புயல் 25
மௌலி இல்லத்தின் கூடத்தை மட்டும், வீட்டு வேலை செய்பவர்களுடன் சேர்ந்து அனு, வினையா, ருத்திக் மூவரும் அலங்காரம் செய்தனர்; பிரணவி, வித்யூ இருவர் மட்டும் அதில் கலந்துகொள்ளவில்லை.
அன்று மௌலியிடம், "பிருத்வி மறக்க நினைக்கிற பக்கங்கள்னு சொல்றீங்களே? அப்படி என்னதான் நடந்துச்சு மாமா?" எனக் கேட்டாள் ஆர்யா. அவரும் 'சொல்லலாமா வேண்டாமா?' என்று தயங்கிய நேரத்தில் தான், லண்டனிலிருந்து ருத்திக் நாடு திரும்பி வீட்டிற்குள் நுழைந்தான்.
"பெரியப்பா" என அழைத்துக் கொண்டே ஓடிவந்து அவரைக் கட்டி அணைத்தான். அவரும் அவனை ஆரத்தழுவிக் கொண்டார்.
அவன் வந்ததும் அனைவரும் அங்கே கூட, ராஜேஸ்வரியும் அவனை அணைத்துக்கொண்டு நெற்றியில் முத்தமிட்டார். செல்வராணி கண்ணீருடன் மகனை அணைத்து விடுத்தார். அவனது வருகை அனைவருக்கும் மகிழ்ச்சியையே தந்தது.
ஆர்யாவைக் கண்டதுமே அவள் அருகே வந்து, "ஹாய் அண்ணி! நான் ருத்திக்" என்று தன்னை அறிமுகம் செய்தான். "ஹாய் ருத்திக், நான் ஆர்யாங்க! எப்படி இருக்கீங்க நீங்க?"
"நான் நல்லா இருக்கேன் அண்ணி" என்று அடுத்துப் பேச வந்தவனை, "ருத்திக்..." என்று செல்வராணி தன் கோபத்தை மறைத்தபடி அழைக்க, "அப்புறம் பேசலாம் அண்ணி" என்று அங்கிருந்து சென்றான். அவன் வருகையால் மௌலி சொல்ல வந்ததைக் கேட்க மறந்தவள், பிருத்வியின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
அவன் இந்தியா வரும் நாள் அவனது பிறந்தநாள் என்பதால், அவனுக்காகத்தான் இந்த அலங்காரம். செல்வராணிக்கும் பிரணவிக்கும் அங்கு 'என்ன நடக்கிறது?' என்று புரியவில்லை; எதற்கு இந்த அலங்காரம் என்றும் தெரியவில்லை. கேட்டாலும் யாரும் சொல்லவில்லை. அதனால் அமைதியாக வேடிக்கை பார்த்தனர்.
பிருத்வி வரும் நேரத்தில் சிறியவர்கள் அனைவரும் தயாராக இருந்தனர். உள்ளே அவன் நுழைந்த நொடியில் பாப்பர்ஸ் வெடிக்க, "ஹாப்பி பர்த்டே அண்ணா!" என்று சத்தமாகக் கத்தினர். அவர்களுடன் ஆதித்யாவும் வாசுகியும் இணைந்திருந்தனர்.
இதை எதிர்பாராத செல்வராணியும் பிரணவியும் அதிர்ந்து போனார்கள். சிறுவர்களுடன் பெரியவர்களும் இணைந்து நின்றனர்.
"பிருத்வி" என அவனருகே வந்தாள் ஆர்யா. அவனோ இந்த அதிர்ச்சியில் சிலையாக நின்றான்.
அவன் கையைப் பற்றி, "போங்க, போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க" என்றாள்.
அறைக்குள் சென்று குளித்து, அவள் எடுத்துக் கொடுத்த உடையைப் போட்டுக்கொண்டு கீழே வந்தான். அவன் முன்னே கேக் வைக்கப்பட்டிருந்தது.
கத்தியைக் கொடுத்து வெட்டச் சொன்னார்கள். அவனது கண்கள் கலங்கியிருந்தன. கடைசியாக அவன் எப்போது குடும்பத்துடன் இணைந்து சந்தோஷமாக இருந்தான் என்று அவனுக்கே தெரியாது.
அவன் கண்கள் கலங்கி நிற்பதைக் கண்டு ராஜேஸ்வரி, அமிர்தா, மேகன், பார்வதி என அனைவரும் கலங்கிப் போனார்கள். மௌலியோ, 'மருமகள் வந்த நேரம் அனைத்தும் மாறிவிட்டது' என்று எண்ணினார்.
கத்தியை வைத்துக் கேக்கை வெட்டியவன், முதலில் மௌலிக்கு ஊட்டினான். பிறகு யாருக்கு என்று ஆர்யாவைப் பார்க்க, ராஜேஸ்வரியைக் காண்பித்தாள் ஆர்யா. தயக்கத்தோடு அவர் அருகே சென்றான் பிருத்வி. அவருக்கோ அவனைப் பார்க்கத் துணிவில்லை... கேக்கை அவன் வாயருகே கொண்டு செல்ல, அவரோ அதை பாதியாகப் பிய்த்து அவனுக்கு ஊட்டிவிட்டார். அவன், தனக்கு ஊட்டியதை வாங்கிக்கொண்ட தாயையே வெறித்தான். கண்களை மூடித் தன்னைச் சமன் செய்துகொண்டான்.
பின் அமிர்தா, மேகன், பார்வதி, கடைசியாக செல்வராணிக்குக் கொடுக்க, அவர் வேண்டா வெறுப்பாக வாங்கிக்கொண்டார். பின் மனைவிக்கு ஊட்டிவிட்டு, அடுத்துச் சிறியவர்களுக்கும் ஊட்டினான். பிரணவி அருகே செல்ல, அவள் கோபமாக முகத்தைத் திருப்பிக்கொள்ள, இவனும் நகர்ந்துவிட்டான்.
நண்பனைக் கட்டி அணைத்துக்கொண்டான் ஆதித்யா! அவனுக்கும் கண்கள் கலங்கின.
"இந்த அழகான தருணத்துல உன் பாட்டு இருக்கணும், பாடுமா" என்றார் மௌலி!
அவளும் பாட ஆரம்பித்தாள்:
"என்ன தவம் செய்தனை யசோதா! என்ன தவம் செய்தனை யசோதா!
எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றழைக்க, என்ன தவம் செய்தனை..."
என்று பாட, அவ்வளவுதான், ராஜேஸ்வரியின் அடிவயிறு சிலிர்த்தது. அதில் வரும் ஒவ்வொரு வரிகளையும் பிருத்வியையும் ராஜேஸ்வரியையும் பார்த்து அவள் பாட, அவருக்கும் தன் முதல் குழந்தையைக் கையில் ஏந்திய தருணமும், அதனுடன் விளையாடி, சோறு ஊட்டி, சேட்டைகளைக் கண்டித்துக் கொஞ்சிய நாட்களும் நினைவுக்கு வந்து போயின. அழுதுகொண்டே அவர் அவ்விடத்தை விட்டுச் செல்ல, அனைவரும் ஒரு கணம் அமைதியாகிவிட்டனர்.
ஆர்யா பயம்கொள்ள, "உன் பாட்டால அவளுக்குப் பழைய ஞாபகம் வந்திருக்கும், வேற ஒன்னுமில்லை" என்ற மௌலி, மகனை ஆதரவாகப் பார்க்க, "அப்பா!" என்றான் பிருத்வி. "உன் பழைய அம்மா உனக்காகத் திரும்பி வருவா" என்றார் மௌலி.
பிரணவியால் இதைக் கேட்க முடியவில்லை. அவனை குடும்பத்தை விட்டு மொத்தமாக விலக்கி வைக்க நினைக்க, வந்தவளோ சேர்க்க நினைக்கிறாளே என்ற ஆதங்கம்! இதுநாள் வரை தாயையும் மகனையும் பிரிக்கும் எண்ணத்தில் குறியாக இருந்தவள், வித்யூவின் மேல் கொண்ட காதல் மயக்கத்தில் இதைக் கவனிக்கத் தவறினாள். ஆர்யாவின் வருகையும் செயலும் இருவரையும் மீண்டும் அவர்கள் இருவரும் நெருக்கமாவதாக உணர்ந்தாள்.
இப்போது தெளிந்த பிரணவி, மீண்டும் திட்டம் போட ஆரம்பித்தாள். ராஜேஸ்வரி, ஆர்யா இருவரையும் பிருத்வியிடமிருந்து நிரந்தரமாகப் பிரிக்கப் பெரிய திட்டமாக இருக்கப்போகிறது அது.
அறையிலிருந்து கண்ணீர் வடித்தபடி அமர்ந்திருந்தார் ராஜேஸ்வரி. மௌலி உள்ளே நுழைந்து அவர் அருகே அமர்ந்தார்.
"நா... நா... தப்பு பண்ணிட்டேனாங்க?! என்... என் மகனை இழந்துட்டேனா? அவனைத் தப்பா நினைச்சிட்டேனா?"
"ஆமா ராஜி! உண்மை சொல்லணும்னா நீ அவனைத் தப்பா நினைச்சிட்ட. உன் மேல அவன் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பானா? பெத்த அம்மா மேல புகார் கொடுக்கிற அளவுக்கா உன் மேல அவன் பாசம் வச்சிருந்தான்? உனக்காக உயிரையே கொடுக்கிற அளவுக்கு அன்பு வச்சிருந்தான். அப்பான்னு என்னைத் தேடுறதை விட, அம்மான்னு உன்னைத் தேடினதுதான் அதிகம். குறையோடு பிறந்த குழந்தையும் தாய்க்குப் பிள்ளைதானே, அதைச் சதைப்பிண்டமாக நினைப்பாளா?" எனக் கேட்டார். அது அவர் நெஞ்சில் ஈட்டி இறக்கியது போல இருந்தது.
"உன் ஈகோவிலிருந்து இறங்கி வந்து பிருத்வி, ஆர்யாவிடம் அன்பான அம்மாவா, மாமியாரா நடந்துக்கோ ராஜி! அவங்க ரெண்டு பேரும் உன்கிட்ட எதிர்பார்க்கிறது அது மட்டும்தான்" என்று கூறிவிட்டுச் சென்றுவிட, கண்களை மூடித் தன்னைத் தேற்றத் தொடங்கினார் ராஜேஸ்வரி.
இங்கோ அறைக்குள் அங்குமிங்கும் நடந்தான் பிருத்வி. அவனால் இந்தச் சந்தோஷத்தை ஜீரணிக்க முடியவில்லை... அதே நேரம் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவனைச் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ஆர்யா!
"ஆர்யா! நான் கனவு எதுவும் காணலையே?" என்றான். "இல்லை" என்றாள் பத்தாவது முறையாக.
"அப்போ இது உண்மையா? அம்மா நான் ஊட்டினதைச் சாப்பிட்டாங்களே, அது நிஜம்தானா? எல்லாரும் எனக்கு வாழ்த்துச் சொன்னது நிஜம்தானா?"
"பிருத்வி, இங்க வந்து உட்காருங்க" என்று இருக்கையைக் காட்ட, அவனோ அவள் காலுக்கடியில் அமர்ந்தான்.
அவன் முகத்தைக் கைகளில் ஏந்தி, நெற்றியில் இதழ் பதித்தாள் ஆர்யா. ஆச்சரியமாகப் பார்த்தான் பிருத்வி.
"இப்ப நம்புங்க, இது கனவு இல்லை நிஜம்தான்... இனி உங்க குடும்பத்துல யாரும் உங்களை அவமானமா பார்க்கவே மாட்டாங்க! முக்கியமா அத்தை உங்ககூடப் பழையபடி பேசத்தான் போறாங்க! எல்லாரும் ஒண்ணா இருக்கப்போறோம்" என்று நெற்றி முட்டினாள்.
இருவரின் முகமும் அருகே அருகே இருக்க, அவளது உதடுகளைப் பார்த்தவன், மெல்ல முத்தமிட நெருங்கினான். அவளுக்குள் அதிர்ச்சி என்றாலும் தடுக்கவில்லை, கண்களை மூடிக்கொண்டாள்... இன்ச் இடைவெளியில் இதழ்கள் நெருங்கியிருந்த வேளையில், என்ன நினைத்தானோ சட்டென்று விலகி, வேகமாக பால்கனிக்குச் சென்றுவிட்டான். இன்னும் முத்தமிடாமலிருக்க கண்களைத் திறந்தாள் ஆர்யா. அவனோ அங்கில்லை. தேடியவளுக்கு அவன் பால்கனியில் இருப்பது தெரியவர, வேகமாகச் சென்று அவனது தோளைத் தொட்டாள்.
"என்னாச்சு பிருத்வி?" என்றாள். "ஒன்னுமில்ல ஆர்யா!"
"பிருத்வி, நான்..." என ஆரம்பிக்க, "ஆர்யா! ஃபேக்டரில எல்லா வொர்க்கர்ஸுக்கும் ஸ்வீட் கொடுக்கணும்னு ஆதி சொன்னான். நான் போயிட்டு வர்றேன், நீ பத்திரமா இரு" என்று விலகி நடக்க, "நானும் வர்றேன்" என்பவளை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு அவன் செல்ல, இவளுக்கு ஒரு மாதிரி இருந்தது. அவன் பழையபடி அவளைப் பார்த்துக்கொண்டாலும், ஒரு சிறு விலகல் அவனிடத்தில் இருப்பதை உணர்ந்தவள் துடித்துப் போனாள். காரணம் புரியாமல் தவித்தாள்; அவனிடம் வெளிப்படையாகக் கேட்கவும் முடியவில்லை.
ஒன்பதாம் தொடங்கியது என்பதால் அமிர்தா பிருத்வியிடம் ஆர்யாவிற்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என்பதை ஞாபகப்படுத்த, அவன் தந்தையிடம் பேசி வீட்டிலேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.
செல்வராணி பிரணவியிடம் வந்து, "நாம போட்ட திட்டமெல்லாம் ஒன்னுமில்லாம போகப்போகுது பிரணவி! அந்த பிருத்வி குடும்பத்தோட முழுசா சேரப்போறான். அதுக்கு இந்த வளைகாப்பை அவன் பயன்படுத்திக்கப்போறான் பிரணவி" என்றார்.
"இல்லை சித்தி! இந்த வளைகாப்பைப் பயன்படுத்திக்கப்போறது அவன் இல்லை, நாமதான்!"
"என்ன சொல்ற?"
"எப்படியும் அம்மா தான் இதை முன்னின்று நடத்துவாங்க! அவளுக்கு ஊட்டப்போற சாப்பாட்டுல மட்டும் இந்த விஷத்தைக் கலந்தா போதும்! அதைச் சாப்பிட்டு ஆர்யா இறந்து போவா! அம்மா ஜெயிலுக்குப் போவாங்க, பிருத்வி வீட்டை விட்டே போவான். இனி இது நம்ம ராஜ்ஜியம்தான்" என்று வில்லத்தனமாகச் சிரிக்க, அவளோடு சேர்ந்து கொண்டார் செல்வராணி.
வளைகாப்பு நாளும் வந்தது. அழகிய தங்க நிறப் பட்டுப்புடவை அணிந்து, மிதமான ஒப்பனையோடு அழகாகத் தயாராகி நின்றவளைக் கண் கொட்டாமல் பார்த்து நின்றான் பிருத்வி.
"எப்படி இருக்கேன் பிருத்வி?"
"எப்பவும் நீ எனக்குத் தேவதைதான்..." என்று நெற்றி முட்டி இதழ் பதிக்க நெருங்கியவன், பின் விலகி, "வா" என்று நடக்க, அவன் உதடுகள் தீண்டாததால் ஏமாற்றம் கொண்டவள் அவனுடன் செல்லாமல் அங்கே நின்றாள். திரும்பி அவளை என்னவென்று பார்த்தான்.
"ஏன் என்னை விட்டு விலகிப் போறீங்க பிருத்வி?! நா... நான் என்ன பண்ணினேன்? உங்க விலகல் என்னை பாதிக்குது பிருத்வி" என்றாள்.
"ஏய் ஆர்யா! அப்படிலாம் இல்லை. நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்" என்று பொய்யுரைக்க, அவனது பதிலிலுள்ள தடுமாற்றம் அவளுக்கு நன்றாகவே தெரிந்தது.
"அப்படியா? இப்போ பாருங்க" என்றவள், "உங்க அப்பா பொய் சொல்றார்லப்பா" என்று தன் வயிற்றுப் பிள்ளையிடம் பேச, 'ஆமாம்' என்பது போலக் குழந்தை உதைக்க, அவனோ அவளைக் காணத் தடுமாறினான்.
"ஆர்யா அது..." எனும்போதே, "வாவ் அண்ணி! அழகா இருக்கீங்க!" என்று அங்கு வந்த அனு, "உங்களைக் கீழே கூப்பிட்டாங்க, வாங்க" என்றழைத்தாள். "இதோ வர்றோம்" என்று அதைச் சாக்காக வைத்து, அவளை அழைத்துக் கொண்டு கீழே இறங்கினான் பிருத்வி.
அவளை மணவறையில் அமர்த்தி மாலையிட்டதோடு, அவளது பக்கத்தில் பிருத்வியையும் அமரச் சொன்னார்கள். பூரிப்புடன் அமர்ந்திருந்தவள் காதலோடு கணவனைக் கண்டாள். அவனால்தானே இந்தக் குடும்பமும் இந்தச் சந்தோஷமும்! காதலித்தவன் கைவிட்ட நிலையில், ஆண் தேவதையாக வந்து அவள் எதிர்பார்த்த குடும்பத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தவன் அல்லவா! அவனைக் கண்டு கண் சிமிட்டிச் சிரித்தாள்.
வழக்கம்போல ஊரே கூடவில்லை என்றாலும், வீட்டில் உள்ளவர்களோடு, நெருங்கிய நட்பான ஆதித்யா குடும்பத்தை மட்டுமே அழைத்து மிக எளிமையாகத்தான் செய்தார்கள்.
வீட்டுப் பெண்கள் சடங்குகளை ஆரம்பித்தனர். ராஜேஸ்வரிதான் முதலில் செய்ய வேண்டும் என்று மௌலி சொல்ல, தயக்கமில்லாமல் முன்னே வந்து மகன், மருமகளுக்குச் சடங்கு செய்தார். தொடர்ந்து பெண்கள் செய்ய, கடைசியாகப் பிருத்வி செய்ய, ஆசையாய் மனதில் நிறைந்த காதலோடு அவனைக் கண்டாள் ஆர்யா. அவனோ சற்று தடுமாற்றத்துடன்தான் செய்தான். தூரமாக நின்ற வித்யூ வலியுடன் இதைப் பார்த்தான். இப்போதுதான் அவனுக்குப் புரிந்தது, தான் ஒரு பொக்கிஷத்தை இழந்திருக்கிறோம் என்று.
அங்கிருக்க முடியாமல் வெளியே பின்பக்கமாக வந்தவனுக்குச் சமையலறையில் பேச்சுச் சத்தம் கேட்டது. லேசாக எட்டிப் பார்த்தவன் அதிர்ந்து போனான். பிரணவிதான் ஆர்யாவிற்குத் கொடுக்க வேண்டிய கலவை சாதத்தில் எதையோ கலந்தாள். பின் அந்த மருந்துப் பாட்டிலை வெளியே தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து சென்றாள். அது என்னவென்று, எறியப்பட்ட பாட்டிலை எடுத்து வித்யூ தன் அலைபேசியில் ஆய்வு செய்தான். அவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது, அது விஷம்! மீண்டும் சமையலறைப் பக்கம் பார்க்க, அமிர்தா அந்த உணவை எடுத்துச் செல்ல, வேகமாக உள்ளே வந்தான். அமிர்தாவின் கையிலிருந்து தட்டு ராஜேஸ்வரியிடம் மாறி, அவர் ஒரு வாய் ஊட்டச் செல்ல, அதைத் தட்டிவிட்டான் வித்யூ!
மௌலி இல்லத்தின் கூடத்தை மட்டும், வீட்டு வேலை செய்பவர்களுடன் சேர்ந்து அனு, வினையா, ருத்திக் மூவரும் அலங்காரம் செய்தனர்; பிரணவி, வித்யூ இருவர் மட்டும் அதில் கலந்துகொள்ளவில்லை.
அன்று மௌலியிடம், "பிருத்வி மறக்க நினைக்கிற பக்கங்கள்னு சொல்றீங்களே? அப்படி என்னதான் நடந்துச்சு மாமா?" எனக் கேட்டாள் ஆர்யா. அவரும் 'சொல்லலாமா வேண்டாமா?' என்று தயங்கிய நேரத்தில் தான், லண்டனிலிருந்து ருத்திக் நாடு திரும்பி வீட்டிற்குள் நுழைந்தான்.
"பெரியப்பா" என அழைத்துக் கொண்டே ஓடிவந்து அவரைக் கட்டி அணைத்தான். அவரும் அவனை ஆரத்தழுவிக் கொண்டார்.
அவன் வந்ததும் அனைவரும் அங்கே கூட, ராஜேஸ்வரியும் அவனை அணைத்துக்கொண்டு நெற்றியில் முத்தமிட்டார். செல்வராணி கண்ணீருடன் மகனை அணைத்து விடுத்தார். அவனது வருகை அனைவருக்கும் மகிழ்ச்சியையே தந்தது.
ஆர்யாவைக் கண்டதுமே அவள் அருகே வந்து, "ஹாய் அண்ணி! நான் ருத்திக்" என்று தன்னை அறிமுகம் செய்தான். "ஹாய் ருத்திக், நான் ஆர்யாங்க! எப்படி இருக்கீங்க நீங்க?"
"நான் நல்லா இருக்கேன் அண்ணி" என்று அடுத்துப் பேச வந்தவனை, "ருத்திக்..." என்று செல்வராணி தன் கோபத்தை மறைத்தபடி அழைக்க, "அப்புறம் பேசலாம் அண்ணி" என்று அங்கிருந்து சென்றான். அவன் வருகையால் மௌலி சொல்ல வந்ததைக் கேட்க மறந்தவள், பிருத்வியின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
அவன் இந்தியா வரும் நாள் அவனது பிறந்தநாள் என்பதால், அவனுக்காகத்தான் இந்த அலங்காரம். செல்வராணிக்கும் பிரணவிக்கும் அங்கு 'என்ன நடக்கிறது?' என்று புரியவில்லை; எதற்கு இந்த அலங்காரம் என்றும் தெரியவில்லை. கேட்டாலும் யாரும் சொல்லவில்லை. அதனால் அமைதியாக வேடிக்கை பார்த்தனர்.
பிருத்வி வரும் நேரத்தில் சிறியவர்கள் அனைவரும் தயாராக இருந்தனர். உள்ளே அவன் நுழைந்த நொடியில் பாப்பர்ஸ் வெடிக்க, "ஹாப்பி பர்த்டே அண்ணா!" என்று சத்தமாகக் கத்தினர். அவர்களுடன் ஆதித்யாவும் வாசுகியும் இணைந்திருந்தனர்.
இதை எதிர்பாராத செல்வராணியும் பிரணவியும் அதிர்ந்து போனார்கள். சிறுவர்களுடன் பெரியவர்களும் இணைந்து நின்றனர்.
"பிருத்வி" என அவனருகே வந்தாள் ஆர்யா. அவனோ இந்த அதிர்ச்சியில் சிலையாக நின்றான்.
அவன் கையைப் பற்றி, "போங்க, போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க" என்றாள்.
அறைக்குள் சென்று குளித்து, அவள் எடுத்துக் கொடுத்த உடையைப் போட்டுக்கொண்டு கீழே வந்தான். அவன் முன்னே கேக் வைக்கப்பட்டிருந்தது.
கத்தியைக் கொடுத்து வெட்டச் சொன்னார்கள். அவனது கண்கள் கலங்கியிருந்தன. கடைசியாக அவன் எப்போது குடும்பத்துடன் இணைந்து சந்தோஷமாக இருந்தான் என்று அவனுக்கே தெரியாது.
அவன் கண்கள் கலங்கி நிற்பதைக் கண்டு ராஜேஸ்வரி, அமிர்தா, மேகன், பார்வதி என அனைவரும் கலங்கிப் போனார்கள். மௌலியோ, 'மருமகள் வந்த நேரம் அனைத்தும் மாறிவிட்டது' என்று எண்ணினார்.
கத்தியை வைத்துக் கேக்கை வெட்டியவன், முதலில் மௌலிக்கு ஊட்டினான். பிறகு யாருக்கு என்று ஆர்யாவைப் பார்க்க, ராஜேஸ்வரியைக் காண்பித்தாள் ஆர்யா. தயக்கத்தோடு அவர் அருகே சென்றான் பிருத்வி. அவருக்கோ அவனைப் பார்க்கத் துணிவில்லை... கேக்கை அவன் வாயருகே கொண்டு செல்ல, அவரோ அதை பாதியாகப் பிய்த்து அவனுக்கு ஊட்டிவிட்டார். அவன், தனக்கு ஊட்டியதை வாங்கிக்கொண்ட தாயையே வெறித்தான். கண்களை மூடித் தன்னைச் சமன் செய்துகொண்டான்.
பின் அமிர்தா, மேகன், பார்வதி, கடைசியாக செல்வராணிக்குக் கொடுக்க, அவர் வேண்டா வெறுப்பாக வாங்கிக்கொண்டார். பின் மனைவிக்கு ஊட்டிவிட்டு, அடுத்துச் சிறியவர்களுக்கும் ஊட்டினான். பிரணவி அருகே செல்ல, அவள் கோபமாக முகத்தைத் திருப்பிக்கொள்ள, இவனும் நகர்ந்துவிட்டான்.
நண்பனைக் கட்டி அணைத்துக்கொண்டான் ஆதித்யா! அவனுக்கும் கண்கள் கலங்கின.
"இந்த அழகான தருணத்துல உன் பாட்டு இருக்கணும், பாடுமா" என்றார் மௌலி!
அவளும் பாட ஆரம்பித்தாள்:
"என்ன தவம் செய்தனை யசோதா! என்ன தவம் செய்தனை யசோதா!
எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றழைக்க, என்ன தவம் செய்தனை..."
என்று பாட, அவ்வளவுதான், ராஜேஸ்வரியின் அடிவயிறு சிலிர்த்தது. அதில் வரும் ஒவ்வொரு வரிகளையும் பிருத்வியையும் ராஜேஸ்வரியையும் பார்த்து அவள் பாட, அவருக்கும் தன் முதல் குழந்தையைக் கையில் ஏந்திய தருணமும், அதனுடன் விளையாடி, சோறு ஊட்டி, சேட்டைகளைக் கண்டித்துக் கொஞ்சிய நாட்களும் நினைவுக்கு வந்து போயின. அழுதுகொண்டே அவர் அவ்விடத்தை விட்டுச் செல்ல, அனைவரும் ஒரு கணம் அமைதியாகிவிட்டனர்.
ஆர்யா பயம்கொள்ள, "உன் பாட்டால அவளுக்குப் பழைய ஞாபகம் வந்திருக்கும், வேற ஒன்னுமில்லை" என்ற மௌலி, மகனை ஆதரவாகப் பார்க்க, "அப்பா!" என்றான் பிருத்வி. "உன் பழைய அம்மா உனக்காகத் திரும்பி வருவா" என்றார் மௌலி.
பிரணவியால் இதைக் கேட்க முடியவில்லை. அவனை குடும்பத்தை விட்டு மொத்தமாக விலக்கி வைக்க நினைக்க, வந்தவளோ சேர்க்க நினைக்கிறாளே என்ற ஆதங்கம்! இதுநாள் வரை தாயையும் மகனையும் பிரிக்கும் எண்ணத்தில் குறியாக இருந்தவள், வித்யூவின் மேல் கொண்ட காதல் மயக்கத்தில் இதைக் கவனிக்கத் தவறினாள். ஆர்யாவின் வருகையும் செயலும் இருவரையும் மீண்டும் அவர்கள் இருவரும் நெருக்கமாவதாக உணர்ந்தாள்.
இப்போது தெளிந்த பிரணவி, மீண்டும் திட்டம் போட ஆரம்பித்தாள். ராஜேஸ்வரி, ஆர்யா இருவரையும் பிருத்வியிடமிருந்து நிரந்தரமாகப் பிரிக்கப் பெரிய திட்டமாக இருக்கப்போகிறது அது.
அறையிலிருந்து கண்ணீர் வடித்தபடி அமர்ந்திருந்தார் ராஜேஸ்வரி. மௌலி உள்ளே நுழைந்து அவர் அருகே அமர்ந்தார்.
"நா... நா... தப்பு பண்ணிட்டேனாங்க?! என்... என் மகனை இழந்துட்டேனா? அவனைத் தப்பா நினைச்சிட்டேனா?"
"ஆமா ராஜி! உண்மை சொல்லணும்னா நீ அவனைத் தப்பா நினைச்சிட்ட. உன் மேல அவன் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பானா? பெத்த அம்மா மேல புகார் கொடுக்கிற அளவுக்கா உன் மேல அவன் பாசம் வச்சிருந்தான்? உனக்காக உயிரையே கொடுக்கிற அளவுக்கு அன்பு வச்சிருந்தான். அப்பான்னு என்னைத் தேடுறதை விட, அம்மான்னு உன்னைத் தேடினதுதான் அதிகம். குறையோடு பிறந்த குழந்தையும் தாய்க்குப் பிள்ளைதானே, அதைச் சதைப்பிண்டமாக நினைப்பாளா?" எனக் கேட்டார். அது அவர் நெஞ்சில் ஈட்டி இறக்கியது போல இருந்தது.
"உன் ஈகோவிலிருந்து இறங்கி வந்து பிருத்வி, ஆர்யாவிடம் அன்பான அம்மாவா, மாமியாரா நடந்துக்கோ ராஜி! அவங்க ரெண்டு பேரும் உன்கிட்ட எதிர்பார்க்கிறது அது மட்டும்தான்" என்று கூறிவிட்டுச் சென்றுவிட, கண்களை மூடித் தன்னைத் தேற்றத் தொடங்கினார் ராஜேஸ்வரி.
இங்கோ அறைக்குள் அங்குமிங்கும் நடந்தான் பிருத்வி. அவனால் இந்தச் சந்தோஷத்தை ஜீரணிக்க முடியவில்லை... அதே நேரம் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவனைச் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ஆர்யா!
"ஆர்யா! நான் கனவு எதுவும் காணலையே?" என்றான். "இல்லை" என்றாள் பத்தாவது முறையாக.
"அப்போ இது உண்மையா? அம்மா நான் ஊட்டினதைச் சாப்பிட்டாங்களே, அது நிஜம்தானா? எல்லாரும் எனக்கு வாழ்த்துச் சொன்னது நிஜம்தானா?"
"பிருத்வி, இங்க வந்து உட்காருங்க" என்று இருக்கையைக் காட்ட, அவனோ அவள் காலுக்கடியில் அமர்ந்தான்.
அவன் முகத்தைக் கைகளில் ஏந்தி, நெற்றியில் இதழ் பதித்தாள் ஆர்யா. ஆச்சரியமாகப் பார்த்தான் பிருத்வி.
"இப்ப நம்புங்க, இது கனவு இல்லை நிஜம்தான்... இனி உங்க குடும்பத்துல யாரும் உங்களை அவமானமா பார்க்கவே மாட்டாங்க! முக்கியமா அத்தை உங்ககூடப் பழையபடி பேசத்தான் போறாங்க! எல்லாரும் ஒண்ணா இருக்கப்போறோம்" என்று நெற்றி முட்டினாள்.
இருவரின் முகமும் அருகே அருகே இருக்க, அவளது உதடுகளைப் பார்த்தவன், மெல்ல முத்தமிட நெருங்கினான். அவளுக்குள் அதிர்ச்சி என்றாலும் தடுக்கவில்லை, கண்களை மூடிக்கொண்டாள்... இன்ச் இடைவெளியில் இதழ்கள் நெருங்கியிருந்த வேளையில், என்ன நினைத்தானோ சட்டென்று விலகி, வேகமாக பால்கனிக்குச் சென்றுவிட்டான். இன்னும் முத்தமிடாமலிருக்க கண்களைத் திறந்தாள் ஆர்யா. அவனோ அங்கில்லை. தேடியவளுக்கு அவன் பால்கனியில் இருப்பது தெரியவர, வேகமாகச் சென்று அவனது தோளைத் தொட்டாள்.
"என்னாச்சு பிருத்வி?" என்றாள். "ஒன்னுமில்ல ஆர்யா!"
"பிருத்வி, நான்..." என ஆரம்பிக்க, "ஆர்யா! ஃபேக்டரில எல்லா வொர்க்கர்ஸுக்கும் ஸ்வீட் கொடுக்கணும்னு ஆதி சொன்னான். நான் போயிட்டு வர்றேன், நீ பத்திரமா இரு" என்று விலகி நடக்க, "நானும் வர்றேன்" என்பவளை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு அவன் செல்ல, இவளுக்கு ஒரு மாதிரி இருந்தது. அவன் பழையபடி அவளைப் பார்த்துக்கொண்டாலும், ஒரு சிறு விலகல் அவனிடத்தில் இருப்பதை உணர்ந்தவள் துடித்துப் போனாள். காரணம் புரியாமல் தவித்தாள்; அவனிடம் வெளிப்படையாகக் கேட்கவும் முடியவில்லை.
ஒன்பதாம் தொடங்கியது என்பதால் அமிர்தா பிருத்வியிடம் ஆர்யாவிற்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என்பதை ஞாபகப்படுத்த, அவன் தந்தையிடம் பேசி வீட்டிலேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.
செல்வராணி பிரணவியிடம் வந்து, "நாம போட்ட திட்டமெல்லாம் ஒன்னுமில்லாம போகப்போகுது பிரணவி! அந்த பிருத்வி குடும்பத்தோட முழுசா சேரப்போறான். அதுக்கு இந்த வளைகாப்பை அவன் பயன்படுத்திக்கப்போறான் பிரணவி" என்றார்.
"இல்லை சித்தி! இந்த வளைகாப்பைப் பயன்படுத்திக்கப்போறது அவன் இல்லை, நாமதான்!"
"என்ன சொல்ற?"
"எப்படியும் அம்மா தான் இதை முன்னின்று நடத்துவாங்க! அவளுக்கு ஊட்டப்போற சாப்பாட்டுல மட்டும் இந்த விஷத்தைக் கலந்தா போதும்! அதைச் சாப்பிட்டு ஆர்யா இறந்து போவா! அம்மா ஜெயிலுக்குப் போவாங்க, பிருத்வி வீட்டை விட்டே போவான். இனி இது நம்ம ராஜ்ஜியம்தான்" என்று வில்லத்தனமாகச் சிரிக்க, அவளோடு சேர்ந்து கொண்டார் செல்வராணி.
வளைகாப்பு நாளும் வந்தது. அழகிய தங்க நிறப் பட்டுப்புடவை அணிந்து, மிதமான ஒப்பனையோடு அழகாகத் தயாராகி நின்றவளைக் கண் கொட்டாமல் பார்த்து நின்றான் பிருத்வி.
"எப்படி இருக்கேன் பிருத்வி?"
"எப்பவும் நீ எனக்குத் தேவதைதான்..." என்று நெற்றி முட்டி இதழ் பதிக்க நெருங்கியவன், பின் விலகி, "வா" என்று நடக்க, அவன் உதடுகள் தீண்டாததால் ஏமாற்றம் கொண்டவள் அவனுடன் செல்லாமல் அங்கே நின்றாள். திரும்பி அவளை என்னவென்று பார்த்தான்.
"ஏன் என்னை விட்டு விலகிப் போறீங்க பிருத்வி?! நா... நான் என்ன பண்ணினேன்? உங்க விலகல் என்னை பாதிக்குது பிருத்வி" என்றாள்.
"ஏய் ஆர்யா! அப்படிலாம் இல்லை. நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்" என்று பொய்யுரைக்க, அவனது பதிலிலுள்ள தடுமாற்றம் அவளுக்கு நன்றாகவே தெரிந்தது.
"அப்படியா? இப்போ பாருங்க" என்றவள், "உங்க அப்பா பொய் சொல்றார்லப்பா" என்று தன் வயிற்றுப் பிள்ளையிடம் பேச, 'ஆமாம்' என்பது போலக் குழந்தை உதைக்க, அவனோ அவளைக் காணத் தடுமாறினான்.
"ஆர்யா அது..." எனும்போதே, "வாவ் அண்ணி! அழகா இருக்கீங்க!" என்று அங்கு வந்த அனு, "உங்களைக் கீழே கூப்பிட்டாங்க, வாங்க" என்றழைத்தாள். "இதோ வர்றோம்" என்று அதைச் சாக்காக வைத்து, அவளை அழைத்துக் கொண்டு கீழே இறங்கினான் பிருத்வி.
அவளை மணவறையில் அமர்த்தி மாலையிட்டதோடு, அவளது பக்கத்தில் பிருத்வியையும் அமரச் சொன்னார்கள். பூரிப்புடன் அமர்ந்திருந்தவள் காதலோடு கணவனைக் கண்டாள். அவனால்தானே இந்தக் குடும்பமும் இந்தச் சந்தோஷமும்! காதலித்தவன் கைவிட்ட நிலையில், ஆண் தேவதையாக வந்து அவள் எதிர்பார்த்த குடும்பத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தவன் அல்லவா! அவனைக் கண்டு கண் சிமிட்டிச் சிரித்தாள்.
வழக்கம்போல ஊரே கூடவில்லை என்றாலும், வீட்டில் உள்ளவர்களோடு, நெருங்கிய நட்பான ஆதித்யா குடும்பத்தை மட்டுமே அழைத்து மிக எளிமையாகத்தான் செய்தார்கள்.
வீட்டுப் பெண்கள் சடங்குகளை ஆரம்பித்தனர். ராஜேஸ்வரிதான் முதலில் செய்ய வேண்டும் என்று மௌலி சொல்ல, தயக்கமில்லாமல் முன்னே வந்து மகன், மருமகளுக்குச் சடங்கு செய்தார். தொடர்ந்து பெண்கள் செய்ய, கடைசியாகப் பிருத்வி செய்ய, ஆசையாய் மனதில் நிறைந்த காதலோடு அவனைக் கண்டாள் ஆர்யா. அவனோ சற்று தடுமாற்றத்துடன்தான் செய்தான். தூரமாக நின்ற வித்யூ வலியுடன் இதைப் பார்த்தான். இப்போதுதான் அவனுக்குப் புரிந்தது, தான் ஒரு பொக்கிஷத்தை இழந்திருக்கிறோம் என்று.
அங்கிருக்க முடியாமல் வெளியே பின்பக்கமாக வந்தவனுக்குச் சமையலறையில் பேச்சுச் சத்தம் கேட்டது. லேசாக எட்டிப் பார்த்தவன் அதிர்ந்து போனான். பிரணவிதான் ஆர்யாவிற்குத் கொடுக்க வேண்டிய கலவை சாதத்தில் எதையோ கலந்தாள். பின் அந்த மருந்துப் பாட்டிலை வெளியே தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து சென்றாள். அது என்னவென்று, எறியப்பட்ட பாட்டிலை எடுத்து வித்யூ தன் அலைபேசியில் ஆய்வு செய்தான். அவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது, அது விஷம்! மீண்டும் சமையலறைப் பக்கம் பார்க்க, அமிர்தா அந்த உணவை எடுத்துச் செல்ல, வேகமாக உள்ளே வந்தான். அமிர்தாவின் கையிலிருந்து தட்டு ராஜேஸ்வரியிடம் மாறி, அவர் ஒரு வாய் ஊட்டச் செல்ல, அதைத் தட்டிவிட்டான் வித்யூ!