பயங்கரமான ஆயுதம். அது இன்று ராஜின் மனதைப் போட்டு வாட்டியத்தில், அவன் குரல் சுரத்தில்லாமல் வந்தது.
நண்பனின் நிலையை அறிந்தவன், "நான் பணம் தரவா ராஜ். என்னிடம் உனக்கு என்னடா கவுரவம் பார்க்கவேண்டி இருக்கிறது. எப்போது கேட்டாலும் வேண்டாம் என்று மறுக்கிறாய். உனக்குச் செய்வதில் எனக்கு என்னடா வர இருக்கிறது? இப்படி உன் அப்பாவையும் வருத்தி உன்னையும் வருத்த வேண்டுமாடா. நான் உன் நண்பன் தானே ராஜ்? நான் உதவி செய்தால் அதை ஏற்க மாட்டாயா?" என்று கேட்ட ரவியின் குரலில், ஆதங்கம் நிறைந்திருந்தது. நண்பனின் கஷ்டத்தைப் போக்க தன்னிடம் வழி இருந்தும் அதை ஏற்க மறுக்கிறானே என்கிற கோபமும் கலந்திருந்தது.
"ஹேய் ரவி. எந்த உறவையும் கெடுக்கும் முதல் எதிரி இந்தப் பணம் தான்டா! அது நமக்குள் வரவேண்டாம்! அத்தோடு என் சொத்தாக இருப்பது இந்தச் சுயகவுரவம் ஒன்றுதான்! அதை எந்த இடத்திலும் இழக்க நான் விரும்பவில்லை ரவி!" என்றவன் தொடர்ந்து, "நீ என் நண்பன்டா....! நட்பு என்பது எதையும் எதிர்பார்க்காமல் வரும் உன்னத உறவு! இன்று நீ பணம் தந்தால், மறுபடியும் ஒரு கஷ்டம் என்று வருகையில் உன் உதவியை எதிர்பார்க்கும் என் மனம். அப்படி ஒரு எதிர்பார்ப்புடன் உன்னுடன் நட்பாகப் பழக எனக்கு விருப்பம் இல்லை. தயவு செய்து என்னைப் புரிந்துகொள் ரவி!" என்றான் ராஜ்.
எப்போது இதைப் பற்றிப் பேசினாலும் ராஜின் பதில் இதுவாகவே இருப்பதால் உண்டான சலிப்பில், "போடா! நீயும் உன் தத்துவமும்! வசதி இருந்தும், நீ கஷ்டபடுகிறாய் என்று தெரிந்தும் ஒரு உதவியும் செய்ய முடியவில்லையே என்று என் மனம் கஷ்டபடுகிறது. அது புரியவில்லை உனக்கு! ஆனால் என்றாவது உனக்கு எந்த உதவி தேவை என்றாலும் உன் நண்பன் நான் இருக்கிறேன் என்பதை மறவாதே!" என்றான் ரவி.
"நிச்சயமாக ரவி. யாரினதும் உதவி எனக்கு வேண்டும் என்கிற நிலை வந்தால், நான் உன்னிடம் தான் முதன் முதலில் வருவேன்..." என்றான் ராஜும் முகம் மலர. அதற்கு மேல் அதைப் பற்றிப் பேசாது, வேறு பேசி ராஜின் மனதை மாற்றினான் ரவி.
மாலையில் பள்ளி முடிந்து ராஜுடன் வந்த ரவியின் கண்களில், அருந்ததியுடன் பேசியபடி வந்த கவி பட்டாள். மனதை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த ஒருவித மயக்க மலைச்சாரலில் நனைந்துகொண்டிருந்தவனின் கண்கள் அவளைக் கண்டதும் குறும்பில் மின்னியது. "எங்கே போய்விட்டு வருகிறாய் கறுப்பி?" என்றான், அவளின் வாயைக் கிளரும் ஆசையில்.
வெள்ளைச் சீருடையில் பள்ளி ‘பாக்’கைச் சுமந்தபடி வருபவள், எங்கே போய்வருவாள் என்று பார்ப்பவருக்குப் புரியாதா என்ன! அவன் தன்னைச் சீண்டவே அப்படிக் கேட்கிறான் என்பதை உணர்ந்தவள், "அதுவா.., உன் சமாதிக்குப் பூ வைத்துவிட்டு வருகிறேன்..." என்றாள் அவனை முறைத்தபடி!
"உண்மையாகவா கவிநாய்? என்ன நிறப்பூ வைத்தாய்? உன்னைப்போல இருக்கும் கறுப்பு பூ வைத்தாயா கவிநாய்....?" என்று அவன் அவளை 'நாய்' என்று சீண்டவும், அடித்துவிட்டோமே என்று கொஞ்சமே கொஞ்சம் மிஞ்சி இருந்த தயக்கத்தையும் தூக்கி எறிந்துவிட்டு,
"அடி வாங்கியும் அடங்கவில்லையாடா நீ? அடேய் பிசாசு, இனி என் கையில் அகப்பட்டாய்.. கல்லால் எறியமாட்டேன். உன் மண்டையை அப்படியே பிடுங்கி, உரலில் போட்டு இடித்து, ரசம் வைத்துக் குடித்துவிடுவேன்..." என்று, ஆள்காட்டி விரலை நீட்டித் திட்டியவளின் கண்களில் கொலை வெறியே தாண்டவமாடியது.
காளியாக மாறி அவனைக் காலியாக்கக் காத்திருந்தவளின் உருவத்தைப் பார்த்துப் பெரிதாக வாய்விட்டு நகைத்தான் ரவி. தான் என்ன சொன்னாலும் இருவரும் காதில் விழுத்தப் போவதில்லை என்பதை உணர்ந்து, எதுவும் சொல்லாது இருவரையும் முறைத்தபடி நின்றான் ராஜ்.
நெற்றியில் கட்டுடன் வந்தவனைப் பார்த்துப் பதறி, "என்ன நடந்தது ரவி? சைக்கிளால் விழுந்தாயா?" என்று கேட்ட சகுந்தலாவிடம், "ஆ..மா..ம் அம்மா....." என்றான் ரவி தடுமாற்றத்துடன், தாயின் முகம் பாராது.
பின்னே, முதன் முதலாகத் தாயிடம் பொய் சொல்கிறான் அல்லவா. அவனில் உயிரையே வைத்திருக்கும், அவனுக்காகவே வாழும் அம்மாவிடம் ஒரு பொய்யைச் சொன்னதில் மனம் தடுமாறியது. அதற்காக நடந்ததைச் சொல்லவும் விரும்பவில்லை அவன். என்னதான் மகனில் பாசமாக இருந்தாலும், வசதியற்றவர்களுடன், அதுவும் கூலிக்கு வேலை செய்து பிழைப்பவர்களிடம் அவன் பழகுவதில் சகுந்தலாவுக்கு உடன்பாடு இல்லை.
ராஜின் தந்தையும் தாயும் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறிப்பவர்கள் என்பதால், அவனுடன் ரவி பழகுவதையே விரும்பாதவர் சகுந்தலா. ஆனால் மகனின் உயிர் நண்பன் ராஜ் என்பதால் பொறுத்துக் கொள்பவர், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவனின் நட்பை விடசொல்லி சொல்வதையும் தவறவிடுவதில்லை.
அப்படியானவரிடம், சமையல் வேலை செய்பவளின் மகள் தன் மண்டையை உடைத்தாள் என்று சொன்னால், என்ன சொல்வாரோ என்கிற பயமும், கவியைக் காட்டிக்கொடுக்க மனது விரும்பாததிலும், தாய் 'சைக்கிளால் விழுந்தாயா' என்று கேட்கவும் ஆம் என்றுவிட்டான் அவன்.
"கவனமாக ஓட்டக்கூடாதா ரவி? சின்னக் காயம் என்றபடியால் பரவாயில்லை. இதுவே பெரிதாக ஏதும் நடந்திருந்தால்..."என்று, பரிதவிப்புடன் கண்கலங்கச் சொன்னவரின் கைகளோ ஆதுரத்துடன் மகனின் நெற்றிக்காயத்தை தடவிக்கொடுத்தது.
குற்ற உணர்ச்சியால் மனம் சுட்ட போதும், தாயின் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் பொத்திக்கொண்டவன், "அம்மா, சின்னக் காயம்தானே. இனிப் பார்த்து ஒட்டுகிறேன்....!" என்றான் ரவி.
"வா. எதற்கும் ஒரு முறை வைத்தியரிடம் காட்டிவிடலாம். அப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கும்!" என்று அழைத்தவரிடம், "அம்மா, ராஜுடன் சென்று வைத்தியரை பார்த்து மருந்து கட்டிக்கொண்டுதான் வருகிறேன்..." என்றான் ஆறுதலாக.
அவனை முறைத்தவர், "அவனைப் பார்க்கப்போய்த்தான் விழுந்திருக்கிறாய் இல்லையா...! முதலில் அவனுடன் பழகுவதை நிறுத்து! இங்கிருந்து தினமும் அந்த மலைக்குச் சைக்கிளை மிதிக்கிறாயே, உனக்கு என்ன வேண்டுதலா?" என்றார் கோபத்துடன்.
"அம்மா, அவன் என் நண்பன்! தயவு செய்து இந்தப் பேச்சை விடுங்கள்! எனக்கு தலை வலிக்கிறது. நான் கொஞ்சம் தூங்கபோகிறேன்..." என்றான் சோர்வுடன்.
மகனின் முகம் வாடவும், "சரிசரி. அவனைப் பற்றி நான் எதுவும் கதைக்கவில்லை. நீ சாப்பிட்டு விட்டுத் தூங்கு." என்றவர், அவனுக்கு உணவை எடுத்து வைத்தார். இரவு உணவினை முடித்துக்கொண்டு கட்டிலில் விழுந்தவனின் மனம் எழுத்தில் வடிக்கமுடியா பரவசத்தில் மிதந்தது.
இதுவரை அறியாத ஒரு உணர்வு, தேகம் முழுதும் பஞ்சாய்ப் பறப்பது போல் இருந்தது ரவிக்கு. பட்ட காயத்தால் தலை வலித்தபோதும், அதுகூடச் சுகமாக இருந்தது அவனுக்கு! பாடவேண்டும் போல் தோன்றியது. ஆனால் பாட்டு வரவில்லை. துள்ளிகுதித்து ஆடவேண்டும் போலிருந்தது. தலைவலி ஆடவிட மறுத்தது. இதழ்களில் ஒரு புன்னகை. கண்களோ முகட்டில் தெரிந்த ஏதோ ஒன்றைத் தன்னை மறந்து ரசித்தது. இத்தனைக்கும் காரணம், இன்று மாலை கண்ணனால் அவனுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட 'காதல்' என்கிற ஒரு சொல்லே!
தூக்கம் வரமாட்டேன் என்று அடம்பிடித்தாலும், கண்ணை மூடிப் படுத்திருந்தவனின் மனமோ முழித்துக் கிடந்தது. உணர்வுகளின் பரபரப்பில் தூக்கம் இன்றியே அன்றைய இரவை கழித்தவன், அடுத்த நாள் காலை உற்சாகமாக பள்ளிக்குத் தயாராகிச் சென்றான்.
அதுவரை ராஜை மட்டுமே பார்க்கச் சென்ற ரவி, இன்று இனம் புரியா ஒரு தேடலையும் சுமந்துகொண்டு ராஜின் கிராமத்துக்கு சைக்கிளை மிதித்தான்.
எதை எதிர்பார்க்கிறோம் என்றே தெரியாத ஒரு எதிர்பார்ப்பு, எதற்கு இந்த பரபரப்பு என்றே தெரியாத ஒரு தடுமாற்றம் அவனைச் சூழ்ந்திருந்தது.
அந்தப் பாதையையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த ரவியின் கண்கள் தூரத்தில் வந்துகொண்டிருந்த கவியைக் கண்டுகொண்டது. பளிச்சிடலுடன் கண்கள் விரிய, சிறு சிரிப்புடன் அவளையே பாத்திருந்தவனை முறைத்தவாறே நடந்து வந்தாள் கவிநயா.
அவனின் பார்வை அவளின் முகத்தை விட்டு அகலாமல் தொடரவே, "என்னடா எலும்புக்கூடு. நேற்று வாங்கியது போதாதா?" என்றவளின் கண்களோ, ஏளனமாக அவனின் நெற்றியைத் தொட்டு மீண்டது. அவன் மண்டையை உடைத்துவிட்டாளாம்!
அப்போதும் சிரிப்பு மாறாது, ரசனையான பார்வையால் அவளை அளந்துகொண்டே, "என் மண்டையை உடைத்தும் உன் கோபம் போகவில்லையா...?" என்று சிறு நகை கலந்த குரலில் கேட்டான்.
அவனின் கோபம் இல்லா குரலில், ஏன் சீண்டல் கூட இல்லாமல் வந்த சாதாரண குரலில் திகைத்து நின்றாள் கவிநயா.
என்னதான் தைரியமாக காட்டிக்கொண்டாலும், அவனின் மண்டையை உடைத்ததை நினைக்கையில் அவளுக்குள் சிறு பயம் இருந்தது உண்மை. அவனுக்கு கோபம் வந்திருக்குமோ, இன்று என்னைக் கண்டவுடன் அடித்து விடுவானோ அல்லது பயங்கரமாக மிரட்டுவானோ என்று பயந்துகொண்டே தான் அவள் பள்ளிக்கு நடந்துவந்தது.
பயத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் அலட்சியம் காட்டி நடந்துவந்தவள், அவனின் மனநிலையை அறியவே தைரியமாக பேசுவது போல் பேச்சை ஆரம்பித்ததும். அவன் மிக இலகுவாகக் கதைத்ததில், ‘இவனுக்கு மண்டையில் அடி பட்டதில் ஏதும் நடந்துவிட்டதோ...’ என்று குழம்பியவள், அவனை உற்றுப் பார்த்துவிட்டு விறு விறுவென நடந்து சென்றாள்.
பின்னே, கோபம் எதுவும் இல்லாமல் இருப்பவனிடம் வம்பை வளர்த்து அவன் அடித்துவிட்டால் என்ன செய்வது? எனவே நல்ல பிள்ளையாக எட்டி நடந்தாள். அவள் போவதையே பாத்திருந்தவனின் உள்ளத்தில் ஏனோ ஒரு துள்ளல்!
ரவிக்கு மனம் இதமாக சுகமாக இசை பாடியது. காரணம் இல்லா இந்த சுகத்துக்கான காரணத்தைத் தேடாது, உதட்டில் வற்றாத புன்னகையுடன், அவள் தன் பார்வையில் இருந்து மறையும்வரை அவளையே பாத்திருந்தவன், சைக்கிளில் அமர்ந்து அதை மிதித்தான்.
எதிரே ராஜ் வரவும், "ஹாய்டா...." என்றான் மலர்ந்த சிரிப்போடு.
அவனைக் குறுகுறு என்று பார்த்த ராஜ், "என்னடா.... இவ்வளவு சந்தோசமாக இருக்கிறாய்? என்ன விஷயம்? நேற்று மண்டை உடைந்ததில் எதுவும் பிசகிவிட்டதா?" என்றான், தலையைக் கையினால் தொட்டுக்காட்டி.
சத்தமாகச் சிரித்த ரவி, "அப்படி எதுவும் இல்லைடா மச்சான். ஒரு மனிதன் சிரிப்பது ஒரு குற்றமா? இல்லை, சந்தோசமாக இருப்பது குற்றமா? மனம் விட்டுச் சிரிப்பவனை உங்கள் ஊரில் லூசு என்று சொல்வீர்களா?" என்றான் சிரிப்போடு.
ரவியைக் கையெடுத்துக் கும்பிட்ட ராஜ், "என்னை விட்டுடு ராசா! மச்சான் என்று உறவு வேறு கொண்டாடுகிறாய். உனக்கு என்னவோ ஆகிவிட்டது! அது மட்டும் மிக நன்றாக விளங்குகிறது எனக்கு! மலிந்தால் சந்தைக்கு வரும்தானே… அப்போது கேட்கிறேன்...!" என்றவனின் செயலில், மறுபடியும் வாய்விட்டுச் சிரித்தான் ரவி.
கரிய முகத்தில், அரும்பிய மீசையுடன் கம்பீரமாக வெண்பற்கள் தெரியச் சிரித்தவனை பார்த்த ராஜின் முகத்திலும் மெல்லிய சிரிப்பொன்று ஓடியது.
"விட்டால் இன்று முழுதும் நீ சிரித்துக்கொண்டே இருப்பாய்! பள்ளிக்கு நேரமாகிவிட்டது. வா போகலாம்..." என்றபடி ராஜ் சைக்கிளை மிதிக்கவும், ரவியும் அவனோடு சென்றான்.
"இன்று நீ வருவதற்கு நேரம் பிந்திவிட்டதே, ஏன் ராஜ்?" சைக்கிளை மிதித்தபடி கேட்டான் ரவி.
"ப்ச்! மறுபடியும் அப்பாவுக்கு முடியாமல் போய்விட்டது ரவி. வேலைக்கு போகவேண்டாம் என்று சொன்னால், சாப்பாட்டுக்கு வழி என்ன என்று கேட்கிறார். அம்மா மட்டும் வேலை செய்தால் வீட்டுச் செலவுக்கும் போதாது. பேசாமல் படிப்பைத் தூக்கி மூலையில் போட்டுவிட்டு வேலையைப் பார்க்கலாமா என்றும் தோன்றுகிறது. அதுதான் இன்று அப்பாவை வீட்டில் மறித்துவிட்டு வேலைக்கு நான் போகலாம் என்று நினைத்தேன். அவரோ, தான் வேலைக்கு போவதாகச் சொல்லி என்னைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டார். அதுதான் வருவதற்கு கொஞ்சம் பிந்திவிட்டது." என்றவனின் குரலில் சோர்வு நிரம்பி வழிந்தது.
ஏழ்மை, மனிதனின் தன்னம்பிக்கையை அடியோடு அழிக்கும் மிகப் பயங்கரமான ஆயுதம். அது இன்று ராஜின் மனதைப் போட்டு வாட்டியத்தில், அவன் குரல் சுரத்தில்லாமல் வந்தது.
நண்பனின் நிலையை அறிந்தவன், "நான் பணம் தரவா ராஜ். என்னிடம் உனக்கு என்னடா கவுரவம் பார்க்கவேண்டி இருக்கிறது. எப்போது கேட்டாலும் வேண்டாம் என்று மறுக்கிறாய். உனக்குச் செய்வதில் எனக்கு என்னடா வர இருக்கிறது? இப்படி உன் அப்பாவையும் வருத்தி உன்னையும் வருத்த வேண்டுமாடா. நான் உன் நண்பன் தானே ராஜ்? நான் உதவி செய்தால் அதை ஏற்க மாட்டாயா?" என்று கேட்ட ரவியின் குரலில், ஆதங்கம் நிறைந்திருந்தது. நண்பனின் கஷ்டத்தைப் போக்க தன்னிடம் வழி இருந்தும் அதை ஏற்க மறுக்கிறானே என்கிற கோபமும் கலந்திருந்தது.
"ஹேய் ரவி. எந்த உறவையும் கெடுக்கும் முதல் எதிரி இந்தப் பணம் தான்டா! அது நமக்குள் வரவேண்டாம்! அத்தோடு என் சொத்தாக இருப்பது இந்தச் சுயகவுரவம் ஒன்றுதான்! அதை எந்த இடத்திலும் இழக்க நான் விரும்பவில்லை ரவி!" என்றவன் தொடர்ந்து, "நீ என் நண்பன்டா....! நட்பு என்பது எதையும் எதிர்பார்க்காமல் வரும் உன்னத உறவு! இன்று நீ பணம் தந்தால், மறுபடியும் ஒரு கஷ்டம் என்று வருகையில் உன் உதவியை எதிர்பார்க்கும் என் மனம். அப்படி ஒரு எதிர்பார்ப்புடன் உன்னுடன் நட்பாகப் பழக எனக்கு விருப்பம் இல்லை. தயவு செய்து என்னைப் புரிந்துகொள் ரவி!" என்றான் ராஜ்.
எப்போது இதைப் பற்றிப் பேசினாலும் ராஜின் பதில் இதுவாகவே இருப்பதால் உண்டான சலிப்பில், "போடா! நீயும் உன் தத்துவமும்! வசதி இருந்தும், நீ கஷ்டபடுகிறாய் என்று தெரிந்தும் ஒரு உதவியும் செய்ய முடியவில்லையே என்று என் மனம் கஷ்டபடுகிறது. அது புரியவில்லை உனக்கு! ஆனால் என்றாவது உனக்கு எந்த உதவி தேவை என்றாலும் உன் நண்பன் நான் இருக்கிறேன் என்பதை மறவாதே!" என்றான் ரவி.
"நிச்சயமாக ரவி. யாரினதும் உதவி எனக்கு வேண்டும் என்கிற நிலை வந்தால், நான் உன்னிடம் தான் முதன் முதலில் வருவேன்..." என்றான் ராஜும் முகம் மலர. அதற்கு மேல் அதைப் பற்றிப் பேசாது, வேறு பேசி ராஜின் மனதை மாற்றினான் ரவி.
மாலையில் பள்ளி முடிந்து ராஜுடன் வந்த ரவியின் கண்களில், அருந்ததியுடன் பேசியபடி வந்த கவி பட்டாள். மனதை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த ஒருவித மயக்க மலைச்சாரலில் நனைந்துகொண்டிருந்தவனின் கண்கள் அவளைக் கண்டதும் குறும்பில் மின்னியது. "எங்கே போய்விட்டு வருகிறாய் கறுப்பி?" என்றான், அவளின் வாயைக் கிளரும் ஆசையில்.
வெள்ளைச் சீருடையில் பள்ளி ‘பாக்’கைச் சுமந்தபடி வருபவள், எங்கே போய்வருவாள் என்று பார்ப்பவருக்குப் புரியாதா என்ன! அவன் தன்னைச் சீண்டவே அப்படிக் கேட்கிறான் என்பதை உணர்ந்தவள், "அதுவா.., உன் சமாதிக்குப் பூ வைத்துவிட்டு வருகிறேன்..." என்றாள் அவனை முறைத்தபடி!
"உண்மையாகவா கவிநாய்? என்ன நிறப்பூ வைத்தாய்? உன்னைப்போல இருக்கும் கறுப்பு பூ வைத்தாயா கவிநாய்....?" என்று அவன் அவளை 'நாய்' என்று சீண்டவும், அடித்துவிட்டோமே என்று கொஞ்சமே கொஞ்சம் மிஞ்சி இருந்த தயக்கத்தையும் தூக்கி எறிந்துவிட்டு,
"அடி வாங்கியும் அடங்கவில்லையாடா நீ? அடேய் பிசாசு, இனி என் கையில் அகப்பட்டாய்.. கல்லால் எறியமாட்டேன். உன் மண்டையை அப்படியே பிடுங்கி, உரலில் போட்டு இடித்து, ரசம் வைத்துக் குடித்துவிடுவேன்..." என்று, ஆள்காட்டி விரலை நீட்டித் திட்டியவளின் கண்களில் கொலை வெறியே தாண்டவமாடியது.
காளியாக மாறி அவனைக் காலியாக்கக் காத்திருந்தவளின் உருவத்தைப் பார்த்துப் பெரிதாக வாய்விட்டு நகைத்தான் ரவி. தான் என்ன சொன்னாலும் இருவரும் காதில் விழுத்தப் போவதில்லை என்பதை உணர்ந்து, எதுவும் சொல்லாது இருவரையும் முறைத்தபடி நின்றான் ராஜ்.